search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227679"

    • போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    • சம்பவம் நாமக்கல் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல்லை அடுத்த செல்லப்பா காலனியில் உள்ள கீழ் காலனியை சேர்ந்தவர் லோகேஷ்வரன் (வயது22). கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பை முடித்து விட்டு தேர்வு முடிவை எதிர்பார்த்து இருந்தார்.

    இந்த நிலையில் லோகேஷ்வரன் ஆன்லைன் செயலி மூலம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது. தவணை தேதி முடிந்ததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதற்காக ஆன்லைன் செயலி நிறுவனத்தார் லோகேஷ்வரனை தொடர்பு கொண்டுள்ளனர்.

    ஆனால் அவர் முறையாக பதில் அளிக்காததால், லோகேஷ்வரனின் பெற்றோரை, கடன் கொடுத்தவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

    இதனால், தான் ஆன்லைனில் கடன் வாங்கியது பெற்றோருக்கு தெரிந்து போனதை அடுத்து மனமுடைந்த லோகேஷ்வரன், வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டார்.

    இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் லோகேஷ்வரனை மீட்டு நாமக்கல்லில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

    தகவல் அறிந்து அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த நாமக்கல் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆன்லைனில் கடன் செயலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாமக்கல் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • என் மீது நம்பிக்கை வைத்து ஆட்டோவில் பயணம் செய்ய அனுமதித்தீர்கள்.
    • தற்போது 30 ஆண்டுகள் கடந்து விட்டது.

    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலம் கோழஞ்சேரியை சேர்ந்தவர் பாபு (வயது 62). இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்தநிலையில் 53 வயது மதிக்கத்தக்க ஒருவர் பாபுவை சந்தித்தார். அப்போது அவர் ஒரு கவரை பாபுவிடம் கொடுத்தார். அதை பிரித்துப்பார்த்த பாபு அதிர்ச்சி அடைந்தார். அதில் பல ரூபாய் நோட்டுகள் இருந்தன.

    இந்த பணம் என்று பாபு பேசத்தொடங்கியதும், எதிரில் நின்ற நபர் என் பயண கடன்...அதைத்தான் தற்போது தீர்க்க வந்துள்ளேன் என்று கூறி புதிர்போட்டார். எதுவும் புரியாமல் விழிபிதுங்கி நின்ற பாபுவிடம் உங்கள் கையில் 10 ஆயிரம் ரூபாய் இருக்கிறது. அது உங்களுக்குத்தான் வைத்துக்கொள்ளுங்கள் என்று அந்த நபர் கூறினார்.

    மேலும், அவர் தான் திருவனந்தபுரத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாகவும், தனது பெயர் அஜித் என்றும் அறிமுகப்படுத்திக்கொண்டார். அதன்பிறகு அந்த பணத்தை கொடுத்ததற்கான காரணத்தை தெரிவித்தார். அதன்விவரம் வருமாறு:-

    கடந்த 1993-ம் ஆண்டு நான் சங்கனாச்சேரியில் பி.எட். படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது மங்கலத்துநடையில் உள்ள எனது நண்பர் வீட்டிற்கு சென்றுவிட்டு மூவாற்றுப்புழா செல்ல பஸ்சிற்காக காத்து நின்றேன். பஸ் வராததால் ஆட்டோவில் செல்ல முடிவு செய்தேன். ஆனால் என்னிடம் பஸ்சில் செல்வதற்கான பணம் மட்டுமே கையில் இருந்தது. அப்போது ஆட்டோ டிரைவரிடம் ரூ.100 பிறகு தருவதாக கூறி வீட்டிற்கு சென்றேன்.

    இடைப்பட்ட காலத்தில் பல முறை உங்களை சந்தித்து ஆட்டோ கட்டணத்தை கொடுக்க முயன்றேன். ஆனால், முடியவில்லை. வாய் வார்த்தை என்றாலும் கூட அதுவும் கடன்தானே. இப்போது ரூ.100 பெரிய தொகையல்ல. அந்த காலத்தில் அது பெரிய தொகை. என் மீது நம்பிக்கை வைத்து ஆட்டோவில் பயணம் செய்ய அனுமதித்தீர்கள்.

