என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திரவுபதி முர்மு"
- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
- தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) சுவாச பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை மோசமானதால், செயற்கை சுவாசத்தின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சீதாராம் யெச்சூரி உயிரிழந்தார். சீதாராம் யெச்சூரி மறைவுக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Saddened to learn about the demise of CPI (M) general secretary Shri Sitaram Yechury. First as a student leader and then in national politics and as a parliamentarian, he had a distinct and influential voice. Though a committed ideologue, he won friends cutting across the party…
— President of India (@rashtrapatibhvn) September 12, 2024
இது குறித்த பதிவில், "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவு குறித்து அறிந்து வருத்தம் அடைந்தேன். முதலில் மாணவர் தலைவராகவும், பின்னர் தேசிய அரசியலிலும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் தனித்துவம் வாய்ந்த, செல்வாக்கு மிக்க குரலாக இருந்தவர். உறுதியான சித்தாந்தவாதியாக இருந்தாலும், கட்சி எல்லைகளைக் கடந்து நண்பர்களை வென்றார். அவரது குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்," என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.
Saddened by the passing away of Shri Sitaram Yechury Ji. He was a leading light of the Left and was known for his ability to connect across the political spectrum. He also made a mark as an effective Parliamentarian. My thoughts are with his family and admirers in this sad hour.… pic.twitter.com/Cp8NYNlwSB
— Narendra Modi (@narendramodi) September 12, 2024
"சீதாராம் யெச்சூரியின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் இடதுசாரிகளின் முன்னணி வெளிச்சமாக இருந்தார். அரசியல் ஸ்பெக்ட்ரம் முழுவதையும் இணைக்கும் திறனுக்காக அறியப்பட்டார். திறமையான நாடாளுமன்ற உறுப்பினராகவும் முத்திரை பதித்தார். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும், பின்தொடர்வோருடனும் உள்ளன, ஓம் சாந்தி," என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
- பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வருகிறது.
- பாரா ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 25 பதக்கங்களை வென்றுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. பாரா ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி துவங்கிய நிலையில், செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
ஆண்கள் பாரா ஜூடோ விளையாட்டின் 60 கிலோ எடை பிரிவில் பிரேசில் நாட்டின் எலிடன் டி ஒலிவெய்ராவை எதிர்த்து விளையாடிய கபில் பர்மார் வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை பெற்றார். இதன் மூலம் இதில் 5 தங்கம், 9 வெள்ளி மற்றும் 11 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.
ஜூடோவில் இந்திய வீரர் கபில் பர்மார் வெண்கலம் வென்றதை அடுத்து பிரதமர் மோடி மற்றும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது குறித்த பதிவில், "பாரிஸ் 2024 பாராலிம்பிக்ஸில் பாரா ஜூடோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற கபில் பர்மருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பல தடைகளைத் தாண்டி, பாராலிம்பிக்ஸில் ஜூடோ போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார். எதிர்காலத்தில் அவர் இன்னும் பெரிய சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்," என திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார்.
"மிகவும் மறக்கமுடியாத விளையாட்டு திறன் மற்றும் ஒரு சிறப்பான பதக்கம்!
பாராலிம்பிக்ஸில் ஜூடோவில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் கபில் பார்மருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். பாராலிம்பிக்ஸ்2024ல் ஆடவருக்கான 60கிலோ J1 போட்டியில் வெண்கலம் வென்றதற்காக அவருக்கு வாழ்த்துகள்! அவருடைய முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்," என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.
- பாஜக-வின் இந்த செயல் பின்வாசம் தந்திரம் என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.
டெல்லி அரசின் மதுபான கொள்கையை வகுத்ததிலும், அதை நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்து சிறையில் அடைத்தது. இதை அடுத்து அவருக்கு பலமுறை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
இடையில் பாராளுமன்ற தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. மே மாதம் 10-ந்தேதி சிறையிலிருந்து வெளியே வந்த கெஜ்ரிவால், ஜூன் மாதம் 2-ந்தேதி மாலை திகார் சிறையில் சரணடைந்தார். முன்னதாக தனது இடைக்கால ஜாமினை நீட்டிக்க வேண்டும் என்றும் அவர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார். ஆனால், நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது.
அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு ஊழலில் சிக்கியிருப்பதாகவும், நிர்வாக சீர்கேடுகள் அதிகரித்துள்ள என்றும், இதன் மூலம் டெல்லியில் அரசியலமைப்பு நெருக்கடி ஏற்பட்டு இருப்பதாக டெல்லி பா.ஜ.க. குற்றம்சாட்டியது.
