என் மலர்
நீங்கள் தேடியது "தங்க நகைகள்"
- அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் இருந்து வேகமாக ஓடி உள்ளார்.
- வீட்டில் பீரோவில் வைத்திருந்த நகைகளை பார்த்தபோது 3 பவுன் தங்கச் செயின், 2 பவுன் தங்க கைச்செயின் என மொத்தம் 5 பவுனை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் எம். ராசாம்பாளையம் பகுதியைச்சேர்ந்தவர் பாவாயி (57).இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12-ந் தேதி அன்று இரவு 9 மணி அளவில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வீட்டுக்குள் இருந்து வேகமாக ஓடி உள்ளார்.
அதை பார்த்த பாவாயி திருடன், திருடன் என்று சத்தம் போட்டுள்ளார். ஆனால் அதற்குள் அந்த வாலிபர் தப்பி ஓடி மறைந்து விட்டார். பாவாயி வீட்டில் பீரோவில் வைத்திருந்த நகைகளை பார்த்தபோது 3 பவுன் தங்கச் செயின், 2 பவுன் தங்க கைச்செயின் என மொத்தம் 5 பவுனை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது.
இது குறித்து பாவாயி மோகனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெடுங்குளம் ஈஸ்வரி அம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மகன் சதீஷ்குமார் (31) என்பவரை கைது செய்து ஏற்கனவே சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் தீவிர விசாரணை நடத்தியதில் மற்றொரு குற்றவாளியான நாமக்கல் வீசாணம் வீனஸ் காலனியைச் சேர்ந்த சக்திவேல் மகன் மணிபாரதி (24) என்பவரை நேற்று கைது செய்து அவரிடம் இருந்து 10 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்து நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.
- கோவை சர்க்கார் சாமகுளம் அடுத்த லட்சுமி ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வரும் மகனுடன் தற்போது ஒன்றாக குடியிருந்து வருகிறார்கள்.
- பஸ் சேலம் அரசு மருத்துவமனை அருகே வந்தபோது இவர்களது பையில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 61).
இவரும், இவரது மனைவியும் கோவை சர்க்கார் சாமகுளம் அடுத்த லட்சுமி ஜோதி கார்டன் பகுதியில் வசித்து வரும் மகனுடன் தற்போது ஒன்றாக குடியிருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தனபால், தனது மனைவியுடன் சேலம் குகை கருங்கல்பட்டியில் வசிக்கும் தனது மகளை பார்க்க வந்தனர். மகளை பார்த்துவிட்டு தனபாலும் அவரது மனைவியும் கோவை செல்வதற்காக சேலம் பழைய பஸ் நிலையத்திலிருந்து அரசு டவுன் பஸ்சில் புதிய பஸ் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
பஸ் சேலம் அரசு மருத்துவமனை அருகே வந்தபோது இவர்களது பையில் வைத்திருந்த 15 பவுன் தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது.
இது குறித்து செவ்வாய்ப் பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சாரின் முதற்கட்ட விசாரணையில் பஸ்சில் வரும் போது தனபாலின் அருகில் இருந்த தம்பதிகள் பையை நகர்த்தி வைப்பது போல் பாசாங்கு செய்து நகையை திருடியிருப்பது தெரியவந்தது.
அதை தொடர்ந்து போலீசார் வழக்குப் பதிவு செய்து பஸ்சில் நூதன முறையில் நகைகளை கொள்ளை அடித்து சென்ற தம்பதிகளை தேடி வருகிறார்கள்.
- நகைக்கடைகள் போட்டி போட்டு சலுகைகளை அறிவித்துள்ளன.
- தங்க நகை வாங்குவதற்கான முன்பதிவு அதிகரித்து வருகிறது.
சென்னை:
அட்சய திரிதியை நாளில் தங்கம் வாங்கினால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு அட்சய திரிதியை வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அதிகாலை 6.33 மணிக்கு தொடங்கி மறுநாள் சனிக்கிழமை அதிகாலை 4.56 மணி வரை உள்ளது.
