என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு பஸ்"

    • மாதவரம் - தாம்பரம் செல்லும் பஸ்சின் 121எப் என்ற தடம் எண் 170ஏ என மாற்றப்பட்டுள்ளது.
    • அய்யப்பன் தாங்கல் - பிராட்வே செல்லும் பஸ்சின் 11ஜி இடி என்ற தடம் எண் 11எம் என மாற்றம் செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் பயணிகள் நலன் கருதி தற்போது உள்ள பஸ் தட எண்களை பகுதி வாரியாக சீரமைத்து, 7 வழித்தட எண்களை கீழ்கண்டவாறு மாறுதல் செய்து, அதே வழித்தடத்தில் 1-ந் தேதி (இன்று) முதல் இயக்கப்பட உள்ளது.

    அதன்படி, மாதவரம் - தாம்பரம் செல்லும் பஸ்சின் 121எப் என்ற தடம் எண் 170ஏ என மாற்றப்பட்டுள்ளது. இதே போன்று, கவியரசு கண்ணதாசன் நகர் - தாம்பரம் செல்லும் பஸ்சின் 121எச் என்ற தடம் எண் 170டி எனவும், அய்யப்பன் தாங்கல் - பிராட்வே செல்லும் பஸ்சின் 11ஜி இடி என்ற தடம் எண் 11எம் எனவும் மாற்றம் செய்யப்படுகிறது.

    மேலும், பிராட்வே - கிளாம்பாக்கம் செல்லும் பஸ்சின் 18ஏ.எக்ஸ் என்ற தடம் எண் 18ஏ எனவும், திருவான்மியூர் - கிளாம்பாக்கம் செல்லும் பஸ்சின் 91கே என்ற தடம் எண் 91 எனவும், பூந்தமல்லி - கூடுவாஞ்சேரி செல்லும் பஸ்சின் 66எக்ஸ் என்ற தடம் எண் 66பி.எக்ஸ் எனவும், கவியரசு கண்ணதாசன் நகர் - கிளாம்பாக்கம் செல்லும் பஸ்சின் 121எச் இடி என்ற தடம் எண் 170டி.எக்ஸ் எனவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பஸ் பின்னால் மாணவி நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து பஸ்சை ஓட்டுநர் நிறுத்தினார்.
    • கிராம நிறுத்தத்தில் அரசு பஸ் பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த கோத்தக்கோட்டையில் அரசு பஸ் உரிய இடத்தில் நிற்காமல் சென்றதால் அதன் பின்னாலேயே பிளஸ் 2 மாணவி நீண்ட தூரம் ஓடினார்.

    பஸ் பின்னால் மாணவி நீண்ட தூரம் ஓடி வந்ததை பார்த்து பஸ்சை ஓட்டுநர் நிறுத்தினார். மாணவி அதில் ஏறிய வீடியோ வைரலானது.

    கிராம நிறுத்தத்தில் அரசு பஸ் பல நேரங்களில் நிறுத்தப்படுவதே இல்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.

    பொதுத்தேர்வுக்கு சென்ற பிளஸ் 2 மாணவி பஸ் பின்னாலேயே ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

    இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பஸ் ஓட்டுநர் - நடத்துநரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

    • அடுத்த சில நிமிடத்தில் அப்பெண் திருப்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
    • அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை பயணிகள், பொதுமக்கள் என பலரும் பாராட்டினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து பல்லடம் வழியாக ஆறாக்குளத்திற்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் ஏறிய பெண் பயணி ஒருவர் திடீரென உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சின்னக்கரையை கடந்து செல்லும்போது அவர் மயக்கமடைந்தார். சக பெண் பயணிகள் இது குறித்து கண்டக்டர் சக்திவேலிடம் தெரிவித்தனர்.

    அவர் ஆம்புலன்சை தொடர்பு கொண்டதில், தாமதமாகும் என்ற நிலையில், பல்லடம் போக்குவரத்து கழக கிளை மேலாளர் செந்தில்குமாரிடம் இது குறித்து தெரிவித்தார். பஸ்சில் உள்ள பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பிவிட்டு மயக்கமடைந்த பயணியை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கிளை மேலாளர் உத்தரவிட்டார்.

