என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குப்பைகள்"

    • குப்பைகளை அகற்றி நகரை தூய்மையாக வைத்திருக்க முக்கிய பங்கு வகித்தனர்.
    • தூய்மை பணியாளர்களுக்கு சந்தனம் கொடுத்து வரவேற்று அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தீபாவளியை யொட்டி தஞ்சை மாநகரில் சேர்ந்த குப்பைகளை அதிகாலை முதலே தூய்மை பணியாளர்கள் போர்க்கால அடிப்ப டையில் செயல்பட்டு குப்பை களை அகற்றி நகரை தூய்மை யாக வைத்திருக்க முக்கிய பங்கு வகித்தனர்.

    இதனை யொட்டி தூய்மை பணியாளர்களின் பணியை பாராட்டி கவுரவித்து ஊக்கப்படுத்தும் வகையில் தஞ்சை ஜோதி அறக்கட்டளை மற்றும் தஞ்சை மாவட்ட காவல்துறை இணைந்து தஞ்சை மாநகராட்சி 12-வது பிரிவை சேர்ந்த காமராஜர் நகர், ராஜராஜன் நகர், மாதவ்ராவ் நகர், உழவர் சந்தை, முனியாண்டவர் காலனி, அண்ணா நகர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தூய்மை பணியாளர்களுக்கு சந்தனம் கொடுத்து வரவேற்று அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி மாதவ்ராவ் நகரில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா சரவணன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி ஆகியோர் கலந்துகொண்டு தூய்மை பணியாளர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறி கவுரவித்தனர்.

    பின்னர், இன்ஸ்பெக்டர் சந்திரா சரவணன் பேசுகையில், தெருக்களை சுத்தமாக வைத்துக்கொண்டு நோய் தொற்றிலிருந்து காப்பாற்று வதால் பொதுமக்களில் ஒருவராக நாங்கள் உங்களுக்கு என்றென்றும் கடன்பட்டிருப்பதாகவும் அதுவும் விழா காலங்களில் சேரும் அதிகப்படியான குப்பைகளை விரைந்து அகற்றி நகரை அழகாக்குவதில் தூய்மை பணியாளர்களின் பங்கு குறிப்பிடத்தக்கது என்றார்.

    சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி பேசுகையில், பண்டிகை காலத்தில் டன் கணக்கில் சேர்ந்த குப்பைகளை அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை ஒற்றுமையுடன் செயல்பட்டு விரைந்து அகற்றி நகரை தூய்மையாக்கியதை வெகுவாக பாராட்டினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் மேற்பார்வையில் அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
    • இருசக்கர வாகனங்கள் வழியாக செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகாமையில் பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட் பகுதிகளில் உணவகங்கள், பூ கடைகள், நடைபாதை பழக் கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இதன்காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த பகுதிக்கு வந்து செல்கின்றனர். மேலும் பூ மார்க்கெட்டில் தினந்தோறும் கிலோ கணக்கில் பூக்கள் வீணாகி அதே பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. மேலும் அந்த  பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் இருந்தும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பூ மார்க்கெட் பகுதிகளில் தற்போது குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கின்றது. மேலும் இருசக்கர வாகனங்களில் ஏராளமான பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களையும் இந்த பகுதிக்கு வந்து வாங்கி செல்கின்றனர்.

    கடந்த சில தினங்களாக குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் சரியான முறையில் சுத்தம் செய்யாததால் தற்போது குப்பைகள் குவிந்து உள்ளன. இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் தற்போது துர்நாற்றம் வீசுவதோடு நோய் பரவும் அபாயமும் நிலவி வருகிறது. இது மட்டுமின்றி குப்பைகள் சரியான முறையில் அகற்றப்படாத காரணத்தினால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வழி இல்லாமலும் இருசக்கர வாகனங்கள் வழியாக செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர். ஆகையால் கடலூர் நகராட்சி அதிகாரிகள் அதிகமாக மக்கள் செல்லக்கூடிய பூ மார்க்கெட் பகுதிகளில் குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்றி நோய் பரவும் அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • அடையாறு ஆற்றில் மக்களால் கொட்டப்பட்ட கழிவுகள் ஆற்றில் தேங்கி கிடந்துள்ளது.
    • குப்பைகளை அகற்றி மாநகராட்சி ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி சென்றனர்.