    தற்போது 30 ஆண்டுகள் கடந்து விட்டது. தங்களை சந்திக்கும் வாய்ப்பு இப்போதுதான் கிடைத்தது. ஆதலால் ரூ.100-க்கு பதிலாக ரூ.10 ஆயிரம் தந்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அப்போதுதான் பாபுவிற்கும் அந்த பழைய சம்பவம் நினைவுக்கு வந்தது. ஆனால் அந்த பணத்தை ஏற்றுக்கொள்ள பாபு மறுத்தார். அதே நேரம் விடாப்பிடியாக அன்புடன் அந்த பணத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அஜித் கூறினார். ரூ.100 கடனை 30 ஆண்டுகள் கடந்தும் நேர்மையுடன் ரூ.10 ஆயிரமாக ஆசிரியர் திருப்பி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
    • தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கடன் உதவி

    தமிழ்நாடு பிற்படுத்த ப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாரர் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 60 வயதுக்கு மேற்படா தவராக இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும்.

    தனிநபர் கடன் திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரை ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. பெண்க ளுக்கான புதிய பொற்கால கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் வரை கடனுதவி வழங்கப்ப டுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 5 சதவீதம் ஆகும்.

    நுண்கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழு மற்றும் ஆண்கள் சுய உதவிக்குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ. 1.25 லட்சம் வரையும் குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 15 லட்சம் வரையும் வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 4 சதவீதம். மகளிர் சுய உதவிக்குழு தொடங்கி 6 மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். மகளிர் திட்டம் திட்ட அலுவலரால் தரம் ஆய்வு செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 உறுப் பினர்கள் அனுமதிக்கப் படுவார்கள்.

    விண்ணப்பம்

    ஒரு பயனாளிக்கு ரூ. 30 ஆயிரம் வீதம் 2 கறவை மாடுகள் வாங்க ரூ. 60 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படுகிறது. ஆண்டு வட்டி விகிதம் 6 சதவீதம் ஆகும். புதிய கடன் திட்டங்களாக இளம் தொழிற்கல்வி பட்டதாரி களுக்கு சுய தொழில் தொடங்குவதற்கான கடன் திட்டம், மரபு சார்ந்த கலைஞர்கள் மற்றும் கைவி னைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்தவும், சுய தொழில் தொடங்க கடன் திட்டம், சிறு விவசாயிகள் மற்றும் காய்கறி பயிரிடுவோருக்கான சிறுகடன் திட்டம், சிறு, குறு விவசாயிகளுக்கு நீர்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் திட்டம் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

    விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு சங்க ங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பப் படிவத்தை கட்டணமின்றி பெற்று விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பத்துடன் சாதிச்சான்றிதழ் நகல், வருமானச்சான்று நகல், இருப்பிடச்சான்று நகல், குடும்ப அட்டை நகல், ஓட்டுனர் உரிமம், ஆதார் நகல், முன்னணியில் உள்ள நிறுவனம் ஒன்றில் இருந்து விலைப்புள்ளி மற்றும் ரூ. 1 லட்சத்துக்கு மேல் இருப்பின், திட்ட தொழில் அறிக்கை ஆகிய ஆவணங்க ளுடன், தூத்துக்குடி இணை பதிவா ளர் (கூட்டுறவு சங்கங்கள்) மத்திய, நகர, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்து ஒப்புகை பெற்றுக் கொள்ள வேண்டும்.

    மேலும் வெண்மைப்புரட்சி ஏற்படு த்தும் வகையில் கறவைமாடு கொள்முதல் கடன் பெருமளவில் பெறுவதற்கு ஆவின் மேலாளரை அணுகுமாறும், இந்த கடன் திட்டத்தில் பயனடைந்து பெருமளவு தொழில் முனைவோர்களாக மாறும் சூழலை ஏற்படுத்தி பொரு ளாதாரத்தை மேம்படுத்து மாறும் கேட்டுக் கொள்கி றோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.
    • இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உதவி அளித்தன.

