என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளர்ச்சி பணிகள்"

    • ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.155.97 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியம், சோழந்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.4.70 லட்சம் மதிப்பீட்டில் சைக்கிள் நிழற்குடை மற்றும் அதே பகுதியில் ரூ.5.91 லட்சம் மதிப்பீட்டில் கழிவறை கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் பார்வையிட்டார்.

    புல்லமடை ஊராட்சியில் ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் அமைக்கும் பணியையும் பார்வையிட்டு நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    அழகர்தேவன்கோட்டை ஊராட்சியில் ரூ.7.20 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கட்டிடம் கட்டும் பணியையும், அதே பகுதியில் ரூ.8.98 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், தும்பனம்காகோட்டை ஊராட்சியில் ரூ.22.18 லட்சம் மதிப்பீட்டில் மயானம் கட்டிடம் மற்றும் காத்திருப்போர் வளாகம், சுற்று சுவர் அமைக்கும் பணியையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    அதே பகுதியில் ரூ.7.62 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலைக்கடை கட்டும் பணிநடைபெறுவதையும், புல்லமடை ஊராட்சியில் ரூ.17 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்டும் பணியையும், சணவேலி ஊராட்சியில் ரூ.42.65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலாளர் கட்டிடம் கட்டும் பணியை யும், கற்காத்தகுடி ஊராட்சி யில் ரூ.28.93 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தும்பனம்காகோட்டை ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையை பார்வை யிட்டு குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்கி வரும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் இருப்பு குறித்து ஆய்வு செய்தார். அந்த பகுதி மக்கள் தங்கள் பகுதிக்கு போதிய குடிநீர் வசதி இல்லை எனவும், கூடுதலாக குடிநீர் வசதி ெசய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

    அதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் கூடுதல் இணைப்பு வழங்கும் வரை தற்காலிக மாக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க கலெக்டர் விஷ்ணு சந்திரன் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உம்முல் ஜாமியா, செல்லம்மாள், ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் பொறியாளர் திலீபன் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா்
    • காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    திருப்பூர்:

    காங்கயம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தமிழ் வளா்ச்சி, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா். கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:-

    காங்கயம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.'கள ஆய்வில் முதலமைச்சா்' என்ற திட்டத்தின்கீழ் இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களுக்கு முதல்வரே நேரில் சென்று திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்.

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பொதும க்களுக்குத் தேவையான குடிநீா் விநியோகம், வடிகால் வசதி, தெருவிளக்கு, சாலை வசதி, பொது கழிப்பிட வசதி, சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்து வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா். ஆய்வில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் அ.லட்சுமணன், திருப்பூா் மாநகராட்சி 4வது மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வளா்ச்சி) வாணி, காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் மகேஷ்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

    • சிவகங்கையில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • பணியாளர்களின் கூடுதல் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறை களின் சார்பில் அனைத்துப் பகுதிகளிலும் பொது மக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளின் நிலை குறித்து கலெக்டர் ஆஷா அஜீத் கள ஆய்வு மேற்கொண்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

    அதன்படி சிவகங்கை ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட ஒக்கூர், ஓ.புதூர், கீழப்பூங்குடி ஆகியப்ப குதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், கண்மாய், வரத்து வாய்க்கால்களில் அகழிகள் வெட்டும் பணி மற்றும் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் நியாய விலைக்க டைகளின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

    பொது சுகாதாரத் துறையின் சார்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலை யங்களின் செயல்பாடுகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

    ஓ.புதூர் ஊராட்சிப் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், தலா ரூ.13.07 லட்சம் மதிப்பீட்டில் கருங்கா ப்பட்டி குடிகாட்டுக்கண்மாய் அகழிகள் வெட்டுதல் பணி, கொளக்கட்டைப்பட்டி கண்மாய் வரத்து வாய்க்கால் சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

    மாடுமுறிச்சான் கண்மாயில் அகழிகள் வெட்டுதல் பணி, ரூ.9.98 லட்சம் மதிப்பீட்டில் எல்ல முத்து ஊரணிக் கண்மாயில் அகழிகள் வெட்டுதல் பணி என மொத்தம் ரூ.120.23 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பணிகள் தொடர்பாக கலெக்டர் ஆஷா அஜீத் ஆய்வு செய்தார்.