    சென்னை:

    சென்னை மெரினா கடற்கரை மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் இயற்கை அழகை ரசிக்க சென்றவர்களும், நடைபயிற்சி சென்றவர்களும் கடற்கரை முழுவதும் குப்பை கழிவுகள் பெருமளவில் குவிந்து அலங்கோலமாக கிடந்ததை பார்த்து கவலையடைந்தனர்.

    வழக்கமாக இந்த மாதிரி பருவமழை காலங்களில் கடல் அலைகள் நிறைய கழிவுகளை வெளியேற்றுவது வழக்கம் தான். அது ஆற்று தண்ணீரில் இழுத்து வரப்பட்ட இலை தழைகள் மற்றும் குப்பை கழிவுகளாக இருக்கும்.

    ஆனால் இந்த முறை குவிந்து கிடந்த குப்பைகளில் பெரும்பாலும் பிளாஸ்டிக் பாட்டில்கள், ஐஸ்கிரீம் கப், மது குடிக்கும் பிளாஸ்டிக் கப், தெர்மாகோல்கள், சாப்பாடு பார்சல் கட்டும் பிளாஸ்டிக் கண்டெய்னர்கள், அதிக அளவில் கிடந்தது. கடலிலும் பிளாஸ்டிக் கழிவுகள் மிதந்து கொண்டிருக்கின்றன.

    குப்பை பொறுக்குபவர்களும் பிளாஸ்டிக் பொருட்கள் நிறைய கிடைத்ததாக தெரிவித்தனர்.

    இதுபற்றி கடலோர மாசு கட்டுப்பாடு நிபுணர்கள் கூறியதாவது:-

    மழைக்காலத்தில் தண்ணீரில் கடலுக்குள் சென்றடையும் குப்பை கழிவுகள் கரை ஒதுங்குவது வழக்கமானதுதான். ஆனால் இந்த ஆண்டு பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் கரை ஒதுங்கி உள்ளன.

    இதற்கு காரணம் பல மாதங்களாக அடையாறு ஆற்றில் மக்களால் கொட்டப்பட்ட கழிவுகள் ஆற்றில் தேங்கி கிடந்துள்ளது. இப்போது வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் முகத்துவாரத்தின் வழியாக ஆற்றுத் தண்ணீர் கடலில் கலக்கிறது.

    ஆற்று தண்ணீரில் அடித்து வரப்படும் கழிவுகள் தான் இப்படி கரை ஒதுங்குகிறது என்றனர்.

    இந்த குப்பை கழிவு மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து வருகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, மிகப்பெரிய அளவில் கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தனர்.

    இரவு நேரத்தில் கடல் அலைகள் ஆக்ரோஷமாக இருப்பதால் அந்த நேரத்தில் குப்பைகளை அகற்றுவது கடினமானது. எனவே அதிகாலை முதல் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர்.

    குப்பைகளை அகற்றி மாநகராட்சி ஊழியர்கள் லாரிகளில் ஏற்றி சென்றனர். ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான காலி மது பாட்டில்களும் குவிந்து கிடந்தன.

    குப்பை பொறுக்குபவர்கள் கோணிகளுடன் மது பாட்டில்களை சேகரிப்பதில் தீவிரமாக ஈடுபட்டனர்.

