என் மலர்
நீங்கள் தேடியது "கபடி போட்டி"
- திருச்சி சமது மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான கபடி போட்டிகள் கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
- விழாவிற்கு சமது பள்ளியின் தலைவர் டக்டர். ஏ.கே.காஜா நஜீமுதீன் தலைமை தாங்கினார்.
திருச்சி,
திருச்சி காஜா நகரில் உள்ள சமது மேல்நிலைப்பள்ளியின் ராக்சிட்டி சகோதயா-2022 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான கபடி போட்டிகள் கடந்த 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இவ்விழாவிற்கு சமது பள்ளியின் தலைவர் டக்டர். ஏ.கே.காஜா நஜீமுதீன் தலைமை தாங்கினார்.
சமது பள்ளியின் செயலாளரும், தாளாளருமான டக்டர். வி.எஸ்.ஏ.ஷேக் முஹம்மது சுேஹல் சிறப்பு விருந்தினராக கழந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். சமது பள்ளியின் பொருளாளர் ஏ.எஸ்.காஜாமியான் அக்தர், பள்ளியின் கல்வி இயக்குநர் ஏ.எம்.அப்துஸ் சலாம்,
பள்ளியின் நிர்வாக உறுப்பினர் எ.எம்.முகமது ஆஷிக், பள்ளியின் முதல்வர் டக்டர். சி.ஜெ.சாக்கோ, குட்ஷெப்பர்டு பள்ளியின் முதல்வர் டக்டர்.ஜாய் தாமஸ், பள்ளியின் துணை முதல்வர் மும்தாஜ் பேகம், மேலும் இப்போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரான சமது பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் டி.உமா மகேஷ்வரன் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். மேலும் அவர்கள் போட்டியில் பங்கேற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தி வாழ்த்தினர்.
- மாவட்ட அளவிலான கபடி போட்டி நடந்தது
- மாணவர்களுக்கு தலைமையாசிரியை பாராட்டு
வாணியம்பாடி:
திருப்பத்தூர் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டி ஜோலார்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளின் அணிகள் கலந்துக் கொண்டு விளையாடினர். திங்கள்கிழமை நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றனர்.
இதன் மூலம் திருவண்ணாமலையில் நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிக்கு தகுதிப் பெற்றனர்.
சாதனை படைத்த மாணவிகளை பள்ளி தாளாளர் மாறன், தலைமையாசிரியை சுகந்தி, ஆசிரியர்கள் அந்தோணி தாஸ், பிரசாத், இசைவாணி மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
- திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் சமது பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்தனர்
- சமது பள்ளியின் கபடி மாணவர்கள் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்
திருச்சி:
திருச்சி ராக்சிட்டி சகோதயா சார்பாக 2022 ஆம் ஆண்டிற்கான மாநில அளவிலான கபடி போட்டி கடந்த மாதம் 27, 28 ஆகிய தேதிகளில் திருச்சி காஜா நகர் சமது மேல்நிலைப்பள்ளியில் மூன்று பிரிவுகளாக நடைபெற்றது. இப்போட்டியில் மாநில அளவில 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் சமது பள்ளியின் கபடி மாணவர்கள் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் பெற்று சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு சமது பள்ளியின் தலைவர் டாக்டர். ஏ.கே.காஜா நஜிமுதீன் தலைமை தாங்கினார். சமது பள்ளியின் செயலாளரும், தாளாளருமான டாக்டர். வி.எஸ்.ஏ.ஷேக் முஹம்மது சுேஹல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
மேலும் சமது பள்ளியின் பொருளாளர் ஏ.எஸ்.காஜாமியான் அக்தர், பள்ளியின் கல்வி இயக்குநர் ஏ.எம்.அப்துஸ் சலாம், பள்ளியின் நிர்வாக உறுப்பினர் எ.எம்.முகமது ஆஷிக், பள்ளியின் முதல்வர் டாக்டர். சி.ஜெ.சாக்கேர், காவேரி குளோபல் பள்ளியின் முதல்வர் எம்.சரஸ்வதி, பள்ளியின் துணை முதல்வர் ஜெ.மும்தாஜ் பேகம் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.
இப்போட்டிகளின் ஒருங்கிணைப்பாளரான சமது பள்ளியின் உடற்கல்வி இயக்குநர் டி.உமா மகேஷ்வரன் மற்றும் எஸ்.ஸ்ரீராம் ஆகிேயார் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.
