என் மலர்
நீங்கள் தேடியது "உடல்கள்"
- இவரது வீட்டின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை
- உடல் நலம் சரியில்லாததால் தற்கொலை
நாகர்கோவில் : அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி அனிதா (45). இவர்களது மகள்கள் சகாய திவ்யா (19), சகாய பூஜா மவுலிகா (16). சகாய திவ்யா அந்த பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டும், சகாய பூஜா மவுலிகா 11-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
நேற்று காலை இவரது வீட்டின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அனிதா, சகாய திவ்யா, சகாய பூஜா மவுலிகா ஆகியோர் தூக்கில் தொங்கினார்கள்.
இதையடுத்து அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட அனிதா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் தனக்கு உடல் நலம் சரியில்லாததால் தற்கொலை முடிவு எடுத்துக்கொள்வதாகவும் எனது மகள்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அனாதையாகி விடுவார்கள். எனவே அவர்களுடன் சேர்ந்து தற்கொலை செய்வதாக கூறியிருந்தார்.
போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட 3 பேர் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனைக்கு பிறகு அனிதா, சகாய திவ்யா, சகாய பூஜா மவுலிகாவின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். 3 பேர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அனிதா கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு நோய் குணமாகவில்லை. இதனால் தாம் இறந்து விடுவோம் என்று அச்சத்தில் இருந்து உள்ளார். இது குறித்து தனது மகள்களிடம் அனிதா தெரிவித்துள்ளார். தான் இறந்துவிட்டால் உங்களை யாரும் பார்க்க மாட்டார்கள். எனவே குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவை கூறியுள்ளார். இதையடுத்து குழந்தைகளும் தாய் இறந்த பிறகு நம்மால் எப்படி வாழ முடியும் என்று நினைத்து அவர்களும் தாயின் முடிவுக்கு ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து தான் 3 பேரும் ஒரே கம்பியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளனர்.
- சோதனையின் முடிவில் அந்த காப்பகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர்.
- முழு விசாரணைக்கு பிறகே உண்மை நிலை தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே குந்தலாடி பெக்கி பகுதியில் கடந்த 1999-ம் ஆண்டு டாக்டர் அகஸ்டின்(வயது60) என்பவர் மனநல காப்பகம் நடத்தி வருகிறார்.
இங்கு மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 20 பேர் மர்மமான முறையில் இறந்து விட்டதாகவும், அவர்கள் காப்பகம் அருகில் புதைக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்தது.
புகாரின் அடிப்படையில் மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின் பேரில் கூடலூர் கோட்டாட்சியர் செந்தில்குமார், பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி மற்றும் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன், மன நல மருத்துவர் விவேக், தேவாலா துணை கண்காணிப்பாளர் சரவணன், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பிரவீனா தேவி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் காப்பகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது, இந்த மன நல காப்பகம் முறையான அனுமதி பெறாமலும், போதிய அடிப்படை வசதிகள் இன்றி சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து இந்த காப்பகத்தில் இருந்த 9 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 13 பேரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர் பரிசோதனைக்கு பிறகு அவர்கள் மீட்கப்பட்டு கோவையில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்க்கப்பட்டனர்.
தொடர்ந்து சோதனையின் முடிவில் அந்த காப்பகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்து பூட்டினர்.
இந்த காப்பகத்தில் இருந்த 20 பேர் எப்படி இறந்தார்கள்? இறப்புக்கான காரணம் என்ன? அவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தார்களா? என்பது மர்மமாகவே உள்ளது.
இந்த காப்பகத்தில் ஆரம்பத்தில் 60 பேர் இருந்து வந்ததாகவும், அதன் பின் 33 பேர் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் ஆய்வு செய்த போது 13 பேர் மட்டுமே இருந்துள்ளனர். மற்றவர்களின் நிலை என்ன? என்பது மர்மமாகவே உள்ளது.
இதுவரை மனநல காப்பகத்தில் இருந்தவர்கள் பெயர், ஊர் விவரம், தற்போது இருப்பவர்கள் பெயர், ஊர் விவரம் உள்ளிட்ட எந்தவிதமான பதிவுகளும் காப்பகத்தில் இல்லை.
மேலும் இறந்தவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? இறந்தவர்கள் உடல் உடற்கூராய்வு செய்தது உள்ளிட்ட எந்த விவரங்களுமே இல்லை. இறந்தவர்களை தங்கள் காப்பகத்தின் அருகிலேயே புதைத்துள்ளனர்.
இதன் அடிப்படையில் தான் காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.
