என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறுமிக்கு பாலியல் தொல்லை"

    • தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை
    • ஆடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    கோவை:

    கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது37). இவரது சொந்த ஊர் நெல்லை. ஜான் ஜெபராஜ் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் செயல்பட்ட கிறிஸ்தவ சபையின் மத போதகராக இருந்தார். ஜான் ஜெபராஜ் பாப் இசையின் மூலம் பாடல்களை பாடி இளைஞர்களை கவர்ந்து வந்தார்.

    இவர் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநி லங்ளுக்கும் சென்று பாப் இசை நிகழ்ச்சி நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது 2 சிறுமிகள் பாலியல் புகார் கொடுத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜான் ஜெபராஜ் கடந்த ஆண்டு மே மாதம் 21-ந் தேதி அவரது வீட்டில் நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், கோவையை சேர்ந்த 17 மற்றும் 16 வயதுடைய 2 சிறுமிகளும் பங்கேற்றுள்னர்.

    அப்போது, ஜான் ஜெபராஜ் அந்த சிறுமிகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.

    மதபோதகர் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானதை தொடர்ந்து, மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    அவரை கைது செய்வதற்காக ஜி.என்.மில்சில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர் இல்லை.போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்னை தேடுவதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார்.

    தலைமறைவான அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

    இந்த நிலையில் தலைமறைவான ஜான் ஜெபராஜ் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். பெங்களூர் நகர் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் ஜான் ஜெபராஜின் சொந்த ஊர் நெல்லை என்பதால் அவர் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளது என்பதால் போலீசார் அங்கும் முகாமிட்டு, அவரை தேடி வருகின்றனர்.

    இதற்கிடையே தலைமறைவாக உள்ள மதபோதகர் ஜான் ஜெபராஜ் பேசி முன்பு வெளியிட்ட ஆடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில், அவர் தனது மனைவியிடம், என்ன நடந்தது என்று உனக்கும் தெரியும். உனக்கும், எனக்கும் இடையே உள்ள சிறிய பிரச்சினையை வைத்து, ஒருவர் நம்மிடம் விளையாண்டு விட்டார்.உனக்கு ஒரு விஷயம் புரிய வேண்டும். இந்த மாதிரி பிரச்சினைகள் நடக்கிறபோது எல்லா மனிதருக்கும் முதலில் தோன்றுவது தற்கொலை எண்ணம் தான்.

    எனக்கும் அதுபோன்று தோன்றியது. நான் 4-5 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளேன். 3 மாதம் மன அழுத்தத்தில் இருந்தேன். சாப்பிடவில்லை. 9 கிலோ வரை குறைந்து விட்டேன்.

    நான் தவறு செய்து விட்டு, அது செய்தேன். இது செய்தேன் என கூறுகிறாய் என நினைக்கலாம். என்ன நடந்தது என்று நமக்கு தெரியும். நான் தவறு செய்திருந்தால், அதனை கடவுள் பார்த்துக்கொள்வார்.

    இவ்வாறு அந்த ஆடியோவில் அவர் பேசியுள்ளார்.

    இதேபோல மேலும் சில ஆடியோக்களையும் ஜான்ஜெபராஜ் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த ஆடியோ விவரங்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • சலூன் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
    • தனியார் பள்ளில் எல்.கே.ஜி. படித்து வருகிறார்.

    கோவை

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண். இவர் பேரூர் அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார்.

    அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    தனியார் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறேன். எனக்கு ஒரு மகனும், 3¾ வயதில் ஒரு மகளும் உள்ளனர். எனது மகள் எங்கள் பகுதியில் உள்ள தனியார் பள்ளில் எல்.கே.ஜி. படித்து வருகிறார். சம்பவத்தன்று நான் எனது மகன், மகளுக்கு முடி வெட்டுவதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு சலூன் கடைக்கு அழைத்து சென்றேன். அங்கு கிணத்துக்கடவு லட்சுமி நகரை சேர்ந்த சலூன் கடை உரிமையாளர் மணிகண்டன் (வயது 53) என்பவர் முடி வெட்டிக்கொண்டு இருந்தார்.

    முதலில் எனது மகனுக்கு முடி வெட்டினார். பின்னர் எனது மகளுக்கு மணிகண்டன் முடி வெட்டினார். அப்போது நான் பணம் எடுப்பதற்காக அந்த பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்றேன். அப்போது மணிகண்டன் எனது மகளுக்கு தொல்லை கொடுத்தார். நான் திரும்பி வந்து பார்த்த போது எனது மகள் அழுது கொண்டு இருந்தாள். நான் என்ன என்று கேட்டபோது மணிகண்டன் பாலியல் தொல்லை கொடுத்தாக கூறினார். எனவே எனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிகண்டன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் முடி வெட்ட சென்ற 3¾ வயது பெண் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த மணிகண்டனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். 

    • 60 வயது முதியவர் நைசாகி பேசி சிறுமியை அவரது வீட்டிற்க்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
    • சிறுமி அழுது கொண்டு வீட்டிற்கு வந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் சிறுமியை விசாரித் தனர்.

