என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குண்டம் திருவிழா"

    • பக்தர்கள் பலர் கைக்குழந்தையுடனும் குண்டம் இறங்கினர்.
    • மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்ததும், கொங்கு மண்டலத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்களில் ஒன்றுமாகிய பெருமாநல்லூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா சகுனம் கேட்டல் நிகழ்ச்சியுடன் கடந்த மார்ச் மாதம் 11-ந்தேதி தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை 4 மணிக்கு தொடங்கியது. இதில் திருப்பூர், ஈரோடு, கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டில் பிற பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, இங்கு வந்து பக்தி பரவ சத்துடன் குண்டம் இறங்கினர்.


    ஓம் சக்தி, ஓம் காளி கோஷம் விண்ணதிர பக்தர்கள் பலர் கைக்குழந்தையுடனும் குண்டம் இறங்கினர். முன்னதாக நேற்று இரவே லட்சக்கணக்கான பக்தர்கள் பெருமாநல்லூர் வந்து குவிந்தனர்.

    பிற்பகல் 11 மணிக்கு குண்டம் மூடப்பட்டது. பின்னர் சிறப்பு அபிஷேக பூஜை, அம்மன் யாழி வாகனத்தில் திருத்தேர் எழுந்தருளல், மண்டபக்கட்டளை, மிராசுதாரர்களுக்கு மரியாதை செலுத்துதல், தேங்காய் வழங்குதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது.

    மாலை 3.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு ள்ளனர்.

    நாளை 9-ந்தேதி முதல் காலை , இரவு அபிஷேகம், தீபாராதனை, அம்மன் வீதி உலா, மண்டபக்கட்டளை நடக்கிறது. 12-ந்தேதி காலை 11 மணிக்கு மகாதரிசனம் , அம்மன் புறப்பாடு, கொடி இறக்கம், மண்டபக்கட்டளை யுடன் விழா நிறைவடைகிறது.

    • கடந்த 24-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது.
    • அம்மன் படைக்களம் மற்றும் சப்பரம் குண்டத்தில் இறங்கியது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மைசூர் நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்து உள்ளது உலகப் புகழ் பெற்ற பண்ணாரியம்மன் திருக்கோவில்.

    இக்கோவிலுக்கு ஈரோடு திருப்பூர் கோவை நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மற்றும் அண்டை மாநிலமான கர்நாடகா கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் குண்டம் விழா சிறப்பாக நடந்து வருகிறது. அதன் படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த 24-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்ப ரத்தில் பண்ணாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் சுற்று வட்டாரத்தில் இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று திருவீதி உலா நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து 1-ந் தேதி அம்மன் சப்பரம் கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அதிகாலை நிலக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தினமும் பல்வேறு மலைவாழ் மக்கள் தாைர தப்பட்டை மீனாட்சி வாத்தி யத்துடன் அம்மன் பாரம்ப ரிய புகழ்பாடி களியாட்டமும் கம்பம் ஆட்டமும் நடை பெற்றது.

    தொடர்ந்து அபிஷேக அலங்கார பூஜையும் காலை குண்டத்திற்கு தேவையான வேப்பம் ஊஞ்ச மர கரும்பு வெட்ட செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று இரவு குண்டத்திற்கு விறகுகள் அடுக்கும் பணியும் இரவு 8 மணிக்கு குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அக்னி இடப்பட்டு குண்டம் வளர்க்கப்பட்டது.


    அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணிக்கு சகல வாத்தியங்களுடன் தெப்பக்குளம் சென்று அடைக்கலம் உடன் பண்ணாரியம்மன் சருகு மாரியம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    மேலும் குண்டத்திற்கு இடப்பட்ட நெருப்பினை சிக்கரசம்பாளையம் இக்கரை நகமும் புதூர் மற்றும் வெள்ளியம்பாளை யம் கிராமங்களைச் சேர்ந்த ஊர் பெரியவர்கள் மூங்கில் கரும்புகளால் தட்டி நெருப்பினை சீராக பரப்பி 15 அடி நீளமும் பத்தடி அகலத்தில் குண்டத்தை தயார் செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து குண்டத்தை சுற்றியும் மலர்களை தூவி கற்பூரங்களை ஏற்றி சிறப்பு வழிபாடு பூஜைகள் செய்யப்பட்டது.


