என் மலர்
நீங்கள் தேடியது "ரேஷன் அரிசி"
- ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
- அங்கு சென்ற போலீசார் 44 மூட்டைகளில் இருந்த 2200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் அடுத்த நல்லிபாளையம் மாரியம்மன் கோவில் பின்புறம் ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீசார் 44 மூட்டைகளில் இருந்த 2200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த நாமக்கல் ராமாவரம் புதூரைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 49), அண்ணா நகர் காலனியை சேர்ந்த தமிழ்செல்வன் (41) ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணையில் நாமக்கல், நல்லிபாளையம், ராமாவரம் புதூர் பகுதியில் பொதுமக்களிடமிருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வட மாநிலத்திற்கு விற்பனைக்கு அனுப்பி வந்தது தெரியவந்தது. போலீசார் அந்த பகுதியில் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
- சைமன் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக வந்த கேரள மாநில பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தினர்.
- காருடன், ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது.
கன்னியாகுமரி :
குமரி மாவட்ட எல்லை வழியாக கேரளாவுக்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க போலீசாரும், வருவாய் துறையினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் அவ்வப்போது ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. தொடர்ந்து அந்தப் பகுதியில் ரோந்துப் பணியும் நடந்து வருகிறது. இந்த நிலையில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில் குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் நேற்றிரவு குளச்சல் பகுதியில் தீவீர ரோந்து சென்றனர்.
அவர்கள் சைமன் காலனி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமாக வந்த கேரள மாநில பதிவு எண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தினர்.
அப்போது காரை நிறுத்தி விட்டு ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார். பின்னர் காரை சோதனை செய்தபோது, அதில் சுமார் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை கேரள மாநிலத்திற்கு கடத்தி செல்ல முயற்சித்தது தெரிய வந்தது.
இதையடுத்து காருடன், ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர் யார்? அவர் யாருக்காக ரேஷன் அரிசியை கடத்தினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய டிரைவரையும் தேடி வருகின்றனர்.
- மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
- முத்துராஜ் (26) என்பவரை கைது செய்தனா். இவரிடமிருந்து 1,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
உடுமலை:
உடுமலை ெரயில்வே சாலை சந்திப்பு பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் ஒரு வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக உடுமலை ஜானிபேகம் காலனியில் வசித்து வரும் முத்துராஜ் (26) என்பவரை கைது செய்தனா். இவரிடமிருந்து 1,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா். இவா் உடுமலை பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் அரிசியைக் குறைந்த விலைக்கு வாங்கி வடமாநிலத்தவா்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
- 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று அதிகாரிகள் மடக்கினர்
- காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசி காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
கேரள மாநிலத்திற்கு குமரி மாவட்டம் வழியாக தமிழகத்தில் இருந்து ரேஷன் பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்க வருவாய் அதிகாரிகளும், போலீசாரும் தீவிர கண்கா ணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது சோதனையில் கடத்தல் தடுக்கப்பட்டு ரேஷன் பொருட்கள் மீட்கப்படுவதோடு கடத்தல் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
நேற்று விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ்குமார் கொண்ட குழு ஆற்றூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தே கத்துக்கு இடமாக சொகுசு கார் வந்தது.
அந்த காரை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் குழு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் விரட்டிச் சென்று மாறப்பாடி பகுதியில் காரை மடக்கியது.
அப்போது காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடி விட்டார். தொடர்ந்து அதி காரிகள் காரை சோதனை செய்தனர்.அப்போது காருக்குள் சுமார் 1500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை கேரளாவிற்கு கடத்தி செல்வது தெரிய வந்தது.
தொடர்ந்து காரில் இருந்து கைப்பற்றப்பட்ட அரிசி காப்பிக்காடு அரசு நுகர்வோர் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. கடத்த லுக்கு பயன்படுத்திய கார் வட்டாட்சியர் அலுவலக த்தில் ஒப்படைக்கப்பட்டது. தப்பி ஓடிய டிரைவர் யார்? ரேஷன் அரிசியை கடத்தியது யார்? என்று தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
- குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி அடிக்கடி கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் உள்ளன.