    • குப்பைகள் மட்டுமின்றி இறந்து போன விலங்குகளையும் கொண்டு வந்து சிலர் வீசுகின்றனர்.
    • சாய் குரு கார்டன் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    பல்லடம் : 

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சாய் குரு கார்டன் பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள ஓடையில் குப்பைகள் கொட்டி வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. குப்பைகள் மட்டுமின்றி இறந்து போன விலங்குகளையும் கொண்டு வந்து சிலர் வீசுகின்றனர். இதனால் கடும் துர்நாற்றம் ஏற்பட்டு மக்கள் வசிக்கவே இயலாத சூழ்நிலை நிலவுவதாக பலமுறை புகார் அளித்தும் குப்பைகள் அகற்ற இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    • மேயர் மகேஷ் எச்சரிக்கை
    • மோசமாக கிடந்த கழிவுநீர் ஓடைகளை உடனடியாக சீரமைக்க உத்தரவு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகர பகுதியில் உள்ள வார்டு களில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளுவது குறித்து மேயர் மகேஷ் வார்டு வாடாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    18-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து சென்றும் மோட்டார் சைக்கிள் சென்று இன்று ஆய்வு செய்தார். சவளக்காரன் கோணம், கீழ ஆசாரிப்பள்ளம், பள்ள விளை பெருவிளை பார்வதி புரம் பகுதிகளில் மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்.

    அப்போது பெருவிளை பகுதியில் உள்ள அனந்தனார் சானலில் ஆய்வு பணியை மேற்கொண்ட போது சானலில் முழுவதும் குப்பை கள் அதிக அளவு கிடந் தது. இந்த குப்பை களை உடனடியாக அப்புறப்ப டுத்த மேயர் மகேஷ் உத்தரவிட்டார். மேலும் சானல்களில் பொதுமக்கள் குப்பைகளை வீசக்கூடாது. குப்பைகளை வீசினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மாநகராட்சி சார்பில் அந்த பகுதிகளில் கேமராக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். குப்பைகள் வீசுவர்கள் கண்டறியப்பட்டு அவர்க ளுக்கு அபராதம் விதிக்கப் படும் என்று எச்சரித்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் பழுதான சாலைகள் மற்றும் கழிவு நீர் ஓடைகளை மேயர் மகேஷ் ஆய்வு செய்தார்.மோசமாக கிடந்த கழிவுநீர் ஓடைகளை உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார். ஆய்வின் போது மண்டல தலைவர் ஜவகர் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

    • குப்பைகள் ஆற்றின் பகுதியில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
    • ஆற்றில் குளிக்கும் மக்களுக்கு அரிப்பு, சரும பாதிப்பு ஏற்படுகிறது.

    சீர்காழி:

    கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்திற்கு சமூக ஆர்வலர் ராம்பிரபு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிப்பதாவது :

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே பிரதான கொள்ளிடம் ஆறு உள்ளது. இந்த கொள்ளிடம் ஆற்றின் நீர் ஆதாரத்தின் மூலம் கொள்ளிடம் கரையோரம் உள்ள மகேந்திரப்பள்ளி, காட்டூர், அளக்குடி, புளியந்துறை, புதுப்பட்டினம், தண்டேசநல்லூர், ஆச்சாள்புரம், கொள்ளிடம், மாங்கனாம்பட்டு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது.

    இந்நிலையில் கொள்ளிடம் ரெயில்வே பாலத்தின் அருகில் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு கோபாலசமுத்திரம், ஆணைக்காரன் சத்திரம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட சுமார் 20 கிராமங்களில் நாள்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டுவதற்கு மாற்றுஇடம் இல்லாததால் ஆற்றங்கரையோரம் கொட்டப்படுவது வழக்கமாக இருந்துவருகிறது.

    இவ்வாறு குப்பைகள் இறைச்சி கழிவுகள், இறந்த கால்நடைகள் கொள்ளிடம் ஆற்றின் பகுதியில் கொட்டப்படுவதால் அப்பகுதி கடும் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது.

    அதோடு குப்பைகள் ஆற்று தண்ணீரில் கலந்து தண்ணீருடன் அடித்து சென்று கடலிலும் கலந்து வருகிறது.

    இந்த குப்பைகள் ஆற்றில் அடித்து செல்லப்படும்போது நெகிழிகள் புதைந்து கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு ஆற்றில் குளிக்கும் மக்களுக்கு அரிப்பு போன்ற சரும பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் மாசு அடைந்த ஆற்று நீரை பருகும் கால்நடைகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றன.

