என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவலாளி"

    • படுகாயம் அடைந்த அவரை சிகிச் சைக்காக நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • அர்ஜுனன் இறந்ததை யடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப் பட்டுள்ளது.

    நாகர்கோவில் :

    கொல்லங்கோடு அருகே பாலோடு மணலி பகுதியைச் சேர்ந்தவர் அர்ஜுனன் (வயது 58).

    இவர் சூழல் பகுதியில் உள்ள சிமெண்ட் கடையில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அதே கடையில் கேரளா காரோடு தேவர்புரத்தைச் சேர்ந்த வினு (40) என்பவர் டிரை வராக வேலை பார்த்தார். சம்பவத்தன்று வினு வண்டி யில் சிமெண்ட் மூட்டை களை ஏற்றினார்.

    இது குறித்து பணியில் இருந்த காவலாளி அர்ஜுனன் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.இதில் ஆத்திரமடைந்த வினு காவலாளி அர்ஜுனனை பிடித்து கீழே தள்ளினார்.கீழே விழுந்ததில் அர்ஜு னனுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. படுகாயம் அடைந்த அவரை சிகிச் சைக்காக நெய்யாற்றின் கரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் அனீஸ் கொல்லங் கோடு போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். வினு மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அர்ஜுனன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அர்ஜுனன் இறந்ததை யடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப் பட்டுள்ளது.

    தலைமறைவாகியுள்ள வினுவையில் பிடிக்க தனிப் படை அமைக்கப்பட்டுள்ள. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வினு கேரளாவில் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளா விரைந் துள்ளனர்.

    • 2 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை
    • மோட்டார் சைக்கிள் மீட்பு

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கணேசபுரம் என்.வி.கே.தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45).

    இவர், தனியார் நிறுவ னத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ராதா (42). இவர்களுக்கு அனுஸ்ரீ, சுபஸ்ரீ என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 15-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன் வீடு திரும்பவில்லை. இதை யடுத்து ராதா கோட்டார் போலீசில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் முருகன் சொத்த விளை பகுதியில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக சுசீந்திரம் போலீசுக்கு தகவல் கிடைத் தது. டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ் பெக்டர் சாய்லட்சுமி, சப்-இன்ஸ்பெக் டர்கள் ராபர்ட் செல்வசிங், ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி னார்கள். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடிய நாய் யாரை யும் கவ்வி பிடிக்க வில்லை.

    இதையடுத்து போலீசார் முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .இது தொடர்பாக முருகனின் மனைவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது முரு கனை வீட்டில் இருந்து அவரது நண்பர் ஒருவர் அழைத்து சென்றதாக கூறி னார்.

    எனவே அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்த வர்? என்பது குறித்து விசா ரணை நடத்தப்பட்டது. விசாரணையில் முருகனை அழைத்துச் சென்றவர் நாகர்கோவில் பீச் ரோடு பகுதியைச் சேர்ந்த வாலிபர் என்பது தெரியவந்துள்ளது. எனவே அவரை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். போலீ சார் தேடுவதை அறிந்த அவர் தலைமறைவாகி விட்டார்.

    எனவே இந்த கொலை வழக்கில் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்பது உறுதியாகி உள்ளது. அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் முருகனின் மோட்டார் சைக்கிள் மாயமானது குறித் தும் விசாரணை நடத்தி னார்கள்.

    அப்போது வடசேரி பஸ் நிலையத்தில் மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டி ருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் அங்கு சென்று மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். முருகனை கொலை செய்துவிட்டு அவரது நண்பர் மோட்டார் சைக் கிளை பஸ் நிலை யத்தில் நிறுத்திவிட்டு வெளி யூருக்கு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீ சார் கருதுகிறார்கள்.

    கொலைக்கான காரணம் குறித்து விசாரித்த போது தலைமறைவாகியுள்ள பீச் ரோட்டை சேர்ந்த வாலிபரின் மோட்டார் சைக்கிள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருடப்பட்டு இருந்ததும் அந்த மோட்டார் சைக்கிள் மாயமான பிரச்சனையில் முருகன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல் கிடைத்தது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முருகன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பகுதியில் உள்ள சாலை துண்டிக்கப்பட்ட சாலை ஆகும் இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாது. முருகன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த பகுதியில் கொலை செய்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

    எனவே அவரை வெளியே எங்காவது கொலை செய்து இங்கு கொண்டு வந்து வீசி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.ஒரு நபர் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை வேறு சிலருக்கும் தொடர்பு இருக்க லாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    தலைமறைவாகியுள்ள முருகனின் நண்பரைப் பிடித் தால் தான் கொலைக் கான முழு விவரமும் தெரிய வரும்.

