என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் நுகர்வோர்"

    • இணைப்பு பெறுவதில் தாமதம் உள்ளிட்ட குறைகளை புகார்களாக தெரிவித்தனர்.
    • முகாமில் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார், மற்றும் அதிகாரிகள், மின் நுகர்வோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம் : 

    பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் பல்லடம் - உடுமலைரோட்டில் உள்ள மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் பல்லடம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவகர் தலைமையில் நடைபெற்றது. இதில் மின் நுகர்வோர் கலந்து கொண்டு மின் இணைப்புகளில் விநியோக குறைபாடு, இணைப்பு பெறுவதில் தாமதம் உள்ளிட்ட குறைகளை புகார்களாக தெரிவித்தனர்.இந்த முகாமில் பல்லடம் மின் கோட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார், மற்றும் அதிகாரிகள், மின் நுகர்வோர் கலந்து கொண்டனர்.

    • மதுரை தெற்கு கோட்டத்தில், நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை 

    மதுரை தெற்கு கோட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (19-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை தெற்கு கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடக்கிறது. மதுரை பெருநகர் மேற்பார்வை பொறியாளர் தலைமை தாங்குகிறார். தெற்கு கோட்டத்துக்கு உட்பட்ட சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச்சங்கம், யானைக்கல், டவுன்ஹால், மகால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம், தெப்பம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வை பொறியாளரிடம் குறைகளை தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை தெற்கு கோட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • மின் வாரிய அலுவலகத்தில் நாளை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    மதுரை

    உசிலம்பட்டி கோட்டத்தை சேர்ந்த மின் நுகர்வோர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உசிலம்பட்டி மின் வாரிய அலுவலகத்தில் நாளை (31-ந்தேதி) காலை 11 மணி முதல் 1 மணி வரை நடக்கிறது.

    இதில் செயற்பொறியாளர் மங்களநாதன் கலந்து கொண்டு மின் நுகர்வோர்களின் குறைகளை கேட்கிறார்.

    இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.

    • மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் பொன்னகரம் பகுதியில் உள்ள மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் விருதுநகர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி தலைமையில் நடந்தது.

    செயற்பொறியாளர் முரளிதரன், உதவி செயற்பொறியாளர் பூவேஸ் ராஜமோகன் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். மின் நுகர்வோர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

    ராஜபாளையம் அருகே உள்ள கிழவிகுளம் கிராம மக்களிடம் உதவி செயற்பொறியாளர் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக அதிகாரியிடம் குற்றம் சாட்டினர்.

    லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேற்பார்வை பொறியாளர் தேன்மொழி தெரிவித்தார்.

    • அவினாசி மின் வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர்களின் குறைகளை நேரில் கேட்டறிகிறார்.
    • மின் தொடர்பான தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

    அவினாசி :

    திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மின் நுகர்வோரின் குறைகளை நேரில் கேட்டறிந்து வருகிறார்.

    அந்த வகையில் நாளை (புதன்கிழமை) அவினாசி மின் வாரிய அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மின் நுகர்வோர்களின் குறைகளை நேரில் கேட்டறிகிறார். இதில் அந்த பகுதியை சேர்ந்த மின் நுகர்வோர் நேரில் கலந்துகொண்டு மின் தொடர்பான தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி பெறலாம். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.

    • மதுரை மதுரை வடக்கு கோட்டத்தில் நாளை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மின்பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மண்டல தலைமை பொறியாளர் அலுவலக வளாகத்தில் உள்ள வடக்கு மின்பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் வடக்கு கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (4-ந் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது. இந்த கோட்டத்திற்குட்பட்ட தமுக்கம், ரேஸ்கோர்ஸ், செல்லூர், தாகூர் நகர், சொக்கிகுளம், திருப்பாலை, ஆனையூர், ஆத்திகுளம், அண்ணாநகர், கே.கே.நகர், புதூர், மேலமடை ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவிக்கலாம். மேற்கண்ட தகவலை மதுரை வடக்கு கோட்ட மின்பகிர்மான செயற்பொறியாளர் மலர்விழி தெரிவித்துள்ளார்.

    • திருமங்கலத்தில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை (13-ந் தேதி) காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இதில் மின்நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்கள் குறை களை தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மங்களநாதன் தெரிவித்துள்ளார்.

    • மதுரை அருகே மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
    • இந்த தகவலை மதுரை தெற்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை பவர் ஹவுஸ் ரோட்டில் உள்ள தெற்கு மின் அலுவலகத்தில் நாளை 15-ந்தேதி காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சுப்பிரமணியபுரம் ஆரப்பாளையம் தமிழ் சங்கம் ரோடு, யானைக்கல், டவுன்ஹால் ரோடு, மீனாட்சி அம்மன் கோவில், மாகாளிப்பட்டி, மஹால், அரசமரம், தெப்பக்குளம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஆகிய பகுதிகளை சேர்ந்த மின் நுகர்வோர்கள் தங்களின் குறைகளை நேரிலோ அல்லது மனுக்கள் மூலமாகவோ மேற்பார்வை பொறியாளரிடம் தெரிவித்து தீர்வு காணலாம்.