இந்நிலையில் கெஜ்ரிவால் சிறையில் இருக்கும் நிலையில், "அரசியலமைப்பு நெருக்கடி" தொடர்பாக ஆம் ஆத்மி அரசை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லி பாஜக எம்எல்ஏக்கள் குழு நேற்று மாலை ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து மனு அளித்துள்ளனர்.
இதற்கிடையே பாஜக-வின் இந்த செயல் பின்வாசம் தந்திரம் என ஆம் ஆத்மி விமர்சித்துள்ளது.
- நீதி கேட்டு மக்கள் போராடும் நிலையில், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்.
- தனது மகள், சகோதரிகளுக்கு எதிராக இந்த நிலை ஏற்பட எந்த நாகரீக சமூகமும் அனுமதிக்காது.
புதுடெல்லி:
மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் ஒரு முதுநிலை பயிற்சி பெண் டாக்டர் கடந்த 9-ந்தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார்.
இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய இக்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. பயிற்சி டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் நடந்த நிதி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த அமலாக்கத்துறையும் பரிசீலித்து வருகிறது.
இந்த விவகாரத்தில், டாக்டர்களுக்கு பாதுகாப்பு கோரி, சம்பவ நாளில் இருந்து கொல்கத்தா நகரில் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சூழலில், மேற்கு வங்காளத்தில் 12 மணிநேர பந்திற்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்து உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது:
கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது. நீதி கேட்டு மக்கள் போராடும் நிலையில், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். பெண்களுக்கு எதிராக இதுவரை நடந்த குற்றங்களே போதும். தனது மகள், சகோதரிகளுக்கு எதிராக இந்த நிலை ஏற்பட எந்த நாகரீக சமூகமும் அனுமதிக்காது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, சமூகம் நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் சுயபரிசோதனை செய்வது அவசியம். பயத்தில் இருந்து பெண்கள் விடுதலை பெறுவதற்கான பாதையில் உள்ள தடைகளை நீக்குவதற்கு நாம் கடமைப்பட்டு உள்ளோம்.
நிர்பயா சம்பவத்திற்கு பிறகு ஏராளமான பாலியல் வன்கொடுமை சம்பவங்களை இந்த சமூகம் மறந்துவிட்டது. உண்மையை ஏற்றுக்கொள்ள மறந்து, கூட்டு மறதியை கையாளுகிறது. இந்த சமூகம் தன்னை நோக்கி சில கடுமையான கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும் . தேசம் விழித்துக் கொண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முடிவு கட்ட வேண்டும்.
இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ரக்ஷா பந்தன் சகோதரிகள் மற்றும் மகள்கள் மீது பாசத்தையும் மரியாதையையும் ஏற்படுத்துகிறது.
- ரக்ஷா பந்தன் அனைவரின் உறவுகளிலும் புதிய இனிமையையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும், வாழ்வில் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும்.
ரக்ஷா பந்தன் சகோதர, சகோதரிகளுக்கு இடையிலான உறவை கொண்டாடும் ஒரு பண்டிகையாகும். நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
रक्षा बंधन के पावन अवसर पर, मैं सभी देशवासियों को हार्दिक बधाई और शुभकामनाएं देती हूं। भाई-बहन के बीच प्रेम और आपसी विश्वास की भावना पर आधारित यह त्योहार, सभी बहन-बेटियों के प्रति स्नेह और सम्मान की भावना का संचार करता है। मैं चाहूंगी कि इस पर्व के दिन, सभी देशवासी, हमारे समाज…
— President of India (@rashtrapatibhvn) August 19, 2024
இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ரக்ஷா பந்தனின் புனிதமான தருணத்தில், நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
சகோதர, சகோதரிகளுக்கிடையேயான அன்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையிலான ரக்ஷா பந்தன் விழா, அனைத்து சகோதரிகள் மற்றும் மகள்கள் மீது பாசத்தையும் மரியாதையையும் ஏற்படுத்துகிறது. இந்த பண்டிகை நாளில், நமது சமுதாயத்தில் பெண்களின் பாதுகாப்பையும் மரியாதையையும் உறுதி செய்ய அனைத்து நாட்டு மக்களும் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
Prime Minister Narendra Modi tweets, "Best wishes to all countrymen on the occasion of Rakshabandhan, a festival symbolizing the immense love between brother and sister. May this holy festival bring new sweetness in the relationships of all of you and happiness, prosperity and… pic.twitter.com/GjKALHr5LW
— ANI (@ANI) August 19, 2024
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,
அண்ணன்-சகோதரிகளுக்கு இடையே உள்ள அபரிமிதமான அன்பின் அடையாளமான ரக்ஷாபந்தன் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துகள்.
