search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குளங்கள்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • `நேக்லரியா போலேரி' என்னும் ஒற்றை உயிரணு உயிரினம் ஆகும்.
    • ஏரிகள், ஆறுகள், நன்னீர் தேக்கங்கள் மற்றும் சூடான நீரூற்றுகளில் காணப்படுகிறது.

    முதன்மை அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்பது மூளை மற்றும் மூளையைச் சுற்றி மூடியிருக்கும் சவ்வு திசுக்களில் ஏற்படும் தொற்று பாதிப்பு ஆகும். இந்த தொற்று பாதிப்புக்கு காரணம் ''நேக்லரியா போலேரி'' என்னும் ஒற்றை உயிரணு உயிரினம் ஆகும். மூளையை தின்னும் அமீபா என்று இதற்கு பெயரிடப்பட்டு உள்ளது.

    'நேக்லரியா போலேரியா' என்னும் இந்த ஒற்றை உயிரணு உயிரினம் உலகம் முழுவதும் உள்ள ஏரிகள், ஆறுகள், நன்னீர் தேக்கங்கள் மற்றும் சூடான நீரூற்றுகளில் காணப்படுகிறது.

    குறிப்பாக, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சூடான நீரிலும், சரியாக குளோரினேட் செய்யப்படாத நீச்சல் குளங்களிலும் அதிகம் காணப்படுகிறது.

    வெதுவெதுப்பான நீர் உள்ள குளங்கள் அல்லது ஏரிகளில் மூழ்கி குளிக்கும்போது இந்த அமீபா மனிதனின் மூக்கு வழியாக நுழைந்து நேரடியாக மூளைக்கு செல்கிறது. பின்னர் மூளையின் திசுக்களை வேகமாக தின்று அழிக்கிறது.

    இந்த அமீபா உடலுக்குள் நுழைந்து விட்டால் ஆரம்ப அறிகுறிகளாக தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி காணப்படும். மேலும், கழுத்து இறுக்கம், குழப்பம், மக்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் கவனம் இல்லாமை, சமநிலை இழப்பு, வலிப்பு மற்றும் கண் முன் மாய தோற்றங்கள் தோன்றுவது போன்ற பாதிப்புகள் ஏற்படும். நோய் தொற்று ஏற்பட்ட 12 நாட்களில் மரணம் நேர்கிறது.

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் உள்ள நீர் தேக்கங்கள் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் மூளை தின்னும் ''நேக்லரியா போலேரி'' அமீபா இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த அமீபா பாதிப்பை சரியான முறையில் கண்டறிய தவறுவதால், மூளைக்காய்ச்சல் என்று கருதி விடுவதாகவும் கூறப்படுகிறது.

    இந்த மூளையை உண்ணும் அமீபா வெதுவெதுப்பான நீரில் வாழும் ஒரு தெர்மோபிலிக் உயிரினம். இதனால், இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் அதிக அளவில் வெதுவெதுப்பான நீர் நிலைகளில் இவை பெருக ஏற்றதாக இருக்கிறது. எனவே, இந்த அமீபா தொற்று விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று தொற்று உயிரியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    • வெள்ளப்பெருக்கு காரணமாக தடுப்பணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.
    • விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கனமழையின் தாக்கம் அதிகளவில் உள்ளது.

    இதன் காரணமாக நொய்ய லாற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பேரூர் படித்துறையை மூழ்கடித்தபடியும், அங்குள்ள தரைப்பாலத்தை தொட்டபடியும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

    வெள்ளப்பெருக்கு காரணமாக தடுப்பணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. கோவை மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளது. இதில் நொய்யல் ஆற்றின் மூலம் 25 குளங்கள் தண்ணீரை பெற்று வருகின்றன.

    தற்போது பெய்து வரும் மழையால் குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக நொய்யல் ஆற்றின் வழியோரம் உள்ள உக்குளம், பேரூர் பெரியகுளம், சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண சமுத்திரம், குறிச்சிக்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    இதில் 23 குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளது. அதிலும் உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன்குளம், செல்வசிந்தா மணிகுளம் முழுவதும் நிரம்பி விட்டது. அதில் இருந்து உபரி நீர் கால்வா ய்களில் வழிந்தோடியது.

