search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 235455"

    • நரிக்குடி அருகே அ.தி.மு.க. ஆட்சியில் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையை அபகரிக்க முயற்சி செய்வதாக பாதிக்கப்பட்ட விவசாயி தாசில்தாரிடம் புகார் செய்தார்.
    • சர்ச்சைக்குரிய இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி அருகே உள்ள நெடுக னேந்தல் கிராமத்தை சேர்ந்த வர் முனியசாமி (வயது65), விவசாயி. இவர் கடந்த பல வருடங்க ளாக நெடுக னேந்தல் கிராமத்தில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் இவருக்கு கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது விருதுநகரில் நடை பெற்ற புதிய அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முனியசாமி உள்பட சிலருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.

    இந்த நிலையில் தமி ழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து முனியசாமிக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டா ரத்து செய்யப்பட்டதாக தெரி விக்கப்பட்டது. இதற்கி டையே முனிய சாமிக்கு வழங்கப்பட்ட இடத்தில் 10-க்கும் மேற்பட்டோர் கடப்பாரை போன்ற ஆயுதங்களுடன் அத்துமீறி உள்ளே நுழைந்து மரக்கன்றுகள் வைத்து செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்த னர். இதற்கு முனியசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அவருக்கு அந்த கும்பல் ெகாலை மிரட்டல் விடுத்தது.

    இதுபற்றிய தகவல் கிடைத்ததும் திருச்சுழி தாசில்தார் பாண்டி சங்கர் ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அரசால் முனியசாமிக்கு வழங்கப் பட்ட சர்ச்சைக்கு ரிய இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது பாதிக்கப்பட்ட முனியசாமி குடும்பத்தினர் தங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாவை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    • சுமார் 35-க்கும் நரிக்குறவர் குடும்பங்களை சேர்ந்த நாங்கள் பல தலைமுறைகளாக சாலையோரம் வசித்து வருகிறோம்.
    • மேற்படி நாங்கள் வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டு வருகின்றோம்.

    கடலூர்:

    சிதம்பரம் அருகே லால்புரம் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் இன மக்கள் வீட்டு மனை வழங்க கோரி சேகர் தலைமையில் சப்-கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்து வலியுறுத்தினர்.

    மனுவில் சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் பஞ்சாயத்து உட்பட்ட பகுதியில் சுமார் 35-க்கும் நரிக்குறவர் குடும்பங்களை சேர்ந்த நாங்கள் பல தலைமுறைகளாக சாலையோரம் வசித்து வருகிறோம். எங்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, ஆதார் கார்டு உள்ளது. ஆனால் எங்களுக்கு வீட்டுமனை பட்டா இல்லை. மேற்படி நாங்கள் வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட்டு வருகின்றோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென மனுவில் தெரிவித்துள்ளனர்.

    • விலையில்லா இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணை.
    • சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடனுதவி.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையேற்று பேசியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்வி கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 321 மனுக்கள் பெறப்பட்டது.

    பெறப்பட்ட மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மனுக்கள் மீது மேற்கொ ள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவல ர்களுக்கு அறிவுறு த்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமைதடுப்பு சட்டத்தின் கீழ்கொலை செய்யப்பட்ட வாரிசுதா ரர்களுக்கு விலையில்லா இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணை களும், 3 நபர்களுக்கும், ஆதிராவிடர் நலத்துறை சார்பில் 19 பயனாளிகளுக்கு இலவச வீட்டு பட்டாவிற்கான ஆணைகளும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பேராவூரணி வட்டத்தைச் சேர்ந்த 1 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவிற்கான ஆணைகளும், மாவட்ட வழங்கல் துறை சார்பில் புதிய குடும்ப அட்டை 1 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் சுயதொழில் தொடங்குவதற்கு மானியத்துடன் கூடிய கடன் உதவி தலா ரூ. 25,000 வீதம் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 50,000 மதிப்பிலான காசோலைகளையும் என மொத்தம் 26 நபர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அதனைத் தொடர்ந்து மாவட்ட விளையாட்டு துறை சார்பில் தஞ்சாவூர் மாவட்ட வில்வித்தை சங்கத்தில் சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-, மாணவிகள் கலெக்டரிடம் வெற்றி பெற்ற பதக்கங்களை காண்பித்து பாராடடு மற்றும் வாழ்த்துக்களை பெற்றனர்.

    இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா ,கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலக்கியா, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • வீட்டுமனை வாங்கி தருவதாக 11 லட்சம் காசோலையாகவும், 6 1/2 லட்சம் பணமாகவும் பெற்றுள்ளார்.
    • இதுவரை பணமும் தரவில்லை, வீட்டுமனையும் வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அருகே மீனாட்சி பேட்டையை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 31). கடலூர் பெரியகாட்டு பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கிருஷ்ணமூர்த்திடம் வீட்டுமனை வாங்கி தருவதாக 11 லட்சம் காசோலையாகவும், 6 1/2 லட்சம் பணமாகவும் என மொத்தம் 17 1/2 லட்சம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளார். ஆனால்இதுவரை பணமும் தரவில்லை, வீட்டுமனையும் வாங்கி தராமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கிருஷ்ணமூர்த்தி குறிஞ்சிப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வெங்கடேசன் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏரி பகுதியில் நரிக்குறவர்கள் இனத்தை சேர்ந்த 54 குடும்பங்கள் வசித்து வந்தனர்.
    • அரசு புறம்போக்கு நிலத்தில் 1.5 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டு ஒரு குடும்பத்திற்கு 2 செண்ட் வீதம் 44 குடும்பங்களுக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டுள்ளது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி 1-வது வார்டு கசுவரெட்டிபட்டி ஏரி பகுதியில் நரிக்குறவர்கள் இனத்தை சேர்ந்த 54 குடும்பங்கள் வசித்து வந்தனர். தற்போது காவிரி உபரிநீரை 100 ஏரிகளுக்கு நிரப்பும் திட்டத்தின் கீழ் கடந்த 25 நாட்களுக்கு முன்னர் ஏரி தனது முழு கொள்ளளவான 156 ஏக்கர் முழுவதும் நிரம்பியது.

    ஏரி நிரம்பியதால் உபரி நீர் நரிக்குறவர்களின் குடியிருப்பு பகுதிகளை முழுவதும் சூழ்ந்தது. இதனால் அவர்களை அனைவரும் வெளியேற் றப்பட்டு தற்போது ஆரூர்பட்டி ஊராட்சி, வெள்ளக் கல்பட்டி பகுதியில் அவர்களை நிரந்தரமாக குடியமர்த்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

    இதற்காக அங்கு உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் 1.5 ஏக்கர் நிலம் அளவீடு செய்யப்பட்டு ஒரு குடும்பத்திற்கு 2 செண்ட் வீதம் 44 குடும்பங்களுக்கு வீட்டுமனை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் வந்து பார்வையிட்டார்.

    வீட்டுமனை ஒதுக்கப்பட்ட இடங்களை முழுவதும் சென்று ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் நரிக்குறவர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களின் குழந்தைகள் பயில அங்கன்வாடி மையம், அதனை தொடர்ந்து குடியிருப்பு பகுதிக்கு 25 அடி அகல கான்க்ரீட் சாலை, குடிநீர் தொட்டி அமைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.

    அப்போது ஓமலூர் தாசில்தார் வள்ள முனியப்பன், வருவாய் ஆய்வாளர் முருகேசன், வி.ஏ.ஓ. கலைச்செல்வி, தாரமங்கலம் ஒன்றிய ஆணையாளர்கள் கருணாநிதி, அனுராதா, ஆரூர்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் காங்கேயன், நரிக்குறவர்கள் குடும்பத்தலைவர் பார்த்திபன் உட்பட பலர் உடனிருந்தனர்.

    • தனிமனைகளை வரன்முறைப்படுத்துதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடத்தில் உள்ள கிராம ஊராட்சிகளான சித்தம்பலம், அனுப்பட்டி,கே.கிருஷ்ணாபுரம், வடுகபாளையம்புதூர், பணிக்கம்பட்டி ஊராட்சிகளில் கடந்த 2016 ம் ஆண்டு அக்டோபர் 20ந்தேதிக்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட தனிமனைகளை வரன்முறைப்படுத்துதல் சிறப்பு முகாம் பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் சுமார் 200க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதில் 50 மனுக்களுக்கு உரிய கட்டணம் செலுத்தியதை ஆய்வு செய்து அவர்களுக்கு வரன் முறை அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பல்லடம் வட்டார வளர்ச்சி அலுவலர் வில்சன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புருஷோத்தமன், பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மற்றும் ஊராட்சி செயலாளர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கரடிவாவி ரோட்டில் 13.5 சென்ட் வீட்டுமனை இடத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு வாங்கியுள்ளனர்.
    • ரோட்டில் வீட்டுமனை இடம் உள்ளதாக தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    கோவை மாவட்டம் சூலூர் தாலுகா வி.மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 43).இவரது சகோதரர் வெங்கடாசலம்(40). சகோதரர்கள் இணைந்து அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரிடமிருந்து, திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் க.கிருஷ்ணாபுரம் ஊராட்சி காமநாயக்கன்பாளையம் கரடிவாவி ரோட்டில் 13.5 சென்ட் வீட்டுமனை இடத்தை கடந்த 2016 ஆம் ஆண்டு வாங்கியுள்ளனர்.