இதையடுத்து அட்சய திருதியை அன்று நகை வாங்கும் வாடிக்கையாளர்களை கவருவதற்காக, நகைக்கடைகள் போட்டி போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளன.
இதன்படி, சில கடைகள் தங்கம் பவுனுக்கு ரூ.2 ஆயிரம் வரை தள்ளுபடி சலுகையை அறிவித்துள்ளன. வைர நகைகள் காரட்டுக்கு ரூ.15 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சில கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைககளுக்கு செய்கூலி, சேதாரம் தள்ளுபடியும் வழங்கப்பட உள்ளது.
தங்க நாணயங்களுக்கு சேதாரம் இல்லை. பழைய தங்க நகைகளை அன்றைய மார்க்கெட் விலைக்கே மாற்றிக் கொள்ளலாம்.
முன்பதிவு செய்பவர்கள் அட்சயதிரிதியை அன்று தங்கத்தின் விலை குறைந்திருந்தால் குறைந்த விலையிலும் அதிகமாக இருந்தால் ஏற்கெனவே முன்பதிவு செய்த விலையிலும் நகைகளை வாங்கிக் கொள்ளலாம் என்றும் சலுகைகளை அறிவித்துள்ளனர்.
மேலும் அட்சய திரிதியைக்காக 1000-க்கும் மேற்பட்ட மாடல்களில் புதுப்புது டிசைன்களில் நகைகள் விற்பனைக்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. அட்சய திரிதியை அன்று காலை 6 மணிக்கே நகைக்கடைகளை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரவில் வாடிக்கையாளர்களின் வருகையை பொருத்து கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்யவும் முடிவு செய்துள்ளனர்.
இதனால் அட்சய திரிதியை அன்று நல்ல நேரத்தில் தங்க நகை வாங்குவதற்கான முன்பதிவு அதிகரித்து வருகிறது. ஏராளமானோர் தற்போதே கடைகளுக்கு சென்று முன்பணம் செலுத்தி தங்களுக்கு பிடித்த நகைகளை முன்பதிவு செய்து வருகிறார்கள்.

இதுகுறித்து, சென்னையை சேர்ந்த நகைக்கடை வியாபாரிகள் கூறியதாவது:-
இந்த ஆண்டு அட்சய திரிதியை பண்டிகையை முன்னிட்டு, நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏற்கெனவே முன்பதிவு தொடங்கப்பட்டு விட்டது. வாடிக்கையாளர்கள் தற்போது கடைகளுக்கு வந்து தங்களுக்கு
பிடித்த நகைகளை தேர்வு செய்து முன்பதிவு செய்து வருகிறார்கள்.
தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகபட்சமாக ஒரு பவுன் ரூ.55 ஆயிரம் வரை அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது தங்கம் விலை குறைந்து வருவதால், வாடிக்கையாளர்கள் தங்க நகைகள் வாங்க அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.
கடந்த ஆண்டு அட்சய திரிதியை அன்று 20 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனையானது. தமிழகம் முழுவதும் ரூ.11 ஆயிரம் கோடி அளவுக்கு நகைகள் விற்கப்பட்டது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நகை விற்பனை 25 சதவீதம் வரை அதிகரிக்க கூடும்.
தமிழகத்தில் இந்த ஆண்டு சுமார் ரூ.14 ஆயிரம் கோடிக்கு தங்க நகைகள் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- 2 கோவில்களில் கும்பாபிஷேகம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும்.
- 2023-24-ம் ஆண்டு நிதியில் இருந்து 8 கோடி ரூபாய் நிதியில் இருந்து 8 திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவு.
ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் சட்ட சபையில் கேள்வி நேரத்தின்போது, ஆலங்குளம் தொகுதி நெட்டூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் பூலாங்குளம் காளியம்மன் கோவில் மற்றும் பாப்பாக்குடி திருக்கடுக்கை முன்றீஸ்வரர் கோவில் ஆகியவற்றிற்கு கும்பாபிஷேகம் நடத்த அரசு முன்வருமா என கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் பி.கே. சேகர்பாபு, "அம்மனுக்கு ஒன்று, ஈஸ்வரனுக்கு ஒன்று, முருகனுக்கு ஒன்று இந்த மூன்று கோவில் திருப்பணிகளும் மேற்கொள்ளப்படும். அவர் கேட்ட சுப்பிரமணியசாமி கோவில் கும்பாபிஷேகம் முடிவு பெற்றது. மற்ற 2 கோவில்களில் கும்பாபிஷேகம் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என பதில் அளித்தார்.
உச்சி மாகாளியம்மன் கோவிலில் சிலை பாதுகாப்பையும் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டுள்ளது. இவர் கேட்ட திருமனீஸ்வரர் கோவிலில் 1942-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
தற்போது, வல்லுனர் குழு தொழில்நுட்ப குழு அனுமதி செய்யப்பட்டு 40 லட்ச ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும். நீங்கள் கேட்ட வெங்கடாஜலபதி கோவில் என்பது 1000 ஆண்டுகளுக்கு மேலான கோவிலுக்கு அரசு விடுத்த 2023-24-ம் ஆண்டு நிதியில் இருந்து 8 கோடி ரூபாய் நிதியில் இருந்து 8 திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு இறுதியில் கும்பாபிஷேகத்திற்கு உண்டான பணிகள் நடைபெறும் என பதிலளித்தார்.
மனோஜ் பாண்டியன் தொடர்ந்து பேசியதாவது, கோவிலில் பயன்படுத்த முடியாத தங்க ஆபரணங்களை உருக்கி அதை தங்க கட்டிகளாக மாற்றி அதை டெபாசிட் செய்வதற்கான திட்டங்கள் அரசிடம் உள்ள தா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு அமைச்சர் சேகர் பாபு பதில் கூறியதாவது:-
தங்க நகைகளை உருக்குவதற்கான அரசாணை 10 ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பக்தர்களிடம் இருந்து வரும் பயன்பாட்டு இல்லாத தங்க நகைகள் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டு 3 நீதிபதிகள் அடங்கிய குழுவை நியமித்தார். 3 நீதிபதிகள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த திட்டம் அறிவிக்கப் பட்டவுடன் பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் அனைத்து கோவில் வாசல்களில் அம்மன் சிலையை அமைத்து அதில் நகைகளை பறிப்பது போல் கார்ட்டூன் வைத்தார்கள்.
நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்படி ஒரு திட்டத்தை எதிர்க்கிறார்கள் என்றால் அது நிச்சயமாக பயனுள்ளதாக இருக்கும். அதைவிடாதே பிடி என்றார். அதை பிடித்ததின் காரண மாக இன்று 1,100 கிலோ அளவிற்கு வங்கியில் வைப்பு நிதியாக தங்கம் வைக்கப்பட்டு ஆண்டுக்கு 11 கோடி ரூபாய் கோவிலுக்கு வருமானமாக வருகிறது.
மேலும் இந்த திட்டம் தொடரும். 1959-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் படி இதுவரை யில் கோவில்களில் வைக்கப் பட்டுள்ள மொத்த அளவு 610 கிலோ. ஆனால் இந்த 3 ஆண்டுகால ஆட்சியில் வைப்பு நிதியாக வைக்கப் பட்டுள்ள தங்கத்தின் அளவு 1,110 கிலோ என பதில் அளித்தார்.
- தொழிலதிபர் சாம்பசிவ ராவ் என்பவர் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தார்.
- கோவிலில் இருந்த பக்தர்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த நிலையில் விஜயவாடாவை சேர்ந்த தொழிலதிபர் சாம்பசிவ ராவ் என்பவர் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தார். இவர் துபாயில் ஓட்டல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அப்போது அவர் கழுத்து மற்றும் கை நிறைய சுமார் 3 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் அணிந்தபடி வந்தார். கோவிலில் இருந்த பக்தர்கள் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
- சேலத்தில் டெய்லர் வீட்டில் நூதன முறையில் தங்க நகைகள் கொள்ளை போனது.
