என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவதி"

    • சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • நேற்று காலை பள்ளி கேட்டின் பூட்டை திறக்க முயன்றபோது, முடியாததால் பள்ளிக்கு மாணவர்கள் அவதி அடைந்தனர்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்தவுடன் கேட்டை பூட்டி விட்டு சென்றனர். இந்நிலையில், நேற்று காலை பள்ளி கேட்டின் பூட்டை திறக்க முயன்றபோது, முடியாததால் பள்ளிக்கு மாணவர்கள் அவதி அடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீ சாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கேட்டின் பூட்டை உடைத்து பள்ளியை திறந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கிராம நிர்வாக அலுவலர் இதுகுறித்து விசாரித்து வருகிறார்.

    • ஏற்காட்டில் கடந்த 2 தினங்களாக இடைவிடாத சாரல் மழையும், கடுமையான பனிப் பொழிவும் நிலவி வருகிறது.
    • இந்த சாரல் மழை காரணமாக காப்பி பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    ஏற்காடு:

    வடகிழக்கு பருவ மழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வரும் நிலையில் ஏற்காட்டில் கடந்த 2 தினங்களாக இடைவிடாத சாரல் மழையும், கடுமையான பனிப் பொழிவும் நிலவி வருகிறது.

    ஏற்காட்டில் அதிகப்படி யாக காப்பி விவசாயம் செய்யப்படுகிறது. இந்த சாரல் மழை காரணமாக காப்பி பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் காப்பி விவ சாயிகள் வேத னையடைந்து உள்ளனர். மேலும் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுவதால் காப்பி தோட்ட பணிகளும் பாதிக்கப்பட்டு உள்ளது. முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் காணப்படுவதால், முகப்பு விளக்குகளை எரிய விட்ட படி வாகனங்கள் இயக்கப்படுகிறது.

    மேலும் கடுமையான குளிரும் காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் கூட ஸ்வட்டர், ஜர்க்கின் உள்ளிட்டவை அணியாமல் வெளியில் வரமுடியாது நிலை உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். தொடர் மழையால், இப்பகுதியில் ஏராளமானோர் சளி, காய்ச்சல் தொல்லையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    ஏற்காட்டில் இடைவிடாத சாரல் மழை, கடுமையான பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    • மதுரையில் பஸ் நிறுத்தங்களில் அரசு பஸ்கள் நிற்காமல் செல்கின்றன.
    • இதனால் பெண்கள், மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தின் 16 பணிமனைகளில் இருந்து பொதுமக்களின் வசதிக்காக 960 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 125-க்கும் மேற்பட்டவை பெண்கள் பயணிக்கும் இலவச பஸ்கள் ஆகும். மாணவ- மாணவிகள் உரிய அடையாள அட்டையுடன் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய இயலும்.

    மதுரை மாவட்டத்தில் அதிகாரப்பூர்வமாக 635 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இங்கு பஸ்களை கட்டாயம் நிறுத்திச் செல்ல வேண்டும் என்பது விதி. ஆனால் இது கடைப்பிடிக்கப்படுவது இல்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது;-

    பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் ஆகியோர் அதிகாலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் பஸ் நிறுத்தத்தில் கால் கடுக்க காத்து இருக்கின்ற னர். ஆனாலும் அங்கீக ரிக்கப்பட்ட நிறுத்தங்களில் பெரும்பாலும் பஸ்கள் நிற்பது இல்லை. பஸ் நிறுத்தத்தில் இருந்து சிறிது தூரம் சென்ற பிறகு தான் நிறுத்தப்படுகிறது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவி கள் அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடிப் போய் தான் பஸ்களில் ஏறி பயணம் செய்ய முடிகிறது. அதிலும் குறிப்பாக பெண்கள் பயணிக்கும் இலவச பஸ்கள், பஸ் நிறுத்தங்களில் நிற்பதே இல்லை.

    பஸ் நிறுத்தங்களில் காத்து இருப்பவர்கள், காசு கொடுத்து பயணிக்கட்டும் என்று டிரைவர், கண்டக்டர்கள் நினைக்கின்றனர். இதன் காரணமாக அவர்கள் பெரும்பாலும் பஸ் நிறுத்தங்களில் பஸ்சை நிறுத்துவது இல்லை. எனவே மாணவிகள் நிறுத்தம் தாண்டி நிற்கும் பஸ்களில் ஓடிச்சென்று ஏறி பயணம் செல்வதை பார்க்க முடிகிறது. மதுரை மாநகர பஸ்சில் பயணித்த சிறுவன் ஒருவன், கடந்த சில மாதத்துக்கு முன்பு சாலையில் விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்தில் இறந்தது குறிப்பிடத்தக்கது.

