என் மலர்
நீங்கள் தேடியது "பட்டம்"
- 1,150 பேருக்கு பட்டங்களை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
- ஜனாப் அப்துல் சலீம், சிராஜுதீன் மற்றும் அவுரங்கசீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் 12-வது பட்டமளிப்பு விழா நடந்தது. ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாஹ் கான் தொடங்கி வைத்தார்.
முதல்வர்அப்பாஸ் மந்திரி வரவேற்று அறிக்கை சமர்ப்பித்தார். சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரி முதல்வர் முஹம்மது முஸ்தபா, கல்வியியல் கல்லூரி அறிக்கை சமர்ப்பித்தார்.
சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு 1,150 பேருக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.
முன்னாள் கல்லூரி மாணவியும், மானாமதுரை எம்.எல்.ஏ.வுமான தமிழரசி,முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், இளையான்குடி பேரூராட்சி தலைவர் நஜுமுதின், கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் அஹமது ஜலாலுதீன், பொருளாளர் அப்துல் அஹது, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அஸ்ரப் அலி, ஜனாப் அப்துல் சலீம், சிராஜுதீன் மற்றும் அவுரங்கசீப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
- அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 616 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.
- இதில் 1,125 மாணவ- மாணவிகளுக்கு கவர்னர் ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா கவர்னர் ரவி தலைமையில் நடந்தது.
கடந்த 2019-20, 20-21, 2021-22 கல்வி ஆண்டு களுக்காக தொடர்ந்து 3 வருடங்கள் பட்டமளிப்பு விழா நடைபெறாமல் மாணவ- மாணவிகள் பட்டங்கள் பெற முடியாமல் அவதிக்கு உள்ளாகி இருந்தனர். இது குறித்து பல்வேறு தரப்பினர் பட்டமளிப்பு விழாவை விரைந்து நடத்த வற்புறுத்தி வந்தனர். அதனை ஏற்று அழகப்பா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடந்தது.
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி வரவேற்று பேசினார்.தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையேற்று மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். ஒரு இலக்கிய முனைவர் பட்டம், 4 அறிவியல் முனை வர் பட்டமும், 647 முனைவர் பட்டமும் (பி.எச்டி) வழங்கப்பட்டது.
மேலும் பல்வேறு துறைகளில் பயின்ற மாணவர்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் பயின்றவர்கள் என கடந்த 3 ஆண்டுகளில் பட்டம் பெறாத 1 லட்சத்து 9 ஆயிரத்து 616 மாணவ- மாணவிகள் பட்டங்களை பெற்றனர். இதில் 1,125 மாணவ- மாணவிகளுக்கு கவர்னர் ரவி நேரடியாக பட்டங்களை வழங்கினார்.
இந்த விழாவில் மத்திய கல்வி மந்திரியும், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மந்திரியுமான தர்மேந்திர பிரதான் முதன்மை விருந்தினராகவும், உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து ெகாண்டனர்.
பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் பேராசிரியர்கள், பெற்றோர்கள், உறவி னர்கள் மற்றும் நண்பர்க ளிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
- கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் 1652 மாணவா்களுக்கு பட்டங்களை மத்திய மந்திரியின் அறிவியல் ஆலோசகர் வழங்கினார்.
- பெற்றோர்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் கலச லிங்கம் பல்கலைக் கழகத்தின் 35-வது பட்டமளிப்பு விழா வேந்தா் கே.ஸ்ரீதரன் தலைமையில் நடந்தது. இணைவேந்தா் டாக்டா். அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவா்கள் எஸ்.சசிஆனந்த், எஸ்.அா்ஜூன் கலசலிங்கம், நிர்வாகக்குழு உறுப்பினா்கள் டாக்டா்.ஜி.சுவாமிநாதன், ஆலோ சகா் எஸ். ஞானசேகா், துணைவேந்தா். எஸ்.நாராயணன், பதிவாளா் வே.வாசுகதேவன் முன்னிலை வகித்தனா்.
