search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறும்படம்"

    • போதை பொருள் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • அரசு வழிகாட்டுதல் முறைகளை படக்குழுவினர் கடைப்பிடிக்க வேண்டும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் போதை பொருள் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையில் நடந்தது.

    போதைப் பொருட்கள் பயன்பாடு குறித்து விரைவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக சினிமா துறையை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக வெளியாகும் சினிமா டிக்கெட் விலையை உயர்த்த வேண்டுமானால் அரசு வழிகாட்டுதல் முறைகளை படக்குழுவினர் கடைப்பிடிக்க வேண்டும்.

    குறிப்பாக டிக்கெட் விலை உயர்வை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கும் முன்னணி நடிகர்கள் 2 குறும் படங்களில் நடிக்க வேண்டும். அதில் ஒன்று சைபர் குற்றம் மற்றொன்று போதைப் பொருள் எதிர்ப்பு குறித்து இருக்க வேண்டும்.

    இந்த 2 குறும்படங்களும் படம் திரையிடப்படுவதற்கு முன்பாக தியேட்டர்களில் ஒளிபரப்ப வேண்டும். இந்த புதிய நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே டிக்கெட் விலை உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சினிமா டிக்கெட் விலை உயர்த்த நடிகர்கள் விழிப்புணர்வு படங்களில் நடிக்க வேண்டும் என முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.

    • ரஜினிகாந்த நடிப்பில் “தலைவர் 171” படத்தை இயக்கி வருகிறார்.
    • இந்நிலையில் இந்த லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்சின் ஆரம்பக்கதை கூறுவதற்கு லோகேஷ் தற்போது ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார்

    லோகேஷ் கனகராஜ் லியோ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த நடிப்பில் "தலைவர் 171" படத்தை இயக்கி வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் போஸ்டர் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வைரலாகியது.

    லோகேஷ் கனகராஜ் ஆக்ஷன் கதைக்களத்தில் படம் இயக்குவதில் திறம் பெற்றவர். ஹோலிவுட் ஸ்டைலில் அவருக்கென LCU என சினிமேட்டிக் யூனிவர்சை தன் படங்களின் மூலம் உருவாக்கியுள்ளார்.

    இவர் இயக்கிய கைதி, விக்ரம், லியோ இந்த எல்.சி.யூ கான்சப்டில் வரும். இது தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாகும். அடுத்ததாக கைதி 2, விக்ரம் 2, ரோலெக்ஸ் போன்ற படங்கள் இயக்குவுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

    இந்நிலையில் இந்த லோகேஷ் சினிமேட்டிக் யூனிவர்சின் ஆரம்பக்கதை கூறுவதற்கு லோகேஷ் தற்போது ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். இந்த குறும் படத்தில் நரேன், காளிதாஸ் ஜெயராம் மற்றும் அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

    படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்றுக் கொண்டு இருக்கிறது. இக்குறும்படம் இன்னும் சில மாதங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கி வருகிறார்.
    • குறும்படத்தில் காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

    இளம் இயக்குனர் பட்டியலில் மறுக்க முடியாத இடத்தில் இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். விஜய்யை வைத்து அவர் இயக்கிய "லியோ" திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

    ஹோலிவுட் படத்தில் வரும் மார்வல் யூனிவர்ஸ், டி.சி. காமிக்கலில் வரும் யூனிவர்ஸ் கான்சப்ட்டுகளைப் போல, தனக்கென்று ஒரு தனி ஸ்டைலாக லோகேஷ் சினிமேடிக் யூனிவர்ஸ் ( LCU) என்று ஒன்றை உருவாக்கினார்.

    அதில் விக்ரம், லியோ, கைதி போன்ற படங்கள் உள்ளடக்கம். லியோ திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கி வருகிறார். 

    அதை தொடர்ந்து கைதி- 2 எடுக்க திட்டமிட்டுள்ளார். தற்போது வந்த அண்மை தகவல்கள்படி லோகேஷ் கனகராஜ் LCU வை மையமாக வைத்து 15- 20 நிமிட நேரத்திற்கு ஒரு குறும்படம் இயக்க இருக்கிறார்.

    அதற்கு இசையமைப்பாளர் அனிருத் இசை அமைக்க உள்ளார்.