    கொழும்பு :

    கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் பெட்ரோல், டீசல், மருந்து, உணவு பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தது.

    இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உதவி அளித்தன. இந்தியா மொத்தம் ரூ.32 ஆயிரத்து 800 கோடி கடன் அளித்தது.

    அவற்றில் ஒரு பகுதியாக, ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடன் அளிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம், பாரத ஸ்டேட் வங்கிக்கும், இலங்கை அரசுக்கும் இடையே கையெழுத்தானது. இந்த கடனின் கால அளவு 2024-ம் ஆண்டு மார்ச் மாதம்வரை ஆகும்.

    இருப்பினும், பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் மீளாத இலங்கை, மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க பணம் தேவைப்படுவதால், மேற்கண்ட கடன் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.

    இந்தியாவும் அதை ஏற்றுக்கொண்டு, ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. இதுதொடர்பான திருத்த ஒப்பந்தம், இலங்கை மந்திரி சினேகன் சேமா முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.

    இதன்மூலம், இந்தியா அளித்த கடன்தொகையை அத்தியாவசிய பொருட்கள் வாங்க இலங்கை மேலும் ஓராண்டு காலத்துக்கு பயன்படுத்த முடியும் என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

    • கடந்த மே 12ம் தேதி, கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தருவது தொடர்பாக பெண்ணுடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
    • துர்நாற்றம் வீசாமல் இருக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உடல் பாகங்களில் வாசனை திரவியம் மற்றும் பினாயில் ஊற்றி பாதுகாத்து வந்துள்ளார்.

    தெலுங்கானா மாநிலம், ஐதரபாத்தில் உள்ள முசி ஆறு அருகே கடந்த 17ம் தேதி அன்று பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பணியில் இருந்த உள்ளூர் குடிமைப் பணியாளர்கள் துண்டிக்கப்பட்ட தலை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போலீசில் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளியையும், உடல் பாகங்களையும் கண்டுபிடிக்க 8 போலீஸ் குழுக்களை அமைத்தனர். மேலும், அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதில், ஐதரபாத்தை சேர்ந்த 48 வயது நபர் 55 வயதான பெண்ணுடன் தகாத உறவில் இருந்ததும், ரூ.7 லட்சம் கடனை கேட்டதற்காக பெண்ணை கொலை செய்து தலையை துண்டித்து வீசியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் (தென் கிழக்கு மண்டலம்) சி.எச்.ரூபேஷ் கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்ட நபர், உள்ளூர் நிதி முகவராக இருந்த 55 வயது பெண்ணுடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு முதல் அவர் செலுத்த வேண்டிய ரூ.7 லட்சம் பணத்தை திருப்பித் தருமாறு அந்த பெண் தொடர்ந்து கேட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில், கடந்த மே 12ம் தேதி, கடனாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தருவது தொடர்பாக பெண்ணுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த நபர் பெண்ணை கத்தியால் கொடூரமாகக் குத்தி கொன்றுள்ளார்.

    பின்னர், அந்த நபர் பெண்ணின் தலையை துண்டித்து, உடற்பகுதியில் இருந்து கால்கள் மற்றும் கைகள் மற்றும் உறுப்புகளை வெட்டி, தனது வீட்டில் குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்து வந்துள்ளார்.

    பின்னர், மே 15ம் தேதி பெண்ணின் தலையை கருப்பு கவரில் வைத்து முசி ஆறு கரை அருகே உள்ள குப்பை கிடங்கில் வீசியுள்ளார்.

    மேலும், அந்த நபர் தான் தங்கியிருந்த பகுதியில் துர்நாற்றம் வீசாமல் இருக்க மறைத்து வைக்கப்பட்டிருந்த உடல் பாகங்களில் வாசனை திரவியம் மற்றும் பினாயில் ஊற்றி பாதுகாத்து வந்துள்ளார்.

