search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியிருப்பு"

    • திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
    • சாலையில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    ஆவடி:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது சூறைக்காற்றுடன் கனமழை கொட்டுவதால் பருவமழை காலம் போல் நிலைமை மாறி உள்ளது. இன்று காலையும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் முழுவதும் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. நேற்றுமுன்தினம் மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆவடியில் 10 செ.மீட்டர் மழை பதிவானது. தொடர்ந்து ஆவடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மழை வெளுத்து வாங்குகிறது.

    இதனால் திருநின்றவூர் நகராட்சிக்கு உட்பட்ட 16, 17, வார்டுகளில் உள்ள பெரியார்நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகரில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட வீடுகளை மழை நீர் வெள்ளமாக குளம் போல் தேங்கிநிற்கிறது.

    சாலையில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் பருவமழையின் போது கனமழை கொட்டும் போது இது போன்று தண்ணீர் தேங்குவது வழக்கம்.

    ஆனால் தற்போது ஒரு நாள் மழைக்கே தண்ணீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதியில் தேங்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால்பாம்பு தவளை, தேள் உள்ளிட்ட விஷ பூச்சிகள் தண்ணீரில் நீந்தி வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்து வருகின்றன. இதானல் மழை நீர் சூழ்ந்து நிற்கும இடங்களில் வசிப்பவர்கள் அச்சத்துடன் இருக்கும் நிலை உள்ளது.

    பெரியார்நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகர் பகுதிகள் திருநின்றவூர் ஈசா ஏரியை ஒட்டி உள்ள தாழ்வான பகுதி ஆகும். எனவே சிறிய மழைக்கே இப்பகுதி தண்ணீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சிஅளிக்கிறது. எனவே இந்த பகுதியில் மழைநீர் வெளியேற நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ஆவடி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது இதனால் பாரதி தாசனன் தெரு, கம்பர்தெரு உள்பட பல தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளது. பெரியார்நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகர் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதி அடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. பல தெருக்களில் வெள்ளம் காட்சியளிக்கிறது. இப்பகுதியில் பெரிய ஏரி உள்ளது. ஏரிநீரும் கசிந்து தெருக்களில் தேங்கிவிடுகிறது. திருநின்றவூர் நகராட்சி நிர்வாகம் உடனே மழைநீரை வெளியேற்றி இதற்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும். இப்போதே சிறி மழைக்கு இந்த நிலைமை என்றால் பருவழையின் போது கடும் பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகும். இதனை நினைத்தாலே பயமாக இருக்கிறது என்றனர்.

    • கடற்கரை பகுதியான அல்- மவாசி பகுதியில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள கூடாரங்களின்மீது நேற்று இரவு இஸ்ரேல் குண்டு மழை பொழிந்துள்ளது.
    • சுமார் 2000 பவுண்டுகள் [சுமார் 1000 கிலோ] எடையிலான 10,000 ஆயுதங்களையும், மிசைல்கலையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பிவைத்துள்ளது

    பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் ஓய்ந்தபாடலில்லை. இந்த போரில் இதுவரை 37,718 பேர் உயிரிழந்துள்ள நிலையில் காசா நகரம் முற்றிலும் உருக்குலைந்துள்ளது. பாலஸ்தீன மக்கள் அதிகம் வாழும் மற்றொரு நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தற்போது குறிவைத்து தாக்குதல்களை நடத்திவருகிறது. மக்கள் தஞ்சமடைந்துள்ள முகாம்கள், மருத்துவமனைகள் என வகைதொகை இன்றி கண்மூடித்தனமாக இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தாக்குதல்களுக்கு உலக நாடுகள் கண்டம் தெரிவித்து வருகின்றன.

    இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவது எட்டாக்கனியாக இருந்து வரும் நிலையில் ரஃபா நகரில் உள்ள கடற்கரை பகுதியான அல்- மவாசி பகுதியில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள தற்காலிக கூடாரங்களின் மீது நேற்று இரவு இஸ்ரேல் குண்டு மழை பொழிந்துள்ளது. இந்த தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தாக்குதலுக்குள்ளான  கூடாரங்களில் இருந்த 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

     

     

    இஸ்ரேலின் பீரங்கிகள் அப்பகுதியில் முன்னேறிவந்துள்ள நிலையில் அங்குள்ள மக்களிடம் பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கூறபடுகிறது. இதற்கிடையில் போர் தொடங்கிய கடந்த அக்டோபர் மாதம் முதல் இன்றுவரை அதிக சேதத்தை ஏற்படுத்தும் சுமார் 2000 பவுண்டுகள் [சுமார் 1000 கிலோ] எடையிலான 10,000 ஆயுதங்களையும், மிசைல்கலையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பிவைத்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

     

    • ஜெய் பாலஸ்தீனம் என்ற முழக்கத்துடன் அவர் பதவியேற்றுக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
    • டெல்லியில் உள்ள எனது வீட்டின் மீது எத்தனை முறை தாக்குதல் நடந்துள்ளது என்ற எண்ணிக்கையை என்னால் கணக்கிட முடியாத அளவுக்கு அத்தனை தாக்குதல்கள் நடந்துள்ளன.

    தெலங்கானாவில் செல்வாக்கு மிக்க தலைவராக விளங்கிவரும் ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஐதராபாத் தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்றத்தில் கடந்த ஜூன் 25 ஆம் தேதி எம்.பியாக பதவியேற்றுக்கொண்டார். தனது பதியேற்பின்போது பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடந்தி வரும் போரைக் கண்டிக்கும் வகையில் ஜெய் பாலஸ்தீனம் என்ற முழக்கத்துடன் அவர் பதவியேற்றுக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    சர்ச்சைக்கு விளக்கம் அளித்த ஒவைசி, ஒவ்வொருவரும் பல விஷயங்களைக் கூறினர். அதுபோல நானும் ஜெய் பீம், ஜெய் தெலுங்கானா, ஜெய் பாலஸ்தீனம் என கூறினேன். இது எப்படி நாட்டிற்கு எதிரானதாக இருக்கும்? அரசியல் சட்டத்தில் அப்படி கூறக்கூடாது என்று எங்காவது விதி உள்ளதா காட்டுங்கள்? என கேள்வி எழுப்பினார். இதற்கிடையில் தற்போது பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து வருவதால் டெல்லியில் உள்ள தனது குடியிருப்பில் ஒவைசி தங்கியுள்ள நிலையில் நேற்று [ஜூன் 28] இரவு அவரது இல்லத்தின் பெயர் பலகை உள்ள முன் புற சுவரின் மீது மர்ம நபர்கள் கருப்பு மையை ஊற்றிவிட்டுத்  தப்பிச் சென்றுள்ளனர்.

    வீட்டின் சுவர் மீது உள்ள கருப்பு மையை காவலர்கள் நீக்கும் காட்சிகளை படம்பிடித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இந்த சம்பவத்துக்கு ஒவைசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, மர்ம நபர்கள் எனது வீட்டின் மீது கருப்பு மையை ஊற்றி அத்துமீறியுள்ளனர். டெல்லியில் உள்ள எனது வீட்டின் மீது எத்தனை முறை தாக்குதல் நடந்துள்ளது என்ற எண்ணிக்கையை என்னால் கணக்கிட முடியாத அளவுக்கு அத்தனை தாக்குதல்கள் நடந்துள்ளன. தாக்குதல் குறித்து டெல்லி போலீசிடம் கேட்டபோது அவர்கள் கைவிரித்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் குறிப்பிட்டு, இது உங்களது கட்டுப்பாட்டுக்குள் உள்ள இடத்தில் நடக்கிறது என்றும், மக்களவை சபாநாயர் ஓம் பிர்லாவைக் குறிப்பிட்டு எம்.பிக்களுக்களின் பாதுகாப்பு ஊறுதிப்படுத்தப்படுமா என்று எங்களுக்கு விளக்கம் கொடுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