- பள்ளபாளையம் கார்த்திக் நினைவாக நேதாஜி பெருமாள் பிரதர்ஸ் மற்றும் அலை ஓசை நண்பர்கள் சார்பில் தொடர் கபடி போட்டி நடைபெற்றது.
- மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சி.மகேந்திரன் துவக்கி வைத்தார்.
உடுமலை :
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை ஒன்றியம், பள்ளபாளையம் கார்த்திக் நினைவாக நேதாஜி பெருமாள் பிரதர்ஸ் மற்றும் அலை ஓசை நண்பர்கள்சார்பில் தொடர் கபடி போட்டி நடைபெற்றது.
போட்டியை மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சி. மகேந்திரன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உடுமலை தெற்கு ஒன்றிய செயலாளர் த. போகநாதன், தளி பேரூர் செயலாளர் ராமலிங்கம், பள்ளபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் நந்தக்குமார் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
- 50 அணிகள் பங்கேற்ற கபடி போட்டி
- ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே உள்ள கல்லுட்டை கிராமத்தில் முதலாம் ஆண்டு மாபெரும் கபடிப்போட்டி நடைப்பெற்றது.
இதில் அண்டை மாநிலம் உட்பட வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திருப்பத்தூர், சென்னை ஆகிய மாவட்டத்தில் இருந்து சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட அணிகள் கலந்துக்கொண்டன.
5 பிரிவுகளாக, 2 நாட்களாக நடைபெற்ற போட்டி இன்று காலை நிறைவடைந்தது. இதில் சிறப்பாக விளையாடி வெற்றிப்பெற்ற சிறந்த அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.
மேலும் விளையாட்டின் முடிவில் முதலாவது பரிசாக 9அடி கோப்பையை ஏரியூரை சேர்ந்த ஜெய் அணுமான் அணியும், 2-வது பரிசாக 8 அடி கோப்பை மற்றும் ரொக்கப்பணத்தை வாணியம்பாடி அணியும் தட்டிச்சென்றது.
இதனைத்தொடர்ந்து சுமார் 20 அணிகள் வெற்றிப்பெற்று கோப்பையும் ரொக்க பணத்தையும் தட்டிச்சென்றனர்.
2 நாட்களாக விறுவிறுப்பாக நடைப்பெற்ற ஆட்டத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கபடி ரசிகர்கள் என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
- மாநில கபடி போட்டியில் முதலிடம் பிடித்த அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
- கலெக்டரை சந்தித்து பாராட்டு பெற்றனர்
அரியலூர்:
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் பாரதியார் தின விளையாட்டு போட்டிகளில் 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான மாநில அளவிலான கபடி போட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் சமீபத்தில் நடந்தது. இதில் அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அணி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் மற்றும் கோப்பையை வென்றனர். பின்னர் அந்த அணி வீராங்கனைகள் நேற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதியை சந்தித்து பாராட்டு பெற்றனர். அப்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, பள்ளி தலைமை ஆசிரியர் வினோத்குமார், உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
- ஜெயலலிதா நினைவு நாள் கபடி போட்டி நடந்தது.
- பாகனேரிசரவணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியை அடுத்துள்ள ஏரியூர் கிராமத்தில் அ.தி.மு.க. இளைஞர் இளம்பெண் பாசறை மாவட்ட செயலாளர் ஆபரத்தனபட்டி பிரபு, சிங்கம்புணரி ஒன்றிய தலைவர் திவ்யாபிரபு ஏற்பாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கபடி போட்டி நடந்து வருகிறது. இதில் சிவகங்கை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அனிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.15 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.12 ஆயிரம், 3, 4-ம் பரிசாக தலா ரூ.8 ஆயிரம் ரொக்கமும், அம்மா நினைவு கோப்பைகளும் வழங்கப்பட உள்ளன. இந்த போட்டியை மாவட்ட செயலாளரும், சிவகங்கை எம்.எல்.ஏ.வுமான செந்தில்நாதன் தொடங்கி வைத்தார். 2 நாட்கள் போட்டி நடக்கிறது. தொடக்க நிகழ்வில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜா, மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் அருள்ஸ்டிபன், வழக்கறிஞர் மணிமாறன், பாகனேரிசரவணன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- 20-க்கும் மேற்பட்ட கோப்பை, பரிசுகள் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
ஒடுகத்தூரில் ஸ்ரீ முனீஸ்வரன் ஆலய கும்பாபிஷேகம விழாவை முன்னிட்டு மாபெரும் கபடிப்போட்டி நடைப்பெற்றது. இதில் வெற்றிப்பெற்ற அணிகளுக்கு பரிசுகள் கோப்பைகள் வழங்கப்பட்டன.