    இதையடுத்து சரியாக இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணி அளவில் கோவில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து அம்மன் படைக்களம் மற்றும் சப்பரம் குண்டத்தில் இறங்கியது.

    பின் வரிசையில் காத்தி ருந்த பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்ட னர். இதில் ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், போலீசார் மற்றும் அரசியல் கட்சியினர், சிறுவர், சிறுமி கள் உள்ளிட்ட லட்சக்க ணக்கான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி பண்ணாரி மாரியம்மனை வழிபட்டனர்.

    அப்போது பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்து தாயே.. பண்ணாரி, அம்மா... காவல் தெய்வமே.. எங்களை காக்கும் தெய்வமே... என பக்தி கோஷம் மிட்டனர். விண்ணை முட்டும் அளவு க்கு பக்தி கோஷம் எழுப்ப ப்பட்டது.

    இதில் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர். இதை தொடர்ந்து பக்தர்கள் சாரை, சாரையாக வந்த வண்ணம் இருந்தனர். இதனால் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலை மோதியது.

    இன்று மதியம் வரை பக்தர்கள் குண்டம் இறங்கினர். அதனை தொட ர்ந்து மதியத்திற்கு மேல் சுற்று வட்டார பகுதி கிராமங்களை சேர்ந்த விவ சாயிகள் கால்நடைகளை குண்டத்தில் இறங்கினர். குண்டம் இறங்கும்போது கருவறையில் உள்ளே பண்ணாரி அம்மனை வீணை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மேலும் கோவில் வளா கத்தை சுற்றி தயார் நிலை யில் தீயணைப்பு துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். குண்டத்தில் ஓடி வந்த பக்தர்களை தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். குண்டம் இறங்க குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் வரிசையில் காத்து நின்றனர்.

    குண்டம் விழாவை தொடர்ந்து நாளை மதியம் மாவிளக்கு பூஜையும் இரவு புஷ்பரத ஊர்வலமும் நடைபெறுகிறது. மேலும் 15-ந் தேதி மஞ்சள் நீராடுதல் மற்றும் பெண்கள் பங்கேற்கும் திருவிளக்கு பூஜை மற்றும் தங்கரத தேர் ஊர்வலம் நடைபெறுகிறது. 15-ந் தேதி மறு பூஜை உடன் விழா நிறைவு பெறுகிறது.

    குண்டம் திருவிழாவை முன்னிட்டு ஈரோடு கோவை திருப்பூர் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் குண்டம் திருவிழாவிற்கு பக்தர்கள் வந்து செல்வதற்கு ஈரோடு கோபி கோவை புளியம்பட்டி சத்தியமங்கலம் மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பஸ்கள் இயக்கப் பட்டன.

    அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு மருத்துவ வசதிகளும் செய்ய ப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது உடைமைகளை பாதுகாத்துக் கொள்ளுமாறு ஒலிபெருக்கியின் மூலம் போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படா மல் பக்தர்கள் குண்டம் இறங்கி சென்று பண்ணாரி அம்மனை வழிபட கோவில் சார்பில் அனைத்து ஏற்பாடு களும் தீவிரமாக செய்ய ப்பட்டது.

    இதையொட்டி வன த்துறையினரும் வனப்பகுதி யில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர்.
    • குண்டம் திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் பெருமாந ல்லூரில் உள்ள பிரசித்தி பெற்ற கொண்டத்து க்காளியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா, கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை (8-ந்தேதி) செவ்வாய்க்கிழமை அதிகாலை பக்தர்கள் குண்டம் இறங்கு கின்றனர். மேலும் நாளை மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது.

    குண்டம் இறங்கவும், தேரோட்டத்தில் பங்கேற்கவும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். இதையொட்டி கூடுதல் எஸ்.பி.,க்கள் 2 பேர் தலைமையில், 3 டி.எஸ்.பி.,க்கள், 11 இன்ஸ்பெக்டர்கள், 32 சப்-இன்ஸ்பெக்டர்கள், 158 போலீசார், 80 ஆயுதப்படை போலீசார், 200 ஊர் காவல் படையினர், 50 டிராபிக் வார்டன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் கோவில் வளாக த்தில் புறக்காவல் நிலையம் மற்றும் 2 இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டு உள்ளது.பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகம் முழுவதும் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

