என் மலர்
நீங்கள் தேடியது "பாதுகாப்பு பணி"
- பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகிற 30-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக வருகின்றனர்.
திருப்பூர் :
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழா வருகிற 30-ந் தேதி கொண்டாடப்படுகிறது.
விழாவிற்கு தமிழகம் முழுவதும் இருந்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் அமைப்பு நிர்வாகிகள் தொண்டர்கள் தேவரின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
இதனையடுத்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் அங்கு பாதுகாப்புக்காக வருகின்றனர்.
இந்த பாதுகாப்பு பணிக்காக திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 315 போலீசார் ராமநாதபுரம் சென்றுள்ளனர். அதன்படி திருப்பூர் மாநகரில் இருந்து 135 போலீசார், மாவட்டத்திலிருந்து 180 போலீசார் என மொத்தம் 315 பேர் ராமநாதபுரத்திற்கு பாதுகாப்பு பணிக்காக சென்று உள்ளனர்.
- பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.
- கண்காணிப்பு பணியில் 13 டிரோன் காமிராக்கள், 92 நிரந்தர காமிராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கமுதி
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற 30-ந் தேதி சுதந்திரப் போராட்ட தியாகி முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்
ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பல்வேறு சமுதாய அமைப்பினரும், பொது மக்கள் என 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர்.
இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கமுதி ஆயுதப்படை கூட்ட அரங்கில் தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தலைமையில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை முன்னிலை வகித்தார்.
இதில் கோவை, ராமநாதபுரம் உட்பட 5 சரக டி.ஐ.ஜி.கள், 28 மாவட்டங்களை சேர்ந்த எஸ்.பி.க்கள் பங்கேற்றனர். பின்னர் நிருபர்களிடம் தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் கூறுகையில், தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் போலீசார் இன்று (27-ந் தேதி) முதல் 30-ந் தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தடை செய்யப்பட்டுள்ள பகுதிகள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் உத்தரவுகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீது கண்காணிப்பு காமிரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பு பணியில் 13 டிரோன் காமிராக்கள், 92 நிரந்தர காமிராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருவெண்ணைநல்லூர் அருகே ஞானகுருதட்சிணாமூர்த்தி கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது.
- 8.30 மணிக்கு கலச மகா அபிஷேகம் மகா தீபாரதனைகள் சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே பையூர் கிராமத்தில் உள்ள ஞானகுருதட்சிணாமூர்த்தி கோவிலில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. குருபெயர்ச்சி விழாவினை முன்னிட்டு மாலை 7மணிக்கு விநாயகர் பூஜை மஹா சங்கல்பம் கலச பூஜை சங்கு பூஜை குரு பரிகார ஹோமம் மகா பூர்ணாஹுதி பாலபிஷேகம் 8.30 மணிக்கு கலச மகா அபிஷேகம் மகாதீபாரதனைகள் சிறப்பு அபிஷேகங்கள் சிறப்பாக நடைபெற்றது.
அதன் பிறகு 12 ராசிகளுக்கும் அதிபதியாக விளங்கக்கூடிய 12 அடி குரு பகவானுக்கு கலச அபிஷேகம் 108 சங்காபிஷேகம் பரிகார ஹோமங்களும் நடைபெற்றன. இரவு 11.28 மணிக்கு மீனராசியிலிருந்து மேஷராசிக்கும் பிரவேசிக்கும் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது.விழா கிருஷ்ணப்ரேமி சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. விழாவினை காண சுற்று வட்டார மற்றும் வெளியூர் பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.பாதுகாப்பு பணியில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்
- திரவுபதி அம்மன் கோவிலில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
- தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சோழவந்தான்
மதுரை மாவட்டம் சோழவந்தான் திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது. விழாவை யொட்டி மகாபாரதக் கதைக்கேற்ப கதாபாத்தி ரத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வும் நடந்தது. பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதனை முன்னிட்டு காலை வைகை ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பூக்குழி மைதா னத்தில் தெளித்தனர்.