ஒடுகத்தூரில் உள்ள ஸ்ரீ மகா முனீஸ்வரன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ளது. உதனைத் தொடர்ந்து 2 நாட்களாக மாபெரும் கபடிப்போட்டி நடைப்பெற்றது.
இதில் அண்டை மாநிலம் உட்பட வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திருப்பத்தூர், சென்னை ஆகிய மாவட்டத்தில் இருந்து சுமார் 50-க்கும் மேற்ப்பட்ட அணிகள் கலந்துக்கொண்டன.
இதில் 5 பிரிவுகளாகவும், 2 நாட்களாக நடைபெற்ற போட்டியானது நேற்று மாலை முடிவுக்கு வந்தது. இதில் சிறப்பாக விளை யாடி வெற்றிப்பெற்ற சிறந்த அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகளும், கோப்பைகளும் வழங்கப்பட்டது.
மேலும் விளையாட்டில் முடிவில் முதலாவது பரிசாக 10 அடி கோப்பையை மற்றும் 10 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் ஏரியூரை சேர்ந்த ஜெய் அணுமான் அணியும், 2-வது பரிசாக 9 அடி கோப்பை மற்றும் 8 ஆயிரம் ரொக்கப்பணத்தை வாணியம்பாடி அணியும் தட்டிச்சென்றது.
இதனைத்தொடர்ந்து சுமார் 20 அணிகள் வெற்றிப்பெற்று கோப்பையும் ரொக்க பணத்தையும் தட்டிச்சென்றனர்.
2 நாட்களாக விறுவி றுப்பாக நடைப்பெற்ற ஆட்டத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் கபடி ரசிகர்கள் என சுமார் ஆயி ரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.
- ஜூனியர் பெடரேசன் கோப்பை ஆண்கள்-பெண்கள் கபடி போட்டி நடந்தது.
- போட்டிகளில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு தங்குமிடம், உணவு வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
மதுரை
உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்யும் வகையில் ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டிகள் மதுரையில் 3 நாட்கள் நடக்கிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா, செயலாளர் சபியுல்லா, பொருளாளர் சண்முகம் ஆகியோர் கூறியதாவது:-
6-வது ஜூனியர் பெட ரேஷன் கோப்பைக்கான ஆண்கள், பெண்கள் கபடி போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நாளை (1-ந்தேதி) முதல் 3-ந் தேதி வரை நடைபெறுகிறது. நாளை மாலை 4 மணி அளவில் செல்லூர் ரவுண்டானா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கபடி வீரர்கள் சிலை முன்பிருந்து வீரர் -வீராங்கனை களின் அணிவகுப்பு நடைபெறுகிறது.
இந்த அணி வகுப்பினை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மேயர் இந்திராணி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்கள். தொடர்ந்து முதல் நாள் கபடி போட்டி நடைபெறுகிறது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக விளையாட்டு மேம்பாட்டு துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜித் சிங், கலந்து கொள்கிறார்கள்.
2-ந்தேதி 2-ம் நாள் போட்டிகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்கள். கடைசி நாளாக 3-ந் தேதி போட்டி களை தளபதி எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு அமைச்சர் மூர்த்தி பரிசுகள், மற்றும் சான்றிதழ்கள் வழங்குகிறார்.
மதுரையில் நடைபெறும் இந்த கபடி போட்டிகளில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், இந்திய விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யம், பீகார், மராட்டியம், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய அணி களும், பெண்கள் பிரிவில் அரியானா, பீகார், இமாச்சலப்பிரதேஷ், இந்திய விளையாட்டு ஆணையம், தெலுங்கானா, மராட்டியம், சண்டிகார், மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய அணிகளும் மோதுகின்றனர்.
இந்த போட்டிகளை காண பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி வழங்கப்ப டுகிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு ஊக்க தொகையாக முதல் பரிசு ரூ.50 ஆயிரம், 2-வது பரிசு ரூ.30 ஆயிரம், 3-ம் பரிசு ரூ.20 ஆயிரம் வழங்கப்படு கிறது.
