search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டச்சத்து"

    • பாலூட்டும் தாய்மார்கள் உணவில் அதிகளவு கருப்பட்டியை சேர்த்து கொள்ளுங்கள்.
    • காய்கறிகள் சாப்பிடுவதை விட இறைச்சி வகைகளில் அதிகமாக பால் சுரக்கும் தன்மை இருக்கிறது.

    குழந்தைகளுக்கு எல்லா ஊட்டச்சத்துகளும் நிறைவாக கிடைக்கும் உணவு தாய்ப்பால் மட்டுமே. குழந்தைக்கு எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவு தாய்ப்பால் தான். மற்ற உணவுகளை உண்ணும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மையான உணவாகும்.

    குறிப்பிட்ட காலம் வரை குழந்தைக்கு தாய்ப்பாலை ஊட்டவது குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியமானது. தாயிடமிருந்து கிடைக்கும் இந்த இயற்கையான உணவு ஆரோக்கியம், குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஒரு சிலருக்கு தாய்பால் சுரப்பதில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. எளிதில் சுரப்பை அதிகரிக்க சில உணவு முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதை பற்றி பார்ப்போம்.

    தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் அதிகமாக சுரக்க கருப்பு சுண்டல், வெள்ளை சுண்டல், பட்டாணி மற்றும் பச்சை பயிறு, தட்டை பயிறு, இதுபோன்ற உணவுகளை ஊறவைத்து தாளித்து இதை சாப்பிட்டு வரலாம். இதில் ப்ரோட்டீன் சத்து அதிகமாக உள்ளதால் பால் சுரப்பி அதிகமாக ஆகும்.

    அதுமட்டும் அல்லாமல் நாட்டு கருது, வேகவைத்த வேர்க்கடலை இதெல்லாம் மாலை நேரத்தில் பால் கொடுக்கும் தாய்மார்கள் சாப்பிட்டால் ப்ரோட்டீன் சத்து அதிகமாய் கிடைக்கும்.

    கீரையை சுத்தம் செய்து கைப்பிடி அளவு பாசிப்பருப்பை அதனுடன் வேக வைத்து கூட்டாக சாப்பிட்டு வந்தால் தாய்ப் பால் சுரக்கும்.


    தாய்ப்பால் அதிகமாக சுரக்க தாய்மார்கள் அனைவரும் மட்டன், சிக்கன், கருவாடு, மீன் போன்றவை சாப்பிட வேண்டும். தாய்ப்பால் கொடுக்கும் அனைவரும் முட்டை, சிக்கன், குழம்பு மீன் முக்கியமாக சாப்பிட வேண்டும்.

    காய்கறிகள் சாப்பிடுவதை விட இறைச்சி வகைகளில் அதிகமாக பால் சுரக்கும் தன்மை இருக்கிறது. அதோடு சரியான தூக்கம் இல்லாமல் இருந்தாலும் பால் சுரக்கும் தன்மை இருக்காது. பகலில் கண்டிப்பாக தூங்கவேண்டும்.

    வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும். இது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் உதவுகிறது.

    வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் முதலியவற்றை தினமும் உணவுடன் ஒரு வேளை சேர்த்துக் கொள்வது நல்லது.

    முருங்கைக்கீரையை கூட்டாகவோ, பொரியலாகவோ, சூப்பாகவோ ஏதோ ஒரு வகையில் சமைத்து சாப்பிடலாம். இதை சரியான முறையில் சமைக்காவிட்டால் வயிற்றுப் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

    பால் சுறா என்னும் கருவாடு (அ) மீன் மிகச்சிறந்த உணவு. தாய்ப்பால் கொடுப்பவர்கள் சமைத்த உடனே சாப்பிட வேண்டும் பதப்படுத்தி வைத்து சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.

    பால் சுரக்க என்ன உணவுகளை சாப்பிடவேண்டும் என்று யோசிக்கும் தாய்மார்கள் தினமும் உணவில் 500 மில்லி பாலினை உணவில் அவசியம் சேர்த்து கொள்ளுங்கள். இதனால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்.

    கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பாலை சுரக்க செய்வதுடன், இவற்றின் சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது.


    எனவே பாலூட்டும் தாய்மார்கள் உணவில் அதிகளவு கருப்பட்டியை சேர்த்து கொள்ளுங்கள்.

