என் மலர்
நீங்கள் தேடியது "மலர் கண்காட்சி"
- வருகிற 3, 4-ந்தேதிகளில் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் ‘கோடை விழா’ தொடங்குகிறது.
- வருகிற 23, 24, 25-ந்தேதி ஆகிய 3 நாட்கள் குன்னூரில் பழக் கண்காட்சி நடக்கிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா மற்றும் கோத்தகிரி நேரு பூங்கா ஆகியவை உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அந்த பூங்காக்களில் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர் செடிகளை பார்த்து மகிழ்ந்து செல்கின்றனர்.
ஏப்ரல்-மே மாதங்களில் கோடை சீசன் காலத்தில் மட்டும் நீலகிரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அப்போது அவர்களை மகிழ்விக்கும் வகையில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கோடை விழா நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் நூற்றாண்டு புகழ்பெற்ற மலர் கண்காட்சி உலக பிரசித்தி பெற்றது ஆகும்.
இந்நிலையில் இந்தாண்டு கோடை விழாவிற்காக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் தற்போது மும்முரமாக தயாராகி வருகின்றன. மேலும் கோடை விழா நிகழ்ச்சிகள் வருகிற 3, 4-ந்தேதிகளில் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சியுடன் 'கோடை விழா' தொடங்குகிறது.
தொடர்ந்து கூடலூரில் 9,10,11-ந்தேதி ஆகிய 3 நாட்கள் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டியில் 10,11,12-ந் தேதி ரோஜா கண்காட்சி ஆகியவை நடக்க உள்ளது.
மேலும் கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 127-வது மலர் கண்காட்சி வருகிற 16-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது. தொடர்ந்து வருகிற 23, 24, 25-ந்தேதி ஆகிய 3 நாட்கள் குன்னூரில் பழக் கண்காட்சி நடக்கிறது.
குன்னூர் காட்டேரி பூங்காவில் இம்முறை முதல்முறையாக மே 30-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை 3 நாட்கள் மலைப்பயிர்கள் கண்காட்சி நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.
இதன் தொடர்ச்சியாக மலர் கண்காட்சி நடைபெற உள்ள ஊட்டி தாவரவியல் பூங்காவில் 200-க்கும் மேற்பட்ட ரகங்களில் சுமார் 5.5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன.
இதுதவிர அலங்கார மாடங்களை அலங்கரிப்பதற்காக சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொட்டிகளில் பல்வேறு வண்ண மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு உள்ளன. இவை தற்போது பூக்க தொடங்கி உள்ளன.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் பூத்து குலுங்கும் பல வண்ண மலர்ச்செடிகள் அங்கு வரும் சுற்றுலா பயணிகளை வசீகரிப்பதாக அமைந்து உள்ளது. இதனால் அவர்கள் பூஞ்செடிகளுக்கு முன்பு குடும்பத்தினருடன் நின்று செல்பி எடுத்து உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
- ஆண்டுதோறும் அரசு சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
- காட்டேரி பூங்காவில் மே 30-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 3 நாட்கள் முதலாவது மலைப்பயிர்கள் கண்காட்சியும் நடைபெற உள்ளது.
ஊட்டி:
மலை மாவட்டமான நீலகிரியில் நிலவும் குளுகுளு சீசனை அனுபவிக்க கோடை காலத்தில் ஏராளமான சுற்றுலாபயணிகள் அங்கு குவிவது வழக்கம்.
அவ்வாறு நீலகிரிக்கு வரும் சுற்றுலாபயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் அரசு சார்பில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழக்கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான 127-வது மலர் கண்காட்சி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மே மாதம் 16-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை 6 நாட்கள் நடக்கிறது.
முன்னதாக கோத்தகிரியில் மே 3 மற்றும் 4-ந் தேதிகளில் 13-வது காய்கறி கண்காட்சியும், கூடலூரில் மே 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை 11-வது வாசனை திரவிய கண்காட்சியும், ஊட்டி அரசு ரோஜா பூங்காவில் மே 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை 20-வது ரோஜா கண்காட்சியும் நடைபெற உள்ளது.