    மேலும், குண்டர்கள் எனது வீட்டை மீண்டும் மீண்டும் குறிவைக்கின்றனர். இது என்னை பயமுறுத்தாது, சாவர்க்கர் பாணியிலுள்ள இதுபோன்ற கோழைதனத்தை நிறுத்திவிட்டு என்னோடு நேருக்கு நேராக மோதுங்கள். ஜெய் பாலஸ்தீனம் என்ற முழக்கத்துடன் அவர் பதவியேற்றுக்கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. மையையும் சில கற்களை வீசுவதாலும் என்னை விரட்டி விட முடியாது என்று தெரிவித்துள்ளார்.

    • திருடர்கள் இருவர் சுடிதார் அணிந்து பெண் வேடத்தில் கொள்ளை.
    • எஸ்ஆர் நகரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் பரபரப்பு.

    தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள செக் காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் வெங்கடேஷ்வர ராவ். தனியார் நிறுவன ஊழியரான இவர், கடந்த 18ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஆந்திராவில் உள்ள ஓங்கோ என்ற பகுதிக்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில், மறுநாள் காலை பணிப்பெண் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து பணிப்பெண் வெங்கடேஷராவிடம் கூறியதை அடுத்து, அவர் போலீசில் புகார் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். பிறகு, சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

    அப்போது, திருடர்கள் இருவர் சுடிதார் அணிந்துக் கொண்டு பெண் வேடத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

    அவர்களின் தனித்துவமான உடையின் காரணமாக "சுடிதார் கும்பல்" என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக அவர்கள் எஸ்ஆர் நகரில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் போலீசார் நடத்திய விசாரணையில், மே 18 ஆம் தேதி அதிகாலையில் சுடிதார் மற்றும் முகமூடி அணிந்த இரண்டு ஆசாமிகள் அடுக்குமாடி குடியிருப்புக்குள் புகுந்தது தெரியவந்தது.

    இதில், 12 சவரன் தங்கம், ரூ. 1 லட்சம் ரொக்கம், மடிக்கணினி உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் 6,057 சதுரடி பரப்பில் 6 பணியாளர் குடியிருப்புகள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.
    • நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலனை பாதுகாத்திடும் வகையில் அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள், பொங்கல் கொடை, குடியிருப்புகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், ஓய்வுபெற்ற அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொங்கல் கொடை போன்ற பல்வேறு முனைப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அவர்களின் நலன் பேணப்பட்டு வருகிறது.

    2021–2022-ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக் கோரிக்கை அறிவிப்பில், "சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலுக்குச் சொந்தமான காலியிடத்தில் உபயதாரர் பங்களிப்போடு ரூபாய் 2 கோடி செலவில் பணியாளர் குடியிருப்புகளும், பக்தர்கள் தங்கும் விடுதியும் கட்டப்படும்" என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் 6,057 சதுரடி பரப்பில் 6 பணியாளர் குடியிருப்புகள் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி ரூ.2.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இப்புதிய குடியிருப்பினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்பி.கே.சேகர்பாபு தலைமை வகித்தார்.

    சென்னை, சிந்தாதிரி பேட்டையில் 3.73 ஏக்கர் பரப்பளவு கொண்ட மே தின பூங்கா விளையாட்டு மைதானத்தை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ. 10 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உடற்பயிற்சி மற்றும் பொழுது போக்கிற்காக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. சிந்தாதிரிபேட்டை மே தின பூங்கா அருகிலுள்ள பள்ளிகள் மற்றும் உள்ளூர் சமூகத்தை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டு, பல்வேறு நவீன விளையாட்டு வசதிகளை வழங்குகிறது.

