search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தள்ளுமுள்ளு"

    • நேர்காணல் 10 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
    • நேர்காணலில்அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் குவிந்ததால், கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலம், அங்கலேஷ்வரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கான நேர்காணலுக்காக 500-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இந்த நேர்காணல் 10 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அங்கலேஷ்வர் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நேர்காணலில்அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் குவிந்ததால், கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    அங்கலேஷ்வரில் உள்ள ஒரு ஓட்டலில், ரசாயனத் துறையில் பணியிடங்களை நிரப்புவதை நோக்கமாகக் கொண்டு, நிறுவனம் வாக்-இன் நேர்காணலை ஏற்பாடு செய்தது.

    பி.இ உட்பட பல்வேறு தகுதிகள் கொண்ட விண்ணப்பதாரர்கள், கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் ஐடிஐ சான்றிதழ்களில், ஷிப்ட் இன்சார்ஜ், பிளாண்ட் ஆபரேட்டர், சூப்பர்வைசர், மெக்கானிக்கல் ஃபில்டர் மற்றும் எக்ஸிகியூட்டிவ் பதவிகள் போன்ற பதவிகளுக்கு கோரப்பட்டது.

    இந்த நெரிசலான கூட்டத்தின்போது, ஓட்டலின் வாயிலில் தடுப்புக்காக அமைக்கப்பட்டிருந்த பிடி கம்பி அழுத்தம் தாங்காமல் உடைய, அங்கிருந்த இளைஞர்கள் கீழே விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    சம்பவம் நடந்த போதிலும், நிறுவனத்தை அணுகுவதற்கான முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    மேலும், இந்த கூட்டம் வேலையில்லா திண்டாட்டத்தை காட்டுவதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

    • ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வக்கீல்கள் அறிவித்திருந்தனர்.
    • போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    நாகர்கோவில்:

    நாட்டில் அமலுக்கு வந்துள்ள மாற்றி அமைக்கப்பட்ட 3 குற்றவியல் வழக்குகளை வாபஸ் பெற கோரியும், மத்திய அரசை கண்டித்தும் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். குமரி மாவட்டத்திலும் நாகர்கோ வில், பூதப்பாண்டி, குழித்துறை, தக்கலை, இரணியல் கோர்ட்டுகளில் வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இன்று நாகர்கோவிலில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வக்கீல்கள் அறிவித்திருந்தனர். இதையடுத்து நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நாகர்கோவில் கோர்ட்டில் இன்று காலை வக்கீல்கள் திரண்டனர்.

    சங்கத் தலைவர் அசோக் குமார் மற்றும் மூத்த வக்கீல் பால ஜனாதிபதி, வெற்றி வேல், மரியஸ்டீபன், குழித்துறை வக்கீல்கள் சங்கத் தலைவர் சுரேஷ், பூதப்பாண்டி வக்கீல்கள் சங்க தலைவர் ரெஜினால்டு, இரணியல் வக்கீல்கள் சங்க தலைவர் பெஸ்லி பத்மநாபபுரம் வக்கீல்கள் சங்க தலைவர் பொன்ராஜ் உட்பட 300-க்கும் மேற்பட்ட வக்கீல்கள் ரெயில் நிலையம் நோக்கி புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

    ஆனால் கோர்ட்டில் இருந்து வக்கீல்கள், ஊர்வலமாக வேப்பமூடு வழியாக அண்ணா பஸ் நிலையம் வந்தனர். அவர்க ளை போலீசார் ரோட்டின் நடுவே பேரிகார்டுகள் வைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரின் தடுப்புகளை மீறி வக்கீல்கள் செல்ல முயன்றனர்.

    போலீசார் அவர்களை தடுத்ததால் நடுரோட்டில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள். அதை தொடர்ந்து மீண்டும் வக்கீல்கள் தடுப்புகளை மீறி ரெயில் நிலையம் நோக்கி செல்ல முயன்றனர். போலீ சார் அவர்களை தடுத்து நிறுத்திய போது போலீசாருக்கும் வக்கீல்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    ரோட்டில் வைக்கப்பட்டி ருந்த பேரிகார்டுகளை தூக்கி வீசிவிட்டு வக்கீல்கள் மீண்டும் அங்கிருந்து தடையை மீறி ஊர்வலமாக சென்றனர். கோட்டாறு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் முன்பகுதியில் மீண்டும் போலீசார் பேரிகார்டுகளை சாலையின் நடுவே வைத்து தடுத்து நிறுத்தினார்கள்.

    போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கு மேற்பட்ட வக்கீல்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தில் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் மட்டுமின்றி பூதப்பாண்டி, இரணியல், குழித்துறை, தக்கலை பகுதிகளை சேர்ந்த வக்கீல்கள்களும் கலந்து கொண்டனர். வக்கீல்கள் போராட்டம் காரணமாக நாகர்கோவில் மாநகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தவிப்பிற்கு ஆளானார்கள்.

    • ஏராளமானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு
    • போலீசார் பயனாளிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்

    வேலூர்:

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வேலூர் கோட்டத்தின் மூலம் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் மத்திய, மாநில மற்றும் பயனாளிகளின் பங்களிப்புடன் 160 அடுக்குமாடி குடியிருப்புகள் வேலூர் தொரப்பாடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

    இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த மாதம் 10-ந் தேதி முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

    இந்த திட்டத்தில் பயன்பெற 824 பயனாளிகள் கலெக்டரின் பரிந்துரையின் பேரில் ஒப்புதல் பெறப்பட்டது. பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைவருக்கும் குடியிருப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் என்றும், மேலும் பயனாளிகளின் பங்களிப்பு தொகை ரூ.2 லட்சத்து 39 ஆயிரம்- வரைவோலையாக கடந்த மாதம் 28-ந் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    அதன்பேரில் 367 பேர் மட்டுமே குறிப்பிட்ட தேதிக்குள் வரைவோலை செலுத்தினர்.

    இந்த நிலையில் தொரப்பாடியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பு குலுக்கள் முறையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி இன்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் நடந்தது.

    நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் லினோலியா, தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு நிர்வாக பொறியாளர் கீதா தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய நிர்வாக பொறியாளர் கணேசன் தாசில்தார் செந்தில் பயிற்சி ஏ எஸ் பி பிரசன்னா குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் குலுக்கல் நடைபெற்றது.

    குலுக்களில் கலந்து கொள்ள ஏராளமானோர் திரண்டு வந்ததால் அவர்களுடைய டோக்கன் பெறுவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர் போலீசார் வரவழைக்கப்பட்டு பயனாளிகளை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    • 22 சிறிய பாளையம் என திட்டம் போடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
    • காவல் துறை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொண்டது.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரை புதிய ரயில் பாதை போடும் பணி 2006 -ல் தொடங்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 116 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரயில் பாதை அமைப்பதற்கு ஒரு மேம்பாலம் இரண்டு பெரியபாலம், பத்து தரைப்பாலம், 22 சிறிய பாளையம் என திட்டம் போடப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் பாதை அமைப்பதற்கு நிதி ஒதுக்கி பல ஆண்டுகள் ஆன பிறகும் மிகவும் தாமத மாகவும், மந்தமாகவும் நடைபெ றுகிறது எனவும், ரயில் பாதை பணிகளை துரிதப்படுத்தி விரைவாக முடிக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சின்னசேலம் ரயில் நிலைய முன்பு மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போரா ட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க தடுப்பு கட்டை அமைத்து காவல் துறை முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை மேற்கொண்டது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் எம்எல்ஏ பாலபாரதி தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கட்சியினர் பங்கேற்று ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். அப்பொழுது போலீசார் அமைத்த தடுப்புகளை மீறி உள்ளே செல்ல முயன்ற போது கட்சியினருக்கும் போலீஸ்சாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்து றையை மீறி உள்ளே செல்ல முடியாததால் அதே இடத்தில் அமர்ந்து கோஷம் எழுப்பினார்கள். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர்கள் சேலம் ரயில்வே டிஎஸ்பி குணசேகரன், உதவி கோட்ட பொறியாளர் வின்சன், கள்ளக்குறிச்சி ஏடிஎஸ்பி விஜயகார்த்திராஜா, டி எஸ் பி ரமேஷ், சின்னசேலம் தாசில்தார் இந்திரா ,உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி னார்கள் அப்பொழுது வின்சென்ட் கூறுகையில் தற்போதுள்ள பொரு ளாதார சூழ்நிலையில் கூடுதல் நிதி தேவைப்படுவதாகவும், மத்திய அரசிடம் 356 கோடி நிதி பெற உள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டுக்குள் உறுதியாக சின்னசேலத்திற்கும் கள்ளக்குறிச்சிக்கும் இடையிலான ரயில் பாதை அமைக்கும் பணி முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனை அடுத்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ரெயில்நிலையத்தில் நுழைய முயன்ற போராட்டக்காரர்களுடன் போலீசார் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
    • அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நடைபெற்றது

    திருச்சி:

    முப்படைகளில் குறுகிய கா ஆட்சேர்ப்புக்கான அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 13-ந் தேதி அறிவித்தது. இத்திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது. பல மாநிலங்களில் ரெயில்கள், பஸ்கள் போராட்டக்காரர்கள் எரித்ததால் பீதி ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் லெனின் மற்றும் மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் திருச்சி ரெயில் நிலையம் முன்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென் போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்தில் நுழைய முற்பட்டனர்.

    அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த கண்டோன்மெண்ட் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி ரயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற சுமார் 20க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், இந்திய ராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும். இளைஞர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் திட்டமாகும். ஆகவே அக்னிபாத் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இந்த போராட்டத்தினால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திருச்சி ரயில் நிலையம் முன்பாக பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.அப்போது கண்டோன்மெண்ட் உதவி ஆணையர் அஜய் தங்கம் தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி ரயில் நிலையத்திற்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

    பின்னர் அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற சுமார் 20க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.

    இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக திருச்சி ரயில் நிலையம் முன்பாக பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    ×