    எனவே கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தற்போது இந்த இடம் சாலை உயர–மாகவும், பயணிகள் நிழலகம் பள்ளமான இடத்திலும் உள்ளது.
    • இரவு நேரங்களில் மதுபிரியர்கள் மது அருந்தும் கூடாரமாகவும் விளங்குகிறது.

    பேராவூரணி:

    பேராவூரணியில் இருந்து சேதுபாவாசத்திரம் செல்லும் மெயின் சாலையில் (முசிறி-சேதுபாவாசத்திரம்) மாசாகாடு என்ற இடத்தில் பஸ் நிறுத்தம் உள்ளது.

    கடந்த 2013-14 ம் ஆண்டு பழுதுபார்க்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. தற்போது இந்த இடம் சாலை உயரமாகவும், பயணிகள் நிழலகம் பள்ளமான இடத்திலும் உள்ளது. இதனால் மழை பெய்தால் சாலையிலிருந்து மழை நீர் பஸ் நிறுத்ததிற்குள் புகுந்து விடுகிறது.

    மேலும் இரவு நேரங்களில் மதுபிரியர்கள் மதுஅருந்தும் கூடாரமாகவும் விளங்குகிறது. மதுவை அருந்திவிட்டு பாட்டில்களையும், குப்பைகளையும் இந்த பஸ் நிறுத்தத்தில் வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இந்த இடம் சுகாதாரமற்றதாகவும், குப்பைகளுடனும் காணப்படுவதால் பஸ்சில் செல்ல வரும் பெண்கள், பயணிகள் பஸ் நிறுத்தத்திற்குள் செல்ல அச்சப்படுகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த இடத்தை பார்வையிட்டு சுத்தம் செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு–வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும், கிராம பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்தது.
    • வடிகாலில் புல்பூண்டுகள், குப்பைகளை அகற்றும் பணி.

    மெலட்டூர்:

    பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி ஊராட்சி யின் முக்கிய வடிகால் வாய்க்காலில் பல இடங்களில் வாய்க்காலின் பெரும்ப குதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற முடியாமல் குடியிருப்பு பகுதியில் மழைநீர் புகுந்து தெருக்களை சுற்றி தேங்கி நிற்கும் நிலை இருந்து வருகிறது.

    தற்போது பலமாக காற்று வீசி வருவதாலும், கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வடிகால் சுத்தம் செய்யும் பணி ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கனகராஜ் மேற்பார்வையில் நடைபெற்றது.

    வடிகால் வாய்க்காலில் தேங்கியிருந்த தண்ணீரை வெளியேற்றவும், வடிகாலில் தண்ணீர் தேங்காமல் இருக்கவும் வடிகாலில் புல்பூண்டுகள் குப்பைகள் அகற்றும் பணி நடைபெற்றது. வடிகால் வாய்க்காலை சுத்தம் நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கு கிராம மக்கள் நன்றி பாராட்டினர்.

    • சில வாரங்களாக குப்பைகள் அள்ளப்பாடமல் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.
    • பல்வேறு குறைகளை கூறி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நகராட்சி வளாகம் அவைகூடத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரிராஜசேகரன் தலைமை வகித்தார்.

    நகராட்சி ஆணையர் வாசுதேவன், மேலாளர் காதர்கான், நகராட்சி பொறியாளர் சித்ரா, சுகாதார அலுவலர் செந்தில்ராம்குமார், வருவாய் ஆய்வாளர் சார்லஸ், ஓவர்சியர் விஜேந்திரன் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் ராஜகணேஷ் தீர்மானங்களை வாசித்தார்.

    கூட்டத்தில் முபாரக்அலி பேசுகையில், சீர்காழி நகரில் கடந்த சில வாரங்களாக குப்பைகள் அள்ளப்பாடமல் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.

    இதனால் வார்டு பகுதிகளில் கடும் சுகாதாரசீர்கேடு நிலவுவதால் சீர்மிகு நகராட்சி சீர்கேடு அடைந்து வருகிறது. இதனால் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களுக்கும் மக்களிடம் அவப்பெயர் ஏற்பட்டுவருகிறது.

