search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குற்றவாளிகள்"

    • இரட்டை கொலையில் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என கிராமமக்கள் அறிவித்துள்ளனர்.
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணா விரதம் இருந்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த மாதம் 11-ந் தேதி அதிகாலையில் தாய், மகளை கொலை செய்து 60 நகைகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்து தப்பினர்.

    இரட்டை கொலை நடந்து 27 நாட்கள் ஆகியும் குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி தலைமையில், சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன், உஞ்சனை நாடு, செம்பொன்மாரி நாடு இரவுசேரி நாடு, தென்னிலைநாடு உட்பட 14 நாட்டார்கள் முன்னிலையில் நேற்று 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணா விரதம் இருந்தனர்.

    இதில் நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம், துணைத் தலைவர் ரமேஷ், தேவகோட்டை யூனியன் தலைவர் பிர்லா கணேசன், கண்ணங்குடி யூனியன் தலைவர் சித்தானூர் சரவணன் மெய்யப்பன் கார்த்திக், த.மா.கா மாநில செயலாளர் இருமதி துரைகருணாநிதி, பா.ஜ.க. மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் தேர்போகி பாண்டி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செயலாளர் காமராஜ் மற்றும் வர்த்தக சங்கத்தினர், ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் கடையடைப்பு செய்து உண்ணாவிரதம் இருந்தனர்.

    உண்ணாவிரத்தை முடித்து கொண்ட காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி கூறுகையில், இந்த வழக்கு சம்பந்தமாக கூடுதலாக ஒரு மாதத்திற்குள் போலீசார் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இல்லை யென்றால் அடுத்த நிகழ்வு மிகப்பெரிய அளவில் நடைபெறும்.

    ஒரு மாத காலத்திற்குள் போலீசார் குற்றவாளிகளை கைது செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். தேவகோட்டை துணைக் கண்காணிப்பாளர் பிரகாஷ், காரைக்குடி துணை கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் ேபாலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • சி.சி.டி.வி காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு குற்ற–வாளிகளை தேடி வந்தனர்.
    • 38 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்று வந்தன. இது தொடர்பாக ஏராளமான புகார்கள் வந்தன.

    இதையடுத்து குற்றவாளிகளை கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிபிரியா உத்தரவிட்டார்.

    இதையடுத்து தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்த தனிப் படையில் போலீஸ்

    சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன், போலீஸ்காரர்கள் புகழேந்தி, திருக்குமரன், கோதண்டம் ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

    இந்த தனிப்டையினர் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போன இடங்களில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்நிலையில், தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்ட தஞ்சையை சேர்ந்த ராஜ் (வயது 29), ஆனந்த் (31), கோபிநாத் (19), பிரகலாதன் (19) ஆகிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கைது செய்யப்–பட்டவர்களிடம் இருந்து 38 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

    கைது செய்யப்பட்ட 4 பேரையும் தஞ்சை மேற்கு போலீசில் ஒப்படைத்தனர்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரா வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ராஜபாளையத்தில் சி.சி.டி.வி. காமிராவை உடைத்த 3 வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்
    • குற்ற சம்பவங்களை தடுக்க முக்கிய பகுதிகளில் போலீசார் சார்பில் கண்காணிப்பு காமிராக்களை பொருத்தினர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியவும் முக்கிய பகுதிகளில் போலீசார் சார்பில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி முடங்கியார் ரோட்டில் உள்ள வனச்சரக சோதனை சாவடியில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டுள்ளது. நேற்று தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அந்த வழியாக வந்த சிலர் சாவடியில் பொருத்தப்பட்டிருந்த காமிரா மீது கல்வீசினர். இதில் ரூ. 12 ஆயிரம் மதிப்புள்ள கண்காணிப்பு காமிரா உடைந்து சேதமானது. இதுகுறித்து வடக்கு தலைமை காவலர் பாலாஜி கொடுத்த புகாரின் பேரில் ராஜபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கண்காணிப்பு காமிரா மீது கல்வீசி சேதப்படுத்தியது சோமையாபுரம் தெருவைச் சேர்ந்த நீராத்துலிங்கம் மகன் வனஅரவிந்த் என்ற கபாலி, கூடலிங்கம் மகன் தங்கபழம், மாலையாபுரத்தைச் சேர்ந்த மாரியப்பன் மகன் வைரவன் என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    • கொலை குற்றவாளிகள் தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • அதன்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்தில் கொலை முயற்சி மற்றும் கொலை குற்றவாளிகள் தொடர்பான வழக்குகள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அதனடிப்படையில் அண்டோ (எ) பன்னீர்செல்வம் 25/22, த/பெ. பலராமன், ஜோதி அண்ணாமலை நகர், சென்னை, அர்ஜுன் 26/22, த/பெ. அசோகன் வியாசர்பாடி, சென்னை, நெட்ட சக்தி (எ) சக்திவேல்20/22, த/பெ. ரமேஷ், வியாசர்பாடி, சென்னை, வில்லன் காசி என்கிற காசி28/22, த/பெ. முனுசாமி, சாஸ்திரி நகர், வியாசர்பாடி, சென்னை, ஜில்லா சுசி என்கிற சுசீந்தர் 24/22, ஆகிய இருவரும் தகப்பனார் வெங்கடேசன், சாஸ்திரி நகர், வியாசர்பாடி, சென்னை ஆகியோர் மீது கொலை முயற்சி மற்றும் கொலை வழக்கு உள்ளது.

    இதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர் பரிந்துரையின்படி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அருண் தம்புராஜ் கைது செய்ய உத்தரவிட்டார்.

    அதன்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • பூரணசந்திரன் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் தொடர்ந்து பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தனர்.
    • குற்றவாளிகள் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்திற்கு உட்பட்ட விளந்திடசமுத்திரம் பகுதியை சேர்ந்த கட்ட ராஜா என்கிற பூரணசந்திரன் (வயது24) மற்றும் கொண்டல் பகுதியை சேர்ந்த ரெட் தினேஷ் என்கிற தினேஷ் (22) ஆகிய இருவரும் தொடர்ந்து பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்தனர்.

    தற்போது குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பரிந்துரையின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா உத்தரவிட்டார். இதனையடுத்து மேற்படி குற்றவாளிகள் இருவரும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
    • போலீசார் விரைந்து சென்று இருவரை கைது செய்தனர்.

    திருவையாறு:

    திருவையாறு அருகே மணக்கரம்பை பைபாஸ் அருகே உள்ள அரசு மதுபான கடை முன்பு கடந்த 18-ம் தேதி பள்ளியக்ரஹாரம் சின்னத்தெருவை சேர்ந்த ஜார்ஜ் மகன் பட்டதாரி வாலிபர் பிரேம் (31) என்பவரை வெட்டி கொலை செய்த வழக்கில் இறந்துபோன பிரேம் அண்ணன் முத்து (46) நடுக்காவேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் சப்இன்ஸ்பெக்டர் மதிவாணன் ஆகியோர் பிரேம் கொலை வழக்கில் பள்ளியக்ரஹாரம் காந்தி நகரை சேர்ந்த ராமசந்திரன் மகன் மணிகண்டன் (33), பள்ளியக்ரஹாரம் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த பவர்சிங் மகன் விஷ்வபிரசாத் (23), முருகையன் மகன் புல்லாண்டு (என்ற) பிரகாஷ் (34), பள்ளியக்ரஹாரம் பெரியத்தெருவை சேர்ந்த நடராஜன் மகன் சூர்யா (25) ஆகிய 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர்.

    இந்த நிலையில் திருவை யாறு அடுத்த தென்பெரம்பூர் வெண்ணாற்றங்கரையில் கொலை வழக்கில் தொட ர்புடைய குற்றவாளிகளான விஷ்வபிரசாத் (23), சூர்யா (25) ஆகிய இருவரும் பதுங்கி இருப்பதாக நடுக்காவேரி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியத்திற்கு ரகசிய தகவல் வந்தது.

    தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரம ணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பதுங்கியிருந்த விஷ்வபிரசாத், சூர்யா ஆகிய இருவரையும் பிடித்து கைது செய்தனர்.

    • காவல்துறை அதிகாரிகளை கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.
    • பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு கொடுத்தால் மனு ரசீது கொடுப்பதில்லை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூர் காவல் நிலையத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

    அப்போது பாதிக்கப்பட்ட மக்களின் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல், குற்றவாளிகளுக்கு துணை போகும்பெரம்பூர் காவல்துறை அதிகாரிகளை கண்டித்து நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்தி ரன் தலைமை வகித்தார்.

    மாவட்ட செயலாளர் சீனிவாசன்மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், துரைராஜ், சிங்காரவேலன், சிம்சன், விஜயகாந்த், வெண்ணிலா, மாவட்டக்குழு உறுப்பினர் மார்க்ஸ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கண்டன உரையாற்றினர்.

    சட்டம் ஒழுங்கு சீர்குலை யாமல் தேசத்தின்பாதுகாவலனாக இருக்கவேண்டிய காவல்துறை, பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு கொடு த்தால் மனு ரசீது கொடுப்பதில்லை.

    நேரடி விசாரனை கூட இருப்பதில்லைமாறாக குற்றவாளிகள் தப்பிக்க அனைத்து வழி வகைக ளையும் பெரம்பூர் காவல்துறை செய்து வருகின்றனர்.

    சில புகார்கள் மீது கட்டப்பஞ்சாயத்து பேசி முடித்துள்ளது.

    வழக்கு பதிவு செய்ய நேரிட்டால் புகார்மனு மீது உரிய வழக்கு பதிவு செய்வதில்லை.

    மேலும் காவல்நிலைய ஜாமீனிலே குற்றவாளிகள் தப்பித்து செல்கிறார்கள் என குற்றஞ்சாட்டி முழக்கங்கள் எழுப்பிய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • செம்போடை மகாராஜபுரம் கிராமத்தில் நடந்த கொலை முயற்சி வழக்கில் குற்றவாளிகளுக்கு 3 வருடம் சிறை தண்டனை விதித்தது.
    • இந்த வழக்கிற்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்த கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர் கவுதமனை பலர் பாராட்டினர்.

    நாகப்பட்டினம்:

    வேதாரண்யம் அருகே செம்போடை மகாராஜபுரம் கிராமத்தில் கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு கொலை முயற்சி வழக்கில் ராமசாமி, பாலகுரு, முத்துகிருஷ்ணன், தியாகராஜன் ஆகியோருக்கு 3 வருடம் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் வழங்கி தலைமை குற்றவியல் நீதிபதி கார்த்திகா உத்தரவிட்டார். இதில் ராமசாமி வயது மூப்பின் காரணமாக ஏற்கனவே இறந்து விட்டார்.

    மேலும் இந்த வழக்கிற்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்த கூடுதல் அரசு தரப்பு வழக்கறிஞர் கவுதமனை பலர் பாராட்டினர்.

    ×