என் மலர்
நீங்கள் தேடியது "பூ"
- கார்த்திகை தீப திருநாளையொட்டி பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது.
- மல்லிகை ரூ.2,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.
மதுரை
மதுரை என்றாலே அனைவரின் நினைவுக்கும் வருவது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தபடியாக மல்லிகைப்பூ தான். நகரின் எந்த பகுதியில் வாங்கினாலும் கட்டிய மல்லிகைப் பூவுக்கு தனி மவுசு உண்டு. இடைவெளியின்றி கலர் பூ சேர்த்து விற்கப்படும் மல்லி கைப்பூ உள்ளூர் மட்டுமின்றி வெளியூரில் இருந்து வருப வர்களையும் விநாடியில் ஈர்த்துவிடும் தன்மை வாய்ந் தது.
அந்த வகையில் மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் அனைத்து வித மான பூக்களும் மதுைரை, விருதுநகர், தேனி, திண்டுக் கல் உள்ளிட்ட மாவட்டங்க ளில் இருந்து கொண்டு வரப்பட்டு சந்தைப்படுத்தப் படுகிறது. திருவிழாக்கள், சுபமுகூர்த்த தினங்கள், பண்டிகைகள் உள்ளிட்ட நாட்களில் மல்லிகைப்பூவின் விலை புதிய உச்சம் தொடு வது வழக்கம்.
இந்த நிலையில் திருக் கார்த்திகை தீபத்திருநாளான இன்று பூக்கள் விலை கடு மையாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் நேற்று ரூ.1,800-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப்பூ இன்று ரூ.400 உயர்ந்து ரூ.2,200-க்கு விற்பனையானது.
அதேபோல் முல்லைப்பூ நேற்று ரூ.800-க்கு விற்கப் பட்ட நிலையில் இன்று 1000 ரூபாய்க்கு விற்பனையாகி றது. கனகாம்பரம் பூ நேற்று ரூ.800-க்கு விற்பனை செய் யப்பட்ட நிலையில் இன்று ரூ.1200-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பிச்சிப்பூ ரூ.900 என்ற நேற்றைய விலையில் இருந்து மாறி இன்று ரூ.ஆயிரத்திற்கும், சம்மங்கிப்பூ ரூ.150-க்கும், மெட்ராஸ் மல்லி ரூ.800-க்கும், அரளிப் பூ ரூ.400-க்கும், பட்டன் ரோஸ் 200 ரூபாய்க்கும், செண்டுமல்லி 200 ரூபாய்க் கும் விற்பனை செய்யப்பட் டது.
- புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
- பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அண்ணா வணிக வளாகத்தில் ஒருங்கிணைந்த பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு திண்டுக்கல் புறநகர் பகுதிகளான பல்வேறு கிராமங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது.
பின்னர் இங்கிருந்து வியாபாரிகள் அதனை வாங்கிச்சென்று விற்பனை செய்து வருகின்றனர். கடந்த மாதம் மார்கழி என்பதால் எந்தவித திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளும் நடைபெறவில்லை. மேலும் பரவலாக பெய்த மழை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக பூக்களின் வரத்தும் குறைந்து காணப்பட்டது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு பின்பு நாளை தை மாதத்தின் முதல் வளர்பிறை முகூர்த்த நாள் வருகிறது. நாளை திருமணம் உள்ளிட்ட பல்வேறு விஷேச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளநிலையில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று 30 கிலோ மல்லிகை மட்டுமே விற்பனைக்கு வந்தது. இதனால் ஒரு கிலோ மல்லிகை ரூ.4000-க்கு விற்பனையானது. இதேபோல் முல்லைப்பூ ரூ.1800, ஜாதிப்பூ ரூ.1300, காக்கரட்டான் ரூ.1300, சம்பங்கி ரூ.300, அரளி ரூ.150, செவ்வந்தி ரூ.200, செண்டுமல்லி ரூ.70, கோழிக்கொண்டை ரூ.130, பட்டன்ரோஸ் ரூ.200, பன்னீர்ரோஸ் ரூ.150 என விற்பனையானது.
வழக்கமாக மார்க்கெட்டுக்கு வரும் பூக்களில் பாதிஅளவு கூட இன்று விற்பனைக்கு வராததால் விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர். அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வர உள்ள நிலையில் பூக்களின் விலையேற்றம் சாமானிய மக்களை அதிர்ச்சி அடைய வைத்தள்ளது.
- முதலில் நாம் ரோஸ் செடியில் (rose plant) பூக்கள் பறிக்கிறோம் என்றால் காம்புடன் மட்டும் பறிக்க கூடாது.
