என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காளை"

    • பேட்டகாளி, சோழன், அணில், கரிசல், கரிகாலன், புல்லட் என இவர் வளர்க்கும் காளைகளுக்கு செல்ல பெயர் வைத்துள்ளார்.
    • ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஒவ்வொரு காளையும் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகிறது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட இலங்கையின் முன்னாள் முதலமைச்சரும், இலங்கை பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் திருப்பத்தூர் அருகே ஆளவிளாம்பட்டி கிராமத்திலுள்ள அவரது தோப்பில் தமிழகம் மற்றும் வெளி மாநில காளைகளை வாங்கி பராமரித்து வருகிறார்.

    ஜல்லிக்கட்டில் ஆர்வம் உள்ள செந்தில் தொண்டமான் தன்னுடைய காளைகளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வைப்பது வழக்கம். அவருடைய காளைகள் பரிசுகளை குவித்து நம்பர் ஒன் காளைகளாக திகழ்ந்து வருகின்றன.

    பேட்டகாளி, சோழன், அணில், கரிசல், கரிகாலன், புல்லட் என இவர் வளர்க்கும் காளைகளுக்கு செல்ல பெயர் வைத்துள்ளார். சீறிப்பாய்வதில் அசாத்திய திறமை, பெருத்த திமில், கூரிய கொம்புகள், ராஜநடையோடு கம்பீரமாக வலம் வரும் இந்த காளைகள் களத்தில் வீரர்களை மிரள வைக்கும் அளவிற்கு சிறப்பு பயிற்சிகளை அளித்து வருகிறார் செந்தில் தொண்டமான்.

    பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக எனது தோட்டத்திலேயே வாடிவாசல் ஏற்பாடு செய்து அதன் வழியாக பாய்ந்தோட பயிற்சி வழங்குதல், சீறிப்பாய்ந்து மணற்மேடுகளை முட்டுதல், மாடுபிடி வீரர்களின் பிடியில் சிக்காமல் இருக்க தனி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காளையின் உடல் வலிமைக்காக வழக்கமான உணவுகளை தவிர்த்து பேரிச்சம் பழம், பருத்தி விதை, புண்ணாக்கு, முட்டை, கோதுமை தவிடு போன்ற ஊட்டமளிக்கும் உணவுப் பொருள்களை வழங்குகின்றோம்.

    காளைகளுக்கு தினமும் நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஒவ்வொரு காளையும் ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகிறது.

    ஒவ்வொரு ஜல்லிக்கட்டு போட்டிக்கும் சென்றுவர கேரவன், தனித்தனி அறைகளில் பேன், ஏர்கூலர், வசதியுடன் கூடிய தங்குமிடம் என இந்த காளைகளுக்கு அனைத்து வசதிகளோடு கூடிய பராமரிப்பும் தீவிர பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாடி வாசலில் இருந்து துள்ளி வந்த காளை அருகில் இருந்த விவசாய நிலத்தின் கிணற்றில் விழுந்து இறந்தது.
    • அனுமதியின்றி போட்டி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் போலீசார் கூறினர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆயில்பட்டி ராமநாதபுரம் பகுதியில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது.

    இந்த போட்டியில் மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, காயல்பட்டி, தம்மம்பட்டி உள்பட பல பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். 50-க்கும் மேற்பட்ட காளைகளும் பங்கேற்றன.

    மாடுகளை பிடித்து வீரர்கள் தங்களது வீரத்தை காட்ட மாடுபிடி வீரர்கள் அதிக ஆர்வதத்துடன் விளையாடினர். இதனை பார்க்க அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான மாடு பிடி வீரர்களும் பங்கேற்றனர்.