குன்னூரில் மே 23-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை 65-வது பழக்கண்காட்சியும், காட்டேரி பூங்காவில் மே 30-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 3 நாட்கள் முதலாவது மலைப்பயிர்கள் கண்காட்சியும் நடைபெற உள்ளது.
இந்த தகவலை நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.
- ஆண்டுதோறும் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.
- இறுதியாக 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது.
கோவை,
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில், 11 ஆண்டுக்கு பின், மீண்டும் மலர் கண்காட்சியை வருகிற ஆகஸ்டு மாதம் நடத்த பல்கலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
முன்பு ஆண்டுதோறும் வேளாண் பல்கலைக்கழகம் சார்பில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். உள்நாட்டில் அனைத்து ரக மலர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் மலர்கள் வரவழைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும். இக்கண்காட்சியில் பல்வேறு அரிய மலர்களை காணமுடியும்.பல்கலைக்கழகத்தில் இறுதியாக 2012-ம் ஆண்டு ஜனவரி மாதம் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. மலர் கண்காட்சி நடத்துவதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து அந்நிகழ்ச்சிக்கு அப்போதைய துணைவேந்தர்கள் பெரிதாக ஆர்வம் காட்டாமல் நிறுத்தப்பட்டது.
தற்போது மீண்டும் மலர் கண்காட்சி பிரமாண்டமாக நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கவும், மலர்கள் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இக்கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக பல்கலைக்கழகத்தில் பல்ேவறு பணிகள் நடந்து வருகின்றன.
துணைவேந்தர் கீதா லட்சுமியிடம் கேட்டபோது பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்டு மாதம் மலர் கண்காட்சி நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன என்றார்.
- ‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது.
- கொடைக்கானலில் கோடை விழா வருகிற 26-ந்தேதி 60-வது மலர் கண்காட்சியுடன் தொடங்குகிறது.
கொடைக்கானல்:
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. இதையொட்டி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் கொடைக்கானலில் நடந்தது. இதற்கு ஆர்.டி.ஓ. ராஜா தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் பெருமாள்சாமி, உதவி இயக்குனர் சைனி, தோட்டக்கலை அலுவலர்கள் பார்த்தசாரதி, சிவபாலன், தாசில்தார் முத்துராமன், சுற்றுலா அலுவலர் சுதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆர்.டி.ஓ. ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
கொடைக்கானலில் கோடை விழா வருகிற 26-ந்தேதி 60-வது மலர் கண்காட்சியுடன் தொடங்குகிறது. இதில் 3 நாட்கள் மலர் கண்காட்சியும், 8 நாட்கள் கோடை விழாவும் நடைபெறுகிறது. அடுத்த மாதம் (ஜூன்) 2-ந்தேதி நிறைவு விழா நடைபெறுகிறது. மலர் கண்காட்சியினை தமிழக அமைச்சர்கள் இ.பெரியசாமி, அர.சக்கரபாணி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். விழாவில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர், பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். கோடை விழாவில் பல்வேறு பாரம்பரிய மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், படகு போட்டிகள், நாய் கண்காட்சி, படகு அலங்காரப் போட்டி ஆகியவை நடைபெற உள்ளது. விழா நடைபெறும் நாட்களில் பிரையண்ட் பூங்கா இரவு 7 மணி வரை திறந்து இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று ஊட்டி தாவரவியல் பூங்காவில் 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது.
- 200க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
ஊட்டி:
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தலமாகும். இங்கு தினந்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து கொண்டே இருப்பார்கள்.
குறிப்பாக கோடை சீசனுக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். அப்படி கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாகவும், பொழுதை போக்கும் விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு கண்காட்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கண்காட்சி கடந்த 6-ந் தேதி கோத்தகிரி நேருபூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து ரோஜா கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, படகு போட்டிகளும் நடத்தப்பட்டது.
கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று ஊட்டி தாவரவியல் பூங்கா வில் 125-வது மலர் கண்காட்சி தொடங்கியது. கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நீலகிரி எம்.பி. ஆ.ராசா ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர்.