    இதுதவிர சொட்டை யாண்டி குட்டை குளம் 70 சதவீதமும், குறிச்சிக்குளம் 40 சதவீதமும், பேரூர் பெரியகுளம், 15 சதவீதமும், நரசாம்பதி குளம் 90 சதவீதமும் நிரம்பின.

    இதே அளவுக்கு வரும் நாட்களிலும் மழை தொடர்ந்தால் அனைத்து குளங்களும் நிரம்ப வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கனமழையால் கணுவாய்-பன்னிமடையில் உள்ள தாளியூர் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி மழைநீர் சென்றது.

    இப்பகுதியில் உள்ள தடுப்பணைகளும் நிரம்பி வழிகின்றன. தடுப்பணை யில் இருந்து சின்னவே டம்பட்டி ஏரிக்கு மழைநீர் திருப்பி விடப்பட்டுள்ளது.

    குளங்களையொட்டியும், தாழ்வான பகுதிகளில் வசிக்க கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்க ளுக்கு செல்ல மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் செல்வ சிந்தாமணி குளம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணல் மூட்டை களும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து நீர்நிலை ஆர்வலர்கள் கூறும்போது, கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை காலத்தில் படித்துறையை ஒட்டியவாறு மழைநீர் சென்றது.

    நடப்பாண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்தஅளவுக்கு பெய்யவில்லை. தற்போ தைய வடகிழக்கு பருவமழை காலத்தில் நொய்யலாற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

    தொடர் மழையால் குளங்கள் அனைத்தும் நிரம்பி வருவது விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • 3 அணைகளில் இருந்து 830 கன அடி தண்ணீர் வெளியேற்றம்
    • 2000 குளங்கள் நிரம்பி வழிகிறது

    நாகர்கோவில், நவ.14-

    குமரி மாவட்டத்தில் தினமும் பெய்து வரும் மழையால் மாவட்டம் முழு வதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. நாகர்கோவில், முள்ளங்கினாவிளை, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் மலையோர பகுதிகளில் மழை பெய்தது. கன மழை குறைந்து சாரல் மழை பெய்து வரும் நிலையில் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைய தொடங்கி யுள்ளது. இதனால் பேச்சிப் பாறை அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து வெளி யேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளதால் கோதையாறு, குழித்துறை யாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு சற்று குறைந் துள்ளது. தண்ணீர் வரத்து குறைந்ததால் திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு இன்று அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவி யில் ஆனந்த குளியலிட்டனர். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.80 அடியாக உள்ளது. அணைக்கு 365 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.62 அடியாக உள்ளது.

    அணைக்கு 361 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 280 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார் 1 அணை நீர்மட்டம் 15.51 அடியாக உள்ளது.

    அணைக்கு 66 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படு கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து 830 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்டு முறையில் திறந்து விடப்பட்டு வருகிறது. ஏற்கனவே மாவட்டத்தில் உள்ள 2000-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழி கிறது. அணைகளிலும், பாசன குளங்களிலும் போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே நடவு பணி நடைபெற்ற நிலையில் பூதப்பாண்டி, அருமநல்லூர், சுசீந்திரத்தின் ஒரு சில பகுதிகளில் நடவு பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    விவசாயிகளுக்கு தேவை யான உரங்களை தங்குதடை யின்றி வழங்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண் டுள்ளனர். கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விவசாயி களுக்கு தேவையான உரங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    • மழைக்காலத்தில் மட்டுமே நீர் வரத்து இருக்கும். மற்றபடி இக்குளங்களே அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு, ஆதாரமாக விளங்குகிறது.
    • நீர்மட்டம் வெகுவாக சரிந்து தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் 118 குளம், குட்டைகளும், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 74 குளங்களும் உள்ளன. மழைக்காலத்தில் மட்டுமே நீர் வரத்து இருக்கும். மற்றபடி இக்குளங்களே அப்பகுதி நிலத்தடி நீர் மட்டத்துக்கு, ஆதாரமாக விளங்குகிறது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக போதிய மழைப்பொழிவு இல்லாததால் அனைத்து குளங்களும் வறண்டு காணப்படுகிறது. கால்நடைகளின் குடிநீர் தேவைக்கு கூட குளங்களில் தண்ணீர் இல்லை. நீர்மட்டம் வெகுவாக சரிந்து தென்னை உள்ளிட்ட நீண்ட கால பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் போராடி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழையும் தாமதித்து வருவதால் நிலைமை மேலும் மோசமாகியுள்ளது. இப்பிரச்னையை சமாளிக்க திருமூர்த்தி அணையில் இருந்து கிராமப்புற குளங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்தில் ஒரு சுற்று மட்டுமே தண்ணீர் வழங்கப்பட்டது. பிரதான கால்வாய் உடைப்பு உள்ளிட்ட காரணங்களால் பாசன காலம் நீட்டிக்கப்பட்ட போது ஆயக்கட்டு பகுதியிலுள்ள குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் பாசன நிலங்களுக்கோ கூடுதல் திறப்பில் தண்ணீர் வழங்கப்படவில்லை. குளங்களையும் பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை.

    இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்தாண்டு வறட்சியால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. தற்காலிக தீர்வாக குளங்களுக்கு தண்ணீர் வழங்கலாம். குளங்களில் தண்ணீரை தேக்கினால், பல மாதங்களுக்கு, நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் இருக்கும். முதலாம் மண்டல பாசனத்துக்கு போதிய இடைவெளி இருப்பதால், ஆயக்கட்டு பகுதி மட்டுமல்லாது, பிற பகுதிகளிலுள்ள குளங்களுக்கும் பாசன நீரை திருப்பி விட்டால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

    • மாணவிகள் மழைநீர் சேமிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
    • பல்வேறு பகுதிகளுக்கு சென்று காணொளி வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

    கடலூர்:

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அருண் தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் வாக்குப்படி தண்ணீரின் முக்கியத்துவம் மற்றும் மழைநீரின் சேகரிப்பு அவசியம் குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பாக அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மழைநீர் சேமிப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    மழைநீர் சேகரிப்பு குறித்து பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு பல்வேறு பகுதிகளுக்கு சென்று காணொளி வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது. மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீரமைத்து மழைநீரை சேகரிப்பது, கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், ஊரணிகள் மற்றும் பழைமை வாய்ந்த நீராதார கட்டமைப்புகளை தூர்வாரி மழைநீரை சேகரிப்பதன் மூலம் நிலத்தடி நீரை மேம்படுத்தலாம் என தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் அருளானந்தன் , உதவி நிர்வாகப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், துணை நிலநீர் வல்லுநர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • மத்திய அரசின் விருதுக்கு கலாச்சார பிரிவில் அய்யன்குளம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
    • சிவகங்கை பூங்காவில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்ட விருதுக்கு கலாசார பிரிவில் அய்யன்குளம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.

    குடியரசு தலைவரால் செப்டம்பா் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் டெல்லியில் விருது வழங்கப்பட உள்ளது.

    எனவே, இக்குளத்தை பொதுமக்கள், அசுத்தம் செய்யாமல், சேதப்படுத்தாமல் பாதுகாக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    மேலும், 14 குளங்கள் ரூ. 26.15 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட உள்ளது.

    தஞ்சாவூா் சிவகங்கை பூங்காவில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

    இருக்கைகள் உள்ளிட்ட சில நிலுவை பணிகளும் விரை வில் நிறைவேற்றப்பட்டு 2 மாதங்களில் திறக்கப்படும்.

    தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரே யூனியன் கிளப் பின்புறமுள்ள இடத்தில் குறைந்த கட்டணத்தில் வாகன நிறுத்து மிடம் அமைக்கப்படவுள்ளது.

    தஞ்சாவூா் கீழவாசல் வெள்ளை பிள்ளையாா் கோயில் அருகே தற்காலிகமாகச் செயல்படும் மீன் சந்தை அருகிலுள்ள இடத்துக்கு மாற்றப்பட வுள்ளது.

    இதற்குத் தேவையான பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளன.

    தற்போது மீன் சந்தை உள்ள இடத்தில் வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும்.