மத்திய அரசின் பாதுகாப்பு துறை அமைச்சரின் அறிவியல் ஆலோசகா் ஜி.சதீஷ்ரெட்டி தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு ரேங்க் எடுத்த மாணவா்களுக்கு பதக்கங்களையும், பொறியியல், வேளாண்மை, கட்டடவியல், கலை மற்றும் அறிவியல் இளங்கலை, முதுகலை மாணவா்கள், வாய்பேசாத, காதுகேளாத மாணவா்கள் 13 போ், பி.எச்.டி. 84 உள்பட மொத்தம் 1652 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
சிறப்பு விருந்தினராக, கனடா ஸ்பாஸியல் டி.என்.ஏ. இன்பர்மடிக்ஸ் நிறுவன துணைத்தலைவா் சுதா்சன் கோபாலன், பெங்களுா் ஜென்பேக்ட் நிறுவன உதவி துணைத் தலைவா் கருணாகரன் விநாயகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய மந்திரியின் அறிவியல் ஆலோசகர் சதீஷ்ரெட்டி பேசுகையில், கலசலிங்கம் பல்கலை கடந்த 38 வருடங்களாக, இளைஞா்களுக்கு தொழி ற்சாலை பயிற்சியுடன் இணைந்த கல்வியை வழங்கி மக்களுக்கும் நாட்டுக்கும் அா்த்தமான பங்களிப்பை செய்து வருகிறது.
மேலும் வாய்பேசாத, காது கேளாத மாணவா்களுக்கு பி.டெக்., பி.காம்., படிப்பை ஆசியாவிலேயே முதன்முதலாக தொடங்கி 2007 முதல் நடத்தி வருவது கண்டு பாராட்டுகின்றேன்.
பட்டமளிப்பு விழா என்பது ''கனவையும் உண்மை நிகழ்வையும் இணைக்கும் பாலம் ஆகும்". இந்த நேரத்தில் மாணவா்கள் கனவை நனவாக்க உறுதுணை செய்த இறைவ னையும் பெற்றோர்களையும், ஆசிரியா்களையும் நன்றி செலுத்த வேண்டும்.
''உலகமே ஒரு குடும்பம்" இதில் இந்தியா தனித்தி றமையில் நம்பிக்கையுடன் உலக நாடுகளுலெல்லாம் ஒருங்கிணைத்து, அமைதியை நிலைநாட்டி வருகிறது. இதனை பிரதமர் மோடி இளைஞா்களை, தங்கள் 25 வருட வாழ்வை நாட்டின் வளா்ச்சிக்கு முழுமனதுடன் உழைத்து, உலகலாவிய நல்லிணக்கத்தை உருவாக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.
இவ்வாறு அவர் பேசினார்.
பட்டம் பெற்ற மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இயக்குநா்கள், டீன்கள், துறைத்தலை வா்கள், பேரா சிரியா்கள், பெற்றோர்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.
- கீழக்கரை இஸ்லாமியா பள்ளியில் விழாவில் யூ.கே.ஜி. முடித்த 180 குழந்தைகளுக்கு பட்டம் கொடுத்தனர்.
- இதில் 150-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
கீழக்கரை
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுதோறும் யூ.கே.ஜி. வகுப்பு முடித்து முதலாம் வகுப்பு செல்லும் குழந்தைகளுக்கு பட்டம் வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டுக்கான பட்டமளிப்பு விழா மற்றும் 44-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் உள்ள எம்.எம்.கே. அரங்கத்தில் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் தலைமையில் நடந்தது.
அவர் பேசுகையில், மகான், மேதை, கல்வி யாளர்கள் வாழ்ந்து முக்கியத்துவம் பெற்ற கீழக்கரையில் சொல்ல முடியாத அளவிற்கு இளைஞர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருவது வருத்தமளிக்கிறது. உங்கள் குழந்தைகளை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்க வேண்டும். இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளை தாலாட்ட கூட நேரமில்லாத நிலையில் பெண்கள் இருந்து வருவது வேதனைக்குரியது. தாய், தந்தையரின் உறவே குழந்தைகளுக்கு கிடைக்காமல் கேள்விக்குறியாகி வருகிறது என்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக முகமது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அலாவுதீன் கலந்துகொண்டு மாணவ குழந்தைகளுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்.