    இந்நிலையில் போலீசாரிடம் சம்பந்தப்பட்ட நபர் கையும் களவுமாக சிக்கியுள்ளார்" என்றார்.

    • கடந்த 2020ம் ஆண்டு அவசர தேவைக்காக சண்முகத்திடம் ரூ.5 லட்சத்தை ராஜேந்திரகுமார் வாங்கியுள்ளார்.
    • விசாரணைக்கு ஆஜராகாததால், ராஜேந்திரகுமாருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் பனப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் என்கிற சண்முகம்(வயது 52). தையல் கலைஞரான இவர் தி.மு.க.வில் கிளை நிர்வாகியாக உள்ளார்.

    இவருக்கும் தி.மு.க. நகர செயலாளராக இருக்கும் ராஜேந்திரகுமார் என்பவருக்கும் வரவு - செலவு நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு அவசர தேவைக்காக சண்முகத்திடம் ரூ.5 லட்சத்தை ராஜேந்திரகுமார் வாங்கியுள்ளார்.

    இதையடுத்து சண்முகம் பணத்தை திருப்பி கேட்டபோது, ராஜேந்திரகுமார் ரூ. 5 லட்சத்திற்கான காசோ லையை கொடுத்துள்ளார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து சண்முகம் பல்லடம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது விசாரணைக்கு ராஜேந்திரகுமார் ஆஜராகவில்லை. தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால், ராஜேந்திர குமாருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திர குமார் இன்று காலை பல்லடம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    • கடன் கொடுத்தவர்கள் செந்தமிழ் செல்வனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.
    • வாழ்க்கையில் விரக்தி அடைந்த செந்தமிழ் செல்வன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் கூட்டுறவு காலனி பாலாஜி நகரை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன் (வயது39). இவர் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் செந்தமிழ் செல்வன் சில இடங்களில் கடனுக்கு பணம் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் கடனை திருப்பி செலுத்தவில்லை.

    இதனால் கடன் கொடுத்தவர்கள் செந்தமிழ் செல்வனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். இதன் காரணமாக அவர் கடனை திருப்பி செலுத்த முடியவில்லையே என மன வேதனையில் இருந்தார்.வாழ்க்கையில் விரக்தி அடைந்த செந்தமிழ் செல்வன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து செந்தமிழ் செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனை தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • கூட்டுறவு வங்கி கோரும் மற்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    திருப்பூர் :

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுயஉதவிக்குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படுகிறது.

    திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி, ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்களின் மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, ரேஷன் கார்டு, இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம், கூட்டுறவு வங்கி கோரும் மற்ற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    கல்விக்கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுசான்றிதழ், உண்மை சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 0421 2999130 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கலைஞர்களுக்கு அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.
    • கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    இதில் திட்டம் 1-ன் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98 ஆயிரத்துக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். திட்டம் 2-ன் கீழ் பயன் பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

    திட்டம் 1-ன் கீழ் தனிநபர் கடன் ஆண்டிற்கு 6 சதவீத வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.20 லட்சமும் திட்டம் 2 -ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதவட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.30 லட்சம் கடன் வழங்கப்படுகிறது.

    கைவினை. கலைஞர்களுக்கு ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்க ளுக்கு 4சதவீதம் வட்டி விகிதத்திலும் அதிகபட்ச கடனாக ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழுக்கடன் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் ஆண்டிற்கு 7 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது.

    திட்டம் 2 -ன் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 5 சதவீத வட்டி விகிதத்திலும் நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வீதம் கடன் வழங்கப்படுகிறது.

    மேலும் சிறுபான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, தொழில்நு ட்பக்கல்வி பயில்பவர்களுக்கு அதிகபட்சமாக திட்டம் 1 - ன் கீழ் ரூ.20 லட்சம் வரையில் 3 சதவீத வட்டி விகிதத்திலும், திட்டம் 2 - ன் கீழ் மாணவர்க ளுக்கு 8 சதவீதம், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் ரூ.30 லட்சம் வரையிலும் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

    எனவே தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்துவ இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள் கடன் விண்ணப்பங்களை பெற்று அதனை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

    கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச் சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதற்காக இருந்தால் மட்டும்) மற்றும் கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்கள் சமர்பிக்கப்பட வேண்டும்.