    இதையடுத்து வாடி வாசலில் இருந்து துள்ளி வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் படிக்க முயன்றனர். அப்போது ஒரு காளை அருகில் விவசாய நிலத்திற்கு சென்றது. அப்போது அங்கிருந்த கிணற்றில் விழுந்து அந்த காளை இறந்தது. இதனை அறிந்த அந்த பகுதியினர் ஏாளமானோர் அங்கு திரண்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதையடுத்து அங்கு வந்த மங்களபுரம் மற்றும் ஆயில்பட்டி போலீசார் அனுமதியின்றி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போட்டியை தடுத்து நிறுத்தினர். இது குறித்து போலீசார் கூறுகையில், ஜல்லிக்கட்டு போட்டி அனுமதியின்றி நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் நாங்கள் அங்கு விரைந்து சென்று போட்டியை தடுத்து நிறுத்திணோம். காளை உயிரிழந்தது தொடர்பாக விசாரணை செய்து வருகிறோம், அனுமதியின்றி போட்டி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.

    • ஜல்லிக்கட்டில் காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
    • பதிவு செய்த மாடுகளுக்கு கியூ ஆர் கோடு வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் களத்துக்குள் அனுமதிக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த திருக்கானூர்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் வீரர்கள் காளைகளை அடக்கினர். பல காளைகள் வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்தது.

    முன்னதாக இந்த ஜல்லிக்கட்டில் 542 காளைகள் ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு இருந்தது. பதிவு செய்த மாடுகளுக்கு கியூ ஆர் கோடு வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் களத்துக்குள் அனுமதிக்கப்பட்டன.

    இந்தப் பணிகளை தஞ்சை மண்டல கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் உத்தரவின் பேரில் ஏழும்பட்டி கால்நடை மருந்தக உதவி மருத்துவர் செரீப் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

    கியூ ஆர் கோடு வழங்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

    இதேபோல் திருக்கானூர்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் வீரர்களை முட்டி காயம் ஏற்படாமல் இருப்பதற்காக மாடுகளின் கொம்புகளில் கால்நடை பராமரிப்பு துறையினர் ரப்பர் பொருத்தியிருந்தனர்.

    • காளைகளை பிடிப்பதற்காக அதன் உரிமையாளர்கள் பின் தொடர்ந்து ஓடினர்.
    • பலத்த காயம் அடைந்த அந்த காளை பரிதாபமாக உயிர் இழந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாதாக்கோட்டையில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். போட்டியானது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.

    அப்போது வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து வந்த 2 காளைகள் திடீரென போட்டி நடைபெறும் இடத்தை விட்டு வெளியே ஓடியது. வேகமாக ஓடிய காளைகள் திருச்சி சாலையில் ஓடிக்கொண்டிருந்தது.

    காளைகளை பிடிப்பதற்காக அதன் உரிமையாளர்கள் பின் தொடர்ந்து ஓடினர். அப்போது ஒரு காளை மாடு பாலத்தின் வழியாக ஓடிய போது தவறி கீழே விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அந்த காளை பரிதாபமாக உயிர் இழந்தது.

    இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், காளையின் உரிமையாளர் அரியலூர் மாவட்டம் வெங்கனூரை சேர்ந்த முத்துக்குமார் (வயது 45) என்பது தெரியவந்தது.

    ஜல்லிக்கட்டில் காளை ஒன்று உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • சிறிது நேரம் டிஜிட்டல் கடிகாரம் செயல்படாமல் போனதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக எருது விடும் விழா நிறுத்தப்பட்டது.
    • ஆவேசம் அடைந்த ரசிகர்கள் வாலிபர் ஒருவரை காளை போல் அலங்காரம் செய்து கயிறுகட்டி அழைத்துச்சென்று ஓடவிட்டனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு ஊராட்சி பகுதியில் எருது விடும் விழா நடைப்பெற்றது.

    இந்த விழாவில் வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, ஓசூர், ஆந்திர மாநிலம் குப்பம் ஆகிய பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

    கால்நடை மருத்துவர்களின் உரிய பரிசோதனைக்கு பின்னரே காளைகள் அவிழ்த்து விடப்பட்டன, குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் கடந்த காளைக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-வது பரிசாக ரூ.80 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.70 ஆயிரம் என 40 பரிசுகளும் ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.

