என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயிகள் மகிழ்ச்சி"
- விவசாயிகளின் நேரடி விற்பனை பொருட்களை வாங்குவோர் வருகை குறைந்து வந்ததால் நாளடைவில் வியாபாரம் இன்றி உழவர் சந்தை வீணானது.
- திருக்கழுகுன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.
மாமல்லபுரம்:
திருக்கழுகுன்றம் சந்தை பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன் வேளாண்மைத்துறை மற்றும் வணிகத்துறை சார்பில் உழவர் சந்தை துவங்கப்பட்டது. விவசாயிகளின் நேரடி விற்பனை பொருட்களை வாங்குவோர் வருகை குறைந்து வந்ததால் நாளடைவில் வியாபாரம் இன்றி உழவர் சந்தை வீணானது.
இந்நிலையில் மீண்டும் உழவர் சந்தையை ஊக்கப்படுத்தும் விதமாக 20 மகளிர் குழுவினரை ஒருங்கிணைத்து சந்தை வளாகத்தில் "உழவர் சந்தை மேளா" நடத்தப்பட்டது. திருக்கழுகுன்றம் சுற்று வட்டார பகுதி விவசாயிகள் மற்றும் விவசாய மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிப்போர் பலர் கடை அமைத்து விற்பனை செய்தனர். 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உழவர் சந்தையில் விவசாயிகள் கூடியதால் அப்பகுதி மக்கள் ஆர்வமாக வந்து காய்கறி, கீரைகள், மரச்செக்கு எண்ணெய், மாடிதோட்ட விதைகள், கிழங்குகள் உள்ளிட்டவைகளை வாங்கி சென்றனர்.
திருக்கழுகுன்றம் பேரூராட்சி மன்ற தலைவர் யுவராஜ் முதல் விற்பனையை துவக்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சிறியதுரை, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயக்குமார், உழவர் சந்தை நிர்வாக அலுவலர் நாகராஜன், பொறுப்பு அலுவலர்கள் பரஞ்ஜோதி, விஸ்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் 10.6 சென்டிமீட்டர் மழை பதிவானது.
- இங்கு நெல் விவசாயம் என்பது மற்ற மாவட்டங்களை விட குறைவு தான்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்த வரை வானம் பார்த்த பூமி என்று தான் சொல்ல வேண்டும். இங்கு நெல் விவசாயம் என்பது மற்ற மாவட்டங்களை விட குறைவு தான். இதனால் ஆண்டு தோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து தான் நெல் விவசாயமே நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசன் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. சீசன் தொடங்குவதற்கு முன்பே ராமநாதபுரம் மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கி 5 நாட்களுக்கு மேலாகியும் இதுவரையிலும் ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யாததால் விவசாயிகள் வருணபகவான் கருணை கிடைக்குமா என்ற ஏக்கத்தில் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் அதிகபட்சமாக ஆர்.எஸ்.மங்கலத்தில் 10.6 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட த்தில் நேற்று இரவு முதல் இன்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
கடலாடி- 14.60, வாலிநோக்கம்-29.40 கமுதி- 76.20 பள்ளமோர்க்குளம் - 22 முதுகுளத்தூர்-25 பரமக்குடி -57.80 ஆர்.எஸ்.மங்கலம்-106.80 மண்டபம் -27.70 ராமநாதபுரம்-25.20 பாம்பன்-32.40 ராமேசுவரம்-40.20 தங்கச்சிமடம்-25.40 தீர்த்தாண்டத்தனம் -35 திருவாடானை -29.80 தொண்டி-53.70 வட்டாணம் -38 மாவட்டம் முழுவதும் 639.20 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
தொண்டி பகுதியில் நேற்று இரவு முழுவதும் மழை கொட்டியது. நள்ளிரவு 11 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை இடைவிடாமல் தொடர்ந்து பெய்தபடி இருந்தது.
