என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நேர்காணல்"

    • ‘காபி இன்டர்வியூ’ என்றால், முதல் கட்ட தேர்வு என்றே பொருள்.
    • உங்களுக்கான தகுந்த மார்க் போடுவதுதான், இதன் அடிப்படை.

    பழக்கமான நபர்களே, உங்களை காபி நேர்காணலுக்கு அழைத்திருந்தாலும், நேர்காணலுக்கான விதிமுறைகளை கடைபிடியுங்கள். இரண்டு பிரதி ரெஸ்யூம் அவசியம். கூடவே, பி.டி.எப்.ரெஸ்யூமும் மொபையில் இருக்கட்டும்.

    பெரும்பாலும் 'காபி இன்டர்வியூ' என்றால், முதல் கட்ட தேர்வு என்றே பொருள். இன்று முக்கிய பொறுப்புகளுக்கு ஒருவரை தேர்ந்தெடுக்க, ரொம்பவும் இயல்பாக சந்தித்து உரையாட விரும்புவதன் தாக்கமாகவே, இந்த காபி இன்டர்வியூ நுழைந்திருக்கிறது. பெரும்பாலும் ஏற்கனவே பணியாற்றிக்கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் உயர்ந்த பதவிக்கு விண்ணப்பிக்கும்போதும், பழைய குழுவில் இருந்து புதிய குழுவிற்கு மாற்றம் செய்யப்படும்போதும், இந்த காபி நேர்காணல் நிகழும். ஒரு கப் காபி குடித்துக்கொண்டே, உங்களின் நிறை-குறைகளை ஆராய்ந்து, உங்களுக்கான தகுந்த மார்க் போடுவதுதான், இதன் அடிப்படை. சரி, இதில் எப்படி நடந்து கொள்வது என்பதை அறிந்து கொள்வோம்.

    நீங்கள், காபி நேர்காணலுக்கு அழைக்கப்பட்டால், பதற்றப்படாமல் அணுகுங்கள். வழக்கமான நேர்காணல் இல்லை என்பதால் பணியாற்றும் நிறுவனம் குறித்து பேச்சின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுப் பேசவேண்டியதில்லை. எனவே சீரியசாக இல்லாமல், ரொம்ப இயல்பாக நடந்து கொள்ளுங்கள். சாதாரண ஒரு கப் காபிதான். ஆனால் அதனை உங்களுக்கு வேலை பெற்றுத்தருவதாக மாற்றிக்கொள்வது உங்கள் 'யுனிக்' சாமர்த்தியம்.

    பார்மல் உடையோ இல்லை கேஷ்வல் உடையோ.. உங்களுக்கு பொருத்தமாக இருப்பதை கொண்டு, உங்களை கனகச்சிதமாக காட்டிக்கொள்ளுங்கள். அவர்களின் தேவை பற்றி அறிவதோடு, புதிய பணிக் குழுவில் உங்கள் பங்கு என்ன?, கம்பெனியின் வளர்ச்சிக்கான திட்டங்கள் என விவேகத்துடன் தயாரானால் அட்டகாசம்.

    வழக்கமான நேர்காணலில் கேட்கமுடியாத கேள்விகளை காபி இன்டர்வியூவில் கேட்க முயற்சிக்கலாம். அதற்கும் தயாராக இருங்கள். பிரயோஜனமாக, நிறுவனத்தைப் பற்றி, நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பிலுள்ள நபர்களைக் குறித்து கேட்டால், மனதில் தோன்றிய உண்மைகளை மறைக்காமல் கூறுங்கள். இந்த மாதிரியான கருத்துகளை கேட்பதற்குகூட, உங்களை காபி நேர்காணலுக்கு அழைத்திருக்கலாம்.

    பழக்கமான நபர்களே, உங்களை காபி நேர்காணலுக்கு அழைத்திருந்தாலும், நேர்காணலுக்கான விதிமுறைகளை கடைப்பிடியுங்கள். இரண்டு பிரதி ரெஸ்யூம் அவசியம். கூடவே, பி.டி.எப்.ரெஸ்யூமும் கைவசம் இருக்கட்டும்.

    நேர்காணல் செய்பவர்களுக்கு முன்னரே காபி ஷாப்பிற்கு வந்துவிட்டால், உடனே காபியை ஆர்டர் செய்ய வெய்ட்டரைத் தேடக்கூடாது. காபியும் கையுமாக, நேர்காணல் செய்பவருடன் அறிமுகமாவது சங்கடமில்லையா?. கூடவே, நேர்காணலின் கதாநாயகன் அவர் என்பதால், அவரது வருகைக்கு பிறகு உணவுகளை ஆர்டர் செய்யுங்கள்.