- வீட்டைப் பூட்டிக்கொண்டு சாவியை வீட்டுக்கு அருகில் உள்ள கழிவறை பகுதியில் வைத்துவிட்டு சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.
கொண்டலாம்பட்டி:
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் ராஜா வீதி பகுதியை சேர்ந்தவர் குமார் இவரது மனைவி எஸ்தர் (வயது 40).
இவர் அதே பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் டெய்லராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை 10 மணி அளவில் வீட்டைப் பூட்டிக்கொண்டு சாவியை வீட்டுக்கு அருகில் உள்ள கழிவறை பகுதியில் வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த தங்கச் செயின், கம்மல்கள், மோதிரம், தங்க காசு, ஆகிய 19 கிராம் தங்க நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.இதுகுறித்து எஸ்தர் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பணம், தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகிறார்கள். காணிக்கையாக செலுத்தப்படும் பணம் அவ்வப்போது கணக்கிடப்பட்டு வங்கியில் செலுத்தப்படும். தங்கம், வெள்ளி பொருட்கள் பத்தனம்திட்டை மாவட்டம், ஆரன்முளாவில் உள்ள திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
திருவிதாங்கூர் தேவசம்போர்டின் 3 கணக்கு தணிக்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இந்த நகைகள் ஆண்டுக்கு ஒரு முறை தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அறையில் பாதுகாக்கப்பட்டு வந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் மாயமானதாக தேவஸ்தானத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அந்த அறையில் சோதனை நடத்தினர்.
அப்போது தங்கம் வெள்ளி உள்பட விலை உயர்ந்த பொருட்களின் கணக்கு விவரங்கள் பல ஆண்டுகளாக முறையாக தணிக்கை செய்யப்படாதது தெரியவந்தது. இது தொடர்பான அறிக்கை கேரள ஐகோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் குறித்து, நேற்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆரன்முளையில் பாதுகாக்கப்பட்டு வரும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சொந்தமான தங்கம் உள்ளிட்ட பொருட்கள் பாதுகாப்பாகவே உள்ளது. இதில் இருந்து ஒரு கிராம் தங்கம் கூட மாயமாகவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையின்போது பல ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலையில் குவிவார்கள்.
மேலும் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சபரிமலை கோவில் நடை திறக்கப்படும் போதும் பக்தர்கள் சபரிமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துவார்கள்.
தங்க, வெள்ளி நகைகள் மற்றும் பணமாக காணிக்கை செலுத்தப்படும். சபரிமலை கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாகூர் தேவசம் போர்டு இந்த காணிக்கைகளை எண்ணி தேவசம்போர்டுக்கு சொந்தமான பாதுகாப்பு அறையில் வைத்து பாதுகாத்து வருகிறது. ஆரன்முளா கோவிலையொட்டி உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமான இடத்தில் இந்த பாதுகாப்பு அறை உள்ளது.
தேவசம் போர்டு உதவி கணக்கு அதிகாரியின் தலைமையிலான 3 அதிகாரிகள் கொண்ட குழு இந்த பாதுகாப்பு அறைக்கு பொறுப்பு ஆகும். இந்த அறையை திறந்து காணிக்கை பொருட்களை வைக்கவோ, எடுக்கவோ வேண்டும் என்றால் 3 அதிகாரிகளும் இருந்தால் மட்டுமே முடியும். மேலும் ஆண்டுதோறும் பாதுகாப்பு அறையில் உள்ள காணிக்கை பொருட்களின் விவரங்களும் தணிக்கை செய்யப்படும்.
