என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி சிவா"

    • வக்பு மசோதா கொண்டு வரப்பட்ட நோக்கம் தவறானது, தீங்கானது.
    • அரசியலமைப்புச் சட்டத்த்துக்கும், மதச் சார்பின்மைக்கும் எதிரானது.

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.

    விவாதத்தின்போது திமுக எம்.பி. திருச்சி சிவா மசோதாவை எதிர்த்து கடுமையாக பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    வக்பு மசோதா கொண்டு வரப்பட்ட நோக்கம் தவறானது, தீங்கானது. அரசியலமைப்பு சட்டத்த்துக்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரானது. வக்பு நிர்வாகத்தையே கைப்பற்றுவதற்குத்தான் இந்த திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

    அரசியல், சட்ட ரீதியாக தவறான வக்பு மசோதாவை நாங்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறோம். மத்திய பாஜக அரசு குறிப்பிட்ட ஒரு மதத்தை குறிவைத்து சட்டத்தை இயற்றுவது ஏன்?. நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் சுதந்திரத்தின்போது இது எங்கள் நாடு, இங்கேதான் இருப்போம் என்று தெரிவித்தனர்.

    அனைவருக்குமான வளர்ச்சி என்று கூறும் பாஜக அரசு இஸ்லாமியர்களுக்கு மட்டும் வேறு கொள்கையை கடைபிடிக்கிறது. பாஜக அரசின் செயலால் அந்நியப்படுத்தப்படும் இஸ்லாமியர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணருகிறார்கள்.

    கண்கள் இருந்தும் மக்கள் படும் துயரங்களை ஆளுங்கட்சியினர் பார்ப்பதில்லை. ஆளுங்கட்சியினருக்கு காதுகள் இருக்கலாம், ஆனால் எதிர்க்கட்சியினரின் பேச்சை கேட்பதே இல்லை. வக்பு வாரியத்தின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக சட்டத் திருத்தம் எனக் கூறுவது உண்மைக்கு புறம்பானது.

    இவ்வாறு திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்தார்.

    • பாஜகவில் இருந்து தான் விலகுவதாக திருச்சி சூர்யா சிவா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
    • தலைவர் அண்ணாமலை தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

    தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தலைவர் டெய்சி சரண் மற்றும் ஓ.பி.சி. அணியின் மாநில பொது செயலாளர் சூர்யா சிவா ஆகியோருக்கு இடையே நடந்த தொலைபேசி உரையாடல் ஒன்று பொதுவெளியில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. தொலைபேசியில் ஆபாசமாக திட்டி திருச்சி சூர்யா சிவா பேசிய ஆடியோ வைரலானது.

    இந்த விவகாரம் தொடர்பாக, டெய்சி சரண், சூர்யா சிவா ஆகியோரிடம் திருப்பூரில் வைத்து பா.ஜ.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து, சூர்யா சிவாவை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி பாஜக அறிவித்தது.க்ஷ

    இந்நிலையில், பாஜகவில் இருந்து தான் விலகுவதாக திருச்சி சூர்யா சிவா தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

    இதுகுறித்து திருச்சி சூர்யா சிவா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி. இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்.

    அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் மாற்றப்பட வேண்டும். இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி.

    இவ்வாறு அவர் பதிவிட்டிருந்தார்.

    • சிவா எம்.பி. வீடு முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
    • நாற்காலிகளை எடுத்து, விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு இருந்த சிவா எம்.பி.யின் ஆதரவாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பிராட்டியூர், கண்டோன்மெண்ட் எஸ்.பி.ஐ. காலனி சண்முகா நகர், ஆழ்வார் தோப்பு மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அரசு திட்டப் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

    இதில் திருச்சி சிவா எம்.பி. வீடு அமைந்துள்ள எஸ்.பி.ஐ. காலனி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதிய இறகுப்பந்து விளையாட்டு மைதானத்தை திறந்து வைப்பதற்காக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என்.நேரு, கலெக்டர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையாளர் வைத்திநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் கார்களில் அணிவகுத்து சென்றனர்.

    அப்போது திருச்சி சிவா எம்.பி.யின் வீட்டின் அருகாமையில் சிலர் நின்று கொண்டு அமைச்சர் கே.என்.நேருவின் காரை திடீரென்று வழிமறித்து அவருக்கு கருப்பு கொடி காட்டினர். இதனை சற்றும் எதிர்பாராத தி.மு.க.வினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் போலீசாரும் அங்கு ஓடி வந்தனர்.

