என் மலர்
நீங்கள் தேடியது "இந்து அமைப்பினர்"
- மகாராஷ்டிரத்தின் எதிரியின் மிச்சங்களை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்தார்.
- மகாராஷ்டிர மக்களை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்பதற்காக இந்து அமைப்புகள் கலவரத்தை தூண்டுகின்றன.
மகாராஷ்டிரத்தின் ஔரங்கபாத் நகரில் ஔரங்கசீப் கல்லறை உள்ளது. அந்தக் கல்லறையை அகற்றாவிட்டால் மாநிலம் முழுவது இன்று போராட்டம் நடத்தவிருப்பதாக விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் மிரட்டல் விடுத்தனர்.
மேலும் ஔரங்கசீப்பின் கல்லறை அகற்றப்படாவிட்டால், பாபர் மசூதியைப் போல கரசேவை செய்து கல்லறையை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பஜ்ரங் தளம் மகாராஷ்டிரா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க ஔரங்கசீப் கல்லறையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினர் அங்கு 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், மகாராஷ்டிராவின் புனேவில், ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தின.
விஹெச்பி மாநிலத் தலைவர் கோவிந்த்ஜி ஷிண்டே பேசுகையில், "ஔரங்கசீப் கல்லறையை அகற்றுவதற்கான முடிவுவை முன்னெடுப்பகள் மூலம் நிறைவேற்ற உள்ளோம். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மனு வழங்குதல், கோரிக்கைகள், உருவ பொம்மை எரிப்பு, பொதுக் கூட்டங்கள் மூலம் இதுபற்றி பிரசாரங்கள் மேற்கொள்ளப்படும். இறுதியாக சம்பாஜி நகர் நோக்கி ஊர்வலம் செல்வோம்" என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிராவில் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ அவுரங்கசீப் பற்றி புகழ்ந்ததை அடுத்து அவர் சட்டமன்ற கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அம்மாநில அரசியலில் ஒளரங்கசீப் பிரச்சனை பெரும்பிரச்னையாக மாறியது. முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ், எல்லோரும் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க விரும்புகிறார்கள், சட்டப்படி அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்திருந்தார்.
துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில் "நாங்கள் மராத்தியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம். உண்மையான தேசபக்தன் ஔரங்கசீப்பை போற்றமாட்டான். யாரும் ஔரங்கசீப்பை ஆதரிக்கமாட்டார்கள். மகாராஷ்டிரத்தின் எதிரியின் மிச்சங்களை நாம் ஏன் வைத்திருக்க வேண்டும்?" என்று பேசினார்.

இதற்கிடையில் ஆளும் பாஜக கூட்டணி, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து அமைப்புகள் ஒளரங்கசீப் கல்லறையை இடிக்க தீவிரம் காட்டி வருவதை காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜய் வடேட்டிவார் பேசுகையில், "மகாராஷ்டிர மக்களை நிம்மதியாக வாழவிடக்கூடாது என்பதற்காக இந்து அமைப்புகள் இவ்வாறு கலவரம் ஏற்படுத்த நினைக்கின்றன. மாநிலத்தின் அமைதியைக் குலைக்க இவர்கள் விரும்புகிறார்கள்" என்று தெரிவித்தார்.

முன்னதாக 1992 இல் இந்து அமைப்புகளால் உத்தரப் பிரதேசம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அந்த இடத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 2019 இல் ரூ.1800 கோடி செலவில் ராமர் கோவில் கட்டியது குறிப்பிடத்தக்கது.
+2
- தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாளை பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு மனுஸ்மிருதி புத்தகங்களை வினியோகிக்க தொடங்கினர்.
- தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக ராஜபாண்டியன் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
பாளை பஸ் நிலையம் பகுதியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மனுஸ்மிருதி புத்தகம் வினியோகிக்கப்போவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணியினர் சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பற்றிய துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப் போவதாகவும் அறிவித்தனர். இவற்றிற்கு போலீசார் தடை விதித்தனர்.
மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பாளை பஸ் நிலைய பகுதியில் மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தடையை மீறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பாளை பஸ் நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு மனுஸ்மிருதி புத்தகங்களை வினியோகிக்க தொடங்கினர். நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், செய்தி தொடர்பாளர் முத்துவளவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உடனே அங்கு துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், உதவி கமிஷனர் பிரதீப், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் புத்தகங்களை வினியோகிக்க கூடாது என்றனர். எனினும் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட கரிசல் சுரேஷ் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே பாளை வ.உ.சி மைதானம் இந்து மக்கள் கட்சி தென்மண்டல செயலாளர் ராஜபாண்டியன், மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமையில் கட்சியினரும், இந்து முன்னணி நிர்வாகிகள் விமல், பிரம்ம நாயகம் தலைமையில் அமைப்பினரும் திருமாவளவன் குறித்து துண்டு பிரசுரங்களுடன் திரண்டனர்.
அவர்கள் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக ராஜபாண்டியன் உள்ளிட்ட 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
- சில ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டது.
- நேற்று அதிகாலை போலீஸ் பாதுகாப்புடன் காங்கிரீட் பாலம் அகற்றப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பிரதான சாலை மார்க்கெட் அருகே கழிவு நீர்நீர்வரத்து ஓடையின் மேல்புறம் வணிக வைசிய சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவில் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆக்கிரமிப்புகளை அகற்றிய பின் பக்தர்கள் வழிபாடு செய்வதற்காக தற்காலிக இரும்பு பாலம் அமைக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில் அடுத்த மாதம் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் இரும்பு பாலத்தை அகற்றிவிட்டு கான்கிரீட் பாலம் அமைக்கப்பட்டது. இதனை அகற்ற வலியுறுத்தி உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஓடை மீட்பு குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்து மனு அளித்தனர்.இதற்கிடையே பாலத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வணிக வைசிய சமுதாயத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இப்போது பாலத்தை இடிக்க மாட்டோம் என தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அதிகாலை கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமையில் தாசில்தார் சுசிலா, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் லோகேஸ்வரன், சிவசுப்பு, இன்ஸ்பெக்டர்கள் சுகாதேவி, பத்மாவதி உட்பட போலீஸ் பாதுகாப்புடன் ஜே.சி.பி. எந்திரம் மூலம் காங்கிரீட் பாலம் அகற்றப்பட்டது.
இதனால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல பாலம் இல்லாததால் கழிவு நீர் ஓடையில் இறங்கி சுவாமி, அம்பாளை வழிபட்டனர். இதில் பக்தர்கள் மற்றும் இந்து முன்னணியினர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
- காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது போல், ஆதரவு தெரிவித்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
- ராஜாஜி பூங்காவிற்கு வந்த திராவிடர் விடுதலை கழகத்தினர், ஆதித்தமிழர் பேரவையினர் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர்.
மதுரை:
பிப்ரவரி 14-ந்தேதியான இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில அமைப்பினர் வருடந்தோறும் நூதன போராட்டங்களை நடத்தி வருவது வழக்கம். அதன்படி காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று மதுரையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சில அமைப்புகள் தெரிவித்து இருந்தது. இதையொட்டி நகரில் உள்ள ராஜாஜி பூங்கா, சுந்தரம் பார்க், நாயக்கர் மஹால், திருப்பரங்குன்றம் பூங்கா உள்ளிட்ட அனைத்து பொழுதுபோக்கு இடங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் விசுவ இந்து பரிசத், பஜ்ரங் தளம் ஆகிய அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று காலை தொண்டர்களுடன் மதுரை ராஜாஜி பூங்காவுக்கு வந்தனர். அவர்கள் காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவின் பாரம்பரிய பழக்க வழக்கம்-பண்பாட்டுக்கு காதலர் தினம் எதிரானது. எனவே அதனை இளைஞர்கள் கொண்டாடக்கூடாது. புல்வாமா தாக்குதலை நினைவு கூறும் வகையில் பயங்கரவாத ஒழிப்பு தினமாக அனுசரிக்க வேண்டும்" என்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர்.
காதலர் தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது போல், ஆதரவு தெரிவித்து இனிப்பு வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. அதன்படி இன்று காலை ராஜாஜி பூங்காவிற்கு வந்த திராவிடர் விடுதலை கழகத்தினர், ஆதித்தமிழர் பேரவையினர் காதலர் தினத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷமிட்டனர். பின்னர் அங்கு வந்திருந்த புதுமண தம்பதிகளுக்கு இனிப்பு வழங்கி காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
ஒரே இடத்தில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமும், ஆதரித்து இனிப்பும் வழங்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
- இந்தியா-வங்கதேசம் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தடை செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
- வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டு வீரர்களை அனுமதிப்பதா இந்தி அமைப்பினர் கோஷம்
இந்தியா-வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 339 ரன்களை குவித்துள்ளது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி இந்தியா சார்பில் அஸ்வின் 102 ரன்களுடன், ஜடேஜா 86 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் இந்தியா-வங்கதேசம் இடையே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை தடை செய்ய வலியுறுத்தி இந்து அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வங்கதேசத்தில் இந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வரும் நிலையில் அந்நாட்டு வீரர்களை அனுமதிப்பதா என அவர்கள் கோஷம் எழுப்பினர்.
