என் மலர்
நீங்கள் தேடியது "பெண் சாவு"
- திருமண மண்டபம் அருகில் நடந்து வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது வேகமாக மோதியது.
- வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மனைவி செல்வி (வயது 36). இவர் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் நடந்து வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் இவரின் மீது வேகமாக மோதியது. இதில் செல்வி தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்தார். இதனை அக்கம்பக்கம் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக செல்வியை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார். இது குறித்த தகவல் அறிந்த திருநாவலூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.
- தமிழ்செல்வி அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது உடலில் தனக்கு த்தானே மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து எரிந்து கொண்டிருந்தது.
- சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வி பரிதாபமாக இறந்தார்.
அந்தியூர்:
அந்தியூர் மாரியப்பா வீதி பகுதியை சேர்ந்த மெய்யரசன் (வயது 24). தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகின்றார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை தனது தாய் தமிழ்ச்செல்வி உடன் வசித்து வருகின்றார்.
இவரது தந்தை கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி க்கு கடந்த 3 வருடத்திற்கு முன்பு உடல்நலம் சரியில்லாததால் மருத்துவ மனைக்கு சென்று சரி செய்து மருந்து மாத்திரை கள் சாப்பிட்டு வந்ததார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மூச்சு திணறல் ஏற்பட்டதால் கோவையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று மாத்திரைகள் உட்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு மெய்யரசன், தாய் தமிழ்செல்வி இருவரும் உறங்க சென்றனர். அதிகாலை 5 மணி அளவில் வீட்டிற்கு வெளியே தமிழ்செல்வி அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது உடலில் தனக்கு த்தானே மண்எண்ணையை ஊற்றி தீ வைத்து எரிந்து கொண்டிருந்தது.
உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தமிழ்செல்வியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மெய்யரசன் கொடுத்த புகாரின் பேரில் அந்தியூர் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது.
- சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக குட்டையம்மாள் உயிரிழந்தார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ள கொங்குவேம்பு பாரதி புரம் பகுதியை சேர்ந்தவர் குட்டையம்மாள் (வயது45). இவர் கடந்த 25-ந்தேதி அன்று ஊத்தங்கரை -அரூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது காளியம்மன் கோவில் அருகில் வந்த போது அந்த வழியாக வந்த பைக் எதிர்பாராதவிதமாக இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அவர் அரூர் அரசு மருத்துவனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவைனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக குட்டையம்மாள் உயிரிழந்தார்.
இது தொடர்பாக அரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று செல்வி ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.
கோபி:
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கரட்டடிபாளையம் புது காலனியை சேர்ந்தவர் துரைராஜ். கூலி தொழிலாளி. இவரது மனைவி செல்வி (47).
சம்பவத்தன்று செல்வி ஈரோடு-சத்தி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த செல்வியை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செல்விக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் .
- நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இறந்தார்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தென்செட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்த பார்வதி (வயது 55) இவருக்கு செல்வி (28) என்ற மகள் உள்ளதாக கூறப்படுகிறது.கடந்த 5 வருடங்களாக தாய் பார்வதியுடன் வசித்து வருவதாகவும் செல்விக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும் என கூறப்படுகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் திடீரென்று செல்விக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் பாண்டிச்சேரியில் உள்ள அரசு பொது ஆஸ்பத்தி ரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக இருந்தார். இது குறித்து தாய் பார்வதி கொடுத்த புகாரின் ேபரில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அரசாயி அரசாயி வயல்வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
- அருந்து கிடந்த மின்கம்பியின் மீது எதிர்பாராத விதமாக அரசாயி மிதித்தார்.
கடலூர் :
வடலூர் அருகே பெரிய கோவில்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி அரசாயி (வயது 40) இந்நிலையில் நேற்று மாலை அரசாயி வயல்வெளியில் மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாட்டின் கன்று குட்டி அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தது. அந்த கன்று குட்டியை பிடிக்க அரசாயி சென்றார்.