நிகழ்ச்சியில் கலெக்டர் அம்ரித், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உள்பட அதிகாரிகளும் பங்கேற்றனர். இன்று தொடங்கிய கண்காட்சி வருகிற 23-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
மலர் கண்காட்சியையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் விதமாக பல ஆயிரம் கொய்மலர்களை கொண்டு 10 மலர் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகள் அலங்கார வளைவுகள் வழியாக சென்று மலர் கண்காட்சியை கண்டு ரசித்தனர்.
மலர் கண்காட்சிக்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஓரியண்டல் லில்லி, ஏசியா டிக் லில்லி, கேலஞ்சியோடு, இன்கா மேரிகோல்டு, பிரெஞ்சு மேரிகோல்டு, பிளாக்ஸ், பெட்டுனியா, சால்வியா, பெகோனியா, செம்பா, புளோரன்ஸ், கிரைசாந்திமம் மலர்கள் பூத்து குலுங்குகின்றன.
இதேபோல் நடைபாதை ஒரங்கள், மலர் பாத்திகளிலும் 200க்கும் மேற்பட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
இந்த ஆண்டு மலர் கண்காட்சியில் சிறப்பு அம்சமாக ஒரு லட்சம் கார்னேசன் மலர்களை கொண்டு 18 அடி உயரம், 40 அடி அகலத்தில் தேசிய பறவையான மயில் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது. குறிப்பாக குழந்தைகளை மிகவும் இந்த மயில் உருவம் கவர்ந்திழுத்தது. சுற்றுலா பயணிகள் அதன் முன்பு நின்று செல்பி புகைப்படம் எடுத்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர்.
இதுதவிர தமிழ்நாட்டின் மாநில சின்னங்களான வரையாடு, மரகதப்புறா, பனைமரம் போன்ற சிற்பங்களும் பல ஆயிரம் வண்ண மலர்களால் உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. பல வண்ண மலர் கோபுரங்களும் உருவாக்கப்பட்டு இருந்தது.
தாவரவியல் பூங்கா உருவாகி 175 ஆண்டுகள் ஆனதை நினைவு கூறும் வகையில், 175-வது ஆண்டு தாவரவியல் பூங்கா, 125வது மலர் கண்காட்சி என மலர்களால் உருவான வாசகங்களும் இடம் பெற்றிருந்தது.
சிறுவர்கள் குழந்தைகளை கவரும் வண்ணம் யானை, முயல், மயில் போன்ற வடிவங்களும் வடிவமைத்து இருந்தனர். ஊட்டியின் 200-வது வயதை கொண்டாடும் விதமாக ஊட்டி 200 சின்னம், மஞ்சப்பை விழிப்புணர்வு உருவம் என பலவகையான அலங்காரங்கள் பல ஆயிரம் வண்ண மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது.
இதுதவிர அரசுத்துறை மற்றும் தனியார்த்துறை சார்பில் அரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. பூங்காவுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் அனை வரும் கண்காட்சியில் இடம் பெற்ற மலர்களால் உருவான சிற்பங்களை கண்டு ரசித்ததுடன் புகைப்படமும் எடுத்து கொண்டனர்.
கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் அதிகளவில் திரண்டதால் ஊட்டியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் ஊட்டி முழுவதும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
- ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 21-ந்தேதி தொடங்கியது.
- இந்த நிலையில் கோடை விழா முடிந்தும் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
சேலம்:
ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி கடந்த 21-ந்தேதி தொடங்கியது. விழா வில், சுற்றுலா துறை, நகராட்சி நிர்வாகம், வேளாண்மைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கால்நடை பரா மரிப்புத்துறை, மீன்வ ளத்துறை உள்பட 42 துறைகள் சார்பில் அரங்கு கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும் ஏற்காடு பூங்காவில் 5 லட்சம் மலர்களை கொண்டு மலர் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் (28-ந்தேதி) வரை ஒரு வாரம் கோடை விழா, மலர் கண்காட்சி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் விழாவில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் கோடை விழா முடிந்தும் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு இடங்களில் இருந்து, குடும்பத்துடன் ஏற்காட்டுக்கு வருகின்றனர்.
