என் மலர்
நீங்கள் தேடியது "பா.ஜனதா"
- ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், முன்னாள் எம்.எல்.ஏ., வேலா யுதம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத், சுரேஷ், மாநகரப் பார்வை யாளர்கள் அஜித் குமார், நாக ராஜன், பிரசார அணி செயலாளர் எஸ். எஸ். மணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன் ,சுனில், வீரசூர பொருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட பொதுச்செய லாளர் ஜெகநாதன் நன்றி கூறி னார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
நாகர்கோவில், அக். 27-
தி.மு.க. அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று பாரதிய ஜனதா கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொன்.ராதாகிருஷ்ணன்
குமரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பி னர் பொன்ரத்தினமணி முன்னிலை வைத்தார்.
முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-
தி.மு.க. அரசு தமிழுக்கும் தமிழர்களுக்கும் துரோகம் செய்து வருகிறது. 1967-ம் ஆண்டு தமிழை சொல்லி தி.மு.க.வினர் ஆட்சிக்கு வந்தனர். 50 ஆண்டு காலமாக தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் ஆராய்ச்சிக்கு என்று ஒரு இருக்கை அமைக்க தி.மு.க. நடவடிக்கை எடுக்கவில்லை.
ஆனால் பிரதமர் மோடி காசி பல்கலைக்கழகத்தில் தமிழுக்கென்று தனி இருக்கை அமைத்து தமிழுக்கு பெருமை சேர்த்துள்ளார். இன்று 3 நாடுகளில் தமிழ் ஆட்சி மொழியாக இருந்து வருகிறது.
உலகத்திலேயே பழமை யான மொழி தமிழ் மொழி என்று பிரதமர் மோடி கூறினார். சமஸ்கிருதத்தை விட தமிழ் மொழி பழமை யான மொழி என்று அவர் கூறியுள்ளார்.ஆனால் இங்குள்ள தி.மு.க.விற்கு தமிழைப் பற்றி எந்த கவலையும் இல்லை.
துரோகம்
இலங்கையில் தமிழர்கள் பலர் படுகொலை செய்யப் பட்டனர். ஆனால் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் கைகுலுக்கியவர்கள் தான் தி.மு.க.,-காங்கிரஸ் எம்.பி., க்கள். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இது தமிழக மக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம் ஆகும். குமரி மாவட்டத்தில் எதை வேண்டுமானாலும் அரசியலாக்க வேண்டும் என்று நினைத்தால் அது நடக்காது. அது மோச மான விளைவுகளை ஏற்ப
டுத்தும்.
குமரி மேற்கு மாவட்ட த்தில் மாணவர் ஒருவர் குளிர்பானத்தில் ஆசிட் கலந்து குடித்த பள்ளியை மீண்டும் திறந்து செயல்படுத்த கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்குள்ள மாண வர்கள் தொடர்ந்து அங்கு கல்வி கற்க வேண்டும்.
குரல் கொடுப்போம்
தமிழை விட்டுக் கொடுக்க நாம் தயாராக இல்லை. அது எந்த அரசாக இருந்தாலும் சரி. வேறு மொழியை திணிக்கும் நிலை ஏற்பட்டால் அதை எதிர்த்து குரல் கொடுக்கும் முதல் இயக்கமாக பாரதிய ஜனதா கட்சி இருக்கும்.
இவ்வாறு அவர் பேசி னார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் முத்துராமன், துணைத் தலைவர் தேவ், முன்னாள் எம்.எல்.ஏ., வேலா யுதம், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வினோத், சுரேஷ், மாநகரப் பார்வை யாளர்கள் அஜித் குமார், நாக ராஜன், பிரசார அணி செயலாளர் எஸ். எஸ். மணி, மாநகராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன் ,சுனில், வீரசூர பொருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொதுச்செய லாளர் ஜெகநாதன் நன்றி கூறி னார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்து கோஷங் கள் எழுப்பப்பட்டது.
- பத்மநாபபுரம் கோட்டை வாசல் முன்பு அரசியல் மற்றும் அமைப்பு சார்ந்த போர்டுகள் வைக்கப்பட்டிருந்தது.
- பாரத மாதா ப்ளக்ஸ் போர்டும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.