    60 இடங்களில் மொபைல் டாய்லெட், 9 இடங்களில் குடிநீர் வசதி, பக்தர்கள் குண்டம் இறங்கு வதை பார்க்க 2 இடங்களில் எல்.இ.டி., திரை, குண்டம் இறங்கும் பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்பு, குண்டம் இறங்கும் பக்தர்கள் குளிக்க 20 ஷவர் கொண்ட அறை உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    வாகன போக்குவரத்து நெரிசலை சமாளிக்க பெருமால்லூரில் இன்று மதியம் 1 மணி முதல் நாளை இரவு 10 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கோபியில் இருந்து திருப்பூர் செல்லும் வாகனங்கள் குன்னத்தூர் பாலம் சர்வீஸ் ரோடு வழியாக ஸ்தூபி வரை வந்து, அங்கிருந்து கணக்கம்பாளையம் வாவிபாளையம், பூலுவப்பட்டி வழியாக திருப்பூருக்கு செல்ல வேண்டும்.

    சேலம், ஈரோட்டில் இருந்து கோவை நோக்கி செல்லும் வாகனங்கள் ஸ்தூபி பிரிவு அருகே வந்து பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் வலசுபாளையம் பிரிவு சர்வீஸ் ரோடு சென்று தேசிய நெடுஞ்சாலை அடைந்து கோவை செல்ல வேண்டும்.

    திருப்பூரில் இருந்து கோபி, ஈரோடு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் பூலுவப்பட்டி சிக்னல் வழியாக நெருப்பெரிச்சல், வாவிபாளையம் வழியாக சென்று கணக்கபாளையம் பிரிவு ஸ்தூபி அருகே வந்து பயணிகளை ஏற்றி இறக்கி கொண்டு வலசு பாளையம் வழியாக சர்வீஸ் ரோடு சென்று தேசிய நெடுஞ்சாலை அடைந்து அங்கிருந்து செல்ல வேண்டும் வேண்டும்.

    கோவையில் இருந்து ஈரோடு செல்லும் வாகனங்கள் குன்னத்தூர் பாலம் அருகே வந்து பாலத்தின் கீழ் பயணிகளை இறக்கி விட்டு தேசிய நெடுஞ்சாலை அடைந்து செல்ல வேண்டும். மேலும் பயணிகள் வசதிக்காக குண்டம் திருவிழாவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    குண்டம் திருவிழா முடிந்து ஸ்தூபியில் இருந்து திருப்பூர், கோபி, ஈரோடு செல்லும் பக்தர்கள் ஸ்தூபியில் இருந்து பஸ்களில் ஏறி செல்லலாம். இதற்காக ஸ்தூபி பகுதியில் சிறப்பு பஸ்கள் நிறுத்தப்பட்டிருக்கும்.

    இதேபோல் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காகவும், பக்தர்களின் வசதிக்கேற்பதாகவும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

    கோபி, ஈேராடு பகுதியில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை ஸ்தூபி அருகே கணக்கம்பாளையம் ரோடு பகுதியில் நிறுத்த தனியார் இடத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூரில் இருந்து கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை பெருமாநல்லூர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரிலும், காளியம்மன் கோவில் அருகிலும், காதி கிராப்ட் வளாகத்திலும் பார்க்கிங் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    விழாவிற்கு வரும் பக்தர்கள் தங்கள் உடமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தங்களது குழந்தைகள் அணிந்து வரும் விலையுயர்ந்த ஆபரணங்கள், பொருட்கள் ஆகியவற்றை பெற்றோர் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.

    பொதுமக்களின் வசதிக்காக கோவில் வளாகத்திலேயே காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் பாதுகாப்பிற்காக அவசர உதவி எண் 100 தொடர்பு கொள்ளலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

    • குண்டம் திருவிழா பங்குனி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.
    • சாம்பல் மேடுகள் பெருமாநல்லூர் பகுதிகளில் காணப்படுகின்றன.

    பெருமாநல்லூரில் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா பங்குனி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. இவ்விழா நெடுங்காலமாக தொடர்ந்து நடைபெறுவதை தமிழ் உலகம் அறியும்.

    அவ்விழாவில் பல்வேறு குடிமக்களும் தங்கள் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப உரிய சடங்குகளை செய்து வழிபடுகின்றனர். இக்குண்டம் திருவிழாத் தோன்றிய வரலாற்றை நாம் அறிந்து கொள்வோம்.