கோடை விழாவிற்காக பூங்காவில் பல்வேறு பூக்களால் வடி வமைக்கப்பட்ட டிராகன் உருவம், பொன்னியின் செல்வன் கப்பல், முயல் உருவம், மலர் படுக்கை, மலர் வளையங்கள், செல்பி பாய்ண்ட், சங்க கால மலர்கள், குடில்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் பிரிக்கப்படாமல் அப்ப டியே உள்ளது. அதனை பார்வையிட சுற்றுலா பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் ஏற்காடு ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்கின்றனர். இன்று வேலை நாள் என்ற போதி லும் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கா னோர் குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தனர். இதனால் ஏற்காடு சுற்றுலா தலம் களை கட்டியது.
- நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி ஜூன் 3-ந்தேதி சென்னையில் இரண்டாவது முறையாக மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. ஜூன் 3-ந் தேதி தொடங்கி 5-ந் தேதி வரை 3 நாட்கள் செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
பெங்களூரு, ஊட்டி, ஓசூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் இருந்து 200- க்கும் அதிக வகையிலான மலர்களால் கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மலர் கண்காட்சிக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நுழைவு கட்டணமாக மாணவர்கள் மற்றும் சிறியவர்களுக்கு 20 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, சிங்கம், கரடி போன்ற சிற்பங்கள், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை விளக்கக்கூடிய வகையில் மலர் அலங்காரங்கள், இரண்டு சாதனைகளை விளக்கும் வகையில் அலங்காரங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- மலர்க் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் மட்டுமே 1 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்தனர்.
- சுற்றுலாபயணிகள் வருகை மூலம் ரூ.4 கோடியே 73 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது.
ஊட்டி:
சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு ஆண்டுதோறும் சுமார் 35 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். குறிப்பாக, கோடை சீசன் காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கோடை காலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலை துறை சார்பில் கோடை விழா நடத்தப்படுகிறது.
அதன்படி, இந்த ஆண்டு மே 6-ந் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் கோடை விழா ஆரம்பமானது. தொடர்ந்து, கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி, ஊட்டி ரோஜா பூங்காவில் 18-வது ரோஜா கண்காட்சி, தாவரவியல் பூங்காவில் 125-வது மலர்க் கண்காட்சி, குன்னூரில் பழக் கண்காட்சி ஆகியவை நடைபெற்றன.
மலர்க் கண்காட்சி நடைபெற்ற 5 நாட்களில் மட்டுமே 1 லட்சத்து 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்தனர். ரோஜா கண்காட்சியை 50 ஆயிரம் பேரும், பழக் கண்காட்சியை சுமார் 25 ஆயிரம் பேரும் கண்டு ரசித்துள்ளனர்.
தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறும் போது, இந்தாண்டு ஏப்ரல், மே ஆகிய இரு மாதங்களில் மட்டும் 8 லட்சத்து 61 ஆயிரத்து 214 சுற்றுலாபயணிகள் அரசு தாவரவியல் பூங்காவுக்கு வருகை தந்துள்ளனர். இதன் மூலம் ரூ.4 கோடியே 73 லட்சம் வருவாயாக கிடைத்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் 3 லட்சத்து 33 ஆயிரத்து 752 பேரும், மே மாத்தில் 3 லட்சத்து 97 ஆயிரத்து 283 பேரும், மலர் கண்காட்சியின் போது 1 லட்சத்து 30 ஆயிரத்து 179 சுற்றுலாபயணிகளும் வந்துள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 1 லட்சத்து 27 ஆயிரத்து 161 சுற்றுலாபயணிகள் அதிகம் வருகை தந்துள்ளனர் என்றனர்.
இந்நிலையில், சுமார் ஒரு மாதம் நடைபெற்ற கோடை விழா நேற்றுடன் நிறைவு பெற்றது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்வுக்கு கோட்டாட்சியர் துரைராஜ் தலைமை வகித்தார். பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனர்.
- 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம்.
- பாட்டி வடை சுடுவது போல் அமைக்கப்பட்டுள்ள மலர் சிற்பம் மிகவும் அருமையாக உள்ளது.
