என் மலர்
நீங்கள் தேடியது "சுற்றுச்சுவர்"
- பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவ ட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்கண்ணபுரம் ஊராட்சி ஒன்றிய தொட க்கப்பள்ளி, திருக்கண்ணபுரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ராராந்திமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றில் எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
புதிய வகுப்பறை கட்டடங்கள் வேண்டுமென்று பள்ளிகள் சார்பில் கோரிக்கை வைத்தனர். புதிய கட்டங்கள் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ உறுதியளித்தார்.
மேலும், பரமநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். அதையும் விரைந்து நிறைவேற்றுவதாக எம்.எல்.ஏ உறுதியளித்தார்.
அப்போது, திமுக ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன், விசிக ஒன்றிய செயலாளர் கு.சக்திவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர்.
- புதிய கட்டிடம் கட்ட அரசால் ரூ.5.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
உடுமலை :
உடுமலை அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பாடப் பிரிவுகளில் கல்வி பயின்று வருகின்றனர். கட்டட வசதி இல்லாத நிலையில் கொழுமம் ரோட்டில் உள்ள தனியார் கட்டிடத்தில் பல ஆண்டுகளாக தொழிற் பயிற்சி நிலையம் இயங்கி வந்தது.
இந்நிலையில் புதிய கட்டிடம் கட்ட அரசால் ரூ. 5.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசு கலைக்கல்லூரி எதிரில் இடம் தேர்வு செய்யப்பட்டு வகுப்பறைகள், ஆய்வகம் ,தங்கும் விடுதி உள்ளிட்ட வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டது. ஆனால் தொழில் பயிற்சி நிலையத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லை. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதியில் விஷமிகள் சிலர் மது அருந்தி பாட்டில்களை வீசி செல்கின்றனர். பாதுகாப்பு அற்ற சூழல் உருவாகி வருகிறது. எனவே மாணவர்களின் நலன் மற்றும் தொழில் பயிற்சி நிலையத்தின் பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் எழுப்பவும் பாதுகாவலரை நியமிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்துள்ளதால் அதன் வழியே சமூக விரோதிகள் அட்டூழியம் செய்து வருகின்றனர்.
- தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுற்றுச்சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தாமரைக்குளம் சீரமைக்கப்பட்டு திறக்கப்படாமலேயே மீண்டும் சிதிலமடைந்து காணப்படுகிறது.
இந்நிலையில் நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷா நவாஸ் தாமரைக் குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்குள்ள சுற்றுச் சுவரின் ஒரு பகுதி இடிந்துள்ளதால் அதன் வழியே சமூக விரோதிகள் புகுந்து குளத்தை பாழாக்கி வருகின்றனர்.
எனவே அந்த சுவரை கட்ட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுற்றுச் சுவர் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ. உறுதியளித்தார்.
அத்துடன் இதர சீரமைப்புப் பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென நகராட்சி நிர்வாகத்திடம் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.ஆய்வின் போது, நகர்மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, நகராட்சி ஆணையர், நகர்மன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- கலெக்டரிடம் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. மனு
- உச்சினி மாகாளி அம்மன் கோவில் ஆதிதிராவிட சமுதாயத்துக்குரியது
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. வந்து கலெக்டர் அரவிந்திடம் ஒரு மனு கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
ஆரல்வாய்மொழி பேரூராட்சிக்கு உட்பட்ட 17-வது வார்டு குமாரபுரம் பகுதியில் ஆதிதிராவிட சமுதாயத்துக்குரிய உச்சினி மாகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, சுற்றுச்சுவரும் கட் டப்பட்டது. இந்த நிலையில் தனிநபர் ஒருவர் சுற்றுச்சுவர் அமைந்துள்ள பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பாதை என்றும் அதை அடைத்து விட்டதாக கலெக்டரிடம் புகார் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து கோவிலின் சுற்றுச்சுவரை இடிக்க உத்தரவிட்டு இருப்பதாக கூறி அவ்விடத்தை சம்பந் தப்பட்ட துறை அலுவலர்கள் போலீசார் துணையுடன் இடிக்க முற்பட்டனர். இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், சுற்றுச்சுவரை இடிக்க கூடாது என தெரி வித்தார்கள். இதுபற்றி என்னிடமும் முறையிட்டனர்.எனவே கோவில் சுற்றுச்சுவர் இடிக்கப்படாமல் மக்களின் விருப்பம் போல் அந்த பகுதியில் ரோலிங் கேட் அமைக்க அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அப்போது அவருடன் ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
அதைத்தொடர்ந்து கோட்டாட்சியர், போலீஸ், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோர் அந்த இடத்தை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.
