search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய்"

    • சத்துக்கள் அதிகம் நிறைந்த நீராகாரமாக தேங்காய் விளங்குகிறது.
    • சரும பராமரிப்பு, பாதுகாப்புக்கு தேங்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

    செப்டம்பர் 2- இன்று உலக தேங்காய் தினம். ஒவ்வொரு நாளும் செப்டம்பர் 2 ஆம் தேதி உலகம் முழுக்க தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. உலகளவில் தேங்காய்களின் முக்கியத்துவத்தை கொண்டாடும் வகையில், இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

    விவசாயத்தில் மிக முக்கிய பங்கு வகிகக்கும் தேங்காய் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது ஆகும். உலகளவில் வெப்பமண்டல பகுதிகளில் அதிக வருவாய் ஈட்டிக் கொடுப்பதிலே தேங்காய் மிகமுக்கியமான ஒன்றாக விளங்குகிறது. தேங்காய்களின் முக்கியத்துவம், அவற்றால் நமக்கு கிடைக்கும் பலன்களை நினைவுகூற இந்த நாள் பெரிதும் உதவுகிறது.

     


    எவ்வித கலப்பும் இன்றி சுத்தமான மற்றும் சத்துக்கள் அதிகம் நிறைந்த நீராகாரமாக தேங்காய்கள் விளங்குகின்றன. இதுதவிர சரும பராமரிப்பு, பாதுகாப்புக்கு தேங்காய் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், டயட் இருப்பவர்கள் உடலில் புத்துணர்ச்சியை பெற விரும்புவோர் முதலில் நாடுவது தேங்காயாகவே இருக்கிறது.

    கலாச்சாரம், ஊட்டச்சத்து மற்றும் பொருளாதர மேம்பாடு என தேங்காய் பற்றிய விழிப்புணர்வை உலக தேங்காய் தினத்தில் ஏற்படுத்துவோம். இந்நாளில் தென்னை விவசாயம், விளைச்சலில் நிலையான நடைமுறைகளை வலியுறுத்துவோம்.


     

    தேங்காயில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது. உடலில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நல்ல கொழுப்புகள் தேங்காயில் உள்ளன. எலக்ட்ரோலைட் நிறைந்த இயற்கை பானமாக தேங்காய் நீர் விளங்குகிறது.

    தேங்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுவதோடு, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிக முக்கிய பங்காற்றுகிறது. தேங்காய் எண்ணெய் மிகவும் பிரபலமான இயற்கை மாய்ஸ்சரைசர் மற்றும் ஹேர் கண்டிஷனர் எனலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம்.
    • தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது.

    சென்னை:

    கோவில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம், இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது.

    ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம், தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம்.

    ஆனால் தேங்காய் உடைப்பதில் ஒரு சிறிய தத்துவ தகவல். இதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது.

    தேங்காயின் மேல் கடுமையான ஓடும், அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும், அதனுள் நீரும் உள்ளது.

    உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும்.

    உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.

    இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது.

    ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.

    ஈசுவர சன்னிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தைக் காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.

    இவ்வளவு உட்கருத்து இருப்பதால்தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம் முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணரவேண்டும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேங்காய் தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
    • விமான நிலைய விதிமுறைகள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

    விமானப் பயணத்தின்போது நம்முடன் எடுத்துச் செல்லும் பொருட்களுக்கு விமான நிறுவனங்கள் சில நிபந்தனைகளை விதிக்கின்றன. விமானத்தில் பயணம் செய்யும்போது நாம் சில விதிகளை பின்பற்ற வேண்டும். விமானத்தில் ஏறும்போது எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படாத பல விஷயங்கள் உள்ளன.

    கூர்மையான ஆயுதங்கள், துப்பாக்கிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உட்பட பல பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இது தவிர, தேங்காய் விமானத்தில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    தேங்காய் தென்னிந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

    இதற்கு ஒரு முக்கிய காரணம், தேங்காயில் அதிக அளவு எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெய் எரியக்கூடிய பொருளாக வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக விமானத்தில் தேங்காய் கொண்டு செல்ல அனுமதி இல்லை.