    குறும்படத்தில் காளிதாஸ் ஜெயராம், அர்ஜூன் தாஸ், நரேன், ஹரிஷ் உத்தமன், கமல் மற்றும் சூர்யா நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    வெளியான செய்திகள் உண்மையாக இருந்தால் இந்த குறும்படம் கைதி - 2 படத்திற்கு முன்னே வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • தக்காளி விவசாயி தனது வயலில் தக்காளி விதைக்கிறார்.
    • விவசாயி எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் குறித்து விளக்கும் வகையில் அந்த கருத்தை மையமாக வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி:

    தக்காளி விவசாயி சந்திக்கும் சூழல்களை விளக்கும் குறும்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது.

    பல குறும்படங்களை இயக்கிய அப்துல்மஜீத் இயக்கத்தில் தூத்துக்குடி மாவட்ட முத்துநகர் திரைப்பட நடிகர்கள் சங்க தலைவர் முருகேசன், நடிகர்கள் முருகேசன், ஜாகிர் உசேன், சக்திவேல், தங்கராஜ், டேனியல் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி அத்திமரபட்டி வயல்வெளிகளில் நடத்தப்பட்டு காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

    தக்காளி விவசாயி தனது வயலில் தக்காளி விதைக்கிறார். விலை இல்லை என்று மறு வருடம் மாற்றுப்பயிர் விதைக்கிறார். ஆனால் தக்காளி விலை கூடுகிறது.

    இதனால் விவசாயி எதிர்கொள்ளும் சூழ்நிலைகள் குறித்து விளக்கும் வகையில் அந்த கருத்தை மையமாக வைத்து காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதனை அப்பகுதி விவசாயிகள் பொதுமக்கள் ஆர்வமுடன் கூட்டம் கூட்டமாக நின்று பார்த்து ரசித்து வருகின்றனர்.

    • “படிக்க வந்தோம் “ என்ற தலைப்பில் மாணவர் சமுதாயம் போதைப் பொருளால் பாதிக்கப்படுவது குறித்த குறும்படம் அடங்கிய குறுந்தகட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ குமார் வெளியிட்டார்.
    • இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இளைய சமு தாயத்தை அழித்து வருகிறது.

    சேலம்:

    சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலு வலகத்தில் "படிக்க வந்தோம் " என்ற தலைப்பில் மாணவர் சமுதாயம் போதைப் பொரு ளால் பாதிக்கப்படுவது குறித்த குறும்படம் அடங்கிய குறுந்தகட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ குமார் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த காலங்களில் பிறந்தநாள் நிகழ்ச்சியின் போது சாக்லேட்டுகள் கொடுத்து மகிழ்ந்த காலம் மாறி தற்போது மது விருந்து அளிக்கும் கலாச்சாரம் மாணவ சமுதாயத்திடம் அதிகரித்துள்ளது.

    இந்த பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இளைய சமு தாயத்தை அழித்து வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர் சமுதா யம் படிப்பில் கவனத்தை செலுத்தி வெற்றி பெற்று பிற்கால வாழ்வை பொற்கா லம் ஆக்கிக் கொள்ள வேண்டும். சேலம் மாவட் டத்தில் இதுவரை 2 ஆயிரம் கள்ள சாராய வழக்குகள் போடப்பட்டு உள்ளது. இரவு ரோந்து பணியில், டாஸ்மாக் பார் மற்றும் தாபா ஹோட்டல்களை தீவிரமாக கண்கா ணிக்கவும், வாகன தணிக் கையை முழு மையாக மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    மேலும் போதைப்பொ ருள் விழிப்புணர்வு குறித்து சேலம் மாவட்டத்தில் உள்ள 32 கல்லூரிகள் மற்றும் 67 பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளிடம் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நாளை நமதே என்னும்பெ யரில் விழிப்புணர்வு குறும்படம் மாணவ, மாணவிகளுக்கு திரையிடப்பட்டது.
    • விடாமுயற்சியுடன் கல்வி கற்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம்.