    கல்வி கடனுக்கு விண்ணப்பிக்கும் போது பள்ளி மாற்று சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணங்கள் செலுத்திய ரசீது செலான் மற்றும் மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் ஒளிப்பட நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வங்கியில் நகை கடன் மற்றும் பல்வேறு தொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.
    • மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகர கூட்டுறவு கடன் சங்கம் கடந்த 24 ஆண்டுகளாக இயங்கி வருகிறது .

    இந்த கூட்டுறவு சங்கத்தில் சுமார் 8000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். வங்கியில் நகை கடன் மற்றும் பல்வேறு தொழில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த வங்கியில் மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க கடன் வழங்கும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு வங்கி செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார்.

    விழாவில் மறைஞாயநல்லூர் பொன்னாங்காட்டை சேர்ந்த மரிக்கொழுந்து மகளிர் சுய உதவி குழுவிற்கு சிறு தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் கடன் உதவி நகர கூட்டுறவுவங்கி தலைவர் (பொறுப்பு) அன்பரசு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் வங்கி பணியாளர்கள் கண்ணன், மகாராஜன், நகராட்சி மகளிர் சுய உதவி குழு ஒருங்கிணைப்பாளர் செல்லம்மாள் மற்றும் வங்கி பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டனர்.

    • கடனை திருப்பி கேட்டவருக்கு மிரட்டல் விடுத்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோட்டை தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (62). இவர் அந்த பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் புனரமைப்பு பணிக்காக இவரிடம் கோவில் நிர்வாக குழுவினர் ரூ.10 லட்சம் கடன் வாங்கி உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் கடனை திருப்பி தராமல் இருந்துள்ளனர். சந்திரசேகரன் அவரிடம் கடனை திருப்பி கேட்க சென்ற போது அவரை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சந்திரசேகரன் வழக்கு தொடர்ந்தார்.

    அதில் கோர்ட் உத்தரவின்படி பெருமாள் (72), லட்சுமணன் (62), கோவிந்தராஜ், முத்துகுமார், சீனிவாசன், ராமசந்திரன் உள்ளிட்ட 9 பேர் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உற்பத்திக் குழு கூட்டம் கலெக்டர் கார்மேகம் நடைபெற்றது.
    • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை உற்பத்திக் குழு கூட்டம் கலெக்டர் கார்மேகம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தேங்காய், நிலக்கடலை, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட உற்பத்திப்பொருட்களை இடைத்தரகர்கள், கமிஷன் இன்றி மறைமுக ஏல அடிப்படையில் அதிக பட்ச விலைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கருமந்துறை, சங்ககிரி, கொங்கணாபுரம், கொளத்தூர், மேச்சேரி, ஓமலூர், காடையாம்பட்டி, எடப்பாடி ஆகிய 14 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விற்று பயனடையலாம்.

    மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை சேலம், ஆத்தூர், கெங்கவல்லி மற்றும் தலா 2 இடங்களில் மேச்சேரி, வாழப்பாடி என 7 வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட குளிர்பதனக் கிடங்குகளில் 6 மாதங்கள் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். சேலம் மாவட்டத்தின் இயல்பான ஆண்டு மழையளவு 997.9 மி.மீ ஆகும். ஏப்ரல் மாதம் முடிய இயல்பாக பெய்ய வேண்டிய மழையளவு 86.0 மி.மீ ஆகும். ஆனால் நடப்பு ஆண்டில் (30.4.2023 வரை) 76.5 மி.மீ மழை பெய்துள்ளது. நடப்பு பருவத்திற்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கள் போன்ற இடுபொருட்கள் போதுமான அளவு வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளது. விவசாயிகள் பயன்பெற தங்கள் அருகிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×