சென்னை:
கலைஞர் நூற்றாண்டையொட்டி சென்னையில் 2-வது முறையாக மலர் கண்காட்சி தோட்டக்கலை துறை சார்பில் ராதா கிருஷ்ணன் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் 3-ந்தேதி தொடங்கியது. இன்றுடன் கண்காட்சி நிறைவு பெறுகிறது.
நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு ஆகிய இடங்களில் கோடை விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடந்து வருகிறது. இதுபோல் சென்னையில் நடந்து வரும் இந்த கண்காட்சியை சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பார்வையிட்டு ரசித்தனர்.
கிருஷ்ணகிரி, கொடைக்கானல், கன்னியாகுமரி, மதுரை மலர்கள் எடுத்து வரப்பட்டு கண்காட்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டரை லட்சம் கொய் மலர்கள், 250 கிலோ உதிரி பூக்களால் தேர், யானை மற்றும் பல்வேறு வடிவங்களில் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். 5 முதல் 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு ரூ.20-ம், பெரியவர்களுக்கு ரூ.50-ம் வசூலிக்கப்படுகிறது. காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை கண்காட்சியை பார்வையிடலாம்.
கண்காட்சியில் தத்ரூபமாக கைத்தறி நெசவு செய்வது போன்றும், குயவர், வடை சுடுவது, அப்பளம் சுடுவது, வண்ணத்து பூச்சி வடிவங்கள், மயில், திண்பண்ட கடைகள், மலர்களிலே உருவான மாட்டு வண்டி, நகை பட்டறை, பிரமாண்ட அலங்கார வளைவு ஆகியவை முற்றிலும் காய்கறி, பழங்கள், மலர்களால் உருவாக்கப்பட்டது பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
நிறைவு நாளான இன்று காலையிலேயே பொதுமக்கள் திரண்டு வந்து கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர். கடைசிநாள் என்பதால் குழந்தைகளுடன் சாரை சாரையாக அணிவகுத்து வந்தனர். மலர் கண்காட்சியை இதுவரை 30 ஆயிரம் பேர் பார்வையிட்டு உள்ளனர்.
கண்காட்சியை பார்வையிட பள்ளிக்கரணையில் இருந்து குடும்பத்துடன் வந்த ரம்யா கூறியதாவது:-
மலர் கண்காட்சியை பார்வையிட கடைசி நாள் கூட்டம் அலைமோதும் என்பதால் காலையிலேயே வந்து விட்டோம். எனது குழந்தைகள் மிகவும் ரசித்து வருகின்றனர். ஒவ்வொன்றும் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. ஊட்டி, கொடைக்கானல், மலர் கண்காட்சி போல் உள்ளது.
கிருத்திகா (மடிப்பாக்கம்):-
இந்த கண்காட்சியை பார்வையிட எங்களது குழந்தைகள் தான் அதிகமாக ஆர்வம் காட்டினார்கள். காலையிலேயே இங்கு வந்து விட்டோம். மலர்களால் உருவாக்கப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளும், மயில் உருவமும் வெகுவாக கவர்ந்துள்ளது.