கன்னியாகுமரி:
பத்மநாபபுரம் கோட்டை வாசல் முன்பு அரசியல் மற்றும் அமைப்பு சார்ந்த போர்டுகள் வைக்கப்பட்டி ருந்தது. இதேபோல் பாரத மாதா ப்ளக்ஸ் போர்டும் அங்கு வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த போர்டுகளை பத்மநாபபுரம் நகராட்சி பணியாளர்கள் நேற்று காலையில் அகற்றி னர். இதை அறிந்த பாரதிய ஜனதா கவுன்சிலர் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் மாலையில் நகராட்சி அலு வலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இவர்களுக்கு ஆதரவாக குமரி மாவட்ட பாரதிய ஜனதா ஓ.பி.சி. அணித்தலை வர் குமாரதாஸ், மாவட்ட துணைத் தலைவர் ரமேஷ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் நகராட்சி வளாகத்தில், உள்ளிருப்பு போராட்டத்தி லும் ஈடுபட்டனர். தக்கலை போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன், ஆணை யாளர் லெனின் ஆகியோர் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில்உடன்பாடு ஏற்படா ததால் கவுன்சிலர்கள் அலுவ லக அறைக்குள் சென்று தரையில் அமர்ந்து உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். அவர்களுடன் நகராட்சி தலைவர் அருள் சோபன் பேச்சு வார்த்தை நடத்தினார். தொடர்ந்து பாரத மாதா போர்டு போரா ட்டம் நடத்தியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதனை பெற்றுக் கொண்ட அவர்கள், அகற்ற ப்பட்ட இடத்திலேயே இர வில் வைத்துச் சென்றனர். இந்த நிலையில் இன்று காலை அந்த இடத்தில் பாரதமாதா போர்டு மாயமாகி இருந்தது.
இதுபற்றி விசாரித்த போது, நகராட்சி நிர்வாகம் அந்த போர்டை மீண்டும் அகற்றியிருப்பதாக தெரியவந்தது. இதனால் பாரதிய ஜனதாவினரிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் இன்று கழுத்தில் ‘மப்ளர்’ அணிந்து வந்திருந்தனர்.
- பா.ஜ.க. கவுன்சிலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.
நாகர்கோவில்:
மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்க வந்த பாரதிய ஜனதா கவுன்சிலர்கள் மீனா தேவ், முத்துராமன், வீர சூர பெருமாள், அய்யப்பன், ரமேஷ் ஆகியோர் இன்று கழுத்தில் 'மப்ளர்' அணிந்து வந்திருந்தனர். கூட்டம் தொடங்கியதும் கவுன்சிலர் மீனாதேவ் பேசுகையில், நாகர்கோவில் அனாதை மடம் மைதானத்தில் இருந்து மணலை அப்புறப்படுத்து வதற்கு ரூ.25 லட்சம் செலவு செய்யப்பட்டு உள்ளது.
இது மாநகராட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும். வருவாய் வரக்கூடிய இந்த திட்டத்தில் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஊழல் நடந்து உள்ளது. தேசியக் கொடி ரூ.20 லட்சத்தில் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதிலும் ஊழல் நடந்து உள்ளது, இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
அப்போது மற்ற பா.ஜ.க. கவுன்சிலர்கள் நாகர்கோவில் நடந்த தி.மு.க. கூட்டத்தில் பாரதிய ஜனதாவினரை சீவி விடுவதாக கூறிய மேயரை கண்டிக்கிறோம் என்று கூறினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் நாங்கள் கழுத்தில் 'மப்ளர்' அணிந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பா.ஜ.க. கவுன்சிலர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு தி.மு.க. கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து தி.மு.க., பாரதிய ஜனதா கவுன்சிலர்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டது.
பின்னர் பா.ஜ.க. கவுன்சி லர்கள் கூட்டரங்கை விட்டு வெளியேறி போராட்ட த்தில் ஈடுபட்டனர். கையில் கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியவாறு அவர்கள் கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
- தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்படுகிறது.
- தூத்துக்குடியில் முதன்முறை யாக பா.ஜ.க. சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட உள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்படுகிறது.இதற்கான நிகழ்ச்சி வருகிற 21-ந்தேதி (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு தூத்துக்குடி வி.வி.டி.சிக்னல் பகுதியில் நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட பா.ஜ.க . தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்குகிறார். பொதுச் செயலாளர் உமரி எஸ்.சத்தியசீலன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகிக்கின்றனர்.
நிகழ்ச்சி ஒருங்கி ணைப்பாளர் தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் வக்கீல் வாரியார் வரவேற்று பேசுகிறார். வக்கீல் சின்னத்தம்பி நன்றி கூறுகிறார்.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக மத்திய மந்திரி எல்.முருகன், தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி சட்டமன்ற குழு தலைவர் நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ., தமிழ்நாடு பா.ஜ.க. துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, பொதுச் செயலாளர் பொன்பாலகணபதி, மாநில சிறுபான்மை பிரிவு பொது செயலாளர் சதீஷ்ராஜா, மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டு 1000 பேருக்கு இலவச வேட்டி,சேலை மற்றும் 50 பெண்களுக்கு தையல் எந்திரங்களை வழங்கி சிறப்புரையாற்றி கிறிஸ்மஸ் விழா சிறப்பு பிரார்த்தனை செய்து விழாவை கொண்டாடு கின்றனர். தூத்துக்குடியில் முதன்முறை யாக பா.ஜ.க. சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்படுவதால் பா.ஜ.க. நிர்வாகிகள் விழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடுகளை பிரமாண்டமாக செய்து வருகின்றனர்.
- மதுரை கிழக்கு மாவட்ட பா.ஜனதா நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டனர்.
- பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணா மலை ஆலோசனைப்படி நடந்தது.
மதுரை
பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணா மலை ஆலோசனைப்படி மதுரை கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் பல்வேறு பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமனம் செய்துள்ளார். அதன் விவரம் வருமாறு:-
மதுரை கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர்களாக மூவேந்திரன், கண்ணன், கோசா பெருமாள், துணை தலைவர்களாக கோவிந்தமூர்த்தி, செல்வி, அரிச்சந்திரன், முத்துச்செல்வம், மஞ்சுளா, குப்பு, அனந்தஜெயம், மாவட்ட செயலாளர்களாக ஹரிகரபுத்திரன், சீதா, சித்ராதேவி, பொருளாளராக முத்துராம், அலுவலக செயலாளராக ஹரிகிரு ஷ்ணன், இளைஞரணி மாவட்ட தலைவராக சுரேஷ், விவசாய அணி மாவட்ட தலைவராக பூமி ராஜன், பட்டியல் அணி மாவட்ட தலைவராக வேல்முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு வஞ்சிக்கிறது என்று வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டி உள்ளார்.
- நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூரில் புறநகர் பேருந்து நிறுத்தத்தில் ரூ. 15 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜையை வெங்கடேசன் எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களி டம் கூறியதாவது:-
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பலமுறை கேள்வி எழுப்பியும் மதுரையில் எய்ம்ஸ் அமைப்பது குறித்து மத்திய பா.ஜனதா அரசு உரிய பதில் அளிக்கவில்லை. தற்போது வரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒரு பைசா கூட மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மகாத்மா காந்தி 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மாவட்டத்திற்கு ஆண்டுக்கு மத்திய அரசு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் எய்ம்ஸ் கட்டுமான பணிக்கு மத்திய அரசின் பங்கான ரூ. 250 கோடியை ஒதுக்கீடு செய்யாமல் 2026-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என கூறுவது வேடிக்கையாக உள்ளது. நிதி ஒதுக்காமல் பா.ஜனதா அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், மேலூர் நகராட்சி ஆணையர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் நகர மன்ற துணைத் தலைவர் இளஞ்செழியன், நகரமன்ற கவுன்சிலர்கள் அறிவழகன், பாண்டி, கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கண்ணன், காய்கறி மார்க்கெட் சங்கத் தலைவர் மணவாளன் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.
- நாகர்கோவில் பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
- குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜை சந்தித்து பாரதிய ஜனதாவில் இணைந்தார்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகிருஷ்ணன் அக்கட்சியில் இருந்து விலகி குமரி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் தர்மராஜை சந்தித்து பாரதிய ஜனதாவில் இணைந்தார். அ.தி.மு.க. நிர்வாகிகள் எஸ்.ஏ. தங்கராஜ் மற்றும் சங்கர் உள்ளிட்டோரும் பாரதிய ஜனதாவில் சேர்ந்தனர்.
நாகர்கோவில் பாரதிய ஜனதா மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இணைப்பு நிகழ்ச்சிக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பார்வையாளர் சி.எஸ். சுபாஷ் முன்னிலை வைத்தார் இதில் பாரதிய ஜனதா நிர்வாகிகள் மணி, தணிக்கை குமார், தாமரைத் துறை அரசன் ஆர்.எஸ். பாரத் செல்வ சுப்பிரமணியன், ராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
- பா.ஜனதா சார்பில் 108 பானைகள் வைத்து பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது.