- நாம் தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அவற்றின் தோலை தூக்கி எரிந்து விடுவோம்.
பூக்கள் என்றாலே பெண்களுக்கு அவ்வளவு பிடிக்கும். ரோஜா என்றாலே சொல்லவா வேண்டும். அதுவும் நமது வீட்டில் வளர்ந்தால் எப்படி இருக்கும். நம்மில் பலருக்கு தோட்டத்திலோ அல்லது மாடி தோட்டத்திலோ அதிகமா ரோஸ் செடி வைத்து வளர்ப்பதற்கு மிகவும் பிடிக்கும். ஆனா நாம எவ்வளவுதான் ரோஸ் செடி வைத்து வளர்த்தாலும், சீக்கிரமாக இறந்து விடும். இல்லை என்றால் பூக்களே பூக்காது.
அதற்காகவே ரோஸ் செடி வாங்கி வளர்ப்பதற்கு தயங்குவோம். இனி இந்த தயக்கம் வேண்டாம். இந்த பகுதியில் குறிப்பிட்டுள்ள சில டிப்ஸை உங்கள் ரோஸ் செடிக்கு (rose plant) செய்து வளர்த்து பாருங்கள். ரோஸ் செடி நன்றாக வளரும் மற்றும் செடியில் அதிகளவு பூக்களும் பூக்கும்.

முதலில் நாம் ரோஸ் செடியில் (rose plant) பூக்கள் பறிக்கிறோம் என்றால் காம்புடன் மட்டும் பறிக்க கூடாது. அதனுடன் இரண்டு இலைகளை சேர்த்து பறிக்க வேண்டும். அப்போது தான் ரோஸ் செடியில் அடுத்த துளிர்கள் விட்டு நன்கு வளர ஆரம்பிக்கும்.
ரோஸ் செடியாக இருந்தாலும் சரி அல்லது வேறு எந்த ஒரு செடியாக இருந்தாலும் சரி செடிகளை வாங்கும்போது அதிகமாக துளிர்களை உள்ள செடிகளை மட்டும் தேர்வு செய்து வாங்கவும்.
மேலும் ரோஸ் செடி வாங்கும் போது ஐந்து இலைகள் உள்ள செடிகளை தேர்வு செய்து வாங்கினால் ரோஸ் செடி நன்றாக வளரும்.
ரோஸ் செடிக்கு இயற்கை உரமாக வாரத்தில் ஒரு முறையாவது சமையலறை கழிவுகளான டீ தூள், காபி தூள், வெங்காய தோல், பூண்டு தோல், முட்டை ஓடு மற்றும் மக்கக்கூடிய காகிதங்களை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் மற்றும் சிறுதளவு மணல் ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பிளாஸ்ட்டிக் பேனரில் வைத்து மூடி வைக்கவும்.

ஒரு வாரம் வரை தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் ஒரு குச்சியால் கிளறி விடவும். ஒரு வாரம் கழித்து, இந்த கலவையை ரோஸ் செடிக்கு உரமாக இட்டு வந்தால் ரோஸ் செடி செழிப்பாக வளரும்.
ரோஸ் செடிக்கு வெறும் தண்ணீரை மட்டும் ஊற்றாமல் மண், ஊட்ட சத்துக்காக நம் வீட்டில் இருக்கும் பழைய சாதத்தின் நீரை மட்டும் வடிகட்டி தண்ணீராக ஊற்றலாம். இவ்வாறு ஊற்றுவதால் செடி நன்றாக வளரும்.
நாம் தினமும் வாழைப்பழத்தை சாப்பிட்டு விட்டு அவற்றின் தோலை தூக்கி எரிந்து விடுவோம்.
இனி அவ்வாறு தூக்கி எரிய வேண்டாம். வாழைப்பழ தோலை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி இரவு முழுவதும் ஒரு பக்கெட் தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரை ரோஸ் செடிக்கு ஊற்றி வந்தால் ரோஸ் செடி நன்றாக வளரும்.
ரோஸ் செடிகளுக்கு உரம் வைக்கப்போகிறோம் என்றால் அன்று முழுவதும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற கூடாது.
அதே போல் செடிகளுக்கு உரம் வைக்கும் போது மாலை நேரத்தில் வைத்தால் அதிக பலன் கிடைக்கும்.
ரோஸ் செடிக்கு (rose plant) வாரம் ஒரு முறையாவது இயற்கை டானிக் ஊற்றுவதால் செடி நன்றாக வளரும் அதுமட்டும் இன்றி பூக்களும் அதிகளவு பூக்கும்.