    பழங்காலத்தில், இன்றைய பெருமாநல்லூர் என்ற இத்தலம் அடர்ந்த காடுகள் நிறைந்த ஒரு நிலப்பகுதியாக இருந்தது. எனினும் இப்பகுதி நீர்வளமும் நிலவளமும் மிக்கதாக இருந்ததால் சிறந்த வயல் நிலங்களை உருவாக்க தகுதியுடையதாக விளங்கியது.

    இங்கு வாழ்ந்த பழங்குடி மக்கள் கால்நடைகளை மேய்த்த வண்ணம் நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டு வாழ்ந்தனர். பொதுவாக கொங்கு நாட்டில் வாழ்ந்த பழங்குடி மக்கள் அனைவரும் வேட்டையாடுதலையும் கால்நடைகளை மேய்த்தலையும் முதன்மை தொழில்களாக கொண்டிருந்ததால் புதிய மேய்ச்சல் நிலங்களைத்தேடி அடிக்கடி இடம் மாறினர்.

    புதிய மேய்ச்சல் நிலங்களை தேடி புறப்படும்போது அவர்கள் முன்பு வாழ்ந்த இடத்தில் சேர்த்து குவித்து வைத்த சாணம், குப்பை ஆகியவற்றை தீ மூட்டி விடுவர். அவை எரிந்து தணிந்து நல்ல தணலாக இருக்கும் போது அவற்றின் மீது ஆடு, மாடுகளை குறுக்கும் நெடுக்குமாக ஓடவிடுவர். அவ்வாறு கால்நடைகள் தீயை மிதித்துச் செல்லுவதால் அவற்றை பற்றியுள்ள நோய்கள் நீங்கும் என்ற நம்பிக்கை கொண்டிருந்தனர்.

    இதனை அவர்கள் ஓர் இயற்கை மருத்துவ முறையாக கையாண்டனர். இடம்பெயர்ந்த பின்னர் அத்தீயானது சில நாட்கள் நீடித்து நின்று அணைந்து மழை, வெயிலால் மக்கி சாம்பல் மேடுகளாக ஆகிவிடும்.

    இத்தகைய சாம்பல் மேடுகள் பெருமாநல்லூர் பகுதியிலும், சுற்றியுள்ள பகுதிகளிலும் காணப்படுகின்றன. சான்றாக கோவில்பாளையத்திற்கு அருகில் சர்க்கார்சாமக்குளம் என்று வழங்கப்படுகின்ற பழமையான சாம்பல் குளத்தை கூறலாம்.


    பெருமாநல்லூருக்கும், குன்னத்தூருக்கும் இடையிலும், சுற்றுப்புறத்திலும் சாம்பல் மேடுகள் இருந்தன. கால வளர்ச்சியில் அவர்களின் நாடோடி வாழ்க்கை முடிவுக்கு வந்து நிலையான குடியிருப்புகள் ஆங்காங்கு தோன்றின.

    இத்தகைய குடியிருப்புக்கள் பெரும்பாலும் மரத்தடிகளிலேயே அமைந்தன. கொங்கு நாட்டில் உள்ள ஆலத்தூர், ஊஞ்சலூர், புளியம்பட்டி போன்ற ஊர்கள் மரங்களின் கீழ் அமைந்த குடியிருப்புக்களை நினைவூட்டு கின்றன.

    அவ்வாறு அமைந்த குடியிருப்புக்களின் மத்தியில் ஒரு பொது இடமாக ஒரு மன்றத்தை ஏற்படுத்தி அங்கு தம் கால்நடைகளை அடைத்து வைத்தனர். 'பட்டி, தொட்டி, தொழுவம்' போன்ற சிறப்பு விகுதி பெற்று பல்வேறு ஊர்கள் இருப்பது தெரிந்ததே.

    புதிய, நிலையான குடியிருப்பில் வாழ்ந்த காலத்திலும், அவர்கள் 2 சாணத்திற்கு தீமூட்டி கால்நடைகளை அதன் மீது நடக்க வைத்து மருத்துவம் செய்யும் வழக்கம் தொடர்ந்தது.

    அவர்கள் ஏற்படுத்தியிருந்த மன்றத்தில் பெண் தெய்வத்தை முதலில் ஒரு கல்லாகவும், பிற்காலத்தில் துர்க்கை சிலையாகவும் எழுந்தருளச் செய்தனர். காட்டு விலங்குகளாலும், இயற்கை சீற்றங்களாலும் பிற பகைவர்களாலும் ஏற்படும் அச்சத்தை போக்கும் பேராற்றல் மிக்கவள் துர்க்கை என்னும் காளி தேவியே என்று பெரிதும் நம்பினார்கள்.