    எனவே மதுரை மாநகரில் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். அப்படி செய்தால் அரசு பஸ்களில் கூட்டம் அலை மோதுவது குறையும்.

    குறிப்பாக காளவாசல் பஸ் நிறுத்தம் உள்ள பகுதியில் எந்த பஸ்களை யும் முறையாக நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க செய்வது இல்லை. கண்ட இடத்தில் பஸ்களை நடுவழியில் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    காளவாசல் சிக்னல் பகுதி முக்கிய சந்திப்பாக இருப்பதால் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி போக்குவரத்து நெரிசலுக்கு தற்காலிக தீர்வு காண்பதை விட்டு விட்டு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் இந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் ஆம்புலன்சு வாகனங்கள் அதிக நேரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிக் கொள்கிறது.

    அடுத்தபடியாக இலவச பஸ்களில் பயணிக்கும் பெண்களிடம், ஒரு சில கண்டக்டர்கள் கடுமையாக நடந்து கொள்கின்றனர். அசிங்கமாக பேசுகின்றனர். பள்ளிக்கூட மாணவ- மாணவிகளை தரக்குறை வாக பேசுகின்றனர். ஆனா லும் இதனை சகித்துக் கொண்டு பொதுமக்கள் வேறு வழியின்றி அரசு பஸ்களில் பயணம் செய் வதை பார்க்க முடிகிறது.

    ஆரப்பாளையத்தில் இருந்து அரசு பஸ்சில் சென்ற கல்லூரி மாணவி ஒருவரிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு பஸ் கண்டக்டர் ஒருவர் பாலியல் சில்மிஷம் செய்து கைதான சம்பவம் குறிப்பிடத்தக்கது.

    எனவே அரசு பஸ்களில் வேலை பார்க்கும் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் சுய ஒழுங்கை கடைப்பிடிப்பது அவசியம் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    இது தொடர்பாக மதுரை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக வட்டாரத்தில் கூறியதாவது:-

    அரசு பஸ்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்பட்ட நிறுத்தங்களில் நின்று செல்ல வேண்டும் என்று டிரைவர்- கண்டக்டர்களுக்கு அறி வுறுத்தி உள்ளோம். பயணிகளிடம் கனிவாக பேசும் படியும் வலியுறுத்தி வருகிறோம். போக்குவரத்து நெரிசல் மிகுந்த காலை- மாலை நேரங்களில் கூடுத லாக பஸ்கள் இயக்கப்படு கின்றன. பள்ளிகூட மாணவ-மாணவிகளுக்கு தனியாக பஸ் இயக்குவது தொடர்பாக பரிசீலனை செய்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

    • கீழக்கரை இஸ்லாமியா பள்ளி சாலை பாதாள பள்ளங்கள் நிறைந்து காணப்படுகிறது.
    • இதனால் மாணவ, மாணவிகள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் கடந்த மூன்று நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். கீழக்கரை தெற்கு தெரு பள்ளிவாசல் மற்றும் இஸ்லாமியா பள்ளி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து செல்கின்றனர்.

    தொழுகைக்காக ஏராளமான மக்கள் பள்ளிவாசல் வந்து செல்கின்றனர்.நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக செல்கிறது, இந்த நிலையில் ஜும்மா பள்ளிவாசல் செல்லும் வழியில் உள்ள சாலை பள்ளங்களுடன் சகதி நிறைந்த தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதியடைகின்றனர்.

    கீழக்கரை நகராட்சிக்கு புதிய சாலை அமைக்கும் பணிக்காக அரசு பல்வேறு நிதிகள் ஒதுக்கீடு செய்த நிலையிலும் முக்கியமான சாலை நீண்ட நாட்களாக மோசமான நிலையில் காட்சியளித்து, எவ்வித நடவடிக்கையும் இல்லாமல் இருப்பது இந்த பகுதி மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கையில் இந்த பகுதியில் தரமான முறையில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • பாலம் வேலை நடைபெற்று வருவதால் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதி.
    • மளிகை பொருள் மற்றும் காய்கறிகள் வாங்க 3 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து ஆத்தாளூர் செல்லும் வழியில் உள்ள ஆண்டவன் கோயில் எல்சி 117 ரயில்வே கேட் எடுக்கப்பட்டு, கீழ்மட்ட பாலம் 300 மீட்டர் அளவில் கடந்த ஐந்து மாதங்களாக வேலை நடைபெற்று வருகிறது.