    இந்நிலையில் எருது விடும் விழாவில் சிறிது நேரம் டிஜிட்டல் கடிகாரம் செயல்படாமல் போனதால் அரை மணி நேரத்திற்கும் மேலாக எருது விடும் விழா நிறுத்தப்பட்டது.

    இதனால் ஆவேசம் அடைந்த ரசிகர்கள் வாலிபர் ஒருவரை காளை போல் அலங்காரம் செய்து கயிறுகட்டி அழைத்துச்சென்று ஓடவிட்டனர்.

    மேலும் இந்த விழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். 50 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு்பட்டனர். 

    • காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது.
    • இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.44 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உள்ள பழையகோட்டை மாட்டுத்தாவணியில் உலகிலேயே வீரத்திற்கும், கம்பீரத்திற்கும் உலக புகழ் பெற்ற காங்கயம் இன காளைகள், கன்றுகள், பசுமாடுகள் விற்பனை சந்தை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகள் மட்டுமே விற்பதும், வாங்குவதும் நடைபெறும்.

    இதன்படி ஞாயிற்று க்கிழமை நடைபெற்ற சந்தையில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த காங்கயம் இன பெரிய பூச்சி காளைகள், இளம் பூச்சி காளைகள், செவலை பசுமாடுகள், மயிலை பூச்சி காளைகள், மயிலை பசுமாடுகள், மயிலை கிடாரிகள், காராம்பசு கிடாரி கன்றுகள் என ரகம் வாரியாக தரம் பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.மொத்தம் 82 காங்கயம் இன பசுமாடுகள், காளைகள், கன்றுகளில் மொத்தம் 40 நாட்டு பசுமாடுகள், காளைகள், கன்றுகள் நேரடியாக விறுவிறுப்பாக விற்பனை செய்யப்பட்டது.

    சந்தையில் அதிகபட்சமாக 9 மாத சினையுடன் காங்கயம் இன மயிலை பசுமாடு ரூ.66 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் சந்தையில் காங்கயம் இன இளங்கன்றுகள் ஆரம்ப விலையாக ரூ.44 ஆயிரம் முதல் விற்பனை செய்யப்பட்டது. ஒரே நாளில் இந்த சந்தையில் மொத்தம் ரூ.17 லட்–சத்–திற்கு காங்கயம் இன காளைகள், கன்றுகள், மாடுகள் விற்பனை செய்யப்பட்டது.

    • மஞ்சுவிரட்டில் காளைகள் சீறிப்பாய்ந்தன.
    • 2 பேர் இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் கிராமத்தில் உள்ள ஆதினமிளகி அய்யனார் முத்துமணிஅய்யா கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 252 காளைகளும், 70 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். காளைகள் அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு சேர், பீரோ, அண்டா, சைக்கிள் போன்ற பரிசுகளும் அமைச்சர் சார்பில் வழங்கப்பட்டது.

    இந்த போட்டிக்கான ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளை மாவட்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்க தலைவர் சுரேஷ் கருப்பையா அம்பலம், லேனா பெரிய தம்பி அம்பலம், மஞ்சரி லட்சுமண் ஆகியோர் செய்திருந்தனர். இந்த மஞ்சுவிரட்டில் 2 பேர் இறந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    • கோவில் காளைக்கு கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
    • காளையை ஊர்வலமாக எடுத்து சென்று இன்று மாலை நல்லடக்கம் செய்ய உள்ளனர்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள பெரியஊர்சேரி கிராமத்தில் முத்தாலம்மன் கோவில் காளை இருந்து வந்தது. உடல்நல குறைவால் அந்த காளை இன்று காலை இறந்தது.