8-ம் வகுப்பு மாணவிகள் பாத்திமா நப்ஹா, ஜென்னத் ரிலா, பரிஹா சுமையா ஆகியோர் கிராஅத் ஓதினர். யூ.கே.ஜி. மாணவி அஷ்பஹ் வரவேற்றார். மாணவ குழந்தைகள் ஆங்கிலத்தில் பட்டமளிப்பு விழா உரையாற்றினர். 180 மாணவ குழந்தைகளுக்கு பட்டமளிப்பு நிகழ்ச்சி நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி தலைவர் சுந்தரம், கீழக்கரை ரோட்டரி சங்க சட்ட ஆலோசகர்-வக்கீல் கேசவன், சமூக ஆர்வலர் நஜீம் மரைக்கா உட்பட பலர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
அப்துல் பத்ஹா நன்றி கூறினார். குழந்தைகள் பட்டம் பெறுவதை காண்பதற்கு பெற்றோர்கள் திரண்டு வந்தனர். குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகளை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
விழா ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இபுராகிம் ஆலோசனையின் பேரில் முதல்வர் மேபல் ஜஸ்டஸ், தலைமையில் துணை முதல்வர்கள் லினி, ராமர் தலைமை ஆசிரியர்கள் முகம்மது முஸ்தபா, ரவி, தனலட்சுமி, நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் ஆசிரியர்கள் செய்தனர்.
முன்னதாக காலையில் நடந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை தாளாளர் எம்.எம்.கே.முகைதீன் இபுராகிம் தொடங்கி வைத்தார். திட்ட இயக்குநர் ஆறுமுகம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அறிவியல், என்ஜினீயர், மெக்கானிக், சட்டம் குறித்த தகவல்களையும், எதிர்காலத்தில் மாணவ-மாணவிகளுக்கு உள்ள வேலை வாய்ப்பு நிலவரங்களையும் எடுத்துரைத்தார்.
மாணவ-மாணவிகளின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்தார். இதில் 150-க்கும் அதிகமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.
- ரக்ஷிதா என்கிற சரத்குமார். திருநங்கையான இவர் அண்ணாமலை பல்கலைகழத்தில் முனைவர் பட்டம் பயில் விண்ணப்பித்திருந்தார்
- திருநங்கை ரக்க்ஷிதா தனது முனைவர் பட்ட படிப்பை வியாழக்கிழமையன்று தொடங்கினார்.
கடலூர்:
கடலூர் வட்டம், கோண்டூர் தாலுகா, மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் நாகப்பன் மகனான ரக்ஷிதா என்கிற சரத்குமார். திருநங்கையான இவர் அண்ணாமலை பல்கலைகழத்தில் முனைவர் பட்டம் பயில் விண்ணப்பித்திருந்தார்.
திருநங்கை என்ற ஒரே காரணத்தால் இடம் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலகுழு உறுப்பினர் ரமேஷ்பாபு, முத்துக்குமரன் ஆகியோர் திருநங்கை ரக்ஷிதாவை அழைத்துக்கொண்டு பலகலைக் கழக துணை வேந்தரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில், இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளான, நீதியரசர்கள் ராதாகிருஷ்ணன், ஏ.கே.சிக்ரி ஆகியோர் கடந்த 2014-ம் ஆண்டு திருநங்கை சமூகம் குறித்த வழக்கில் கொடுத்த தீர்ப்பின் படி முனைவர் பயில அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து பல்கலைக் கழக நிர்வாகம் திருநங்கை ரக்ஷிதாவுக்கு வேதியல்துறையில் முனைவர் பட்டம் பயில்வதற்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து திருநங்கை ரக்க்ஷிதா தனது முனைவர் பட்ட படிப்பை வியாழக்கிழமையன்று தொடங்கினார். அவரது படிப்பிற்கு உதவி புரிந்த துறை தலைவர் ஜெயபாரதி, மார்க்சிஸ்ட் கட்சி மாநிலகுழு உறுப்பினர் ரமேஷ்பாபு, நகர செயலாளர் ராஜா ஆகியோருக்கு திருநங்கை ரக்க்ஷிதா கண்கலங்க நன்றி தெரிவித்தார். இந்த சம்பவம் பல்கலைக் கழக வளாகத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
- நாயின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்ட பல்கலைக்கழகம் முடிவு செய்தது.