பாட்டி வடை சுடுவது போல் அமைக்கப்பட்டுள்ள மலர் சிற்பம் மிகவும் அருமையாக உள்ளது. கண்காட்சியை மேலும் நீட்டித்தால் ஏராளமான பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- காய்கறிகளால் வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் அரண்மனை
மைசூரு தசரா விழாவையொட்டி ஒவ்வொரு ஆண்டும் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. 11 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை 5 லட்சம் பேர் வரை கண்டு ரசித்து வருகிறார்கள். இந்த ஆண்டு 15-ந்தேதி (அதாவது நேற்று) முதல் வருகிற 25-ந்தேதி வரை தசரா மலர் கண்காட்சி நடக்கிறது. இந்தநிலையில் நேற்று தசரா மலர் கண்காட்சி மைசூரு நஜர்பாத் குப்பண்ணா பூங்காவில் தொடங்கியது. இந்த கண்காட்சியை மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா, ஸ்ரீவத்ஷா எம்.எல்.ஏ., ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
நஜர்பாத் குப்பண்ணா பூங்காவில் தோட்டக்கலை துறை சார்பில் பல்வேறு வடிவமைப்புகளில் மலர் கண்காட்சி ஏற்படுத்தி உள்ளது. இங்கு, 60 ஆயிரத்திற்கும் அதிகமான பூந்தொட்டிகளில் வைத்து வண்ண வண்ண செடிகள் வளர்க்கப்பட்டது. இந்த ஆண்டு பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் 24 அடி உயரத்திற்கு சந்திரயான்-3 விண்கலம் மற்றும் லேண்டர், ரோவர் 6 லட்சம் வெள்ளை, சிகப்பு ரோஜா பூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை
துர்கா தேவி சிலை, விநாயகர் சிலை, இந்தியா மற்றும் கிரிக்கெட் பேட், ஸ்டம்ப்ஸ், அரசு பஸ் ஜீப், அரசியலமைப்பு சாசன புத்தகம் பூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. காய்கறிகளால் வீடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் வண்ண வண்ண மலர்களால் பூக்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மலர் கண்காட்சி வடிவமைப்புக்காக 30 தனியார் தொழிற்சாலைகள், 41 தனியார் விடுதிகள், 13 அரசு அலுவலகங்கள், 22 கல்வி மையங்கள், 6 மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
5 நாட்களுக்கு ஒரு முறை பூக்கள் மாற்றப்படுகிறது. மழை பெய்தால் மாற்ற வேண்டிய தேவை இல்லை. வெயில் அடித்தால் மட்டுமே மாற்ற 5 நாட்களுக்கு ஒரு முறை பூக்களை மாற்ற வேண்டும். தசரா மலர் கண்காட்சி வருகிற 25-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 5 லட்சத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மல்யுத்த போட்டி
இதேபோல், தசரா கண்காட்சி அருகே உள்ள மைதானத்தில் நேற்று மல்யுத்த போட்டி தொடங்கியது. இந்த போட்டியை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த வீரர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டனர். இந்த போட்டியை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
மேலும், மைசூரு பழைய கலெக்டர் அலுவலகத்தின் பின்புறத்தில் உள்ள ஸ்கவுட் அண்ட் கைட் மைதானத்தில் உணவு மேளா தொடங்கியது. இதனை மந்திரி கே.எச்.முனியப்பா தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் பல்வேறு வகையான உணவு வகைகள் வைக்கப்பட்டிருந்தன.
புத்தக கண்காட்சி
மைசூரு பல்கலைக்கழகத்தின் எதிரே உள்ள ஓவல் மைதானத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மைசூரு தசரா கண்காட்சியை மந்திரி சிவராஜ் தங்கடகி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி 90 நாட்கள் வரை நடைபெற உள்ளது.
தசரா மின்விளக்கு அலங்காரம், ஜம்பு சவாரி ஊர்வலம் செல்லும் ராஜபாதை சயாஜி ராவ்ரோடு பச்சை (கிரீன்) மண்டபத்தில் மந்திரி கே.ஜே. ஜார்ஜ் தொடங்கி வைத்தார். மின்விளக்கு அலங்காரத்ைத பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள்.

மின்விளக்கு அலங்காரம்
மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் அரண்மனைக்கு மத்தியில் தசரா கலாசார நிகழ்ச்சியை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். அவர் சிறந்த சங்கீத வித்வான்களுக்கு கர்நாடக அரசின் சங்கீத வித்வான் விருது வழங்கி பாராட்டினார். பாட்டு கச்சேரி, பரதநாட்டியம், நடன நிகழ்ச்சிகள் இரவு 11 மணி வரை நடைபெற்றது. தசரா விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சி தொடங்கி நடந்து வருவதால் மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
- கலைவாணர் அரங்க வளாகத்திலேயே இந்த மலர் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.
- மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை:
சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள செம்மொழி பூங்காவில் இன்று (10-ந் தேதி) 12 லட்சம் பூக்களுடன் பிரம்மாண்ட மலர் கண்காட்சி தொடங்கியது.