    இதனால் ஆத்தாளூர், நாடாகாடு, முனி கோவில் பாலம், பூக்கொல்லை, முடச்சிக்காடு, கழனிவாசல் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த பகுதிகளைச் சேர்ந்த 500 மாணவர்கள் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இவர்கள் பள்ளிக்கு வருவதற்கு சுமார் மூன்று கிலோமீட்டர் சுற்றி பேராவூரணி நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வர வேண்டிய அவல நிலை உள்ளது.

    இவ்வழியே ஆத்தாளுர் வீரமாகாளி அம்மன் கோவில் உள்ளது.

    கோயிலுக்கு மாவடுகுறிச்சி, இந்திரா நகர், தென்னங்குடி, கொன்றைக்காடு, களத்தூர் கிராம பொதுமக்கள், பக்தர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம்.

    தற்போது பாலம் வேலை நடைபெற்று வருவதால் கோவிலுக்கு செல்ல முடியாமல் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    ஆத்தாளூர் கிரா மத்திலிருந்து பேராவூரணி நகர் பகுதியில் மளிகை பொருள் மற்றும் காய்கறிகள் வாங்க 3 கிலோமீட்டர் சுற்றிவர வேண்டிய நிலை உள்ளது என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே உடனடியாக பாலம் கட்டும் பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்படுத்த திறந்து விட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அபிராமம் அருகே நிழற்குடை இல்லாத பஸ் நிறுத்தத்தால் பயணிகள்- மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
    • பொட்டகுளம் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள பொட்டகுளம் கிராம மக்களும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளும் வெளியூர் செல்லவேண்டும் என்றால் அபிராமம் - பார்த்திபனூர் செல்லும் மெயின் ரோட்டுக்கு வந்து பஸ் ஏற வேண்டும்.

    பொட்டகுளம் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை இல்லாததால் வெயில் காலங்களிலும், மழை காலங்களிலும் பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாண விகள் அவதிப்படுகின்றனர்.

    இந்த கிராமத்தில் சுமார் 250 குடும்பத்திற்கும் மேற்பட்டவர்கள் குடியிருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து பொட்ட குளம் கிராம மக்க கூறுகையில், எங்கள் ஊரிலிருந்து பஸ் நிறுத்தம் இருக்கும் மெயின் ரோட்டுக்கு 5.கி.மீ தூரம் நடந்தே வரவேண்டி உள்ளது.

    அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் படிப்பதற்கும், வெளியூர் செல்லவும் சிரமப்படுகிறோம்.இந்த பஸ் நிறுத்த்தில் மழையிலும், வெயிலிலும் நிற்க முடியாமல் வயதா னவர்களும், குழந்தைகளும், கர்ப்பிணிகளும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்.

    இந்த பஸ் நிறுத்தத்திற்காக 30 ஆண்டுகளாக நிழற்குடை கேட்டு பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. மாவட்ட நிர்வாகம் பொட்டகுளம் கிராம மக்கள் பயன் பெறும் வகையில் பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • குண்டும், குழியுமான சாலைகளால் ராமேசுவரம் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
    • தேசிய நெடுஞ்சாலைத்துறையும் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    ராமேசுவரம்

    இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத்தில் பிரசித்தி பெற்றது ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலாகும். இங்கு தினமும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். தென்னகத்து காசி என்று அழைக்கப்படும் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.

    இதே போல் பிரசித்த பெற்ற தனுஷ்கோடி, அப்துல்கலாம் நினைவு மண்டபம் போன்றவை காண நாள்தோறும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். இதனால் நகரில் வாகனப் பெருக்கமும் அதிகரித்து வருகிறது. ஆனால் அதற்கேற்ப சாலைவசதிகள் ராமேசுவரத்தில் இல்லை என்பது கவலைக்குறியது.

    ராமேசுவரத்தில் 35 ஆயித்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலான பகுதிகளில் குறைந்த அளவே அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதே போல் ராமேசுவரம் நகருக்கு வரும் யாத்திரீகர்கள், சுற்றுலா பயணிகள் ரெயில், பஸ் நிலையங்களில் இருந்து அரசு பஸ் மற்றும் ஆட்டோக்கள் மூலம் கோவிலுக்கு செல்கின்றனர்.