- சான்றிதழை ஜஸ்டின் தனது வாயில் கவ்வியபடி பெற்று செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.
அமெரிக்காவில் நியூஜெர்சியில் சவுத் ஆரஞ்ச் பகுதியில் செட்டான் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. புகழ்பெற்ற இந்த பல்கலைக்கழகத்தில் 90-க்கும் மேற்பட்ட பட்டப்பிரிவுகளின் கீழ் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவியான கிரேஸ் மரியானி என்பவர் இளங்கலை அறிவியல் பட்டப்படிப்பு பயின்று வந்தார். இவர் வகுப்புக்கு செல்லும் போதெல்லாம் தனக்கு துணையாக ஜஸ்டின் என்ற தனது வீட்டு வளர்ப்பு நாயையும் அழைத்து சென்றார்.
கிரேசுடன் அனைத்து வகுப்புகளிலும் அந்த நாயும் கலந்து கொண்டுள்ளது. எனவே அந்த நாயின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்ட பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இந்நிலையில் கிரேஸ் தனது பாடத்தில் முழுதேர்ச்சி பெற்று பட்டப்படிப்பு முடித்ததையடுத்து அவருக்கு பட்டயச்சான்றிதழ் வழங்கப்பட்டது. அவர் பட்டம் பெற பல்கலைக்கழகத்திற்கு சென்ற போது, கிரேசுக்கு பட்டயச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
பின்னர் பல்கலைக்கழகம் சார்பில் ஜஸ்டின் நாய்க்கும் அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட ஆடை அணிவித்து, டிப்ளமோ பட்டம் வழங்கப்பட்டது. அந்த சான்றிதழை ஜஸ்டின் தனது வாயில் கவ்வியபடி பெற்று செல்லும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது.
Seton Hall President Joseph E. Nyre, Ph.D. presents Justin, the service dog for Grace Mariani, of Mahwah, NJ, with a diploma for attending all of Grace's classes at Seton Hall. pic.twitter.com/sZgHD5Fs3X
— Seton Hall (@SetonHall) May 23, 2023
- இந்திய அரசின் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பிபேக் டெப்ராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.
- கல்வியாண்டில் ஆண்களை விட பெண்கள் இரண்டரை மடங்கு அதிகமாக பட்டம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக 29-வது பட்டமளிப்பு விழா இன்று பல்கழைக் கழகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் அரங்கத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக துணை வேந்தர் சந்திரசேகர் வரவேற்று பேசினார்.விழாவுக்கு தமிழக கவர்னரும், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக வேந்தருமான ஆர்.என். ரவி தலைமை தாங்கினார்.
இந்திய அரசின் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர் பிபேக் டெப்ராய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார்.
கடந்த 2021-22-ம் ஆண்டுகளில் இளநிலை பட்டப்படிப்பு, பட்டம் மேற்படிப்பு ஆராய்ச்சி படிப்பு ஆகியவற்றில் முடித்து தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. இதில் 13,236 ஆண்களும், 30 ஆயிரத்து 625 பெண்கள் என மொத்தம் 43,861 பேர் பட்டம் பெற தகுதியான வர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
இவர்களில் ஆராய்ச்சி படிப்பு முடித்த 948 பேர் மற்றும் பல்வேறு பாடங் களில் முதலாம் இடம் பிடித்து பதக்கம் பெறும் 105 நபர்கள் என 1053 நபர்க ளுக்கு கவர்னர் நேரடியாக பட்டங்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த கல்வியாண்டில் ஆண்களை விட பெண்கள் இரண்டரை மடங்கு அதிகமாக பட்டம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது .
விழாவில் கவர்னர் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கினார். அந்த வகையில் திருச்செந்தூரில் உள்ள கோவிந்தம்மாள் கல்லூரி யில் இளங்கலை கணிதம் படித்த திவ்யா என்ற மாணவிக்கு தங்கப் பதக்கத்தை கவர்னர் ஆர்.என்.ரவி வழங்கினார்.