    கிழங்கு வகைகள் நல்லது தான் என்றாலும் குறைவாக சாப்பிடவும். அதிகம் சாப்பிட்டால் குழந்தைக்கு மந்தம் வரும்.

    தாய்ப்பால் உற்பத்தி குறைவிற்கு கால்சியம் குறைபாடும் ஒரு காரணம். இச்சத்தில் குறைபாடு இருந்தால் தாய்ப்பாலை வறட்சியடையச் செய்து விடும்.

    மன அழுத்தம் வந்தால் ஹார்மோன்களில் ஏற்றத் தாழ்வுகள் ஏற்பட்டு இறுதியில் தாய்ப்பால் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மனதை ரிலாக்ஸாக, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வது அவசியம்.

    அதிக காரம், மசாலா சேர்த்த உணவுகள், எண்ணெயில் பொரித்தவை மற்றும் செயற்கை நிறங்கள் மற்றும் ரசாயணக் கலவை சேர்த்த உணவுகளை தவிர்க்கவும். குறிப்பாக குளிர் பானங்களைத் தவிர்க்கவும். சீதாப்பழத்தை கண்டிப்பாக தவிர்க்கவும்.

    குழந்தையின் ஆரோக்கியமான வாழ்விற்கு நாம் போடும் முதல் அடித்தளம் இந்த தாய்ப்பாலில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. அதனால் வீட்டில் உள்ள நம்முடைய ஆரோக்கியமான சமையல் மூலமாகவே தாய்ப்பாலை அதிகரிக்க செய்யலாம்.

    • தா.பேட்டையில் வட்டார மகளிர் திட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் சிறுதானிய உணவு வகைகள் குறித்தான ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது.
    • மேலும் கண்காட்சியில் சிறப்பாக சிறுதானிய உணவு வகைகள் வைத்திருந்த மகளிர் குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தா.பேட்டை

    தா.பேட்டையில் வட்டார மகளிர் திட்ட இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் சிறுதானிய உணவு வகைகள் குறித்தான ஊட்டச்சத்து உணவு திருவிழா நடைபெற்றது.

    நிகழ்ச்சியினை தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சர்மிளா பிரபாகரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசினார். வட்டார இயக்க மேலாளர் செல்லப்பாப்பா அனைவரையும் வரவேற்றார். ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (வட்டாரம்) ஸ்ரீதேவி, (ஊராட்சிகள்) குணசேகரன் ஆகியோர் சிறுதானிய உணவு வகைகள் குறித்து சிறப்புரை ஆற்றினர். அப்போது கம்பு, சோளம், கேழ்வரகு, கருப்புகவுனி, கற்றாழை, முடக்கத்தான் கீரை உள்ளிட்ட பல்வேறு வகையான சிறுதானிய உணவு வகைகள் மகளிர் குழுவினர் தயார் செய்து கண்காட்சியில் வைத்திருந்தனர்.

    மேலும் கண்காட்சியில் சிறப்பாக சிறுதானிய உணவு வகைகள் வைத்திருந்த மகளிர் குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மகளிர் குழு உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • கர்ப்ப காலத்தில் அனைத்து ஊட்டச்சத்துக்களும் அவசியம்.
    • கர்ப்பமாக இருக்கும்போது உயர் ரத்த அழுத்தம் கரு வளர்ச்சியை பாதிக்கும்.

    கர்ப்ப காலத்தில் உங்களுக்குத் அனைத்து ஊட்டச்சத்துக்களும் அவசியம் தேவை. கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள் மற்றும் கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற மேக்ரோ நியூட்ரியண்ட்களை நீங்கள் உட்கொள்ள வேண்டும்.

    வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் கர்ப்பத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் தாய் மற்றும் கரு வளர்ச்சிக்கு உதவுகின்றன, மேலும் உங்கள் குழந்தையின் உயிரணு வளர்ச்சி, எலும்பு மற்றும் உறுப்பு வளர்ச்சி போன்றவற்றுக்கு மிகவும் முக்கியமாகும்.