    அடுத்ததாக வேலை உங்களுக்கு பொருத்தமாக இல்லையென்றால், உங்கள் எதிர்பார்ப்பை அவரிடம் இ-மெயில் வழியாக தெரிவிக்கலாம். இதன்மூலம் நேர்மையான மனிதர் என்ற இமேஜ் அவர் மனதில் உங்களுக்கு கிடைக்கலாம்.

    • விண்ணப்பங்களில் உங்களின் தகுதி, திறமைகளை ‘ஹைலைட்' செய்யுங்கள்.
    • நீங்கள் எப்போதும் அலர்ட்டாக இருக்கிறீர்களா என்பதை சோதிக்கவே, அது நடத்தப்படும்.

    தனியார் துறைகளில், இப்போது புதுமையான நேர்காணல்கள் நடத்தப்படுகின்றன. நமக்கு பழக்கமான நேர்காணல் முறையிலும், பழக்கமில்லாத புதுமையான நேர்காணல் முறையிலும் தேர்வு நடத்தப்பட்டு, அதற்கு பிறகுதான் ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்தவகையில், தனியார் துறைகளில், சமீபகாலமாக புழக்கத்தில் இருக்கும் ஒருசில நேர்காணல் முறைகளையும், அதில் கலந்து கொள்ள ஆயத்தமாகும் முறைகளையும் இந்த கட்டுரையில் படிக்கலாம்.

    சம்பந்தப்பட்ட பதவிக்கு ஏற்ற குறைந்தபட்சத் தகுதி உங்களிடம் இருக்கிறதா என்பதை அறிவதுதான் இந்த 'ஸ்க்ரீனிங் இன்டர்வியூ'வின் நோக்கம். இங்கு உடல் மொழி, அதீத பணிவு இவை எல்லாம் தேவையே இல்லை. ஒரு காலி இடத்துக்கு அதிகமான விண்ணப்பங்கள் குவியும் சமயத்தில், உங்களின் 'விண்ணப்பத்தை' மிக ஆழமாக ஆராய்வார்கள். அதில் சிறு சந்தேகம் தென்பட்டால் கூட, உங்களை நீக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது. 'ஓவர் குவாலிபைட்' ஆக இருக்கிறீர்களா என்பது முதல் உங்கள் பணி அனுபவங்கள் வரை அனைத்தையும் வடிகட்டுவதுதான் இந்த நேர்காணல்.

    விண்ணப்பங்களில் உங்களின் தகுதி, திறமைகளை 'ஹைலைட்' செய்யுங்கள். இந்த இன்டர்வியூவில் சுற்றி வளைக்காமல் நேரடியான, தேவையான பதில்களை மட்டும் அளிக்கவும். தொலைபேசி மூலமாக அவர்கள் இன்டர்வியூ செய்யும்போது, குறிப்பு எடுத்துக்கொள்ள கையில் பேனா மற்றும் காகிதத்துடன் தயாராக இருங்கள். ஏனென்றால், நீங்கள் எப்போதும் அலர்ட்டாக இருக்கிறீர்களா என்பதை சோதிக்கவே, அது நடத்தப்படும்.

    * டைரக்டிவ் ஸ்டைல் நேர்காணல்

    இப்படித்தான் நேர்காணல் செய்யப்போகிறேன் என்று எந்தவிதத் திட்டங்களும் முடிவுகளும் இல்லாமல் நடக்கும் நேர்காணல் முறை இது. இங்கு நீங்கள் மட்டுமல்லாமல் உங்களுடன் வந்திருக்கும் மற்ற போட்டியாளர்களையும் சேர்த்து ஒரே சமயத்தில் நேர்காணல் செய்வார்கள். உங்களுக்கு கேட்கப்பட்ட அதே கேள்வி மற்றவரிடமும் கேட்கப்பட வேண்டும் என்ற நியதி இல்லையெனினும், எல்லோரிடமும் ஒரே கேள்வியை முன்வைக்கும்போது நீங்கள் அனைவரும் தருகிற பதில்களை அப்போதே ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு வசதியாக இருக்கும்.