    மாநகரில் தாா் சாலை அமைக்கும் பணி 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

    இதில், புதை சாக்கடை திட்டத்துக்குப் பிறகு போடப்படாமல் இருந்த குறுக்கு சாலைகள், குறுக்கு சந்துகளிலும் தாா் சாலை அமைக்கப்படுகிறது. மீதமுள்ள 40 சதவீத பணிகளும் 2024, மாா்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும்.

    அனைத்து சாலைகளிலும் புதிதாக எல்.இ.டி. மின் விளக்குகள் பொருத்தப்ப டவுள்ளன.

    ராஜ வீதிகளில் புதை மின் தடங்கள் அமைக்கப்பட்டு, சாலையை அகலப்படுத்தி தாா் சாலை போடப்படும்.

    மேலும், அலங்கார மின் விளக்குகள் அமைக்கப்படும்.

    மாநகரில் 29 இடங்களில் மழை நீா் வடிகால் வசதி செய்யப்படுகிறது.

    மாநகரில் பயன்பாட்டில் இல்லாமல் மிக மோசமான நிலையிலுள்ள 44 பூங்காக்களில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு, புதிதாக விளையாட்டு உபகர ணங்கள் அமைக்கப்படவுள்ளன.

    மேலும், இப்பூங்காக்கள் தனியாா் பராமரிப்பில் விடப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்

    • செங்கோட்டை பகுதியில் விளையும் காய்கறிகளை உள்ளூர் மட்டுமின்றி கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.
    • தென்மேற்கு பருவமழையானது ஆரம்பத்தில் பெய்த நிலையில் பின்னர் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியது.

    செங்கோட்டை:

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான செங்கோட்டை சுற்றுவட்டப் பகுதி பூ மகசூலுக்கு சிறப்பு பெற்றதாகும்.

    உளுந்து, சோளம், கம்பு

    இப்பகுதி விவசாயிகள் கார் மற்றும் பிசான சாகுபடி காலங்களில் நெல் மற்றும் தென்னை, வாழை உள்ளிட்ட தோட்டப்பயிர்களும், ஏனைய காலங்களில் உளுந்து, சோளம், கம்பு மற்றும் தோட்ட பயிரான கத்தரி, வெண்டை, புடலங்காய், மிளகாய், தக்காளி உள்ளிட்ட கோடை கால பயிர்கள், நெல்லி, புளி உள்ளிட்ட வறட்சியை தாங்கும் பயிர்கள் என பயிரிடுவார்கள்.

    இப்பகுதியில் விளையும் காய்கறிகளை உள்ளூர் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம். மேலும் கேரளாவில் கொண்டாப்படும் ஓணம் பண்டிகை காலத்தில் அங்கு காய்கறிகள் விலை அதிகரிப்பதால் அதனை கணக்கில் கொண்டு செங்கோட்டை பகுதி விவசாயிகள் தங்களின் விளைச்சலை பெருக்குவர். இதனால் வர்த்தக அதிகளவில் இப்பகுதி விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் பெருமளவில் பயன்பெற்றனர்.

    தென்மேற்கு பருவமழை

    இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையானது ஆரம்பத்தில் பெய்த நிலையில் பின்னர் கண்ணாமூச்சி ஆட்டம் காட்டியது.

    மழை பொய்த்ததால் மோட்டை, அடவிநயினார் அணை உள்ளிட்ட அனைத்து நீர்த்தேக்கங்களிலும் தற்போது தண்ணீரின் அளவு குறைந்து காணப்படுகிறது.

    இதனால் செங் கோட்டை பகுதியில் குறைந்த அளவிலான விவசாயிகளே பயிரிட்டுள்ளனர். காய்கறிகள் விளைச்சல் குறைந்ததால் அவற்றின் விலையும் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது.

    விவசாயிகள் வேதனை

    இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் பாதிப்படைந்துள்ளனர்.

    மேலும் தற்போது வரை பருவமழை பெய்யாததால் செங்கோட்டை சுற்றுப்பகுதியில் உள்ள பல்வேறு குளங்கள், வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர் நிலைகள் அனைத்தும் வெறும் புல் தரையாக காட்சி அளிக்கிறது. இதனால் அவை ஆடு, மாடுகளை மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளது.