    இதுகுறித்து விசாரித்த போது, எஸ்.பி.ஐ. காலனி நிகழ்ச்சி அழைப்பிதழில் திருச்சி சிவாவின் பெயர் இடம் பெறாததால் அவரது ஆதரவாளர்கள் அமைச்சரின் காரை வழிமறித்து கருப்பு கொடி காட்டியது தெரியவந்தது.

    இது நேரு ஆதரவாளர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் சிலர் சிவா எம்.பி. வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். கற்கள் மற்றும் சவுக்கு கட்டைகளை கொண்டு வீட்டு காம்பவுண்ட் சுவர் முகப்பு விளக்குகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

    இந்த சம்பவம் எஸ்.பி.ஐ. காலனி பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. சிவா எம்.பி. வீடு முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கிடையே அமைச்சருக்கு கருப்பு கொடி காட்டிய 10 பேரை திருச்சி செசன்ஸ் கோர்ட்டு போலீசார் பிடித்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர்கள் செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர். இதற்கிடையே சிலர் திடீரென போலீஸ் நிலையத்திற்குள் அதிரடியாக புகுந்தனர். பின்னர் அங்கு இருந்த நாற்காலிகளை எடுத்து, விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு இருந்த சிவா எம்.பி.யின் ஆதரவாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த களேபரத்தை தொடர்ந்து காவல் நிலையத்தை சுற்றியும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த சம்பவம் இன்று திருச்சியில் தி.மு.க.வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மோதல் தொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • 4 திமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்ட்டுள்ளனர்.

    திருச்சியில் இன்று அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி சிவா எம்.பி. ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. திருச்சி சிவா வீட்டில் சிலர் தாக்குதல் நடத்தினர். அவரது வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. இதேபோல், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் பைக்குகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

    திருச்சி காவல் நிலையத்திலும் அமைச்சர் கே.என்.நேரு- திருச்சி சிவா ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    திமுக வட்டச்செயலாளர் மூவேந்திரன் கொடுத்த புகார் அடிப்படையில் எம்.பி. ஆதரவாளர்கள் 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதேபோல் சிவா ஆதரவாளர் சூரியகுமார் கொடுத்த புகாரில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அமைச்சர் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விவகாரத்தில் 4 திமுக நிர்வாகிகள் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்ட்டுள்ளனர். தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வம், மாவட்ட பொருளாளர் துரைராஜ், 55வது வட்ட செயலாளர் ராமதாஸ் ஆகியோர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். 

    • காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து பெண் போலீஸ் சாந்தியை தள்ளிவிட்டு சிவா ஆதரவாளர்களை நாற்காலிகளை தூக்கி அடித்து தாக்கியதாக கூறப்பட்டது.
    • போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    திருச்சி:

    திருச்சி மாநகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று அரசு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பிராட் டியூர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு திருச்சி கண்டோன்மென்ட் எஸ்.பி.ஐ. காலனி பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில் அமைக்கப்பட்ட இறகு பந்து மைதானத்தை திறந்து வைக்க அமைச்சர் கே.என்.நேரு புறப்பட்டு சென்றார்.

    இந்த விழாவில் அப்பகுதியில் வசிக்கும் மேல் சபை எம்.பி. திருச்சி சிவாவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அவரது ஆதரவாளர்கள் அவரின் வீட்டு முன்பு அமைச்சர் கே.என்.நேரு காரை வழிமறித்து கறுப்பு கொடி காட்டினர்.

    இதனால் ஆத்திரமடைந்த நேரு ஆதரவாளர்கள் திருச்சி சிவாவின் வீடு புகுந்து போர்டிகோவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் காம்பவுண்டு சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த விளக்குகளை அடித்து நொறுக்கினர்.

    இந்நிலையில் கருப்புக்கொடி காட்டிய சிலரை திருச்சி செசன்ஸ் கோர்ட் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இது பற்றி தகவல் அறிந்த நேரு ஆதரவாளர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டனர். பின்னர் சிலர் காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து பெண் போலீஸ் சாந்தியை தள்ளிவிட்டு சிவா ஆதரவாளர்களை நாற்காலிகளை தூக்கி அடித்து தாக்கியதாக கூறப்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களிலும் பரவியது.