    மங்கலம் :

    திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பேரூராட்சி கருகம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்ப ள்ளியில் பெண்கல்வியின் முக்கியத்துவத்தையும், இடைநிற்றலைத் தவிர்த்து தடைகளை கடந்து விடாமுயற்சியுடன் கல்வி கற்றால் வாழ்க்கையில் வெற்றி பெற்று சாதனை படைக்கலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் "நாளை நமதே" என்னும்பெ யரில் விழிப்புணர்வு குறும்படம் மாணவ, மாணவிகளுக்கு திரையிடப்பட்டது.

    இதில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் அன்னசுகந்தி, உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர், ஆசிரியைகள், சாமளாபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் விநாயகாபழனிச்சாமி, சாமளாபுரம் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் குட்டிவரதராஜன், சாமளாபுரம் பேரூராட்சி மன்ற வார்டு கவுன்சிலர்கள் பெரியசாமி, துளசிமணி ஆறுமுகம், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி தங்கராஜ், ஒன்றிய பிரதிநிதி எழிழரசன், எழில்நிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் சார்பில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.
    • போக்சோ தண்டனைச் சட்டம், குழந்தை திருமண தடைச்சட்டம் மற்றும் இணைய குற்றங்கள் மீதான சட்டங்கள் குறித்த குறும்படம் திரையிட்டு, மாணவ, மாணவிகளுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்ட காவல் துறை சார்பில் சிறார்கள் பாலியல் தொந்தரவு தடுக்கும் போக்சோ சட்டம், குழந்தைத் திருமணங்கள் மற்றும் இணைய குற்றங்கள் தடுப்பு குறித்து, பள்ளிகள் தோறும் ஆசிரியர்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், வாழப்பாடி அனைத்து மகளிர் போலீசார் சார்பில் போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் வெங்கடாசலம் வரவேற்றார்.

    இதில் வாழப்பாடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சகுந்தலா, தலைமை காவலர் வைரமணி ஆகியோர் போக்சோ தண்டனைச் சட்டம், குழந்தை திருமண தடைச்சட்டம் மற்றும் இணைய குற்றங்கள் மீதான சட்டங்கள் குறித்த குறும்படம் திரையிட்டு, மாணவ, மாணவிகளுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இக்கருத்தரங்கில், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தற்காப்பு மற்றும் விழிப்புணர்வோடு செயல்படுவதாக உறுதியேற்றனர்.

    • குமரி மாவட்டத்தில் நாளை மறுநாள் தொடங்கும்
    • கோர்ட்டு வளாகத்தில் நீதிபதி அருள்முருகன் தொடங்கி வைத்தார்

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட சட்ட ப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் உள்ள சட்ட பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் வருகிற 9-ந்தேதி (புதன்கிழமை) முதல் 12-ந் தேதி வரை 4 நாட்கள் சிறப்பு லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றம்) நடைபெற உள்ளது.

    அப்போது நிலுவையில் உள்ள சிவில் வழக்குகள், காசோலை மோசடி வழக்கு கள், குடும்ப நல வழக்குகள் மற்றும் குடும்ப பராமரிப்பு வழக்குகள் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட உள்ளன. இந்த சிறப்பு லோக் அதாலத் நிகழ்ச்சியில் வழக்காளர்களை அதிகள வில் கலந்து கொள்ள வைக்கும் வகையில் விழிப்பு ணர்வு நிகழ்ச்சி நடத்தப் பட்டு வருகிறது.

    சிறப்பு லோக் அதாலத் குறித்த விழிப்புணர்வு குறும்படம் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அகண்ட எல்.இ.டி. திரை கொண்ட வாகனத்தில் ஒளிபரப்பும் நிகழ்ச்சி நாகர்கோவில் கோர்ட்டு வளாகத்தில் இன்று

    நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி அருள்முருகன் கலந்து கொண்டு விழிப்புணர்வு குறும் படத்தை ஒளிபரப்பு செய்யும் வாகனத்தை தொடங்கி வைத்தார். இந்த வாகனமானது குமரி மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு சென்று சிறப்பு லோக் அதாலத் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. நிகழ்ச்சியில் நீதிபதிகள் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

    • முல்லை பெரியாறு சர்ச்சை குறும்படம் தொடர்பாக தமிழக அரசு விரைந்து தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
    • முல்லை பெரியாறு குறித்து கற்பனை கலந்த முழுமையாக வதந்தியை பரப்பும் குறும்படமாக இது உள்ளது.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில். கூறியிருப்பதாவது:-

    கேரளாவை சேர்ந்த வழக்கறிஞர் ரசூல்ஜோய் வெளியிட்ட சைன் ஆப் காட் என்றஅபத்தமான குறும்படம், கேரள-தமிழக உறவுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் உள்ளது.

