என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளம்"

    • ஒவ்வொரு விளையாட்டுக்கு என்று தனித்தனி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 3 நாட்களாக கடலூர் நகர் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது.

    கடலூர்:

    கடலூர் நகரின் மையப்ப குதியான மஞ்சக்குப்பத்தில் அண்ணாவிளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சுதந்திரதின விழா நடை பெறும்போது பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மற்றும் தேசியகொடி ஏற்றும் விழா நடந்து வருகிறது. பல ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் ஒவ்வொரு விளையாட்டுக்கு என்று தனித்தனி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடலூர் நகர் பகுதி மட்டுமல்லாமல் பல்வேறு பகுதியில் இருந்து விளையாட்டு வீரர்கள் வந்து பயிற்சிபெற்று செல்கி றார்கள். இதுதவிர விளை யாட்டு மைதானத்தை சுற்றி நடைபயிற்சிக்கென்று தனியாக இடம் ஒதுக்க ப்பட்டுள்ளது. இங்கு அதிகாலை முதல் குறிப்பிட்ட நேரம்வரை கடலூரை சேர்ந்தவர்கள் நடைபயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் கராத்தே, நீச்சல்பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளுக்கும் தனித்தனியாக இடம் உள்ளது. இவ்வாறு பல்வேறு வசதி கொண்ட இந்த மைதானம் மழைகாலம் வந்து விட்டால்போதும் குளம்போல் ஆகிவிடுகிறது. இதனால் விளையாட்டு வீரர்கள் பயிற்சிபெற முடியாமல் அவலநிலைக்கு தள்ளப்படும் சூழல் உருவாகி உள்ளது.

    கடந்த 3 நாட்களாக கடலூர் நகர் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. நேற்று முன்தினம் விடிய விடிய பெய்த மழையால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனை அகற்ற மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடி க்கை எடுத்துவருகிறது. ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் 8 செ.மீ. மழை கொட்டி தீர்த்ததால் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் தற்போது குளம்போல் காட்சியளிக்கிறது. இந்த மைதானத்துக்குள் யாரும் செல்லமுடியாத அளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இதுபோன்ற நிலை ஒவ்வொரு மழை க்கும் ஏற்படுகறிது. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்மந்தப்பட்ட உயர் அதி காரிகள் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி தண்ணீர் தேங்க விடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து நடைபயிற்சி யாளர்கள் கூறுகையில், கடலூர் நகரில் மழை பெய்யும் போதெல்லாம் இதுபோன்ற அவலநிலை நீடிக்கிறது. மைதானத்தை இன்னும் கொஞ்சம் உயர்த்த லாம். மைதானத்தில் தண்ணீர் தேங்காத வகை யில் வடிகால் வசதி அமை த்தால் இதுபோன்று தண்ணீர் தேங்காது. எனவே அரசு அதிகாரிகள் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்ற னர்.

    • பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதி அமைக்க வேண்டும்.
    • சிங்காரவேலவர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் விற்குடி வீரட்டேசுவர சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவதால், அங்குள்ள ஏற்பாடுகளை முகம்மது ஷாநவாஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தங்கும் விடுதி அமைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று அந்தக் கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுப்பதாக எம்.எல்.ஏ உறுதியளித்தார்.

    அப்போது தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    அதைத் தொடர்ந்து சிக்கல் சிங்காரவேலவவர் கோவிலுக்கு சென்று, கந்தசஷ்டி விழா ஏற்பாடு களை பார்வையிட்டார்.

    மேலும், சிங்காரவேலவர் கோவில் குளத்தை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் சீரமைக்க கோரிக்கை வைத்துள்ளது தொடர்பாக அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது, தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆனந்த், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட பொறுப்பாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • கானாகுளத்தில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருதன்கோடு செம்மாங்காலை பகுதியை சேர்ந்தவர் தாசையன் (வயது 65) கூலிதொழிலாளி.

    இவருக்கு சுசீலா என்ற மனைவியும், 3 பெண் பிள்ளைகளும் உண்டு அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. சம்பவத்தன்று அவரது மனைவியிடம் பக்கத்தில் உள்ள கானாகுளத்தில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.