    கொஞ்சம் கடினமாகவே இந்த முறை நேர்காணலின்போது நடந்துகொள்வார்கள். இதனால் அவர்கள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதாக நினைக்க வேண்டாம். ஆயினும் இன்டர்வியூ செய்பவர் உங்கள் மேற்பார்வையாளர் என்பதை மறந்துவிட வேண்டாம்.

    * நடத்தை நேர்காணல்

    நீங்கள் குறிப்பிட்ட ஒரு பணிக்கு மனதளவிலும், நடத்தை அளவிலும் தகுதியானவரா என்பதை ஆராய இந்த வகை நேர்காணல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வகை நேர்காணல்களில் படிப்பு என்பதை விட, உங்கள் நடத்தைதான் முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படும். அதனால் நீங்கள் நீங்களாக இருங்கள். படிக்கும்போதும், முன்னர் பார்த்த வேலையின்போதும் நீங்களாக மேற்கொண்ட சில முனைப்புகளை எடுத்துக்கூறுங்கள். அவை நிறுவனத்தின் வளர்ச்சிக்கோ அல்லது சமூக நலன் சார்ந்தோ கூட இருக்கலாம். உங்களின் அனுபவங்களை 'வளவள' என்று கூறாமல், இரண்டு நிமிடங்களுக்குள் பேசி முடிப்பது நல்லது.

    * உணவு இடைவேளை நேர்காணல்

    நேர்காணல் செய்பவர் உங்களை சாப்பிட அழைத்து நீங்கள் சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் வேளையில் ஏதாவது ஒரு கேள்வி கேட்பார். பதில் சொல்ல வேண்டுமே என்று நீங்கள் பதறுவீர்கள். சாப்பிடவும் வேண்டும், அதே சமயம் பதிலும் சொல்ல வேண்டும் என்கிற அந்தச் சூழ்நிலையை நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்களோ அதைப் பொறுத்து உங்களின் சாமர்த்தியம் நிர்ணயிக்கப்படும். மேலும், பல தனிப்பட்ட விஷயங்களைப் பேசவும் இந்த நேர்காணல் மேற்கொள்ளப்படும். ஏற்கனவே ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருப்பவரை தங்கள் நிறுவனத்துக்கு வந்துவிடுங்கள் என்று அழைக்க, நடத்தப்படும் 'மீல் டைம் இன்டர்வியூக்கள்' கார்ப்பரேட் உலகில் மிகப் பிரபலம்.

    இந்த வகை நேர்காணலின்போது உங்களை ஒரு விருந்தினராக கற்பனை செய்துகொள்ளுங்கள். அவர் சாப்பிட ஆரம்பிக்கும் முன் நீங்கள் சாப்பிடாதீர்கள். அதே போன்று அவர் சாப்பிடாமல் இடைவெளி விடும்போது நீங்களும் இடைவெளி விடுங்கள். அவர் எதை ஆர்டர் செய்கிறாரோ, அதை எடுத்துக்கொள்வது நல்லது. உங்களை ஆர்டர் செய்யச் சொன்னால், 'லைட்'டாக ஆர்டர் செய்யவும். உணவு ஏற்பாடு செய்ததற்கு நன்றி தெரிவிக்க மறக்க வேண்டாம்.

    * மனவலிமை நேர்காணல்

    உங்களின் பொறுமையை சோதிக்கவே இந்த வகை நேர்காணல் நடத்தப்படும். நீங்கள் சொல்கிற எந்த ஒரு தகவலுக்கும் எந்தவிதமான எதிர்வினையும் காட்டாமல் இருப்பது, முறைத்துப் பார்ப்பது, செய்ய முடியாத காரியங்களை செய்யச் சொல்வது என கிட்டத்தட்ட ஒரு கல்லூரி 'ராகிங்' போன்றது இந்த இன்டர்வியூ. எந்த கஷ்டத்திலும் நீங்கள் எவ்வளவு தூரம் தாக்குப் பிடிக்கிறீர்கள் என்பதுதான் இதன் அடிநாதம்.

    இந்த இண்டர்வியூவில் கையாளும் விஷயங்கள், ஒரு விளையாட்டுதானே தவிர, பெர்ஷனலாக உங்களை அவமதிக்கும் செயல் அல்ல என்பதை புரிந்துகொள்ளுங்கள். நிதானமாக இருங்கள். படபடப்போ, பயமோ இருந்தால் நீங்கள் சொல்ல வருவது சரியாகப் போய்ச் சேராது.