இந்த புனித பண்டிகை உங்கள் அனைவரின் உறவுகளிலும் புதிய இனிமையையும், மகிழ்ச்சியையும், செழிப்பையும், வாழ்வில் நல்ல அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரட்டும் என்று தெரிவித்துள்ளார்.
#WATCH | On the festival of 'Raksha Bandhan', locals tie 'Rakhi' and offer sweets to Army personnel in Soni village along LoC in the Uri sector of Jammu & Kashmir pic.twitter.com/FH6MO8Lj2E
— ANI (@ANI) August 19, 2024
ரக்ஷா பந்தன் தினமான இன்று ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உரி செக்டார் பகுதியின் எல்லைக்கோட்டிலுள்ள சோனி கிராமத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கு உள்ளூர்வாசிகள் 'ராக்கி' கட்டி இனிப்பு வழங்கினர்.
- நாட்டு மக்கள் அனைவருக்கும் 78வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
- நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈன்றவர்களுக்கு இந்த நேரத்தில் நாம் அஞ்சலி செலுத்துவோம்.
78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்து உரையாற்றி உள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
நாட்டு மக்கள் அனைவருக்கும் 78வது சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லா இடங்களிலம் மூவர்ணக் கொடி பறப்பதைக் காணும்போது, நமது மனம் மகிழ்ச்சியில் நிறைகிறது.
நாட்டின் சுதந்திரத்திற்காக அனைத்து சமூகத்தினரும் பாடுபட்டுள்ளனர். இந்திய சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினரின் பங்களிப்பு அளப்பரியது.
நாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈன்றவர்களுக்கு இந்த நேரத்தில் நாம் அஞ்சலி செலுத்துவோம்.
நாட்டின் சுதந்திரத்திற்காக பிர்சா முண்டா தொடங்கி பல பழங்குடியின தலைவர்கள் பாடுபட்டனர்.
இந்த நேரத்தில் நமது விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம்.
78வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இதே வேளையில் தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவுக்கூருகிறேன்.
மற்ற பண்டிகைகளை போல சுதந்திர தினம், குடியரசு தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
- நீரஜ் சோப்ரா எதிர்கால வீரர்களுக்கு ஊக்கமாக இருப்பார்.
- நீரஜ் சோப்ரா இந்தியாவுக்கு மேலும் பல பதக்கங்களை வென்று கொடுப்பார்.
ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 206 நாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இந்த விளையாட்டு திருவிழா இறுதிகட்டத்தை எட்டியது. இதில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் களமிறங்கிய நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2 ஆவது இடம் பிடித்தார். இதனால் இந்தியாவுக்கு ஈட்டி எறிதலில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. வெள்ளிப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "நீரஜ் சோப்ரா சிறந்த ஆளுமை. மீண்டும் மீண்டும் அவர் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மீண்டும் ஒரு ஒலிம்பிக் வெற்றியுடன் வருவதால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது. வெள்ளிப் பதக்கம் வென்ற அவருக்கு வாழ்த்துகள். எதிர்காலத்தில் வரவிருக்கும் எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்கி நம் தேசத்தை பெருமை கொள்ள செய்வதற்கு அவர் ஊக்கமாக இருப்பார்," என பதிவிட்டுள்ளார்.
குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தனது எக்ஸ் தள பதிவில், "பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று வரலாற்று சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் அவர். அவரால் இந்தியா பெருமை கொள்கிறது. அவரது சாதனை வரவிருக்கும் தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும். எதிர்காலத்தில் இந்தியாவுக்காக மேலும் பல பதக்கங்கள் மற்றும் பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றுத் தருவார் என இந்தியா எதிர்நோக்குகிறது," என குறிப்பிட்டுள்ளார்.
- பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
- வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம்.
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63-வது இடத்தில் உள்ளது.
இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதினர்.
இந்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் கியூபா வீராங்கனை குஸ்மானை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ஒலிம்பிக் மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அமெரிக்காவை சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.