    விமான நிலைய விதிமுறைகள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    இதுவரை பயணிகள் தங்கள் கைப்பையில் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். இருப்பினும், புதிய விதிமுறைகள் இப்போது சில மருந்துகளை துபாய்க்கு விமானங்களில் எடுத்துச் செல்வதைத் தடை செய்துள்ளன.

    இந்த மருந்துகள் குறித்த மாற்றங்கள் பயணிகள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களின்படி அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே பேக் செய்வதை உறுதிசெய்ய வேண்டும்.

    • பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்.
    • ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.

    தேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். 

    தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இளநீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது.

    இளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும்.

    நோய் எதிர்ப்பு சக்தி:

    தேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும்.

    பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்.

    சக்தி தரும்:

    மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும்.

    ஜீரண சக்திக்கு:

    உங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த பயன் தரும் .

    மேலும் இதிலுள்ள மினரல் மற்றும் வைட்டமின்கள் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்கலை குணமாக்குகிறது.


    சர்க்கரை வியாதிக்கு:

    தேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. . இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.

    இதயம்:

    இதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்.

    தைராய்டு:

    நீங்கள் தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.

    உடல் எடை:

    உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமால் வேகமாக உடல் எடை குறையும்.


    சிறுநீரகம்:

    சிறுநீரக பாதிப்பை குறைக்கிறது. சிறு நீரக தொற்று நோய்களை குணப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிறு நீரகத்தை பெறலாம்.

    முதுமை:

    தேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்கவிடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது.

    • உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.
    • இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர தேங்காய் துணை புரிகிறது.

    தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தேங்காயில் எண்ணற்ற சத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன.

    புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.

    தேங்காயின் அதிகபட்ச நன்மைகளை பெறுவதற்கு, நீங்கள் தேங்காய்யை பச்சையாக சாப்பிடுவதே நல்லது.

    எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியமாகும். அத்தோடு பாஸ்பரஸ் சத்தும் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு தேவையானதாக இருக்கிறது. தேங்காய் அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் பாஸ்பரஸ் சத்து அதிகம் சேர்ந்து எலும்புருக்கி நோய் போன்றவவை ஏற்படாமல் தடுக்கிறது.

    தேங்காய் சாப்பிடுவது உடலுக்கு அதிக எனர்ஜியைக் கொடுக்கிறது. அதோடு இதில் நோய் எதிர்க்கும் ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை இரண்டு மடங்காகக் அதிகரிக்கச் செய்கிறது. தேங்காய் சாப்பிடுவதால் பருவகால நோய் தொற்றுக்களில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

    வளரும் இளமைப்பருவத்தினர் மற்றும் நடுத்தர வயதுடையவர்கள் தினமும் ஒரு கோப்பை தேங்காய் சாப்பிடுவதால் இரும்பு சத்து கிடைக்கிறது.


    தலைமுடி உதிர்வை தடுக்க இன்று பலருக்கும் இளநரை ஏற்படுதல், முடி உதிர்வது, முடி அடர்த்தி குறைதல் போன்ற பிரச்சனைகள் தோன்றி அவர்களை மனதளவில் சோர்வடைய செய்கிறது. தேங்காயில் புரதம் மற்றும் செலினியம் சத்து அதிகம் நிறைந்துள்ளது. பச்சை தேங்காயை அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு இந்த இரண்டு சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப்பெற்று, தலைமுடி அடர்த்தியாக வளர உதவுகிறது. முடி உதிர்வு ஏற்படுவதை வெகுவாக குறைக்கிறது. மேலும் இளநரை ஏற்படுவதை தடுத்து பளபளப்பான அடர் கருப்பு நிறம் கொண்ட முடி வளர தேங்காய் துணை புரிகிறது.