- இதனை தடுத்து நிறுத்த போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி அடிக்கடி கடத்தப்பட்டு வருவதாக புகார்கள் உள்ளன. இதனை தடுத்து நிறுத்த போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அஞ்சு கிராமம் பகுதியில் இருந்து மேற்கு கடற்கரை சாலை வழியாக காரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட நிலையில், தேங்காப்பட்ட ணம் பகுதியில் சந்தேகத்தி ற்கிடமாக கார் வந்தது. அந்தக் காரை நிறுத்தும்படி போலீசார் சைகை காட்டி னர். ஆனால் அந்தக் கார் நிற்காமல் சென்றது.
இதுகுறித்து நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரிவிளை சந்திப்பில், அந்தக் காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்கவில்லை. இதனை தொடர்ந்து போலீசார், மோட்டார் சைக்கிளில் காரை விரட்டிச் சென்றனர்.
நடைக்காவு சந்திப்பில் அவர்கள் காரை மடக்கினர். அப்போது காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து காரை போலீசார் சோதனை செய்த போது, 50 கிலோ எடை உள்ள 40 மூடைகளில் 2 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதனை காருடன் போலீசார் கைப்பற்றினர்.
- கேரளாவுக்கு கடத்தியபோது பிடிபட்டது
- போலீசார் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபடவேண்டும்
கன்னியாகுமரி:
குமரி மாவட்டம் வழியாக தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது. இதனை போலீசாரும், வருவாய்த்துறையினரும் அடிக்கடி சோதனை நடத்தி தடுப்பதோடு, கடத்தல் பொருட்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
நேற்று இரவு தக்கலை வட்ட வழங்கல் அதிகாரி சுனில் குமார் தலைமை யிலான பணியாளர்கள், கல்குளம் வட்டம் குளச்சல் பகுதியில் வாகன சோத னையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தே கத்திற்கு இடமாக ஒரு கார் வேகமாக வந்தது.
அந்த காரை நிறுத்தும் படிஅதிகாரிகள் சைகை காட்டினர். இதனை தொடர்ந்து சற்று தூரம் தள்ளி கார் நிறுத்தப்பட்டது. ஆனால் அதில் இருந்த டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் காரை சோதனை செய்த னர். அப்போது காருக்குள் சுமார் 500 கிலோ ரேஷன் அரிசி மூடைகளில் இருப்பது தெரியவந்தது. அதனை கேரளாவுக்கு கடத்த முயன்றதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அரிசி மூடைகள் உடையார் விளை அரசு கிட்டங்கியில் ஒப்படை க்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் வட்ட வழங்கல் அலுவலகம் கொண்டு சென்று நிறுத்தி வைக்கப்பட்டது. கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் போலீசார் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபடவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
- அருப்புக்கோட்டையில் 2 டன் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
- மதுரை சந்தப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
அருப்புக்கோட்டை,
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் சில நாட்களாக ரேஷன் அரிசி கடத்துவதாக அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு புகார் வந்தது. இதன் அடிப்படையில் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் கணேஷ் நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியே வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்தபோது 2 டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ரேசன் அரிசியை கடத்திய மதுரையை சேர்ந்த ராமமூர்த்தியை போலீசார் கைது செய்தனர்.
இந்த கடத்தல் ரேசன் அரிசி மூட்டை அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மதுரை சந்தப்பேட்டையை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு விற்பனை செய்வதாக கொண்டு செல்லப்பட்டது என கைதான ராமமூர்த்தி தகவல் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
- இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீஸாா் தாராபுரத்தில் சோதனையில் ஈடுபட்டனா்.
- நந்தகோபால் (25) என்பவரை கைது செய்ததுடன் 500 கிலோ ரேஷன் அரிசியையும் போலீசாா் பறிமுதல் செய்தனா்.