    எனவே, காளிதேவியின் உருவத்தில் கண்டோர் அச்சம் கொள்ளும் வகையில் எட்டுக்கரங்கள் அமைத்து, அக்கரங்களில் பல ஆயுதங்களை ஏந்தி காட்சி தருபவளாக சிலை வடித்து வணங்கினர்.


    காலப் போக்கில் அப்பெண் தெய்வத்தின் முன்னுள்ள மன்றத்தில் ஆடு, மாடுகளைத் தீயில் நடக்க வைத்தது போல தாங்களும் அத்தீயின் மீது நடந்து அதனை தெய்வத்தைப் போற்றும் சமயச்சடங்காக மாற்றிக் கொண்டனர்.

    இம்முறையில் தோன்றியதுதான் துர்க்கை கோவிலின் முன்னுள்ள 'குண்டம் மிதித்தல்' என்னும் சமயச்சடங்காகும். கால்நடை மருத்துவம் என்னும் தீ மிதிக்கும் பழக்கம், பிற்காலத்தில் குண்டம் மிதித்தலாகிய சமயச்சடங்காக மாறியது.

    • 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.
    • திறந்த வெளியில் 60 அடி நீளம் உடைய குண்டம் உள்ளது.

    'குண்டத்து காளியம்மன் கோவில்' மக்களால் 'கொண்டத்து காளியம்மன் கோவில்' என்று அழைக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் வீற்றிருக்கும் இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும். பெருமாநல்லூரின் வடமேற்கு பகுதியில் வடக்கு நோக்கி இக்கோவில் அமைந்துள்ளது.


    மதில் சுவர்களுடன் கருவறை, முன் மண்டபம் ஆகியவை உள்ளன. கருவறையில் காளியம்மன் அமர்ந்த நிலையில் 8 கைகளுடன் காட்சி தருகிறார். வலது பக்க கைகளில் முறையே வேல், உடுக்கை, கத்தி, பட்டாக்கத்தி உள்ளன. இடப்பக்கம் மேல் கை விரிச்ச நிலையில் பிஸ்மய முத்திரையாக உள்ளது.

    ஏனைய கைகளில் சாட்டை, கபாலம் ஆகியன அமைந்துள்ளன. கோபத்தை வெளிப்படுத்தும் முகம், அக்கினி சுவாலையை காட்டும் தலைமுடி ஆகியவை சிறப்பாக உள்ளன. எதிரில் சிங்க வாகனம், பலி பீடம் ஆகியவை உள்ளன. விநாயகர், காளியம்மன் ஆகியோருக்கு செப்புத் திருமேனிகள் உள்ளன.


    வலப்புறத்தில் விநாயகர் உருவமும், கோவில் கருவறை மேற்கில் செல்வ விநாயகர் உருவமும் உள்ளன. குண்டத்துக் காளியம்மன் கோவிலில் இரு வாயில்களிலும் துவாரபாலக உருவங்கள் சுதையால் செய்யப்பட்டவை உள்ளன. வெளியே நீட்டிய கோரப்பற்கள், பிதுங்கிய கண்கள், ஆயுதங்கள் முதலியவை அச்சுறுத்தும் வகையில் உள்ளன.

    முன்வாயிலில் பெண், ஆண் என இரு துவாரபாலகர் பேருருவங்கள் உள்ளன. அவற்றை நீலி, நீல கண்டன் என அழைக்கின்றனர். உள் வாயிலில் இரு பெண் துவாரபாலகி உருவங்கள் உள்ளன. இடாகினி, மோகினி என இவற்றை மக்கள் அழைக்கின்றனர். கோவில் பிரகாரத்தில் அம்மனின் இடப்பக்கத்தில் முத்துக்குமாரசாமி சன்னதி உள்ளது.


    கோவிலின் முன் திறந்த வெளியில் 60 அடி நீளம் உடைய குண்டம் உள்ளது. பங்குனி மாதம் பண்ணாரி அம்மன் திருவிழா நடைபெறும் நாட்களை ஒட்டி சில நாட்களுக்கு முன் பின்னாக இக்கோவிலில் விழா நடைபெற்று வருகின்றது.