    • நண்பகல் 12.30 மணியளவில் அடைக்கப்படும் நடை பின்னர் மாலை 5 மணிக்கு திறக்கப்படும்
    • 5 மணிக்கு முன்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன் பகுதியில் உள்ள சிறிய பாதை வழியாக கோவில் வளாகத்திற்குள் செல்வார்கள்.

    கன்னியாகுமரி:

    மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் காலை, மாலை வேளைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். நண்பகல் 12.30 மணியளவில் உச்ச பூஜை முடிந்ததும் நடை அடைக்கப்படும். பின்னர் மாலை 5 மணிக்கு நடை திறக்கும். 5 மணிக்கு முன்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முன் பகுதியில் உள்ள சிறிய பாதை வழியாக கோவில் வளாகத்திற்குள் செல்வார்கள்.

    சம்பவத்தன்று மாலை அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்த பக்தர் ஒருவர் மாலை நடை திறப்பதற்கு முன்பாக மண்டைக்காட்டிற்கு வந்தார்.வெளியே காத்து நின்ற அவரை அறநிலையத்துறை அதிகாரிகளின் ஆலோசனை படி சிறிய பாதை வழியாக கோவில் வளாகத்திற்குள் ஊழியர்கள் அழைத்து சென்றனர்.

    இதனை பார்த்த லட்சுமி புரம் மருத்துவர் காலனியை சேர்ந்த பிரமுகர் பிரதீப் (வயது 43) என்பவர், நடை திறக்கும் முன் அவரை எப்படி கோவிலுக்குள் அனுமதிக்கலாம் என கேட்டு கோவில் காவலாளி குமார தாசிடம் தகராறு செய்தார்.பின்னர் குமாரதாசை அவர் மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கோவில் ஸ்ரீ காரியம் செந்தில்குமார் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் கோவில் காவலாளி குமாரதாசை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டியதாக பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோர்ட்டில் சரண் அடைந்தவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு
    • சுசீந்திரம் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து இருந்ததை கொலை வழக்காக மாற்றி விசாரணை

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கணேசபுரம் என்.வி.கே. தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 45). தனியார் நிறுவன காவலாளி.

    இவர் அவ்வப்போது புகைப்பட கலைஞராகவும் வேலை பார்த்து வந்தார். கடந்த 15-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற முருகன்,அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இது தொடர்பாக அவரது மனைவி ராதா, கோட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    இந்த நிலையில் சொத்தவிளை கடற்கரை சாலையில் முருகன் ரத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக 17-ந் தேதி சுசீந்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் துணை சூப்பிரண்டு ராஜா, இன்ஸ் பெக்டர் சாயி லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிப்ப ள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முருகன் உடல் சற்று அழுகிய நிலையில் இருந்ததால் அவர் எப்படி இறந்தார் என்பதில் சந்தேகம் இருந்தது. இதை அடுத்து சுசீந்திரம் போலீசார் மர்ம சாவு என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    முருகன் உடலில் மார்பு, கை, வயிறு என 5 இடங்களில் ஆழமான அளவில் கத்தி குத்துபட்டு முருகன் இறந்துள்ளார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

    இதை அடுத்து சுசீந்திரம் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து இருந்ததை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த முருகனை அவரது நண்பரான பீச் ரோட்டைச் சேர்ந்த குமரகுரு என்ற குருநாதன் (29) என்பவர் தான் கடைசியாக அழைத்துச் சென்றது தெரிய வந்தது. எனவே அவர் தான் கொலையாளியாக இருக்க லாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    அவர் தலைமறைவாகி விட்டதால் அவரை பிடிக்க 2 தனிப்படை அமைக்க ப்பட்டது. இந்நிலையில் குமரகுரு சென்னையில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்தனர்.

    இந்த நிலையில் அவர் நேற்று சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார். இது பற்றி சுசீந்தி ரம் போலீசாருக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனையடுத்து குமரகுருவை காவலில் எடுத்து விசாரிக்க சுசீந்திரம் போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரை காவலில் எடுத்து விசாரித்த பின்னரே முருகன் கொலை செய்யப்பட்டது எப்படி? கொலைக்கான காரணம் என்ன? என்பதெல்லாம் தெரிய வரும் என போலீசார் கருதுகின்றனர்.

    • எனது மோட்டார் சைக்கிளை திருடியதால் தீர்த்து கட்டினேன்
    • கைதான வாலிபர் வாக்குமூலம்

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் கணேச புரம் என்.பி.கே. தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது 45), தனியார் நிறுவன காவலாளி.