இந்த நிலையில் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
பாரிஸ் ஒலிம்பிக்கில் வினேஷ் போகட்டின் அசாதாரண சாதனைகள் ஒவ்வொரு இந்தியரையும் பரவசப்படுத்தியது மற்றும் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளது.
தகுதி நீக்கம் குறித்த அவரது ஏமாற்றத்தை நாம் அனைவரும் பகிர்ந்து கொண்டாலும், அவர் 1.4 பில்லியன் மக்களின் இதயங்களில் ஒரு சாம்பியனாக இருக்கிறார்.
வினேஷ், இந்தியப் பெண்களின் உண்மையான சளைக்க முடியாத உணர்வை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், அவரது காவியமான மன உறுதியும், விளையாட்டு திறனும் இந்தியாவின் வருங்கால உலக சாம்பியன்களை ஊக்குவிக்கிறது.
எதிர்காலத்தில் வினேஷ் போகட்டிற்கு பல விருதுகள் கிடைக்க வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விமான நிலையத்தில் திரவுபதி முர்முவை பிஜி பிரதமர் சிதிவேனி ரபுகா வரவேற்று சம்பிரதாய வரவேற்பு அளித்தார்.
- பிஜிக்கு சென்றுள்ள முதல் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மூன்று நாடுகளுக்கான சுற்றுப்பயணத்தை நேற்று முன்தினம் தொடங்கினார். அதன்படி, நேற்று தெற்கு பசிபிக் தீவு நாடான பிஜி நாட்டுக்கு திரவுபதி முர்மு சென்றடைந்தார். விமான நிலையத்தில் திரவுபதி முர்முவை பிஜி பிரதமர் சிதிவேனி ரபுகா வரவேற்று சம்பிரதாய வரவேற்பு அளித்தார்.
இந்த பயணத்தின் முக்கியத்துவமான பிஜி நாட்டு அதிபர் கட்டோனிவேர் மற்றும் பிரதமர் சிதிவேன் ரபுகாவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கூறப்பட்டது.
இதனிடையே, பிஜியின் அதிபர் கட்டோனிவேர் மற்றும் துணை அதிபர் ஆகியோர் திரவுபதி முர்வுமுக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'சிவிலியன்' விருதை வழங்கினர்.
பிஜிக்கு சென்றுள்ள முதல் இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தான் என்பது குறிப்பிடத்தக்கது. பிஜி பயணத்தைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் திமோர்-லெஸ்டே ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளார்.
- 5-ந்தேதி தீவு நாடான பிஜிக்கு திரவுபதி முர்மு பயணம்.
- டிமோர்-லெஸ்டேக்கு ஜனாதிபதி செல்வது இதுவே முதல் முறை.
புதுடெல்லி:
மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
2 நாள் பயணமாக வருகிற 5-ந்தேதி தீவு நாடான பிஜிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அங்கு அந்நாட்டு அதிபர் கேடோனிவிர், பிரதமர் சிட்டி வேனி ரபுகா ஆகி யோரை ஜனாதிபதி முர்மு சந்திப்பார். அத்துடன் அந்நாட்டு நாடாளுமன்றத்திலும் அவர் உரையாற்ற உள்ளார்.
இதைத்தொடர்ந்து 2 நாள் பயணமாக வருகிற 7-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு நியூசிலாந்து செல்ல உள்ளார்.
இந்த பயணத்தில் அந்நாட்டு கவர்னர் ஜெனரல் டேம் சிண்டி கிரோ, பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் ஆகி யோரை ஜனாதிபதி திரவு பதி முர்மு சந்திக்க உள்ளார். அங்கு நடைபெறும் கல்வி மாநாட்டிலும் அவர் உரையாற்ற உள்ளார்.
அதன் பின்னர் 2 நாள் பயணமாக வருகிற 10-ந்தேதி தென்கிழக்கு ஆசிய நாடான டி மோர்-லெஸ்டேக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணிக்க உள்ளார். அங்கு அவர் அந்நாட்டு அதிபர் ஜோஸ்ர மோஸ் ஹோர்டா, பிரதமர் கே ரலா சனானா குஸ்மாவ் ஆகியோரை சந்திக்க உள்ளார்.
3 நாடுகளிலும் இந்திய வம்சாவளியினருடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்துரையாட உள்ளார்.