    இந்நிலையில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு கருப்புக்கொடி காட்டியதாக சிலர் மீது ஒரு வழக்கும், சிவா வீடு மீது தாக்குதல் நடத்தியதாக சிலர் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக பெண் போலீஸ் சாந்தி கொடுத்த புகாரின் பேரில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல், அரசு சொத்துக்களை சேதப் படுத்துதல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

    இதில் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்களான மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் முத்துச்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், ராமதாஸ், அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவரும், மாவட்ட தி.மு.க. பொருளாளருமான துரைராஜ், மாநகராட்சி வார்டு பகுதி துணை செயலாளர் திருப்பதி ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

    பின்னர் திருச்சி காஜாமலை நீதிபதிகள் குடியிருப்பில் திருச்சி நீதிமன்ற குற்றவியல் எண் 2 நீதிபதி பாலாஜி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து நீதிபதி வருகிற மார்ச் 29-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • தனி நபரை விட கட்சி தான் முக்கியம். ஆகவே பலவற்றை பெரிது படுத்தியது இல்லை.
    • ஊரில் இல்லாத நேரத்தில் நடந்த சம்பவத்தால் வீட்டிலிருந்த வயதானவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    திருச்சி:

    பக்ரைன் நாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்பிய திருச்சி சிவா எம்.பி. இன்று எஸ்.பி.ஐ. காலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற குழு அனுப்பிய 178 நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக பக்ரைன் நாட்டிற்கு சென்று விட்டு இன்று திரும்பி இருக்கிறேன். நடந்த செய்திகளை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன். இப்போதைக்கு நான் எதையும் பேசும் மனநிலையில் இல்லை. நான் அடிப்படையில் முழுமையான அழுத்தமான கட்சிக்காரன்.

    தனி நபரை விட கட்சி தான் முக்கியம். ஆகவே பலவற்றை நான் பெரிது படுத்தியது இல்லை. யாரிடமும் புகார் சொன்னதும் இல்லை. தனி மனிதனை விட இயக்கம்தான் முக்கியம் என வளர்ந்தவன், இருப்பவன்.

    நடந்த சம்பவங்கள் மிகுந்த மன வேதனை அளிக்கிறது. நான் ஊரில் இல்லாத நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் என் வீட்டிலிருந்த வயதானவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். அவர்களிடம் நான் பேச வேண்டி இருக்கிறது.

    மீண்டும் உங்களிடம் பேசுகிறேன். களைப்பில் இருக்கிறேன். மனச்சோர்வில் இருக்கிறேன். நான் எப்போதும் மனச்சோர்வு என்ற வார்த்தையை பயன்படுத்தியது இல்லை. வயதானவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும்போது சொல்லத் தோன்றுகிறது. மாலையில் விரிவாக பேசுகிறேன். வேறு எந்த கேள்விகளுக்கும் நான் பதிலளிக்க விரும்பவில்லை. தயவுசெய்து எனது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து வீட்டிற்குள் சென்ற அவர் போர்டிகோவில் நின்றிருந்த கார் சேதப்படுத்தப்பட்டதையும், காம்பவுண்டு சுவர் முகப்பு விளக்குகள் உடைந்து கிடப்பதையும் பார்த்தார்.

    • நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நேரு கூறினார்.
    • திருச்சி சிவாவை சமாதானப்படுத்திவிட்டு வருமாறு முதல் அமைச்சர் அறிவுறுத்தினார்.

    திருச்சி:

    திருச்சியில் அமைச்சா் கே.என். நேருவுக்கு, கருப்புக் கொடி காட்டியதாகக் கூறி அமைச்சரின் ஆதரவாளா்கள் திருச்சி சிவா எம்.பி.யின் வீட்டில் புதன்கிழமை தாக்குதல் நடத்தினா். திருச்சி சிவாவின் கார், வீட்டு வாசலில் இருந்த பொருட்களை நேருவின் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர். இருதரப்பு ஆதரவாளர்களும் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், எம்.பி. திருச்சி சிவாவை அமைச்சர் கே.என்.நேரு இன்று சந்தித்து பேசினார். திருச்சி எஸ்.பி.ஐ காலணியில் உள்ள இல்லத்தில் திருச்சி சிவாவை அமைச்சர் சந்தித்து பேசினார்.

    இந்த சந்திப்புக்கு பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது திருச்சி சிவா கூறியதாவது:

    நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். முதல் அமைச்சரின் மனம் சங்கடப்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம். நடந்த சம்பவத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நேரு கூறினார். இவ்வாறு திருச்சி சிவா தெரிவித்தார்.

    கே.என்.நேரு கூறுகையில், 'திருச்சி சிவாவை சமாதானப்படுத்திவிட்டு வருமாறு முதல் அமைச்சர் அறிவுறுத்தினார். திருச்சி சிவா வீட்டில் எனக்கு தெரியாமல் நடக்கக் கூடாத சம்பவங்கள் நடந்துவிட்டது. இருவரும் மனம் விட்டு பேசிவிட்டோம். இனி இதுபோன்று நடக்காது' என தெரிவித்துள்ளார்.