    இவர் கடந்த17-ந்தேதி சொத்தவிளை கடற்கரையில் கத்திகுத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சுசீந்திரம் போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணமாக கிடந்த முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முருகனை கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப் பட்டு வந்தது. இந்த நிலையில் அவரை கொலை செய்தது பீச் ரோட்டை சேர்ந்த குமரகுரு என்ற குருநாதன் (29) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் குமரகுருவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். போலீசார் தேடுவதை அறிந்த குமரகுரு தலைமறை வானார். இதையடுத்து அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப் படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட நிலையில் கடந்த 19-ந் தேதி குமரகுரு சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தார்.

    அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். கடந்த 23-ந்தேதி நாகர்கோவில் ஜெயிலுக்கு குமரகுரு கொண்டு வரப்பட்டார். குமரகுருவை காவலில் எடுத்து விசாரிக்க சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய்லட்சுமி தலைமையிலான போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்த குமரகுருவிற்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கினார். குமரகுருவை போலீசார் சுசீந்திரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது குமரகுரு போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

    நானும் முருகனும் நண்பர்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனது மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போனது. அந்த மோட்டார் சைக்கிளை முருகன் திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக நான் அவரிடம் கேட்டேன். இதனால் எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. சம்பவத்தன்று காலையில் முருகன் என்னை தொலைபேசியில் அழைத்தார். அப்போது எனது மோட்டார் சைக்கிளை தருவதாக அவர் கூறினார். இதையடுத்து நான் அங்கு சென்றேன்.

    அப்போது முருகன் எனக்கு மது அருந்த பணம் வேண்டும் என்று கேட்டார்.நான் என்னிடம் பணம் இல்லை. பீச் ரோட்டில் உள்ள வீட்டில் சென்று எடுத்து தருவதாக கூறினேன். உடனே முருகனும் நானும் பீச் ரோட்டில் உள்ள எனது வீட்டிற்கு சென்றோம். அங்கு பணத்தை எடுத்து விட்டு கத்தி ஒன்றை எடுத்து வந்தேன்.

    இந்த நிலையில் மது அருந்திய போது எனக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டது. இருப்பினும் எனது மோட்டார் சைக்கிள் குறித்து கேட்டபோது முருகன் சரியாக பதில் கூற வில்லை. இந்த நிலையில் மாலையில் இருவரும் மது வாங்கிவிட்டு சொத்தவிளை கடற்கரைக்கு சென்றோம்.அங்கு ஒன்றாக அமர்ந்து மது அருந்தினோம். அப்போது மோட்டார் சைக்கிளைப் பற்றி கேட்டதற்கு எனக்கு மோட்டார் சைக்கிளை பற்றி ஒன்றும் தெரியாது என்று அலட்சியமாக பதில் கூறினார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவரை சரமாரியாக கத்தி யால் குத்தினேன். பின்னர் அங்கிருந்து சென்று விட் டேன். இவ்வாறு அவர் கூறி னார்.

    கைது செய்யப்பட்ட குமரகுரு மீது ஏற்கனவே சென்னையில் 2 கொலை வழக்குகளும் ஒரு கொலை முயற்சி வழக்கு, அடிதடி வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். குமரகுருவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள். கொலை நடந்த சொத்தவிளை கடற்கரைக்கு சென்று விசாரணை நடத்த வும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறியபோது நிலைதடுமாறி காவலாளி பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள குளத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் வீரணன் (வயது 58). இவர் கப்பலூரில் உள்ள உணவ கத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

    நேற்று இரவு பணிக்கு சென்றிருந்த வீரணன் இன்று அதிகாலை 5 மணிக்கு வேலையை முடித்துக் கொண்டு உறவி னர் சிங்கம் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். வீரணன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து பயணம் செய்தார்.

    மறவன்குளம் மெயின் ரோட்டில் சென்றபோது அங்குள்ள வேகத்தடை மீது மோட்டார் சைக்கிள் ஏறியது. அப்போது வீரணன் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி ரோட்டில் தவறி தலைகுப்புற விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த வீரணன் சம்பவ இடத்திலயே பரிதாப மாக இறந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வேல்சாமி டி-சவேரியார்புரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
    • முத்து, விஜயன் ஆகியோர் வேல்சாமியை கீழே தள்ளி தாக்கினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தாளமுத்து நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் வேல்சாமி (வயது 90). இவர் டி-சவேரியார்புரம் பகுதியில் உள்ள ஒரு கடையில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    தகராறு

    அதேபகுதியை சேர்ந்த மற்றொரு கடையில் வேலைபார்த்து வரும் முத்து, விஜயன் ஆகியோர் அங்கிருந்த முட்செடிகளை அகற்றி வேல்சாமி வேலைபார்க்கும் கடையின் முன்பு கொட்டியுள்ளனர். இதனை அவர் தட்டிக்கேட்டு ள்ளார்.

    அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது தகராறாக மாறியது.