    இந்த காளை உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட பல்வேறு ஜல்லிக் கட்டுகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி தங்கம், வெள்ளி நாணயம், அண்டா, சைக்கிள், பீரோ உள்ளிட்ட பல பரிசுகள் பெற்றுள்ளது குறிப்பி டத்தக்கது. இந்த காளை ஊருக்குள் சுற்றும் போது செல்ல பிள்ளை யாகவும், வாடி வாசலில் சீறிப்பாயும் போது வீரனாகவும் மாறி ஊருக்கு பெருமை சேர்த்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக உடல்நல குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த அந்த காளை இறந்துவிட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த பலரும் வருகை தந்து காளைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஊர் மந்தையில் காளையை நிறுத்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பெண்கள் உள்பட ஒட்டு மொத்த கிராமமே ஒன்று திரண்டு கண்ணீர் மல்க காளையை ஊர்வலமாக எடுத்து சென்று இன்று மாலை நல்லடக்கம் செய்ய உள்ளனர்.

    • மாட்டை வேட்டையாடும் நோக்கத்தில் யாரேனும் கொன்றிருக்கலாம் என போலீசில் புகார் அளித்தார்.
    • சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி அருகே வடமலைநாச்சியம்மன் கோவில் செல்லும் சாலையில் காகம்பாறை மலையடிவாரப்பகுதி உள்ளது. போடி கரட்டுப்பட்டியை சேர்ந்த பவுன்பாண்டி என்பவர் தான் வளர்த்து வந்த 2 நாட்டு மாடுகளை ஜல்லிக்கட்டு பயிற்சி அளிப்பதற்காக இங்குள்ள தனது உறவினர் வீட்டு தோட்டத்தில் கட்டி வைத்திருந்தார்.

    சம்பவத்தன்று பயிற்சிக்காக கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ஜல்லிக்கட்டு மாடு மாயமானது. இதனைதொடர்ந்து அந்த மாட்டை பவுன்பாண்டி மற்றும் அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் அந்த மாடு மலைஉச்சியில் மாந்தோப்பு பகுதியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து பவுன்பாண்டி குரங்கனி போலீசில் புகார் அளித்தார். மாடு கட்டப்பட்டிருந்த மூக்கணாங்கயிறு காணவில்லை.

    மேலும் அதன் சதை பகுதி முற்றிலும் எடுக்கப்பட்டுள்ளது. கயிறு எரிந்த நிலையில் உள்ளது. எனவே இந்த மாட்டை வேட்டையாடும் நோக்கத்தில் யாரேனும் கொன்றிருக்கலாம் என போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவஇடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது மாட்டின் இறைச்சி பகுதி வெட்டி எடுக்கப்பட்டது உறுதியானது. இதனைதொடர்ந்து அது கொலை செய்யப்பட்டது தெரியவரவே இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • திருப்பத்தூர் அருகே ஜல்லிகட்டில் காளைகள் முட்டியதில் 39 பேர் காயமடைந்தனர்.
    • திடலில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பூலாங்குறிச்சி கிராமத்தில் அங்காள பரமேசுவரி, கணவாய் கருப்பர் வருடாபிஷேக விழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 600 காளைகளும், 50 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் அடக்க முற்பட்டனர். இதில் காளைகள் முட்டியதில் 39 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு திடலில் அமைக்கப்பட்டிருந்த மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக 7 பேர் பொன்னமராவதி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்டனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கார்த்தி சிதம்பரம் எம்.பி., மாநில ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பேரவை தலைவர் ஒண்டிராஜ், மாநில இளைஞரணி தலைவர் அருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • என்னால் கொண்டு வரப்பட்ட 2017-ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என தீர்ப்பளித்து உள்ளது.
    • தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்து, என்னால் கொண்டு வரப்பட்ட 2017-ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என தீர்ப்பளித்து உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு தமிழக மக்களுக்கு கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டின் கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் கிடைத்த வெற்றி.