    ஆனால் ராமேசுவரத்தில் உள்ள முக்கிய சாலைகள் போக்குவரத்திற்கு லாயகற்ற நிலையில் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் ராமேசுவரம் சாலையில் பயணம் என்பது சாகச பயணமாக மாறி வருகிறது. பள்ளத்தல் ஏறி, இறங்கும் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி விபத்தில் சிக்குவதும், இதில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் படுகாயமடைவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    ராமேசுவரம் நகரில் பாதாள பணிக்காக பல்வேறு பகுதிகளில் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. திரும்பிய திசை எல்லாம் குண்டும், குழியுமாக இருப்பதால் போக்குவரத்து என்பது சிரமாக மாறி உள்ளது. ராமேசுவரம் லட்சுமண தீர்த்தம் முதல் திட்டக்குடி கார்னர் நகராட்சி அலுவலகம் வரை 2 பகுதிகளிலும் பாதாள சாக்கடைக்காக குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த சாலைகளில் கரணம் தப்பினால் மரணம் நிச்சயம் என்ற நிலையில் வாகனங்கள் சென்று வருகிறது.

    ராமேசுவரத்தில் அவல நிலையை போக்க மாவட்ட நிர்வாகமும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தேசிய நெடுஞ்சாலைத்துறையும் பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது என பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.

    இந்தியாவில் ஆன்மீக நகரங்களில் முக்கியமானதாக உள்ள ராமேசுவரத்தில் தரமான சாலை அமைத்து போக்குவரத்திற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் அமைச்சர், தொகுதி எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • அபிராமம் அருகே அடிப்படை வசதி இல்லாமல் கிராம மக்கள் தவிக்கின்றனர்.
    • கிராம மக்கள் வீடுகளில் வசூல் செய்து மண் அடித்து சாலையை சமன் செய்துள்ளனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் அருகே உள்ள வங்காருபுரம் கிராமத்தில் 1200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

    15 ஆண்டுகளுக்கு மேலாக வங்காருபுரம் கிராமத்தில் இருந்து வீரசோழன் செல்லும் பிரதான சாலை 100 மீட்டருக்கு அமைக்க ப்படாமல் எல்லையை காரணம் காட்டி அதிகாரிகள் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

    கிராமத்திற்குள் செல்லும் அந்த சாலையை அபிராமம் ஊராட்சி ஒன்றிய அதிகா ரிகள் இந்த எல்லை பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது என்றும், பரமக்குடி ஊராட்சி சேர்ந்த அதிகாரிகள் அபிராமம் எல்லைக்கு உட்பட்டது என்றும் கூறி மக்களை அலைக்கழிக்கின்றனர்.

    ஆனால் சாலை அமைப்ப தற்கான முழு தொகையும் எடுத்துவிட்டு 100 மீட்டர் சாலை அமைக்காமல் விட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தனர். மேலும் அந்த சாலை குண்டு குழியுமாக காட்சியளிக்கிறது.

    மழைக்காலங்களில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு தேங்கி நிற்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது.கிராம மக்கள் வீடுகளில் வசூல் செய்து மண் அடித்து சாலையை சமன் செய்துள்ளனர்.

    இரவு நேரங்களில் இந்த பகுதியில் தெருவிளக்குகள் இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும் அச்சப்படுகின்றனர்.

    இதுகுறித்து அதிகாரி களுக்கு பலமுறை புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கிராமமக்கள் குற்றம் சாட்டினர் .

    ஒரே கிராமத்திற்குள் எல்லை பிரச்சினையை காரணம் காட்டி மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யாமல் புறக்கணிக்கப்படுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    • சாலையில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
    • ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு.

    மதுரை

    திருப்பரங்குன்றம் யூனியன் நிலையூர் 1-வது பிட், கைத்தறிநகர் ஊராட்சி மன்றம் உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் 50-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் சாலையில் சுற்றி திரிகின்றன. இது பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறை ஏற்படுத்தி வருகின்றன.

    மாடுகளை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திற்கு கைத்தறிநகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • மழை பெய்யும் நேரங்களில் எல்லாம் குடியிருப்புகளை சுற்றி மற்றும் தெரு முழுவதும் மழைநீர் தேங்கும்.
    • தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தேங்கி கிடக்கும் தண்ணீர் அளவு அதிகரிக்கும் என அச்சப்படுகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே மருங்கை சாலையில் அருமை நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இங்கு மழை பெய்யும் நேரங்களில் எல்லாம் குடியிருப்புகளை சுற்றி மற்றும் தெரு முழுவதும் மழைநீர் தேங்கிகிடப்பது தொடர் கதையாகி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தஞ்சை மற்றும் சுற்று வட்டார இடங்களில் பலத்த மழை கொட்டியது. இதில் அருமை நகரில் குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் தேங்கியது.

    இதனால் பொதுமக்கள் வீட்டில் இருந்து கடும் சிரமத்திற்கு இடையே வெளியே வந்தனர். தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தேங்கி கிடக்கும் தண்ணீர் அளவு அதிகரிக்கும் என அச்சப்படுகின்றனர்.