    இதே நிலை நீடித்தால் தங்களின் வாழ்வாதாரம் பெரும் பின்னடைவை சந்திக்கும் என செங்கோட்டை பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

    • புது ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கியது.
    • தஞ்சையில் அழகிகுளம் உள்பட 10 குளங்கள் முற்றிலும் சீரமைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இவற்றில் பல பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்து விட்டன.

    அந்த வகையில் தஞ்சை கீழவாசல் கவாஸ்காரத் தெருவில் உள்ள அழகி குளத்தை சுற்றி நான்கு திசைகளிலும் உள்ள கரைகளை சீரமைத்து, சுற்றுச்சுவர், பேவர் பிளாக் நடைபாதை, குழந்தைகள் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள், இருக்கைகள் உள்ளிட்ட வசதிகளுடன் 1 கோடியே 44 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டது.

    இதனை கடந்த மாதம் முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    இந்த நிலையில் தண்ணீர் இல்லாமல் காட்சியளித்த அழகி குளத்தில் மேயர் சண் .ராமநாதனின் துரித நடவடிக்கையால் புது ஆற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கியது.

    இதன் மூலம் அழகி குளத்தில் தண்ணீர் நிரம்பி புதுப்பொ லிவுடன் காட்சியளிக்கும்.

    இதனை தொடர்ந்து இன்று அழகிகுளத்தை மேயர் சண் ராமநாதன் பார்வையிட்டு குழாய் மூலம் தண்ணீர் நிரப்பப்படுவதை ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து தண்ணீரில் பூக்கள் தூவி வரவேற்றார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தஞ்சையில் அழகிகுளம் உள்பட 10 குளங்கள் முற்றிலும் சீரமைக்கப்பட்டு அனைத்து வசதிகளுடன் புதுப்பொ லிவுடன் காட்சியளிக்கிறது.

    நடை பாதை உள்ளிட்ட பொது மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் உள்ளன.

    அழகி குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி தொடங்கி உள்ளது.

    இதனால் தண்ணீர் நிரம்பி அழகி குளம் காட்சியளிக்கும்.

    இது தவிர தஞ்சையில் மேலும் 35 குளங்கள் புதுப்பொலிவு பெற நடவடிக்கை எடுக்கப்ப ட்டு வருகிறது. அந்தக் குளங்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரி பொது மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மண்டல குழு தலைவர் மேத்தா, கவுன்சிலர்கள் செந்தில்குமாரி , லெனின், தி.மு.க. பகுதி செயலாளர் கார்த்திகேயன், விளையாட்டு மேம்பாட்டு மாவட்ட அமைப்பாளர் ராணி கண்ணன், சோழமண்டல சிவாஜி பாசறை தலைவர் சதா வெங்கட்ராமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    அழகி குளத்தில் தண்ணீர் நிரப்பி புது பொலிவுடன் மாற்றிய மேயர் சண் ராமநாதனை பொதுமக்கள் பாராட்டினர்.

    • மழை நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கும் என்று தெரிகிறது.

    சென்னை:

    சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பருவ மழையின்போது தண்ணீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதிகளில் தேங்குவது கடும் சவாலை ஏற்படுத்தி வருகிறது.

    அருகில் உள்ள ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்ல போதிய வடி கால்வாய் வசதி இல்லாததால் இந்த பிரச்சினை நீடித்து வருகிறது. கடந்த வாரம் பெய்த ஒரு நாள் கோடை மழைக்கே பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தன. சென்னையில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகைள எடுத்து வருகிறார்கள்.

    இந்நிலையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்கவும், அந்த தண்ணீர் வீணாகாமல் அருகில் உள்ள சிறிய ஏரி, குளங்களில் சேமிக்கவும் மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. இதற்காக மழை நீர் செல்லும் வகையில் கால்வாய்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதற்கான முதல் கட்டபணி ரூ.44 கோடி மதிப்பில் நடைபெற இருக்கிறது.15 மண்டலங்களில் உள்ள 49 சிறு ஏரி, மற்றும் குளங்களுக்கு தண்ணீரை கொண்டு செல்வது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளனர்.

    இதேபோல் குளங்களில் இருந்து உபரி நீர் செல்லும் கால்வாய் இல்லாததாலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து ஏரிகளில் உபரி நீர் கால்வாய் அமைக்கவும் அதிகாரிகள் பரிசீலனை செய்து வருகிறார்கள்.