போட்டியை தடை செய்ய கோரிய கடிதத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் பாபா பெற்றுக் கொண்டாலும், போராட்டம் நடைபெற்ற இடத்திலிருந்து போராட்டக் குழுவினர் கலைய மறுத்தனர். இதனையடுத்து போராட்டம் நடத்திய இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
- தொண்டர்கள் வரவர வலுக்கட்டாயமாக பிடித்து பஸ்களில் ஏற்றினார்கள்.
- ஆர்ப்பாட்டத்தில் பேசுவதற்காக ஒலிபெருக்கிகளும் வைக்கப்பட்டிருந்தன.
சென்னை:
வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதல்கள், சொத்துக்களை சூறையாடுதல் போன்ற சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்தும், வங்கதேசத்தில் சிறுபான்மை யினராக வாழும் இந்துக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க கோரியும் வங்கதேச இந்து உரிமை மீட்பு இயக்கம் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி, பா.ஜனதா, விசுவ இந்து பரிஷத், ஏ.பி.வி.பி. உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டார்கள்.
முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், பா.ஜனதா அமைப்பு செயலாளர் கேசவ விநாயகன், துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில செயலாளர் சுமதி வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் தனசேகரன், கிருஷ்ணகுமார், மனோகர், சாய் சத்யன், காளிதாஸ், மாவட்ட பொதுச் செயலாளர் லதா சண்முகம் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் நடத்த இருந்த இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்ட இருந்த பேனரை கட்டவிடாமல் தடுத்ததோடு ஆர்ப்பாட்டம் நடத்தாமல் தடுப்பதில் போலீசார் குறியாக இருந்தனர்.
தொண்டர்கள் வரவர வலுக்கட்டாயமாக பிடித்து பஸ்களில் ஏற்றினார்கள். அங்கு யாரையும் கூடுவதற்கே அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த தொண்டர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் எதைப் பற்றியும் கண்டு கொள்ளாமல் அனைவரையும் பிடித்து சென்றனர். ஆர்ப்பாட்டத்தில் பேசுவதற்காக ஒலிபெருக்கிகளும் வைக்கப்பட்டிருந்தன.
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், கேசவ விநாயகன், கரு.நாகராஜன் உள்பட இந்து அமைப்பினர் சுமார் 500 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சுவாமி சிவானந்தா சாலை மற்றும் எழும்பூரில் உள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளர்கள்.
திருவள்ளூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
களக்காடு சத்திய வாகீஸ் வரர், கோமதி அம்மன் கோவிலுக்கு ஏராளமான சொத்துகள் உள்ளன. அவைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து சொத்துக்களை மீட்க வேண்டும் என்று இந்து அமைப்பினர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.
எனவே கோவில் சொத்துக்களை மீட்க கோரி இந்து சமய மன்ற செயலாளர் கணேசன் தலைமையில் பா.ஜ. நிர்வாகி தினகரன் முன்னிலையில் கோவில் உண்டியலில் மனுக்களை போட்டு இறைவனிடம் முறையீடு செய்து நூதன போராட்டம் நடத்தினர்.
தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே கடந்த 19-ந்தேதி பாரத் முன்னணி என்ற இந்து அமைப்பு சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பல்வேறு இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
அவர்களது பேச்சு மதக் கலவரத்தை தூண்டும் விதமாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும்படியும் இருந்ததாக ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு இந்துமக்கள் சேனா தலைவர் சரவணன், ருத்ர சேனா தலைவர் தங்கராஜ், பாரத் முன்னணி சண்முகம், சத்யசேனா பொதுச் செயலாளர் ராஜகோபால் ஆகிய 4 பேர் மீது 6 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு தஞ்சாவூரில் இருந்த சரவணன், தங்கராஜ் ஆகிய 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களை விசாரணைக்காக ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் இன்று காலை பல்வேறு இந்து அமைப்பினர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையொட்டி பாதுகாப்புக்காக கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். #tamilnews