    இப்பகுதியில் விழாவை ஒட்டி நடைபெறும் குண்டம் திருவிழா மிகப்புகழ் வாய்ந்தது. பக்தி சிரத்தையுடன் குண்டம் இறங்குவது கண் கொள்ளாக் காட்சியாகும். குண்டத்தை ஒட்டியே அம்மனுக்குக் குண்டத்து காளியம்மன் எனப்பெயர் ஏற்பட்டது.

    தீமிதி விழாவாகிய குண்டம் இறங்குவது மிகப்பழங்காலம் தொட்டே உலகின் பல பகுதிகளிலும் நடைபெற்று வந்துள்ளது. கால்நடைகளை தீ மிதிக்கச்செய்வதும் சில இடங்களில் நடைபெற்றுள்ளது.

    விரதம் இருந்து குளித்து ஈரத்துணியுடன் வேப்பிலையை கையில் ஏந்தி தீ மிதிப்பதே மரபாகும். மன ஒருமைப்பாடு, தெய்வத்திற்கு அஞ்சும் நிலை, எண்ண சிதறல் ஏற்படாமை ஆகியன சிறப்புறுகின்றன. நாகரீக வளர்ச்சி ஏற்பட்டபோது மன ஒருமைப்பாட்டை வளர செய்வது யோக நிலையில் குண்டலினி சக்தி எனப்பெயர் பெற்றது.

    குண்டு, குண்டம், குண்டலம், குண்டலி, குண்டலினி என்றவாறு இச்சொல்லை சிந்திப்பது பொருள் விளக்கத்துக்கு துணை செய்யும். இவை முறையே ஆழம், நீர் நிலை, ஓம குண்டம், வட்டம், பாம்பு எனப்பொருள் உடையன" என்று ஆய்வாளர்கள் கருதுவதால் குண்டத்திற்கும் குண்டலினி சக்திக்கும் தொடர்பு உண்டு என்பது புலனாகிறது.

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீர் ஊற்றி வருகின்றனர்.
    • விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா இன்று நடை பெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம், தேர் திருவிழா வெகு விமரிசியாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.

    ஒவ்வொரு நாளும் பெரிய மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீர் ஊற்றி வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் விழா இன்று நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து நாளை தேர் திருவிழா நடைபெறுகிறது. வருகிற 5-ந் தேதி பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களில் நடப்பட்ட கம்பங்கள் எடுக்கப்பட்டு ஊர்வலமாக வந்து காவிரி ஆற்றில் விடப்படுகிறது. கோவில் திருவிழா காரணமாக ஈரோடு மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    ஈரோடு வ.உ.சி மார்க்கெட்டில் 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு சில்லரை மற்றும் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதன் வளாகத்திலேயே பழச் சந்தையும் செயல்பட்டு வருகிறது.

    தாளவாடி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், பெங்களூர், ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. எப்பவும் வ.உ.சி மார்க்கெட் ஆட்கள் நடமாட்டமாக பரபரப்புடன் காட்சியளிக்கும்.

    இந்நிலையில் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று வ.உ.சி. பூங்கா காய்கறி மார்க்கெட்டிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இதையொட்டி இன்று காலை ஆயிரக்கணக்கான காய்கறி வியாபாரிகள் கருங்கல்பாளையத்தில் உள்ள காவிரி ஆற்றங்கரையில் புனித நீரை எடுத்து ஊர்வலமாக வந்து ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபட்டனர்.

    இன்று காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட தகவல் தெரியாமல் ஏராளமான பொதுமக்கள் காய்கறி வாங்க வந்திருந்தனர். விடுமுறை அளிக்க ப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    • கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
    • இதனையடுத்து நாளை மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்தல்நிகழ்ச்சியும், நாளைமறுநாள் மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 14-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 26-ந் தேதி சந்தன காப்பு அலங்காரமும், நேற்று பெண்கள் மாவிளக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணியளவில் அம்மை அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.

    பின்னர் காலை 8 மணி அளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. முதன் முதலில் தலைமை பூசாரி ராஜ கோபால் குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து ஆண்கள், பெண்கள், கை குழந்தைகளுடன் குண்டம் மிதித்தனர்.