    ஃபோலேட்

    ஃபோலேட் ஒரு பி வைட்டமின் ஆகும், இது சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தி மற்றும் கருவின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. ஃபோலிக் அமிலம் என்பது பெரும்பாலான மக்கள் உட்கொள்ளும் ஃபோலேட்டின் செயற்கை வடிவமாகும். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு நரம்புக் குழாய் குறைபாடுகள் மற்றும் பிறவி குறைபாடுகள், பிளவு அண்ணம் மற்றும் இதயக் குறைபாடுகள் போன்ற பிறவி குறைபாடுகளின் அபாயத்தை குறைக்க கர்ப்பிணிப் பெண்கள் ஒரு நாளைக்கு 600 யூஜி ஃபோலேட் அல்லது ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

    இரும்புச்சத்து

    கர்ப்ப காலத்தில் ஒரு பெண்ணின் இரும்புச்சத்துக்கான தேவை கணிசமாக அதிகரிக்கிறது, ஏனெனில் தாயின் ரத்த அளவு கிட்டத்தட்ட 50 சதவிகிதம் அதிகரிக்கிறது. இது ஆக்சிஜன் போக்குவரத்து மற்றும் கருவின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் நஞ்சுக்கொடி, உங்கள் கர்ப்பத்தின் மூலம் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கும்.

    வைட்டமின் டி

    சூரிய ஒளியில் இருந்து கிடைக்கக்கூடிய வைட்டமின் டி சத்துக்கள் உங்கள் எலும்புகளை வலுவாக வைத்திருப்பதோடு, நீரிழிவு, டிமென்ஷியா மற்றும் சில புற்றுநோய்கள் போன்ற பல நோய்களைத் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது.

    மெக்னீசியம் சத்து

    கர்ப்பமாக இருக்கும்போது உயர் ரத்த அழுத்தம் கரு வளர்ச்சி குன்றிய மற்றும் முன்கூட்டிய பிறப்பையும் ஏற்படுத்தும். பச்சை இலை காய்கறிகள், அத்திப்பழங்கள், வாழைப்பழங்கள், நட்ஸ் மற்றும் விதைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை உண்ணலாம்.

    மீன் எண்ணெய்

    மீன் எண்ணெயில் டிஹெச்ஏ மற்றும் இபிஏ ஆகிய இரண்டு அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை உங்கள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியமானவை. குழந்தையின் மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் மற்றும் தாயின் மனச்சோர்வைக் குறைக்கும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. கருவின் கண் வளர்ச்சிக்கும் நன்மை தரும்.

    புரோபயாடிக்

    புரோபயாடிக்குகள் குடலில் வாழும் மற்றும் செரிமானத்திற்கு உதவும் நட்பு பாக்டீரியா. தாய்மார்கள் தங்கள் கர்ப்பத்தின் மூலம் செரிமான பிரச்சினையைத் தடுக்க புரோபயாடிக்குகளை எடுப்பதி ஆச்சரியமில்லை. அவை ஒன்பது மாதங்கள் மற்றும் அதற்கு பிறகும் எடுத்துக்கொள்வது முற்றிலும் பாதுகாப்பானது.

    • சத்து மாவை வளரும் குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பது மிகவும் நல்லது.
    • காலை உணவாக மட்டுமின்றி, மாலை வேளையில் காபி, டீ-க்கு பதிலாகவும் சாப்பிடலாம்.

    சத்து மாவை வளரும் குழந்தைகளுக்கு தினமும் கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் இதை பெரியோர்களும் சாப்பிடலாம். அதுவும் இதை காலை உணவாக மட்டுமின்றி, மாலை வேளையில் காபி, டீ-க்கு பதிலாகவும் சாப்பிடலாம். இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். உங்களுக்கு வீட்டிலேயே சத்து மாவு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே சத்து மாவு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்:

    பச்சை பயறு - 1/2 கப்

    தினை - 1/2 கப்

    உளுத்தம் பருப்பு - 1/4 கப்

    கொள்ளு - 1/2 கப்

    கைக்குத்தல் அரிசி - 1/4 கப்

    பொட்டுக்கடலை - 1/2 கப்

    கோதுமை மாவு - 1/2 கப்

    ராகி மாவு - 1/2 கப்

    மக்கா சோளம் - 1/2 கப்

    வேர்க்கடலை - 1/4 கப்

    முந்திரி - 1/4 கப்

    பாதாம் - 1/4 கப்

    ஏலக்காய் - 10

    சுக்கு பொடி - 2 டீஸ்பூன்

    செய்முறை:

    முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சூடேற்ற வேண்டும். பின்னர் அதில் பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பாதாம், முந்திரி, ஏலக்காய் ஆகியவற்றைத் தவிர, மற்ற பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்கு குளிர வைக்க வேண்டும்.