இந்த போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் அணி வீரர்கள் வருகிற பிப்ரவரி மாதம் 26-ந் தேதி ஈரானில் நடைபெறும் உலக கோப்பை கபடி போட்டிக்கான இந்திய ஆண்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். போட்டிகளில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு தங்குமிடம், உணவு வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- மதுரையில் ஜூனியர் பெடரேஷன் கபடி போட்டி நடந்தது.
- அரியானா ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு சாம்பியன் கோப்பை இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது.
மதுரை
உலககோப்பைக்கான இந்திய கபடி அணியை தேர்வு செய்யும் வகையில் தேசிய அளவிலான 6-வது ஜூனியர் பெடரேஷன் கோப்பைக்கான கபடி போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் கடந்த 1-ந் தேதி தொடங்கி 3-ந் தேதி வரை நடந்தது.
இதில் ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான், அரியானா, சண்டிகார், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பீகார், மராட்டியம், டெல்லி, மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய 9 அணிகளும், பெண்கள் பிரிவில் அரியானா, பீகார், இமாச்சலப்பிரதேசம், இந்திய விளையாட்டு ஆணையம், தெலுங்கானா, மராட்டியம், சண்டிகர், மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய 9 அணிகளும் கலந்து கொண்டன.
லீக் போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடித்த அணிகள் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 2 நாட்களாக நடந்த லீக் சுற்று முடிவில் ஆண்கள் பிரிவில் அரியானா, ராஜஸ்தான், சண்டிகார், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகிய அணிகள் தகுதி பெற்றன. பெண்கள் பிரிவில் அரியானா, பீகார் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
நேற்று காலை ஆண்களுக்கான அரை இறுதி போட்டி நடந்தது. இதில் அரியானா அணி ராஜஸ்தான் அணியை 40- 37 என்ற புள்ளி கணக்கில் வென்றது. மற்றொரு போட்டியில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி சண்டிகார் அணியை 60- 42 என்ற புள்ளிகளை வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதின.
இறுதி போட்டிகளை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் அரியானா அணி, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியை 47-40 என்ற புள்ளிக்கணக்கில் வென்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
பெண்களுக்கான இறுதிப்போட்டியில் அரியானா அணி, இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணியை 40-33 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
இறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்ற அரியானா மாநில ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு தமிழ்நாடு அெச்சூர் கபடி கழக தலைவர் சோலைராஜா, செயலாளர் சபியுல்லா, பொருளாளர் சண்முகம், உள்ளிட்ட பலர் வெற்றிக்கோப்பை மற்றும் பரிசுத்தொகைகளை வழங்கினர்.
ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் சிறப்பாக ஆடிய வீரர்கள் வருகிற பிப்ரவரி மாதம் 26-ந்தேதி ஈரானில் நடைபெறும் உலகக்கோப்பை கபடி போட்டிக்கான இந்திய ஆண்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் நடந்தது
- 750 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகள் நான்கு நாட்கள் நடைபெறுகிறது முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் மூன்றாம் பரிசாக 50,000 உள்ளிட்ட பல்வேறு ரொக்க பரிசுகளும் கோப்பைகளும் வழங்கப்படுகிறது.
தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகளில் தென்னிந்திய அளவில் மிகச்சிறந்த அணிகளான ஆண்கள் பிரிவில் சென்னை வருமான வரித்துறை, திருச்சி தமிழ்நாடு போலீஸ், சென்னை சிட்டி போலீஸ், ஹைதராபாத் ஆர்டிஐ, பெங்களூர் மெட்ராஸ் என்ஜினியரிங் குரூப்ஸ் ராணுவ அணி, ஜே கே அகாடமி கேரளா, எஸ் ஆர் எம் பல்கலைக்கழகம், வேல்ஸ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மிகச்சிறந்த ஆண்கள் அணியும், பெண்கள் பிரிவில் ஒட்டன்சத்திரம், அந்தியூர் சக்தி பிரதர்ஸ், பெங்களூர் நேஷனல் ஸ்போர்ட்ஸ், சென்னை பிரண்ட்ஸ் உள்பட 25க்கும் மேற்பட்ட சிறந்த அணிகள் என மொத்தம் 750 க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
- தென்னிந்திய அளவிலான போட்டி குடியாத்தத்தில் நடந்தது
- பெண்கள் பிரிவில் ஒட்டன்சத்திரம் அணி முதலிடம் பெற்றது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த எர்த்தாங்கல் கிராமத்தில் தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகள் 4 நாட்கள் நடைபெற்றது.