    தினமும் சிறிது தேங்காயை மென்று சாப்பிடுபவர்களுக்கு தேங்காயில் இருக்கும் கொழுப்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் ரத்தத்தில் கலந்து, தோலின் பளபளப்பு தன்மையை கூட்டுகிறது. சுருக்கங்களை போக்கி இளமைத் தோற்றத்தைத் தருகிறது. தோலில் உள்ள பளபளப்பு கூடி வயதான போதும் இளமையான தோற்றமே நீடிக்க வழி செய்யும். மேலும் முகத்தில் முகப்பருக்கள் ஏற்படுவதை தடுப்பதோடு தோல் அரிப்பு போன்ற தொற்றுக் கிருமிகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் போக்குகிறது

    தேங்காயை சரியான அளவு எடுத்துக் கொண்டால் எந்த வித விளைவும் இல்லை. ஆனால் அளவுக்கு அதிகமாக எடுக்கும் போது வாயுப் பிரச்சினை, கலோரி அதிகமாகுதல், சர்க்கரை மற்றும் கொழுப்பு மற்றும் அலர்ஜி போன்றவைகளும் ஏற்படுகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் கொண்டு சரியான அளவில் தேங்காயை பயன்படுத்தி எல்லா விதமான நலன்களையும் பெறுங்கள்.

    • ஒவ்வொரு மாதமும் 2 கோடி லிட்டர் பாமாயிலை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து வருகிறது.
    • பாமாயில் இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும்.

    பல்லடம்:

    ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யக்கோரி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இதன் காரணமாக திருப்பூர் -கோவை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறியதாவது:-

    இந்தியா விவசாய நாடு, விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பு. ஆனால் 72 சதவீதம் எண்ணெய் வித்துக்கள் இறக்குமதியாகும் அவலம் உள்ளது. உள்நாட்டு எண்ணெய் வித்துக்கள் தொடர்ச்சியாக புறக்கணிப்பு, உள்நாட்டு எண்ணெய் வித்துக்களான தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளுக்கு ஊக்குவிப்பு செய்யாமல், மானியம் வழங்காமல், இந்தோனேசிய- மலேசியா பாமாயிலை லிட்டர் ரூ. 100க்கு மத்திய, மாநில அரசுகள் வாங்கி ரூ.30க்கு நியாய விலை கடைகளில் விற்பனை செய்கின்றனர். அதாவது ஒரு லிட்டருக்கு 70 ரூபாய் மானியம் கொடுத்து விற்பனை செய்து கொண்டிருக்கிறது.

    ஒவ்வொரு மாதமும் 2 கோடி லிட்டர் பாமாயிலை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்து வருகிறது. ஆண்டு தோறும் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் ரூ.1500 கோடிகளை மானியமாக பாமாயில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.

    கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் தி.மு.க., 66-வது வாக்குறுதியாக தேங்காய் எண்ணெய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு விற்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறது. உடல் நலனுக்கு கேடு விளைவிக்கும் பாமாயிலை தடை செய்து, நன்மை விளைவிக்கும் உள்நாட்டு எண்ணெய்களை விற்பனை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள தென்னை விவசாயிகளாலும், விவசாய சங்கங்களாலும் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

    கடந்த 2019ல் ரூ.20 க்கு விற்பனையை கொண்டு இருந்த தேங்காய் தற்போது ரூ.10க்கு மட்டுமே விற்பனையாவதால் 22 மாவட்டங்களில் உள்ள தமிழ்நாட்டின் 20 லட்சம் தென்னை விவசாயிகள் மிகக் கடுமையான நஷ்டத்தில் உள்ளார்கள். நிலக்கடலை விவசாயிகள் பறிக்கும் கூலி கூட கிடைக்காமல் கடும் கஷ்டத்தில் உள்ளார்கள்.

