search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அம்மா உணவகங்கள்"

    • தொடக்க காலத்தில் 3 லட்சம் பேர் வரை அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வந்தனர்.
    • பெரும்பாலான உணவகங்களில் மாவு அரைக்கும் எந்திரம் பழுதாகி வெளியில் பணம் கொடுத்து அரைக்கும் நிலை ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னையில் வேலைக்காக தங்கும் இளைஞர்கள் கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றவர்கள் குறைந்த செலவில் வயிறாற சாப்பிட வேண்டும் என்பதற்காக அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன.

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் 2013-ம் ஆண்டு சென்னையில் 200 வார்டுகளில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் 400 ஆக விரிவாக்கம் செய்யப்பட்டது.

    அரசு ஆஸ்பத்திரிகளிலும் தொடங்கியதால் வெளியூர்களில் இருந்து வரும் நோயாளிகளின் உறவினர்கள் பயன் அடைந்தனர். 3 வேளையும் மலிவு விலையில் உணவு கிடைத்ததால் இத்திட்டம் பிற மாநகரப் பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது.

    மழை வெள்ளப் பாதிப்பு, கொரோனா பேரிடர் காலத்தில் அம்மா உணவகம் சென்னைவாசிகளுக்கு பெரிதும் கை கொடுத்தது.

    தொடக்க காலத்தில் 3 லட்சம் பேர் வரை அம்மா உணவகங்களில் சாப்பிட்டு வந்தனர். ஆனால் படிப்படியாக இந்த எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

    சென்னை மாநகராட்சி மூலம் நடத்தப்பட்டு வரும் இந்த உணவகங்கள் தொடர் வருவாய் இழப்பால் ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை நஷ்டத்தை சந்தித்தது.

    இதனால் அம்மா உணவகங்களை பராமரிக்க ஆர்வம் காட்டவில்லை. 10 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்ட பாத்திரங்கள், எந்திரங்கள் பழுதானதால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கஷ்டப்பட்டனர்.

    பெரும்பாலான உணவகங்களில் மாவு அரைக்கும் எந்திரம் பழுதாகி வெளியில் பணம் கொடுத்து அரைக்கும் நிலை ஏற்பட்டது. சமையல் பாத்திரங்கள் ஓட்டை உடைசலாக மாறியது. அம்மா உணவகங்களை பராமரித்து சீரமைக்க முடியாத நிலையில் சாப்பிடக் கூடியவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்தது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு 75 ஆயிரம் பேர் மட்டுமே சாப்பிட்டனர்.

    இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்தார். உணவின் தரத்தை ஆய்வு செய்தபோது அவற்றின் நிலையை அறிந்து அம்மா உணவகங்களை சீரமைக்கவும், பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அம்மா உணவகங்களை சீரமைக்க ரூ.7 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சேதம் அடைந்த பாத்திரங்கள், எந்திரங்களை மாற்றி புதிதாக வாங்குவதற்கு முடிவு செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்குள் 388 அம்மா உணவகங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து தரத்தை உயர்த்த வேண்டும் என்ற உத்வேகத்தில் அதிகாரிகள் செயல்படுகிறார்கள்.

    அம்மா உணவகங்களில் சேதம் அடைந்த பாத்திரங்கள் கணக்கெடுக்கும் பணி முடிந்து விட்டது. எந்தெந்த பொருள் வாங்க வேண்டும் என்ற விவரங்களை மண்டல அலுவலர்களிடம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு அம்மா உணவகத்துக்கும் ரூ.2 லட்சம் வீதம் செலவிட தீர்மானிக்கப்பட்டு புதிய பாத்திரங்கள், மாவு அரைக்கும் எந்திரம், சப்பாத்தி எந்திரம், மிக்சி உள்ளிட்டவை வாங்க பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.

    இது தவிர பில்லிங் மெஷின் வாங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. டோக்கன் கொடுப்பதற்கு பதிலாக பில்லிங் எந்திரம் புதிதாக வாங்கி பயன்படுத்தப்பட உள்ளது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    முதலமைச்சரின் உத்தரவுப்படி அம்மா உணவகங்களை சீரமைக்க விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 388 உணவகங்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கப்பட உள்ளது. 10 வருடத்திற்கு முன்பு வாங்கப்பட்ட பொருட்கள் எல்லாம் பழுந்தடைந்து விட்டன. அவற்றிற்கு பதிலாக புதிய பாத்திரங்கள் விரைவில் வாங்கப்படுகிறது. தற்போது அம்மா உணவகங்களை சீரமைக்கும் பணி தொடங்கி உள்ளதால் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. தினமும் 75 ஆயிரம் பேர் உணவு சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது 1.5 லட்சமாக உயர்ந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் அம்மா உணவகத்தை அடித்து உடைத்தனர்.
    • ஒரே சாதனை கடன் சுமையை தமிழக மக்கள் தலையில் சுமத்தியது.