இந்த தென்னிந்திய அளவிலான கபடி போட்டிகளில் தென்னிந்திய அளவில் மிகச் சிறந்த 44 கபடி அணிகள் ஆண்கள் பிரிவிலும், பெண்கள் பிரிவில் 28 சிறந்த அணிகள் என மொத்தம் 72 அணிகள் பங்கேற்றன. 1000-க்கும் மேற்பட்ட வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
மேலும் வெளிமாநிலங்களில் இருந்து கலந்து கொள்ளும் இந்த கபடி அணிகளில் புரோ கபடி லீக்கில் விளையாடிய வீரர்களும் வீராங்கனைகளும் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.
இந்த தென்னிந்திய கபடி போட்டிகள் தொடக்க விழா வியாழக்கிழமை இரவு தொடங்கி 4 நாட்கள் நடைபெற்றது.
நேற்று காலையில் பெண்கள் பிரிவில் இறுதிப் போட்டிகளை தி.மு.க. மாவட்ட செயலாளர் ஏ.பி. நந்தகுமார் எம்.எல்ஏ. தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமலு விஜயன் எம்.எல்ஏ. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம், நகர் மன்ற தலைவர் சவுந்தரராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றது நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் கேரளா காசர்கோடு ஜேகே அகடமி, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகமும் மோதின பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் கேரளா ஜேகே அகடமி அணி வெற்றி பெற்றது. சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகம் இரண்டாம் இடம் பெற்றது பெங்களூர் மதராஸ் என்ஜினீயரிங் குரூப்ஸ் ராணுவ அணியும் அளந்தகரை ஏ டூ இசட் அணியும் கூட்டாக 3-ம் இடம் பெற்றது.
பெண்கள் பிரிவில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த சண்முகா மெமோரியல் வெண்ணிலா கபடி குழு அணி முதல் இடமும், அந்தியூர் சக்தி பிரதர்ஸ் இரண்டாம் இடமும், மூன்றாம் இடம் கூட்டாக நெல்லை பாரதி ஸ்போர்ட்ஸ் கிளம்பும் சென்னை சிட்டி போலீஸ் அணியும் பெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு குடியாத்தம் ஒன்றிய குழு துணை தலைவரும் ஊர் பெரிய தனக்காரமான அருண்முரளி தலைமை தாங்கினார்.ஊர் கவுண்டர் ராமன், தர்மகர்த்தா ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் பழனி, ஊராட்சி மன்ற தலைவர் அம்மு, பார்த்திபன், சுரேஷ்குமார் உள்பட ஊர் முக்கிய பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற கேரளா ஜிகே அகாடமி அணிக்கு ஒரு லட்ச ரூபாயும் கோப்பையும் வழங்கினார். 2-ம் இடம் பெற்ற வேல்ஸ் பல்கலைக்கழகம் அணிக்கு கோப்பையும் 75 ஆயிரம் வழங்கினார்.
பெண்கள் பிரிவில் முதலிடம் பெற்ற சண்முகா மெமோரியல் வெண்ணிலா கபடி குழு அணிக்கு 50 ஆயிரம் ரூபாயும் கோப்பையும், இரண்டாம் பரிசு பெற்ற அந்தியூர் சக்தி பிரதர் அணிக்கு 30 ஆயிரம் கோப்பையும் வழங்கினார்கள். மற்றும் கலந்து கொண்ட பரிசு பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசு, கோப்பைகளும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேர்ணாம்பட்டு ஒன்றிய குழு தலைவர் சித்ரா ஜனார்தனம், திமுக ஒன்றிய செயலாளர் கள்ளூர்ரவி, வேலூர் மாவட்ட கபடி கழக நிர்வாகிகள் பூஞ்சோலை சீனிவாசன், சீவூர்சேட்டு, ஞானசேகரன்உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கபடி கழக நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும், விழா குழுவினரும் செய்திருந்தனர். தென்னிந்திய அளவிலான ஆண்கள், பெண்கள் கபடி போட்டிகளை காண சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் திரண்டு இருந்தனர். குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.