பின்னர் பூ வளர்த்தனர் மாலை 2 மணியளவில் அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு பூக்குழி மண்டகப்படியில் வந்து சேர்ந்தது. அங்கு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று காமதேனு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 6 மணியளவில் பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி மற்றும் பக்தர்கள் பூக்குழி இறங்கினார்கள்.
இதைத்தொடர்ந்து அம்மன் சங்கங்கோட்டை கிராமம், முதலியார் கோட்டை கிராமம், ரெயில்வே பீடர் ரோடு வழியாக மார்க்கெட் ரோடு, நான்கு ரதவீதி வழியாக கோவிலை வந்தடைந்தது.
சங்கங்கோட்டை கிராமத்தார்கள் பூக்குழி திருவிழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் பசும்பொன் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.
- மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கீழ்பவானி வாய்க்கால் மூலம் ஈரோடு , திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்ட ங்களை சேர்ந்த 2 லட்சத்து 7 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த வாய்க்காலை சீரமைக்க ரூ.733 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது. வாய்க்காலை புனரமைக்க ஒருத்தரப்பு விவசாயிகள் ஆதரவும், மற்றொரு தரப்பு விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்தனர். அமைச்சர் முத்துசாமி இருதரப்பு விவசாயிகளையும் அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். எனினும் சுமுகமான முடிவு ஏற்படவில்லை.
இந்நிலையில் கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு மே 1-ந் தேதி முதல் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் கீழ்பவானி வாய்க்கால் காங்கிரீட் திட்டத்தை கைவிட கோரியும், விவசாயம் காக்க வேண்டியும், மண் கால்வாயிகவே இருக்க வேண்டும் என வலியுறுத்தி அரச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக விவசாயிகள் கடை வியாபாரிகளிடம் ஆதரவு கேட்டிருந்தனர்.
அதன்படி இன்று காலையில் இருந்து அரச்சலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியான பிச்சாண்டாம் பாளையம், கருக்கம் பாளையம், வாய்க்கால் மேடு ஆகிய பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து விவசாயிகள் மற்றும் வணிகர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரச்சலூர் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில் போலீசார் அரச்சலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடையடைப்பு போராட்டம் காரணமாக ஆட்கள் நடமாட்டம் இன்றி வீதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
கீழ்பவானி வாய்க்காலில், பழைய கட்டுமானங்களில் உள்ள மராமத்துப் பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.
புதிதாக வாய்க்காலில் கான்கிரீட் அமைக்க கூடாது. வாய்க்காலின் மண் கரை அப்படியே தொடர வேண்டும், கசிவுநீர் மற்றும் குடிநீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று அரச்சலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்த கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- திருச்சுழி அருகே வடமாடு மஞ்சுவிரட்டு நடந்தது.
- 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியம் அம்மன்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் மற்றும் தேவர் குருபூஜை விழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடந்தது. இதில் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஒரு குழுவிற்கு 12 பேர் என 10 குழுக்களை சேர்ந்த சுமார் 120-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். இதை உள்ளூர், வெளியூர் பொதுமக்கள் ஆராவாரத்துடன் கண்டு ரசித்தனர்.
வெற்றி பெற்ற குழுவினருக்கு ரொக்கப்பணம் சேர், கட்டில், குத்துவிளக்கு மற்றும் மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது. திருச்சுழி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் தலைமையில் சுமார் 150-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- சோழவந்தான் அருகே உள்ள பட்டச்சாமி கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது.
- காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சோழவந்தான்
சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் உள்ள ஆண்டி பட்டச்சாமி கோவிலில் வருடாபிஷேகம் பூசாரி மகாமுனி தலைமையில் நடந்தது. பட்டர்கள் பாலாஜி, செந்தில் தலைமையில் கணபதி ஹோமத்துடன் யாகபூஜை நடந்து இதை தொடர்ந்து பூர்ணாஹூதி செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பக்தர்களுக்கு மரக்கன்று, அன்னதானம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உலக நன்மைக்காக சுவாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிப்பாடு நடைபெறுகிறது. 5 பேர்ஆண்டித்தேவர் வகையறா, எட்டூர் கிராம பொதுமக்கள் ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். காடுபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- வீரய்யா கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
- திருக்கோஷ்டியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலம் நாடு வடக்கு தெரு சேகரம் வெளியாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நயினார் பட்டி கிராமத்தில் உள்ளது வீரய்யா சுவாமி பட்டவர் கோவில். இந்த கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பட்டமங்கலம் தண்டாயுதபாணி குருக்கள் தலைமையில் பல்வேறு யாகங்களும், பூஜைகளும் நடத்தப்பட்டது.