    மதுரை:

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    3 வேளையும், குறைந்த விலையில் ஏழை, எளியவர்கள், உழைக்கும் தொழிலாளர்கள் உள்ளிட்ட மக்கள் அனைவரும் வயி ராற சாப்பிட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், அம்மா 2013-ம் ஆண்டு அம்மா உணவங்களை தொடங்கி மலிவு விலையில் தரமான உணவு வழங்கினார்கள்.

    ஏழை, எளிய, நடுத்தர மக்கள், தொழிலாளர்கள் உள்ளிட்டோர் ஏகோபித்த ஆதரவு காரணமாக தமிழகம் முழுவதும் அம்மா உணவுகள் தொடங்கப்பட்டன.

    ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடியார் ஆட்சியிலும், அம்மா உணவங்கள் தரமான, சுவையான உணவு மக்களுக்கு அளித்து வரப்பட்டன. குறிப்பாக கொரோனா பெரும் தொற்று காலகட்டத்தில் அனைத்து தொழில்களும் முடங்கிய போது, தமிழக முழுவதும் அம்மா உணவுகளுக்கு வருகை தரும் அனைவருக்கும் விலையில்லாமல் 3 வேளையும் உணவுகள் வழங்கப்பட்டது. இதை மக்கள் இன்னும் மறக்க வில்லை.

    அம்மா என்ற சொல்லை கேட்டாலே காதில் ஈயம் காய்ச்சி ஊற்றுவது போல் பதறும் இந்த விடியா தி.மு.க. அரசின் ஆட்சியாளர்கள், அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே தமிழக முழுவதும் அம்மா உணவகங்களை அடித்து நெருக்கியும், பணிபுரியும் பெண்கள் எண்ணிக்கையை 3-ல் ஒரு பங்காகக் குறைத்தும் படிப்படியாக அம்மா உணவகங்களுக்கு மூடு விழா நடத்தினர்.

    அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் 90 சதவீதம் குறைக்கப்பட்டது, பழுதடைந்த உபகரணங்கள் சீர் செய்யப்படவில்லை, சென்னையில் சுகாதாரத் துறை மற்றும் நகராட்சிக்கு இடம் தேவை என்று பல அம்மா உணவகங்கள் மூடப்பட்டன.

    உண்மை நிலை இவ்வாறு இருக்க, எதிர்வரும் சட்டமன்ற பொது தேர்தலை கருத்திற்கொண்டு, நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க. அரசின் முதலமைச்சர் கடந்த 19-ந்தேதி அன்று தேனாம்பேட்டை பகுதியில் உள்ள அம்மா உணவகம் ஒன்றில் ஆய்வு மேற்கொண்டு, தனது எக்ஸ் வளைதளத்தில் அம்மா உணவகங்களை மூடி விடுவோம் என எதிர்க்கட்சிகள் புரளிகளைக் கிளப்பியதாக முதலை கண்ணீர் வடித்துள்ளார். அம்மா உணவகங்கள் மீது திடீரென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கறை காட்டுவது ஏன்?

    தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் அமைச்சர் சேகர்பாபு, சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது என்று, கடந்த 3 ஆண்டுகளாக மாற்றி மாற்றி ஒரே குரலில் பேசிய பொய்யை நம்பி, பருவ மழையின் போது பெய்த சிறு மழைக்கே சென்னையில் பல இடங்களில் தேங்கிய தண்ணீராலும், ஐந்து நாட்கள் மின்சாரம் இல்லாமலும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    பருவமழை காலங்களில் இப்படி பொய் கூறி சென்னை மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கியவர் தான் இந்த சேகர் பாபு.

    இந்த விடியா தி.மு.க. அரசு செய்த ஒரே சாதனை, ஆட்சிக்கு வந்த 3 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், சுமார் 3.50 லட்சம் கோடி அளவில் கடன் சுமையை தமிழக மக்கள் தலையில் சுமத்தியது தான்.

    இந்த 3.50 லட்சம் கோடி கடனில் எவ்வளவு மூலதனச் செலவு செய்திருக்கிறார்கள் என்று நிர்வாகத் திறனற்ற முதலமைச்சரும், சேகர்பாபுவும் தமிழக மக்களிடம் விளக்கத் தயாரா? தற்போது அமைச்சர் சேகர்பாபு தவறான தகவல்களை கூறி சூழ்நிலையை மடைமாற்ற பார்க்கிறார். இது தமிழக மக்களிடம் எடுபடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
    • அம்மா உணவகங்களில் புதிய பாத்திரங்கள் வாங்க ரூ.7 கோடி கட்டடத்தை புனரமைக்க ரூ. 14 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

    சென்னை:

    ஏழை மக்கள் பயன்பெறும் அம்மா உணவகத்தின் செயல்பாடு, உணவின் தரம் உள்ளிட்டவற்றை முதலமைச்சர் ஆய்வு செய்தார்.