    வறுத்த பொருட்கள் நன்கு குளிர்ந்ததும், பிளெண்டர் அல்லது மிக்சி ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் அதை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொட்டுக்கடலை, முந்திரி, வேர்க்கடலை, பாதாம் மற்றும் ஏலக்காயைப் போட்டு பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, அதையும் மிக்சி ஜாரில் போட்டு மென்மையாக அரைத்து பொடி செய்து, அதை அரைத்து வைத்துள்ள பொடியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

    அடுத்து அதே வாணலியை மீண்டும் அடுப்பில் வைத்து, அதில் மாவுகளை ஒவ்வொன்றாக பொன்னிறமாக வறுத்து, அதையும் அந்த பொடியுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சுக்கு பொடியை சேர்த்து, அனைத்து பொடிகளையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். * பிறகு கலந்து வைத்துள்ள பொடியை சல்லடையால் சலித்து, காற்றுப்புகாத ஒரு கண்டெய்னரில் போட்டு சேகரித்துக் கொண்டால், சத்து மாவு தயார்.

    இந்த சத்து மாவை செய்யும் போது சிறிது எடுத்து பாத்திரத்தில் போட்டு, அதில் பால் அல்லது நீர் சேர்த்து கலந்து, சுவைக்கேற்ப சர்க்கரை சேர்த்து, பின் அடுப்பில் வைத்து, கெட்டியாகும் வரை கிளறி இறக்கினால், சுவையான சத்து மாவு கஞ்சி தயார்.

    • பீட்சா, பர்கர் போன்ற துரித உணவை மாணவர்கள் தவிர்க்க வேண்டும்.
    • அன்னை பாத்திமா கல்லூரி முதல்வர் அறிவுரை வழங்கினார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அன்னை பாத்திமா கல்லூரியில் நாட்டு நல பணித்திட்டம் மற்றும் திருமங்கலம் வட் டார ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சிப் பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு கூட்டம் கல்லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா, பொருளாளர் சகிலா ஷா ஆகியோரின் அனுமதி யின் பேரில் கல்லூரி முதல் வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற் றது.

    இதில் இளம் வயதில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை சரிசெய்ய விட்டால் பிற்காலத்தில் பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் பீட்சா, பர்கர் போன்ற துரித உணவுகளை தவிர்த்து சரிவிகித சத்தான உணவை மாணவ, மாணவிகள் உட் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழவேண்டும் என கூறினார்.

    மருத்துவ அலுவலர் ஹரிஷ் ஊட்டச்சத்து சரி விகித உணவு பற்றியும், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காந்திமதி ரத்த சோகை பற்றியும், வட்டார ஒருங்கிணைப்பாளர் பாரதி பெண்களுக்காக அரசு வழங்கும் சுகாதார திட்டங் கள் பற்றியும் எடுத்துரைத் தனர்.

    இறுதியில் ஊட்டச் சத்து பற்றி எழுப்பிய வினாக்க ளுக்கு சரியான விடை அளித்த மாணவ, மாணவிக ளான தமிழ் துறை யைச் சார்ந்த ஹரி சங்கர், துர்க்கா, வணிகவியல் துறையைச் சார்ந்த ஹேமஸ்ரீ, ரூபஸ்ரீ, நாகஜோதி ஆகியோ ருக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி னார். முன்னதாக தமிழ்த்து றைத் தலைவரும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலரு மான முனைவர் முனி யாண்டி வரவேற்றார்.

    கூட்டத்தில் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்கள் ராமுத்தாய், சிங்கராஜா, ராஜேஸ்வரி, இன்பமேரி, ஜோதி, ஆறுமுகஜோதி வர லாற்றுத்துறைத் தலை வர் மணிமேகலை, உதவிப்பேரா சிரியர் இருளாயி, வணிகவி யல் துறை உதவிப்பேராசி ரியர் சிவசுந்தரி, சகாய வாணி, முத்துலெட்சுமி, கதிரேசன் உள்ளிட்ட 20 பேராசிரியர்களும் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டு பயனடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை நாட்டு நல பணித்திட்ட தொண்டர் கள் செய்தனர். இறுதியில் வணிகவியல் துறைத்தலை வர் தனலெட்சுமி நன்றி கூறினார்.

    • புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம் சங்கரன்கோவிலில் நடந்தது.
    • சத்தான உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் பொது வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் புதுமண தம்பதிகளுக்கான கருத்தரங்கம் சங்கரன்கோவிலில் நடந்தது. குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி தலைமை தாங்கினார்.

    குழந்தை பராமரிப்பு

    தொடர்ந்து மருத்துவ அலுவலர்கள் மகாலட்சுமி மற்றும் சூர்யா ஆகியோர் புதுமண தம்பதிகளுக்கு பாது காப்பான தாய்மை, கர்ப்பகால பராமரிப்பு, தாய்ப்பாலின் நன்மைகள், குழந்தை பராமரிப்பு, மகப்பேறு நலஉதவி திட்டங்கள் மற்றும் ஒரு குழந்தையின் முதல் 1,000 நாட்கள் வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினர். இதில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்மையாக குழந்தைகளின் ஊட்டச்சத்து அதிகரிக்க வேண்டும் எனும் முனைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். புதுமணத் தம்பதிகள், பெண்கள் கருவுற்று இருக்கும் நிலையில் இப்பொழுது இருந்தே தாய் ஆரோக்கியம் மற்றும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.

    ஊட்டச்சத்து குறைபாடு

    குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் வளர்க்க வேண்டும் இதற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அதிகாரிகள், அலுவலர்கள் வழங்கும் ஆலோசனைகளை கேட்டு நல்ல சத்தான உணவுகளை உட்கொண்டு நீங்களும், உங்கள் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் பேரூர் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சங்கர், மாணவரணி வீரமணி, வக்கீல் சதீஷ், ஜான் ஜெயக்குமார் மேற்பார்வை யாளர்கள் மல்லிகா, செல்வம், ராஜே ஸ்வரி, குழந்தை நல பணி யாளர்கள் மற்றும் புதுமண தம்பதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுக்கோட்டையில் 100 கர்ப்பிணிகளுக்கு ஊட்டசத்து தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு வழங்கினார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. மருத்துவரணி சார்பில் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அண்ணா பிறந்த நாளில் திருவரங்குளம் அரசு மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் 100 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு ஆகியவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை வழங்கினார்.

    • 10-ம் வகுப்பு மாணவி ஷிவானி வரவேற்றார்.
    • பள்ளி தாளாளர் தில்லை செல்வம் தலைமை தாங்கினார்.

    நாகர்கோவில்:

    மயிலாடி மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில் இந்திய குழந்தை மருத்துவ குழுமம், தமிழக மாநில பிரிவு சார்பில் நடைபெற்ற பள்ளிகளில் ஊட்டச்சத்து மற்றும் உடல் செயல்பாடு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தாளாளர் தில்லை செல்வம் தலைமை தாங்கினார். 10-ம் வகுப்பு மாணவி ஷிவானி வரவேற்றார். இதில் இயக்கு நர்கள் கலந்து கொண்டனர். பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ச்சியை ஒருங்கி ணைத்தனர்.

    இதில் டாக்டர்கள் சுரேஷ் பாலன், கோபால சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்க ளுக்கு தேவை யான ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகள், ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் தீமைகள் மற்றும் துரித உணவு வகையின் தீமைகள், உடற்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியனர். மாணவி அமிர்தா நன்றி கூறினார்.

    • கண்காட்சி அமைத்து பொது மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட வுள்ளது.
    • பணியாளர்களால் உருவாக்கப்பட்ட ஊட்டச் சத்து குறித்த விழிப்புணர்வு கோல கண்காணட்சியினை பார்வையிட்டார்.

    நாகர்கோவில் ;

    கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட் டத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலக முகப்பில் தேசிய ஊட்டச் சத்து மாத விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கலந்து கொண்டு, ஊட்டச்சத்து கண்காட்சி அரங்கினை திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்வானது கொண்டா டப்பட்டு வருகிறது. தொடர்ந்து குமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் இந்த வருடம் தேசிய ஊட்டச்சத்து மாத நிகழ்வானது ஊட்டச் சத்தான இந்தியா, கல்வி நிறைந்த இந்தியா மற்றும் வலுவான இந்தியா என்ற கருத்தின்கீழ் கொண் டாடப்படவுள்ளது.