    முல்லை பெரியாறு குறித்து கற்பனை கலந்த முழுமையாக வதந்தியை பரப்பும் குறும்படமாக இது உள்ளது. குறிப்பாக குளோபல் டிசாஸ்டர், சேவ் கேரளா என்று வலை தளங்களில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட விவசாயிகளுக்கு பாசன ஆதாரமாக முல்லை பெரியாறு இருந்து வருகிறது. முல்லை பெரியாறு பிரச்சினையில் பல கட்ட போராட்டங்களை கடந்துதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா 2014-ம் ஆண்டு, உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142அடியாக உயர்த்தி கொள்ளலாம், பேபி அணையை பழுது பார்க்கப்பட்ட பின் 152 அடியாக உயர்த்தி கொள்ளலாம் என்ற வரலாற்று சிறப்பான தீர்ப்பை பெற்று தந்தார்.

    பல கட்ட ஆய்வில் பல வல்லுநர்கள் ஆய்வு செய்ததில், அணை உறுதி தன்மையாக உள்ளது என்று சான்றிதழ் கொடுத்துள்ளனர். அ.தி.மு.க. ஆட்சியில் 3 முறை முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தினார்கள்.

    விவசாயிகளுக்கு குடிமராமத்து திட்டத்தை தந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு போன்ற உரிமையை பிரச்சினைகளில் முன் நின்று களப்பணி ஆற்றினார்.

    தற்போது ரூல்கர்வ் என்பதை புகுத்தி உள்ளனர். இது சட்டமும் அல்ல. அந்த விதியின் அடிப்படையில் பருவமழை காலத்தில் நீரை தேக்காமல் திறந்து விட்டு, நீர் தேக்கும் காலங்களில் பருவமழை இருக்காது. இந்த ரூல்கர்வ் என்பது விவசாயிகளுக்கு எதிரானது ஆகும்.

    முல்லை பெரியாறு அணை பலகட்ட ஆய்வுக்கு பிறகு உறுதித் தன்மை உள்ளது என்று விஞ்ஞான சான்றுள்ளது. ஆனால் கேரளா புதிய அணை கட்ட பல்வேறு கற்பனை கலந்த வதந்தியை பரப்பி வருகிறது.

    குறிப்பாக பிஞ்சு குழந்தைகளின் இதயங்களில் நஞ்சை விதைக்கும் வகையில் கேரளாவை சேர்ந்த ரசூல்ஜோய் வெளியிட்ட சைன் ஆப் காட் குறும்படம் வேதனையை அளிக்கிறது. இந்த குறும்படம் வன்மத்தோடு எடுக்கப்பட்டது.

    இரு மாநில உறவுகளுக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் வன்மத்தோடு வெளியிட்டுள்ள நபர்களை சட்டப்படி கேரளா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த குறும் படத்தை தடை செய்ய வேண்டும்.

    தவறான கருத்துக்களை பரப்புவது தேசத்திற்கு விரோதமான செயலாகும், கற்பனை கலந்த இந்த குறும்படத்தை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்க்காமல் தடை செய்ய வேண்டும். இந்த குறும்படம் மூலம் பல்வேறு சர்ச்சைகள் ஏற்படும். முதலமைச்சர் தமிழகத்தின் ஜீவதார உரிமையை காக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தனிநபர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குறும்படம் தயாரிக்கும் போட்டிகள் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது.
    • 3 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்களுக்கு மிகாமல் ஒளிபரப்பு ஆகும் வகையில் இசையுடன் கூடிய பாடல் அடங்கிய குறும்படம் தயாரித்து வழங்கப்பட வேண்டும்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாநகராட்சியில் பொதுமக்களின் பங்களிப்பு டன் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து செல்லும் வகையில், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தனிநபர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக குறும்படம் தயாரிக்கும் போட்டிகள் நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. தூய்மைக்கான மக்கள் இயக்கம் பற்றி அனைத்து தரப்பு பொதுமக்களும் எளிதாக தெரிந்து கொள்ளும் வகையில் இந்த போட்டிகள் நடக்கிறது.