- மானாமதுரையில் மாரியம்மன் கோவில் சுற்றுச்சுவரை அகற்ற பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
- தினமும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பர்மா காலனி பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தன மாரியம்மன் கோவில் அமைக்கப்பட்டது. 18,20,26,27-வது வார்டு களை சேர்ந்த பொதுமக்கள் அதிகளவில் இந்த கோவிலை வழிபட்டு வருகின்றனர்.
ஆடி, பங்குனி முளைப் பாரி உற்சவம் உள்ளிட்ட திருவிழாக்கள் மாரியம்மன் கோவிலில் நடைபெறுவது வழக்கம். இரவு நேரங்களில் கோவில் வளாகத்துக்குள் சமூக விரோதிகள் நுழைந்து அத்துமீறுவதால் இந்த வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கோவில் வளாகத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பினர்.
தினமும் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த நிலையில் வருவாய்த்துறை நிர்வாகம் இந்த பகுதியில் நில அளவீடு செய்தது. அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) சார்பில் கோவில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை அகற்ற நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த பகுதி பொதுமக்கள், பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து இந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது:-
பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட சந்தன மாரியம்மன் கோவிலில் தொடர்ந்து திரு விழாக்கள் நடைபெறுகிறது. சுற்றுச்சுவர் அமைக்காமல் இருந்தபோது சமூக விரோதிகள் கோவி லுக்குள் அத்துமீறியதால் கோவில் வளாகத்தில் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டு கோவிலின் புனித தன்மை பாது காக்கப்படுகிறது. கோவி லுக்கு பாதுகாப்பாக உள்ள சுற்றுச்சுவரின் ஒரு பகுதியை அகற்றக்கூடாது என வலியுறுத்தி கலெக் மரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
- 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
- பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
பல்லடம் :
பல்லடம் என்.ஜி.ஆர். ரோட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளி (மேற்கு) செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியின் மேற்கு புறமாக உள்ள சுற்றுச்சுவர் எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வாகன போக்குவரத்து மிகுந்த கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இந்த சுற்றுச் சுவர் பகுதி அமைந்து இருப்பதால் பள்ளியின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.
எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவரை அகற்றிவிட்டு பாதுகாப்பான முறையில் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க உயரமான சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது.
- மின்வாரிய அலுவலர்கள் அளவீடு செய்து கொடுத்தனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுமார் 70 ஆண்டுகள் பழமை யானது. இந்த பள்ளிக்கு தற்போது நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.57 லட்சத்தில் பொதுமக்கள் பங்களிப்புடன் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
பள்ளி சுற்றுச்சுவர் கட்டுவ தற்காக வருவாய்த் துறை அதிகாரிகள் எல்லை அளவீடு செய்யும்போது திருப்பத்தூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மின்சார வாரியத்தால் அமைக்கப்பட்டிருந்த 40 ஆண்டுகள் பழமையான மின்மாற்றி பள்ளியின் எல்லைக்குள் வருவது கண்டறியப்பட்டது.
உடனடியாக அங்கு ஆய்வு செய்த பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், செயல் அதிகாரி தனுஷ்கோடி மற்றும் மின்வாரிய பொறியாளர்கள் அந்த மின்மாற்றியால் பள்ளி மாணவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாத வகையில் மின்மாற்றிக்கு தேவையான அளவில் உயரமான சுற்றுச்சுவர் அமைத்து பள்ளியின் காம்பவுண்ட் சுவர் கட்டுவதற்காக அமைப்பை மாற்றி அமைக்க வேண்டி ஆலோசனை வழங்கினார்கள்.
அதனடிப்படையில் மின்வாரிய அலுவலர்கள் அளவீடு செய்து கொடுத்த அளவின்படி டிரான்ஸ் பார்மரை சுற்றி பள்ளி மாணவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் உயர மாக சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
- ரூ.4 லட்சம் மதிப்பில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
- திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., கே. என்.விஜயகுமார் தொடங்கி வைத்தார்.