    இந்த குண்டம் திருவிழாவை–காண கோபி மொடச்சூர், வேட்டைக்காரன் கோவில், வடுகபாளையம், வடுகபாளையம்புதூர், நாகர்பாளையம், நாகதேவன் பாளையம், நாதிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதனையடுத்து நாளை மாலை 4 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுத்தல்நிகழ்ச்சியும், நாளைமறுநாள் மலர் பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து வரும் 1-ந் தேதி தெப்பத்தேர்உற்சவம், மஞ்சள் நீர் உற்சவம் நடைபெறுகிறது. 2-ந் தேதி மறுபூஜையும், 6-ந் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    மேலும் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொளப்பலூர் பச்சை அம்மன் கோவிலும் குண்டம் திருவிழா இன்று காலை நடைபெற்றது.

    • அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத் பங்கேற்றனர்.
    • வருகிற 9-ந் தேதி பண்டிகையை கொண்டாட உள்ளனர்.

    ஊட்டி,

    குன்னூர் அருகே ஜெகதளாவை தலைமையிடமாக கொண்ட ஆரூர் கிராமங்களில் வசிக்கும் படுகர் இன மக்கள் ெஹத்தையம்மன் பண்டிகையை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் கொண்டாடி வருகின்றனர். ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி, ேபரட்டி, மல்லிெகாரை, மஞ்சுதளா, சின்ன பிக்கட்டி, பெரிய பிக்கட்டி ஆகிய 8 கிராம மக்கள் வருகிற 9-ந் தேதி பண்டிகையை கொண்டாட உள்ளனர். இதையொட்டி பக்தர்கள் 48 நாட்கள் விரதம் இருந்து, ஜெகதளா ஹெத்தையம்மன் கோவிலில் இருந்து தும்மனாடா, பேரகல் வழியாக கொதுமுடி கோவிலுக்கு பாரம்பரிய குடை மற்றும் செங்கோலுடன் நடைபயணம் மேற்கொண்டனர்.

    இதனை முன்னிட்டு நேற்று ஹெத்தையம்மன் பண்டிகையையொட்டி காரக்கொரை மடிமனையில் குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சிவினோத், அமப்பு செயலாளர் கே.ஆர்.அர்ஜூணன், ஒன்றிய செயலாளர் பேரட்டிராஜி மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    • தொடர்ந்து மாவிளக்கு பூஜை, கூத்தாண்டவர் அழைப்பு மற்றும் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஊராட்சி ஒன்றிய த்திற்கு உட்பட்ட கோசணம் மாகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த 4-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கி நடந்து வருகிறது.

    விழாவையொட்டி கூத்தாண்ட மாரியம்மன் காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடப்பட்டது. தொடர்ந்து கடந்த 10-ந் தேதி பச்சை பழம் அபிஷேகம் நடைபெற்றது.

    இதையொட்டி 11-ந் தேதி இரவு அம்மன் அழைப்பு மற்றும் குண்டம் திறப்பு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து நேற்று காலை குண்டம் விழா நடந்தது.

    இதில் நம்பியூர், கோசணம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    தொடர்ந்து மாவிளக்கு பூஜை, கூத்தா ண்டவர் அழைப்பு மற்றும் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    முன்னதாக பக்தர்கள் அம்மனுக்கு எருமைக்கிடாய் பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று மாகாளியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு மற்றும் சாமி ஊர்வலம் நடந்தது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை பொத்தப்பாளையம் மாகாளிஅம்மன் கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • 20-ந் தேதி காலை 7 மணியளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 18-ந் தேதி கொடியேற்றமும், 19-ந் தேதி காலை அலகு தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது.

    அவினாசி :

    அவினாசி காந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டு 20-ந் தேதி குண்டம் திருவிழா நடைபெற உள்ளது. முன்னதாக 16-ந் தேதி அம்மன் சாட்டு விழா, 18-ந் தேதி கொடியேற்றமும், 19-ந் தேதி காலை அலகு தரிசனம் ஆகியவை நடைபெறுகிறது.

    20-ந் தேதி காலை 7 மணியளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு ரிஷப வாகன காட்சியும், 21-ந் தேதி பரிவேட்டை தெப்பத்தேர் நிகழ்ச்சி, 22-ந் தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் அங்காளபரமேஸ்வரி அறக்கட்டளையினர் செய்து வருகின்றனர்.

    • மகாசிவராத்திரி, மயான பூஜை, சக்தி விந்தை அலகு தரிசனம், மாவிளக்கு நடைபெற்றது.
    • ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு,மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

    பல்லடம் :

    பல்லடத்தில் புகழ்பெற்ற அங்காளம்மன் கோவில் 48வது குண்டம் திருவிழா கடந்த 17-ந் ந்தேதி விக்னேஸ்வர பூஜை, கிராம சாந்தியுடன் துவங்கியது. தொடர்ந்து கொடியேற்றம், யாகசாலை பூஜை, மகாசிவராத்திரி, மயான பூஜை, சக்தி விந்தை அலகு தரிசனம், மாவிளக்கு நடைபெற்றது.

    இந்தநிலையில் நேற்று மாலை அக்னி குண்டம் வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது 2 அடி அகலம்,45 அடி நீளம் கொண்ட குண்டத்தில்,வேப்பமரங்களை போட்டு அக்னி வளர்க்கப்பட்டது.சுமார் 10 மணி நேரம் அக்னி வளர்த்து குண்டம் தயார் செய்யப்பட்டது. இதில் இன்று காலை 7 மணிமுதல் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலில் கோவில் பூசாரிகள்,மற்றும் நிர்வாகிகள் குண்டத்தில் இறங்கினர்.

    பின்னர் ஓம்சக்தி,பாரசக்தி என்று கோஷமிட்டபடி கைகுழந்தைகளுடன் பெண்கள், சிறுவர்கள், உள்பட ஆயிரக்கணக்கானோர் குண்டம் இறங்கி அங்காளம்மனை வழிபட்டனர். பின்னர் காலை 8 மணிக்கு அக்னி அபிஷேகம்,பொங்கல் வைத்தல்,பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது.

    குண்டம் திருவிழாவை முன்னிட்டு முப்பெரும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் அன்னதானம் வழங்கினர். குண்டம் திருவிழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு,,மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். பல்லடம் போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

    • ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.
    • கொடிக்கம்பம் கோவில் வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டு, பூக்களால் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    ஆனைமலை,

    ஆனைமலையில் தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று காலை ஆழியாற்றங்கரைக்கு பக்தர்கள் கம்பத்தை எடுத்து சென்று, அங்கு வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். பின்னர் ஆனைமலை போலீஸ் நிலையம் வீதி வழியாக ஊர்வலமாக வாண வேடிக்கைகளுடன் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கொடி கம்பத்தை தோளில் சுமந்துகோவிலுக்கு கொண்டு வந்தனர்.இதைத்தொடர்ந்து அம்மன் அருளாளி பச்சரிசி மற்றும் மஞ்சள் கலந்த விபூதியை பக்தர்களுக்கு வழங்கினார். பின்னர் கொடிக்கம்பம் கோவில் வளாகத்திற்குள் கொண்டுவரப்பட்டு, பூக்களால் அலங்கரித்து சிறப்பு பூஜை கள் செய்யப்பட்டது.

    பின்னர் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி கட்டப்பட்டது. தொடர்ந்து மேள, தாளம், சேகண்டி முழங்க, சங்கு நாதம், ஆலய மணி ஒலிக்க வாண வேடிக்கையுடன் கருடாழ்வார் உருவம் பொறித்த கொடி கம்பம் கோவில் வளாகத்தில் நடப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் வட்டமிட்டது. இதை கண்ட பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்தில் கோஷமிட்டனர்.

    வருகிற 25- ந்தேதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (மார்ச்) 3-ந் தேதி கண்ணபிரான் தூது, சாமி புறப்பாடு, குண்டத்து காட்டில் விஸ்வரூப தரிசனம், 6-ந் தேதி இரவு அம்மன் ஆபரணம் பூணுதல், அரவான் சிரசு, 7-ந் தேதி காலை குண்டம் கட்டுதல், அலங்கார திருத்தேர் வடம் பிடித்தல், குண்டம் பூ வளர்த்தல் நடைபெறுகிறது.

    முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கி வழிபடுதல் 8-ந் தேதி நடைபெறுகிறது. தொடர்ந்து திருத்தேர் ஊர்வலம் நடக்கிறது. பின்னர் 9-ந் தேதி திருத்தேர் நிலை நிறுத்துதல், ஊஞ்சல் உற்சவம், பட்டாபிஷேகம், 10-ந்தேதி மஞ்சள் நீராடுதல், போர் மன்னன் காவு ஆகியவை நடக்கிறது.

    ×