என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தன்னார்வலர்கள்"

    • 9 தாலுக்காவில் இருந்து 33 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
    • பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு தன்னார்வலர்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அப்தமித்ரா 5-வது கட்ட 12 நாள் சிறப்பு பயிற்சி ரெட்கிராஸ் பேரிடர் மேலாண்மை பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது.

    இப்பயிற்சியில் தஞ்சாவூர் மாவட்ட த்தைச் சார்ந்த 9 தாலுக்காவில் இருந்து 33 தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.

    இப்பயிற்சி வருகிற 9-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் தினசரி தமிழகத்தின் சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் பேரிடர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி வழங்கப்படுகிறது.

    பயிற்சியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    அங்கு பேரிடர் வட்டாட்சியர் ராஜேஸ்வரி பேரிடர் கட்டுப்பாட்டு அறை செயல்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் ரெட்கிராஸ் மாவட்ட பொருளாளர் பொறியாளர் முத்துக்குமார், ஒருங்கிணைப்பாளர் பயோகேர் முத்துக்குமார்,பேரிடர் கட்டுப்பாட்டு அறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • நன்கு அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும்.
    • நன்கு அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும்.

    திருப்பூர்:

    இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் குறைதீர் கற்றல் பயிற்சி குறுவளமைய அளவில் வருகிற 17-ந் தேதி நடக்கிறது. குறைதீர் கற்றல் பயிற்சிக்கு ஒவ்வொரு குறுவளமையத்துக்கு, நன்கு அனுபவமுள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் என இருவர் கருத்தாளர்களாக செயல்பட வேண்டும். இவர்களுக்கு வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர்கள் நாளை 15-ந் தேதி பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கு பயிற்சி 17ந் தேதி அன்று குறுவளமைய அளவில் பயிற்சி சிறப்பாக நடத்தப்பட வேண்டும். ஒரு பயிற்சியாளர் மற்றும் பயிற்றுனருக்கு நாள் ஒன்றுக்கு, 130 ரூபாய் வழங்கப்படும். தன்னார்வலர் அனைவருக்கும் பயணப்படி அவரவர் வங்கி கணக்கிற்கு வழங்குவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்படவேண்டும் என இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பான முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் முறையாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

    • தன்னார்வலர்களுக்கான 6-வது மாவட்ட மாநாட்டை நேற்று வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்லம் இணைந்து நாமக்கல்லில் நடத்தின.
    • புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 150 கிராமங்களில் வோர்ட் தொண்டு நிறுவனம், டான்போஸ்கோ அன்பு இல்லத்தினர் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்கள் மேம்பாடு-பாதுகாப்பு பணிகள், நூற்பாலைகளில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் நலன் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கான 6-வது மாவட்ட மாநாட்டை நேற்று வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்லம் இணைந்து நாமக்கல்லில் நடத்தின.

    நாமக்கல் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான விஜயபாஸ்கர் தலைமை தாங்கி, வோர்ட் மற்றும் தொன்போஸ்கோ நிறுவன செயல்பாட்டு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்து, சிறந்த தன்னார்வலர்களுக்கு விருதுகள் வழங்கி பேசினார். இதில் நாமக்கல் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் கீதா, குழந்தை தொழிலாளர் திட்ட அலுவலர் அந்தோணி ஜெனிட், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ்குமார், சி.எஸ்.சி. மேலாளர் மாணிக்கவாசகம் ஆகியோர் பேசினர். மாநாட்டில் தமிழ்நாடு அல்லியன்ஸ் நிறுவனர் பாலமுருகன், புதிய தொழிலாளர் சட்டங்கள் பற்றி தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

    இதில் திட்ட ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு அல்லியன்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிபிஜா, வோர்ட் நிறுவனம், தமிழ்நாடு அல்லியன்ஸ் மற்றும் டான்போஸ்கோ அன்பு இல்ல பணியாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக வோர்ட் நிறுவன இயக்குனர் ரெனிடா சரளா வரவேற்றார். தொன்போஸ்கோ நிறுவன இயக்குனர் காஸ்மீர் ராஜ் நன்றி கூறினார்.