    அதன்படி பயணிகள் வீரபாண்டி பிரிவில் இறக்கி விடப்பட்டனர். பயணித்த சில பெண்கள் மயக்கமடைந்த பெண்மணியை தனியாக விட்டுச்செல்ல மனமின்றி, தாங்களும் மருத்துவமனைக்கு வருவதாக கூறி சென்றனர்.

    இதனைத்தொடர்ந்து துரிதகதியில் செயல்பட்ட டிரைவர் ராசு கண்ணன், அரசு பஸ்சை ஆம்புலன்சாக கருதி வேகமாக இயக்கினார். அடுத்த சில நிமிடத்தில் அப்பெண் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மின்னல் வேகத்தில் செயல்பட்ட அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை பயணிகள், பொதுமக்கள் என பலரும் பாராட்டினர்.

    • பேருந்து அங்கிருந்து 500 மீட்டர் தூரம் கல்லூரி சாலையில் ஓடிச் சென்று நின்றது.
    • ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    காரைக்குடி:

    திருச்சியில் இருந்து சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு நேற்று மாலை 5 மணி அளவில் அரசு பஸ் வந்தது. காரைக்குடி வருமானவரித்துறை அலுவலகம் அருகே வரும்போது அரசு பேருந்தில் திடீரென பிரேக் செயல்படவில்லை. டிரவைர் பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் பலனில்லை.

    தொடர்ந்து தாறுமாறாக சென்ற அரசு பஸ்சை சாலை தடுப்பின் மீது மோதி நிறுத்த முயன்றுள்ளார். ஆனாலும் பேருந்து அங்கிருந்து 500 மீட்டர் தூரம் கல்லூரி சாலையில் ஓடிச் சென்று நின்றது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    • நேற்று 3 மணி அளவில் தாளவாடியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • மலைப்பகுதியில் இயக்கப்ப டும் அரசு பஸ்கள் நல்ல தரத்துடன் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 80-க்கும் மேற்பட்ட மரைகிராமங்கள் உள்ளன.

    இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சத்தியமங்கலம், கோவை, ஈரோடு, திருப்பூர், போன்ற பகுதிகளுக்கு தாளவாடியில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ் மூலமாக சென்று வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று 3 மணி அளவில் தாளவாடியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பஸ் ஒன்று சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    தமிழகம்-கர்நாடக எல்லையான புளிஞ்சூர் அருகே செல்லும் போது அடந்த வனப்பகுதியில் பஸ் பழுதாகி நின்றது.

    டிரைவர் மேற்கொண்டு பஸ்சை இயக்க முடியாமல் அவதிப்பட்டார். இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கடும் அவதிபட்டனர். பின்னர் 1 மணி நேரத்திற்க்கு பிறகு தாளவாடியில் இருந்து குளியாடா செல்லும் அரசு பஸ்சில் பயணிகள் அனைவரும் சத்தியமங்கலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இதுபற்றி பயணிகள் கூறும்போது:-

    மலைப்பகுதியில் பழைய பஸ்கள் மட்டுமே இயக்கப் படுவதால் அடிக்கடி பழுதாகி நின்று விடுகிறது. எனவே மலைப்பகுதியில் இயக்கப்ப டும் அரசு பஸ்கள் நல்ல தரத்துடன் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

    • அறிவொளி நகர், நேரு நகர், சபரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
    • அரசு பஸ் 30, 30 ஏ, ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறு முத்தாம்பாளையம் ஊராட்சி தொட்டி அப்புச்சி கோவில் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்குள்ள அறிவொளி நகர், நேரு நகர், சபரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    அவர்கள் தொழில், கல்வி, போன்றவற்றிற்காக பல்லடம் மற்றும் திருப்பூர் செல்வதற்கு இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வழியே அரசு பஸ் 30, 30 ஏ, ஆகியவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, அந்த பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் வருவதில்லை என்றும், அறிவிப்பில்லாமல் திடீரென நிறுத்தப்படுவ தாகவும் கூறி, அங்குள்ள பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடம் வந்த ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி வார்டு உறுப்பினர் முத்துக்குமார், மற்றும் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முறையாக பஸ் வருவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