    * இன்பர்மேஷனல் நேர்காணல்

    தங்கள் நிறுவனத்தில் தற்சமயம் வேலை காலி இல்லை என்ற நிலை இருந்தாலும், நீங்கள் விண்ணப்பித்து இருந்தால், உங்களை ஒரு சந்திப்புக்கு அழைப்பார்கள். அந்த சந்திப்பில் உங்களுக்குத் தெரிந்ததையும், அவர்களுக்குத் தெரிந்ததையும் பரிமாறிக்கொள்வீர்கள். உங்களுக்கு குறிப்பிட்ட அந்தத் துறையை பற்றி என்ன தெரியும், அந்தத் துறையில் உங்களுக்கு உள்ள ஈடுபாடு எத்தகையது என்பதை எல்லாம் நிறுவனத்தினர் அறிந்துகொள்ளவே இந்த முறை நேர்காணல் பின்பற்றப்படுகிறது. இந்த நேர்காணலுக்கு செல்லும் போது துறை சார்ந்தும், நிறுவனம் சார்ந்தும் என்னென்ன கேள்விகள் கேட்கலாம் என்பதை முதலிலேயே 'ஹோம் வொர்க்' செய்துகொண்டுபோவது நல்லது.

    • ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 10 பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளது.
    • கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அறை எண்.240-ல் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 10 பணியிடங்களை மாவட்ட நல சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளது.

    இதற்காக வருகிற 13-ந் தேதி திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அறை எண்.240-ல் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நேர்காணல் நடைபெற உள்ளது. தகுதியான நபர்கள் இந்த நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

    மேலும் விவரங்களுக்கு https://tiruppur.nic.in/notice-category/recruitment/ என்ற இணையதள முகவரியிலும், 0421 2478503 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • 240 ரேசன் கடை பணியிடங்களுக்கான நேர்காணல் தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
    • 186 விற்பனையாளர், 54 கட்டுனர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 240 ரேசன் கடை பணியிடங்களுக்கான நேர்காணல் தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இது குறித்து கூட்டுறவு சங்க அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம்,திருப்பூர்,ஊத்துக்குளி,அவிநாசி, மடத்துக்குளம், தாராபுரம்,உடுமலை, காங்கேயம், வெள்ளகோயில் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கூட்டுறவு துறையின் கீழ் உள்ள ரேசன் கடைகளில் 186 விற்பனையாளர், 54 கட்டுனர்கள் என மொத்தம் 240 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இந்தப்பணிகளுக்கு 8222 விற்பனையாளர்,1429 கட்டுனர்கள் என மொத்தம் 9651 பேர் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். பணியிடங்களை நிரப்ப விண்ணப்பதாரர்களிடம் நேர்காணல் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இதில் 28 அதிகாரிகள் கொண்ட குழுவினர் விண்ணப்பதாரரின் கல்வி உள்ளிட்ட சான்றுகளை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தினசரி 1400 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர் இந்த நேர்காணல் 22.12.22 வரை நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேர்காணல் தேதியில் வரத் தவறியவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    • நேர்காணல் அழைப்பாணை கடிதம் வைத்திருந்து, நேர்காணல் தேர்வில் கலந்து கொள்ளாதவர்கள் இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    காஞ்சிபுரம் மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணையதள முகவரில் இருந்து விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பதவிக்கான நேர்காணல் தேர்விற்கான அழைப்பு கடிதத்தினை பதிவிறக்கம் செய்த விண்ணப்பதாரர்கள் மட்டும், தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நேர்காணல் தேதியில் வரத் தவறியவர்களுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    விற்பனையாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் வரும் 26-ந்தேதி காலை 8.30 மணியளவிலும், கட்டுநர் பதவிக்காக விண்ணப்பித்தவர்கள் வருகிற 29-ந்தேதி காலை 8.30 மணியளவிலும் காஞ்சிபுரம் வந்தவாசி சாலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட கூட்டுறவு ஒன்றிய அலுவலகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின் துணைப்பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முன்பாக, தங்களது கல்வித்தகுதி, முன்னுரிமை கோரும் சான்று உள்பட அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்திற்கு விண்ணப்ப கட்டணம் செலுத்திய ஆவணம் ஆகியவற்றுடன் நேரில் ஆஜராகிட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    நேர்காணல் அழைப்பாணை கடிதம் வைத்திருந்து, நேர்காணல் தேர்வில் கலந்துக் கொள்ளாதவர்களுக்கான இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கிராம உதவியாளர் பணிக்கான நேர்காணல் நடைபெற்றது
    • இதில் 9 கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது

    ஆலங்குடி:

    ஆலங்குடி தாலுக்காவில் 9 கிராம உதவியாளர் பணி இடத்திற்கான நேர்காணல் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் 31 கிராம நிர்வாக அலுவலகம் உள்ளது. இதில் 9 கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, கடந்த 04-12-2022 அன்று போட்டித் தேர்வு நடைபெற்றது. உதவியாளர் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்ற 689 பேரில் நேற்று முதல் நாள் 80 பேருக்கு ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டவர்களை ஆலங்குடி வட்டாட்சி யர் செந்தில்நாயகி தலைமையில் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் பாலகோபாலன் மற்றும் தனித்துணை வட்டாட்சியர் தேர்தல் நட த்தும் அலுவலர் பழனியப்பன் ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் துரை கண்ணு மற்றும் அலுவலர்கள் நேர்காணலில் உடனிருந்தனர். மேலும் நேற்றிலிருந்து நேர்காணலானது தொடர்ந்து சுமார் 9 நாட்க ள் நடைபெற்று விரைவில் பரீசீலனை செய்து அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


    • விண்ணப்பங்கள் கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வந்தது.
    • தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.

    தருமபுரி,

    தி.மு.க.வின் சார்பு அணிகளின் மாவட்டத் தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டு வந்தது.

    அதன் அடிப்படையில் தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சார்பு அணிகளின் நிர்வாகிகளுக்கான விருப்பமனுக்கள் வழங்கப்பட்ட நிலையில் மாவட்டத்தில் இளைஞர் அணி, மாணவர் அணி, மகளிர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி உள்ளிட்ட அணிகளின் மாவட்டத் தலைவர், துணைத் தலைவர், அமைப்பாளர், துணை அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களிடம் இருந்து மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.

    இந்த நேர்காணலில் கலந்து கொண்டவர்களிடம் எத்தனை ஆண்டுகளாக கட்சியில் உறுப்பினராக உள்ளீர்கள்? கழகம் அறிவித்துள்ள எத்தனை போராட்டங்களில் கலந்து கொண்டீர்கள்? எத்தனை முறை சிறை சென்றீர்கள்? என்பன உள்ளிட்ட கேள்விகளை கேட்டு பதில்களை பதிவு செய்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியின் போது.தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தெற்கு ஒன்றிய பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த துணை சேர்மன் பிரபாகரன் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகள் 25-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியிலிருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்த நேர்காணலில் மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் உமா சங்கர், ஒன்றிய செயலாளர் செல்வராஜ், உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • 75 பேர் கலந்து கொண்டனர்
    • 10-ந் தேதி வரை நடக்கிறது

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட வாலாஜா, ஆற் காடு, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, கலவை ஆகிய வருவாய் வட்டங்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    இதற்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலு வலகத்தில் பதிவு செய்துள்ள தகுதியான நபர்கள் விவரம் குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இருந்து பெறப்படும்பட்டியல் மற்றும் நேரிடையாக அந்தந்த தாலுகா அலுவலகத்தில் தகுதியான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பங்கள் வரப்பெற்றுள்ளது.

    இதனைத்தொடர்ந்து இவர்களுக்கான நேர்காணல் அந் தந்த தாலுகா அலுவலகங்களில் நடந்து வருகிறது.

    அதன்படி வாலாஜா தாலுகா அலுவலகத்தில் நேற்று நேர் காணல் தாசில்தார் நடராஜன் தலைமையில் நடந்தது. சுமார் 75 பேர் நேர்காணலில் கலந்து கொண்டனர்.