    இதற்காக தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட இருக்கும் என்று தெரிகிறது. இது தொடர்பான விரிவான ஆய்வு முடிந்த பின்னரே எவ்வளவு இடம் கையகப்படுத்தப்படும் என்ற விபரம் தெரியவரும்.

    பலத்த மழை பெய்யும்போது பல்வேறு இடங்களில் இருந்து ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டு ஏரி, மற்றும் அயப்பாக்கம், கோலடி ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும். இந்த ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர் அம்பத்தூர் ஏரியில் கலப்பதால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

    இதேபோல் நன்மங்கலம் ஏரியில் உபரி நீர் கால்வாய் இல்லை. மழை நீரால் குளம் நிரம்பும்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த ஏரிகளில் உபரி நீர் கால்வாய் அமைக்க திட்ட மிடப்பட்டு உள்ளது. இதே போல் போரூர், செம்மஞ்சேரி உள்ளிட்ட சில ஏரிகளில் கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, ஏரிகளில் உபரி நீர் கால்வாய்கள் இல்லாததால் பல மண்டலங்களில் வெள்ள அபாயம் அதிகரித்து உள்ளது. உபரி நீர்கால்வாய் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தப்படும். பெரும்பாக்கம் ஏரியில் உபரிநீர் கால்வாய்கள் அமைக்கும் பணி சவாலானது. அயனம்பாக்கம் ஏரிப்பகுதியில் போதிய கால்வாய்கள் இல்லை. முகப்பேர், பாடி, நொளம்பூர் பகுதிகளில் இருந்த குளங்கள் தற்போது இல்லை. இதுபோன்ற இடங்களில் கூடுதலாக மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்க வேண்டும் என்றார்.

    • கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தி சாகுபடி பணிகளுக்கு உதவி புரிந்து வருகிறது.

    உடுமலை :

    உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை கட்டப்பட்டு உள்ளது. அணையின் மூலமாக பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. பி.ஏ.பி தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படும் தண்ணீரும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் உருவாகும் காட்டாறுகள் மற்றும் பாலாறு, திருமூர்த்தி மலை ஆறு ஆகியவற்றின் மூலமாக மழை க்காலங்களில் பெறப்படும் தண்ணீரும் அணையின் நீராதாரங்க ளாகும்.அதைக் கொண்டு பாசனம் மற்றும் குடிநீருக்கு தண்ணீர் வினியோகம் நடைபெற்று வருகிறது. திருமூர்த்தி அணை பாசனத்தில் அம்மாபட்டி குளம், செங்குளம், தினைக்குளம், பெரியகுளம், ஒட்டுக்குளம், வளைய பாளையம் குளம், உள்ளிட்ட ஏழு குளம் பாசனம் வழங்கும்.இந்த குளங்கள் மூலமாக நேரடியாகவும் மறைமுக மாகவும் நீராதாரங்களை நீர்வரத்தைப் பெற்று நிலத்தடி நீர் இருப்பை உயர்த்தி சாகுபடி பணிகளுக்கு உதவி புரிந்து வருகிறது. இதனால் கடும் வறட்சி நிலவக்கூடிய கோடைகாலத்தில் கூட ஏழு குளம் பாசனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் விவசாயிகளால் சாகுபடி பணி மேற்கொள்ள ப்படுகிறது. அதன்படி தென்னை, வாழை, கரும்பு போன்ற நிலைத்து நின்று பலன் அளிக்கும் பயிர்களும் பரவலாக காய்கறிகள் சாகுபடியும் செய்யப்படுகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு நிலவிய கடும் வெப்பத்தின் காரணமாக திருமூர்த்தி அணை குறைந்தபட்ச நீர் இருப்புக்கே தள்ளாடி வருகிறது. ஆனால் அதன் மூலமாக நீர்வரத்தை பெற்ற 7 குளங்கள் போதுமான அளவு நீர் இருப்பைக் கொண்டு உள்ளது. இதனால் அவ்வப்போது பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்ப டுவதால் சாகுபடி பணிகளும் தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது. மேலும் குளத்தை ஆதாரமாகக் கொண்ட கிணறுகள் ஆழ்குழாய் கிணறுகளிலும், நிலத்தடி நீர் இருப்பு உள்ளது. வறட்சியின் கோரத்தாண்ட வத்திற்கு நீராதாரங்கள் பாதிக்கப்படும் சூழலில் கோடை காலத்தில் சாகுபடி பணிகளுக்கு கை கொடுக்கும் அளவிற்கு 7 குளங்களில் நீர்இருப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    • மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடரின் போது, பேரிடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது
    • 1,292 பிராணிகளை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில், திறந்தவெளி கிணற்றில் விழுந்து கடந்த மூன்றாண்டில் மட்டும் 336 பேர் இறந்துள்ளனர்.மழை, வெள்ளம், புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடரின் போது மக்களை பாதுகாக்கவும், முன்னெச்சரிக்கை நடவடி க்கை மேற்கொள்ளவும், பேரிடர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் நேரடி கண்காணிப்பில், அந்தந்த மாவட்டங்களில், பேரிடர் சார்ந்து மக்கள் எதிர்கொ ள்ளும் முக்கியமான பிரச்சினைகள் மீது நடவடிக்கை எடுக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கிராம,நகர்ப்புறங்களில் உள்ள குளம், குட்டைகளில் குளிக்க, மீன்பிடிக்க செல்லும் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பலர் நீரில் சிக்கி பலியாகின்றனர்.நெடுஞ்சாலை ஓரங்களில் திறந்து நிலையிலும், வேலி அமைக்கப்படாத கிணற்றிலும் தவறி விழுந்து பலரும் உயிரிழக்கின்றனர்.