இன்று காலை வரை தொண்டியில் 53.7 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திருவாடானை பகுதியிலும் நீண்ட நேரம் மழை பெய்தது. இந்த மழை தற்போதைய விவசாயத்திற்கு ஏற்றதாக உள்ளதால் திருவாடானை பகுதியில் 26 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- ஏரி நிரம்பும் தருவாயில் தென்கரைக்கோட்டை ஏரி, ஒன்றியம் பள்ளம் ஏரி. பறையப் பட்டி ஏரி, அரூர் ஏரி போன்ற பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரப்பப்படும்.
- கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை நல்ல முறையில் பெய்த்து வருவதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
பாப்பிரெட்டிப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாக இருப்பது வாணியார் நீர்த்தேக்கம்.
தற்போது ஆறு உற்பத்தியாகும் சேர்வராயன் மலைப்பகுதியில் பருவமழை நல்ல நிலையில் பெய்ததால் அணைக்கு நீர்வரத்து வந்து கொண்ட இருக்கின்றது.
அணை முழு அளவு எட்டி கடந்த மூன்று மாதங்களாக உபரி நீர் ஆற்றில் திறந்த விடப்படுகிறது. தற்போது மீண்டும் பருவமழை கொட்டி வருவதால் நீரின் வரத்து அதிகரித்துள்ளது.
அணை ஏற்கெனவே நிரம்பி உள்ளதால் பாதுகாப்பு கருதி உபரி நீர்திறந்து விடுவதை மேலும் நீடித்துள்ளனர். உபரி நீரைஏரிகளுக்கு நிரப்பும் பணியில் துவக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக வாணியாற்று நீர் ஜீவா நகர் அருகே உள்ள ஆலாபுரம் அணைக்கட்டில் தேக்கி வைக்கப்பட்டு, ஆலாபுரம் ஏரிக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது .
அந்த ஏரி நிரம்பும் தருவாயில் தென்கரைக்கோட்டை ஏரி, ஒன்றியம் பள்ளம் ஏரி. பறையப் பட்டி ஏரி, அரூர் ஏரி போன்ற பகுதிகளில் உள்ள ஏரிகள் நிரப்பப்படும். இதன் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பகுதி பாசன வசதி பெறும்
கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை நல்ல முறையில் பெய்த்து வருவதால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதன் மூலம் நெல் மரவள்ளி கிழங்கு வாழை கடலை போன்ற பெயர்களை பயிரிடும் பணியில் விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். விளைச்சல் அதிகளவில் இந்த ஆண்டு ஈட்டப்படும் என்ற நம்பிக்கையும் விவசாயி களிடம் பிறந்துள்ளது.
- சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
- இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சிவகங்கை
மானாமதுரை அருகே உள்ள அன்னியனேந்தல் என்ற இடத்தில் மானாமதுரை பிரதான கண்மாய்க்கு ரீச் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் மூலம் மானாமதுரை, கால்பிரவு, கிருங்காங்கோட்டை, கீழமேல்குடி, நாட்டர் கால்வாய் மூலம் 16 கிராமங்கள் பயன்பெறுவதற்காக வைகை தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
கடந்த 15-ந் தேதி பொதுப்பணித் துறை அதிகாரிகள் ரீச் கால்வாய் அடைப்பை ஜே.சி.பி. மூலம் அகற்றும்போது மிளகனூர் கிராமத்தினர் பணிகளை நிறுத்த கூறியதால் அதிகாரிகளும் நிறுத்தினர். பின்னர் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக்கு பிறகு நேற்று காலை மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் மானாமதுரை கண்மாய்க்கு செல்லும் ரீச் கால்வாய் அடைப்பை நீக்குவதற்கு வந்தனர். மிளகனூர் கிராமத்தினர் அடைப்பை உடைக்கக்கூடாது என்று மீண்டும் கூறியதால் அதிகாரிகள் இதுகுறித்து மானாமதுரை தாலுகா அலுவலகத்தில் சமாதானம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.