    தமிழ்நாடு அரசின் 2017- ம் ஆண்டு விலங்குகள் வதைத் தடுப்பு (தமிழ்நாடு திருத்தம்) சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இடைப்பட்ட காலத்தில் கட்டுப்பாடுகள் என்ற போர்வையில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற விளையாட்டுகளுக்கான குழு உறுப்பினர்கள் மீதும், காளைகளின் உரிமையாளர்கள் மீதும், விளையாட்டு வீரர்கள் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள காளை உரிமையாளர்களும், ஜல்லிக்கட்டு வீரர்களும் ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பதை ரத்து செய்யவும் தி.மு.க. அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கிராமங்களில் காளைகளை தயார்படுத்தும் பணியிலும், காளைகளை அடக்குவதற்காக வீரர்களும் தயாராகி வருகின்றனர்.
    • கடந்த முறை நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு ஆன்லைனில் பதிவு செய்வதை நிறுத்த வேண்டும்.

    திண்டுக்கல்:

    பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தயார்படுத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்திலும் ஜல்லிக்கட்டு விழா பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

    பொங்கல் பண்டிகையில் தொடங்கி அதன்பிறகு தொடர்ச்சியாக பல்வேறு ஊர்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். இதற்காக கிராமங்களில் காளைகளை தயார்படுத்தும் பணியிலும், காளைகளை அடக்குவதற்காக வீரர்களும் தயாராகி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகில் உள்ள சிறுமலை அடிவாரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த பல ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து அதனை பராமரித்து வருகிறார். கடந்த 40 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வரும் இவர் தற்போது மரக்காளை, வீறிக்கொம்பு காளை, செவலக்காளை என 3 ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறார்.


    இந்த காளைகளின் உடல் வலிமைக்காக தவிடு, உளுந்தம்குருணை, பருத்திவிதை, புண்ணாக்கு, பேரிச்சம்பழம் போன்ற ஊட்டச்சத்து உணவுகளை தினந்தோறும் வழங்கி வருகிறார். இதுதவிர காளைகளுக்கு நடைபயிற்சி, நீச்சல்பயிற்சி, ஓட்டப்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் தனது ஜல்லிக்கட்டு காளைகளுக்காகவே தோட்டத்தில் பிரத்யேகமாக பெரியஅளவில் நீச்சல் குளத்தை கட்டி வைத்துள்ளார்.

    அந்த காளைகளுக்கு மாடுபிடிவீரர்களை வைத்து சிறந்த முறையில் பயிற்சியும் அளித்து வருகிறார். தினந்தோறும் ஜல்லிக்கட்டு காளையுடன் மாடுபிடி வீரர்கள் அடக்க முற்படுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து காளையின் உரிமையாளர் முருகன் தெரிவிக்கையில், இந்த 3 காளைகளையும் எனது குழந்தைகள் போல்தான். எனது குழந்தைகள் தினந்தோறும் சாப்பிட்டார்களா, நல்ல முறையில் விளையாடுகிறார்களா என்பதை கண்காணிப்பதை போல இந்த காளைகளையும் கவனித்து வருகிறேன்.

    ஜல்லிக்கட்டு போட்டியின் போது திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு ஊர்களுக்கும் சென்று எனது காளைகள் பரிசுகளை பெற்று வந்துள்ளன. எந்தவித பிரதிபலனும் இல்லாமல் நான் வளர்க்கும் காளைகளை ஜல்லிக்கட்டில் துள்ளிவிளையாடும்போது அந்த மகிழ்ச்சியே எனக்கு போதுமானது. தற்போது ஜல்லிக்கட்டு போட்டிக்காக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கடந்த முறை நடந்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு ஆன்லைனில் பதிவு செய்வதை நிறுத்த வேண்டும். அப்போதுதான் அனைத்து மாடுகளும் போட்டியில் பங்கேற்க முடியும்.

    மாடுகள் போட்டியில் கலந்து கொள்ள டோக்கன்முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதேபோல ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கும் முன் காளைகளின் உரிமையாளர்களின் கருத்துகளையும் கேட்டறியவேண்டும் என்றார். 

    ×