திருப்பூர் :
திருப்பூர் தொரவலூர் ஊராட்சி கந்தாம்பாளையம் கிராமத்தில் திருப்பூர் வடக்குதொகுதி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு யிலிருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதனை திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., கே. என்.விஜயகுமார் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் சொர்ணம்மாள் பழனிச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்ய மகாராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த பணி இன்னும் முடியவில்லை.
- சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வண்டலூர்:
காட்டாங்கொளத்தூர் அருகே உள்ள கீரப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தைச் சுற்றி சுவர் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த பணி இன்னும் முடியவில்லை. இதனால் அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகள் விளையாடும்போது அந்த பள்ளங்களில் தவறி விழும் நிலை அடிக்கடி நடந்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் அந்த பள்ளத்தில் விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. எனவே அங்கன்வாடி சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.
- நாகூரில், ரூ.33.20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் நகராட்சி வார்டு எண் 4, நாகூர் பட்டினச்சேரியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூபாய் 12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது.
அதை, தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கெளதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில், முகம்மது ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
தொடர்ந்து அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்க ப்பட்டன. அதுபோல், நாகூர் மியான் தெரு நகராட்சி இஸ்லாம் நடுநிலைப் பள்ளியில் ரூ.6.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர், வார்டு எண் 02 நாகூர் செய்யது பள்ளி குளத்தில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் ஆகிய திட்டப்பணிகள் உள்பட நாகூரில் ரூ.33.20 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகளை ஷா நவாஸ் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள் அஞ்சலி தேவி நாகரெத்தினம், பதுரு நிஷா மற்றும் நகராட்சி செயற் பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
- இளையான்குடி மேல்நிலை பள்ளிக்கு விரைவில் சுற்றுச்சுவர் அமைக்கப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.
- மன்னர் சண்முகராஜா சுமார் 14 1/2 ஏக்கர் நிலத்தை கல்விப் பணிக்காக தானமாக வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பவள விழா நடந்தது. கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ. தமிழரசி முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசிய தாவது:-
இளையான்குடி மேல்நிலைப் பள்ளியை பொருத்த வரையில் கடந்த 1947-ல் இளையான்குடி முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி என்ற பெயருடன் தொடங்கப்பட்டு, கே.எம்.கே அப்துல் கரீம் முதல் தாளாளராக இருந்து பள்ளியை வழிநடத்த தொடங்கினார். அச்சமயம், சிவகங்கை மன்னர் சண்முகராஜா சுமார் 14 1/2 ஏக்கர் நிலத்தை கல்விப் பணிக்காக தானமாக வழங்கினார்.
மேலும் அரசுடன் இணைந்து மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கி, அரசிற்கு உறுதுணையாக இருந்து வரும் கொடை யாளர்களுக்கும் இத்தருணத்தில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது 75-வது ஆண்டு பவள விழா காணும் இப்பள்ளி, நூற்றாண்டு நோக்கி சிறப்பாக பயணிக்க வேண்டும்.
மேலும் இப்பள்ளியில் கூடுதலாக அடிப்படை வசதிகளை மேம்படுத்து வதற்கான சுற்றுச்சுவர் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் விரைவில் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜூமுதீன், இளையான்குடி முஸ்லீம் கல்விச்சங்கத் தலைவர் கஸ்னவி, மேல்நிலைப்பள்ளி தாளாளர் முசாபர் அப்துல் ரகுமான், சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார், பள்ளி தலைமையாசிரியர் முகமமது இல்யாஸ், மானா மதுரை நகர் மன்றத்தலைவர் மாரியப்பன் கென்னடி, வட்டாட்சியர் கோபிநாத், பேரூராட்சி செயல் அலுவலர் கோபிநாத், மாவட்ட ஊராட்சி உறுப்பி னர் ஆரோக்கிய சாந்தா மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை.
- சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையில் விழுந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சையில் நேற்று மாலை பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இடைவிடாது பெய்த கன மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின.
தொடர்ந்து பலத்த காற்று வீசிக்கொண்டிருந்ததால் தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரி பின்புறம் உள்ள மகளிர் விடுதியில் இருந்த மரம் ஒன்று முறிந்து சுற்று சுவர் மீது விழுந்து சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதையில் விழுந்தன. இதில் விடுதி சுற்று சுவரின் ஒரு பகுதி சேதமடைந்தது .
அப்போது அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை . இதனை தொடர்ந்து விழுந்த மரத்தின் கிளைகள் வெட்டி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது