என் மலர்
நீங்கள் தேடியது "இடமாற்றம்"
- கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு நடந்த சோதனையில் கணக்கில் வராத பணம் பிடிபட்டது.
- பொதுமக்களின் நலன் கருதி சார்பதிவாளரை இடமாறுதல் செய்யக்கூடாது என மனுவில் கூறப்பட்டுள்ளது.
கடையம்:
ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சுரேஷ், பத்திரப்பதிவு துறை உயர் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டதில் கணக்கில் வராத பணம் பிடிபட்டது. இதைத்தொடர்ந்து அப்போதிருந்த சார்பதிவாளர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். பின்னர் சார்பதிவாளர் நியமிக்கப்படாமல் இளநிலை உதவியாளர் மூலம் பத்திரப்பதிவு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு மேலப்பாளையத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்த குமரேசன் என்பவர் பதவி உயர்வு பெற்று கடையம் சார்பதிவாளராக நியமிக்கப் பட்டார். இவர் சார்பதிவாளராக பதவி ஏற்ற பின்னர் நேர்மையான முறையில் செயல்பட்டு வருகிறார். மேலும் போலி பத்திரப்பதிவு ஏதும் நடைபெறாமல் இருப்பதுடன், அங்கீகாரமற்ற மனைப்பிரிவு பத்திரப்பதிவும் செய்யப்படவில்லை.
இந்த நிலையில் நேர்மையாக செயல்படும் இச்சார்பதிவாளரை சிலர் தங்களது சுய நலத்திற்காக வேறு அலுவலகத்திற்கு மாறுதல் செய்ய கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகவலால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி நேர்மையாக செயல்படும் சார்பதிவாளரை மாறுதல் செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையில் பணிபுரிந்து வரும் 33 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜயந்த் பிறப்பித்–துள்ளார்.
சேலம்:
தமிழகம் முழுவதும் துணை கலெக்டர் நிலையில் பணிபுரிந்து வரும் 33 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கவிதா வேலூர் மாவட்ட ஆர்.டி.ஓ.வாகவும், கோவை (வடக்கு) வாணிபக் கழக மாவட்ட மேலாளர் பாபு கிருஷ்ணகிரி மாவட்ட ஆர்.டி.ஓ.வாகவும், அப்பொறுப்பில் இருந்த சதீஷ்குமார், சென்னை- கன்னியாகுமரி தொழிற்நுட்ப திட்ட மறு குடியமர்வு அலுவலரா–கவும், நாமக்கல் ஆர்.டி.ஓ. மஞ்சுளா பெரம்பலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும் (பொது) மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜயந்த் பிறப்பித்–துள்ளார்.
- குனியமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
- கமலக்கண்ணன், சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டார்.
கோவை,
கோவையில் 11 சப்-இன்ஸ்பெக்டர்கள் இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
குனியமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா, சைபர் கிரைம் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார்.
ரத்தினபுரி சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய தனசீலன் வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்துக்கும், பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன், சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கும், செல்வபுரம் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் பீளமேட்டுக்கும் மாற்றப்ப ட்டனர்.
பெரியகடை வீதி சப்-இன்ஸ்பெக்டர் கோமதி, மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும, சரவணம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அழகு செல்வி கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், பீளமேடு சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், சரவணம் பட்டிக்கும், காட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளிராஜ், சாய்பாபா காலனிக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
ரேஸ்கோர்ஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ், வெரைட்டி ஹால் ேபாலீஸ் நிலையத்துக்கும், அங்கு பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கும் மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றிய 17 சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
- நாமக்கல் மாவட்டத்தில் 23 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தர விட்டு உள்ளார்.
- நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 23 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தர விட்டு உள்ளார். அதன்படி நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் பூபதி, நாமக்கல் போலீஸ் நிலையத்திற்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் நாமக்கல் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் முருகன், நாமக்கல் மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையத்திற்கும், மதுவிலக்கு பிரிவில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் ராதா, பரமத்திவேலூர் போலீஸ் நிலையத்திற்கும் பணி இட மாற்றம் செய்யப்பட்டனர்.
பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்தில் பணி யாற்றி வந்த சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்கு மார், திருச்செங்கோடு மது விலக்கு பிரிவிற்கும், நாமக்கல் போலீஸ் நிலை யத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சங்கீதா, ராசிபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி, வெப்படை போலீஸ் நிலையத்திற்கும் பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஆயில்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் நாமகிரிப்பேட்டைக்கும், மங்களபுரத்தில் பணியாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் மணி திம்ம நாயக்கன்பட்டிக்கும், ஜேடர்பாளையத்தில் பணி யாற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிர மணியம் பரமத்திவே லூருக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- வருவாய் ஆய்வாளர் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார்.
- வீடியோ எடுத்து பரப்பிய இருவரிடம் போலீசார் விசாரித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தாலுகாவில் டவுன் வருவாய் ஆய்வாளராக தனலட்சுமி (வயது 40) பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 17-ந்தேதி உயரதிகாரிகளுக்கு மதிய உணவை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தார். இதை வீடியோ எடுத்த ஒருவர் அதனை சமூகவலைதளங்களில் பரப்பினார்.
இதுதொடர்பாக வருவாய் ஆய்வாளர் தாராபுரம் போலீசில் புகார் அளித்தார். வீடியோ எடுத்து பரப்பிய இருவரிடம் போலீசார் விசாரித்தனர். அதில் ரேவந்த் என்பவர் இருப்பிட சான்றிதழ் கோரி விண்ணப்பித்தார். ஆவணங்கள் முறையாக இல்லாத காரணத்தால் நிராகரித்ததால் கோபமடைந்த ரேவந்த் தனது நண்பருடன் சேர்ந்து வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி செல்போன் மூலம் உயரதிகாரிகளுக்கு சாப்பாடு ஆர்டர் செய்வதை வீடியோ எடுத்து பரப்பியது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
இந்நிலையில், வீடியோ வைரலான நிலையில், உயர் அதிகாரிக்கு சாப்பாடு ஆர்டர் செய்த வருவாய் ஆய்வாளர் தனலட்சுமியை அலங்கியம் ஒன்றியத்துக்கு மாற்றம் செய்து திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் உத்தரவிட்டார்.
- ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீசார் பணியிட மாறுதல் கேட்டு விருப்பம்
- போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவு
ஈரோடு ஆனைக்கல் பாளையம் பிரிவில் மாவட்ட ஆயுதப்படை செயல்பட்டு வருகிறது. ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீசார் பணியிட மாறுதல் கேட்டு விருப்பம்தெரிவித்திருந்தனர்.
இதன் பேரில் மாவட்ட ஆயுதப்படையில் பணி யாற்றிய சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தங்கராஜ், தலைமை காவலர்கள் பிரபு , சக்தி வேலாயுத சாமி, சுரேஷ்குமார், சிவகுமார் முத்துகிருஷ்ணன், சரவணன், பெண் தலைமை காவலர் பாண்டிய ஜோதி மற்றும் போலீசார் என 59 பேர் ஈரோடு, பவானி, கோபி, பெருந்துறை, சத்தியமங்கலம் ஆகிய 5 போலீஸ் சப்- டிவிஷன்க ளுக்கு கீழே உள்ள போலீஸ் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன் உத்தரவிட்டார்.
இதில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட 59 பேரில் 7 பேர் பெண் போலீசார் என்பது குறிப்பிடத்தக்கது. இடமாற்றம் செய்யப்பட்ட 59 பேரும் தங்களிடம் உள்ள ஆயுதங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் போலீஸ் குடியிருப்புகளையும் காலி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- திங்கட்கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது.
- ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், வாரந்தோறும் திங்கட்கிழமையன்று நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.04.2023 அன்று காலை 10.30 மணிக்கு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள ஊரக வளர்ச்சித்துறை அலுவலக கூட்டரங்கில் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
- வார்டு உறுப்பினர்கள் ஈஸ்வரி , கணேசன் கலந்து கொண்டனர்.
- அனைவரும் கிராமத்தின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் உறுதிமொழி ஏற்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் உள்ள சீரங்ககவுண்டன் பாளையத்தில் உள்ள அரசமர மைதானத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணை தலைவர் பரமசிவம் , வார்டு உறுப்பினர்கள் ஈஸ்வரி , கணேசன் கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப்பணி குழு சார்பாக வக்கீல் ராஜசேகரன் , கிராம நிர்வாக அலுவலர் , விவசாயத்துறை சுகாதாரத் துறை அதிகாரிகளும் உள்ளாட்சி அதிகாரிகளும் பங்கேற்றனர். கூட்டத்தில் இடுவாய் ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சியோடு இணைத்தால் தற்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணியாற்றி வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வேலை இழப்பும் பொருளாதார பாதிப்பும் ஏற்படும் என்ற காரணத்தாலும், உள்ளாட்சிப் பணிகள் விரைந்து நடைபெறுவதில் தாமதம் ஏற்படும் என்கிற காரணத்தாலும் இடுவாய் ஊராட்சியை திருப்பூர் மாநகராட்சியோடு இணைக்க கூடாது .
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியமும் ஒன்றிய அரசும் இணைந்து வழங்கி வந்த வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் மானியத்தில் வீடு கட்டும் திட்டம் (இரண்டு லட்சத்து 10 ஆயிரம் மானியம் ) கடந்த ஓராண்டாக செயல்படுவதில்லை. எனவே உடனடியாக அந்தத் திட்டத்தை செயல்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். சமீபத்தில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட 12 மணி நேரம் தொழிலாளர்கள் பணியாற்ற வேண்டும் என்ற சட்ட திருத்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தொழிலாளர் தினமான மே தினத்தன்று முதலமைச்சர் அந்த சட்ட திருத்தத்தை திரும்ப பெற்றதற்கு இந்த கிராம சபை மூலம் ஏகமனதாக அவருக்கு நன்றி தெரிவிப்பது.
இடுவாயில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி கடந்த பல வருடங்களாக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றியும் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில் போராட்டம் நடத்தியும் கோரிக்கை நிறைவேறாமல் உள்ளது. எனவே தமிழக அரசு இந்த அரசு மதுபான கடையில் மது விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும். இடம் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது மதுபான கடை அகற்றாததால் ஊராட்சி தலைவர் ராஜினாமா செய்ய வேண்டும் என பா.ஜ.க.வினர் கருத்து தெரிவித்தனர்.
ஊராட்சித் தலைவர் அதற்கு விளக்கம் அளித்து பேசும் போது, மதுபான கடையை வைக்கலாமா வேண்டாமா என்ற அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு இல்லை . ஜனநாயக முறைப்படி எதிர்ப்பு தெரிவித்து போராட மட்டுமே அதிகாரம் உள்ளது. அதை இடைவிடாது செய்து வருவதாக விளக்கம் அளித்தார்.பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொது மக்களின் கோரிக்கை மனுக்களை ஊராட்சி தலைவர் பெற்றுக் கொண்டார். கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.அனைவரும் கிராமத்தின் சுகாதாரத்தை பேணிக்காக்கும் உறுதிமொழி ஏற்றனர்.
- அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பல்லடத்துக்கு மாற்றப்பட்டார்.
- பல்லடத்தில் பணிபுரிந்து வரும் ராஜவேல் அவிநாசி சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர்:
அவிநாசி போலீஸ் ஸ்டேஷனில் சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பல்லடத்துக்கு மாற்றப்பட்டார். அவிநாசி போலீஸ் உட்கோட்டத்துக்கு உட்பட்ட அவிநாசி ஸ்டேஷனில் சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சரஸ்வதி. இவர், பல்லடம் போலீஸ் ஸ்டேஷன் கிரைம் இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக, பல்லடத்தில் பணிபுரிந்து வரும் ராஜவேல் அவிநாசி சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- நித்யா (வயது 28) என்பவர், கடந்த மார்ச் 11-ந் தேதி, ஆடு மேய்க்க சென்றபோது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
- இந்த நிலையில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் சுரேஷ், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகில் உள்ள சரளைமேடு பகுதியைச் சேர்ந்த நித்யா (வயது 28) என்பவர், கடந்த மார்ச் 11-ந் தேதி, ஆடு மேய்க்க சென்றபோது, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக, அப்பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். இதைத்தொ டர்ந்து அப்பகுதியில் 2 பிரிவினருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
அதையடுத்து, வெல்ல ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்களின் குடிசைக்கு தீ வைப்பு, வீடுகளுக்கு தீ வைப்பு, டிராக்டர்கள் எரிப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு என, அடுத்தடுத்து தொடர் சம்பவங்கள் அப்பகுதியில் நடைபெற்றதால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், கடந்த, 14-ந் தேதி, அதிகாலை சரளைமேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெல்ல ஆலையில் தூங்கி கொண்டிருந்த தொழிலா ளர்கள் 4 பேர் மீது, மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர்.
அதில், படுகாயம் அடைந்த 4 பேரும் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், பரமத்தி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த ஆய்வாளர் சுரேஷ், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடுக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
அதையடுத்து, அங்கு பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ரவி, பர மத்தி போலீஸ் நிலை யத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை, சேலம் சரக டி.ஐ.ஜி. விஜயகுமார் (பொ) வழங்கி உள்ளார்.
- கலெக்டர் தாசில்தார் பணியிடங்களை மாற்றியும், பதவி உயர்வு வழங்கியும் உத்தரவு பிறப்பித்தார்.
- கலெக்டர் அலுவலக துணை தாசில்தாராக இருந்த ஜெயமாலா, தாராபுரம், தனி தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் மூன்று தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் தாசில்தார் பணியிடங்களை மாற்றியும், பதவி உயர்வு வழங்கியும் நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, காங்கயம் மண்டல துணை தாசில்தாராக இருந்த மோகனன், தாராபுரம், ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளராகவும், இப்பணியிடத்தில் இருந்த ஜெகதீஸ்குமார், திருப்பூர் 'டாஸ்மாக்' கிடங்கு, மேலாளாராக மாற்றப்பட்டார். கலெக்டர் அலுவலக (டி.என்.ஆர்.எஸ்.பி., நிலை - 2) துணை தாசில்தாராக இருந்த ஜெயமாலா, தாராபுரம், தனிதாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பவானி நகராட்சிக்கு கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
- வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் பதவிக்கு கூடுதல் பொறுப்பாக காங்கயம் நகராட்சி கமிஷனர் செயல்படுவார்.
திருப்பூர் :
வெள்ளகோவில் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த ஆர்.மோகன் குமார் பணி மாறுதல் அடிப்படையில் காலியாக உள்ள பவானி நகராட்சிக்கு கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். இதை நகராட்சி நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இதனால் தற்போது காலியாக உள்ள வெள்ளகோவில் நகராட்சி கமிஷனர் பதவிக்கு கூடுதல் பொறுப்பாக காங்கயம் நகராட்சி கமிஷனர் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபுரிந்து வந்த மணி என்பவர் பணியிட மாறுதலாக கூடலூர் நகராட்சியின் பொறியாளராகவும், திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகத்தில் உதவி பொறியாளராக பணிபு ரிந்து வந்த தீபன் என்பவர் வெள்ளகோவில் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி பொறியாளராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.