கோட்டாட்சியர் சுகிதா, தாசில்தார் சாந்தி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மோகன் குமார், செந்தில் குமார், பூமிநாதன், மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதலில் மிளகனூர் கிராமத்தினரிடம் அதிகாரிகள் பேசினர். பின்னர் மானாமதுரை, கீழமேல்குடி, கால்பிரிவு, கிருங்காக்கோட்டை உட்பட கிராமத்தின் விவசாயிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தின் முடிவில் அடுத்த மாதம் டிசம்பர் 5-ந் தேதி மேற்கண்ட கிராமங்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதிகாரிகளின் நடவடிக்கைகளால் பல ஆண்டுகள் தண்ணீர் இல்லாமால் இருந்த விவசாய நிலங்கள் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- குடியாத்தத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
- பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு
குடியாத்தம்:
தமிழகத்தில் ஏற்பட்ட புயல் மழை பாதிப்பாலும், நேற்று இரவு மோர்தானா அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான ஆந்திர மாநிலம் மதனப்பள்ளி, புங்கனூர், பலமநேர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த பலத்த மழையாலும், மோர்தானா அணையின் முக்கிய நீர் பிடிப்பு ஆதாரமான ஆந்திர மாநிலம் புங்கனூர் அடுத்த பெத்தபஞ்சாணி பகுதியில் உள்ள பெரிய ஏரியான மாடிஏரி நிரம்பி வழிவதால் மோர்தானா அணைக்கு தண்ணீர் வரத்து திடீரென அதிகரித்தது. அணை 8 சென்டி மீட்டர் உயரத்திற்கு உயர்ந்து அணையின் நீர்மட்டம் 11.58 மீட்டராக உயர்ந்தது. இன்று காலை 9 மணி நிலவரப்படி மோர்தானா அணையிலிருந்து வினாடிக்கு 708 கனஅடி தண்ணீர் வழிந்தோடியது.
அதிக அளவு தண்ணீர் வழிந்தோடுவதை அறிந்த சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வருவாய் துறையினரும், நீர்வளத் துறையினரும் 24 மணி நேரமும் மோர்தானா அணையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
தொடர்ந்து மோர்தானா அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருவதால் வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவின் பேரில் குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்கட்ராமன் மேற்பார்வையில் தாசில்தார் விஜயகுமார் உள்ளிட்ட வருவாய் துறையினர் மோர்தானா அணை நீர் செல்லும் கவுண்டன்யா மகாநதி கரைப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மோர்தானா அணையில் இருந்து அதிக அளவு வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் கெங்கையம்மன் கோவில் தரைப்பாலத்தை குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர் திருநாவுக்கரசு, பொறியாளர் சிசில் தாமஸ், நகர மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அதேபோல் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பேரில் குடியாத்தம் துணைபோலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, டிராபிக் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட போலீசார் கெங்கையம்மன் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் போக்குவரத்து மாற்றம் செய்வது மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர்.
குடியாத்தம் தாலுகா போலீசார் மோர்தானா அணை வெள்ளநீர் வழிந்தோடும் கவுண்டன்யா மகாநதி ஆறு செல்லும் கிராமப் பகுதிகளில் ரோந்து சென்று வருகின்றனர்.
வேலூர் நீர்வளத்துறை செயற்பொறியாளர் ரமேஷ் மேற்பார்வையில் குடியாத்தம் உதவி செயற்பொறியாளர் கோபி, உதவி பொறியாளர் ராஜேஷ் உள்ளிட்ட நீர்வளத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மோர்தானா அணை வெள்ளநீர் செல்லும் பாதைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர் மேலும் குடியாத்தம் பகுதியில் உள்ள ஏரி மற்றும் வலதுபுற, இடதுபுறம் மோர்தானா அணை கால்வாய்களையும் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
- நாளை மதியம் அணையின் முழு கொள்ளளவான 32 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அணை திறப்பதற்கு உண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.