    குளிக்க சென்றவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை, இதை அடுத்து சுசீலா அவரது உறவுக்காரர் ஒருவரிடம் சம்பவத்தை கூறி குளத்தில் சென்று பார்க்கக் கூறியுள்ளார். அப்போது குளத்தின் கரையில் தாசையனுடைய துணி மற்றும் செருப்பு இருந்துள்ளது. சந்தேகம் அடைந்த அவர் குளத்தில் இறங்கி தேடிப் பார்த்துள்ளார். அப்போது தாசையன் குளத்தில் மூழ்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

    அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தாசையன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் வரும் போது திடீரென நிலை தடுமாறி மின் கம்பம் மீது மோதி அருகில் உள்ள குளத்தில் விழுந்தார்.
    • தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    மார்தாண்டம் கீழபம்மம் பகுதியை சேர்ந்தவர் டான் சந்திர சுதன். இவரது மகன் பிரின் அனுக் (வயது27).

    பொறியியல் பட்டதாரியான இவர் நாகர்கோவில் உள்ள ஒரு கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று பணிமுடிந்து மாலை வீட்டுக்கு புறப்பட்டார். தக்கலை அருகே காட்டாத்துறை கொக்கிடிகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வரும் போது திடீரென நிலை தடுமாறி மின் கம்பம் மீது மோதி அருகில் உள்ள குளத்தில் விழுந்தார். நெடுநேரம் ஆகியும் பிரின் அனுக் மீட்க படாததால் பரிதாபமாக குளத்தில் மூழ்கி இறந்தார்.

    இந்த தகவலை அறிந்த அப்பகுதியில் உள்ளவர்கள் உடலை மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இது சம்மந்தமாக இவரது தந்தை டான் சந்திர சுதன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரை பெற்று கொண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு 8.20 மணி அளவில் தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர்.
    • மேலகுருந்தன்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர்

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே மேலகுருந்தன்கோடு என்ற இடத்தை சேர்ந்தவர் நாராயணன் என்ற தாணிவேல் (வயது 49). கூலி வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் அப்பகுதி யில் உள்ள பாறைகுளம் கரையில் இருந்துள்ளார். அப்போது தவறி குளத்தில் விழுந்து மூழ்கிய அவரை அப்பகுதி மக்கள் குளத்தில் இறங்கி தேடி உள்ளனர். தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    தகவல் அறிந்த திங்கள்நகர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அதிகாரி பிரதீப்குமார் தலைமையில் சம்ப இடம் வந்த தீயணைப்பு வீரர்கள் குளத்தில் இறங்கி தாணிவேலை தேடினர். இரவு நெருங்கியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் லைட்களை எரியவிட்டு தொடர்ந்து தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இரணியல் இன்ஸ்பெக்டர் சுந்தர பாண்டியன், கக்கோட்டுத் தலை கிராம நிர்வாக அதிகாரி ராதா, இரணியல் தனிப்பிரிவு ஏட்டு சுஜின் உள்ளிட்டோர் அங்கிருந்தனர்.

    தொடர்ந்து இரவு 8.20 மணி அளவில் தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர். குளத்தில் தொழி லாளி மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் 6832 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று மாலை வரை இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கியது. சிதலமடைந்த சாலைகள் சகதிக்காடாக மாறின.

    மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கயம், அவினாசி உள்பட அனைத்து பகுதிகளிலும் மழைநீடித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் வீடுகளுக்குள் முடங்கினர். சில இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் அதனை அகற்றும் பணியில் உள்ளாட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    உடுமலை வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் 6832 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மாவட்டம் முழுவதும் நேற்று மாலை வரை மழை பெய்த நிலையில் அதன்பிறகு நின்றது. இன்று காலை மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இரவு முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் முதியவர்கள் பாதிக்கப்பட்டனர். தாராபுரம், காங்கயம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.

    மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு :- திருப்பூர் வடக்கு-16, அவினாசி-6, பல்லடம் -32, ஊத்துக்குளி-6, காங்கயம்-28, தாராபுரம்-43, மூலனூர்-34, குண்டடம்-25 திருமூர்த்தி அணை -27, அமராவதி அணை- 39, உடுமலை-38.20, மடத்துக்குளம் -76, திருப்பூர் கலெக்டரேட்-7, வெள்ளகோவில் ஆர்.ஐ. அலுவலகம் -35, திருமூர்த்தி அணை (ஐ.பி.) -25, திருப்பூர் தெற்கு-15, கலெக்டர் முகாம் அலுவலகம் - 20.40,உப்பாறு அணை -75, நல்லதங்காள் ஓடை -34,வட்டமலைக்கரை ஓடை- 56.40. மாவட்டம் முழுவதும் மொத்தம் 638மி.மீ. மழை பெய்துள்ளது.

    கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நொய்யலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் உள்ள நல்லம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    நொய்யல் ஆற்றில் திடீரென்று மழை நீர் வெள்ளம் அதிக அளவில் வருவதால் ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் நேற்று காலை முதல் வரும் மழை நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் நத்தக்காடையூர் அருகே புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் செல்லும் நொய்யல் ஆற்றில் நேற்று மதியம் 12 மணி முதல் மழைநீர் திடீரென்று அதிக அளவில் வந்து ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி சீறி பாய்ந்து கரைபுரண்டு செல்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்று தாழ்வான தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. இதன் காரணமாக தரை பாலத்தின் வழியாக செல்லும் பகுதிக்கான சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் கனரக, இருசக்கர வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

    இன்று காலை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். மேலும் தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழைநீரை பயன்படுத்தி சாகுபடி பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

    • நீர் பாசன வாய்க்காலை 80 ஆண்டுகளுக்கு பிறகு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி.
    • சங்கினி குளத்தையும் விரைவில் மீட்க வேண்டும்.

    மதுக்கூர்:

    பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் ஒன்றியத்தில் புலவஞ்சி கிராமம்கிராமத்தில் கல்யாண ஓடை வாய்க்காலி யில் ஆக்கிரமிப்பு செய்யபட்டு உள்ளதாகவும், இதனால் நீர் செல்வதில் தடை ஏற்பட்டு ள்ளதாகவும் மாலைமலரில் செய்தி வெளியானது. இதைத் தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய்த்துறை, பொது ப்பணித்துறை செயல்பட்டாலும் மற்றும் வருவாய் துறையும் மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர் மற்றும் வருவாய் கோட்டா ட்சியர் சாந்தகுமார் மூலம் பொதுப்பணித்துறை இணைந்து பட்டுக்கோட்டை தாலுக்கா மதுக்கூர் ஒன்றிய த்தில் புலவஞ்சி கிராமம் கிராமத்தில் கல்யாண ஓடை வாய்க்காலியின் விவசாயத்தை பயன்படுத்தும் கூடிய மதகு எண் 19 என்ற நீர் பாசன வாய்க்காலை 80 ஆண்டுகளுக்குப் பிறகு பொது பணியும் வருவாய்த்துறையும் இணைந்து வாய்க்காலில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் வாய்காலை மீட்டெடுத்து கொடுத்ததற்கு காவி புலிப்படை நிறுவனத் தலைவர் புலவஞ்சி சிபி போஸ் நன்றி தெரிவித்தனர்.

    இது குறித்து காவி புலிப்படை நிறுவனத் தலைவர் புலவஞ்சி சிபி போஸ் கூறுகையில், இதுபோன்று சமூகத்திற்கு வேண்டிய செய்திகளை தொடர்ந்து மாலை மலர் செயது வருவதனால் மாலை மலர் உடைய வாசகர் என்ற முறையில் மாலை மலருக்கு நன்றி கடந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.அதே போன்று மதுக்கூர் பட்டுக்கோட்டை பிரதான சாலையில் மதுக்கூர் காவல் நிலையம் அருகாமையில் உள்ள சங்கினி குளத்தையும் கூடிய விரைவில் மாவட்ட நிர்வாகமும் வருவாய் துறையும் மீட்டு தரும் என்று நம்பிக்கையோடு விடைபெறுகிறேன் என்றார்.

    • கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால்நனைக்க அச்சப்பட்டனர்.
    • மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர்.

    கன்னியாகுமரி:

    வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் காரணமாக இன்று கன்னியாகுமரியில்கடல் அலையே இல்லாமல் அமைதியாக குளம் போல் காணப்பட்டது.

    இதைப் பார்த்து கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி கால்நனைக்க அச்சப்பட்டனர். ஆனால் எந்தவித அச்சமுமின்றி மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று விட்டு கரைக்கு திரும்பினர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை பகுதியில் கடல் உள்வாங்கி இருந்தாலும் கன்னியாகுமரியில் வங்க கடல் பகுதியில் கடலின் தன்மை இயல்பு நிலையில் காணப்பட்டதால் கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை8மணிக்கு வழக்கம் போல் படகு போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது.

    சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வமுடன் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வருகிறார்கள். அதேசமயம் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அலையே இல்லாமல் அமைதியாக கடல் குளம் போல் காணப்பட்டதுஇதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியல் போட முடியாமல் திகைத்துபோய் நின்றனர்.

    • ஆசாரிப்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • உடல் பிரேத பரிசோதனை இன்று ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கீழ ஆசாரிபள்ளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராபின் இவரது மகன் ஆல்வின் ராஜ் (வயது 10).

    ஆசாரிபள்ளம் நடு தெருவை சேர்ந்தவர் ஹர்ஜோன் (10). இவர்கள் இருவரும் நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று விடுமுறை என்பதால் ஆல்வின்ராஜ், ஹர்ஜோன் இருவரும் அவருடைய நண்பர் இம்மானுவேல் (10) என்பவருடன் அந்த பகுதியில் சுற்றி திரிந்தனர். மதியம் அந்தோணியார் ஆலயம் பகுதியில் உள்ள குளத்தில் மீன் பிடிக்க சென்றனர்.

    ஆல்வின் ராஜ், ஹர்ஜோன் இருவரும் குளத்தில் இறங்கி மீன் பிடித்தபோது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி னார்கள். இதையடுத்து பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆல்வின் ராஜ் ஹர்ஜோ னை பரிசோ தித்த டாக்டர்கள் இருவ ரும் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.

    இது குறித்து ஆசாரிப்பள் ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆல்வின் ராஜ் ஹர்ஜோன் பலியானது எப்படி என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் திடுக்கிடும் தகவல் கள் வெளியாகி உள்ளது. தண்ணீரில் மூழ்கி பலி யான ஆல்வின் ராஜ், ஹர்ஜோன் இருவரும் குளத்தின் கரையில் நின்று மீன் பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் மீன்கள் சிக்க வில்லை.

    இதையடுத்து குளத்திற் குள் இறங்கி அவர்கள் மீன் பிடித்தனர். அதன்பிறகும் மீன் சிக்காததால் தண்ணீ ருக்குள் இறங்கி சென்றனர். அப்போது கரையில் இருந்த இம்மானுவேல் ஆழமான பகுதிக்கு செல்லாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.அதற்குள் ஆல்வின் ராஜ், ஹர்ஜோன் இருவரும் தண்ணீ ரில் மூழ்கி உள்ள னர். இதை பார்த்த இம்மானு வேல் கூச்சலிட்டு உள்ளார்.

    அப்போது அந்த பகுதி மக்கள் அங்கு ஓடி வந்து அவர்களை மீட்டு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது. பலி யான ஆல்வின் ராஜ், ஹர் ஜோன் உடல் பிரேத பரிசோ தனை இன்று ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரியில் நடக்கிறது. இதையடுத்து ஏராளமான பொதுமக்கள் திரண்டு உள்ளனர்.

    • குட்டிக்குளத்தின் கரைப்பகுதியில் நூற்றுக்கணக்கான பனை விதைகள் நடுகை செய்யப்பட்டன.
    • நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கடையம் வயல்காட்டு பகுதிகளில் உள்ள குளக்கரைகளை பனைமரக்கரை களாக்கி வலிமையாக்கிடும் பணியில் குட்டிக்குளத்தின் மேற்கு மற்றும் தெற்கு கரைப்பகுதியில் நூற்றுக்க ணக்கான பனை விதைகள் நடுகை செய்யப்பட்டன.