    இந்த நேர்காணல் வருகிற 10-ந் தேதி வரை நடக்கிறது. இதில் தாசில்தார் ரேவதி, மண்டல துணை தாசில்தார் விஜயசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • இன்று நாகர்கோவிலில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது.
    • முன்னதாக விவசாயிகள் அணி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட தி.மு.க. விவசாய அணி நிர்வாகிகள் நேர்காணல் இன்று நாகர்கோவிலில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. விவசாய அணி அமைப்பாளரும், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியுமான விஜயன், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான மகேஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் ரெமோன் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    முன்னதாக நடந்த விவசாயிகள் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கேட்சன், துணைச் செயலா ளர் பூதலிங்கம், மாநகரச் செயலாளர் ஆனந்த், ஒன்றிய செயலாளர் சுரேந்திர குமார், பிராங்க்ளின், மதியழ கன், லிவிங்ஸ்டன், தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் இ. என். சங்கர் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மண்டல பொறுப்பாளருமான ரேகா பிரியதர்சினி ஆகியோர் கலந்து கொண்டு நேர்காணலை நடத்தினர்.
    • கழகத்திற்காக ஆற்றிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் மாவட்ட, ஒன்றிய மற்றும் மகளிர் தொண்டரணி பதவிகளுக்கு விருப்பமனு அளித்தவர்களுக்கான நேர்காணல் மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தடங்கம் சுப்பிரமணி முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த நேர்காணலை மாநில மகளிரணி செயலாளர்கள் ஹெலன்டேவிட்ஸன், நாமக்கல் ராணி மற்றும் மண்டல பொறுப்பாளருமான ரேகா பிரியதர்சினி ஆகியோர் கலந்து கொண்டு நேர்காணலை நடத்தினர்.

    அப்போது நேர்காணலில் பங்கு பெற்றவர்களிடம் அவர்களது வயது, எத்தனை ஆண்டுகளாக கழகத்தில் உறுப்பினராக உள்ளீர்கள், கழகத்திற்காக ஆற்றிய பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

    இந்த நேர்காணலின் போது மாவட்ட மகளிரணி அமைப்பாளர் முத்துலட்சுமி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி. மாவட்ட பொருளாளர் தங்கமணி ஒன்றிய செயலாளர்கள் வைகுந்தம், மல்லமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • மகளிரணி பொறுப்புகளுக்கான நேர்காணல் நடந்தது.
    • மனு அளித்தவர்களிடம் நேர்காணலை நடத்தினார்கள்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் மகளிர் அணி, மகளிர் தொண்டரணி, மாவட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு மகளிரணி பொறுப்புகளுக்கான நேர்காணல் நடந்தது.

    மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ் முன்னிலையில், மாநில மகளிரணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் நாமக்கல் ராணி, ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் டாக்டர் மாலதி நாராயணசாமி ஆகியோர், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. கட்சி பொறுப்புகளுக்கு விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணலை நடத்தினார்கள்.

    நேர்காணலை தொடர்ந்து புதிய மகளிரணி நிர்வாகிகள் கட்சி தலைமை அறிவிக்க உள்ளது. மதியழகன் எம்.எல்.ஏ. சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பதால் கலந்து கொள்ளவில்லை.

    • ஒரு ரெஸ்யூம் அதிகபட்சமாக இரண்டு பக்கம்தான் இருக்க வேண்டும்.
    • நம் ரெஸ்யூமை படிப்பவர் அதற்கு 20 முதல் 30 வினாடிகள் மட்டுமே செலவழிப்பார்.

    வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, 'ரெஸ்யூம்' அடிப்படையில்தான் உயரதிகாரிகள் உங்களை மதிப்பீடு செய்வார்கள். அப்படிப்பட்ட ரெஸ்யூமை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. நட்பு வட்டத்தில் கிடைக்கும் ரெஸ்யூம் மாடல்களை கொண்டு, விண்ணப்பிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு நல்ல வேலையை வாங்கி தர இருக்கும் ரெஸ்யூம்களை பற்றி தெரிந்து கொள்வோமா...! குறிப்பாக, ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும்?, அதில் என்னவெல்லாம் இருக்க வேண்டும்?, எப்படி தயாரிக்க வேண்டும்?, எத்தனை பக்கம் இருக்க வேண்டும்.... போன்ற தகவல்களை எல்லாம் இந்த கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்வோம்.

    * என்னென்ன வகையான ரெஸ்யூம்கள் இருக்கின்றன?

    ரெஸ்யூம்களில் மூன்று வகைகள் உள்ளன. அவை...

    1. ரிவர்ஸ் குரோனாலாஜிக்கல் ரெஸ்யூம்

    வேலைகளில் முன் அனுபவமுள்ளவர்கள் இது மாதிரியான ரெஸ்யூம்களை பயன்படுத்துவது நல்லது. இந்த ரெஸ்யூமில் தற்போது செய்யும் வேலை விவரங்களுடன் ஆரம்பித்து, மற்ற விவரங்களை அடுத்தடுத்து சொல்லலாம்.