    குப்பை களை அள்ள நடவடிக்கை எடுக்காவிட்டால் பொது மக்கள் சாலைமறியல் போரா ட்டம் நடத்தும் முடிவுக்கு வந்துள்ளனர். மக்களுக்கு ஆதரவு தெரிவித்து தானும் பங்கேற்பேன் என்றார்.

    நகர்மன்ற உறுப்பினர் வள்ளிபேசுகையில், நாய்கள் தொல்லைஅதிக ரித்துவருவதை கட்டுப்ப டுத்தவேண்டும்.கொசு மருந்து தெளிக்கவேண்டும்.

    இறப்பு சான்றிதழ் விண்ணப்பம் செய்பவர்களுக்கு உடனடியாக வழங்காமல் அலைகழிப்பு செய்கின்றனர் என்றார். ஜெயந்திபாபுபேசுகையில், நகர்மன்ற உறுப்பினர்கள் முழுமதி இமயவரம்பன், ராஜேஷ், பாலமுருகன், சாமிநாதன் கிருஷ்ணமூர்த்தி வேல்முருகன், பாஸ்கரன், நாகரத்தினம், ரேணுகாதேவி, கலைசெல்வி, ரஹ்மத்நிஷா உள்ளிட்ட பலரும் நகரில் குப்பைகள் 15 நாட்களுக்கு மேலாக எடுக்கப்படாமல் மூட்டை மூட்டையாக கிடைக்கின்றன.

    இதனால் பொதுமக்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சுகா தாரக் கேடு ஏற்பட்டு வருகிறது.

    குப்பைகள் எடுக்கப்படாததால் கவுன்சிலர்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    எங்களால் பொதுமக்களிடம் பதில் சொல்ல முடியவில்லை உடனடியாக குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒட்டுமொத்தமாக கோரிக்கை விடுத்தனர்.

    பாலமுருகன் பேசுகையில், ஈமகிரிகை மண்டபம் பகுதியில் தண்ணீர் வசதி இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி பேசுகையில், குப்பைகளை கொட்டுவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.

    கால்நடைகள், பன்றிகளை பிடிக்க உறுப்பினர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைக்கின்றனர்.

    அவ்வாறு பிடித்தால் சில உறுப்பினர்களே போராடும் மக்களுக்கு துணை போகின்றனர். இவ்வாறு செயல்படும் உறுப்பினர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டு பெரிய கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிடந்த குப்பைகளை சேகரித்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் தூய்மை பணி இன்று காலை 34 தேசிய மாணவர் படை தஞ்சாவூர் சார்பில்

    நடைபெற்றது.

    இதில் தேசிய மாணவர் படை அதிகாரிகள் லெப்டி னைட்கள் சுரேஷ்பாபு, வசந்த், பேரரசன் மற்றும் தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி, அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, கரந்தை தமிழ்வேள் உமா மகேஸ்வரனார், பூண்டி புஷ்பம் கல்லூரிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட என்.சி.சி. மாணவர்கள் கலந்து கொண்டு பெரிய கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கிடந்த குப்பைகளை சேகரித்தனர்.

    பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தி மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரித்தனர்.

    புல் பூண்டுகளை அகற்றி சுத்தப்படுத்தினர். தொடர்ந்து பெரிய கோவிலுக்கு வந்தி ருந்த சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களுக்கு பிளா ஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • 24 மாதங்களில் முடிய வேண்டிய பணி 36 மாதம் ஆகியும் நிறைவு பெறாத நிலை உள்ளது.
    • குளத்தில் அத்திக்கடவு நீர் நிரப்பப்பட்டால் அத்துடன் கழிவு நீர் கலக்காமல் இருக்க உரிய வசதிகள் செய்யப்படவில்லை.

