என் மலர்
நீங்கள் தேடியது "வருமான வரித்துறை"
- ஒரு ஜூஸ் கடை வியாபரிக்கும் அதே போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
- வருமான வரி செலுத்தும் அளவிற்கு கூட தான் சம்பாதிக்கவில்லை என வேதனை தெரிவித்தார்.
சமீப காலமாக சாமானியர்களுக்கு கொடிக்கணக்கில் ஜிஎஸ்டி வரி பாக்கி இருப்பதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த வாரம் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தள்ளுவண்டி முட்டை கடைக்காரருக்கு கோடிக்கணக்கான ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்தக்கோரி வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் வந்தது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஜூஸ் கடை வியாபரிக்கும் அதே போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. அவர்களின் பெயரில் நடந்த பணப்பரிமாற்றங்களை மேற்கோள் காட்டி இந்த நோட்டீஸ்கள் வந்திருந்தன.
இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்தில் மாதம் ரூ.5,000 ஊதியம் பெறும் ராஜ்குமார் சிங் என்ற வாட்ச்மேனுக்கு ரூ.2.2 கோடி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த நோட்டீஸை பார்த்து அதிர்ந்துபோன ராஜ்குமார், வருமான வரி செலுத்தும் அளவிற்கு கூட தான் சம்பாதிக்கவில்லை என வேதனை தெரிவித்தார். இவரின் பேன் கார்ட் மூலம் சட்டவிரோதமாக பரிமாற்றம் நடந்துள்ளதா என விசாரணை நடத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.
- தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
இண்டிகோ விமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை ரூ.944.20 கோடி அபராதம் விதித்து உள்ளது. 2021-22-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான அபராதமாக இந்த தொகையை விதித்து இருக்கிறது.
ஆனால் தங்கள் நிறுவனம் வருமான வரி (மேல்முறையீடு) கமிஷனர் முன்பு தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது என்ற தவறான புரிதல் காரணமாக இந்த அபராதம் விதிக்கப்பட்டு இருப்பதாக இண்டிகோ நிறுவனம் கூறியுள்ளது.
வருமான வரித்துறையின் இந்த அபராதத்தை எதிர்த்து வழக்கு தொடுத்து சட்ட நிவாரணம் காண உள்ளதாக கூறியுள்ள இண்டிகோ நிறுவனம், இந்த நடவடிக்கையால் நிறுவனத்தின் நிதி, இயக்கம் அல்லது பிற நடவடிக்கைகளில் எந்த தாக்கமும் ஏற்படாது என்றும் கூறியுள்ளது.
- எங்களிடம் ரூ.50 கோடி இருந்தால், அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க நாம் ஏன் சிரமப்பட வேண்டும்
- நாங்கள் உணவுக்கே சிரமப்படுகிறோம்.. எங்களிடம் இவ்வளவு பணம் இருந்தால், எங்கள் மகன் ஏன் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்? என்று ரஹீஸின் தாய் கூறினார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு முட்டை கடைக்காரருக்கு கோடிக்கணக்கான ரூபாய் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை செலுத்தக்கோரி வருமான வரித் துறையிடமிருந்து நோட்டீஸ் பறந்துள்ளது. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு ஜூஸ் கடை வியாபரிக்கும் அதே போன்ற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் டாமோ மாவட்டத்தில், தள்ளுவண்டியில் முட்டை விற்று பிழைப்பு நடத்துபவர் சுமன். இவருக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோடீஸில், பிரின்ஸ் சுமன், அரசுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஆக ரூ.6 கோடி பாக்கி வைத்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த நோடீஸில், 2022 ஆம் ஆண்டு டெல்லியில் சுமனின் பெயரில் "பிரின்ஸ் எண்டர்பிரைசஸ்" என்ற நிறுவனம் பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் தோல், மரம் மற்றும் இரும்பு வர்த்தகத்தில் ஈடுபட்டது என்றும் கடந்த இரண்டு ஆண்டுகளில் பெரும் பரிவர்த்தனைகளை மேற்கொண்டதாகவும் நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்திய சுமன், "நான் வண்டியில் மட்டுமே முட்டைகளை விற்கிறேன். நான் டெல்லிக்கே இதுவரை சென்றதில்லை. பின் அங்கு ஒரு நிறுவனத்தைத் தொடங்குவது என்பது எப்படி சாத்தியம்" என்று தெரிவித்துள்ளார்.