    • பிரதமர் மோடி 2 நிமிடம் மட்டுமே மணிப்பூர் பற்றி பேசி உள்ளார்.
    • மணிப்பூர் பிரச்சினை முடிந்து விட்டது போல பாராளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது.

    சென்னை:

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் திருச்சி சிவா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    மணிப்பூர் மாநிலத்தில் 100 நாட்களுக்கு மேலாக பதட்டம் நிலவுகிறது. 100-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1 லட்சம் பேர் இடம் பெயர்ந்து பதுங்கி வாழ்கின்றனர்.

    இப்போது ஒரு தகவல் வெளிவந்துள்ளது. மணிப்பூரை சேர்ந்த 230 பேர் மியான்மர் காடுகளில் தவிக்கின்றனர்.

    மணிப்பூர் விவகாரத்தில் பிரதமரின் விளக்கம் தேவை என்பதே எதிர்க்கட்சிகளின் ஒருமித்த கோரிக்கையாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி 2 நிமிடம் மட்டுமே மணிப்பூர் பற்றி பேசி உள்ளார். பெண்கள் அவமானப்படுத்தப்பட்டது பற்றி விளக்கம் அளிக்கவில்லை.

    மணிப்பூர் பிரச்சினை முடிந்து விட்டது போல பாராளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது. மணிப்பூர் பற்றி பிரதமர் மோடி ஒருநாளும் கவலைப்படவில்லை. தி.மு.க.வை கண்டு பிரதமர் மோடி, உள் துறை மந்திரி அமித்ஷா அச்சம் அடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி. கனிமொழி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் சந்திப்பு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

    சென்னை :

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்.

    தி.மு.க. பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி. கனிமொழி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இச்சந்திப்பு நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற மேல்-சபை காலையில் அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் தலைமையில் கூடியது.
    • மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பல்வேறு விவகாரங்களை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 22-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் 5-ம் நாளான இன்று பாராளுமன்ற மேல்-சபை காலையில் அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் தலைமையில் கூடியது.

    அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாங்கள் கொடுத்த நோட்டீசை அவைத்தலைவர் நிராகரித்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே பட்டியலிடப்பட்ட அலுவல்களை ஒத்திவைத்து விட்டு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று விதி எண் 267-ன் கீழ் பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.

    அந்த நோட்டீஸ்களை அவைத் தலைவர் நிராகரித்தார். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேல்-சபையில் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதியாக இருக்கும்படி அவைத்தலைவர் வலியுறுத்தினார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நின்றபடி, தாங்கள் கொடுத்த நோட்டீசுகளை நிராகரித்து ஏன்? என்று கேள்வி எழுப்பியபடி இருந்தனர். காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் கூறும்போது, முக்கிய அலுவல் இருந்தால் மற்றொரு நாளில் விவாதிப்பதாக கூறலாம். ஆனால் நிராகரிப்பது ஏன்? அவை நிகழ்ச்சிகள் மாற்றப்பட்டுள்ளது என்றார்.

    தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பேசும்போது, மாநிலங்களவை தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி நீங்கள் நேரம் இல்லா நேரத்தில் ஆளும் தரப்பு கொடுக்கும் பிற விவகாரங்களை எடுத்து கொள்ளும்போது அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் கொடுக்கும் நோட்டீசுகளை ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது.

    ஆளும் தரப்புக்கு நேரம் கொடுக்கும்போது எதிர்க்கட்சிகள் கொடுத்த நோட்டீசுகளை மற்றொரு நாளில் எடுத்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம் என்றார்.

    இதைத் தொடர்ந்து தங்களது மாநிலங்களின் முக்கிய பிரச்சனைகளை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதனால் மேல்-சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.

    அதேபோல் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பல்வேறு விவகாரங்களை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

    இதனால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அவர்களை அமைதியாக இருக்கையில் அமருமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். 

    • எய்ம்ஸ் மருத்துவமனை என்பது இன்னும் ஏட்டளவில் தான் இருக்கிறதே தவிர முன்னேற்றம் எதையும் காணவில்லை.
    • திராவிட முன்னேற்றக் கழகம் 200 இடங்களுக்கு மிகாமல் நிச்சயமாக வெற்றி பெறும்.

    சென்னையில் திமுக எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நடைபெற இருக்கிற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப இருக்கிறோம். தமிழ்நாடு மாநிலம் தொடர்ந்து ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த காலங்களில் நிதிக்குழுவின் பரிந்துரைகளும் பாரபட்சமாக இருந்தாலும் கூட பரிந்துரைத்த அளவிற்கு கூட தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    வரி பங்கீட்டு என்பதில் மாநில அரசுகளுக்கு எந்த அளவிற்கு பங்கீடு தர வேண்டுமோ அதில் குறிப்பாக மற்ற மாநிலங்களை விட கூட தமிழ்நாட்டிற்கு தரவில்லை. இப்போது இருக்கும் 41 என்பதை 50 விழுக்காடு தரப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்கனவே தமிழ்நாடு அரசின் சார்பில் நிதிக்குழுவிடம் சொல்லப்பட்டு விட்டது.