    எனவே பாமாயில் இறக்குமதியை ரத்து செய்ய வேண்டும். பாமாயிலுக்கு பதிலாக ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய்யை விற்பனை செய்ய வேண்டும். தேங்காய், நிலக்கடலை, எள் உள்ளிட்ட எண்ணெய் வகைகளை மானிய விலையில் விற்பனை செய்ய வேண்டும் .

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட தேங்காய்களை தனது பற்களால் கடித்து உறித்தார்.
    • பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டதோடு தங்கள் செல்போன்களில் படம் பிடித்து அந்த வடமாநில இளைஞரை பயபக்தியுடன் வழிபட்டனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் ஊராட்சிக்குட்பட்ட அலகுமலை கோவில் பிரசித்தி பெற்ற முருகர் தலமாக இருந்து வருகிறது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. கந்த சஷ்டி விழாவின் நான்காம் நாளான நேற்று காரிய சித்தி ஆஞ்சநேயர் சந்நிதி முன்பு வட மாநில இளைஞர் ஒருவர் தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு அருள் ஏற்பட்ட நிலையில் ஆஞ்சநேயர் போலவே பாவனை செய்து ஆஞ்சநேயர் சிலையிடம் இந்தியில் பேசியவாறு பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த 10க்கும் மேற்பட்ட தேங்காய்களை தனது பற்களால் கடித்து உறித்தார்.

    அனுமன் போலவே பாவனை செய்து அவர் தேங்காய்களை பற்களால் உறித்ததை கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்வையிட்டதோடு தங்கள் செல்போன்களில் படம் பிடித்து அந்த வடமாநில இளைஞரை பயபக்தியுடன் வழிபட்டனர். சிறிது நேரத்திற்கு பின்பு அந்த இளைஞர் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பினார். இதனால் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆஞ்சநேயர் போலவே பாவனை செய்து தேங்காயை பற்களால் உறித்து வழிபட்ட பக்தர்.

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • மொத்தம் ரூ.36 லட்சத்து 32 ஆயிரத்து 343-க்கு விற்பனையானது.

    எழுமாத்தூர்:

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது. இதில் 994 மூட்டைகள் கொண்ட 45 ஆயிரத்து 525 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல் தரபருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.78.90 காசுகள், அதிகபட்ச விலை யாக ரூ.89.25 காசுகள், சராசரி விலையாக ரூ.87.42 காசுகள் என்ற விலை களிலும்,

    2-ம்தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.63.35 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.84.01 காசுகள், சராசரி விலையாக ரூ.75.90 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.36 லட்சத்து 32 ஆயிரத்து 343-க்கு விற்பனையானது.

    இதேபோல கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த தேங்காய்கள் மற்றும் தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலத்தில் 16 ஆயிரத்து 255 எண்ணிக்கையிலான 5 ஆயிரத்து 797 கிலோ எடையுள்ள தேங்காய்கள் கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.22 .88 காசுகள்,

    அதிகபட்ச விலையாகரூ 29. 60 காசுகள், சராசரி விலையாக ரூ.27.10 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 479-க்கு விற்பனையானது.

    இதனையடுத்து நடந்த தேங்காய்பருப்பு விற்பனைக்கான ஏலத்தில் 765 மூட்டைகள் கொண்ட 36 ஆயிரத்து 349 கிலோ எடையுள்ள தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பி்ல் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.78.99 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.86.49 காசுகள், சராசரி விலையாக ரூ.85.89 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்தபட்ச விலையாக ரூ.64.68 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.84.36 காசுகள், சராசரி விலையாக ரூ.80.89 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.28 லட்சத்து 95 ஆயிரத்து 671-க்கு விற்பனையானது.

    மொத்தம் எழுமாத்தூர் மற்றும் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் சேர்த்து தேங்காய்கள், தேங்காய் பருப்பு ரூ.66 லட்சத்து 70 ஆயிரத்து 493-க்கு விற்பனையானது.