    மேற்கண்ட திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் பணியாளர்களின் கூடுதல் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வுகளின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.ஜினு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொ றியாளர் வெண்ணிலா, உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், மாவட்ட வழங்கல் அலுவலர் நஜிமுன்னிசா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பத்மநாதன், ஜெகநாத சுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஒன்றியங்களில் ரூ.4.25 கோடி வளர்ச்சி பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    • ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் தளம் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம், திருப்புல்லாணி ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் ரூ.4.25 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில் ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.362 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளையும், மண்டபம் ஊராட்சி ஒன்றியம் உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்

    15-வது நிதிக்குழு மானிய சுகாதாரப்பணிகள் திட்டத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வட்டார சுகாதார வளாக கட்டிடத்தின் கட்டுமான பணிகளையும் ஆய்வு செய்தார்.

    அதனைத்தொடர்ந்து திருப்புல்லாணி ஊராட்சி யில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.21 லட்சம் மதிப்பீட்டில் முஸ்லிம் தெருவில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறு வதையும், ரூ.9.10 லட்சம் மதிப்பீட்டில் கதிர் அடிக்கும் தளம் அமைக்கப்பட்டு வருவதையும் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் பிச்சாவலசை கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து அரசின் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    • அரியலூரில் ரூ.76.85 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் தொடங்கபட்டது
    • கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா அடிக்கல் நாட்டினார்

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் ரூ.76.85 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் முன்னிலையில் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். தா.பழூர் , இடங்கண்ணி ஊராட்சியில், இடங்கண்ணி-குறிச்சி சாலை வரை மாண்புமிகு முதல்வரின் கிராமசாலை மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.53.59 இலட்சம் மதிப்பீட்டில் தரம் உயர்த்தி வெட்மிஸ் தார் சாலையாக மாற்றும் பணி, அதனைத் தொடர்ந்து வாழைக்குறிச்சி ஊராட்சி, மதனத்தூர் மாரியம்மன் கோவில் தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.

    வாழைக்குறிச்சி ஊராட்சியில், ரூ.15.26 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் குடியிருப்பு மற்றும் அலுவலக கட்டடத்தினையும் திறந்து வைத்து, தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களையும் அவர் வழங்கினார். பின்னர் தா.பழூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ).முருகண்ணன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், தா.பழூர் ஒன்றியக் குழுத்தலைவர் மகாலெட்சுமி மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தலிங்கம், விஸ்வநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி :

    கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் நெய்யூர் பேரூராட்சி ஆக்கப்பத்துகுளம் முதல் பட்டணத்துக்குளம், ஆலங்கோடு மேல்நிலை நீர்தேக்க தொட்டி முதல் காட்டுக்குளம் சாலை, காட்டுக்குளம் முதல் அம்மாள்குளம் சாலை, பால்தெரு காட்டுக்குளம் சாலை முதல் பேரூராட்சி கிணறு வழியாக முரசங்கோடு செல்லும் சாலை, எரிவிளாகம் கிணறு முதல் கடம்பவிளை சாலை, திங்கள்நகர் - கருங்கல் மெயின் ரோடு முதல் வடக்கன்கரை சாலை வரை பேவர் பிளாக் சாலை அமைக்க ரூ.98 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    மேலும் நகர்ப்புற சாலைகள், குடிநீர் தொட்டி அமைக்க, சிமெண்ட தளம் அமைத்தல் என பல்வேறு பணிகளுக்கு என மொத்தம் ரூ.1 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது.

    நெய்யூர் பேரூராட்சி தலைவி பிரதீபா தலைமை தாங்கினார். குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மகேஷ், குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய செயலாளர் பி.எஸ்.பி. சந்திரா, பேரூராட்சி செயல் அலுவ லர் சகாயமேரி சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    பொதுக்குழு உறுப்பினர் ஜாண் லீபன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் அகஸ்தீசன், பேரூராட்சி துணை தலைவர் பென் டேவிட், கவுன்சிலர்கள் புஷ்பதிரேஷ், கவிதாராணி, சாராள்மேரி, ராஜகலா, எழில் டைசன், ததேயுராஜன், காங்கிரஸ் நிர்வாகிகள் லாரன்ஸ், சுமன், ராப்சன் மற்றும் விஜி, ஜெகன், பிரான்சிஸ், வழக்கறிஞர் அலெக்ஸ், தனு கென்னடி, ஜெரோம், சாம் ஜெபசிங், ரஞ்சித், தா.ஜெபராஜ், ஆசிரியர் பால், ஜெகதீஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • பிராக்கால் குளத்தில் புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.
    • சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளிட்ட பணிகளை ஊராட்சி தலைவர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குத்துக்கல்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.49 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் தலைமை தாங்கினார். தென்காசி ஊராட்சி ஒன்றியம் குத்துக்கல்வலசை ஊராட்சிக்கு உட்பட்ட அய்யாபுரத்தில் பிராக்கால் குளத்தில் 15-வது நிதி குழு மானிய திட்டம் மற்றும் ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.28 லட்சத்து 87 ஆயிரம் செலவில் புதிய குடிநீர் கிணறு அமைக்கும் பணியையும், கே.ஆர்.காலனி பகுதியில் ரூ.5 லட்சத்து 39 ஆயிரம் மதிப்பிலான வாறுகால், அய்யாபுரத்தில் ரூ.5 லட்சத்து 62 ஆயிரத்து 890 மதிப்பிலான வாறுகால், சுப்பிரமணியபுரத்தில் ரூ.4 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையம் புனரமைப்பு பணி, காமராஜர் நகர் மெயின் ரோட்டில் ரூ.4 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளி ட்ட பணிகளை ஊராட்சி மன்ற தலைவர் சத்யராஜ் தொடங்கி வைத்தார்.

    குத்துக்கல்வலசை ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சண்முகசுந்தரம் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் குத்துக்கல் வலசை ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் அம்புலி, கண்ணன், இசக்கி தேவி, கலைச்செல்வி, சங்கர ம்மாள், மைதீன் பாத்து, சந்திரா, சரவணன், மல்லிகா, கருப்பசாமி, சுப்பையா ஆகியோர் கலந்து கொண்டனர். குத்துக்கல் வலசை ஊராட்சி செயலர் வேம்பையா நன்றி கூறினார்.

    • கலெக்டர் வளர்மதி திடீர் ஆய்வு
    • ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெறுகிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் பேரூராட்சியில் அம்ருத் 2.0 திட்டத்தில் ரூ.80லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் குளம் வெட்டப்படும் பணி, 13-வது வார்டில் அமைந்துள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் குப்பைகளை உலர்த்திட உலர் களம் அமைக்கும் பணி, ரூ.7லட்சத்து 35ஆயிரம் மதிப்பில் தரம் பிரிக்கப்பட்ட பொருட்களை வைக்கும் குடோன் அமைக்கும் பணி, தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.69லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் அல்லிகுளம் சாலை அமைக்கும் பணி, நரசிங்கபுரம் பகுதியில் இராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.15 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை பணி என மொத்தம் ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பில் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை மாவட்ட கலெக்டர் வளர்மதி நேற்று பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    இதை தொடர்ந்து அம்மூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் ஆய்வு செய்து பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    அரிசி சரியில்லாததை பார்த்து இதனை மாற்றி பெற்றுக் கொள்ளவும் உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது பேரூராட்சிகள் உதவி இயக்குனர்(பொறுப்பு) அம்சா, செயல் அலுவலர் கோபிநாத், வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன் உள்ளிட்டோர் இருந்தனர்.