    இவ்விளையாட்டு மைதானத்தில் இரண்டு பூப்பந்து உள்விளையாட்டு அரங்கம், 100 பார்வையாளர்கள் அமர்வதற்கான இருக்கைகளுடன் கூடிய சறுக்கு வளையம், 50 முதல் 75 வரை பார்வையாளர்கள் அமர்வதற்கு ஏற்ற குத்துச்சண்டை வளையம், பொழுதுபோக்கு மற்றும் இருக்கைகளுடன் கூடிய பசுமை பகுதிகள், 6 வலை பந்தாட்ட மைதானம், அனைத்து வயதினருக்கான நடைபயிற்சி மற்றும் ஓடுதள பாதைகள், கிரிக்கெட் மற்றும் கால்பந்து போன்ற பல்வேறு விளையாட்டுகளுக்கான மைதானம் மற்றும் பயிற்சி நோக்கத்திற்காக 3 பயிற்சி வலைகள் ஆகியவை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் நிறுத்துமிடம், குடிநீர், கழிப்பறைகள் மற்றும் இதர அத்தியாவசிய வசதிகளை கொண்ட மைதானமாக அமையவுள்ளது.

    நிகழ்ச்சியில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவரும் அமைச்சருமான பி.கே.சேகர்பாபு , மத்திய சென்னை தயாநிதி மாறன் எம்.பி. மேயர் பிரியா, மாவட்ட செயலாளர் சிற்றரசு, பகுதி செயலாளர் மதன் மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • 384 குடியிருப்புகள் ரூ. 31.60 கோடி மதிப்பில் கட்டுமான பணிகள் முடிவு பெற்றுள்ளது.
    • அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணிகளை உரிய காலத்துக்குள் முடிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அய்யனார் கோவில் பகுதி வல்லத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்புகள் திட்டத்தின் கீழ் 384 குடியிருப்புகள் ரூ. 31.60 கோடி மதிப்பில் கட்டுமான பணிகள் முடிவு பெற்றுள்ளது.

    இதனை தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குனர் சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் இரண்டாவது திட்டம் பகுதியில் 969 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ. 149.32 கோடி மதிப்பில் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு பணிகளை தரமானதாகவும் குறித்த காலத்திற்குள்ளும் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தி னார்.

    இந்த ஆய்வின்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய செயற்பொறியாளர் இளம்பரிதி, உதவி செயற்பொறியாளர்கள் யோகேஸ்வரன், உதவி பொறியாளர் கார்த்திக் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • தாம்பரம் ரெயில்வே சுரங்கபாதையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது.
    • அதிக பட்சமாக நேற்று இரவு மேற்கு தாம்பரத்தில் 12 செ.மீ. மழை பதிவானது.

    தாம்பரம்:

    சென்னையில் கடந்த சில நாட்களாகவே இரவு மற்றும் காலை நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை வெளுத்து வாங்கியது. சென்னையில் புரசைவாக்கம், வேப்பேரி, எழும்பூர், கோயம்பேடு, வடபழனி, பெரம்பூர், வியாசர்பாடி, மூலக்கடை உள்ளிட்ட நகரின் பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவு 12 மணிக்கு பிறகு மழை பெய்தது.

    இதேபோன்று கிழக்கு கடற்கரை சாலையை யொட்டிய பகுதிகளிலும் மழை கொட்டியது. இந்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.

    நீலாங்கரை, திருவான்மியூர், அடையாறு, செம்மஞ்சேரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விடிய விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது. குறிப்பாக செம்மஞ்சேரி பகுதியில் பலத்த மழை பெய்தது.

    இதனால் அப்பகுதிகளில் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. செம்மஞ்சேரி பகுதியில் மட்டும் 9.2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    அதே நேரத்தில் தாம்பரம் புறநகர் பகுதிகளிலும், செங்குன்றம், ஆவடி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை கொட்டியது. அதிக பட்சமாக நேற்று இரவு மேற்கு தாம்பரத்தில் 12 செ.மீ. மழை பதிவானது.