    தென் பத்து குளத்திற்கும் குட்டிக்குளத்திற்கும் நடுவில் செல்லும் பாதையின் இருபகுதியிலும் பனை விதைகள் மீள் நடுகை செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் பள்ளி மாண வர்கள் ஜெப்வின், விஷ்ணு, செர்வின், அலோசியஸ், நாவினி, சிலம்ப கலைஞர் முத்தரசன் மற்றும் சுரண்டை காமராஜர் கல்லூரி வேதி யியல் பேராசிரியர் ராஜா சிங் ஆகியோர் பங்கேற் றனர். நிகழ்ச்சியை பனை யாண்மை மற்றும் சூழலியல் ஆய்வாளர் பேராசிரியர் பாமோ ஒருங்கிணைத்தார்.

    • போலீசார் விஷ்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில்:

    புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஷ்ணு (வயது 25). இவர் அடிக்கடி குடும்பத்தினரிடம் தகராறு செய்துவிட்டு 2 நாட்கள் கழித்து வீட்டுக்கு வருவது வழக்கம்.

    கடந்த 7-ந்தேதி விஷ்ணு குடும்பத்தினருடன் தகராறு செய்து விட்டு வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. வழக்கம்போல் 2 நாட்கள் கழித்து வந்து விடுவார் என குடும்பத்தினர் நினைத்து அவரை தேடவில்லை. ஆனால், 2 நாட்கள் கழித்தும் விஷ்ணு வீட்டுக்கு திரும்பி வரவில்லை.

    இதனால் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் முன்சிறை அருகே ஓச்சவிளை பகுதியில் தோட்டத்தில் உள்ள குளத்தில் ஒரு ஆண் பிணம் மிதப்பதாக புதுக்கடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று குளத்தில் மிதந்த ஆண் பிணத்தை மீட்டனர். அப்போது, அது மாயமான விஷ்ணு என்பது தெரியவந்தது. இதற்கிடையே தகவலறிந்து வந்த குடும்பத்தினர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இதையடுத்து போலீசார் விஷ்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஷ்ணு குளத் தில் குளிக்க இறங்கிய போது தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளத்தில் நீர் வற்றாமல் அப்பகுதிக்கு முக்கிய நீர்நிலை ஆதாரமாக உள்ளது.
    • ஆகாயத்தாமரை செடிகள் அதிகம் இருப்பதால் மீன் கூட பிடிக்க முடியாமல் உள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட பச்சாந்தோப்பு அருகே கரிக்குளம் உள்ளது.

    இந்த குளத்தை அருகில் உள்ள பச்சாந்தோப்பு, ஆற்றாங்கரை தெரு, தைக்கால் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும் மற்றும் பல்வேறு பயன்பாட்டிற்கும் பயன்படுத்தி வந்தனர்.

    மேலும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாயிலிருந்து உபரி நீர் வருடம் முழுவதும் இந்த குளத்தில் வந்து சேர்கிறது.

    இதனால் கோடையிலும் குளத்தில் நீர் வற்றாமல் அப்பகுதிக்கு முக்கிய நீர்நிலை ஆதாரமாக உள்ளது.இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் குளம் குடிமராமத்து பணியில் தூர்வாரப்பட்டது.

    ஆனால் கடந்த 1 ஆண்டாக கரிக்குளம் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் உள்ளது.

    இதனால் குளத்தில் ஆகாயத் தாமரை செடிகள், கொடிகள் மண்டி புதர் போல் காட்சியளிக்கிறது.குளத்தின் படிக்கட்டுகள் சுகாதாரமற்று காணப்படுகிறது.

    இதனால் குளத்தினை பயன்படுத்த முடியாமல் மக்கள் உள்ளனர்.

    மேலும் கடந்த ஆண்டு இக்குளம் மீன் பாசி குத்தகைக்கு விடப்பட்டு குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அதிகம் இருப்பதால் மீன் கூட பிடிக்க முடியாமல் உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து கரிக்குளத்தை ஆக்கிரமித்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×