    • தலைமை தபால் அலுவலகம் முதல் நுழைவு வாயில் வரையிலான,50 மீட்டர் தூரத்துக்கு முதல் கட்டமாக பணி நடக்கிறது.
    • 2வது பிளாட்பார்ம் அருகே பயன்பாடு இல்லாமல் காலியாக உள்ள குடியிருப்பு விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் திருப்பூர் ெரயில்வே நிலையத்தில் மறுகட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு 22 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 6ந் தேதி, பிரதமர் மோடி பணிக்கு அடிக்கல் நாட்டினார். முதல் கட்ட பணிகள் தொடங்கி உள்ளது.

    ெரயில் டிக்கெட் முன்பதிவு மையம், ஏ.டி.எம்., அருகே துவங்கி ரெயில் நிலையம் முகப்பு பகுதி முழுவதும் அளவீடு செய்யப்பட்டு, குழி தோண்டப்பட்டது. பணி நடக்கும் இடத்துக்கு பயணிகள் வருவதை தவிர்க்க, பாதுகாப்பு கருதி முதல் பிளாட்பார்ம் நுழைவு வாயில் தகரம் வைத்து அடைக்கப்பட்டது.

    இதற்கு மாற்றாக அருகே வலதுபுறம் சுவர் இடிக்கப்பட்டு தற்காலிகமாக பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் வழியாக பயணிகள் உள்ளே, சென்று வர ெரயில்வே போலீசார் அறிவுறுத்தினர். தலைமை தபால் அலுவலகம் முதல் நுழைவு வாயில் வரையிலான,50 மீட்டர் தூரத்துக்கு முதல் கட்டமாக பணி நடக்கிறது.அதன்பின் பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒவ்வொரு பகுதியாக தேர்வு செய்து பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு கட்டுமான பணி துவங்க உள்ளது.

    ஒரே நேரத்தில் இரண்டு பிளாட்பார்ம்களிலும் பணிகள் நடந்தால் இடையூறு ஏற்படும் என்பதால் முதல் பிளாட்பார்மில் மட்டும் பணி துவங்கியுள்ளது.இரண்டாவது பிளாட்பார்மில் எந்த பணியும் தற்போதைக்கு துவங்கவில்லை. 2வது பிளாட்பார்ம் அருகே பயன்பாடு இல்லாமல் காலியாக உள்ள குடியிருப்பு விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணி துவங்க உள்ளதால் பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட உள்ளன.

    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார்
    • அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதன்படி ராணிப்பேட்டை நகராட்சி வாரச் சந்தை வளாகத்தில் தூய்மை இந்தியா திட்டம் நகரம் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.26 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வளமீட்பு மையம், திடக்கழிவு மேலாண்மை குப்பைகள் தரம் பிரிக்கும் மையத்தில் தனியார் வங்கியின் சமுதாய பங்களிப்பு திட்ட நிதி மூலம் ரூ.24 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் அரவை எந்திரம் ஒப்படைப்பு, 15-வது நிதிக் குழு மான்யம் திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை நகராட்சியில் குப்பைகளை எடுத்துச் செல்ல ரூ.6 லட்சம் மதிப்பிலான 3 பேட்டரி வாகனங்கள், ரூ.21லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான 3 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் ரூ.77லட்சத்து 90ஆயிரம் மதிப்பில் ெசய்யப்பட்டுள்ளது. இந்த திட்ட பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

    இந்த திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு வளமீட்பு மையத்தை திறந்து வைத்து, திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஜி.கே. உலகப்பள்ளி இயக்குநர் வினோத் காந்தி, நகரமன்றத் தலைவர் சுஜாதா, துணைத்தலைவர் ரமேஷ் கர்ணா, வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், நகராட்சி ஆணையர் விநாயகம், நகரமன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
    • ரூ.18.50 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்தது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. தினமும் சாலை பணி உள்ளி ட்ட மேம்பாட்டு பணிகளை மேயர் மகேஷ் தொடங்கி வைத்து வருகிறார்.