ஜனாதிபதி ஒருவர் பிஜி மற்றும் டிமோர்-லெஸ்டேக்கு செல்வது இதுவே முதல் முறை. ஜனாதிபதியின் இந்த பயணம் 3 நாடுகளுடனான உறவை மேலும் வலுப்படுத்தி ஊக்கமளிக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.
- கார்கில் விஜய் திவாஸ், நமது ஆயுதப் படைகளின் அசாத்தியமான துணிச்சலுக்கும், அசாதாரண வீரத்துக்கும் நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்தும் ஒரு சந்தர்ப்பமாகும்.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.
#WATCH | Defence Minister Rajnath Singh lays a wreath and pays tribute to the heroes of the Kargil War at the National War Memorial in Delhi, on the occasion of 25th #KargilVijayDiwas2024 pic.twitter.com/MBSJPBpjwR
— ANI (@ANI) July 26, 2024
இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.
#WATCH | Indian Army Vice Chief Lt Gen N Raja Subramani, Navy Vice Chief Vice Admiral K Swaminathan, Indian Air Force Vice Chief Air Marshal AP Singh & CISC Lt Gen Johnson P Mathew laid wreaths and paid tribute to the heroes of the Kargil War at National War Memorial in Delhi,… pic.twitter.com/icMg4B9gDZ
— ANI (@ANI) July 26, 2024
கார்கில் போர் வெற்றியின் 25-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுக்க களைகட்டியுள்ளன. அரசியல் தலைவர்கள், ராணுவம், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
#WATCH | Rajasthan Chief Minister Bhajanlal Sharma pays tribute to the soldiers who lost their lives in the 1999 Kargil War, at Amar Jawan Jyoti in JaipurRajasthan Minister Rajyavardhan Singh Rathore also present here#KargilVijayDiwas2024 pic.twitter.com/92feqHmgnV
— ANI (@ANI) July 26, 2024
இது தொடர்பாக குடியரசு தலைவர் திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில்,
கார்கில் விஜய் திவாஸ், நமது ஆயுதப் படைகளின் அசாத்தியமான துணிச்சலுக்கும், அசாதாரண வீரத்துக்கும் நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்தும் ஒரு சந்தர்ப்பமாகும். 1999-ம் ஆண்டு கார்கில் சிகரத்தில் பாரத அன்னையைப் பாதுகாக்கும்போது மிக உயர்ந்த தியாகம் செய்த ஒவ்வொரு ராணுவ வீரருக்கும் நான் தலைவணங்குவதுடன் அவர்களின் புனித நினைவுகளுக்கு தலைவணங்குகிறேன். அவர்களது தியாகம் மற்றும் வீரம் அனைத்து நாட்டு மக்களுக்கும் ஊக்கத்தை கொடுக்கும் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
- பள்ளி மாணவர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆசிரியையாக மாறி கலந்துரையாடினார்.
- நாம் அதிக மரங்களை நட வேண்டும்.
நம் இந்திய திருநாட்டின் ஜனாதிபதியாக பொறுப்பேற்று மூன்றாம் ஆண்டில் திரவுபதி முர்மு அடியெடுத்து வைத்துள்ளார்.
பெண்களுக்கு முதன்மை ஊக்க சக்தியாகவும், உதாரணமாகவும் திகழும் அவருக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
டெல்லியில் ஜனாதிபதி தோட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவின் 9-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுடன் ஜனாதிபதி திரவுபதி முர்மு ஆசிரியையாக மாறி கலந்துரையாடினார்.
மாணவர்களுடனான உரையாடலின்போது ஜனாதிபதி, மாணவர்களின் லட்சியங்கள் மற்றும் அவர்கள் விரும்பும் பாடங்களை பற்றி கேட்டறிந்தார். மாணவர்கள் விஞ்ஞானிகள், மருத்துவர்களாக விரும்புகிறார்கள் என்பதை அறிந்த பின்னர் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
புவி வெப்பமடைதல் குறித்து மாணவர்களுடன் உரையாடிய ஜனாதிபதி, நீர் பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்தினார். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைக்கும் முயற்சியில் அதிக மரங்களை நடுமாறு மாணவர்களை ஊக்குவித்தார்.
நாம் அதிக மரங்களை நட வேண்டும். மழைநீர் சேகரிப்பு மூலம் தண்ணீர் வீணாவதை குறைக்கவும் அதை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காற்று மாசுபாடு குறித்தும், அதை குறைப்பதற்கான வழிகள் குறித்தும் அவர் உரையாடினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்