    இதில் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள் முத்து, விஜயன் ஆகியோர் வேல்சாமியை கீழே தள்ளி தாக்கினர். தொடர்ந்து அங்கிருந்த கற்களை எடுத்து அவர் மீது வீசி தாக்கினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த வேல்சாமி தூத்துக்குடி அரசு மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுதொடர்பாக தாள முத்துநகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் முத்து, விஜயன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    • காவலாளியை டிரைவர் தாக்கினார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.

    மதுரை

    மதுரை ஆரப்பாளையம் டி.டி.மெயின் ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காவலாளியாக இருப்பவர் ஜோசப் (வயது 68). இவர் பணியில் இருந்த போது ஆரப்பாளையம் புட்டு தோப்பு செக்கடி தெருவை சேர்ந்த கார்த்திக் என்பவர் தான் ஓட்டி வந்த ஆட்டோவை திருமண மண்டபத்தின் முன்பு நிறுத்தி உள்ளார். அவரிடம் வாகனத்தை சற்று தள்ளி நிறுத்தும்படி ஜோசப் கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அவரை ஆபாசமாக பேசி தாக்கினார். இது குறித்து கரிமேடு போலீசில் ஜோசப் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்தனர்.

    மதுரை நடராஜ் நகர் ஜான்சன் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் மகள் சோபிதா அபிதா (வயது 22). இவர் மணப்பெண் அலங்காரம் செய்து வருகிறார். இதனால் பலரிடம் செல்போனில் பேசி வந்துள்ளார். ஆண் நண்பர்களுடனும் அடிக்கடி பேசியுள்ளார். இதனை பாஸ்கரன் கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று சோபிதா அபிதாவையும், சகோதரி மற்றும் தாயையும் ஆபாசமாக பேசியள்ளார். அதனை சோபிதா அபிதா தட்டிக்கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்கரன் சோபி ஆபிதாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கரிமேடு போலீசில் சோபிதாஅபிதா புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரனை கைது செய்தனர்.

    • காவலாளி திடீரென இறந்தார்.
    • நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    மதுரை மாவட்டம் கருப்பாயூரணி வீரபாண்டியாபுரத்தை சேர்ந்தவர் சமயமுத்து(33). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்தார். இவர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி நெடுகனேந்தலில் நடைபெற்ற மாமனாரின் இல்ல விழாவிற்காக சென்றார். அங்கு உறவினர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இந்த நிலையில் அதிகாலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உறவினர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் மேல்சிகி ச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சமயமுத்துவின் தந்தை தமிழ்செல்வன் கொடுத்த புகாரின்பேரில் நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மைவாடியில் மோகனசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விதை நெல் கிடங்கு உள்ளது.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

     உடுமலை :

    மடத்துக்குளத்தையடுத்த மைவாடி பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியிடமிருந்து செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மைவாடியில் மோகனசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விதை நெல் கிடங்கு உள்ளது.இங்கு சின்னப்பன் புதூரைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் நெல் கிடங்கின் முன் முத்துச்சாமி கட்டிலை போட்டு தூங்கியுள்ளார்.

    நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சாவகாசமாக அந்த பகுதியை நோட்டம் விட்டு விட்டு,அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிக்கிறார். பின்னர் முத்துசாமியின் அருகில் சென்று அவர் தலையணைக்கடியில் வைத்திருந்த செல்போனை நைசாக திருடுகிறார்.அப்போது விழித்துக் கொண்ட முத்துச்சாமி அந்த நபரை துரத்துகிறார்.ஆனால் அதற்குள் மின்னல் வேகத்தில் செல்போனுடன் அந்த நபர் தப்பிச்செல்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் குறித்து முத்துச்சாமி அளித்த புகாரின் பேரில் மடத்துக்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • மதுரை அருகே காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.
    • தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கிருஷ்ண பாண்டியன் (வயது63). இவர் புது ராம்நாடு ரோட்டில் உள்ள வீட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு திடீரென்று வாத நோய் வந்தது. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி சண்முகவள்ளி தெப்பக்குளம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணபாண்டியனின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராணுவ வீரர்-காவலாளி திடீரென இறந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் கோட்டூர் நடுத்தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த ஒரு வருடமாக உடல்நலப்பாதிப்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஊருக்கு வந்தவர் செவல்பட்டியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு மாடியில் இருந்து இறங்கியபோது வலிப்பு ஏற்பட்டு கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. உறவிர்கள் அவரை மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது அவர் ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து சூலக்கரை போலீஸ் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் மனைவி மகாலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகாசம்பட்டியை சேர்ந்தவர் மணக்கன். அரசு பணியாளர் நற்பணி சங்க கட்டிடத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று மாடியில் இருந்து தவறி விழுந்தார். அவரை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மணக்கன் மகள் மரகதம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×