    • சித்தம்பலம் கிராமத்தில் இருந்து, திருச்செந்தூர் நோக்கி 4 பேர் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.
    • தன்னார்வலர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் ஊராட்சி நிர்வாகம், ரெயின்போ ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து வலியுறுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.அந்தவகையில் ஏப்ரல் 3 ம் தேதி பிளாஸ்டிக் விழிப்புணர்வை வலியுறுத்தி சித்தம்பலம் கிராமத்தில் இருந்து, திருச்செந்தூர் நோக்கி சுமார் 350 கி.மீ., தூரம் ராமஜெயம்(வயது 70), ரங்கசாமி,(63), மகேஷ்(30), தரணி(19) ஆகிய 4 பேர் சைக்கிள் பயணம் மேற்கொண்டனர்.இவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. சித்தம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் . தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ரெயின்போ ரோட்டரி சங்கத் தலைவர் ஆறுமுகம், தங்கலட்சுமி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி சங்க செயலாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார்.சைக்கிள் பயணம் மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் முத்துக்குமார், ஆறுமுகம், கதிர், திருமூர்த்தி மற்றும் தன்னார்வலர்கள், சித்தம்பலம் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
    • அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    காங்கயம் :

     காங்கயம் பழையகோட்டை சாலை ராஜீவ் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (வயது 70). இவருடைய தங்கை மகள் மனநலம் பாதிக்கப்பட்ட கலாமணி (33). வாடகை வீட்டில் வசித்து வந்த இருவரும் ஆதரவற்ற நிலையில் வறுமையின் கொடுமையால் பி.ஏ.பி. வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். அவர்களின் உடல்களை காங்கயம் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பிரேத பரிசோதனைக்கு பின்னர் காங்கயம் போலீசார் அனுமதியுடன் 2 பெண்களின் உடல்களை காங்கயத்தை சேர்ந்த தன்னார்வ அமைப்பினர் காங்கயம் மயானத்தில் நல்லடக்கம் செய்தனர்.

    • தமிழகம் முழுக்க 2 லட்சம் தன்னார்வலர்கள் வாயிலாக மாலை நேர டியூஷன் எடுக்கப்படுகிறது.
    • மாதம் 1,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள், பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் நிலையில் ஊதிய உயர்வு வழங்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

    கொரோனா தொற்று காரணமாக, பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்களிடம் ஏற்பட்ட கல்வி இடைவெளியை குறைக்க 2021 நவம்பரில் இல்லம் தேடி கல்வி மையங்கள் துவங்கப்பட்டன.தமிழகம் முழுக்க 1.80 லட்சம் மையங்களில் 2 லட்சம் தன்னார்வலர்கள் வாயிலாக மாலை நேர டியூஷன் எடுக்கப்படுகிறது.

    இவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. மாலை நேர வகுப்பு மட்டுமல்லாமல், அரசுப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுவிலும், தன்னார்வலர்கள் உறுப்பினராக்கப்பட்டுள்ளனர். பல்வேறு கல்விப் பணிகளில் ஈடுபடுத்தப்படும் இவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.

    இல்லம் தேடி கல்வி மைய ஆலோசகர் லெனின் பாரதி கூறுகையில், பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணிகளில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். அறிவியல் கண்காட்சி, கற்பித்தல் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றல், தனித்திறன் போட்டிகள் நடத்துதல், மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் என பல்வேறு கல்விசார் பணிகள், தன்னார்வலர்களுக்கு வழங்கப்படுகின்றன. எனவே ஊதியத்தை 2 ஆயிரமாக உயர்த்தி தர ஆவண செய்ய வேண்டும் என்றார்.

    • போட்டியில் வெற்றி பெற்ற தொகையை மாணவர்களுக்கு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் வழங்கினர்.
    • மாநில போட்டிக்கு அனுப்பப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்க தமிழ்நாடு அரசு இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

    மையங்களுக்கு வரும் அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவித்து, பன்முகத் திறன் கொண்டவர்களாக திகழ வேண்டும் என்பதற்காக இந்த மையங்களில் பல்வேறு கற்றல் சார்ந்த செயல்பா டுகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 'குறும்படம் கொண்டாட்டம்' என்ற போட்டி இல்லம் தேடிக் கல்வி மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

    இதில் மாணவர்கள் குறிப்பிட்ட தலைப்புகளில் தாங்களே சிந்தித்து கதையை கூறி, அதனை மையத்தின் தன்னார்வலர் மற்றும் ஆர்வமுள்ள மாண வர்களின் துணையுடன் குறும்படமாக தயாரித்தனர்.

    விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றி யத்தின் தன்னார்வலர்கள் மடவார்வளாகம் சிவகாமி, திருவண்ணாமலை முத்துச்செல்வி ஆகியோரது குறும்படங்கள் மாவட்ட அளவில் முறையே 2 மற்றும் 3-ம் இடம் பெற்று மாநில போட்டிக்கு அனுப்பப்பட்டது.

    மாவட்ட அளவில் வெற்றி பெற்ற தற்காக தன்னார் வலர்களுக்கு இல்லம் தேடிக் கல்வி சார்பில் தலா ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகவுரி வழங்கினார்.

    தன்னார் வலர்கள் சிவகாமி, முத்துச் செல்வி ஆகியோர் தங்க ளுக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையை மையத்திற்கு வரும் மாண வர்களுக்கு கற்றலுக்கு உதவியாக இருக்கும் வகையில் கற்றல் உப கரணங்களை வாங்கி கொடுத்தனர்.

    குறும்பட போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற தன்னார்வலர்கள் மற்றும் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில் நடந்தது.

    தன்னார்வலர் சூர்யா வர வேற்றார். தன்னார்வலர்கள் மகாலட்சுமி, கஸ்தூரி, சித்ரா, சிவரஞ்சினி, கவிதா ஆகியோர் பேசினர். கல்வியாண்டு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட குறுவளமைய குழு தலைவர்களாக செயல்படும் 10 தன்னார்வலர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ் சொந்த செலவில் ரொக்கப் பரிசு வழங்கினார்.

    மேலும் மாவட்ட அளவில் குறும்படம் தயாரிப்பில் வெற்றி பெற்று பரிசு பெற்ற தன்னார் வலர்களும் பாராட்டப் பட்டனர்.

    • வானவில் மன்றம் கடந்தாண்டு தொடங்கப்பட்டது.
    • அரசுபள்ளி மாணவர்களின் ஈடுபாடு அதிகம் இருந்தது.

    தாராபுரம் :

    அரசு பள்ளிகளில் மாணவர்களின் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்க வானவில் மன்றம் கடந்தாண்டு தொடங்கப்பட்டது. இந்த மன்றத்தின் முக்கிய செயல்பாடாக அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங், கணித கருத்துகளை செயல்வழியில் விளக்க ஸ்டெம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.இந்த திட்டத்தின் செயல்பாடுகளை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு விளக்க தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டனர்.வானவில் மன்றத்தின் நோக்கம் மாணவர்களை சென்றடைந்ததை உறுதி செய்ய, மாநில அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் அரசுபள்ளி மாணவர்களின் ஈடுபாடு அதிகம் இருந்ததால் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.இதுகுறித்து ஸ்டெம் திட்ட தன்னார்வலர்கள் கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை இந்தத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் செயல்படுத்தினால் அனைத்து தரப்பு மாணவர்களும் பலனடைவர் என்றனர். 

    • எழுதிக் கொடுப்பதற்காக இரண்டு பெண் தன்னார்வ லர்களை நியமித்துள்ளார்.
    • அவர்கள் பொது மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதிக் கொடுக்கின்றனர்.

    ஈரோடு, 

    ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வரு கிறது. கலெக்டர் தலைமை யில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து மனுவாக எழுதி அதை கலெக்டரிடம் வழங்குவார்கள்.

    கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த மனுவை கொடுத்து நட வடிக்கை எடுக்க உத்தர விடுவார். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்து மனு எழுத கலெக்டர் அலுவலக வெளி நுழைவுவாயில் 7-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பார்கள் அவர்களிடம் சென்று எழுதிக் கொடுக்க சொல்வார்கள்.

    அவர்களும் சம்பந்த ப்பட்ட பொது மக்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் கூறி யவாறு மனுக்களை எழுதி கொடுப்பார்கள். இதில் பல்வேறு பிரச்சனை கள் ஏற்படுவதாக புகார்கள் வந்தன.

    இதனை அடுத்து கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தீர்வு காணும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டார்.

    அதன்படி இன்று முதல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வரும் பொது மக்கள் தங்களது பிரச்சி னைகள் குறித்து மனுவாக எழுதிக் கொடுப்பதற்காக இரண்டு பெண் தன்னார்வ லர்களை நியமித்துள்ளார். அவர்கள் பொதுமக்கள் சொல்லும் கோரிக்கைகளை மனுவாக அவர்களுக்கு ஏற்றவாறு எழுதி கொடுக்கின்றனர். இதற்காக தன்னார்வலர்கள் பேப்பர் பேனா வைத்து ள்ளனர். அவர்கள் பொது மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதிக் கொடுக்கின்றனர். கலெக்டரின் இந்த நடவடிக்கைக்கு பொது மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

    தன்னார்வலர்கள் தங்களிடம் வரும் பொது மக்களிடம் நிறுத்தி நிதான மாக என்ன பிரச்சனை என்று கேட்டு அவர்களுக்கு ஏற்றவாறு தெளிவாக மனுவில் எழுதிக் கொடுக்கின்றனர்.

    • கிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது.
    • பொதுமக்கள் வார்டு உறுப்பினர் முத்துகுமாரசாமியிடம் புகார் தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில் அரசு துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சுகாதார நிலையம் முன்பு பந்தல் எதுவும் அமைக்கப்படாததால் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் மற்றும் இங்கு தடுப்பூசி செலுத்த வரும் கர்ப்பிணிகள் வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இது குறித்து பொதுமக்கள் வார்டு உறுப்பினர் முத்துகுமாரசாமியிடம் புகார் தெரிவித்தனர். அவர் அந்தப்பகுதியில் உள்ள தன்னார்வலர்களிடம் இரும்பு பந்தல் அமைக்க உதவி கேட்டுள்ளார். அவர்களும் இரும்பு பந்தல் அமைக்க ஆர்வமுடன் முன் வந்தனர்.இதையடுத்து நேற்று அரசு துணை சுகாதார நிலையம் முன்பு இரும்பு பந்தல் அமைக்கப்பட்டது.

    • 3பேருக்கு அடையாள அட்டை மற்றும் நூல்கள் எடுத்துச் செல்லும் பை வழங்கப்பட்டது
    • தன்னார்வலர்கள் நூலகத்திற்கு நேரடியாக வர இயலாதவர்களுக்கு நூல்களை வழங்குவர்.

    உடுமலை:

    உடுமலை அருகே உள்ள மலையாண்டிபட்டினம் ஊர் புற நூலகத்தில் நூலக நண்பர்கள் திட்டத்தில் தன்னார்வலர்கள் 3பேருக்கு அடையாள அட்டை மற்றும் நூல்கள் எடுத்துச் செல்லும் பை வழங்கப்பட்டது. நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் நடந்த அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு நூலக வாசகர் வட்ட தலைவர் சிவராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் மளிகை செல்வம், வாசகர் வட்ட உறுப்பினர் லட்சுமிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நூலகர் மலர்க்கொடி வரவேற்றார்.

    தன்னார்வலர்கள் நூலகத்திற்கு நேரடியாக வர இயலாதவர்களுக்கு நூல்களை வழங்குவர். இவர்கள் தங்கள் பகுதியில் உள்ள மக்களை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நூலகங்களில் உறுப்பினராக சேர்க்கவும் ஒரு முறை அதிகபட்சமாக 25 நூல்கள் வரை எடுத்துச் சென்று நூலக உறுப்பினர்களின் இல்லங்களுக்கு நேரடியாக வழங்கி வரும் இந்த திட்டத்தில் பத்மாவதி, கற்பகம், ராமராஜன் ஆகியோர் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். அவர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நூல் எடுத்து செல்லும் பை வழங்கப்பட்டது.

    • பணி ஒதுக்கீடு வழங்கும் போது இயன்ற வரையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
    • விண்ணப்பப் பதிவு பணிக்கு தேவைப்படும் போது இவர்களை விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் வெளியிடப்பட்டு உள்ளது.

    இதன்படி வருகிற செப் டம்பர் 15-ந் தேதியில் இருந்து மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற யார்-யார் தகுதியானவர்கள் என்ற விதிமுறைகளையும் அரசு வெளியிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ரேஷன் குடும்ப அட்டை வாரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பப் படிவம் வழங்கப்பட உள்ளது.

    இந்த பணியை மேற்கொள்ள ரேஷன் கடைக்காரர்களுடன் இணைந்து பணியாற்ற தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட சிறப்பு பணி அலுவலர் இளம் பகவத் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமை திட்ட விண்ணப்பப் பதிவு தன்னார்வலர் பணிக்கு இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் விவரங்களைப் பகிர, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து கோரிக்கைகள் வரப் பெற்று உள்ளன.

    சில மாவட்டங்களில் தன்னார்வலர்களின் விவரங்கள் பகிரப்பட்டுள்ளன.

    இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் எந்தெந்த நியாய விலை கடைப் பகுதி யில் வசிக்கிறார்கள். என்ற விவரங்கள் இணைக்கப்பட்ட தொகுப்பு விரைவில் மாநில அலுவலகத்தில் இருந்து மாவட்டங்களுக்குப் பகிரப்படும். இப்பொழுது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடம் இருந்து பெறப்படும் தகவல்களைக் கொண்டு எவ்வித பணி ஒதுக்கீடுகளும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாநில அலுவலகத்திலிருந்து தகவல்கள் பகிரப்படும் பொழுது கீழ்க்கண்ட நடைமுறைகளைப் பின்பற்றி தன்னார்வலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர் செய்ய வேண்டிய பணிகள்:

    மாநில அலுவலகத்தில் இருந்து பகிரப்படும் தகவல் தொகுப்பில் ஒவ்வொரு நியாய விலை கடைப்பகுதியில் வசிக்கும் தன்னார்வலர்களின் விவரங்கள் இடம் பெற்று இருக்கும் சில நியாய விலை கடைப்பகுதிகளில் தேவைக்கு அதிகமான தன்னார்வலர்கள் தகவல் தரவு பதிவுப் பணிக்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளனர். சில நியாய விலை கடை பகுதிகளில் போதிய தன்னார்வலர்கள் விருப்பம் தெரிவிக்கவில்லை.

    இவர்களுக்கான பணி ஒதுக்கீடு வழங்கும் போது இயன்ற வரையில் இரண்டு கிலோ மீட்டருக்கு மிகாமல் பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    ஒருவேளை இரண்டு கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட தொலைவில் பயணிக்க தன்னார்வலர் சம்மதம் தெரிவித்தால் அவர்களுக்கு இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் பணி வழங்கலாம்.

    தகவல் உள்ளீடு பணிகளுக்கும் கள ஆய்வுப் பணிகளுக்கும் விருப்பம் தெரிவித்த தன்னார்வலர்களை தொலைபேசி வழியாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு பணியின் முக்கியத்துவத்தை விளக்கி அவர்களது சம்மதத்தைப் பெற்று பணியில் அமர்த்துதல் வேண்டும். சில தன்னார்வலர்கள் தற்போது இந்தப் பணி செய்ய விருப்பம் இல்லை என்று தெரிவித்தால் அவர்களைக் கட்டாயப் படுத்தக்கூடாது.

    இது தொடர்பாக தகவல் பதிவை கூகுள் சீட்டில் பதிவு செய்ய வேண்டும். ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும் உள்ள வட்டாட்சியருடன் இணைந்து தன்னார்வலர்களுக்குப் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    வருவாய் வட்டாட்சியர்கள் செய்ய வேண்டிகள் பணிகள்-

    தன்னார்வலர்களின் தகவல் விவரம் கிடைக்கப் பெற்றவுடன் புதிய தன்னார்வலர்கள் இல்லாத நியாய விலை கடைப் பகுதிகளுக்கு புதிய தன்னார்வலர்களை கண்டறிய வேண்டும். குறிப்பாக நகரப் பகுதிகளில் போதிய இல்லம் தேடி கல்வித் தன்னார்வலர்கள் இல்லை. இப்பகுதிகளில் சுய உதவி குழு உறுப்பினர்கள், வேறு பகுதியில் உள்ள இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களை ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் மூலமாக அடையாளம் கண்டு நியமிக்கலாம்.

    வட்டார ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களைக் கலந்து ஆலோசிக்காமல் பணி ஒதுக்கீடுகள் எதுவும் செய்ய வேண்டாம் என் அறிவுறுத்தப்படுகிறது.

    20 சதவீதம் கூடுதல் தன்னார்வலர்களைப் பதிலி தன்னார்வர்களாக பயன்படுத்துவதற்காக அடையாளம் கண்டு வைத்திருக்க வேண்டும். இவர்களுக்கு உதவி மையத் தன்னார்வலர்கள் பொறுப்பு வழங்கலாம்.

    விண்ணப்பப் பதிவு பணிக்கு தேவைப்படும் போது இவர்களை விண்ணப்பப்பதிவு தன்னார்வலர்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    நியாய விலைக் கடை அளவிலான பணி ஒதுக்கீடுகளை வருவாய் வட்ட அளவில் செய்ய வேண்டும். மேற்கண்ட தகவல்களை அனைத்து கள அலுவலர்களுக்கும் தெரியப்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்களையும், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×