தாராபுரம்:
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து தாராபுரம் வழியாக சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக திருப்பூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் போலீஸாா் தாராபுரத்தில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை நடத்தியதில் 500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சோ்ந்த நந்தகோபால் (25) என்பவரை கைது செய்ததுடன் 500 கிலோ ரேஷன் அரிசியையும் போலீசாா் பறிமுதல் செய்தனா்.
- தமிழகத்தில் இருந்து சிலர் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி வருகிறார்கள்.
- விசாரணையில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிய வந்தது.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை சோதனை சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கேரளாவிற்கு சென்று வருகிறது.
ரேஷன் அரிசி கடத்தல்
அத்தியாவசிய பொருட்களும் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. இதற்கிடையே சட்ட விரோதமாக தமிழகத்தில் இருந்து சிலர் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்தி வருகிறார்கள். இதனை தடுக்க போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் இன்று புளியரை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த ஒரு லாரியை மறித்து சோதனையிட்டனர். அதில் 18 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
கைது
உடனடியாக லாரியை ஓட்டிவந்த டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் கேரள மாநிலம் கொல்லோடு தாலுகா பனையங்கோடு பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 44) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு இந்த ரேஷன் அரிசியை கடத்தி செல்ல இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து சந்தோஷ்குமாரை கைது செய்த போலீசார் 18 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரியை பறிமுதல் செய்த னர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூட்டை களை குடிமைபொருள் வழங்கல் அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
- அருப்புக்கோட்டை அருகே வேனில் கடத்தப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
- மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது20), ராஜபாண்டி(28) என்பதும் தெரியவந்தது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை அருகே ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி தலைமையிலான போலீசார் மதுரை சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ வேனை நிறுத்தி அதில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரித்தனர்.
ஆனால் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், வேனை சோதனை செய்தனர். அதில் ஏராளமான மூட்டைகள் இருந்தன. அவற்றை பிரித்து பார்த்தபோது அவற்றில் ரேசன் அரிசி இருந்தது.
வேனில் இருந்த 20 மூட்டைகளில் மொத்தம் 800 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. விசாரணையில் வேனில் வந்தவர்கள் மதுரை ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த மணிகண்டன்(வயது20), ராஜபாண்டி(28) என்பதும், அவர்கள் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமசாமிபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் இருந்து ரேசன் அரிசியை சேகரித்து மதுரையில் உள்ள ஆலையில் விற்பதற்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அரிசி மூடைகளை வேனுடன் பறிமுதல் செய்த போலீசார், கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ேரசன் அரிசி மூட்டைகளை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர்.
- ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
- போலீசார் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர்.
திருப்பூர் :
குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை கூடுதல் டி.ஜி.பி. அருண் உத்தரவுப்படி, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை குடிமைபொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவு படி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் வழிகாட்டுதலின் படி, திருப்பூர் மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளான கரடிவாவி, மடத்துக்குளம், ஏரகாம்பட்டி, ஒன்பதாறு சோதனை சாவடி ஆகிய சோதனை சாவடிகளின் வழியாக, கேரள மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணி நடந்தது.
திருப்பூர் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனை செய்து வருகின்றனர். மேலும் ரேஷன் அரிசி கடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை–கள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
- காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.
- காரில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் ஈரோடு அருகே லக்காபுரம் முத்துகவுண்டம்பாளையம் நால்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அந்த காரில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் பெருந்துறையை சேர்ந்த பெரியசாமி (வயது 40), கோபிசெட்டிபாளையம் அருகே சிறுவலூரை சேர்ந்த குலாம் முஸ்தபா மொண்டல் (22) ஆகியோர் என்பதும், அவர்கள் பெருந்துறையில் உள்ள வடமாநிலத்தவ ர்களுக்கு ரேஷன் அரிசியை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 800 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.