விழுப்பரம்:
விக்கிரவாண்டி அருகே வீடூர் கிராமத்தில். அமைந்துள்ள வீடூர் அணையிலிருந்து தமிழகத்தில் 2200 ஏக்கர், புதுவையில் 1000 ஏக்கர் என மொத்தம் 3200 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில தினங்களாக பெய்து வடகிழக்கு பருவ மழை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் பெய்து வருகிறது இதன் காரணமாக அணைக்கு தண்ணீர் வரத்து வரக்கூடிய பணமலை பேட்டை, செஞ்சி , மேல் மலையனுார் பகுதியில் பெய்த மழையின் காரணமாக அணைக்குநீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.அணையின் மொத்த கொள்ளளவு 32 அடியாகும்.இன்று காலை நிலவரப்படி அணைக்கு 472 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. தற்போது அணையில் .30, 325 அடி உயர்ந்துள்ளது. தற்போது அணைக்கு வருகின்ற நீரின் அளவை கணக்கிட்டு பார்த்தால் நாளை மதியம் அணையின் முழு கொள்ளளவான 32 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருவதை பொதுப்பணி த்துறை செயற்பொறியாளர் ஷோபனா ,உதவி பொறியாளர் ரமேஷ் இளநிலை பொறியாளர்.பாபு ஆகியோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அணை திறப்பதற்கு உண்டான முன்னெச்சரிக்கை நடவடி க்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். இன்று மதியம் விழுப்புரம் கலெக்டர் மோகன் அணையை பார்வையிட்டு ஆலோசனை வழங்குவார் என கூறப்படுகிறது.அணை நிரம்பி வருவதால் பாதுகாப்பு கருதி விபத்துகள் ஏற்படாத வண்ணம் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் தலைமையில் போலீசார் அணையில் பொதுமக்கள் , இளைஞர்கள் யாரும் குளிக்காத வகையில் கண்காணித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் நாளை அதன் கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது விவசாயிகள் மகிழ்ச்சியடை ந்துள்ளனர்.
- சிறு மருதூர் கண்மாய் முழு கொள்ளளவை எட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
- இதையடுத்த வையாபுரிபட்டி, சிறுமருதூர், மேட்டுப்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து மலர் தூவி வழிபட்டனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சிறுமருதூர் கண்மாய் உள்ளது. சுமார் 200 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கண்மாய் பொதுப்பணித்துறை சார்பில்சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இப்பகுதியில் பெய்து வந்த கனமழையின் காரணமாக கண்மாயின் நீர்வரத்து அதிகமாகி முழு கொள்ளளவை எட்டியது. தற்போது கண்மாய் நிரம்பி மாறுகால் பாய்கிறது.
இதையடுத்த வையாபுரிபட்டி, சிறுமருதூர், மேட்டுப்பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து மலர் தூவி வழிபட்டனர். கண்மாய் நிரம்பியதால் இந்த ஆண்டு விவசாயம் நல்ல முறையில் நடக்கும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
- விரகனூர் அணையில் இருந்து கிருதுமால் நதிக்கு தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- விவசாயம் பாதிப்படைந்து நெற்பயிர்கள் கருகி பொருளாதார கஷ்டம் ஏற்பட்ட நிலையிலும், தற்போது தண்ணீர் திறக்கப்படுவது வரவேற்க த்தக்கது என்றனர்.
அபிராமம்
ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் வானம் பார்த்த பகுதி ஆகும். ஒவ்வொரு ஆண்டும் போதிய பருவ மழை இல்லாததால் நெல், மிளகாய், பருத்தி, எள் பயிர்கள் கருகி விவசாயிகள் வேதனையடைந்தனர்.