    இதுகுறித்து அருமை நகரை சேர்ந்தகார்த்திக் கூறும்போது, எங்கள் பகுதியில் மழைக்கா லங்களில் தண்ணீர் தேங்குவது தொடர்ந்து நடந்து வருகிறது.

    தேங்கி கிடக்கும் தண்ணீரில் இருந்து விஷ பூச்சிகள் வீட்டுக்கு ள் வருவதால் அச்சத்தில் உள்ளோம். எங்கள் பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வாய்க்கால் இல்லாததால் தண்ணீர் தேங்குகிறது.

    எனவே மழைநீர் வாய்க்காலை தூர்வாரி மழைநீர் தேங்கா வண்ணம் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • இரண்டு பள்ளிகளில் 5000-க்கும் மேற்பட்ட மாணவ-மாண–விகள் படித்து வருகின்றனர்.
    • சில பஸ்சில் கூட்ட நெரிசல் இருப்பதால் தொங்கியடி செல்லும் நிலை உள்ளது.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூரில் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என 2 அரசு பள்ளிகள் உள்ளது.

    இந்த இரண்டு பள்ளிகளில் 5000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    மதுக்கூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

    ஆனால் பள்ளி தொடங்கும் காலை மற்றும் முடியும் மாலை நேரங்களில் மதுக்கூருக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர்.

    இதனால் சில பஸ்சில் கூட்ட நெரிசல் இருப்பதால் தொங்கியடி செல்லும் நிலை உள்ளது.

    இது குறித்து காவி புலிப்படை நிறுவன தலைவர் புலவஞ்சி சி.பி.போஸ் கூறியதாவது:-

    மதுக்கூரில் உள்ள 2 அரசு பள்ளிகளிலும் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இவர்களில் பெரும்பாலானோர் பஸ்களில் வருகின்றனர். ஆனால் காலை மற்றும் மாலை நேரங்களில் குறைவான எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை ஏற்படுவதோடு படிக்கட்டில் தொங்கியடி செல்லும் நிலையும் உள்ளது.

    இது போன்ற சூழ்நிலையில் மதுக்கூர் காவலர்களுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. எனவே மாணவ-மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு காலை மற்றும் மாலை நேரங்களில் மதுக்கூருக்கு கூடுதல் பஸ் வசதி செய்து தர வேண்டும் என்றார்.

    • சக டிரைவர்கள் மற்றும் பயணிகள் அவர்களை சமதானம் செய்து வைத்தனர்.
    • போக்கு–வரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர்.

    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் யார் முதலில் செல்வது என தனியார் மற்றும் அரசு பஸ்களுக்கும் இடையே போட்டி நிலவுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

    பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில், பட்டுக்கோட்டை-தஞ்சாவூர் வழித்தடத்தில் பகல் நேரத்தில் 3 நிமிடங்களுக்கு ஒரு பஸ் புறப்பட்டு செல்லும் வகையில் நேரம் ஒதுக்கீடு செய்து பஸ்கள் இயக்கபட்டு வருகிறது.

    பட்டுக்கோட்டை-– தஞ்சாவூர் வழித்தடத்தில் செல்லும் சில தனியார் பஸ்கள், அரசு பஸ்களை முந்தி செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் அசுர வேகத்தில் செல்வதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் பட்டுக்–கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து தஞ்சாவூருக்கு செல்வதற்கு அரசு பஸ் ஒன்று தயாராக இருந்த நேரத்தில், அதற்கு அடுத்த–தகாக தஞ்சாவூருக்கு செல்ல இருந்த தனியார் பஸ் ஒன்றில் பயணிகளை ஏற்றியுள்ளனர்.

    இது தொடர்பாக அரசு பஸ் ஓட்டுநருக்கும், தனியார் பஸ் ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த சக ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் சமதானம் செய்து வைத்தனர்.

    இதனால் பஸ் நிலை–யத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பயணிகள் அவதி அடைந்த னர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தனியார் பஸ்சில் ஏறினால் விரைவாக சென்றுவிடலாம் என கருதி பயணிகள் ஏறுகின்றனர்.

    ஆனால் சில தனியார் பஸ்கள் தங்கள் பஸ்சில் அதிக அளவு பயணிகளை ஏற்ற வேண்டும் என்ற லாப நோக்கத்தில் செயல்பட்டு அரசு பஸ்சுக்கு பிறகு புறப்பட்டு அரசு பஸ்சை முந்தி சென்று அதிக அளவில் பயணிகளை ஏற்றுகின்றனர்.

    இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலரும், மாவட்ட கலெக்டரும் உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×