என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெக்கானிக் பலி"

    • ஆற்றில் சித்திக் விழுந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது.
    • இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாணார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தாஜுதீன் (74). இவரது மனைவி ஆகி சர்ஜாத். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    இதில் இளைய மகன் சித்திக் அலி (35). இவர் அதே பகுதியில் இருசக்கர மெக்கானிக் கடை நடத்தி வந்தார். இவருக்கு ஒரு வருடமாக குடிப்பழக்கம் இருந்து வந்துள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று மாலை அனுப்பர்பாளையம் பரிசல் துறையில் உள்ள ஆற்றில் சித்திக் விழுந்து விட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் கிடைத்தது. மேலும் இது குறித்து சத்தியமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சித்திக் அலியை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சித்திக் அலி இறந்து விட்டதாக தெரிவித்தனர். சித்திக் அலி தவறி விழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என தெரியவில்லை.

    இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் வழக்கு பதிவு
    • கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட வேனை தேடி வருகின்றனர்

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த பெரியகுக் குண்டி பகுதியை சேர்ந்தவர் பூபதி. இவரது மகன் தினகரன் (வயது 20). அதேப்பகுதியில் மெக்கானிக் கடை நடத்தி வந்தார்.

    நேற்று இரவு தினகரன் பைக்கில் சின்னகுக்குண்டி பகுதியில் இருந்து ஆற்காடு நோக்கி வந்தார். ஆற்காடு அடுத்த புதுப்பாடி அருகே சென்ற போது ஆற்காட்டில் இருந்து செய்யாறு நோக்கி சென்ற கர்நாடகா மாநில பதிவு எண் கொண்ட வேன் தினகரன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட தினகரன் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

    • சரக்கு வாகனம் மோதி மெக்கானிக் பலியானார்.
    • விபத்துகுறித்து திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் முகமதுஷா புரத்தை சேர்ந்தவர் பிரதீப் (வயது 34). இவர் மறவ மங்கலம் பகுதியில் உள்ள மெக்கானிக் கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் இன்று மதியம் பிரதீப் வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். 4 வழிச்சாலை மெட்டல் பவுடர் கம்பெனி அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பிரதீப் தலையில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தார். விபத்து குறித்து அப்பகுதி யினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தாமதமாக வந்ததால் 20 நிமிடம் வரை உயிருக்கு போராடிய பிரதீப் பரிதாபமாக இறந்தார். விபத்துகுறித்து திருமங்க லம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதியது
    • போக்குவரத்து பாதிப்பு

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம், கொண்டாபுரம் கன்னங்குள மேட்டுத் தெருவை சேர்ந்த கருணாகரன் (வயது50). இவர் லாரி மெக்கானிக். இவருக்கு சொந்தமான டிராக்டரில் தண்ணீர் லோடு சப்ளை செய்து வந்தார்.

    கருணாகரன் நேற்று பெரும்புலிப்பாக்கம் பகுதியில் இருந்து டிராக்டரில் தண்ணீரில் ஏற்றுக்கொண்டு காவேரிப்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    ஓச்சேரி அடுத்த களத்தூர் சந்திப்பு அருகே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக கருணாகரனின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் கருணாகரன் டிராக்டர் அடியில் சிக்கி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அங்கிருந்தவர்கள் அவளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் காவேரிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான,அவளூர் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழி மற்றும் போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்துக்குள்ளான டிராக்டரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    இதனால் அப்பகுதி சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து அவளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் தேனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
    • முத்துதேவன்பட்டி பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர புளியமரத்தில் பைக் மோதியது.

    சின்னமனூர்:

    தேனி அருகே வீரபாண்டி கூழையனூரை சேர்ந்தவர் சிவா (வயது32). இவர் தேனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்.

    முத்துதேவன்பட்டி பகுதியில் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோர புளியமரத்தில் பைக் மோதியது. இதில் காயம் அடைந்த சிவாவை தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து சிவாவின் தந்தை சந்தானம் அளித்த புகாரின் பேரில் வீரபாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    எபின் மரணமடைந்து ஒன்றரை மாதங்கள் ஆகியும் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
    இரணியல்:

    நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் இலுப்பையடிகாலனி பகுதியை சேர்ந்தவர் எபின் (வயது51). இவர் சவுதிஅரேபியா ரியாத்தில் உள்ள அல்கசாவில் மெக்கானிக் வேலை பார்த்து வந்தார்.

    இவர் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி தொழிற்பேட்டை வளாகத்திற்குள் எதிர்பாராத விதமாக நடந்த கார் விபத்தில் எபின் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், ஏப்ரல் 16-ந் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த நிலையில் எபின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டி அவரது மனைவி புனிதாபாய் (47) ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கும், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மற்றும் மாவட்ட, மாநில நிர்வாகத்திற்கும் மனுக்கள் அனுப்பி உள்ளார். அதில், விபத்தில் மரணமடைந்த தனது கணவர் உடலை மீட்டு இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