    மாரண்டஅள்ளி,

    தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி. இவர் மனநலம் பாதிக்கப் பட்டதால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 10-ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அதே பகுதியை சேர்ந்த சின்னசாமி என்ற 60 வயது முதியவர் நைசாகி பேசி சிறுமியை அவரது வீட்டிற்க்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதனால் சிறுமி அழுது கொண்டு வீட்டிற்கு வந்ததால் சந்தேகமடைந்த பெற்றோர்கள் சிறுமியை விசாரித் தனர்.அப்போது சிறுமி நடந்ததை கூறினார்.

    உடனடியாக சிறுமியின் தாய் மாரண்ட அள்ளி போலீசில் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சின்னசாமியை போக்சோ சட்டத்தில் கைது செய்து தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • தாய் புகார்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    ஆற்காடு திமிரி அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த 4-ம் வகுப்பு படிக்கும் சிறுமி. இவர் கடந்த 10-ந் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்றார். அப்போது 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதைப் பார்த்த மற்றொரு மாணவி இது குறித்து ஆசிரியையிடம் கூறியுள்ளார். தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் சிக்கிய மாணவி மீட்கப்பட்டார்.

    இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் ராணிப்பேட்டை மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
    • சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக சிவனாங்கிக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுதா தீர்ப்பளித்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருேக உள்ள அத்தக்கல்லை சேர்ந்தவர் சிவனாங்கி (வயது30). விவசாயி. இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் 20-ந் தேதி 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து சிறுமியின் தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் சிவனாங்கியை கைது செய்தனர்.

    இதுதொடர்பான வழக்கு கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

    அதன்படி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக சிவனாங்கிக்கு 5 ஆண்டுகள் சிறை மற்றும் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சுதா தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் உமாதேவி மங்களமேரி ஆஜராகி வாதாடினார்.

    • ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. இவர் ஓசூரில் ராயக்கோட்டை சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 24.11.2019 அன்று அந்த சிறுமிக்கு தமிழ் எழுத்து பயிற்சி சொல்லி கொடுப்பதாக பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறைக்கு, அப்பள்ளியின் தாளாளரான குருதத் (வயது 61) என்பவர் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து, அந்த சிறுமியின் தந்தை, ஓசூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, வழக்கு பதிவு செய்து, போக்சோ சட்டத்தில், குருதத்தை கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி சுதா தீர்ப்பு வழங்கினார்.

    அந்த தீர்ப்பில், சிறுமியை அறையில் அடைத்து வைத்த குற்றத்திற்காக தாளாளர் குருதத்திற்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியுள்ளார். 

    • இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
    • சிறுமியை 2-வது தந்தையின் நண்பரான ஜீவானந்தம் என்பவர் வீட்டிற்கு வருமாறு அழைத்தார்.

    கோவை

    கோவை ஆலாந்துறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 29 வயது இளம்பெண். இவருக்கு திருணமாகி விட்டது. இவருக்கு 10 வயதில் மகளும் உள்ளார்.

    இந்த நிலையில் இளம்பெண்ணுக்கும், அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இளம்பெண் தனது கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்தார். பின்னர் 2-வதாக வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.

    சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். சம்பவத்தன்று சிறுமி பள்ளிக்கு சென்று விட்டு, வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது சிறுமியை 2-வது தந்தையின் நண்பரான ஜீவானந்தம் என்பவர் வீட்டிற்கு வருமாறு அழைத்தார். தந்தையின் நண்பர் என்பதாலும் சிறுமியும் சென்றார்.

    அப்போது அங்கு வைத்து அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியான சிறுமி, அவரிடம் இருந்து தப்பி நேராக வீட்டிற்கு வந்தார்.

    பின்னர் தனக்கு நடந்த சம்பவங்களை தாயிடம் கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சியான அவர், குழந்தையை நேராக அழைத்து கொண்டு ஆலாந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜீவானந்தம் ஒரு வருடமாக சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்து. இதையடுத்து போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை சிறையில் அடைத்தனர்.

    திருவனந்தபுரம் அருகே அரசு அலுவலகத்தில் வைத்து 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரையை அடுத்துள்ளது பாலிக்கல்.

    இங்கு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அதிகாரியாக விஜயகுமார் (வயது 43) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    சம்பவத்தன்று மாலை அதே பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் அந்த அலுவலகத்திற்கு அருகில் விளையாடிக்கொண்டு இருந்தார். இதைப் பார்த்ததும் விபரீத எண்ணம் கொண்ட விஜயகுமார் அந்த சிறுமியை ஏமாற்றி அலுவலகத்திற்கு அழைத்து அவருக்கு முத்த மழை பொழிந்து பாலியல் தொல்லை கொடுத்தார்.

    அப்போது அந்த அலுவலகத்தில் வேறு யாரும் இல்லாததால் அந்த சிறுமிக்கு உதவி கிடைக்கவில்லை. அதன்பிறகு அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற அந்த சிறுமி நடந்த கொடுமையை கூறினார்.

    இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அலுவலகத்திற்கு அதிகாரியை தேடிச் சென்ற போது அவர் அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டது தெரிய வந்தது.

    உடனே அவரது வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு வைத்து அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு அதிகாரி விஜயகுமார் கைது செய்யப்பட்டார். அவர்மீது போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    திருப்பத்தூர் அருகே 4 வயது சிறுமிக்கு பஞ்சு மிட்டாய் கொடுப்பதாக தனியாக அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்த 10 குழந்தைகளின் தந்தை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    திருப்பத்தூர்:

    வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பாரண்டபள்ளி பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சான்பாஷா (52). பஞ்சுமிட்டாய் வியாபாரி. இவருக்கு மனைவி, 10 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். இதைப்பார்த்த சான்பாஷா பஞ்சு மிட்டாய் தருகிறேன் வா எனக்கூறி அருகில் உள்ள தனது வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்றார்.

    பின்னர் அங்கு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில் சிறுமி அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சான்பாஷாவை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    அவரை திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்து சான்பாஷாவை கைது செய்தனர்.

    பின்னர், அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

    காட்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்மாமா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    வேலூர்:

    காட்பாடி தாராபடவேடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (47), ஆட்டோ மெக்கானிக். இவரது தங்கை பக்கத்து வீட்டில் கணவர், 5 வயது மகளுடன் வசித்து வருகிறார்.

    நேற்று மாலை 5 வயது சிறுமி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். கந்தசாமி சிறுமியை வீட்டுக்குள் அழைத்தார். மாமா என்று பாசத்தோடு குழந்தை ஓடிச் சென்றது. அவளை வீட்டுக்குள் தூக்கி சென்ற கந்தசாமி பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் சிறுமி அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். சிறுமியை மீட்ட அவர்கள் கந்தசாமியை அடித்து உதைத்தனர். பின்னர், காட்பாடி போலீசில் ஒப்படைத்தனர்.

    இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கந்தசாமியை கைது செய்தனர்.

    கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளியான முதியவர் மருத்துவமனையில் இருந்ததால், நீதிபதி அங்கு சென்று 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். #CuddaloreCourt
    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மேலபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 63). இவர் கடந்த 2017-ம் ஆண்டு அதே பகுதியில் புதிய வீடு கட்டினார்.

    23.1.2017 அன்று அந்த வீட்டுக்கு 13 வயது சிறுமியை அழைத்துவந்து பாலியல் தொல்லை செய்தார். இது குறித்து வெளியே சொன்னால் அவரது தாய், தந்தையை கொலை செய்து விடுவதாக அந்த சிறுமியை மிரட்டினார். பின்னர் 3 மாதங்கள் கழித்து மீண்டும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

    இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுதுகொண்டே தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சங்கர நாராயணனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கடலூர் மகளிர் கோர்ட்டில் நடந்தது. அப்போது சங்கரநாராயணனை குற்றவாளி என நீதிபதி லிங்கேஸ்வரன் அறிவித்தார். இதைகேட்டதும் சங்கர நாராயணன் நீதிமன்றத்திலேயே மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை அங்கிருந்த போலீசார் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய சங்கரநாராயணன் தனது உடல் நிலையை காரணம் காட்டி கோர்ட்டில் ஆஜராகவில்லை.

    தண்டனை பெற்ற சங்கரநாராயணனுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதையடுத்து நீதிபதி லிங்கேஸ்வரன் நேற்று மாலை கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தார். பின்னர் அங்கு சிகிச்சை பெற்றுவந்த சங்கரநாராயணனை சந்தித்து பாலியல் தொல்லைகொடுத்த வழக்கில் உங்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என கூறினார். இது தொடர்பாக சங்கரநாராயணனிடம் கையெழுத்து பெற்றுக் கொண்டு நீதிபதி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தீர்ப்பைகேட்டு சங்கரநாராயணன் மேலும் அதிர்ச்சி அடைந்தார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து அரசு வக்கீல் செல்வப்பிரியா கூறும்போது, பாலியல் தொல்லை வழக்கில் சங்கர நாராயணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதை ஏக காலத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 20 ஆண்டுகளில் ஆஸ்பத்திரிக்கு சென்று குற்றவாளிக்கு நீதிபதி தீர்ப்பு கூறியது இதுவே முதல் முறையாகும் என்று கூறினார்.  #CuddaloreCourt

    சூரம்பட்டி பகுதி பள்ளியில் படித்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பள்ளிக்கு சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்தவர்கள் வந்தனர். அவர்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அப்போது சைல்டு லைன் அலுவலர்களிடம் அந்த சிறுமி தனக்கு தனது தந்தையே பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக புகார் கூறினார். இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அவர்கள் உதவியுடன் அந்த சிறுமி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தனது தந்தை மீது புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் அந்த சிறுமியின் தந்தையை ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைதானவர் கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

    ×