இந்த நிலையில் சபரிமலை கோவிலுக்கு காணிக்கையாக கிடைத்த தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் மாயமாகி உள்ளதாக தேவசம் போர்டின் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்கள் சென்றது. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் பாதுகாப்பு அறையில் இருந்த பொருட்களையும், அதற்குரிய ஆவணங்களையும் ஆய்வு செய்தனர். அப்போது அது தொடர்பான கணக்குகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.
இதுபற்றி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அறிக்கை தயார் செய்து அதை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்தனர். இந்த அறிக்கையை பரிசீலித்த ஐகோர்ட்டு பாதுகாப்பு அறையில் உள்ள தங்கம், வெள்ளி மற்றும் பொருட்களின் விவரம் பற்றி உடனடியாக ஆய்வு செய்யும் படி தேவசம் போர்டுக்கு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து தேவசம் போர்டின் கணக்கு தணிக்கைத்துறை அதிகாரிகள் இன்று தங்கள் ஆய்வை மேற்கொள்கிறார்கள். அவர்கள் ஆய்வை முடித்த பிறகு அது தொடர்பான அறிக்கை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்படும். அப்போது தான் சபரிமலையில் காணிக்கையாக கிடைத்த விலை உயர்ந்த பொருட்கள் எவ்வளவு மாயமாகி உள்ளது என்பது பற்றி தெரிய வரும்.
இதற்கிடையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமாரிடம் இதுபற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:-
சபரிமலை கோவில் காணிக்கை பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கும் பாதுகாப்பு அறைக்கு தேவசம்போர்டு உதவி கணக்கு அதிகாரி தலைமையிலான 3 அதிகாரிகள்தான் பொறுப்பு. அதில் எந்த அதிகாரி மாறிச் சென்றாலும் புதிதாக வரும் அதிகாரியிடம் முறையாக பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும். கடந்த 6 வருடங்களாக கணக்குகள் ஒப்படைக்கப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது. இதுபற்றி விசாரிக்கத்தான் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. தங்கம், வெள்ளி போன்ற எந்த காணிக்கை பொருட்களும் மாயமாகவில்லை. இது சிலரின் திட்டமிட்ட சதி ஆகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் சுரேந்திரன் கூறும்போது சபரிமலை கோவிலுக்கு 2017-ம் ஆண்டு முதல் காணிக்கையாக வழங்கப்பட்ட 40 கிலோ தங்கம், 100 கிலோ வெள்ளி மாயமானதாக தகவல் கிடைத்து உள்ளது. இதுபற்றி தெரிந்து கொள்ள பக்தர்களுக்கு உரிமை உண்டு. தேவசம் போர்டு மந்திரி இதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.
சபரிமலை கோவிலுக்கு காணிக்கையாக கிடைத்த தங்கம், வெள்ளி மாயமானதாக வெளியாகி உள்ள தகவல் பக்தர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர்:
பாராளுமன்ற தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நிலை கண்காணிப்பு குழு, பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு நடத்தப்படுகிறது. விருதுநகர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் சங்கர் தலைமையிலான கண்காணிப்பு குழு நேற்று இரவு விருதுநகர்-சிவகாசி சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது.
அப்போது அங்கு வந்த சரக்கு பார்சல் வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். வேனுக்குள் ஏராளமான அட்டை பெட்டிகளில் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்தன.
அதுபற்றி விசாரித்த போது மதுரையில் உள்ள பிரபல நகைக்கடையில் இருந்து பல்வேறு ஊர்களின் கடைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட நகைகள் என தெரிய வந்தது.
வேனில் வந்த கடை மேலாளர் ஹரிகரன், காவலாளி பீட்டர்ஜோசப், டிரைவர் நாகராஜன் ஆகியோர் இதனை தெரிவித்தபோதும், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லை என அவை பறிமுதல் செய்யப்பட்டன.