    எய்ம்ஸ் மருத்துவமனை என்பது இன்னும் ஏட்டளவில் தான் இருக்கிறதே தவிர முன்னேற்றம் எதையும் காணவில்லை. அதற்காக எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.

    இயற்கை பேரிடரின்போது கேட்கப்பட்ட 39 ஆயிரம் கோடிக்கு மாறாக வெறும் 287 கோடி தான் தரப்பட்டு இருக்கிறது.

    ஒன்றிய அரசும் மாநில அரசும் சேர்ந்து செய்ய வேண்டிய திட்டங்களுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய பங்குகளை எதையும் தருவதே இல்லை.

    மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு நடந்து கொள்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

    குறிப்பாக, எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களை இப்படி வஞ்சிப்பதன் மூலம் இந்த ஆட்சியின் செல்வாக்கை குறைக்கலாம் என்று அவர்கள் கருதலாம். ஆனால் அது இயலாது.

    அதே வேளையில் மாநில மக்களுக்கு எது தேவை என்று உணர்ந்து செயல்படுத்தக்கூடிய பொறுப்பும் கடமையும் மாநில அரசுக்கு தான் உண்டு.

    அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறபோது அதற்குரிய நியாயமான நிதி ஒன்றிய அரசு வழங்காமலேயே வருவதை இந்த முறை நாங்கள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் முக்கியத்துவம் கொடுத்து எழுப்புவோம்.

    அதானி பிரச்சனை உள்பட பல பிரச்சனைகள் உள்ளன. எல்லா பிரச்சனைகளும் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் எழுப்பப்படும்.

    நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் காரணத்தினால் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் உள்ள உறுப்பினர்கள் மாநில நலன் கருதி நாங்கள் கோரிக்கைகளாக எடுத்துரைப்போம்.

    மாநில தேவைகள், வஞ்சிக்கப்படுவது குறித்து முக்கியத்துவம் கொடுத்து பேசுவோம்.

    மாநில நலன்கள் குறித்தும், மாநில அரசு எப்படி ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படுகிறது என்பதை குறித்தும் இரு அவை உறுப்பனர்களும் எடுத்துரைப்போம்.

    திராவிட முன்னேற்றக் கழகம் 200 இடங்களுக்கு மிகாமல் நிச்சயமாக வெற்றி பெறும். மீண்டும் கழக ஆட்சி என்பதை விட 200 இடங்களுக்கு குறையாமல் பெற வேண்டும் என்பது எங்கள் இலக்கு என்று கூறினார்.

    • எந்த மொழியை கற்கவும் திமுக தடையாக இருந்ததில்லை.
    • ஒரு மொழி மீது மற்ற மொழி ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு.

    தமிழகத்தில் இந்தி கற்க முற்பட்டபோது தடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு திமுக எம்.பி. திருச்சி சிவா பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இந்தி எங்களை ஆதிக்கம் செலுத்துவதை எல்லா காலத்திலும் எதிர்த்துக்கொண்டே தான் இருப்போம்.

    * எந்த மொழியை கற்கவும் திமுக தடையாக இருந்ததில்லை.

    * ஒரு மொழி மீது மற்ற மொழி ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று கூறினார்.

    முன்னதாக, பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வங்கி சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து பேசும்போது, தமிழ்நாட்டில் இந்தி படிக்க அனுமதிக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், இந்தி மற்றும் சமஸ்கிருதம் கற்றுக்கொள்வது தென் மாநிலங்களில் கேவலமாக பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் நான் இந்தி படிக்க செல்லும்போது தெருக்களில் ஏளனம் செய்யப்பட்டேன். நீ இந்தி படிக்க விரும்புகிறாய். தமிழ்நாட்டில் வாழும் உனக்கு வடமொழி எதற்கு என்று கேட்டனர். அது இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன.

    மதுரையில் பிறந்த என்னை வந்தேரி என்று அழைத்தனர். அது அங்குள்ள அரசியல் வியூகத்தின் ஒரு பகுதி. விரும்பிய மொழியைக் கற்கும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டது. இந்தி திணிப்பு பேசும் தமிழகத்தில், இந்தி கற்கக் கூடாது என்ற கொள்கை என் மீது திணிக்கப்படவில்லையா? என்று கூறி இருந்தார்.

    ×