அபிராமம் பகுதிக்கு நீராதாரமாக விளங்கும் கிருதுமால் நதி மற்றும் கால்வாய்கள் தூர்வாரப் படாமல் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் பல முறை வைகை ஆற்றில் இருந்து தண்ணீர் திறந்தும் அபிராமம் பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. கிருதுமால் நதியை தூர்வாரியும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் பலமுறை மனு அளித்தும் அரசின் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது குறித்து விவசாயி முனியாண்டி கூறுகையில், உடையநாதபுரம், நந்தி சேரி, காடனேரி, நீர் தாண்ட அச்சங்குளம், போத்தநதி, பாப்பனம் மற்றும் அபிராமம் சுற்று வட்டார பகுதிகளில் பருவ மழை இல்லாததால் நெல், மிளகாய், பருத்தி, எள் பயிர்கள் கருகி விவசாயம் பாதிப்படைந்துள்ளது.
தற்போது மதுரை விரகனூர் அணையில் இருந்து கிருதுமால் நதியில் திறந்து விடப்படும் நீரால் அபிராமம் கண்மாய் தண்ணீர் நிரம்புவதால் குடிநீர் தேவைக்காகவும் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்றார்.
முல்லைபெரியாறு-வைகை பாசன விவசாயிகள் கூட்டமைப்பின் ராமநா தபுரம் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் கூறுகையில், அபிராமம் மிகவும் பின்தங்கிய பகுதியாக உள்ளது. இங்கு விவசாயம் பாதிப்படைந்து நெற்பயிர்கள் கருகி பொருளாதார கஷ்டம் ஏற்பட்ட நிலையிலும், கிருது மால் நதிமூலம் தற்போது தண்ணீர் திறக்கப்படுவது வரவேற்க த்தக்கது.
எங்கள் கோரிக்கையை ஏற்று நவம்பர் மாதம் கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்திருந்தால் நெற்பயிர்கள் கருகி இருக்காது. தற்போது தண்ணீர் திறப்பதால் குடிநீர் தேவைக்கும், நிலத்தடி நீரும் உயரும். கிருதுமால் நதிமூலம் தண்ணீர் கொண்டுவர பல கட்ட போராட்டங்கள், விளக்க கூட்டங்கள் நடத்தி ஒத்துழைப்பு தந்த விவசாயிகள், பொதுமக்கள், அருணாசலம் உள்ளிட்ட சமூக சேவகர்கள் மற்றும் அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும், நீர்வள ஆதார அமைப்பிற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.
- அதியமான் கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மாலை கனமழை பெய்தது.
- மழை பெய்ததால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது.
தருமபுரி,
தமிழகத்தில் வளிமண்ட கீழடுக்கு சுழற்சியின் காரணமாக ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலிலே வெப்பம் தணிந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது.
தொடர்ந்து மாவட்டத்தில் தருமபுரி நகர் பகுதி, அன்னசாகரம், நெசவாளர் காலனி மற்றும் நல்லம்பள்ளி, அதியமான் கோட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மாலை கனமழை பெய்தது.
மேலும் கடந்த ஒரு மாத காலமாக தருமபுரி மாவட்டத்தில் மழை இல்லாமல் கடும் வெப்பம் இருந்து வந்த நிலையில் மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ஏற்காடு காபி என்றாலே அதற்கு தனி மவுசு உண்டு.
- கடந்த சில ஆண்டுகளாக மழை சரியான அளவு பெய்யாததால் காபி விளைச்சல் வெகுவாக குறைந்தது.
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில், முக்கிய விவசாயமாக காபி கருதப்படுகிறது. ஏற்காடு காபி என்றாலே அதற்கு தனி மவுசு உண்டு.
இந்தாண்டு காபி எஸ்டேட்டுகளில் அதிக அளவில் பூக்கள் பூத்துள்ளன. வெள்ளை நிறத்தில் மல்லிகை மலர் போல தோட்டங்களில் பூத்துள்ள காபி மலர்களை அந்த வழியாக செல்பவர்கள் நின்று பார்த்து ரசித்து செல்கின்றனர். மேலும் இந்த மலர்களில் இருந்து ஒரு வித நறுமணமும் வீசுகிறது.