ரூ. 2 கோடியே 27 லட்சத்து 3 ஆயிரத்து 377 மதிப்பிலான தங்க நகைகளும், ரூ. 7 லட்சத்து 52 ஆயிரத்து 818 மதிப்பிலான வெள்ளிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு தாசில்தார் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது. #LokSabhaElections2019

இதையடுத்து பி.கே.எஸ்.ஆர். அய்யங்கார் என்ற சமூக ஆர்வலர் திருப்பதி கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட தங்க நகைகள் குறித்த விவரங்களை தெரிவிக்கவேண்டும் என்றும் திருப்பதி கோவிலை வரலாற்று மற்றும் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பதற்கு மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று கேட்டும் மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அவருக்கு எந்த துறையும் திருப்திகரமான பதிலை அளிக்கவில்லை.
இதைத்தொடர்ந்து மத்திய தகவல் ஆணையத்துக்கு இதுபற்றி அய்யங்கார் கேள்வி எழுப்பி கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தை தகவல் ஆணையர் ஸ்ரீதர் ஆச்சார்யலு விரிவாக ஆய்வு செய்தார். பின்னர், அய்யங்கார் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும்படி இந்திய தொல்லியல் துறை, மத்திய கலாசார அமைச்சகம், ஆந்திர அரசு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆகியவற்றுக்கு அவர் உத்தரவிட்டார்.
மேலும், திருப்பதி கோவிலை வரலாற்று மற்றும் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிப்பது தொடர்பாக பிரதமர் அலுவலகம் எடுத்த நடவடிக்கை குறித்து வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் உத்தரவு பிறப்பித்தார். #TirupatiTemple
அதாவது மெல்லிய வடிவில் பலதரப்பட்ட உருவங்கள் பின்னப்பட்ட அமைப்பில் அழகுடன் தங்க நகைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது பழைய வடிவமைப்பில் இருந்து பெரிதும் மாறுபட்டவாறு உள்ளது. அதாவது தங்க தகடுகளில் உருவம் பதியப்பட்டு, எம்போஸ் செய்யப்பட்டவாறும் தான் நகைகள் உருவாயின. சில மெல்லிய தங்க கம்பிகள் மற்றும் தற்போதைய இயந்திர உதவியுடன் நகைகள் வடிவமைக்கப்பட்டு ஆனால், க்ரோசெட் நகைகள் என்பது தங்க தகட்டில் உருவம் அழுத்தப்பட்டு வேண்டாத பகுதி தங்கம் வெளியேற்றப்பட்டு ஒரு ஜன்னல் போன்ற அமைப்பிலும் மற்றும் துளைகள் உள்ளவாறும் உள்ளன.
இதில் அதிக தங்கம் சேர்க்கப்படாமல் எடை குறைவான நகையாகவே காட்சிப்படுத்தப்படும். பெரிய அளவிலான நகைகள் முதல் சிறிய நகைகள் வரை இந்த க்ரோசெட் எனும் கொக்கி பின்னல் வடிவமைப்பில் அழகுடன் உருவாக்கி தரப்படுகின்றன. வலை பின்னல் ஓவியமாய் காட்சி தரும் இந்நகைகள் இளவயதினரை அதிகமாக கவர்கின்றன.
க்ரொசெட் காதணிகள்
மெல்லிய வலலைப்பின்னல் காதணிகள் என்பது சிறு கம்மல் மற்றும் தொங்கும் அமைப்பு என்றவாறு உள்ளது. இதில், தொங்கும் பகுதி என்பதில் அழகுடன் பூக்கள், கொடிகள், இலைகள் போன்றவை வலை பின்னல் அமைப்புடன் செதுக்கப்பட்டு உள்ளது. இந்த காதணிகள் அதிக எடையின்றி தினசரி அணிய ஏற்றவாறு உள்ளது. அதாவது கூண்டு அமைப்பில் தொங்கு பகுதி இருபுறமும் இடைவெளியுடன் கூடிய டிசைன் அமைப்பில் காணப்படுகிறது. ஒரு பக்கமுள்ள அதே டிசைன் பின்பகுதியில் இருப்பதால் தூர இருந்து பார்க்கும்போது காதணி ஜொலிப்புடன் அழகிய உருவ அமைப்பில் வெளிப்படுத்தும். சில காதணிகள் மிக இறுக்கமாக பின்னப்பட்டு பூ அமைப்பிலும், உட்புறம் வெற்றிடமாக அதே நேரம் வெற்வேறு உருவ தோற்ற பொலிவை மாற்றி தரும் வகையிலும் காட்சி தருகின்றது. இதில் தொங்கும் அமைப்பில்லாத ஸ்டெட் காதணிகளும் கிடைக்கின்றன.