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    அம்மா உணவகத்தில் உணவு அருந்தியவரிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார். ஊழியர்களிடம் உணவு தயாரிப்பு முறைகள், உணவின் தரம் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.

    இந்நிலையில் சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்துவதற்காக ரூ.21 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    தேனாம்பேட்டை அம்மா உணவகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்ட நிலையில் ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்து, அம்மா உணவகங்களை தொடர்ந்து சிறப்பாக நடத்த முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்.

    சென்னை மாநகராட்சியில் 200 கோட்டங்களிலும் உள்ள 388 அம்மா உணவகங்களையும் சிறப்பாக நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அம்மா உணவகங்களில் புதிய பாத்திரங்கள் வாங்க ரூ.7 கோடி, கட்டடத்தை புனரமைக்க ரூ. 14 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

    அம்மா உணவகங்களில் ஆய்வு செய்து தேவையான உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

    சமையலறை மற்றும் உணவு கூடத்தை தூய்மையாக பராமரிக்கவும், ஏழைகள் பயன்பெறும் வகையில் தரமான உணவு தயாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

    • அம்மா உணவகங்கள் செயல்படும் கட்டிடங்கள் பராமரிப்பின்றி உள்ளது.
    • சென்னையில் உள்ள 391 உணவகங்களிலும் அலங்கோலமான பழுதான சமையலறைப் பொருட்களை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு 11 ஆண்டுகள் ஆன நிலையில், அம்மா உணவகங்களை புதுப்பொலிவாக்கி, ருசியான புதிய உணவுகளை வழங்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

    அம்மா உணவகங்களில் ஒரு இட்லி ரூ.1, சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கலவை சாதம் போன்றவை ரூ.5, 2 சப்பாத்தி ரூ.3 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில்பெரும் வரவேற்பை பெற்றது.

    அம்மா உணவகங்கள் செயல்படும் கட்டிடங்கள் பராமரிப்பின்றி உள்ளது. பொதுமக்கள் உண்பதற்கான மேஜைகளின் கால்கள் உடைந்துள்ளன. இதனால் அங்கு உணவு அருந்த வருவோர் எண்ணிக்கை குறைந்துவிட்டது.

    இந்நிலையில் சுமார் ரூ.5 கோடி செலவில் கட்டமைப்பை மேம்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சென்னையில் உள்ள 391 உணவகங்களிலும் அலங்கோலமான பழுதான சமையலறைப் பொருட்களை மாற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அம்மா உணவகத்தில் பெயிண்டிங் உள்ளிட்டவற்றையும் மாற்றி சீரமைப்பு பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளது.

    அம்மா உணவகத்தால் 20 கோடி ரூபாய் வருமானம், ஆனால் குறைந்த விலையில் உணவு வழங்குவதால் ரூ.140 கோடி செலவாகிறது. ஆண்டுதோறும் ரூ.120 கோடி நஷ்டத்தில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது.

    சமையலறையில் உள்ள ஃபிரிட்ஜ், கிரைண்டர், மிக்சி உள்ளிட்ட பழுதடைந்த இயந்திரங்கள், சமையல் பாத்திரங்களை மாற்ற மண்டல அதிகாரிகளுக்கு மாநகராட்சி சுற்றறிக்கை விடுத்துள்ளது.

    பயனாளிகளின் வருகையை அதிகரிக்க, ருசியான புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனை நடைபெற உள்ளது.

    • சிவகாசி அம்மா உணவகங்களில் பொதுமக்கள் வருகை குறைந்தது.
    • தரமான உணவு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அண்ணா காய்கறி மார்க்கெட் அருகில் அம்மா உணவகம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.

    பள்ளிக்கூடம், பத்திரப்பதிவு அலுவலகம், காய்கறி மார்க்கெட், வணிக வளாகங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் அம்மா உணவகத்துக்கு காலை, மதியம் என 2 வேளையும் மக்கள் அதிகஅளவில் வந்து சாப்பிட்டு செல்வார்கள். சிலர் அவைகளை வாங்கி சென்று இரவு உணவாகவும் பயன்படுத்துவார்கள்.

    ஏழை, நடுத்தர மக்கள் மட்டுமின்றி, வசதியானவர்களும் அம்மா உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக சாப்பாட்டிற்கு தரம் குறைவான அரிசியை பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அம்மா உணவகத்துக்கு சாப்பிட வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.