ஆத்தூரை சேர்ந்த மாணவி திவ்யா தற்போது தற்போது ஆதித்தனார் கல்லூரியில் 2-ம் ஆண்டு முதுகலை கணிதம் படித்து வருகிறார். இவர் இளங்கலை கணித பாடப்பிரிவில் பல்கலைக்கழக அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளார். மாணவியின் தந்தை லட்சுமணன் என்பவர் ஆத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் கணக்கராக பணியாற்றி வருகிறார்.
இதேபோல் கோவிந்தம்மாள் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படிப்பில் மாணவி பாத்திமா சஹாரா தங்கப் பதக்கமும், அதே கல்லூரியில் கம்ப்யூட்டர் படிப்பில் மாணவி ஜெயரூபி தங்கப்பதக்கமும் கவர்னரிடம் இருந்து இன்று பெற்றுக் கொண்டனர்.
இதே போல் ஆதித்தனார் கல்லூரியை சேர்ந்த 5 பேர் டாக்டர் பட்டமும், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரியில் படித்த 3 பேரும் டாக்டர் பட்டம் பெற்றனர்.
மேலும் காயல்பட்டினம் மகளிர் கல்லூரி மாணவி ஆங்கிலம் மற்றும் அரபிக் பாடங்களில் முதலிடம் பிடித்து 2 பதக்கங்களை பெற்றார்.
விழாவில் எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், நயினார் நாகேந்திரன், ஆதித்தனார் கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த முதல்வர்கள், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள், பல்கலைக் கழக ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை துணை வேந்தர் சந்திரசேகர், பதிவாளர் சாக்ரடீஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
- மிஸ்டர் தமிழ்நாடு பாடி பில்டிங் போட்டியில் சென்னை வீரர் சாம்பியன் பட்டம் வென்றார்.
- நடுவர்களாக தேசிய அளவிலான நடுவர்கள் பங்கேற்று வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.
காரைக்குடி
காரைக்குடி பிரபு டெண் டல் மருத்துவமனை, மாவட்ட பிஸிக் அலையன்ஸ் சங்கம் மற்றும் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடை பெற்றது. இதில் கன்னியா குமரி, தூத்துக்குடி, தஞ்சா வூர், செங்கல்பட்டு, சென்னை, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு உள்பட 30 மாவட்டங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பாடி பில்டர்ஸ் கலந்து கொண்டனர்.
போட்டிகள் மாற்றுத்தி றனாளிகள், மாஸ்டர்ஸ் உள்பட பல்வேறு எடை பிரி வுகள் என நடைபெற்றது. இதுதவிர பாடி பில்டிங், மென்ஸ் பிரிவு, கிளாசிக் பிரிவு, மாற்றுத்திறனாளி களுக்கான பாடி பில்டிங் ஆகிய பிரிவுகளாக மொத் தம் 20 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதில் பாடி பில்டிங் டைட்டில் வின்ன ராக சென்னையைச் சேர்ந்த ராகேஷ் மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தையும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசையும் வென்றார். கிளாசிக் மற்றும் மென்ஸ் பிரிவு வின்னராக சென்னை யைச் சேர்ந்த ஜிம்மி பரிசு களை பெற்றார். இதேபோல் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கும் பரிசு கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன், மாங்குடி, எம்.எல்.ஏ., நகர்மன்ற தலைவர் முத்துதுரை, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந் தர் ரவி, பிரபு டெண்டல் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் துரைகருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போட்டிக்கான ஏற்பாடு களை சிவகங்கை மாவட்ட பாடி பில்டிங் அசோசியேசன் தலைவர் மற்றும் பிரபு டெண்டல் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் பிரபு, மாநில பிஸிக் அலையன்ஸ் தலைவர் பொன்னம்பலவா ணன், துணைத்தலைவர் ராமசாமி, பொது செயலா ளர் கார்த்திகேயன் கிருஷ் ணன், கூடுதல் செயலாளர் திருப்பதி, பொருளாளர் காளிதாஸ், சட்ட ஆலோசகர் கமல்தயாளன், காரைக்குடி கிச்சன் கங்கா அம்பரீஸ் ஆகியோர் செய்திருந்தனர். இதில் நடுவர்களாக தேசிய அளவிலான நடுவர்கள் பங்கேற்று வெற்றியாளர்களை தேர்ந்தெடுத்தனர்.
- விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.
- பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் இருந்து 80 கி.மீ தொலைவில் உள்ள துமகுருவின் புறநகரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன் (வயது 21) என்பவர் எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். கல்லூரி அருகேயே வீடு எடுத்து ஆதித் வாடகைக்கு தங்கி இருந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும் கர்நாடக உள்துறை மந்திரி பரமேஸ்வரா உள்ளிட்டோர் பங்கேற்று பட்டம் வழங்கினர்.
விழாவில் மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் பட்டம் வாங்கிக் கொண்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்பினார். வீட்டின் அருகில் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு அருகே வந்தபோது அவரை விஷ பாம்பு கடித்தது. வீட்டின் அருகே பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் இருந்து இந்த விஷ பாம்பு வந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
பாம்பு கடித்ததை அவர் உணரவில்லை. வீட்டிற்கு வந்ததும் அவர் கீழே சுருண்டு விழுந்தார். உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டார். திருச்சூரில் இருந்து பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். மாணவனின் தந்தை இத்தாலியில் உள்ளார். அவருக்கு இது பற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து துமகூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து ஒரு போலீஸ் அதிகாரி கூறுகையில், மாணவர் ஆதித் பாலகிருஷ்ணன் உடலில் பாம்புக்கடித்தற்கான அடையாளம் காணப்பட்ட நிலையில் பிரேதப் பரிசோதனையில் அவரது ரத்த மாதிரிகளில் அதிக அளவு விஷம் இருப்பது தெரியவந்துள்ளது என்றனர்.
கல்லூரி துணை முதல்வர் டாக்டர் பிரபாகர ஜி.என் கூறுகையில், ஆதித் சிறந்த மாணவர். அவரை சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காப்பாற்ற முடியாமல் போய்விட்டது என்றார்.
+2
- சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார்.
- 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
நெல்லை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 30-வது பட்டமளிப்பு விழா இன்று கவர்னர் ஆர். என். ரவி தலைமையில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனார் கலையரங்கத்தில் நடைபெற்றது.
பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர், பதிவாளர் சாக்ரடீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராஜஸ்தான் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் நளினா வியாஸ் கலந்து கொண்டார்.
முன்னதாக பட்டமளிப்பு விழாவிற்காக பல்கலைக்கழகம் வந்த கவர்னர் ஆர்.என்.ரவி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனைத்தொடர்ந்து என்.சி.சி. மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக்கொண்டார். அதன் பின்னர் பட்டம் பெறும் மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என். ரவி குழு புகைப்படம் எடுத்து கொண்டார்.
தொடர்ந்து விழா மேடைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். சிறப்பு அழைப்பாளர் நளினா வியாஸ், துணைவேந்தர் சந்திரசேகர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் 40 ஆயிரத்து 622 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இதில் தங்கப் பதக்கம் பெற்ற 108 மாணவர்களும், ஆராய்ச்சி படிப்பில் பட்டம் வென்ற 351 மாணவர்கள் என 459 பேர் கவர்னரிடம் நேரடியாக பட்டம் பெற அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் 27 பேர் கலந்து கொள்ளவில்லை.
இதைத்தொடர்ந்து 432 பேருக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நேரடியாக பட்டம் வழங்கினார். பின்னர் பதக்கம் பெற்ற பல்கலைக் கழக மாணவ-மாணவிகளுடன் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
விழாவில் உயர்கல்வி துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் பங்கேற்கவில்லை.
இதனையொட்டி பல்கலைக்கழக வளாகம் முழுவதுமாக போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
- நிப்ட்-டி கல்லூரியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு சம்பந்தமான சவால்கள் குறைவாக உள்ளன.
- கல்லூரியில் விரைவில் அமையவுள்ள டிசைன் ஸ்டுடியோ திருப்பூருக்கு இன்னுமொரு மைல்கல்லாக அமையும்.
திருப்பூர் :
திருப்பூர் முதலிபாளையம் பகுதியில் அமைந்துள்ள நிப்ட்-டி பின்னலாடை வடிவமைப்புக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2015-2018 கல்வியாண்டில் பயின்ற இளங்கலை, முதுகலை, முதுகலை பட்டய படிப்பு மாணவர்கள் 532 பேருக்கு பட்டங்கள், பட்டயங்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனா். கல்லூரி முதல்வர் கே.பி.பாலகிருஷ்ணன் வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார்.
திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் பாடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டய சான்றிதழ்கள் வழங்கி பேசினார்.
அப்போது, சமுதாயத்தில் எவ்வளவோ இடையூறுகளுக்கு மத்தியில் படிக்க வாய்ப்பு பெற்று படித்து, பட்டம் பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். நிப்ட்-டி கல்லூரியில் படிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு சம்பந்தமான சவால்கள் குறைவாக உள்ளன. கல்வித்துறையில் பலவித சவால்கள் இருந்தாலும் நாளை தலைவர்களை, தொழிலதிபர்களை உருவாக்கும் துறை சார்ந்த கல்வியை வழங்கும் இதுபோன்ற கல்வி நிலையங்களில் பயில்வது என்பது மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. திருப்பூரில் இன்று தொழிலாளியாக இருப்பவர்கள் நாளைய முதலாளி என்கிற நிலையை அடைவதற்கு வாய்ப்பு அமைந்துள்ள நகரமாக இருக்கிறது.
அப்படி வளர்ந்துதான் இவ்வளவு பெரிய இடத்தை திருப்பூர் பிடித்துள்ளது. அதற்கு நிப்ட்-டி போன்ற கல்வி நிலையங்களும் உறுதுணையாக அமைந்துள்ளது பாராட்டுதலுக்குரியது. மேலும் இந்தக் கல்லூரியில் விரைவில் அமையவுள்ள டிசைன் ஸ்டுடியோ திருப்பூருக்கு இன்னுமொரு மைல்கல்லாக அமையும். பட்டம் பெற்ற மாணவர்கள் புதிய புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் கல்லூரி சேர்மன் பி.மோகன், கல்லூரி தலைமை ஆலோசகர் மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா எம்.சண்முகம், கல்லூரியின் முன்னாள் தலைவர் சி.எம்.என்.முருகானந்தன், கல்லூரியின் துணைத்தலைவர்கள் என்.ரங்கசாமி, கே.வாசுநாதன், பொருளாளர் ஆர்.கோவிந்தராஜு, பொதுச்செயலர் ஈ.பழனிசாமி, துணைச்செயலர் மற்றும் கல்வித்துறை தலைவர் ஆர்.ஆர்.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மேலாண்மை ஒருங்கிணைப்பாளர் என்.சண்முகம், சிறப்பு அழைப்பாளர் கே.கந்தசாமி உள்பட பலர் கலந்துகொண்டனா்.
- திருவெண்ணைநல்லூர் அரசு கல்லூரியில் 2,200 மாணவ மாணவிகளுக்கு பட்டம் - அமைச்சர் பொன்முடி வழங்கினார்
- அமைச்சர் பொன்முடி மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியில் 3-வது பட்டமளிப்பு விழா நடை பெற்றது. விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். உயர்கல்வித் துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன், ரவிக்குமார், எம்.பி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சபாபதிமோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் நாக லட்சுமி வரவேற்றார்.
விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு 2013 -2020 வரை பயின்ற 2200 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்
விழாவில் புகழேந்தி எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிகுழுத் தலைவர் ஜெயச்சந்திரன், துணைத் தலைவர் தங்கம், மாவட்டத் துணைச் செயலாளர் புஷ்பராஜ், கல்லூரிகள் கல்வியியல் இணை இயக்குநர் மகாவேரி அம்மாள், பதிவாளர் விஜயராகவன், மாவட்ட கவுன்சிலர் விசுவநாதன், யூனியன்தலைவர் ஓம்சிவசக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக் அலி பேக், பேரூராட்சி மன்றத் தலைவர் அஞ்சுகம் கணேசன், ஒன்றிய பொரு ளாளர் கிருஷ்ண மூர்த்தி ஒன்றிய குழு துணை தலைவர் கோமதிநிர்மல்ராஜ், பேரூராட்சி துணைத் தலைவர் ஜோதி மற்றும் அரசு அலுவலர்கள் கல்லூரி யின் அனைத்து துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.