சென்னையில் இதற்கு முன்பு 2 முறை மலர் கண்காட்சி நடை பெற்று உள்ளது. அப்போது கலைவாணர் அரங்க வளாகத்திலேயே இந்த மலர் கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த முறை இயற்கை சூழலில் செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சியை நடத்துவதற்கு தமிழக அரசின் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதன்படி இன்று (சனிக்கிழமை) செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்கியது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஊட்டி, கொடைக்கானல், மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து சுமார் 12 லட்சம் பூக்களை கொண்டு வந்து பிரமாண்டமான முறையில் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு 8 ஏக்கர் பரப்பளவில் செம்மொழி பூங்கா உருவாக்கப்பட்டது. அங்கு மலர் கண்காட்சிக்காக விதவிதமான பூக்களை கொண்டு பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. யானை, மயில், கொக்கு உள்ளிட்ட பறவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 18 வகையான உருவங்களை வைத்து உள்ளனர்.

இந்த மலர் கண்காட்சியை பொதுமக்கள் பார்ப்பதற்கு நுழைவு கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படும்.
இது தொடர்பாக தோட்டக்கலை துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, "இந்த மலர் கண்காட்சியை நிரந்தரமாக வைத்து பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கலாம் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். அது போன்று நிரந்தரமாக மலர் கண்காட்சியை செம்மொழி பூங்காவில் நடத்தினால் பொதுமக்கள் செம்மொழி பூங்காவுக்கு அதிக அளவில் வருவார்கள்" என்றனர்.
- 12 லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் பூங்கா முழுக்கவும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
- இதுவரை செய்யாத நடைமுறை என்பதால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்கள் மக்கள் பார்வைக்கு விருந்தளித்து வருகிறது.
சென்னை:
தமிழக அரசின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு மலர் கண்காட்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழி பூங்காவில் கடந்த 10-ந்தேதி தொடங்கியது.
12 லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு வடிவங்களில் பூங்கா முழுக்கவும் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. பல வண்ணங்களில், பல வகைகளில் மலர்கள் குறிப்பாக ரோஜா, துலிப், சாமந்தி என பல வகை பூக்கள் கண்களுக்கு விருந்தாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த இதய வடிவிலான மலர் அலங்கார வளைவை காணலாம்.
இந்த மலர் கண்காட்சியானது சென்னையில் புதிய முயற்சியாக, பூக்கும் பருவத்தில் இருந்த செடிகளை கொண்டு வந்து, அவை பூத்தபின் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. இதுவரை செய்யாத நடைமுறை என்பதால், நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக மலர்கள் மக்கள் பார்வைக்கு விருந்தளித்து வருகிறது.
அதோடு பூக்களை கொண்டு பல அலங்காரங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. யானை, அன்னப்பறவை, பொம்மை, ஆமை என்று உருவ அலங்காரங்களும். அதேபோல் சதுர தூண், இதய வடிவ தூண், மலர் பாதை என பல வகைகளில் அலங்காரத்துடன் இந்த மலர் கண்காட்சி அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று காலை முதலே மக்கள் அதிக அளவில் வர தொடங்கினர். இதனால் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த விதவிதமான மலர்களை கண்டு ரசித்தனர். மேலும் மலர்களுடன் 'செல்பி'களையும் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியும் அடைந்தனர்.
மலர் கண்காட்சியை பார்வையிட வருபவர்களை உற்சாகப்படுத்துவதற்காகவே அங்கு அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக மேடையில் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் நேற்றும் கலை நிகழ்ச்சி அரங்கேறியது. இதில் பொதுமக்கள் குறிப்பாக சிறுவர்-சிறுமிகள் பங்கேற்று ஆடிப்பாடி அசத்தினர்.

மலர் கண்காட்சியை பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்
அனைவரையும் கவர்ந்த இந்த கண்காட்சி நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. பெரியவர்களுக்கு ரூ.150-ம், சிறியவர்களுக்கு ரூ.75-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு 50 சதவீதம் கட்டண சலுகை இருக்கிறது. நேற்று ஒரு நாளில் மட்டுமே இக்கண்காட்சியை 30 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளதாகவும், இதுவரை சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.