    இதன் காரணமாக தாம்பரம் ரெயில்வே சுரங்கபாதையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகன போக்கு வரத்து முற்றிலுமாக தடைபட்டுள்ளது. சுரங்கப் பாதை மூடப்பட்டு மாற்று வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. இதன் காரணமாக சுமார் 2 கி.மீ. தூரம் வாகனங்கள் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. கிழக்கு தாம்பரம், இரும்புலியூர், அருண்நகர், புதுப்பெருங்களத்தூர், முடிச்சூர், வரதராஜபுரம், செம்பாக்கம், காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளிலும் வெள்ளம் தேங்கியது. இதனால் மேற்கு தாம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகதிகளில் 1000 வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வெளியிடங்களுக்கும் வேலைக்கும் சென்ற மக்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர்.

    பலத்த மழை பெய்த போதிலும் இன்று காலையில் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கின. இதனால் மாணவ-மாணவிகள் மழை வெள்ளத்தை கடந்து பள்ளிகளுக்கு சென்றதையும் காண முடிந்தது. தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட இந்த பகுதிகளில் மழைக் காலங்களில் இதுபோன்று தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி வருவதாகவும் இதனால் கடும் பாதிப்பை சந்தித்து வருவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    கிழக்கு தாம்பரம் சுற்று வட்டார பகுதியில் தேங்கும் மழைநீர் அப்பகுதியில் உள்ள அருண்நகர் வழியாகவே அங்குள்ள ஏரிக்கு செல்லும். ஆனால் ஆக்கிரமிப்பு காரணமாக நீர்வழிப்பாதைகள் சுருங்கி ஊருக்குள் தண்ணீர் புகுந்துவிடுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை இன்று காலையிலும் பல இடங்களில் நீடித்தது. சில இடங்களில் சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. இப்படி சென்னையில் பெய்த மழை காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    மழை காரணமாக சாலையில் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகளும் சிரமத்தை சந்தித்தனர். திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களிலும் இரவு முழுவதும் மழை பெய்தது. காஞ்சிபுரம் கட்டப்பாக்கம் பகுதியில் பலத்த மழை பெய்தது. திருவள்ளூர் ஜமீன் கொரட்டூர் பகுதிகளிலும் இரவில் பெய்த மழை காலை வரையில் நீடித்தது.

    பூந்தமல்லி நகராட்சி ஒன்றாவது வார்டு அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே சாலையில் மழை நீருடன் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளில் கால்வாய்கள் நிரம்பி இருக்கும் நிலையில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து குளம் போல் தேங்கிகிறது. இதில் பள்ளி சிறுவர் சிறுமியர்கள் நடந்து செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதாக பெற்றோர்கள் அச்சம் தெரிவித்தனர். சுமார் 300 மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளி வளாகம் எதிரே நிலவிவரும் சுகாதார சீர்கேட்டை கருத்தில் கொண்டு பூந்த மல்லி நகராட்சி சார்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தேங்கியிருக்கும் கழிவு நீர் அருகே அடுக்கி வைக்கப்பட்டுள்ள செங்கற்கள் மீது சிறுவர்கள் கால் நனையாமல் இருக்க ஆபத்தான முறையே தாவி செல்வதால் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழலும் உள்ளது. ஒவ்வொரு மழைக்கும் இந்த பகுதியில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் குளம் போல் தேங்கி நிற்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    சென்னை மற்றும் புற நகர் பகுதிகளிலும், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பெய்துள்ள மழை அளவு விவரம் வருமாறு:-

    மேற்கு தாம்பரம்-12 செ.மீ. கட்டப்பாக்கம்-9.6 செ.மீ. மீனம்பாக்கம்-5 செ.மீ. நுங்கம்பாக்கம்-4.5 செ.மீ. திருத்தணி-5 செ.மீ. சோழவரம்-4 செ.மீ. திருவள்ளூர் திரூர்-5.4 செ.மீ. கிண்டி, செங்குன்றம், தாமரைப் பாக்கம் பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் இன்று காலை வெப்பம் தணிந்து 'ஜில்' என்ற காற்றும் வீசியது. வருகிற 28-ந் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • 100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
    • பொதுமக்கள் பயமின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஊட்டி,

    ஊட்டியின் மையப்பகுதியில் உள்ள ஜெயில்ஹில் குடியிருப்பில் அரசு ஊழியர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அங்கு நகராட்சி நிர்வாகம் கடந்த சில நாட்களாக துப்புரவு பணியில் ஈடுபடவில்லை என தெரிகிறது.