இறந்தவர்கள் எந்த நிலையில் புதைக்கப்பட்டனர் என்பது தொடர்பான உண்மை நிலையை கண்டறிய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதையடுத்து உண்மைத் தன்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி நேற்று பந்தலூர் அருகே உள்ள நெலாக்கோட்டை போலீஸ் நிலையத்தில் மன நல காப்பக உரிமையாளரான கேரளாவை சேர்ந்த அகஸ்டின், அவரது மனைவி கிரேசி, அதில் பணிபுரிந்த ஊழியர்கள் என 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தேவாலா துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் 10 பேரிடம் 5 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். அதேபோல் காப்பகத்தில் இருந்த மன நோயாளிகளுக்கு மாதம் ஒருமுறை சிகிச்சை அளிக்க சென்ற செவிலியர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு விசாரணைக்கு பிறகே உண்மை நிலை தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
- மருத்துவ மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக, இறந்தவர்களின் உடல்கள் தானமாக பெறப்படுகிறது.
- மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு ஆண்டில் 41 சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளன.
மதுரை:
தென் மாவட்டங்களில் மிக முக்கிய மருத்துவமனையாக மதுரை அரசு ஆஸ்பத்திரி உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கு தனி பிரிவு, மகப்பேறு சிகிச்சைக்கு தனி பிரிவு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அனைத்து வகையான சிகிச்சைகளும் ஒரே இடத்தில் கிடைப்பதால், மதுரை மட்டுமின்றி மதுரையை சுற்றி உள்ள பக்கத்து மாவட்ட மக்களும் அதிக அளவில் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
கடந்த ஆண்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்தவர்களின் விவரம், உடல்கள் தானம் பெற்றது தொடர்பாக ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் கூறியதாவது:-
"பொதுவாக சாலை விபத்துகளில் சிக்கி மூளைச்சாவு அடையும் நபர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறுவது தொடர்பாக, சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அதன்படி, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஆண்டில் மூளைச்சாவு அடைந்த 13 நபர்களிடம் இருந்து இதயம், சிறுநீரகம், கல்லீரல், கண்கள், எலும்பு, தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளன. இந்த உடல் உறுப்புகள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு மட்டுமின்றி சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.
இதுபோல், மருத்துவ மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக, இறந்தவர்களின் உடல்கள் தானமாக பெறப்படுகிறது. அதன்படி, கடந்த 1½ ஆண்டில் மதுரை அரசு மருத்துவ கல்லூரிக்கு 65 உடல்கள் தானமாக பெறப்பட்டுள்ளன. இதற்கான முயற்சிகளை மதுரை அரசு ஆஸ்பத்திரியின் இருப்பிட மருத்துவ அதிகாரிகள் மேற்கொண்டு, உடல் தானம் குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதன் விளைவாக உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் தாங்களாக முன்வந்து உடலை தானமாக வழங்குவது என கிட்டத்தட்ட 65 உடல்கள் தானமாக பெறப்பட்டு, மதுரை அரசு மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளன. தானமாக பெறப்பட்ட உடல்களில், மதுரை மருத்துவ கல்லூரிக்கு ஆண்டுக்கு 20 உடல்கள் போதுமானது. மீதமுள்ள உடல்கள், ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட அரசு மருத்துவகல்லூரிகளுக்கும், அரசு விதிமுறைகளை பின்பற்றி தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. உடல்களை தானமாக வழங்கும் நபர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களின் உறவினர்களுக்கு பாராட்டு சான்றிதழும், போலீஸ் நிலையங்கள் மூலம் ஒப்படைக்கப்படும் உடல்களுக்கு, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இதுபோல், மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஒரு ஆண்டில் 41 சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. பல்வேறு அதிநவீன சிறப்பு சிகிச்சைகளின் மூலம், அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- ஆற்றில் மூழ்கி இறந்த 2 பேர் உடல்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.
கொடுமுடி:
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த கிழக்கு சீராபாளையம் கருப்பராயன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி தீர்த்தம் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த 40 ஆண்கள் 10 பெண்கள் என சுமார் 50 பேர் மன்னாதம்பாளையம் குல விளக்கு அம்மன் கோவில் எதிரில் உள்ள காவிரி ஆற்றுக்கு வந்தனர்.
அப்போது பெருமா நல்லூர் பள்ளபாளையம் பகுதியை சேர்ந்த இளங்கோ (21), பெருமா நல்லூர் கிழக்கு சீராம் பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (32) ஆகிய 2 பேர் காவிரி ஆற்றில் இறங்கி குளித்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி விட்டனர்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உடன் வந்தவர்கள் மொடக்குறிச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர். மொடக்குறிச்சி தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் மோகன் தலைமையில் தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
அவர்கள் நீரில் மூழ்கியவர்களை தேடினர் அப்போது அவர்கள் இறந்த நிலையில் மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மலையம்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இறந்தவர்களின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்த 2 பேரில் உடல்கள் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர்.