சிறிய மளிகைக் கடை நடத்தி வரும் சுமனுடைய தந்தை ஸ்ரீதர் சுமன் பேசுகையில், "எங்களிடம் ரூ.50 கோடி இருந்தால், அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க நாம் ஏன் சிரமப்பட வேண்டும்?" என்றார்.
சுமனின் தனிப்பட்ட ஆவணங்களை யாரோ தவறாகப் பயன்படுத்தியுள்ளதாக அவருக்கு தெரிந்த வழக்கறிஞர் சந்தேகம் தெரிவித்துள்ளார். இதை விசாரிக்க காவல்துறை மற்றும் வருமான வரி அதிகாரிகளை அணுகியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இதற்கு மத்தியில் உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் ஜூஸ் விற்பனையாளரான எம்.டி. ரஹீஸுக்கு ரூ.7.5 கோடிக்கு மேல் ஜிஎஸ்டி கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதனால் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அவருக்கு அனுப்பப்பட்ட நேட்டீஸில், 2020-21 ஆம் ஆண்டில் அவரது பெயரில் கோடிக்கணக்கான மதிப்புள்ள போலி பரிவர்த்தனைகள் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய அவர், "இந்த நோட்டீஸ் எதற்க்கு என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஜூஸ் மட்டுமே விற்கிறேன். இவ்வளவு பணத்தை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. அரசாங்கம் எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் ஒரு ஏழை. நான் ஒரு பொய் வழக்கில் சிக்க வைக்கப்படக்கூடாது" என்று தெரிவித்தார்.
"நாங்கள் அன்றாட உணவுக்கே சிரமப்படுகிறோம்.. எங்களிடம் இவ்வளவு பணம் இருந்தால், எங்கள் மகன் ஏன் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும்?" என்று ரஹீஸின் தாய் கூறினார்.
2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்காக கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடை அளிக்க ரஹீஸின் தனிப்பட்ட ஆவணங்கள் மோசடியாகப் பயன்படுத்தப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக ஐடி துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
- வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
திருப்பூர் :
தமிழகத்தில் சேலம், கரூர், குளித்தலை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டம் உதகையில் சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் உரிமையாளராக சரவணன் என்பவர் உள்ளார்.
சிவா டெக்ஸ்டைல்ஸ்
இந்நிலையில் இந்த நிறுவனங்களில் நேற்று முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் குமரன் சாலையில் உள்ள சிவா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று 2-வது நாளாக சோதனை நீடித்தது. வரி ஏய்ப்பு தொடர்பாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. கடை அடைக்கப்பட்டதால் ஜவுளிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பி சென்றனர்.
- பதில் மனுவுக்கு, விஜயபாஸ்கர் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது.
- நீதிபதி அனிதா சுமந்த், விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
சென்னை :
அ.தி.மு.க., ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வீட்டில் 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தி, ஏராளமான ஆவணங்களை கைப்பற்றியது. இதன் அடிப்படையில் 2011-12-ம் நிதியாண்டு முதல் 2018-19-ம் நிதியாண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்தை நிர்ணயம் செய்து, விஜயபாஸ்கர் ரூ.206.42 கோடி வருமான வரி விதிக்கப்பட்டது.
இந்த வரியை விஜயபாஸ்கர் செலுத்தவில்லை. இதையடுத்து, அவருக்கு சொந்தமான 117.46 ஏக்கர் நிலம், 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கினர். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், விஜயபாஸ்கர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், ''நான் விராலிமலை தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ளேன். எம்.எல்.ஏ.-க்குரிய ஊதியம் மற்றும் தொகுதி மேம்பாட்டுக்குரிய நிதியை பெறும் வங்கிக் கணக்கை வருமானவரித்துறை முடக்கி விட்டனர். இதனால், தொகுதி நலத்திட்டங்களை மேற்கொள்ள முடியவில்லை. எனவே, வங்கிக் கணக்குகள், நிலத்தை முடக்கியதை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வருமான வரித்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார். இந்த வழக்கு நீதிபதி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வருமான வரித்துறை வரிவசூல் அதிகாரியான குமார் தீபக் ராஜ் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது அதில் கூறியிருப்பதாவது:-
விஜயபாஸ்கருக்கு கடந்த 2011-12 நிதியாண்டு முதல் 2018-19 நிதியாண்டு வரையிலான காலகட்டத்துக்கு உரிய வருமான வரியை செலுத்தும்படி உத்தரவிட்டும், அவர் வரிபாக்கியை செலுத்தவில்லை. முடக்கப்பட்ட ஒரு வங்கி கணக்கில் கடந்த 2022-23-ம் நிதியாண்டுக்கு தமிழ்நாடு அரசு ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்து 226-ஐ செலுத்தியுள்ளது.
அந்த கணக்கில் இருந்து சொந்த செலவுக்காக மட்டும் பணம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், தொகுதி பணிகளுக்காக எந்த பணமும் எடுக்கப்படவில்லை. சோதனையின்போது சேகரிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கு ஆதாரம் இருந்ததால் சட்டப்படி சொத்துக்களை, வங்கி கணக்குகளையும் முடக்கி அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வருமானவரி மதிப்பீட்டு உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருந்ததால், வரி பாக்கியாக உள்ள தொகையில் 20 சதவீதத்தை மட்டும் செலுத்தும்படி அவருக்கு கடிதம் அனுப்பியும் அதையும் அவர் செலுத்தவில்லை. இதன் காரணமாகவே அவருடைய சொத்துக்களும், வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.
விஜயபாஸ்கருக்கு போதுமான வாய்ப்பு அளிக்கப்பட்டு அதன்பிறகு மதிப்பீட்டு நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது. சொத்துகளை வேறு நபர்களுக்கு விற்பதை தடுக்கவும், அரசின் வருவாய் நலனை பாதுகாக்கவும் சட்டத்துக்குட்பட்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் ஐகோர்ட்டு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளிடம் நிவாரணம் கோருவதன் மூலம் மேல்முறையீட்டு நடவடிக்கையை தாமதப்படுத்த மனுதாரர் முயற்சித்து வருகிறார்.
எனவே வரி வசூல் அதிகாரியின் உத்தரவில் தலையிட எந்த அவசியமும் இல்லை என்பதால் விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த பதில் மனுவுக்கு, விஜயபாஸ்கர் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அனிதா சுமந்த், விசாரணையை வருகிற 12-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
- விஜயபாஸ்கருக்கு எஸ்.ஆர்.எஸ். கனிம வள நிறுவனம் ரூ.85.45 கோடியை வழங்கி உள்ளது.
- குட்கா வியாபாரிகளிடம் இருந்து ரூ.2.45 கோடி பணம் பெற்றதற்கான ஆதாரங்களை நாங்கள் கைப்பற்றினோம்.
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விஜயபாஸ்கரின் 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
2011-2012-ம் நிதி அண்டு முதல், 2018- 2019-ம் நிதி ஆண்டு வரையிலான கால கட்டத்தை கணக்கில் எடுத்து விஜயபாஸ்கரின் வருமானத்தை நிர்ணயம் செய்த அதிகாரிகள் அவருக்கு ரூ.206.42 கோடி அளவுக்கு வருமான வரியை விதித்தனர். இந்த பணத்தை விஜயபாஸ்கர் செலுத்தாததால் அவருக்கு சொந்தமான 17.46 ஏக்கர் நிலம் மற்றும் 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கி வைத்தனர்.
இதை எதிர்த்து விஜயபாஸ்கர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தனது தொகுதி பணிகளை மேற்கொள்வதற்கு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது தடையாக உள்ளது என்றார். எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இருந்தார்.
இதற்கு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து வருமான வரித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரியான குமார் தீபக்ராஜ் தாக்கல் செய்துள்ள மனுவில், விஜயபாஸ்கர் பல்வேறு தரப்பில் இருந்தும் அதிக அளவில் பணம் வாங்கியது தொடர்பாக விரிவான பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. இதன் அடிப்படையிலேயே அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சொத்துக்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
விஜயபாஸ்கருக்கு எஸ்.ஆர்.எஸ். கனிம வள நிறுவனம் ரூ.85.45 கோடியை வழங்கி உள்ளது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதே நேரத்தில் குட்கா வியாபாரிகளிடம் இருந்தும் விஜயபாஸ்கர் பணம் வாங்கியுள்ளார். அதற்கும் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குட்கா வியாபாரிகளிடம் இருந்து ரூ.2.45 கோடி பணம் பெற்றதற்கான ஆதாரங்களையும் நாங்கள் கைப்பற்றினோம். இதன் அடிப்படையிலேயே வருமான வரித்துறை நடவடிக்கை அவர் மீது பாய்ந்தது.