வருடத்தில் 2 முறை காபி சீசன் இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக மழை சரியான அளவு பெய்யாததால் காபி விளைச்சல் வெகுவாக குறைந்தது. இதுதவிர உரிய விலை கிடைக்காததாலும் காபி எஸ்டேட் அதிபர்கள் மற்றும் காபி தோட்ட சிறு வியாபாரிகளும் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஏற்காடு மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் காபி செடிகளில் பூக்கள் அதிகம் பூக்க தொடங்கி உள்ளது. இதனால் இந்த ஆண்டு காபி மகசூல் அதிகரிக்கும் என்று காபி எஸ்டேட் அதிபர்கள், சிறு விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- மா சீசன் நவம்பர் கடைசியில் துவங்கி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதத்தில் மா ரகங்களில் பூக்கள் பூக்க தொடங்கி யது.
- தற்போது மாங்காய்கள் கொத்து கொத்தாக காய்ந்து தொங்குகின்றது.
தருமபுரி,
தருமபுரி, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு விவசாயிகள் மாங்காய் சாகுபடி செய்து வருகின்றனர்.
குறிப்பாக தருமபுரி மாவட்டத்தில் நடப்பாண்டு 30 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்ப ட்டுள்ளது.
காரிமங்கலம், பாலக்கோடு, மொரப்பூர், ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தருமபுரி மற்றும் பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி அரூர் ஆகிய வட்டாரத்திலும் மா சாகுபடி செய்துள்ளனர். இங்கு செந்தூரா, அல்போன்சா, பெங்களூரா, நீளம், பங்கன பள்ளி, உள்ளிட்ட ரகங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளனர்.
இங்கு விளைகின்ற மாம்பழங்கள் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு அதிக அளவு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
பருவநிலைக்கு ஏற்ப மா உற்பத்தி திறன் மாறுபடும். இதனால் மா உற்பத்தி சராசரி விலையை கணிக்க முடியாத நிலையில் உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 10 மாங்கூழ் தயாரிக்கும் சிறிய ஆலைகள் உள்ளன.
இந்த ஆலைகள் மூலம் ஈரான், துபாய், உள்ளிட்ட நாடுகளுக்கு மாங்கூழ் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மா சீசன் நவம்பர் கடைசியில் துவங்கி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதத்தில் மா ரகங்களில் பூக்கள் பூக்க தொடங்கி யது. தற்போது மாங்காய்கள் கொத்து கொத்தாக காய்ந்து தொங்குகின்றது.
இதுகுறித்து விவசாயி கூறும்போது தருமபுரி மாவட்டத்தின் இந்த வருடம் அதிக மழை பொழிந்துள்ளதால் மா விளைச்சல் அமோகமாக உள்ளது.
இந்த வருடம் மா பூ பிடித்த போது மாவட்டத்தில் நல்ல பனிப்பொழிவு மற்றும் பூச்சி தாக்குதல் அதிகமாக இருந்தது. மாம்பூக்கள் அதிகமாக உதிர்ந்தது. தற்போது கோடை காலம் தொடங்கியதால் வெயில் மற்றும் கோடை மழையில் மாம் பிஞ்சுகள் உதிர்ந்தன. ஒரு சில இடங்களில் மாங்காய் அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர்.
பெங்களூரா ரகம் மாங்காய் நல்ல விளைச்சல் உள்ளது. மாவட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாங்கூழ் ஆலைகள் உள்ளன. நாங்கள் விளைவிக்கும் மாங்காய்களை அறுவடை செய்து ஆலைக்கு நேரடியாகச் சென்று விற்பனை செய்து வருகிறோம். மாற்ற ரகங்களான செந்தூரா, அல்போன்சா, நீலம், பங்கன பள்ளி, ஆகியவைகளை அறுவடை செய்து தினசரி மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகிறோம்.