    இன்று 4-வது வார்டுக்குட்பட்ட ராஜலெட்சுமி நகர் தெருக்களில் ரூ.18.50 லட்சம் செலவில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி நடந்தது. இந்த பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.

    6-வது வார்டுக்குட்பட்ட ஒய்.டபிள்யூ.சி.ஏ. தெருவில் ரூ.2.80 லட்சம் செலவில் பேவர் பிளாக் மறுசீரமைக்கும் பணி மற்றும் 49-வது வார்டுக்குட்பட்ட சி.டி.எம்.புரம் குறுக்கு தெருக்களில் ரூ.1.67 கோடி மதிப்பில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றையும் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மாநகராட்சி பொறியாளர் பாலசுப்பிரம ணியம், உதவி பொறியாளர் ராஜா, தொழில்நுட்ப அலுவலர் தேவி, சுகாதார ஆய்வாளர்கள் மாதவன்பிள்ளை, சத்யராஜ், ராஜா, கவுன்சிலர் ஜெயவிக்ர மன், இளைஞரணி அமைப்பாளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்ட னர்.குமரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் நகர்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பள்ளி மேலாண்மை குழு பயிற்சி நடந்து வருகிறது.

    அகஸ்தீஸ்வரம் வட்டார வள மையம் சார்பில் நாகர்கோவில் சி.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப்ப ள்ளியில் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர்களு க்கான பயிற்சி இன்று நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் பிரபாகர் தலை மை தாங்கினார். உதவி திட்ட அலுவலர் துரைராஜ், ஒருங்கிணைந்த கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பயிற்சியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்து பேசியதாவது:- நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநி திகளுக்கு பள்ளி மேலாண்மை குழு பொறுப்புகள் என்ன? பள்ளி மேலாண்மை குழு மூலம் அரசு பள்ளி வளர்ச்சி மற்றும் செயல்படுத்துவது குறித்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அதனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் அரசின் கட்டுப்பா ட்டில் உள்ளது. அதனால் சில வளர்ச்சி பணிகள் மாநக ராட்சியால் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இணைக்கும் வகையில் அரசுக்கு எழுதப்பட்டுள்ளது. அதற்கு ஒப்புதல் கிடைக்கும் நிலையில் உள்ளது. ஒப்புதல் கிடைத்த பிறகு மாநகராட்சி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் என்னென்ன மேம்பாட்டு பணிகள் செய்ய வேண்டும் என கணக்கிட்டு மாநகராட்சி நிதியில் பணிகள் செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் ஆசி ரியர் பயிற்றுநர்கள் ஜெசிகா மேரி, முருகேசன், ரெஜி, ரவிக்குமார், ஜான்சன், பால்மணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • குமரி மாவட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு
    • குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். குமரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. கிராமப்புறங்களில் சாலை மேம்பாட்டு திட்ட பணிகள், குடிநீர் திட்ட பணிகள் குறித்த விவரங்களை அமைச்சர் மனோ தங்கராஜ் கேட்டறிந்தார்.

    மேலும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதிகள் முழுவதும் செயல்படுத்தப்பட்டுள்ளதா? என்பதையும் அவர் கேட்டார். நாகர்கோவில் மாநகரப் பகுதியில் செயல்படுத்தப் பட்டு வரும் புத்தன்அணை குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.

    இதை தொடர்ந்து அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் ரூ.பல லட்சம் செலவு செய்து பொதுமக்கள் வீடு கட்டியுள்ளனர். ஆனால் அதில் உள்ள கழிவுகளை ரோட்டில் விடுகிறார்கள். இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குப்பை இல்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அதற்கு அதிகாரிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    தமிழக முதல்-அமைச்சர், மாணவ-மாணவிகள் நலன் கருதி காலை உணவுத் திட்டத்தை அறிவித்துள்ளார். அந்தத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான் மாவட்டத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல முடியும். எனவே அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.

    ஆணையாளர் ஆனந்த மோகன், திட்ட அதிகாரி பாபு மற்றும் அரசின் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

    ×