    அவிநாசி:

    60 ஆண்டு காலமாக போராடி பெற்ற அத்திக்கடவு-அவிநாசி திட்டம் மூலம் தண்ணீர் வந்தாலும், அவற்றை தேக்கி வைக்க வேண்டிய குளங்கள் குப்பை கிடங்காக மாறியுள்ளதால் பயன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் போதுமான பருவ மழை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டம் ஆயிரம் அடிகளுக்கு கீழ் சென்று விட்டது.

    இதனால் பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் விவசாயம் செய்யாமல் தரிசாக கிடக்கின்றன. ஏராளமானோர் வேலைக்காக கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இதற்கு தீர்வாக 3 மாவட்டங்களில் உள்ள குளம், குட்டைகளில், நீர் நிரப்பும் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்ற கோரி 3 மாவட்ட மக்கள் 60 ஆண்டுகளாக போராடினர்.

    இதையடுத்து கடந்த 2019 ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கியது. 24 மாதங்களில் முடிய வேண்டிய பணி 36 மாதம் ஆகியும் நிறைவு பெறாத நிலை உள்ளது. இதற்காக ரூ. 1,862 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    இந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வருகிற ஜனவரி 15-ந் தேதி அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் வெள்ளோட்டம் விடப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து அன்னூர் பகுதியில் உள்ள அத்திக்கடவு திட்ட ஆர்வலர்கள் கூறியதாவது:-

    இந்தத் திட்டத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, மாவட்டங்களில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 32 குளங்கள், ஊராட்சி ஒன்றியங்களுக்கு சொந்தமான 42 குளங்கள் மற்றும் 971 குட்டைகள் என 1045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்பட உள்ளது. ஒரு ஆண்டுக்கு 1.5 டி.எம்.சி. நீர் இந்த குளங்களில் நிரப்பப்படும். குளங்களுக்கு நீரை கொண்டு செல்ல கோவை மாவட்டத்தில் அன்னூரை அடுத்த குன்னத்தூராம் பாளையத்தில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் எம்மாபூண்டி, போல நாயக்கன்பாளையம், திருவாச்சி, நல்ல கவுண்டம்பாளையம், பவானி ஆகிய 5 இடங்களில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டது. இத்திட்டத்தில் 98 சதவீத பணிகள் முடிந்து விட்டது என அத்திக்கடவு திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    எனினும் அன்னூர் ஒன்றியத்தில் 140 ஏக்கர் பரப்பளவு உள்ள காட்டம்பட்டி குளம், 119 ஏக்கர் பரப்பளவு உள்ள அன்னூர் குளம், 80 ஏக்கர் பரப்பளவு உள்ள கரியாம்பாளையம் குளம் 60 ஏக்கர் பரப்பளவு உள்ள கெம்பநாயக்கன்பாளையம் குளம் மற்றும் 50 ஏக்கர் பரப்பளவு உள்ள கஞ்சப்பள்ளி குளம் உள்பட பெரும்பாலான குளங்களில் குப்பை மலை போல் குவிந்து கிடக்கின்றன. ஊராட்சிகள் சேகரிக்கும் கழிவுகள் இங்கு கொட்டப்படுகின்றன.

    அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு குளத்தில் நீர் நிரப்பப்பட்டால் நீர் வெளியே செல்லாமல் இருக்க கரைகள் ஒழுங்குபடுத்தப்படவில்லை.மதகுகள் அமைக்கப்படவில்லை. மேலும் குளத்தில் அத்திக்கடவு நீர் நிரப்பப்பட்டால் அத்துடன் கழிவு நீர் கலக்காமல் இருக்க உரிய வசதிகள் செய்யப்படவில்லை.

    இதனால் 60 ஆண்டு காலம் போராடி பெற்ற திட்டத்தின் மூலம் குளங்களுக்கு வரும் நீர் குப்பைகளுடனும் கழிவு நீருடனும் கலந்தால் அந்த நீர் விவசாயத்திற்கோ கால்நடைகளுக்கோ பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே குளங்களை சுத்தப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு திட்ட ஆர்வலர்கள் தெரிவித்தனர். கடந்த ஓராண்டாக இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் தொடர்ந்து கூறி குளங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். குளங்களில் குப்பை கொட்ட கூடாது. குளங்களின் கரைகளை ஒழுங்குபடுத்தி மதகுகள் அமைத்து குளங்களை ஆழப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளோம். இன்னும் சில நாட்களில் வெள்ளோட்டம் விடப்பட உள்ள நிலையில் இந்த பணிகளை செய்ய முடியுமா? என்று தெரியவில்லை.மாவட்ட நிர்வாகம் உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.   

    • ராமநாதபுர நீர்நிலைகளில் இறைச்சி கழிவு-குப்பைகளை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    • கூட்டம் நிறைவடைந்த தும் அனைத்து கவுன்சிலர் களுக்கும் அரசு அடையாள அட்டையை நகர்மன்ற தலைவர் கார்மேகம் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகரசபை கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடை பெற்றது. துணைச் சேர்மன் பிரவீன் தங்கம், கமிஷனர் (பொறுப்பு) சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வரு மாறு:-

    கவுன்சிலர் ராஜாராம் பாண்டியன் பேசுகையில், எனது வார்டில் தொன்னை குருசாமி கோவில் தெருவில் பேவர் பிளாக் அமைக்கும் பணி முடிவடைந்து ஒரு பகுதி மட்டும் விடுபட்டுள்ளது. அங்கும் பேவர் பிளாக் பதிக்க வேண்டும். பள்ளிவாசல் அருகே ரோடு குறுகலாக உள்ளது. ஆக்கிரமிப்பு ஏதேனும் இருந்தால் அதை அகற்றி அகலப்படுத்த வேண்டும். வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது.

    சேர்மன்:- கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் ஆக்கிரமிப்பு ஏதேனும் இருந்தால் அகற்றி சாலை அகலப்படுத்தப்படும்.

    கவுன்சிலர் மணி கண்டன்:- கிடா வெட்டு ஊரணி, பாணங்குண்டு ஊருணி, வண்ணர்ஊரணி, முகவை ஊருணி உள்ளிட்ட நீர் நிலைகளில் கலக்கும் கழிவுநீரால், பலரும் தினமும், வித, விதமான நோய்களுக்கு ஆளாகின்றனர். நிலத்தடி நீரும் மாசுப்படும் நிலை தொடர்கிறது. நகரின் நிலத்தடி நீர் கடுமையான உவர்ப்புத் தன்மை ஏற்பட்டு அதை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் நிலத்தடி நீர் பாழ்பட்டு வருகிறது. கொசுக்கள் உற்பத்தி யாகி,பல வித நோய்களை ஏற்படுத்தி வருகிறது. நீர் நிலைகளில் குப்பை, கோழி, மாமிச கழிவு களையும் கொட்டுகின்ற னர். இதனால் நிலத்தடி நீருக்கு பாதிப்பு உள்ளது. இதை தடுக்க வேண்டும்.

    இதற்கு நகராடசி தலைவர் கார்மேகம் பதிலளித்து பேசுகையில், நாள்தோறும் அதிகாலை 4:30 மணி முதல் ராமநாதபுரம் நகர் பகுதி முழுவதும் ஆய்வு செய்து வருகிறேன். ஊருணிகளில் கோழி, இறைச்சி கழிவுகள், குப்பைகள் போடுபவர்கள் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என்றார்.

    இதேபோல் ரமேஷ், குமார் உள்ளிட்ட கவுன்சிலர்கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி பேசினர். அப்போது கவுன்சிலர்கள் தெரிவித்த கோரிக்கைகளை நிறை வேற்ற உடனடியாக நடவ டிக்கை எடுக்கப்படும் என்று தலைவர் கூறினார். பின்னர் பல்வேறு தீர்மானங் கள் நிைறவேற்றப்பட்டன.

    கூட்டம் நிறைவடைந்த தும் அனைத்து கவுன்சிலர் களுக்கும் அரசு அடையாள அட்டையை நகர்மன்ற தலைவர் கார்மேகம் வழங்கினார்.

    ×