    தற்போது வீடு கட்டுவதற்காக, இடத்தை அளவீடு செய்ய கிருஷ்ணாபுரம் கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடியிடம் மனு அளித்தனர். நிலத்தை அளவீடு செய்ய வந்த கிராம நிர்வாக அலுவலர் பூங்கொடி காமநாயக்கன்பாளையம் - கரடிவாவி ரோட்டின் மையப்பகுதியில் அளவீடு செய்து இதுதான் உங்களது வீட்டுமனை இடம் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், தங்களது நிலத்தை முறையாக அளவீடு செய்து தரக்கோரி பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு புகார் அளிக்க வந்தனர். தாசில்தார் இல்லாததால் மண்டல துணை தாசில்தாரிடம் மனு அளித்து தங்களது இடத்தை உரிய அளவீடு செய்து ஒப்படைக்க வேண்டுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ரோட்டில் வீட்டுமனை இடம் உள்ளதாக தெரிவித்த கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

    இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலரிடம் விளக்கம் கேட்க முயன்றபோது அவர் செய்தியாளரின் அழைப்பை ஏற்கவில்லை. இந்த சம்பவத்தால் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 120 குடும்பங்கள் இருக்க இடம் இல்லாமல் ஒரே வீட்டில் 2 அல்லது 3 குடும்பங்கள் தங்கி குடியிருந்து வருகின்றனர்.
    • இதுவரை எந்த அதிகாரிகளும் இவர்களுக்கு இடம் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை

    காரமடை

    மேட்டுப்பாளையம் அருகே சிக்கதாசம்பா–ளையம் ஊராட்சிக்குட்பட்ட 4-வது வார்டில் வேடர்காலனி உள்ளது.

    இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு சுமார் 120 குடும்பங்கள் இருக்க இடம் இல்லாமல் ஒரே வீட்டில் 2 அல்லது 3 குடும்பங்கள் தங்கி குடியிருந்து வருகின்றனர்.

    இந்நிலையில் இதே கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 4.50 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இப்பகுதி மக்களுக்கு இடம் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என கடந்த 2013-ம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவல கத்தில் மனுக்கள் கொடுக்க ப்பட்டுள்ளது.

    ஆனால் இதுவரை எந்த அதிகாரிகளும் இவர்களுக்கு இடம் மற்றும் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த வேடர்காலனி கிராம மக்கள் 80க்கும் மேற்பட்டோர் மேட்டுப்பாளையம் தாசில்தார் அலுவலகம் முன்பு திரண்டி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு துணை வட்டாட்சியர் தெய்வபாண்டியம்மாள் மற்றும் காவல் துறையினர் வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது நீலகிரி மாவட்டத்தில் தற்போது கன மழை பெய்து வருவதால் இங்கு உள்ள அரசு அதிகாரிகள் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். எனவே ஓரிரு நாட்களில் இவர்களின் பிரச்சினைகளை அதிகாரிகளிடம் எடுத்து கூறி தீர்வு காணுவதாக கூறியதை அடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • சிங்கம்புணரியில் இலவச வீட்டுமனை வழங்கக்கோரி தாசில்தாரிடம் மனு கொடுக்கப்பட்டது.
    • வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் இந்த மக்கள் கடந்த 1 வருடமாக இலவச வீட்டு மனை கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

    ங்கம்புணரி, ஜூன். 22-

    சிவகங்கை மாவட்டம் வடசிங்கம்புணரி விழுப்புனிக்களம், சிலோன் காலனி பகுதிகளில் வசிக்கும் 26 பேர் 2021 ஜூலை மாதம் ஆன்லைன் மூலம் இலவச வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்தனர். அது சம்பந்தமான எந்த ஒரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் சர்வதேச உரிமைகள் கழக மாவட்டத் தலைவர் பெரியய்யா என்ற ராஜா தலைமையில் சிங்கம்புணரி தாசில்தாரிடம் மீண்டும் ஒரு கோரிக்கை மனு தாக்கல் செய்யப்பட்டது. வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் இந்த மக்கள் கடந்த 1 வருடமாக இலவச வீட்டு மனை கேட்டு அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது. இந்த நிகழ்வில் மாவட்ட துணைத்தலைவர் துஸ்யந்தன், திருப்பத்தூர் தொகுதி பொறுப்பாளர் அன்பரசன், ஒன்றிய செயலாளர் ராமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    ×