    இதனால் அங்கு உள்ள பாதையின் இருபுறமும் செடிகள் அடர்ந்து வளர்ந்து, புதர் மண்டி காட்சி அளிக்கிறது. எனவே அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் போக வேண்டி உள்ளது. இரவு நேரங்களில் புதர்களுக்குள் ஒளிந்திருக்கும் வனவிலங்குகள் அச்சுறுத்துகின்றன.

    ஊட்டி நகரத்தின் மைய பகுதியில் உள்ள ஜெயில் ஹில் பகுதி, பராமரிப்பின்றி புதர்காடுகளாக மாறி கிடப்பது அங்கு வசிக்கும் பொதுமக்களை வேதனைப்படுத்தி உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, ஜெயில்ஹில் பகுதியில் உள்ள சாலைகளில் மண்டிக்கிடக்கும் புதர்களை உடனடியாக வெட்டி அகற்றி, பொதுமக்கள் பயமின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • வீடுகளுக்காக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி ஒன்றும் அந்த பகுதியில் உள்ளது.
    • பசுமாட்டை பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள தெற்கு குண்டல் பகுதியில் சுனாமி குடியி ருப்பு உள்ளது. இந்த பகுதி யில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஆனால் இந்த வீடுகளில் யாரும் குடியிருக்கவில்லை. இதனால் இந்த வீடுகள் அனைத்தும் பூட்டிய நிலையில் பாழடைந்து கிடக்கிறது. இந்த வீடுகளுக்காக கட்டப்பட்ட கழிவுநீர் தொட்டி ஒன்றும் அந்த பகுதியில் உள்ளது.

    கழிவு நீர் தொட்டியின் மூடி உடைந்த நிலையில் கிடக்கிறது. இந்த நிலையில் அந்தப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு ஒன்று இந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.

    இதனை பார்த்த அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் உடனே கன்னியாகுமரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரி வித்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி தீயணைப்பு நிலைய அலுவலர் பென்னட்தம்பி தலைமையில் தீயணைக்கும் படை வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அவர்கள் கழிவுநீர் தொட்டியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அந்த பசுமாட்டை பல மணி நேரம் போராடி உயிருடன் மீட்டனர்.

    • தனியாா் பள்ளிகளில் சோ்ப்பதற்காக 25 சதவீத இலவச கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது.
    • குழந்தைகளை ஆரம்ப வகுப்புகளில் சோ்ப்பதற்காக பெற்றோா்கள் விண்ணப்பி த்திருந்தனா்.

    திருப்பூர் :

    தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் குழந்தைகளைச் சோ்ப்பதில் 1 கி.மீ.க்குள் குடியிருப்பு இல்லாததால், இட வாய்ப்பிருந்தும் குழந்தைகளை சோ்க்க முடியாமல் பெற்றோா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

    ஏழை எளிய பெற்றோா் தங்கள் குழந்தைகளை தனியாா் பள்ளிகளில் சோ்ப்பதற்காக 25 சதவீத இலவச கல்வி உரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. அவிநாசி வட்டாரத்தில் உள்ள பல்வேறு தனியாா் பள்ளிகளில் இச்சட்டத்தின் கீழ் தங்களது குழந்தைகளை ஆரம்ப வகுப்புகளில் சோ்ப்பதற்காக பெற்றோா்கள் விண்ணப்பி த்திருந்தனா். இதில் தகுதியான விண்ண ப்பங்கள் தோ்வாகி அவரவா் கைப்பேசி எண்களுக்கு குறுஞ்செய்தியும் வந்தது.