    இந்நாட்களில் பொது மக்களுக்கு ஊட்டச்சத்து ஏற்படுத்தும் வகையில் ஊட்டசத்து குறித்து கண்காட்சி அமைத்து பொது மக்களுக்கு காட்சிப்படுத்தப்பட வுள்ளது.

    இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கி யமான உடல்நிலையை அடை வது, ஊட்டசத்து மற்றும் ஆரோக்கியமான கருத்துக்களை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று எடுத்து கூறுவது, சத்தான உணவு, தூய்மையான குடிநீர், சுகாதாரம், சரியான தூய்மை, பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்கான உணவு மற்றும் பழக்க வழக்கங்களை எடுத்து கூற துறை அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட் டது.

    மேலும் மாவட்டத்திற் குட்பட்ட ஒவ்வொரு வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிளிலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைத்து தரப்பட்ட பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் சிறந்த ஆரோக்கிய மானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உருவெடுப்பதற்கு நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண் டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டர் ஸ்ரீதர் ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்ததோடு, ஊட்டசத்து குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் உருவாக்கப்பட்ட ஊட்டச் சத்து குறித்த விழிப்புணர்வு கோல கண்காணட்சியினை பார்வையிட்டார்.

    நிகழ்ச்சிகளில் மாவட்ட வரு வாய் அலுவலர் பாலசுப்பிர மணியம், உதவி கலெக்டர் (பயிற்சி) ராஜட் பீட்டன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உதவி வன அலுவலர் (பயிற்சி) வித்யாதார், உசூர் மேலாளர் ஜூலியன் ஹூவர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.]

    • இரவில் தாமதமாக சாப்பிடுவது செரிமான உறுப்புகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும்.
    • தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும்.

    நம் முன்னோர்கள் ஊட்டச்சத்துமிக்க உணவு வகைகளை தேர்வு செய்து அவற்றை சரியான நேரத்தில் உட்கொள்ளவும் செய்தார்கள். அதிலும் குறிப்பாக இரவு உணவை 7 மணிக்குள் சாப்பிடுமாறு அறிவுறுத்தினார்கள். இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் அது சாத்தியமில்லாததாக இருக்கலாம். ஆனால் அவர்கள் கையாண்ட உணவுப்பழக்கமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் ஆயுளை நீட்டிக்க செய்தன. இரவு 7 மணிக்குள் ஏன் சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் கூறி சென்றதன் பின்னணியில் இருக்கும் ஆரோக்கியம் சார்ந்த தகவல்கள் உங்கள் கவனத்திற்கு....

    செரிமானம் மேம்படும்:

    இரவு 7 மணிக்கு முன்பு இரவு உணவை சாப்பிட்டால் அதனை ஜீரணமாக்குவதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்கும். அதைவிடுத்து இரவில் தாமதமாக சாப்பிடுவது செரிமான உறுப்புகளுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அவற்றின் செயல்பாடு தாமதமாகும். இரவு 7 மணிக்குள் சாப்பிடுவது செரிமான அமைப்பு சுமூகமாக செயல்பட வழிவகை செய்யும்.

    ஊட்டச்சத்து உறிஞ்சப்படும்:

    உணவில் இருந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உடலுக்கு போதுமான நேரம் கிடைக்க வேண்டும். இரவு உணவை முன்கூட்டியே உண்ணும்போது உடல் சுறுசுறுப்பாக இயக்கி ஊட்டச்சத்து உறிஞ்சுதல் செயல்முறையை துரிதப்படுத்தும். இரவு தாமதமாக உட்கொள்ளும்போது அந்த செயல்முறையும் தாமதமாகும்.

    தூக்கத்தை வரவழைக்கும்:

    இரவில் தாமதமாக சாப்பிடும்போது உணவு ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். அதனால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படும். இரவு உணவை முன்கூட்டியே சாப்பிடுவதன் மூலம் உடல் தூக்கத்திற்கு சீக்கிரமாகவே இசைந்து கொடுக்கும். ஆழ்ந்த தூக்கத்தையும் பெற முடியும்.

