search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக யோகா தினம்"

    • சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.
    • விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

    உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) ஈஷா சார்பில் கோவையில் பல்வேறு இடங்களில் இலவச யோக வகுப்புகள் நடைப்பெற்றது. ஆதியோகி முன்பு நடைப்பெற்ற யோக தின நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

    மேலும் ஈஷாவின் சார்பில் டி.என்.ஏ.யு. வில் நடைபெற்ற விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.

    நம் பாரத தேசத்தின் பெருமையான அம்சங்களில் ஒன்றாக விளங்கும் யோக அறிவியலை சாதி, மத, இன பேதம் இன்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் தளராமல் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக ஈஷா யோகா மையம் ஈடுபட்டு வருகிறது.

    அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக யோக தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதிலும் பல்வேறு பகுதிகளில் இலவச யோக வகுப்புகளை மிகப்பெரிய அளவில் ஈஷா யோகா மையம் நடத்தி வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டு உலக யோகா தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இலவச யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் நடத்தியது.

    ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி முன்பு நடைபெற்ற விழாவில் நூற்றுக்கணக்கான சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கு யோகா பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

    அதேபோல் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அவருடன் வேளாண் பல்கலைகழக மாணவர்கள், ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்.

    மேலும் ஆதியோகி முன்பு நடைப்பெற்ற நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்களும் கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை கற்றுக் கொண்டனர்.

    அதே போன்று கோவையில், மத்திய சிறைச்சாலை, ரெயில் நிலையம், விமானப்படை மேலாண்மை பயிற்சிக் கல்லூரி, ஐ.என்.எஸ். அக்ரானி, சூலூர் விமானப்படைத் தளம், சி.ஆர்.பி.எப். மத்திய பயிற்சிக் கல்லூரி, இன்போசிஸ் அலுவலகம், பல்வேறு கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் இலவச யோகா வகுப்புகள் நடைபெற்றன.

    இந்த இலவச யோகா வகுப்புகளில் எளிமையான அதே நேரத்தில் மிகவும் சக்தி வாய்ந்த உப-யோகா பயிற்சிகளான யோக நமஸ்காரம், நாடி சுத்தி, சாம்பவி முத்ரா போன்ற பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்பட்டது.

    • 30, 50, சுற்று பிரிவில் கலந்து கொள்பவர்களுக்கு காலை உணவும் , 108, 200 சுற்று பிரிவில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படும்.
    • போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு டீ சர்ட், தண்ணீர் பாட்டில் வழங்கப்படும்.

    சென்னை :

    உலக யோகா தினம் ஜூன் 21-ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு வரும் 16-ம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நேரு உள்விளையாட்டு அரங்கில் யோகாத்தான் தொடர் சூரிய நமஸ்காரம் என்ற நிகழ்ச்சியை சேரா யோகமந்திரம் என்ற அமைப்பினர் நடத்த உள்ளனர்.

    2019-ம் ஆண்டும் இந்த அமைப்பினர் இதே போன்ற நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 8 வயது முதல் 50 வயது மேற்பட்டவர்கள் சூரிய நமஸ்காரம் செய்ய பயிற்சி பெற்றவர்கள் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.

    சூரிய நமஸ்காரத்தின் 12 ஆசனங்கள் 30, 50, 108, 200 சுற்றுகள் என்ற பிரிவுகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கான பெயரை பதிவு செய்யும் நடைமுறை தற்போது நடந்து வருகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தொலைபேசி வாயிலாகவோ, நேரடியாகவோ வந்து போட்டிக்கான கட்டணத்தை செலுத்தி பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். உங்கள் பெயரை பதிவு செய்ய ஜூன் 12-ம் தேதி கடைசி நாளாகும்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் +919840112000, 9841525694 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்து கொள்ளலாம். வாட்ஸ்அப் மூலமும் பெயரை பதிவு செய்யலாம்..

    30,50,108 சுற்று சூரிய நமஸ்காரத்திற்கு ரூ.999-ம், 200 சுற்று சூரிய நமஸ்காரத்திற்கு ரூ.1500-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் 30,50,108 சுற்று சூரிய நமஸ்காரத்திற்கு சான்றிதழ் மற்றும் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. 200 சுற்று சூரிய நமஸ்காரத்திற்கு சான்றிதழ், தங்கப்பதக்கம் மற்றும் டிராஃபியும்(கோப்பை) வழங்கப்படுகிறது.

    ஜூன் 16-ம்தேதி தொடங்கும் இந்த நிகழ்ச்சியில் முதல் போட்டிக்கான 30 சுற்று சூரிய நமஸ்காரம் காலை 8.30 மணிக்கும், 50 சுற்றுகள் 9.10 மணிக்கும், 108, 200 சுற்றுகள் 10.10 மணிக்கும் தொடங்குகிறது.

    இந்த போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு டீ சர்ட், தண்ணீர் பாட்டில் வழங்கப்படும்.

    30, 50, சுற்று பிரிவில் கலந்து கொள்பவர்களுக்கு காலை உணவும் , 108, 200 சுற்று பிரிவில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்படும்.

    மேலும் www.serayogatherapy.com என்ற இணையதளத்தின் மூலமாகவும் உங்கள் பெயரை முன்பதிவு செய்யலாம்.

    • மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
    • சிறு கடம்பூர் வி.பி.என்.நகரில் புதியதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்:

    உலக யோகா தினம் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. செஞ்சி பேரூராட்சியில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் தலைமை தாங்கி துப்புரவு பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். செஞ்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் அஜித்தா ரமேஷ் யோகா குறித்து விளக்கம் அளித்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சிறு கடம்பூர் வி.பி.என்.நகரில் புதியதாக பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.

    • நீதிபதிகள் பங்கேற்பு
    • தியான பயிற்சியில் ஈடுபட்டனர்

    ராணிப்பேட்டை:

    உலக யோகா தினத்தை முன்னிட்டு ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை பார் அசோசியேசன் தலைவர் நித்யானந்தம் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், சார்பு நீதிமன்ற நீதிபதி ஜெயசூர்யா, மாஜிஸ்திரேட் நவீன் துரை பாபு ஆகியோர் கலந்து கொண்டு தியானம் மற்றும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

    யோகா மாஸ்டர் வஜ்ஜிரவேல், பயிற்சியாளர் சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டு யோகா மற்றும் தியானம் பயிற்சி அளித்தனர்.

    இதில் கூடுதல் அரசு வழக்கறிஞர் சங்கர் உள்பட வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பார் அசோசியேசன் செயலாளர் ஜான் சாலமன்ராஜா நன்றி கூறினார்.

    இதே போல் ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை மாணவர்கள் நடத்திய யோகா தின நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் அருண்குமார் தலைமை தாங்கினார். தேசிய மாணவர் படை அலுவலர் கபில்தேவ், உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் யோகா மாஸ்டர் அசோக்குமார் மாணவர்களுக்கு சூரிய நமஸ்காரம், பத்மாசனம், தனுராசனம், வஜ்ஜிராசனம் உள்ளிட்ட யோகா பயிற்சிகளை செய்து காண்பித்து பயிற்சி அளித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் உலக யோகா தின விழா நடைபெற்றது.
    • வடலூரில் அமைந்துள்ள சத்ய ஞான சபைக்கு செல்லும் கவர்னர், வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசுகிறார்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உலக யோகா தின விழா இன்று நடைபெற்றது.

    இதனை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். இதற்காக சென்னையில் இருந்து கார் மூலம் புதுவை வழியாக நேற்று இரவு 7.45 மணிக்கு சிதம்பரம் வந்தார்.

    அவரை கலெக்டர் அருண் தம்புராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், பல்கலைக்கழக துணைவேந்தர் ராம. கதிரேசன் பதிவாளர் சிங்காரவேலு ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    நேற்று இரவு அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் கவர்னர் தங்கினார். இன்று (புதன்கிழமை) காலை அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் உலக யோகா தின விழா நடைபெற்றது.

    இதில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்துகொண்டு யோகா செய்து தொடங்கி வைத்தார். கவர்னர் மனைவி லட்சுமி ரவியும் பங்கேற்று யோகா செய்தார். மேலும் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர், பேராசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு யோகாசனம் செய்தனர்.

    பின்னர் அண்ணாமலை பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் கவர்னர் ஓய்வு எடுத்தார்.

    இன்று மதியம் 3.30 மணியளவில் அங்கிருந்து காரில் புறப்பட்டு வள்ளலார் பிறந்த மருதூர் கிராமத்துக்கு செல்கிறார். அதனை தொடர்ந்து வள்ளலார் வாழ்ந்த கருங்குழி கிராமத்துக்கு சென்று அவரது இல்லத்தை பார்வையிடுகிறார்.

    அதன் பின்னர் வடலூரில் அமைந்துள்ள சத்ய ஞான சபைக்கு செல்லும் கவர்னர் அங்கு நடைபெறும் வள்ளலாரின் 200-வது ஆண்டு விழாவில் பங்கேற்று பேசுகிறார்.

    அதன் பின்னர் காரில் புறப்பட்டு கடலூர், புதுவை வழியாக சென்னை செல்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாணவர்கள் கட்டாயம் யோகா செய்ய வேண்டும்.
    • இந்திய யோகா கலையை உலக கலையாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார்.

    புதுச்சேரி:

    மத்திய கப்பல் துறையின் கீழ் இயங்கும் லைட்ஹவுஸ் இயக்குனரகம் சார்பில் புதுவை வம்பாகீரப்பாளையத்தில் உள்ள கலங்கரை விளக்கத்தில் உலக யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது.

    இதில் மாணவர்கள், மீனவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கவர்னர் தமிழிசை உலக யோகா தினத்தை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி, சென்னை லைட்ஹவுஸ் இயக்குனரகத்தின் இயக்குனர் ஜெனரல் வெங்கட்ராமன், யோகா பயிற்சியாளர் ருத்ரகணபதி உட்பட பலர் கலந்து கொண்டனர். லைட்ஹவுஸ் இயக்குனரக அதிகாரி கார்த்திக் நன்றி கூறினார்.

    விழாவில் கவர்னர் தமிழிசை பேசியதாவது:-

    லைட்ஹவுஸ் என்பது கடலில் தத்தளிப்போர், கப்பல்களுக்கு வழிகாட்ட உதவுவது.

    அதேபோல தத்தளிக்கும் நம் உடல் ஆரோக்கியமாக வாழ லைட்ஹவுஸ்போல வழிகாட்டுவது யோகா நிகழ்ச்சி. வீட்டில் நாம் இருக்கும் இடத்தில் சிறிய யோக கலையை கற்றுக்கொள்ளலாம்.

    உடல் நலம், மன நலத்துக்கும் யோகாவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பல நோய்களை தீவிரப்படுத்தாமல் யோகா பதப்படுத்தும். பல பண்டிகைகளை கொண்டாடுவதுபோல உடல்நல, மனநல விழாவாக யோகா திருவிழாவும் கொண்டாடும் வாய்ப்பு உள்ளது.

    மருத்துவ ரீதியில் குழந்தைகளுக்கு 5 வயதில் இருந்து யோகா கற்றுத்தரலாம். குழந்தைகளின் வளர்ப்பில் திட்டமிடும் பெற்றோர் 5 வயதில் யோகாவையும் கற்றுத்தர வேண்டும் என்ற சபதத்தை ஏற்க வேண்டும். எந்த வயதுக்காரர்களாக இருந்தாலும் யோகா கற்றுக்கொள்ளலாம்.

    2 மாநில கவர்னராக இருந்தாலும் எனக்கு யோகா செய்ய ஒரு மணி நேரம் கிடைக்கிறது.

    எனவே மாணவர்களும் நேரம் ஒதுக்கி யோகா செய்ய வேண்டும். எவ்வளவு சவால்களாக இருந்தாலும் யோகா நம் மனதையும், உடலையும் பலப்படுத்தி காப்பாற்றும். ஜூன் 21-ந் தேதி தான் ஒரு ஆண்டில் அதிக அளவு பகலை கொண்டுள்ள நாள். அதனால்தான் யோகா தினம் அன்று கொண்டாடப்படுகிறது. யோக கலையோடு இறை உணர்வும் கலந்துள்ளது.

    மாணவர்கள் கட்டாயம் யோகா செய்ய வேண்டும். யோகாவில் ஈடுபட்டால் மனதை ஒருநிலைப்படுத்தி மனப்பாடம் செய்து படிக்க முடியும். பாடங்களில் தேர்ச்சி பெற முடியும். யோகா வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய அனைத்து சந்தர்ப்பங்களையும் வழங்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய யோகா கலையை உலக கலையாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார். இந்தியா கூறுவதை உலக நாடுகள் கேட்டு வருகிறது. பிரதமர் யோகா கலையை ஆரம்பித்து வைக்க வெளிநாடு சென்றுள்ளது பெருமை தரக்கூடியது. பல இஸ்லாமிய நாடுகள் யோகா தினத்தை கடை பிடிக்கின்றனர்.

    குடும்ப தலைவிகள் யோகா நமக்கானது அல்ல என நினைக்கின்றனர். சமையல் கூடத்தில்கூட யோகா செய்யலாம். அவர்கள் நன்றாக இருந்தால்தான் குடும்பம் நன்றாக இருக்கும். குழந்தை வளர்ப்பிலும் யோகாவை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    பள்ளிகளில் யோகா செய்ய வேண்டும் என சட்டமாக்காவிட்டாலும், அறிவுறுத்தப்பட்டுள்ளனர். யோகா, தற்காப்புக்கலைக்கு முக்கியத்துவம் அளிக்க கல்வித்துறையிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போதைய காலத்துக்கு ஏற்ப கலைகள் மாணவர்களுக்கு கற்றுத்தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவெண்ணைநல்லூர் போன் நேரு பள்ளியில் உலக யோகா தினம் நடைபெற்றது.
    • யோகா பயிற்சியாளர் ஆதிநாராயணன் மாணவ-மாணவிகளிடம் யோகா பயிற்சி செய்து காண்பித்தார்.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் போன்நேரு மேல்நிலைப் பள்ளி மற்றும் விழுப்புரம் கோ சேவா சார்பில் பள்ளிவளாகத்தில் உலக யோகா தினம் நடைபெற்றது .பள்ளி தாளாளர் வாசுதேவன் தலைமை தாங்கினார். விழுப்புரம் மகாலட்சுமி குரூப்ஸ் தொழிலதிபர் தருண், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு யோகாவின் அவசியம் முக்கியத்துவம் பற்றி விளக்கமாக கூறினார். யோகா பயிற்சியாளர் ஆதிநாராயணன் மாணவ-மாணவிகளிடம் யோகா பயிற்சி செய்து காண்பித்தார். இதில் பள்ளி முதல்வர் விஜயலட்சுமி வாசுதேவன் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

    • விழுப்புரத்தில் வின்னர் போலீஸ் அகாடமி சார்பில் உலக யோகா தினம் நடைெபற்றது,
    • பொதுமக்களுக்கு யோகா பயிற்சியின் நன்மைகளும் பயிற்சி முறைகள் கையேடுகளும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டன,

    விழுப்புரம்:

    உலக யோகா தினத்தையொட்டி விழுப்புரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆவின் எதிரே உள்ள வின்னர் போலீஸ் போலீஸ் அகடமிக்-விழுப்புரம் சாலாமேடு மனவளக்கலைசார்பில் வின்னர் போலீஸ் அகடமிக் நிறுவனத் தலைவரும் முதல்வரும் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியுமான ராமராஜன் தலைமையில் உலக யோகா தினம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நிகழ்ச்சியில்சாலாமேடு மனவளக்கலை நிர்வாகிகள், உறுப்பினர்கள்,வின்னர் போலீஸ் அகாடமியில் சப் இன்ஸ்பெக்டர் மற்றும்போலீஸ் தேர்விற்கு பயிற்சி பெறும் மாணவ மாணவிகளும் பங்கேற்றனர்.இதைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு யோகா பயிற்சியின் நன்மைகளும் பயிற்சி முறைகள் கையேடுகளும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டன மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் இயற்கை உணவுகளும் இயற்கை பானங்களும் வழங்கப்பட்டன.

    • இந்திய வரைபடத்தின் நடுவில் படுத்து தனது கை, கால், தலையில் அகல்விளக்கில் தீபம் ஏற்றி யோகாசனம் செய்தார்.
    • கொரோனா மீண்டும் வராமல் தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை முகம்மது ஹபீபு வழியுறுத்தினார்.

    கடையநல்லூர்

    கடையநல்லூரில் உலக யோகாசன தினத்தை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், உலக அமைதிக்காகவும் கொரோனா மீண்டும் வராமல் தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தியும் இந்திய வரைபடத்தின் நடுவில் தீபம் மூலம் யோகாசனம் நடந்தது.

    உலகம் முழுவதும் இன்று உலக யோகாசன தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கடையநல்லூரில் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளரும், ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் முன்னாள் தலைவருமான முதியவர் முகம்மது ஹபீபு நேற்று இந்திய வரைபடத்தின் நடுவில் படுத்து தனது கை, கால், தலையில் அகல்விளக்கில் தீபம் ஏற்றி கொரோனா மீண்டும் வராமல் தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தியும், உலக நன்மைக்காக சிறப்பு யோகாசனங்களை செய்து காண்பித்தார்.

    ×