    எனது குப்பை எனது பொறுப்பு அல்லது எனது நகரம்- எனது பெருமை ஆகிய ஏதாவது ஒரு தலைப்பில் 3 நிமிடங்கள் முதல் 5 நிமிடங்களுக்கு மிகாமல் ஒளிபரப்பு ஆகும் வகையில் இசையுடன் கூடிய பாடல் அடங்கிய குறும்படம் தயாரித்து வழங்கப்பட வேண்டும். குறும்படம் தயாரித்து வழங்கப்பட்டதில் சிறப்பாக தயாரித்து அனுப்பி உள்ள குறும்படங்கள் தேர்வு குழுவினர் மூலம் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

    எனவே, குறும்படங்களை தயாரித்து வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) மாலை 5 மணிக்குள் மாநகராட்சி மைய அலுவலக தரை தளத்தில் உள்ள மாநகர நல அலுவலர் அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றிய குறும்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருவதால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
    சென்னை:

    திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், 16 நாட்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. பேச்சு வார்த்தைக்கு பிறகு ஏப்ரல் 2-ந் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டன. அப்போது, தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற ரசிகர்கள், அரசு குறும்படம் ஒன்றை பார்க்கும் நிலை ஏற்பட்டது.

    அதாவது, தமிழக அரசின் செய்தி துறை சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி தயாரிக்கப்பட்ட குறும்பட காட்சிகள்தான் அவை. தனக்கு வேலை கொடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயருக்கு பெண் ஒருவர் கோவிலில் அர்ச்சனை செய்வது போன்று அந்தக் காட்சி இடம்பெற்றிருந்தது.

    தமிழக அரசின் இந்த விளம்பரத்துக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதால், தியேட்டரில் ஒளிபரப்பப்பட்ட குறும்பட காட்சி நிறுத்தப்பட்டது. அதன்பிறகு, அந்த சர்ச்சை ஓரளவு ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் அதேபோன்ற ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.



    அதாவது, கோவிலுக்கு வரும் ஒரு தம்பதி, “பரணி நட்சத்திரம். பிரவீணுக்கு அர்ச்சனை செய்யுங்கள்” என்று அங்குள்ள குருக்களிடம் கூறுகிறார்கள்.

    அந்த நேரத்தில் மூன்று சக்கர நாற்காலியில் இருக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் குருக்களை அழைத்து, “அர்ச்சனை செய்ய வேண்டும். என் பேருக்கு அல்ல. சாமி பேருக்கு” என்று கூறுகிறார்.

    குருக்களும், “பேஷா பண்ணிடலாம். எந்த சாமிக்கு” என்று கேட்கிறார்.

    அதற்கு பதில் அளிக்கும் அந்த மாற்றுத்திறனாளி இளைஞர், “நம்ம தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத்தான். அவருதானே எனக்கு வேலை கொடுத்த சாமி” என்கிறார்.

    சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் இந்த வீடியோ மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இந்த வீடியோவும் தமிழக அரசு சார்பில் தயாரிக்கப்பட்டதா?, அல்லது வேறு யாராவது சமூக வலைதளங்களில் வெளியிடுவதற்காக தயாரித்தார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இதுகுறித்து, அரசு தரப்பில் விசாரித்தபோது, தமிழக அரசு சார்பில் தியேட்டர்களில் ஒளிபரப்பப்பட்ட குறும்படம் நிறுத்தப்பட்டுவிட்டது. புதிதாக எந்த குறும்படமும் தியேட்டர்களுக்கு வழங்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது. அதேநேரத்தில், தியேட்டர்களில் ஒளிபரப்ப ஏற்கனவே தயாரிக்கப்பட்ட குறும்படங்களில் இதுவும் ஒன்று என்றும், எப்படியோ சமூக வலைதளங்களில் மட்டும் வெளியாகிவிட்டது என்றும் கூறப்படுகிறது. எனவே, அதுகுறித்து தமிழக அரசின் செய்தித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.
    ×