    உயரும் பலி எண்ணிக்கை : கடந்த 2020ல் 104 பேர், திறந்தவெளி கிணறு, குளங்களில் விழுந்து இறந்துள்ளனர். 2021ல் 109 பேர்; 2022ல் 123 பேர் என மூன்றாண்டில் மட்டும் 336 பேர் பலியாகியுள்ளனர்.மாவட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்க ளுக்கு கடந்த 2020ல் குளம் மற்றும் கிணற்றில் தவறி விழுந்தவர்களை மீட்க கேட்டு 687 அழைப்புகள் வந்துள்ளன. 2021ல் இது 1,308,2022ல் இது 2032 அழைப்புகளாக அதிகரித்துள்ளது.இதில் 80 சதவீதம் அழைப்புகள் திறந்தவெளி கிணற்றில் விழுந்தவர்களை மீட்பது தொடர்பாக தான்.மனிதர்கள் மட்டுமின்றி பூனை, நாய், மான் உள்ளிட்ட பிராணிகளும் அவ்வபோது திறந்தவெளி கிணற்றில் விழுகின்றன.கடந்த 2020ல் 356, 2021ல், 846, கடந்த 2022ல், 1,292 பிராணிகளை தீயணைப்புத்துறையினர் மீட்டுள்ளனர்.

    • கடந்தாண்டு உடன்குடி வட்டார பகுதியில் அனைத்து குளங்களும் முழுமையாக நிறைந்தது.
    • குளம் குட்டைகளுக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் கடந்தாண்டு புதியதாக உருவாக்கப்பட்ட 10 குளங்கள்மற்றும் வழக்கமான குளங்கள் எல்லாம் முழுமையாக நிறைந்து கடலுக்கு கருமேனி ஆறு வழியாக தண்ணீர்சென்றது.

    இதனால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். இதைப்போல இந்த ஆண்டும் பருவமழை வரும், குளம், குட்டைகள் எல்லாம் நிரம்பும், விவசாய நிலங்கள் எல்லாம் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையில் விவசாயத்தை விறுவிறுப்பாக தொடங்கி விவசாய பணிகளை செய்தார்கள். ஆனால் மழையும் வரவில்லை, குளம் குட்டைகளுக்கு தண்ணீர் வரவும் இல்லை, இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இனியும் மழை வருமா? விவசாய நிலங்களில் கடல் நீர் மட்டம் ஊடுருவி தண்ணீர் எல்லாம் உப்பாக மாறிவிடுமோ? விவசாய பயிர்கள் காப்பாற்றப்படுமா? என்று கவலையில் உள்ளனர்.

    ×