தீர்த்தம் எடுத்து வந்து கோவிலை சுற்றி வலம் வந்து தீபாராதனை, வேத மந்திரங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடந்தது. 20 ஆண்டுகள் பிறகு இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. சுற்று வட்டாரத்தில் உள்ள வெளியாத்தூர், வாணியம்பட்டி, பட்டமங்கலம், கண்டரமாணிக்கம், யகருங்குளம் போன்ற 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆயா அப்புச்சி வகையறா பங்காளிகள், நயினார் பட்டி கிராமத்தார்கள் ஆகியோர் செய்திருந்தனர். திருக்கோஷ்டியூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- கருப்பர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
- பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் போலீசார் ஈடுபட்டனர்.
நெற்குப்பை
திருப்பத்தூர் அருகே உள்ள கருப்பூர் கிராமத்தில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மேக்காட்டுக்கருப்பர், பொன்னடைக்கன் சாமி கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
முன்னதாக கோவில் வளாகத்தில் அமைந்துள்ள மேக்காட்டு கருப்பர், பொன்னடைக்கன் சாமி, பெரிய கருப்பர், சின்ன கருப்பர், வீரன்னசாமி, ஆண்டிசாமி, அம்மன் சாமி, முத்துக்கருப்பர் சாமி என அனைத்து தெய்வங்களுக்கும் பூஜைகள் மற்றும் ஹோமங்கள் நடத்தப்பட்டது.
பின்பு ராஜேந்திர வேளாளர் சிவாச்சாரியார் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க கும்பத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை வேடுவர் கண்ணப்ப குல அம்பலகாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் திருப்பத்தூர் போலீசார் ஈடுபட்டனர்.
- மேலவாசல் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
- திடீர் நகர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மதுரை
மதுரை மேலவாசல் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது.
அதற்காக மாநகராட்சி அதிகாரிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக அந்தப்பகுதியில் ஆக்கிர மித்து இருந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். ஆனால் அந்த ஆக்கிரமிப்பு களை அவர்கள் தாமாக முன்வந்து அகற்றவில்லை. மேலும் இந்தப்பகுதியில் கால்நடைகள் சாலைகளில் சுற்றி திரிவதால் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படு கிறது.
சில நேரங்களில் பெரியார் பஸ் நிலைய வளாகத்திற்குள்ளும், பெரியார் பஸ் நிலையம் வரும் முக்கிய சாலைகளிலும் கால்நடைகள் சுற்றித் திரிவதால் விபத்துகள் ஏற்படுகிறது.எனவே இதுகுறித்து மாநகராட்சியில் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் இன்று காலை மேலவாசல் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் மாநக ராட்சி உதவி ஆணையர் மனோகரன் தலைமையில் உதவி பொறியாளர் பழனி, திட்ட அலுவலர் கனி, சுகாதார ஆய்வாளர் செல்வகுமார், சுகாதார அலுவலர் வீரன் உள்பட மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டனர்.
தெருக்களில் வீடுகளின் முன்பிருந்த ஆக்கிரமிப்பு களையும் அகற்றும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். மேலும் சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளையும் மாநக ராட்சி அதிகாரிகள் பிடித்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திடீர் நகர் காவல் நிலைய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
- 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருச்சுழி
திருச்சுழி அருகே உள்ள கள்ளக்காரி கிராமத்தில் மொட்டை இருளப்பசுவாமி கோவில் 3-ம் ஆண்டு வருடாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி ரேக்ளா மாட்டுவண்டி பந்தயம் நடத்தப்பட்டது.
பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டி களுக்கான போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றன. இந்த மாட்டு வண்டி பந்தயமானது கள்ளக்காரி கிராமத்தில் தொடங்கி திம்மநாதபுரம் வரை சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிற்கு நடை பெற்றது.