- விழாவில் சிறப்பு அழைப்பாளராக அய்யாவழி அரசம்பதி சிவச்சந்திரன் கலந்து கொண்டார்.
தென்காசி:
கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பா.ஜனதா சார்பில் நம்ம ஊரு மோடி பொங்கல் திருவிழா நிகழ்ச்சி பாவூர்சத்திரம் முப்புடாதி அம்மன், சுடலைமாட சுவாமி கோவில் திடலில் 108 பானைகள் வைத்து பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அய்யாவழி அரசம்பதி சிவச்சந்திரன் கலந்து கொண்டார்.
இதில் தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா, மாநில வர்த்தக பிரிவு செயலாளர் கோதை மாரியப்பன், ஒன்றிய பார்வையாளர் வழக்கறிஞர் முத்துலட்சுமி, ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் செந்தூர்பாண்டியன், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் சேர்மன், பேச்சிமுத்து, ஒன்றிய பொருளாளர் தட்சிணாமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராஜ், இளைஞரணி மாவட்ட செயலாளர் சரவணன், விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் விஜய் சேகர், கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் கார்மேகநாதன், சில்லரைபுரவு ஊராட்சி மன்ற தலைவர் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஒரு சில காரணங்களால் அண்ணாமலை பங்கேற்கும் நிகழ்ச்சி மாற்றி அமைக்கப்பட்டிருந்தது.
- மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலக வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தென்காசி:
தென்காசியில் கடந்த 12,13 ஆகிய தேதிகளில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது.
ஒரு சில காரணங்களால் அவர் பங்கேற்கும் நிகழ்ச்சி மாற்றி அமைக்கப்பட்டி ருந்தது.
இந்நிலையில் தென்காசி யில் அண்ணாமலை பங்கேற்கும் பொதுக்கூட்டம் வருகிற 24-ந் தேதி நடைபெறும் என மாவட்ட பா.ஜ.க. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தென்காசி, கடையநல்லூர் மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், மண்டல் மையக்குழு உறுப்பி னர்கள், மாவட்ட அணி மற்றும் பிரிவு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம், மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள ஜெகந்நாத் அரங்கத்தில் நடைபெற்றது.
இதில் மாவட்டத் தலைவர் ராஜேஷ் ராஜா , மாவட்ட பார்வையாளர் மகாராஜன்,பாலகுருநாதன், ராமநாதன், பொதுச்செய லாளர்கள் மற்றும் மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- விவசாயிகளின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது கால்நடை வளர்ப்பு மற்றும் பால் விற்பனை.
- மாட்டுப் பாலுக்கு 50 ரூபாய், எருமை பாலுக்கு 60 ரூபாயும் உயர்த்தி தர வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் மலர்கொடி, திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில் வேல், விவசாய அணி தலைவர் ரமேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் கறவை பாலுடன் வந்து திருப்பூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்ப தாவது:-
திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த பெரிதும் உதவியாக இருப்பது கால்நடை வளர்ப்பு, அவ்வகையில் விவசாயிகளின் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிப்பது கால்நடை வளர்ப்பு மற்றும் பால் விற்பனை மட்டுமே எனவே விவசாயிகளின் நலன் கருதி அரசு பால் கொள்முதல் குறைந்தபட்ச விலையை மாட்டுப் பாலுக்கு 50 ரூபாய்,எருமை பாலுக்கு 60 ரூபாயும் உயர்த்தி தர வேண்டும்.அதேபோல் மாட்டு தீவன வகையிலான சோளத்தட்டு வைக்கோல் போன்றவற்றை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும்.அரசு ஆவின் மூலம் வழங்கும் அடர் தீவனத்தை நல்ல தரத்துடன்அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.பால் கொள்முதல் நிலையங்களில் எந்த பாகுபாடும் ஏற்றத்தாழ்வும் இல்லாமல் பால் கொள்முதல் அனைவரிடத்திலும் சரியான முறையில் செய்யப்பட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும் என்று பா.ஜனதா கோரிக்கை விடுத்துள்ளது.
- சதீஷ், ஆசாத், சோலைமணி கண்டன் உள்பட பலர் உடனிருந்தனர்.