    இந்தமாற்றத்தை பார்த்தும் வேறு வழியின்றி உணவுகளை வாங்கிச் சாப்பிடுபவர்கள் அதனை முழுவதுமாக சாப்பிட முடியாமல் குப்பைத்தொட்டியில் வீசி செல்கின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் செய்தும் தரமான உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் சிவகாசியை மாநகராட்சியாக மாற்றிய பிறகு பல்வேறு நவீன வசதிகள் செய்து வரும் அதிகாரிகள் அம்மா உணவகத்தில் உணவினை தரமாக வழங்குவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சியில் உள்ள அம்மா உணவகங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்ைக விடுத்துள்ளனர்
    • முன்பெல்லாம் ஒவ்வொரு அம்மா உணவகங்களிலும் நாள் ஒன்றுக்கு சுமார் 300 முதல் 400 ேபர் வரையில் சாப்பிடுவதற்கு வருவார்கள். தற்போது சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கை அப்படியே பாதியாக குறைந்துள்ளது

    திருச்சி:

    திருச்சி மாநகரில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக அரசு வழிகாட்டுதலின் பேரில் மாநகராட்சி சார்பில் சாலையோரம் சுற்றித்திரியும் மக்கள் மற்றும் உணவில்லாமல் அல்லல்படும் ஏழை, எளிய மக்களுக்கு உணவளிக்கும் வகையில் சுமார் 11 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது.

    இந்த அம்மா உணவகங்கள் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக கொரோனா ஊரடங்கு காலத்தில் யாரும் வெளியில் வர அனுமதி இல்லாமல் இருந்த போதிலும் ஏைழ, எளிய மக்களின் பசியை போக்கும் இடமாக அம்மா உணவகங்கள் செயல்பட்டது.

    இங்கு குறைந்த விலையில் வயிராற சாப்பிடும் வகையில் உணவு வகைகள் தயார் செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் தற்போது நிதி பற்றாக்குறை காரணமாக அம்மா உணவகங்கள் சரியாக செயல்படாமலும், பராமரிப்பு இல்லாமலும் இருப்பதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து திருச்சி மாநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், தொடர்ந்து மாநகராட்சி கட்டுப்பாட்டில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது. பல ஏழைகளின் பசியையும் போக்கி வந்தது.

    இங்கு ரூ.10 இருந்தால் போதும் இட்லி மற்றும் தக்காளி சாதம் சாம்பார் சாதம், தயிர்சாதம் உள்ளிட்ட வகைகளில் சாப்பிடலாம்.

    சாப்பிட்டு விட்டு பொது மக்களே தான் சாப்பிட்ட தட்டுகளையும் கழுவி வைக்கும் பழக்கம் பயன்பாட்டில் இருந்தது. மேலும் ஒவ்வொருவரும் தனித்தனியாக நின்று கொண்டு சுகாதாரமான முறையில் சாப்பிடுவதற்கு ஏற்றவாறு அம்மா உணவகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    காலை நேரத்தில் இட்லி, மதியம் 12 மணி அளவில் சாப்பாடு என்ற வகையில் செயல்பட்டு வந்தது. ஆனால் தற்போது இந்த நிலை மாறி உள்ளது. அதாவது முன்பெல்லாம் ஒவ்வொரு அம்மா உணவகங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 300 முதல் 400 ேபர் வரையில் சாப்பிடுவதற்கு வருவார்கள். தற்போது சாப்பிட வருபவர்களின் எண்ணிக்கை அப்படியே பாதியாக குறைந்துள்ளது என்று கூறினார்.

    திருச்சியை சேர்ந்த கட்டிட தொழிலாளி ஓருவர் கூறும்போது, நான் கடந்த 2 ஆண்டுகளாக தினமும் கட்டிட ேவலைக்கு செல்வதற்கு முன்னதாக திருச்சி தென்னூர் உழவர் சந்தை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் உணவு சாப்பிட்டு வருகிறேன்.

    சிறந்த தரத்தில் உணவுகள் இருக்கும். ரூ.5 இருந்தால் போதும் காலையில் என்னுடைய சிற்றுண்டியை அம்மா உணவகத்தில் முடித்து விடுவேன்.

    ஆனால் தற்போது சில மாதங்களாக அம்மா உணவகங்களை சரியாக சுத்தம் செய்யாமல் பராமரிப்பு இல்லாமல் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. சாப்பிட்டு விட்டு சென்ற டேபிள்களை கூட சுத்தம் செய்யாமல் இருக்கும் நிலையும் நீடித்து வருகிறது.

    மாநகராட்சி இதை கருத்தில் கொண்டு இந்த பிரச்சினைகளை சரி செய்தால் வருங்காலத்தில் தொடர்ந்து அம்மா உணவகங்கள் ஆதரவற்றவர்களின் பசிைய போக்கும் வகையில் செயல்படும் என்று அவர் தெரிவித்தார்.

    ×