    எபின் மரணமடைந்து ஒன்றரை மாதங்கள் ஆகியும் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். இதனிடையே அவரது 2 மகன்களும் தந்தையை இழந்த சோகத்திற்கிடையில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வையும் எழுதியுள்ளனர். கடந்த ஒன்றரை மாதங்களாக வெளிநாட்டில் இருக்கும் எபின் உடலை மீட்டு இந்தியா கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
    • கோவையிலிருந்து கரூரை நோக்கி வந்த அரசு பஸ் செந்தில்குமார் மீது மோதியது.
    • கோவை -கரூர் ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் எம்.பழனிச்சாமி நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42) . கார் மெக்கானிக் . செந்தில்குமார் நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு கோவை -கரூர் ரோட்டில் வெள்ளகோவில் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகில் மோட்டார் சைக்கிளில் சென்றார்.அப்போது கோவையிலிருந்து கரூரை நோக்கி வந்த அரசு பஸ் செந்தில்குமார் மீது மோதியது. இதில் செந்தில்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்தவர்கள் செந்தில்குமாரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செந்தில்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இந்த விபத்து குறித்து பஸ்சை ஓட்டி வந்த தேனி மாவட்டம், உப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த டிரைவர் வசந்தராஜா (37) என்பவர் மீது வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • குழந்தைகள் இல்லாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த துந்தரீகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் தினகரன் ( வயது 32 ) . சென்னையில் உள்ள தனியார் செல்போன் டவர் அமைக்கும் நிறுவனத்தில் மெக் கானிக்காக வேலை செய்து வந்தார் . இவருக்கு ஆரணி அடுத்த அக்ராப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சரோஜினி என்ற பெண்ணுடன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தினகரன் மது போதைக்கு அடிமையாகிய தாக கூறப்படுகிறது, கடந்தசிலநாட்களுக்கு முன்பு மனைவி சரோஜினி அவரது தாய் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.

    இந்த நிலையில் தினகரனும் தனது தாய் வீடான துந்தரீகம்பட்டு கிராமத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சனிக்கிழமை சாமி கும்பிடுவதற்காக வந்துள்ளார். அப்போது அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது.

    நேற்று காலை நீண்டநேரமாகியும் அவர் எழுந்திருக்காமல் மயக்கநிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தினகரன் ஏற்க னவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது தாய் வசந்தா ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப் - இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    போடி அருகே மனைவி கண் முன் மெக்கானிக் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே உள்ள செல்லாயிபுரத்தைச் சேர்ந்தவர் செல்லையா (வயது 28). மெக்கானிக்காக இருந்தார். அவரது மனைவி பாண்டீஸ்வரி.

    கணவன் மனைவி 2 பேரும் சிலமலையில் உள்ள சந்தைக்கு மோட்டார் சைக்கிளில் காய்கறி வாங்க சென்றனர். பின்னர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தனர்.

    சங்கராபுரம் கூட்டுறவு வங்கி எதிரே வந்த போது சரவணன் என்பவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தார். கண் இமைக்கும் நேரத்தில் 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது. இந்த விபத்தில் செல்லையா தனது மனைவி கண் முன்னே துடிதுடித்து இறந்தார்.

    படுகாயமடைந்த சரவணன் போடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.

    பேரையூர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கீழக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் மணிமாறன் (வயது29). மெக்கானிக்கான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடுமுறையையொட்டி மணிமாறன் ஊருக்கு வந்திருந்தார். சம்பவத்தன்று அவர் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு ஊருக்கு புறப்பட்டார்.

    மேலக்கோட்டை பெரியார் காலனி 4 வழிச்சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் மணிமாறன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உடல்நிலை மோசமானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மணிமாறன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருத்தாசலம் அருகே காரில் பழுது பார்த்து கொண்டிருந்த மெக்கானிக் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அடுத்த பரவளூரைச் சேர்ந்தவர் சீனுவாசன் (43). மெக்கானிக்கான இவர் பரவளூர் பஸ் நிறுத்தத்தில் பஞ்சர் கடை வைத்துள்ளார். இவர் தன்னுடைய கடையின் முன்பு காரில் பழுது பார்த்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சீனுவாசன் மீது மோதியது. 

    இதில் பலத்த காயமடைந்த சீனுவாசன் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பெற்று வந்தார். அங்கு சிகிச்சைப்பனின்றி இறந்தார். 

    புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூரில் மெக்கானிக் ஒருவர் பறவை காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    திருப்பூர்:

    திருப்பூர் அருகே உள்ள முதலிபாளையம் ஊராட்சி மாணிக்காபுரம்புதூரை சேர்ந்தவர் செல்வம் என்கிற முருகசாமி (வயது 58). மெக்கானிக்கல் வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    கடந்த 2-ந் தேதி முருகசாமிக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி தொந்தரவு இருந்து வந்தது. இதையடுத்து அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் காய்ச்சலும், சளியும் அவருக்கு குணமாகவில்லை.

    இதையடுத்து முருகசாமி, ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போதும் அவருக்கு காய்ச்சல் குணமாகவில்லை. இதையடுத்து அங்கு அவருடைய ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்தபோது அவர் பறவை காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

    இந்த நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முருகசாமி இறந்தார். திருப்பூரில் மெக்கானிக் ஒருவர் பறவை காய்ச்சலுக்கு பலியாகி இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சல், மர்ம காய்ச்சல் என பல்வேறு நோய்கள் பொதுமக்களை தாக்கி, அவர்களின் உயிர்களை காவு வாங்கும் நிலையில், தற்போது பறவை காய்ச்சலுக்கு ஒருவர் பலியாகி இருப்பது பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் சுகாதார பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். #tamilnews
    ×