    இந்த தகவலை மதுரை தெற்கு மின் பகிர்மான செயற்பொறியாளர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடை பெறுகிறது.
    • திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி ஆகிய பகுதி அலுவலகத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர் தங்களது குறைகளை கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மின்வாரிய பொறியாளர் அலுவலகம் வல்லம் சாலையில் நாளை 3-ந்தேதி (வியாழக்கிழமை) மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காலை 11 மணி முதல் மாலை 1 மணி வரை நடை பெற உள்ளது.

    எனவே வல்லம், மின் நகர், செங்கிப்பட்டி, வீரமர சன்பேட்டை, கள்ளப்பெ ரம்பூர், திருக்கானூர் பட்டி, வடக்கு தஞ்சாவூர், புறநகர் திருவையாறு, நகர் திருவையாறு, புறநகர் திருக்காட்டுப்பள்ளி, நகர் திருக்காட்டுப்பள்ளி, நடுக்காவேரி ஆகிய பகுதி அலுவலகத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர் தங்களது குறைகள் ஏதும் இருப்பின் இந்த குறைதீர் கூட்டத்தில் நேரில் வந்து தெரிவிக்கலாம்.

    இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் கலை வேந்தன் தெரிவித்துள்ளார்.

    • மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி அலுவலகத்தில் நடக்கிறது.
    • குறைகளை நேரில் மனுவாக வழங்கி நிவர்த்தி பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

    திருப்பூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சார்பில் வருகிற 9-ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அவினாசி அலுவலகத்தில் நடக்கிறது.

    இதில் மின் நுகர்வோர்களின் மின் தொடர்பான குறைகளை மின் பொறியாளர் நேரில் ேகட்டறிகிறார்.எனவே மின் நுகர்வோர் தங்களது மின் தொடர்பான குறைகளை நேரில் மனுவாக வழங்கி நிவர்த்தி பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை அவினாசி மின் வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.

    • செப்டம்பர் 25ந்தேதி (திங்கட்கிழமை) ஒருநாள் வேலை நிறுத்தம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது.
    • அரசு தரப்பில் இருந்து கோரிக்கைகளுக்கு முக்கிய தீர்வு கிடைக்கவில்லை.

    திருப்பூர்:

    தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான கோபி பழனியப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான மின் கட்டண குறைப்புக்காக 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 25ந்தேதி (திங்கட்கிழமை) ஒருநாள் வேலை நிறுத்தம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. பிறகு செப்டம்பர் 26ந் தேதி தொழில்துறை அமைச்சர், தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேசினார்.

    இந்த கூட்டத்தின் முடிவில் முதலமைச்சரிடம் எடுத்துக்கூறி இரண்டொரு நாளில் நல்ல பதிலை தெரிவிக்கிறோம் என்று கூறினார். அதன் பிறகு 29-ந் தேதி இரண்டாவது கூட்டம் சென்னையில் மீண்டும் அதிகாரிகள் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட தொழில் அமைப்புகளின் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர். நல்லதொரு தீர்வை அரசாங்கம் ஏற்படுத்தி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் கலந்து கொண்டோம். ஆனால் அரசு தரப்பில் இருந்து கோரிக்கைகளுக்கு முக்கிய தீர்வு கிடைக்கவில்லை.

    இன்று மாலை திருப்பூர் பிருந்தாவன் சிட்கோவில் உள்ள ,தென் இந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க (சைமா) அரங்கில் அவசர கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூரின் அனைத்து தொழில் அமைப்பு சங்கங்களும் கலந்து கொள்ள வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

    • காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீ்ர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும்.
    • காங்கயம் பஸ்நிலையம் அருகில் பி.எஸ்.ஜி.லாட்ஜில் பல்லடம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

    காங்கயம்:

    காங்கயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் கணேஷ்ராம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காங்கயம் கோட்டத்தில் மாதாந்திர மின் நுகர்வோர் குறைதீ்ர்க்கும் நாள் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடைபெறும். இதுபோல் இந்த மாதத்திற்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 11 மணிமுதல் மதியம் 1 மணிவரை காங்கயத்தில் பஸ்நிலையம் அருகில் பி.எஸ்.ஜி.லாட்ஜில் பல்லடம் மேற்பார்வை பொறியாளர் தலைமையில் நடைபெற உள்ளது.

    எனவே மின்நுகர்வோர் இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை, குறைகளை தெரிவித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×