இரண்டு கிலோ கடலைப்பிண்ணாக்கு வாங்கி கொள்ளவும் மற்றும் ஒரு பெரிய பிளாஸ்ட்டிக் பேனரை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
இந்த பேனரில் கடலை பிண்ணாக்கை கொட்டவும். பின்பு 10 லீட்டர் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
பின்பு அந்த பேனரை காற்று புகாத அளவிற்கு நன்றாக மூடி வைக்கவும். (காற்று உள்ளே சென்று விட்டால் அவற்றில் புழுக்கள் வைத்து விடும் எனவே காற்று புகாத அளவிற்கு பேனரை நன்றாக மூடிவைத்து கொள்ளவும்)
ஐந்து நாட்கள் கழிந்து இந்த கலவையை திறந்து பார்த்தால் நன்றாக நுரைத்து இருக்கும். இந்த கலவையை ஒரு பக்கெட் அளவிற்று எடுத்து கொண்டு. 10 லீட்டர் தண்ணீரில் கலந்து ரோஸ் செடி மற்றும் அனைத்து செடிகளுக்கும் தண்ணீராக ஊற்றி வந்தால் ரோஸ் செடி நன்றாக வளரும்.
- திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை முதலே குவிந்தனர்.
- இன்று வார விடுமுறை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வந்து குவிந்தனர்.
திருப்பூர் :
நாளை மறுநாள் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகை நாட்கள் வர இருப்பதால் திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலை முதலே திருப்பூர் பூ மார்கெட்டில் பூக்கள் மற்றும் பழங்கள், தோரணங்களை வாங்கிச் செல்ல குவிந்தனர்.
திருப்பூர் பூ மார்கெட், தென்னம்பாளையம் கடைவீதிகளில் அதிகளவில் வெளி மாவட்டங்களில் இருந்து மல்லிகை, அரளி, செவ்வந்தி, செண்டுமல்லி, உள்ளிட்ட பூக்கள் வாகங்களில் வந்து இறங்கின. அதனை வாங்க இன்று வார விடுமுறை என்பதால் பொதுமக்கள் அதிகளவில் வந்து குவிந்தனர். அதே போன்று பனியன் கம்பெனியை சேர்ந்தவர்களும், பூக்கள், பூசணிக்காய், தோரணங்களை வாங்கி சென்றனர். சில தினங்களுக்கு முனபு வரை கடும் விலை விழ்ச்சியில் இருந்த பூக்களின் விலை திடிரென்று உயர்வு கண்டுள்ளது. மல்லிகை கிலோ- ரூ. 1000க்கும், செவ்வந்தி, ரூ. 340க்கும், அரளி ரூ. 400க்கும் செண்டுமல்லி ரூ. 150க்கும் வி்ற்பனை ஆனாது. இரண்டு நாளுக்கு முன்பே வியாபாரம் களைக்கட்டியுள்ளதால், பூ வியாபாரிகள், பழக்க டைக்கடை க்காரர்கள், சுவிட் கடைகள், மற்றும் மளிகை கடைகள் என வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
- 1 கிலோ ரூ. 4 ஆயிரத்துக்கு விற்பனை
- ஓணம் பண்டிகை விற்பனை களை கட்டியது
கன்னியாகுமரி:
ஓணம் பண்டிகை நாளை மறுநாள் (8-ந் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கடந்த சில நாட்களாக தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விற்பனை களை கட்டியுள்ளது.
தமிழக மற்றும் கேரள வியாபாரிகள், பொதுமக்கள் சந்தைக்கு படையெடுத்து வந்து பூக்களை வாங்கிச் செல்கின்றனர். அவர்களின் வருகையை கருத்தில் கொண்டு தோவாளை சந்தைக்கு கூடுதல் பூக்கள் வரவழைக்கப்பட்ட போதி லும், பூக்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.
அதிலும் குறிப்பாக மல்லிகைப் பூவுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு கிலோ மல்லி கைப்பூ ரூ.4 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. நாளை மறுநாள் நடைெபறும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு மலையாள மொழி மக்கள்அத்தப்பூ கோலமிட்டு கொண்டாட இருப்பதால் பூக்களுக்கு வரும் நாட்களில் மேலும் அதிக கிராக்கி இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் தற்போது தோவாளை சந்தையில் மல்லிகைப்பூ ஒரு கிலோ ரூ.4 ஆயிரத்திற்கும் பிச்சிப்பூ ஒரு கிலோ ரூ. 2 ஆயிரத்திற்கும், சேலம்அரளி, சம்பங்கி ஆகியவை கிலோ ரூ.400க்கும், கனகரம்பரம் ஒரு கிலோ ரூ. 2 ஆயிரத்திற்கும் விற்கப்ப டுகிறது.