    2. பங்ஷனல் ரெஸ்யூம்

    முதலில் கல்வி விவரம், கூடுதல் திறன், பணி அனுபவங்களை குறிப்பிட்டு, பின்னர் எந்தெந்த நிறுவனங்களில் எவ்வளவு ஆண்டுகள் வேலை செய்தீர்கள் மற்றும் அது சார்ந்த அனுபவங்களை அடுத்தடுத்து தெரியப்படுத்தலாம்.

    3. ஹைபிரிட் ரெஸ்யூம்

    மேலே சொன்ன இரண்டு வகையான ரெஸ்யூம்களின் கலவையாக இருப்பதுதான் ஹைபிரிட் ரெஸ்யூம். இதன் முக்கியமான நோக்கம், ஒருவருக்கு வேலை வாங்கித் தருவதுதான். ஒரு ரெஸ்யூமை ஈர்க்கும்படியாக தயார் செய்தாலே போதும், அது தன் கடமையை கச்சிதமாக செய்துவிடும்.

    * எத்தனை பக்கம் இருக்க வேண்டும்..?

    ஒரு ரெஸ்யூம் அதிகபட்சமாக இரண்டு பக்கம்தான் இருக்க வேண்டும். அதற்குள் அனைத்து விவரங்களையும் அடக்கி விடுவது நல்லது. நம் ரெஸ்யூமை படிப்பவர் அதற்கு 20 முதல் 30 வினாடிகள் மட்டுமே செலவழிப்பார். எனவே, இரண்டு பக்கத்திற்குள் அனைத்து தகவல்களையும் தெளிவாக அடக்குவது நல்லது.

    * எப்படி தயாரிப்பது..?

    ரெஸ்யூமின் முதல் பக்கத்தில் உங்களுடைய பெயர், இ-மெயில் ஐ.டி., செல்போன் நம்பர் ஆகியவை இருந்தால் போதுமானது. இதன் மூலம் நிர்வாகம் உங்களை எளிதாக தொடர்பு கொள்ள முடியும். அதே சமயம், உங்களது இ-மெயில் முகவரி பேன்ஸியாக இருக்கக்கூடாது. உங்கள் பெயரை மட்டும் முன்னிறுத்தும் வகையில் இ-மெயில் ஐ.டி.யை தயார் செய்து கொள்ள வேண்டும். இதே போல், உங்களது மார்பளவு புகைப்படத்தையும் ஸ்கேன் செய்து அதனை, ரெஸ்யூமின் வலது அல்லது இடது ஓரத்தில் வைக்க வேண்டும்.

    இ-மெயிலுக்கு குறிப்பிட்டது போலவே, உங்களது புகைப்படமும் உங்களது தரத்தை எடுத்துரைக்க வேண்டும். போட்டோவை பார்க்கும் போதே அதில் ஒரு உத்வேகம் தென்பட வேண்டும். செல்பிக்கு போஸ் கொடுப்பது போல் இருக்கக்கூடாது. ஒரு நிர்வாகத்தில் எந்த துறைக்கு விண்ணப்பிக்க போகிறீர்கள் என்பதை மிகச்சுருக்கமாக இரண்டே வரியில் எழுத வேண்டும்.

    ரெஸ்யூமில் குறிப்பிட்டுள்ள அனைத்து விவரங்களும் உண்மையானதாக இருக்கவேண்டும். மற்றவர்களை கவர எந்த பொய்யும் சொல்லக்கூடாது. உங்களைப் பற்றிய முக்கியமான விஷயங்களை அடிக்கோடிட்டு காட்டலாம். வித்தியாசப்படுத்திக்காட்ட தடித்த (Bold) எழுத்துகளில் எழுதலாம்.

    முதல்முறை வேலைக்கு விண்ணப்பிப்பவர் எனில், உங்கள் கல்வி சார்ந்த விவரங்களையும், ஏற்கனவே வேலை செய்தவராக இருந்தால் ஏற்கனவே பார்த்த வேலை விவரங்களையும் தெரியப்படுத்த வேண்டும். ஒரு வேலையில் இருந்து மற்றொரு வேலைக்கு மாறும்போது இடைப்பட்ட காலத்தில் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்தால் அதையும் ரெஸ்யூமில் குறிப்பிட வேண்டியது அவசியம். நாம் குறிப்பிடாவிட்டால் மனிதவள அதிகாரி அதுபற்றி கேட்டு, அதற்கு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.