இப்படி பல்வேறு வழிகளில் இருந்தும் விஜயபாஸ்கருக்கு சட்டவிரோத அடிப்படையில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த பின்னரே சோதனை நடத்தி உரிய ஆவணங்களை கைப்பற்றினோம்.
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றபோது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்துரில் உள்ள ரிசார்ட்டில் தங்கி இருந்தனர். அவர்களை தங்க வைத்தற்கான செலவு தொகையாக ரூ.30 லட்சத்து 90 ஆயிரத்தையும் விஜயபாஸ்கர் ரிசார்ட்டுக்கு வழங்கி உள்ளார். இதற்கான ஆவணங்களும் கிடைத்து உள்ளன.
இப்படி பல வழிகளில் அவர் பணம் வாங்கியதும், கொடுத்திருப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு வருமான வரித்துறை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
இதற்கு பதில் அளிக்க விஜயபாஸ்கர் அவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 12-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
- முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன.
- இதன் அடிப்படையிலேயே அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சொத்துக்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
சென்னை:
அ.தி.மு.க. ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வீட்டில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் விஜயபாஸ்கரின் 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.
2011-2012-ம் நிதி அண்டு முதல், 2018- 2019-ம் நிதி ஆண்டு வரையிலான கால கட்டத்தை கணக்கில் எடுத்து விஜயபாஸ்கரின் வருமானத்தை நிர்ணயம் செய்த அதிகாரிகள் அவருக்கு ரூ.206.42 கோடி அளவுக்கு வருமான வரியை விதித்தனர். இந்த பணத்தை விஜயபாஸ்கர் செலுத்தாததால் அவருக்கு சொந்தமான 17.46 ஏக்கர் நிலம் மற்றும் 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கி வைத்தனர்.
இதை எதிர்த்து விஜயபாஸ்கர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தனது தொகுதி பணிகளை மேற்கொள்வதற்கு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது தடையாக உள்ளது என்றார். எனவே அதனை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி இருந்தார்.
இதற்கு பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து வருமான வரித்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரியான குமார் தீபக்ராஜ் தாக்கல் செய்துள்ள மனுவில், விஜயபாஸ்கர் பல்வேறு தரப்பில் இருந்தும் அதிக அளவில் பணம் வாங்கியது தொடர்பாக விரிவான பரபரப்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதன் விவரம் வருமாறு:-
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வரி ஏய்ப்பு செய்ததற்கான வலுவான ஆதாரங்கள் உள்ளன. இதன் அடிப்படையிலேயே அவரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சொத்துக்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
விஜயபாஸ்கருக்கு எஸ்.ஆர்.எஸ். கனிமவள நிறுவனம் ரூ.85.45 கோடியை வழங்கி உள்ளது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. அதே நேரத்தில் குட்கா வியாபாரிகளிடம் இருந்தும் விஜயபாஸ்கர் பணம் வாங்கியுள்ளார். அதற்கும் பல்வேறு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குட்கா வியாபாரிகளிடம் இருந்து ரூ.2.45 கோடி பணம் பெற்றதற்கான ஆதாரங்களையும் நாங்கள் கைப்பற்றினோம். இதன் அடிப்படையிலேயே வருமான வரித்துறை நடவடிக்கை அவர் மீது பாய்ந்தது.
இப்படி பல்வேறு வழிகளில் இருந்தும் விஜயபாஸ்கருக்கு சட்ட விரோத அடிப்படையில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்த பின்னரே சோதனை நடத்தி உரிய ஆவணங்களை கைப்பற்றினோம்.
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக பதவியேற்ற போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்துரில் உள்ள ரிசார்ட்டில் தங்கி இருந்தனர். அவர்களை தங்க வைத்தற்கான செலவு தொகையாக ரூ.30 லட்சத்து 90 ஆயிரத்தையும் விஜயபாஸ்கர் ரிசார்ட்டுக்கு வழங்கி உள்ளார். இதற்கான ஆவணங்களும் கிடைத்து உள்ளன.
இப்படி பல வழிகளில் அவர் பணம் வாங்கியதும், கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது. எனவே விஜயபாஸ்கரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு வருமான வரித்துறை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
இதற்கு பதில் அளிக்க விஜயபாஸ்கர் அவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை வருகிற 12-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
- அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.
- செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ய முடியாது.
புதுடெல்லி:
வருமான வரி செலுத்துவதற்கான நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதாரை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது. அதன்படி வருமான வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.
தற்போது இதற்கான காலக்கெடுவை வருமான வரித்துறை நிர்ணயித்து இருக்கிறது. அதன்படி அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதிக்குள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்து உள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டு உள்ள பொது அறிவுறுத்தல் நோட்டீசில், 'வருமான வரிச்சட்டம் 1961-ன்படி, விலக்கு பெறாத அனைத்து பான் கார்டுதாரர்களும் 31.3.2023-க்குள் தங்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்க வேண்டும். ஆதார் இணைக்காத பான் கார்டுகள் 1.4.2023 முதல் செயலற்றதாகி விடும்' என குறிப்பிடப்பட்டு உள்ளது.
மேலும், 'இது கட்டாயம், அவசியம். தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும்' என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.
கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, அசாம், காஷ்மீர், மேகாலயா மாநிலங்களை சேர்ந்தவர்கள், வருமான வரிச்சட்டம் 1961-ன் படி வீடில்லாதவர்கள், 80 மற்றும் அதற்கு மேல் வயதுடையவர்கள், இந்தியர் அல்லாதவர்கள் போன்ற பிரிவினர் விலக்கு பெற்றவர்கள் ஆவர்.
எனவே இவர்களை தவிர மீதமுள்ளவர்கள் பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது கட்டாயம் ஆகும்.
அதேநேரம் ஒருவரின் பான் கார்டு செயலற்றதாகி விட்டால், வருமான வரிச்சட்டத்தின் அனைத்து விளைவுகளுக்கும் அந்த தனிநபர் பொறுப்பாவதுடன், பல சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் ஏற்கனவே சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தது.
அந்தவகையில், செயல்படாத பான் எண்ணைப் பயன்படுத்தி வருமான வரி தாக்கல் செய்ய முடியாது; நிலுவையில் உள்ள வருமானம் செயலாக்கப்படாது; நிலுவையில் உள்ள பணத்தைத் திரும்பப் பெற முடியாது; குறைபாடுள்ள வருமானம் தொடர்பான நிலுவையில் உள்ள நடைமுறைகளை முடிக்க முடியாது மற்றும் அதிக விகிதத்தில் வரி கழிக்கப்பட வேண்டும்.
இவற்றைத் தவிர, அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கான முக்கியமான கே.ஒய்.சி. (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) அளவுகோல்களில் ஒன்று பான் என்பதால், வங்கிகள் மற்றும் பிற நிதி இணையதளங்கள் போன்ற பல்வேறு தளங்களிலும் வரி செலுத்துவோர் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்றும் வருமான வரித்துறை கூறியுள்ளது.
- கோலியஸ் மூலிகை கிழங்கில் இருந்து பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார்.
- சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தெரிகிறது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் ஈஸ்வரமூர்த்தி பாளையத்தைச் சேர்ந்தவர் இ.கே.பெரியசாமி. இவர் நாமகிரிப்பேட்டை ஒன்றிய பா.ம.க. செயலாளராகவும், நாமகிரிப்பேட்டை ஒன்றிய குழு துணை தலைவராகவும் இருந்து வருகிறார்.
இவர் திம்ம நாயக்கன்பட்டி அருகில் கோலியஸ் மூலிகை கிழங்கில் இருந்து பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு தயாரிக்கப்படும் கிழங்கு பவுடரை பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திற்கு அனுப்பி வைத்து வருகிறார். அந்த நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக இ.கே.பெரியசாமியின் தொழிற்சாலையில் கர்நாடகா மற்றும் சேலத்தை சேர்ந்த வருமான வரித்துறையினர் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இதைத் தொடர்ந்து நேற்றும் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர்.
தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தெரிகிறது.
- மருந்து நிறுவனம் மற்றும் செங்கல் சூளை அதிபர் வீடு - மண்டபம் உள்பட 20 இடங்களில் நடந்தது
- வருமான வரி கணக்குகளை சரியாக காட்டவில்லை என்று வருமான வரி துறைக்கு புகார்
கன்னியாகுமரி:
தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பல்வேறு நிறுவனங்கள் சொத்துக் களை வாங்கியதில் முறை கேடு செய்திருப்பதாகவும் வருமான வரி கணக்குகளை சரியாக காட்டவில்லை என்றும் வருமான வரி துறைக்கு புகார்கள் வந்துள் ளன.