மற்ற பூக்களும் விலை உயர்ந்து உள்ளது. இன்று மட்டும் 150 டன் பூக்கள் விற்பனையாகியுள்ளது.ஓணம் பண்டிகை விழா நாளில் தோவாளை பூ சந்தையில் பூக்கள் விலை இதை விட அதிகரிக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் 200 டன்னுக்கும் மேற்பட்ட பூக்கள்இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
- முகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும்.
- காலையிலேயே சந்தைக்கு வந்த பொதுமக்கள் தேவையான பூக்களை வாங்கி சென்றனர்.
திருப்பூர் :
திருப்பூர் பல்லடம் ரோட்டில் காட்டன் மார்க்கெட் உள்ளது. இங்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் காய்கறி மற்றும் பூ உள்ளிட்ட பொருட்களை வியாபாரம் செய்வது வழக்கம். சந்தையில் மற்ற நாட்களை விட முகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பூ மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகமாக இருக்கும்.
விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் காட்டன் மார்க்கெட்டில் பூக்கள் விற்பனை அதிகமாக இருந்தது. காலையிலேயே சந்தைக்கு வந்த பொதுமக்கள் வீடுகளில் சாமி கும்பிடுவதற்கு தேவையான பூக்களை வாங்கி சென்றனர். இதனால் பூக்களின் விலை சற்று உயர்ந்திருந்தது.
அதன்படி ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.1000-க்கும், முல்லை ரூ.600, சம்பங்கி ரூ.250, செவ்வந்தி ரூ.160, ஜாதிப்பூ 480 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் முகூர்த்த தினங்கள் இல்லாததால் மல்லிகைப்பூ விலை குறைந்து ரூ.௩௫௦-க்கு விற்பனையானது.
- மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் பல்வேறு வகையான பயிர்களை அதிகளவில் பயிரிட்டு அறுவடை செய்து வருகிறார்கள்.
இதே போல் சத்திய மங்கலம், பு.புளியம்பட்டி, பவானிசாகர், சிக்கரசம் பட்டி, புது வடவள்ளி, ராஜன் நகர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பலர் மல்லிகைப்பூ உள்பட பல்வேறு பூக்கள் பயிரிட்டு உள்ளனர்.
இந்த பகுதிகளில் விளையும் பூக்களை சத்தியமங்கலம் பஸ் நிலையம் அருகே செயல்படும் பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சத்தியமங்கலத்தில் விற்பனை செய்யப்படும் மல்லிகைப் பூக்கள் உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் பூக்கள் பொதுமக்கள் விரும்பி வாங்குகிறார்கள். இதனால் வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஏராளமானோர் இங்கு வந்து பூக்களை அதிகளவில் கொள்முதல் செய்கிறார்கள்.
மேலும் இந்த பகுதிகளில் விளையும் மல்லிகைப் பூக்கள் சிங்கப்பூர், துபாய், சார்ஜா உள்பட பல வெளி நாடுகளுக்கு நறுமணப் பொருட்கள் தயாரிக்க ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதனால் இங்கு மல்லிகைப்பூ சாதாரண நாட்களில் ரூ.500 வரையும் முகூர்த்தம் மற்றும் விழாக் காலங்களில் ரூ.3 ஆயிரம் வரையும் வியாபாரிகள் கொள்முதல் செய்கிறார்கள். கேரளா மாநிலத்தில் நடக்கும் விஷேச நாட்களில் விலை மேலும் உயர்ந்து காணப்படும்.
இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக வந்தது. இதனால் மல்லிகைப்பூக்கள் தேவை அதிகரித்தது. இதன் காரணமாக மல்லிகைப் பூ ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முகூர்த்த நாட்கள் இல்லாததால் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை குறைந்தது. கடந்த ஒரு மாதமாக 1 கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு மேல் விற்பனையானது.
ஆனால் முகூர்த்தம் மற்றும் விஷேச நாட்கள் இல்லாததால் வியாபாரிகள் ஒரு சிலர் மட்டுமே வந்திருந்தனர்.
இதனால் நேற்று 1 கிலோ மல்லிகை ரூ.350-க்கு விற்பனை செய்யப்பட்டது. மல்லிகை விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டி பூக்கள் விலை நிலவரம் வருமாறு:
மல்லிகை ரூ.350, முல்லை ரூ.100, காக்கடா ரூ.75, செண்டு மல்லி ரூ.28, கனகாம்பரம் ரூ.550, சம்பங்கி ரூ.10, அரளி ரூ.50, செவ்வந்தி ரூ.120 விற்பனையானது.