    இப்போது சில நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் உண்மைத் தன்மையை அறிந்துகொள்ள, ஏற்கனவே வேலை செய்த அலுவலகங்களுக்கு இ-மெயில் அல்லது தொலைபேசி மூலமாக விவரங்களை கேட்டு தெரிந்துகொள்கின்றன.

    ஒரு நிறுவனம் ரெஸ்யூமை எந்த பார்மெட் வழியாக (இ-மெயில், பேக்ஸ், போஸ்ட் போன்றவை) அனுப்ப வேண்டும் என்கிறதோ, அதன்படி அனுப்புவதே நல்லது. இல்லாவிட்டால் நீங்கள் அனுப்பிய ரெஸ்யூம் நிறுவனத்தின் பார்வைக்கு செல்ல தாமதமாகலாம்.

    * வேலைக்கு ஏற்ற மாதிரி..!

    நாம் எந்த வேலைக்குச் செல்கிறோமோ, அந்த வேலைக்கு ஏற்றமாதிரி நம் ரெஸ்யூம் இருப்பது அவசியம். ஒரே மாதிரியான ரெஸ்யூமை அனைத்து வேலைக்கும் பயன்படுத்துவது நல்லதல்ல. உதாரணத்திற்கு, ஏற்கனவே ஒரு நிறுவனத்தின் விற்பனை பிரிவில் வேலை செய்த ஒருவர் மற்றொரு நிறுவனத்திற்கு வேலைக்காக தன் ரெஸ்யூமை அளிக்கிறார் எனில், அதில் ஏற்கனவே வேலை செய்த விவரங்களை, அந்த நிறுவனம் உங்களால் அடைந்த லாப விவரங்கள் இடம் பெற்றிருக்கவேண்டும். அப்படி குறிப்பிடும்போது செய்வினை (Active) சொற்களை பயன்படுத்துவது நல்லது.

    * இணையதளங்கள்

    முன்பெல்லாம், ரெஸ்யூம் தயாரிப்பது, மிகவும் சவாலான வேலை. நண்பர்கள், உறவினர்கள் தயாரித்து வைத்த ரெஸ்யூம்களை வாங்கி, அதில் நம்முடைய விவரங்களை நிரப்பி, தயாரிப்போம். ஆனால் அந்த நிலைமை இன்றில்லை. கூகுளில் ரெஸ்யூம் என்று தட்டினால், பல நூறு இணையதளங்கள் வந்து நிற்கின்றன. அதில் ஏற்கனவே தயாரித்த ரெஸ்யூம் மாடல்களில் தொடங்கி, உங்களுடைய கற்பனைக்கு ஏற்ப தயாரித்து கொடுக்க காத்திருக்கும் இணையதளங்கள் வரை எல்லாவற்றையும் இலவசமாகவே பயன்படுத்த முடியும். இயல்பான ரெஸ்யூம்கள் இலவசமாகவும், ஒருசில ரெஸ்யூம்கள் சில நூறு ரூபாய்களிலும் கிடைக்கின்றன. இதன் மூலம், யாரும் தயாரிக்காத புதுமையான மற்றும் கற்பனை திறன் நிரம்பப்பெற்ற ரெஸ்யூம்களை, உங்களால் உருவாக்க முடியும். வேலை தேடிச் செல்லும் நிறுவன அதிகாரிகளை 'இம்பிரஸ்' செய்ய முடியும்.

    * ரெஸ்யூமே...!

    'நம்மில் பலர் இதை ரெஸ்யூம் என்றும், 'ரெஸ்யூமே' என்று உச்சரிக்கிறோம். பயோடேட்டா (Bio Data), கரிகுலம் விட்டே (Curriculum Vitae), ரெஸ்யூம்ஆகிய மூன்றும் ஒன்று என்று நினைக்கிறார்கள் பலர். பயோடேட்டா என்பது ஒருவருடைய உயரம், எடை, முழுவிவரம் அடங்கிய திரட்டு. இதை காவலர் வேலைக்கு ஆள் எடுக்கும்போதும், திருமணம் சார்ந்த விஷயங்களுக்கும் மட்டுமே பயன்படுத்தலாம். 'கரிகுலம் விட்டே' என்பது உயர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பயன்படுத்துவது. ஆனால், ரெஸ்யூம் என்பதுதான் வேலை தேடுபவர்கள் நிறுவனங்களுக்குச் சமர்ப்பிக்க பயன்படுத்துவது.

    ×