அழகிய க்ரோசெட் பென்டன்ட்
செயின்களில் மாட்டக்கூடிய பெரிய மற்றும் பென்டன்ட் அழகுடன் கொக்கி பின்னல் அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. முந்தைய பென்டன்ட்களை விட க்ரோசெட் பென்டன்ட் அணிபவருக்கு கூடுதல் பொலிவை தருகின்றது. வித்தியாசமான உருவ அமைப்பு மற்றும் பின்னல்கள் கொண்டவாறு நீள் சதுரம், வட்டம், இதயம், கூம்பு வடிவிலான பென்டன்ட்கள் கிடைக்கின்றன. சில பென்டன்ட்கள் இரட்டை வளையங்கள், இரட்டை முத்துகள் உள்ளவாறு வடிவமைக்கப்பட்டுள்ளன.
க்ரோசெட் மோதிரங்கள்
க்ரோசெட் மோதிரங்கள் முந்தைய மோதிரம் போன்ற வடிவமைப்பில் இல்லாத மாறுபட்டவாறு உள்ளன. வட்டம், சிமிழ், சதுரம், நீள்சதுரம் என்றவாறு கீழ் பகுதி தங்க தகடு என்றவாறு மேல் மூடியப்பகுதி காட்சி தருகிறது. பூ மற்றும் அழகிய பின்னல்கள் இருபுறமும் உள்ளவாறும் மோதிரட் கிடைக்கிறது. இந்த க்ரோசெட் மோதிரங்கள் தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல. ஏனெனில் நாம் உண்ணும் உணவு துகள்கள் உட்புறம் சேர வாய்ப்பு அதிகம்.
க்ரொசெட் நெக்லஸ்கள்
கழுத்துடன் இறுக்கி பிடிக்கும் அமைப்பில் இருக்கும் சோக்கர் நெக்லஸ்களாக க்ரோசெட் நெக்லஸ்கள் கிடைக்கின்றன. அழகிய கிறுக்கல் ஓவியங்கள் போல் காட்சி தரும் வகை விழாக்களுக்கு அணிந்து செல்ல ஏற்றவாறு உள்ளதுடன் அனைவர் பார்வையும் க்ரோசெட் நெக்லஸ் மீது தான் விழும். இதில் மஞ்சள் உலோக பின்னணி மட்டுமல்லாது சில ரேடியம் பூசப்பட்ட மாடல்களும் கிடைக்கின்றன.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு கனடாவில் இருந்து ஜெர்மன் வழியாக விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர்.
அப்போது கனடா நாட்டை சேர்ந்த கிருஷ்ணகந்தன் (வயது 69) என்பவரது உடைமைகளை சோதனை செய்தபோது, தங்க சங்கிலிகள், தங்க வளையங்கள், டாலர்களை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து ரூ.13 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள 430 கிராம் தங்க நகைகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கனடா நாட்டுக்காரரான கிருஷ்ணகந்தனிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் சென்னையில் இருந்து இலங்கைக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் ஏற வந்த சென்னையை சேர்ந்த முகமது சலீம் (45) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் தனியாக அழைத்துச் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அவர், சவுதி ரியால் மற்றும் அமெரிக்க டாலர்களை தனது உள்ளாடைகளுக்கு உள்ளும், சூட்கேசிலும் மறைத்து வைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.
அவரிடம் இருந்து சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து முகமது சலீமின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், கடத்தப்பட இருந்தது ஹவாலா பணமா? என விசாரித்து வருகின்றனர்.