- இரு பட்டங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யலாம்.
- மழைக்காலத்தில் அறுவடை மேற்கொள்வது மற்றும் பூக்களைக் காய வைப்பது கடினமான பணியாகும்.
உடுமலை,
உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் தென்னை, மக்காச்சோளம் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். எண்ணெய் வித்துப் பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி ஆகியற்றை சாகுபடி செய்வதில் விவசாயிகளின் ஆர்வம் குறைந்து வருகிறது.கூலி ஆட்கள் பற்றாக்குறை, போதிய விலையின்மை போன்றவை இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் உடுமலை பகுதியில் ஒருசில இடங்களில் சூரியகாந்தி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சூரியகாந்தி சாகுபடியை பொறுத்தவரை ஆடிப் பட்டம், கார்த்திகை பட்டம் ஆகிய இரு பட்டங்களில் மானாவாரியில் சாகுபடி செய்யலாம். இதுதவிர இறவை பாசனத்தில் மார்கழி பட்டம் மற்றும் சித்திரை பட்டங்களில் சாகுபடி மேற்கொள்ளலாம். அந்தவகையில் ஆண்டுக்கு 4 பட்டங்களில் சூரியகாந்தி சாகுபடி மேற்கொள்ள முடியும். அதேநேரத்தில் பட்டத்துக்கு தகுந்தாற் போல விதைகளை தேர்வு செய்வது அவசியமாகும். தற்போது வீரிய ஒட்டு ரகங்கள் பல அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் அவை நோய் எதிர்ப்புத் திறன் கொண்டதாகவும், அதிக மகசூல் தரக்கூடியவையாகவும் உள்ளன. ஆனாலும் விதைப்புக்கு முன் விதை நேர்த்தி செய்வது நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கவும், முளைப்புத் திறனை மேம்படுத்தவும் உதவும்.
மேலும் ஒருங்கிணைந்த ஊட்டச் சத்து மேலாண்மையில் உயிர் உரமாக தழை, மணி, சாம்பல் சத்துக்களை தேவையான அளவில் வழங்குகிறோம். சூரியகாந்தி பூக்களை பொறுத்தவரை மகரந்த சேர்க்கை மிக முக்கிய இடம் பிடிக்கிறது. நன்றாக மணிகள் பிடிப்பதற்கு மகரந்த சேர்க்கை உதவுகிறது.தற்போது தேனீக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் நாமே செயற்கையாக மகரந்த சேர்க்கை செய்யலாம்.அதற்கு பூக்கொண்டைகளை ஒன்றோடொன்று லேசாக தேய்த்து விடுவது நல்ல பலன் தரும். சூரியகாந்தியைப் பொறுத்தவரை 80 முதல் 90 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். ஆனால் மணிகள் முற்றும் தருணத்தில் கிளிகளிடமிருந்து பாதுகாப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
கிளிகளுக்கு மிகவும் பிடித்த உணவாக சூரியகாந்தி விதைகள் உள்ளது. எனவே காலை மற்றும் மாலை வேளைகளில் கூட்டம் கூட்டமாக கிளிகள் படையெடுக்கும்.அவற்றை தட்டுகள் மற்றும் தகரங்களில் தட்டி ஓசையெழுப்பி விரட்டுவோம்.மேலும் தற்போது அறுவடைக்குப் போதிய ஆட்கள் கிடைக்காததால் எந்திரங்கள் மூலமே அறுவடை மேற்கொள்ள வேண்டியதுள்ளது.ஒரு ஏக்கருக்கு 750 கிலோ முதல் 900 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.தற்போது செய்துள்ள சாகுபடி இன்னும் 20 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும்.
மழைக்காலத்தில் அறுவடை மேற்கொள்வது மற்றும் பூக்களைக் காய வைப்பது கடினமான பணியாகும்.சித்திரைப் பட்டத்தைத் தவற விட்டு சற்று தாமதமாக விதைப்பு செய்ததால் மழையால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஏனென்றால் பூக்கள் நன்கு உலர்ந்த பிறகு விதைகளைப் பிரித்தெடுத்து அவற்றை நன்கு உலர்த்தி, சுத்தம் செய்து அதன்பிறகே விற்பனைக்குத் தயார் செய்ய முடியும்.ஈரப்பதம் அதிகமாக இருந்தால் விதைகளில் பூஞ்சாணம் உற்பத்தியாகி இழப்பை ஏற்படுத்தி விடும் என்றனர்.