    • வடலூரில் அரசு பஸ் மோதி டிரைவர் பலியானார்.
    • பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது,

    கடலூர்:

    வடலூர் காட்டுக்கொல்லை சர்வோதயநகர் பகுதியை சேர்ந்தவர் பகிரவன் (வயது 24)டிரைவர், இவர் மோட்டார் சைக்கிளிலில் விருத்தாச்சலத்தில் இருந்து வடலூர் நோக்கி வந்தார். ,வடலூர் தொழி ற்பேட்டை பொட்டுகடலை கம்பெனி அருகில் வரும்போது, கடலூரில் இருந்து விருத்தாச்சலம் சென்ற அரசு பஸ் மோதி பலத்த அடிப்பட்டு சம்பவ இடத்திலே இறந்துவிட்டார்.

    இறந்த பகிரவன் உடல் பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது, இது குறித்து புகாரின்பேரில் வடலூர் போலிசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    • 14 வகையான 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது என்ற விவரங்கள் பத்திரிக்கை மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தாராபுரம் :

    அரசு பஸ்களில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) பொது மேலாளர், திருப்பூர் மண்டல அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களை சேர்ந்த பஸ்களில் பயணிகள் பயணம் செய்யும் போது, பயண சீட்டை பெற்றுக் கொண்டு கட்டண தொகை கொடுக்கும் போது, நடத்துனர்கள் 10 ரூபாய் நாணயத்தை பெற மறுக்கின்றனர் என, சென்னை இந்திய ரிசர்வ் வங்கி துணை பொது மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய ரிசர்வ் வங்கி இதுவரை 14 வகையான 10 ரூபாய் நாணயத்தை வெளியிட்டுள்ளது என்ற விவரங்கள் பத்திரிக்கை மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் அனைத்தும் சட்ட பூர்வமானவை.

    எனவே இனி வருகிற காலங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கோவை) லிமிடெட் திருப்பூர் மண்டல பஸ்களில் பயணம் செய்யும் பயணிகள் பயண சீட்டு கட்டணம் கொடுக்கும் போது, 10 ரூபாய் நாணயம் கொடுத்தால் அதனை மறுக்காமல் நடத்துனர்கள் பயண சீட்டு கொடுக்க வேண்டும். 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் நடத்துனர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே அனைத்து கிளை மேலாளர்களும் தகவல் பலகை மூலமாக இந்த தகவலை அனைத்து நடத்துனர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். மேலும் இதுபோன்ற புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வராத வகையில் நடந்துகொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
    • அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட்டார் ெரயில் நிலையத்திலிருந்து இன்று அரசு பஸ் வடசேரி பஸ் நிலையத்திற்கு சென்றது. பஸ்ஸில் ஏராளமான பயணிகள் இருந்தனர். செட்டிகுளம் பகுதியில் பஸ் வந்து கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் திடீரென பஸ்ஸின் மீது கல்வீசினார்.

    இதில் பஸ்ஸின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.அந்த வாலிபர் அந்த பஸ்ஸின் பின்னால் வந்த மற்றொரு பஸ் மீதும் கல்வீசி தாக்கினார். அந்த பஸ்ஸின் கண்ணாடியும் உடைந்தது. இரு பஸ்களின் கண்ணாடியும் உடைந்ததையடுத்து அந்த வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.பின்னர் கோட்டார் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்கள் பிடியில் இருந்த அந்த வாலிபரை மீட்டு கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.உடைக்கப்பட்ட இரண்டு பஸ்களும் கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. அவர் எதற்காக கல்வீசி பஸ்சை உடைத்தார் என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் பிடிபட்ட வாலிபர் சிறிது மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் தெரிகிறார்.

    அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து இரண்டு பஸ்களில் கல்வீசி உடைக்கப்பட்ட சம்பவம் கோட்டாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • அனுமந்தை டோல்கட்டில் அரசு பஸ்சில் ஏறி போலீசார் சோதனை செய்தனர்.
    • புதுவையில் இருந்து 15 பாக்கெட் கொண்ட பாக்கெட் சாராயத்தை கடத்தி வந்து உள்ளார்.

    விழுப்புரம்:

    மரக்காணம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் , அனுமந்தை டோல்கட்டில் அரசு பஸ்சில் ஏறி போலீசார்சாசோதனை செய்தனர். அப்போது சாராயம் கடத்தி வந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் செங்கல்பட்டு மாவட்டம் ஆண்டாள் குப்பம் சித்தூரை சேர்ந்த ரமேஷ் (வயது 39) என தெரியவந்தது. இவர் இவர் புதுவையில் இருந்து 15 பாக்கெட் கொண்ட பாக்கெட் சாராயத்தை கடத்தி வந்து உள்ளார். இவரை போலீசார் கைது செய்தனர்.

    • குட்டையின் கரை பகுதியில் மழை பெய்து சேரும் சகதியுமாக இருந்ததால், அதில் பஸ்சின் முன் சக்கரம் இறங்கி விபத்து ஏற்பட்டது.
    • வார்டு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள், அங்கிருந்த பொக்லைன்எந்திரத்துடன் பஸ்சை க மீட்டனர்.

     பல்லடம்:

    பல்லடம் அரசு போக்குவரத்துக் கழக பஸ் எண் 30. இந்த பஸ் பல்லடம்- திருப்பூர் வழித்தடத்தில் சேடபாளையம், ஆறுமுத்தாம்பாளையம்ய, கரைப்புதூர், வழியாக திருப்பூர் சென்று வருகிறது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் இருந்து திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததபோது ஆறுமுத்தாம்பாளையத்தில் உள்ள குட்டை அருகே செல்லும்போது எதிரே வந்த காருக்கு வழி விடுவதற்காக ஓட்டுநர் பஸ்சை ரோட்டின் ஓரமாக ஓட்டினார்.

    இதில், குட்டையின் கரை பகுதியில் மழை பெய்து சேரும் சகதியுமாக இருந்ததால், அதில் பஸ்சின் முன் சக்கரம் இறங்கி விபத்து ஏற்பட்டது. இதனால் பஸ் லேசாக சாய்ந்த நிலையில் இருந்தது.பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வார்டு உறுப்பினர் முத்துக்குமார் மற்றும் பொதுமக்கள், அங்கிருந்த பொக்லைன்எந்திரத்துடன் பஸ்சை க மீட்டனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், விடுமுறை நாளில் இந்த விபத்து ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக எந்த சேதமும் இல்லை. இதுவே மற்ற நாளில் நடந்திருந்தால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் உள்பட பொதுமக்கள் நிறைய பேர் பயணம் செய்திருப்பார்கள். அவர்கள் விபத்தில் சிக்கி இருந்தால் வேறு நிலை ஏற்பட்டிருக்கும், அதிர்ஷ்டவசமாக அப்படி ஏதும் நடக்கவில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • கணவன்-மனைவி இருவரும் கரும்பு வெட்டும் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.
    • பிரேமலதா பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    கள்ளக்குறிச்சி:  

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பொரசப்பட்டு காட்டுகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மனைவி பிரேமலதா (வயது 32). கணவன்-மனைவி இருவரும் கரும்பு வெட்டும் வேலைக்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர். இருசக்கர வாகனம் புதூர் ஏரிக்கரை அருகே சென்றபோது எதிரே வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அப்போது இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பிரேமலதா பஸ் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்த தகவலின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிரேமலதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவர் கண்முன்னே மனைவி உடல் நசுங்கி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×