என் மலர்
நீங்கள் தேடியது "மனிதநேய மக்கள் கட்சி"
சென்னை:
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-
ஜனவரி 28-ந்தேதி நடை பெறுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த திருவாரூர் சட்ட மன்ற இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்திருப்பது மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கிறது. திருவாரூர் இடைத்தேர்தலை நிறுத்துவதற்குத் தேர்தல்ஆணையம் ஒன்பது காரணங்களை கூறியிருக்கிறது.
இந்தக் காரணங்கள் அனைத்தும்நியாயமானவை. ஆனால் புதியவை அல்ல. திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தலை அறிவிப்பதற்கு முன்பும் இதே காரணங்கள் இருந்தன. அப்போது ஏன் இந்தக் காரணங்களை தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வில்லை என்ற நியாயமான கேள்வி எழும்புகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை நிறுத்திய அறிவிப்பு வெளியிடும் வரையில் ஆளும் அதிமுக வேட்பாளரை அறிவிக்காதது ஒரு பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.
வருகின்ற பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் காலியாகஉள்ள 20 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த வேண்டுமென மனித நேய மக்கள் கட்சி கேட்டுக் கொள்கிறது. இதன்மூலம் தேர்தல் செலவினங்களும் பெருமளவில் குறைவதற்கான வாய்ப்புள்ளது அது மட்டுமல்ல இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் 20 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடை பெற்றது இல்லை எனவே பாராளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்றத்திற்கான இடைத்தேர்தலை நடத்துவது தான் அறிவுடைமையாகும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #ThiruvarurByElection
மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாக குழுக் கூட்டம் கட்சியின் தலைமையகத்தில் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழக சட்டமன்றத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க அயராது பாடுபடுவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
கடந்த 2016 சட்டமன்றத்தேர்தலின் போது தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட ஆம்பூர் தொகுதியை ம.ம.க.விற்கு ஒதுக்குமாறு தி.மு.க. தலைமையை கேட்டுக் கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது. #tamilnews
மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் திருச்சியில் நாளை அரசமைப்பு சட்ட மாநாடு நடக்கிறது. மாநாடு ஏற்பாடுகளை பார்வையிட திருச்சி வந்த அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து ஜனநாயகத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
தமிழக அரசானது 2 முறை சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்றியும் அதனை கிடப்பில் வைத்துள்ளது. மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கைகள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
எனவே மதச்சார்பற்ற கட்சிகளை ஓரணியில் திரட்டும் வகையில் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு மாநாட்டை திருச்சியில் நாளை நடத்தவுள்ளோம். மாநாட்டில் மும்மத தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.
மத்திய அரசுக்கு இந்த மாநாடு ரெட் அலர்ட் ஆக அமையும். வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் மதச்சார்பற்ற கட்சிகளை ஓரணியில் திரட்டி மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசை ஆட்சியிலிருந்து அகற்றுவோம். திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மனித நேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும். இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான அணியின் வெற்றிக்கு பணியாற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார். #DMK #Jawahirullah
மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், ராமநாதபுரம் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு பற்றி ஐ.நா. சபையில் பேசியதற்காக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பல பொய் வழக்குகளைப் பதிவு செய்து தமிழக அரசு சிறையில் அடைத்துள்ளது.
தனியறையில் அடக்கப்பட்டுள்ள திருமுருகன் காந்தி அந்த அறையை விட்டால், வேறெங்கும் செல்லவோ, யாருடனும் பேசவோ அனுமதிக்கப்படுவதில்லை. அவருக்கு சுகாதாரமான உணவு வழங்கப்படவில்லை, இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் மருத்துவ சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இது அப்பட்டமான மனித உரிமை மீறிய செயலாகும். காவல்துறையின் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் திருமுருகன் காந்தியை மன ரீதியாக பலவீனமாக்கி விடலாம் என்று கனவு கண்டால் அது வெறும் பகல் கனவாகவே இருக்கும் என்பதை மத்திய- மாநில அரசுகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார். #ThirumuruganGandhi
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு பற்றி ஐ.நா. சபையில் பேசியதற்காக, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது பல பொய் வழக்குகளைப் பதிவு செய்து தமிழக அரசு சிறையில் அடைத்துள்ளது.
திருமுருகன் காந்தியை சிறையில் அடைத்தது முதல் இன்று வரை தமிழக காவல்துறையும், சிறைத்துறையும் அவரை மிகவும் கொடூரமான முறையில் நடத்தி வருகிறது. சிறையில் பாம்புகள், புழுப் பூச்சிகள் நிறைந்த பாழடைந்த தனியறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவர் அந்த அறையை விட்டால், வேறெங்கும் செல்லவோ, யாருடனும் பேசவோ அனுமதிக்கப்படுவதில்லை. அவருக்குச் சுகாதாரமான உணவு வழங்கப்படவில்லை, இதனால் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய நிலையில் மருத்துவ சிகிச்சை பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் குறைந்தது இரண்டு நாட்களாவது உள்நோயாளியாக சிகிச்சைப் பெறவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்திய பின்பும், அதற்கு அனுமதியளிக்க முடியாது எனக் காவல்துறை மறுத்துள்ளது அப்பட்டமான மனிதஉரிமை மீறிய செயலாகும். காவல் துறையின் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
திருமுருகன் காந்தி உடல்நிலை இருக்கும் நிலையில் சிகிச்சை அளிக்காமல் தன்னால் அனுப்ப இயலாது என்று மருத்துவர் தெரிவித்த பின்பு தற்போது அடுக்கம்பாறை மருத்துவமனையின் ஐ.எம்.சி.யூ. எனும் வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருமுருகன் காந்தியை உடல் ரீதியாகப் பலவீனமாக்கி அவரது குரல்வலையை நெரித்துவிடலாம் என்று கனவு கண்டால் அது வெறும் பகல் கனவாகவே இருக்கும் என்பதை மத்திய, மாநில அரசுகளுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.