    இதைத்தொடா்ந்து தனியாா் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க குறுஞ்செய்தி வந்திருந்த தகுதியான குழந்தைகள், பெற்றோா்கள் பங்கேற்றனா். ஆனால் கூட்டத்தில் பங்கேற்ற கல்வித் துறை அலுவலா் கூறுகையில், 1 கிலோ மீட்டா் தொலைவுக்கு உள்பட்ட குழந்தைகள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் சோ்க்கைக்குத் தகுதியான வா்கள் என்றாா். இதனால் தகுதியானவா் என குறுஞ்செய்தி வந்தும் பல பெற்றோா்கள் ஏமாற்றம் அடைந்தனா்.

    இதுகுறித்து பெற்றோ ா்கள் கூறியதாவது:- கடந்த ஆண்டு 3 முதல் 4 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளகுழந்தைகள் சோ்க்க ப்பட்டனா். தற்போது, விண்ணப்ப தேதி முடிவடைந்து, இனி அடுத்த ஆண்டுதான் விண்ணப்பிக்க இயலும் என்ற நிலையில் இப்போது இவ்வாறு கூறுகின்றனா். விண்ணப்பம் தோ்வாகி உள்ளதாக குறுஞ்செய்தி வந்தும் குழந்தைகளை சோ்க்க இயலாதது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.

    ஆகவே, தொலைவை 3 கிலோ மீட்டராக கல்வித் துறை தளா்த்த வேண்டும் .அல்லது 1 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள தனியாா் பள்ளிகளுக்கு தகுதியாகி தோ்வான விண்ணப்பதாரா்களை சோ்க்க பரிந்துரைக்க வேண்டும் என்றனா்.இதுகுறித்து பள்ளி நிா்வா கத்திடம் கேட்டபோது, 1 கிலோ மீட்டா் தொலைவுக்குள் உள்ளவா்களுக்கு மட்டுமே சோ்க்கை என கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால், பள்ளியில் 25 சதவீதஇட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அதிகப்ப டியான குழந்தைகளை சோ்க்க இடம் உள்ளது. கல்வித் துறை அறிவுறுத்தலால் குழந்தைகளைச் சோ்க்க இயலவில்லை. கல்வித் துறை தளா்வு வழங்கினால் தோ்வு செய்யப்பட்ட குழந்தைகள் இச்சட்டத்தின்கீழ் சோ்க்கப்படுவா் என்றனா்.

    • திருப்பத்தூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த ஐந்து அடி நீளபாம்பு பிடிபட்டது.
    • அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது வீட்டிற்குள் பாம்பு ஒன்று புகுந்தது. இதனை அறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ஆனந்த் சுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் வீட்டில் இருந்த சுமார் 5 அடி நீளம் உள்ள சாரைப்பாம்பை உயிருடன் மீட்டு வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில்13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.
    • பல கி.மீ., தூரத்துக்கு நடந்து வந்து உதவித்தொகை பெற்றுச்செல்கின்றனர்.

    உடுமலை :

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை, அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி, குருமலை, குழிப்பட்டி, மாவடப்பு, ஆட்டுமலை உட்பட 13க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.அரசின் முதியோர் உதவித்தொகை உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ், அங்கு வசிக்கும் மக்கள் பயனாளிகளாக பயன்பெற்று வருகின்றனர்.ஆனால் உதவித்தொகை பெறவும், ரேஷன் பொருட்களுக்காகவும், சமவெளிப்பகுதிக்கு வந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.உதாரணமாக தளிஞ்சி மலைவாழ் கிராம மக்கள், பல கி.மீ., தூரத்துக்கு நடந்து வந்து உதவித்தொகை பெற்றுச்செல்கின்றனர்.

    சின்னாறு செக்போஸ்ட் வரை நடை பயணமாக வந்து அங்கிருந்து, பஸ்சில் மானுப்பட்டி, உடுமலை உட்பட பகுதிகளுக்கு அப்பகுதி மக்கள் வந்து சென்று வந்தனர்.உதவித்தொகை உட்பட நலத்திட்டங்களை நேரடியாக தங்களது கிராமத்துக்கே கொண்டு வந்து வினியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க மலைவாழ் கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×