வாடிப்பட்டி
மதுரையை தொழில் நகரமாக்க முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த வலியுறுத்த வேண்டும் என்று பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், கலெக்டர் அனீஷ்சேகரிடம் கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-
வரலாற்று சிறப்பு மிக்க பழமையான நகரமாக மதுரை உள்ளது. மதுரைக்கென்று பல தனிசிறப்புகள் உள்ளன. மதுரையை தொழில் நகர மாகவும் அழைக்கப்பட வேண்டும். மதுரையில் மிகப்பெரிய தொழிற்சாலைகளோ, மிகப்பெரிய தொழில் நிறுவனங்களோ இல்லை.
இதனால் மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர்கள் வேலைதேடி சென்னை, திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களை நோக்கி செல்கின்றனர்.
இன்னும் சில ஆண்டு களில் மதுரை உள்கட்ட மைப்பு அமையப்பெற்ற நகரமாக மாற உள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மதுரையை தொழில் நகரமாக மாற்றும் வகையிலும் மிகப்பெரிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முதலீட்டாளர்கள் மாநாடு மதுரையில் நடந்த மாநில அரசை வலியுறுத்த வேண்டும்.
தற்பொழுது தமிழக அரசால் மாட்டுத்தாவ ணியில் அமைய இருக்கும் டைட்டல் பார்க்கை இதற்கு முந்தைய தி.மு.க ஆட்சியின் போது தகவல் தொழிநுட்ப பூங்காவுக்கு என்று ஒதுக்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்ட வடபழஞ்சியில் அமைக்க வேண்டும்.
அந்த பகுதியில் டைட்டல் பார்க் அமையும் பட்சத்தில் அதனை சுற்றி உள்ள பகுதிகள் வளர்ச்சி பெறும். அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமும் உயரும். அதே போல் மதுரையை சுற்றியுள்ள அனைத்து மாவட்டங்க ளிலும் கிரைனைட் குவாரிகள் இயங்கி வருகிறது.
மதுரையில் மட்டும் அனைத்து கிரைனைட் குவாரிகளும் தடைசெய்யபட்டுள்ளது. இதனால் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கபட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் கிரானைட் குவாரி செயல்படுகிறது. ஆனால் அதன் அருகில் மதுரை மாவட்டத்தில் அமைந்துள்ள கிரானைட் குவாரிகள் இயங்கவில்லை. இது மிகவும் வருந்தத்தக்கது.
அரசு விதிகளுக்கு புறம்பாக செயல்பட்ட குவாரிகளை தவிர்த்து மற்ற கிரைனைட் குவாரிகள் இயங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அப்போது மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சசிக்குமார், ஊடகபிரிவு கோட்ட பொறுப்பாளர் நாகராஜன், முன்னாள் ஓ.பி.சி. அணி மாநில துணை தலைவர் கே.ஆர்.முரளி ராமசாமி, வக்கீல் ரவீந்திரன், வேல்முருகன், வெற்றி கண்ணன், காளிதாஸ் கருப்பையா, சதீஷ்,
ஆசாத், சோலைமணி கண்டன் உள்பட பலர் உடனிருந்தனர்.
- தமிழக பா.ஜனதா பட்டியல் அணி மாநில பொருளாளர் சங்கர் என்பவர் சில நாட்களுக்கு முன்பு படு கொலை செய்யப்பட்டார்.
- ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வளர்புரம் ஊராட்சி மன்ற தலைவரும், தமிழக பா.ஜனதா பட்டியல் அணி மாநில பொருளாளருமான சங்கர் என்பவர் சில நாட்களுக்கு முன்பு படு கொலை செய்யப்பட்டார்.
இதனை கண்டித்தும், தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறி தி.மு.க அரசை கண்டித்தும் நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் இன்று வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமை தாங்கினார். பட்டியல் அணி மாவட்ட தலைவர் துளசி பாலா முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட பொது செயலாளர் வேல் ஆறுமுகம், மாவட்ட செய லாளர் வக்கீல் வெங்கடா ஜலபதி என்ற குட்டி, மாவட்ட இளைஞரணி தலைவர் பிரபாகரன், இளைஞரணி செயலாளர் ஜெட் ராஜா, மாவட்ட மகளிர் அணி தலைவி ஜெயசித்ரா, மண்டல தலைவர்கள் குரு கண்ணன், பெரியதுரை உள்பட ஏரா ளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.