தற்போது கோடை வெயில் ஆரம்பித்து உள்ளதால் தண்ணீர் இல்லாத மா மரங்களில் மாங்காய் உதிர்ந்து வருகிறது. நல்ல தண்ணீர் பாய்ச்சினால் உதிர்வது தடுக்கப்படுகிறது.
மேலும் ஒரு விவசாயி கூறுகையில் 30 வருடங்களுக்கு மேலாக மா விவசாயம் செய்து வருகிறோம். காரிமங்கலம் ஒன்றியத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மா மரம் பூப்பதில் இருந்து அறுவடை செய்யும் வரை மருந்து கடைகளில் ஆலோசனை கேட்டு அதன்படி தான் சாகுபடி செய்து வருகிறோம். இந்த ஆண்டு ஒரு ஏக்கருக்கு 10 முதல் 15 டன் வரை மாங்காய் விளைச்சல் உள்ளது. இதனால் இந்தாண்டு ரூ.18 முதல் 20 ரூபாய் வரை நல்ல விலை போகிறது என கூறினார்.
- உழவர் சந்தையில் கிலோ முள்ளங்கி 20 ரூபாய் முதல் 22 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
- முள்ளங்கி விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப் பட்டி, அரூர், காரிமங்கலம் என 7 வட்டங்களிலும் விவசாயிகள் அதிக படியாக முள்ளங்கி பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
விதை ஊன்றிய நாளில் இருந்து 45 நாட்களில் முள்ளங்கியை அறுவடை செய்கின்றனர். குறுகிய காலத்தில் அதிக வருமானம் கொடுக்கும் பயிர் என்பதாலும், உரம் உரியா மருந்து செலவினங்கள் குறைவு என்பதாலும் காய்கறி சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் பலரும் தங்கள் வயலில் சிறு பரப்பளவிலாவது முள்ளங்கியை நடவு செய்து லாபத்தை ஈட்டி வருகின்றனர்.
காரிமங்கலம், பாலக்கோடு, புலிக்கரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் ஆண்டுமுழுக்க விவசாயிகள் முள்ளங்கி சாகுபடி செய்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக உழவர் சந்தைகளில் ஒரு கிலோ முள்ளங்கி விலை ரூ.4 முதல் ரூ.6 வரை விற்பனை செய்யப்பட்டது. விலை வீழ்ச்சியால் முள்ளங்கி விவசாயிகள் வேதனை அடைந்தனர். மார்கழி, தை, மாசி ஆகிய மாதங்களில் பனி காலத்தில் முள்ளங்கி நடவு செய்து விவசாயிகள் நல்ல விளைச்சலை எடுத்து வருகின்றனர்.
கிழங்கு நீளமாகவும், திரட்சியாகவும் வளரும் பராமரிப்பும் குறைவு என்பதால் இந்த தருணத்தில் விவசாயிகள் பலரும் முள்ளங்கி சாகுபடியில் ஆர்வமுடன் ஈடுபடுகின்றனர்.
இவ்வாறு ஒரே நேரத்தில் அதிக பரப்பில் முள்ளங்கி சாகுபடி நடப்பதாலும் சந்தைக்கு கிழங்கு வரத்து அதிகரிப்ப தாலும் விலை சரிவடைந்து விடுகிறது.
தற்பொழுது கோடை காலம் என்பதால் நீர் பற்றாக்குறையால் விவசாயிகள் முள்ளங்கி அதிக அளவு பயிரிடுவதில் சுணக்கம் காட்டி வருகின்றனர்.
கிணற்று பாசனம் ஆழ்துளை கிணற்று பாசனம் உள்ளவர்கள் தொடர்ந்து முள்ளங்கி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சந்தைக்கு முள்ளங்கி வரத்து குறைவாக உள்ளதால் தற்பொழுது முள்ளங்கி விலை உயர்ந்து விவசாயிகளிடத்தில் வியாபாரிகள் கிலோ 12 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று உழவர் சந்தையில் கிலோ முள்ளங்கி 20 ரூபாய் முதல் 22 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.