அப்போது வயல்வெளியில் அருந்து கிடந்த மின்கம்பியின் மீது எதிர்பாராத விதமாக அரசாயி மிதித்தார். இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதனை அருகில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அரசாயி உடலை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து நெய்வேலி டவுன்ஷி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இவர் இன்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்த துணிகளை காய வைப்பதற்காக மெத்தைக்கு எடுத்து சென்றார்.
- இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் புகார்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
விழுப்புரம்:
விக்கிரவாண்டி அருகே கப்பியாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு ராஜேந்திரன் இவருடைய மனைவி சரோஜா (வயது 53). இவர் இன்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்த துணிகளை காய வைப்பதற்காக மெத்தைக்கு எடுத்து சென்றார். அப்பொழுது படிக்கட்டில் இருந்த மின்சார எர்த் ஒயர் மீது கால் பட்டு மின்சாரம் தாக்கியதில் மயங்கி கீழே விழுந்தார் உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தார். இது தொடர்பாக விக்கிரவாண்டி போலீசார் புகார்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- மகன் ஹரிஹரனுடன் வீட்டில் இருந்தபோது கடந்த 10 -ந் தேதி இரவு மெழுகுவர்த்தி சரிந்து ஓலையில் தீ பிடித்தது.
- படுகாயமடைந்த ஷீலாவை சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
கன்னியாகுமரி:
தென்தாமரை குளம் அருகே உள்ள வடக்கு தாமரைக்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கர நாராயணன்.
இவர் கேரளாவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஷீலா (வயது 52) மகன் ஹரிஹரனுடன் வீட்டில் இருந்தபோது கடந்த 10 -ந் தேதி இரவு மெழுகுவர்த்தி சரிந்து ஓலையில் தீ பிடித்தது.
இதில் படுகாயமடைந்த ஷீலாவை சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து அவரது மகன் ஹரிஹரன் கொடுத்த புகாரின் பேரில் தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.
- அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் சக்கனப்பள்ளிப் பகுதியை சேர்ந்தவர் சக்தி, இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 30). இவர்களது மகன் சுஜித்குமார் (12).
சக்தி தனது மனைவி மற்றும் மகனுடன் தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
சுண்டம்பட்டி என்ற இடத்தருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த விஜயலட்சுமி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சக்தி, சுஜித்குமார் இருவருக்கும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.
- அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் சக்கனப்பள்ளிப் பகுதியை சேர்ந்தவர் சக்தி, இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 30). இவர்களது மகன் சுஜித்குமார் (12).
சக்தி தனது மனைவி மற்றும் மகனுடன் தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி-சென்னை சாலையில் சென்று கொண்டிருந்தார்.
சுண்டம்பட்டி என்ற இடத்தருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த விஜயலட்சுமி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
சக்தி, சுஜித்குமார் இருவருக்கும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கவுரம்மா, மாட்டினை பழுதடைந்த கட்டிடத்திற்கு அருகே கட்ட முயன்றார்.
- ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கவுரம்மா பரிதாபமாக உயிரிழந்தார்.
ஓசூர்,
ஓசூர் அந்திவாடியை சேர்ந்த கூலி தொழிலாளி நஞ்சுண்டப்பா என்பவரது மனைவி கவுரம்மா (வயது 38). இவர்கள் வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
ஓசூரில் நேற்று காலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்து வந்த நிலையில், அந்திவாடி பகுதியில் விவசாய நிலத்திற்கு அருகில் உள்ள ஒரு தனியார் லே அவுட்டில் பசு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்ற கவுரம்மா, மாட்டினை பழுதடைந்த கட்டிடத்திற்கு அருகே கட்ட முயன்றார்.
அப்போது அந்த கட்டிடத்தில் துண்டிக் கப்படாத மின் மீட்டர் மூலம் நிலத்திற்கு அமைக்கப் பட்டுள்ள எர்த் வயரை எதிர்பாராத விதமாக தொட்டதில் அவர் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கவுரம்மா பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடலை மத்திகிரி போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி அன்று பாரதிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது.
- அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளி அடுத்துள்ள ராமசந்திரம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மனைவி பாரதி (வயது29). இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த 24-ந்தேதி அன்று பாரதிக்கு வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் பதறி போன குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பாரதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.