    • தேங்காய் எண்ணை உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெற்று வருகிறது.
    • தேங்காய் களங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதிகளில் நூற்றுக் கணக்கில் தேங்காய் உடைத்து உலர்த்தும் உலர்களங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் இயற்கையில் அமைந்த சீதோஷ்ண நிலை தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிக்கு ஏதுவாக உள்ளதால் அதிக அளவில் களங்களை அமைத்துள்ளனர். தேங்காய் எண்ணை உற்பத்தியில் கிரஷிங் பணிக்கு முன்பு வரை அனைத்து பணிகளும் திறந்த வெளியிலேயே நடைபெற்று வருகிறது.

    தேங்காய் மட்டை உரிப்பது, உடைப்பது, உலர்த்துவது ஆகிய பணிகள் திறந்த வெளியிலேயே நடைபெறுவதால் தொடர்மழை பெய்யும் காலங்களில் இந்தப்பணிகள் முற்றிலுமாகப் பாதிப்படும். இந்த நிலையில் காங்கயம் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வானம் மேக மூட்டத்துடன் அவ்வப்போது விட்டு விட்டு பெய்துவரும் சாரல் மழை மற்றும் கன மழையால் தேங்காய் கள பணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக தேங்காய் உடைத்து உலர்த்தும் பணிகள் செய்யமுடியாமல் முடங்கியுள்ளது. ஏற்கனவே உடைக்கப்பட்டு உலர்த்தப்பட்டு வரும் தேங்காய் பருப்புகளை குவியல் குவியலாக களங்களில் குவித்து வைத்து தார்பாய் கொண்டு மூடி வைத்துள்ளனர். இதன் காரணமாக தேங்காய் களங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. 

    • ஆணிக்காலணி அணிந்த கோவில் பூசாரி ஆசி வழங்கினார்.
    • சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாகம்பட்டியில் ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆயுத பூஜை, நவராத்திரி விழா கடந்த 10 நாட்களாக நடைபெற்றது. இதையொட்டி பக்தர்கள் தங்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர்.

    கோயில்களில் தீர்த்தம் தெளிக்கப்பட்டு, ஆற்றுக்குச் சென்று கரகம் பாலித்து சேர்வை ஆட்டத்துடன் சுவாமிகளை ஊர்வலமாக கோயிலுக்கு அழைத்து வந்தனர்.

    அதைத் தொடர்ந்து சாமிகளுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக விரதம் இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கோவில் முன்பாக அமர்ந்தனர்.

    அப்போது ஆணிக்காலணி அணிந்த கோவில் பூசாரி ஆசி வழங்கினார். பின்னர் கோவில் முன்பாக வரிசையாக உட்கார்ந்திருந்த பக்தர்களின் தலையில் பூசாரி ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார்.

    அதனைத்தொடர்ந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் கோயிலுக்கு சென்று சாமியை வழிபாடு செய்தனர். இந்த சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    • எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.72 லட்சத்து தேங்காய் விற்பனை நடைபெற்றது
    • லோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 90 காசுக்கு விற்பனையானது

    எழுமாத்தூர்,

    எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய் ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 29 ஆயிரத்து 245 எண்ணிக்கையிலான 12 ஆயிரத்து 158 கிலோ எடைகொண்ட தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இவை கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக 21 ரூபாய் 90 காசுகள், அதிகபட்ச விலையாக 23.39 காசுகள், சராசரி விலையாக 22.55 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 888-க்கு விற்பனையானது.

    • பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.
    • மொத்தம் ரூ 7 லட்சத்து 17ஆயிரத்து 153- க்கு ஏலம் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 15 ஆயிரத்து 960 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.77.01க்கும், குறைந்தபட்சமாக 51.99 க்கும்,சராசரியாக ரூ.76.89 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.11 லட்சத்து 17ஆயிரத்து 263- க்கு ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு 10 ஆயிரத்து 245 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ 78.99 க்கும் குறைந்தபட்சமாக ரூ 51.48 க்கும், சராசரியாக ரூ 77.49 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 7 லட்சத்து 17ஆயிரத்து 153- க்கு ஏலம் நடைபெற்றது.

    ×