அதன் அடிப்படையில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள ஓட்டல் அதிபர்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், செங்கல் சூளைகள் போன்றவற்றில் வருமான வரித்துறையினர் இன்று ஒரே கட்டமாக சோதனை நடத்தினர்.குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சிதறால் பகுதியைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜேந்திரன். இவருக்கு ஏராளமான கல் குவாரிகள் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ளன.
மேலும் மார்த்தா ண்டத்தில் ஒரு திருமண மண்டபம், லாரி சர்வீஸ் போன்றவையும் உள்ளது. இது தவிர தேமானூர் பகுதியில் செங்கல் சூளையும் நடத்தி வருகிறார்.
தொழில் அதிபர் ராே ஜந்திரனின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் இன்று வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதுபோல களியக்கா விளை பகுதியில் உள்ள காண்டிராக்டர் ஒருவரின் வீடு மற்றும் அலுவல கத்திலும் இன்று வருமான வரித்துறை யினர் சோதனை மேற்கொண்டனர்.
இதுபோல நாகர் கோவில் பகுதியில் உள்ள மருந்து நிறுவனத்திலும் இன்று சோதனை நடத்தப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஆலைகள், அலுவலகங்கள் என 5 இடங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இது தவிர மாவட்டத்தில் சுமார் 20 இடங்களில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்பட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம்.
- வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல் நடைபெற்றுள்ளது
புதுடெல்லி:
கடந்த 14-ந்தேதி டெல்லி மற்றும் மும்பை நகரங்களில் உள்ள பி.பி.சி அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
பி.பி.சி. அலுவலகங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நேற்று 3-வது நாளாக தொடர்ந்தது. இந்த நிலையில் பி.பி.சி அலுவலகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பாக வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
கணக்கில் காட்டிய வருவாயும், பிபிசி நிறுவனத்தின் செயல்பாடுகளும் முரணாக உள்ளதாக அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்பட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாகவும் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
டிவி, டிஜிட்டல், ரேடியோ என பிபிசி செய்திகள் மூலம் வரும் வருவாயை கணக்கிடுவதில் விதிமீறல் நடைபெற்றுள்ளது என்றும் ஆய்வின் போது பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.
- கடந்த 1990 முதல் 1996-ம் ஆண்டு வரை குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார்.
- வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகளை முடக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் சிவனய்யா (வயது 62).
இவர் கடந்த 1990 முதல் 1996-ம் ஆண்டு வரை குமரி மாவட்ட அரசு ரப்பர் கழகத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தார். அப் போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக சிவனய்யா மீது குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்கு நாகர்கோவிலில் உள்ள தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. பின்னர் கடந்த மாதம் இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறினார்.
இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிவனய்யாவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்துகளை முடக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்நிலையில் சிவனய்யாவின் சொத்துகளை போலீசார் முடக்கம் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப் பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் கூறியதாவது:-
அரசு ரப்பர் கழக அதிகாரியாக இருந்து ஒய்வு பெற்றவர் சிவனய்யா. இவர் பணியில் இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் குவித்துள்ளார். கடந்த 1990 முதல் 1996-ம் ஆண்டில் நாகர்கோவில், ராஜாக்கமங்கலம் ஆகிய பகுதிகளில் அன்றைய காலக்கட்டத்தில் ரூ.8 லட்சம் மதிப்பிலான நிலங்களை வாங்கி உள்ளார். இதற்கான கணக்கு சரியாக காண்பிக்கப்படவில்லை. தற்போது இந்த சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ.2 கோடி முதல் ரூ.4 கோடி வரை இருக்கும்.
இந்த நிலங்கள் சுமார் 14 இடங்களில் உள்ளன. இவற்றை தற்போது கோர்ட்டு உத்தரவின் பேரில் முடக்கம் செய்துள்ளோம். இதுதொடர்பாக அந்தந்த பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு முடக்கப் பட்ட நிலங்களின் விவரம் குறித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அந்த சொத்துகள் அனைத் தையும் பயன்படுத்தவும், விற்கவும் முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.