    ஆற்றல் மேம்படும்:

    தூக்கத்தின்போது உடல் இயற்கையாகவே புத்துணர்ச்சி பெறுவதற்கான செயல்முறை நடைபெறும். ஆனால் இரவில் தாமதமாக சாப்பிடும்போது செரிமானம் ஆவதற்கே உடலின் ஆற்றல் முழுவதும் செலவிடப்படும். அதனால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்காது. இரவில் தூங்கினாலும் கூட காலையில் மந்தமான உணர்வு எட்டிப்பார்க்கும். இரவு உணவை முன்கூட்டியே சாப்பிட்டுவிட்டு தூங்கினால் உடலுக்கு போதுமான ஓய்வு கிடைக்கும். உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைத்து, அடுத்த நாள் முழுவதும் உற்சாகத்துடன் செயல்பட முடியும்.

    ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படும்:

    தூங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அதிக அளவு உணவு உட்கொள்வது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக நீரிழிவு நோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இரவு 7 மணிக்கு முன்பு சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும். வளர்சிதை மாற்றத்தில் கோளாறுகள் ஏற்படுவதையும் தடுக்கும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

    குடும்ப நேரம்:

    இரவு உணவை குடும்பத்தினருடன் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு குறிப்பிட்ட நேரத்தை நிர்வகிக்க வேண்டும். அந்த நேரத்தில் அனைவரும் ஒன்று கூடி உணவருந்தும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். அப்படி செய்வது இரவு உணவை தாமதமாக சாப்பிடும் பழக்கத்தை தடுத்துவிடும்.

    உடல் எடை நிர்வகிக்கப்படும்:

    மாலை, இரவு நேரங்களில் வளர்சிதை மாற்றத்தின் செயல்பாடு குறைந்துவிடும். அதனால் உடலில் சேரும் கலோரிகளை எரிப்பது சவாலானது. தாமதமாக சாப்பிடும்போது உடலில் சேரும் அதிகப்படியான கலோரிகள் எரிக்கப்படாமல் கொழுப்பாக மாறக்கூடும். அதனால் உடல் எடை அதிகரிக்க தொடங்கும். உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் உடல் எடையை நிர்வகிப்பதற்கு இரவு உணவை சீக்கிரமாக உட்கொள்வது நல்லது.

    • முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தும் விழுப்புரம் கலெக்டர்.

    விழுப்புரம்:

    மாணவ, மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கபடாமலிருத்தல், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல், வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில், முதற்கட்டமாக விழுப்புரம் நகராட்சியில் 16 அரசுப்ப ள்ளிகளில் 1,902 பேருக்கும், திண்டிவனம் நகராட்சியில் 6 அரசுப்பள்ளிகளில் 261 பேருக்கும் என மொத்தம் 22 அரசுப்பள்ளிகளில் 2,163 மாணவ, மாணவியர்களுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ் காலை உணவு வழங்கப்பட்டது. இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு 2-ம் கட்டமாக விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டத்தினை அமைச்சர் பொன்முடி, செஞ்சியில் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோரால் துவக்கி வைக்க ப்பட்டது. அன்றிலிருந்து, மாணவ, மாணவியர்களுக்கு தினமும் காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், விழுப்புரம் நகராட்சியில் 1 அரசுப்பள்ளியில் 293 பேருக்கும், கோட்டக்குப்பம் நகராட்சியில் 5 அரசுப்பள்ளி களில் 215 பேருக்கும், செஞ்சி பேரூராட்சியில் 5 அரசுப்பள்ளிகளில் 442 பேருக்கும், அனந்தபுரம் பேரூராட்சியில் 4 அரசுப்பள்ளி களில் 276 பேருக்கும், மரக்காணம் பேரூராட்சியில் 11 அரசு ப்பள்ளிகளில் 719 பேருக்கும், வளவனூர் பேரூராட்சியில் 4 அரசுப்ப ள்ளிகளில் 295 பேருக்கும், விக்கிரவாண்டி பேரூராட்சி யில் 3 அரசுப்பள்ளிகளில் 314 பேரு க்கும், அரகண்ட நல்லூர் பேரூராட்சியில் 3 அரசுப்பள்ளிகளில் 91 பேருக்கும், திருவெண்ணெ ய்நல்லூர் பேரூராட்சியில் 2 அரசுப்பள்ளிகளில் 249 பேருக்கும், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 100 அரசுப்பள்ளிகளில் 3,956 பேருக்கும், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்தில் 69 அரசுப்பள்ளி களில் 3,628 பேருக்கும், வல்லம் ஊராட்சி ஒன்றியத்தில் 82 அரசுப்பள்ளிகளில் 2,756 பேருக்கும், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் 60 அரசுப்பள்ளி களில் 2,517 பேருக்கும், மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் 64 அரசுப்பள்ளிகளில் 3,405 பேருக்கும், மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் 86 அரசுப்பள்ளிகளில் 4,517 பேருக்கும், வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 88 அரசுப்பள்ளி களில் 3,967 பேருக்கும், காணை ஊராட்சி ஒன்றியத்தில் 75 அரசுப்பள்ளிகளில் 5,180 பேருக்கும், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் அரசுப்பள்ளிகளில் 4,025 பேருக்கும், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில் 78 அரசு ப்பள்ளிகளில் 4,363 பேருக்கும், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 83 அரசுப்பள்ளிகளில் 3,394 பேருக்கும், முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் 64 அரசுப்பள்ளி களில் 5,116 பேரு க்கும், திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் 72 அரசுப்பள்ளிகளில் 6,101 பேருக்கும் என மொத்தம் 1,026 அரசு ப்பள்ளிகளில் 55,819 மாணவ, மாணவி யர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    விழுப்புரம் மாவட்டத்தில் முதற்கட்டமாக 22 அரசுப்ப ள்ளிகளில் 2,163 மாணவ, மாணவி யர்களுக்கும், இரண்டாம் கட்டமாக 1,026 அரசுப்பள்ளி களில் 55,819 மாணவ, மாணவியர்கள் என 1,048 அரசு ப்பள்ளி களில் பயிலும் 57,912 மாணவ, மாணவிய ர்களுக்கு முதல் -அமை ச்சரின் காலை உணவு திட்ட த்தின்கீழ், காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    • சத்தாண சிமிலி உருண்டை பெண் குழந்தைகளுக்கு ஏற்றது.
    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்.

    தேவையான பொருட்கள்:-

    கேழ்வரகு (ராகி) மாவு - 250 கிராம்

    வெல்லம் -300 கிராம்

    வேர்கடலை - 200 கிராம்

    ஏலக்காய்- 4 நம்பர்

    நெய் - தேவையான அளவு

    உப்பு- ஒரு சிட்டிகை

    செய்முறை:-

    ஒரு கடாயில் 200 கிராம் வேர்கடலையை சேர்த்து நன்றாக மனம் வரும் வரை வறுத்து அதனை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    ஒரு பாத்திரத்தில் 250 கிராம் கேழ்வரகு (ராகி) மாவு, அதனுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறி சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை ஒரு தோசை தவாவில் எண்ணை அல்லது நெய் சேர்த்து ரொட்டி அளவிற்கு திரட்டி வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

    வேக வைத்து ராகி ரொட்டி துண்டுகளை மிக்சி ஜாரில் சேர்த்து பொடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே மிக்சி ஜாரில் 300 கிராம் வெல்லத்தை பொடித்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வாய் அகன்ற பாத்திரத்தில் பொடித்த வெல்லம், பொடித்த வேர்கடலை, வேகவைத்து பொடித்த ராகி ரொட்டிகளையும் அதனுடன் சேர்க்க வேண்டும்.

    இந்த கலவையுடன் ஏலக்காய் பொடி, 3 கரண்டி நெய் சேர்த்து அனைத்தையும் சேர்த்து கிளறி உருண்டைகளாக பிடித்து எடுத்து வைக்கவும். சுவையான சிமிலி உருண்டை தயார்.

    90-களில் பிறந்த குழந்தைகளுக்கு இந்த சிமிலி உருண்டைகளை ஸ்நாக்காக செய்து கொடுப்பார்கள். அது அவர்களுக்கு மிகவும் பிடிக்கும். ஊட்டச்சத்து நிறைந்தது. அனைத்து வயதினருக்கும் பிடிக்கும்.

    ×