போட்டி காலை 6 மணிக்கு தொடங்கி 9 மணிவரை நடந்தது. இதில் 7 ஜோடி பெரிய மாட்டு வண்டிகளும், 29 சிறிய மாட்டுவண்டிகளும் கலந்து கொண்டன. இதில் மதுரை, விருதுநகர் ராமநாதபுரம், தேனி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டுவண்டிகளும் அதன் சாரதிகளும் பங்கேற்றன.
ரேக்ளா பந்தயத்தில் முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. பெரிய மாட்டுவண்டி பந்தய போட்டியில் வெற்றி பெற்றதற்கு முதல் பரிசாக ரூ.40 ஆயிரம் ரொக்கமும் அதனுடன் ஒரு பெரிய வெள்ளாடும் பரிசாக வழங்கப்பட்டது. சிறிய மாட்டுவண்டி பந்தய போட்டியில் வெற்றி பெற்றதற்கு முதல் பரிசாக ரூ.30 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.மேலும் போட்டியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டிகள் மற்றும் சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
திருச்சுழி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்திக்கிறார்.
- ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் முதுமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஊட்டி:
ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள முதுமலை புலிகள் காப்பகத்துக்கு இன்று மாலை வருகிறார்.
இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு கர்நாடக மாநிலம் மைசூர் விமான தளத்துக்கு மதியம் 2.30 மணிக்கு வருகிறார். பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 3.30 மணிக்கு மசினகுடிக்கு வருகிறார்.
அங்கிருந்து கார் மூலமாக சிறப்பு பாதுகாப்பு படையினருடன் 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு செல்கிறார்.
முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் நடித்து உலகம் முழுவதும் புகழ் பெற்ற பாகன் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை நேரில் சந்திக்கிறார்.
அப்போது அவர்களை பாராட்டுவதோடு, அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடுகிறார். அதனை தொடர்ந்து முகாமில் உள்ள பாகன்கள் மற்றும் பழங்குடியின மக்கள் மற்றும் தன்னார்வ அமைப்பு பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.
பின்னர் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளையும் பார்வையிடுகிறார். ஜனாதிபதி வரும் போது 12 வளர்ப்பு யானைகள் அனைத்தும் வரிசையாக நிற்கவைக்கப்பட உள்ளது.
அப்போது அந்த யானைகளுக்கு ஜனாதிபதி, பழங்கள் மற்றும் உணவுகளை வழங்குகிறார். சிறிது நேரம் யானைகளை பார்வையிடும் அவர், தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள பழங்குடியின மாதிரி கிராமத்தையும் பார்வையிடுகிறார்.
ஒரு மணி நேரம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இருக்கிறார்.
அதன்பின்னர் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு காரில் மசினகுடிக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மைசூர் சென்று, அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் 5 போலீஸ் சூப்பிரண்டுகள், 7 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 18 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 36 இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் முதுமலையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
முதுமலையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் மசினகுடி, முதுமலை மற்றம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமு க்குள்ளும் பலத்த பாதுகாப்புகள் போட ப்பட்டுள்ளது. இதுதவிர மசினகுடி-தெப்பக்காடு, தொரப்பள்ளி-தெப்பக்காடு சாலை, பந்திப்பூர்-தெப்பக்காடு சாலை உள்ளிட்ட சாலைகளிலும் நக்சல் தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
இதேபோல் முதுமலை வனப்பகுதிக்குள் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சந்தேகப்படும் நபர்களின் நடமாட்டம் உள்ளரா எனவும் போலீசார் கண்காணித்தனர்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, மசினகுடி-தெப்பக்காடு சாலையில் இன்று மாலை மட்டும் சில மணி நேரங்கள் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும். ஆனால் மைசூர்-கூடலூர் சாலையில் வாகனங்கள் வழக்கம் போல இயங்கும். மேலும் ஜனாதிபதி வந்து செல்லும் வரை தமிழகம், கேரளா, கர்நாடக ஆகிய 3 எல்லை சாலைகளும் மூடப்படுகிறது எனவும் போலீசார் தெரிவித்தனர்.