என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்சி சிவா"

    • தி.மு.க. பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
    • பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி. கனிமொழி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் சந்திப்பு நடைபெறுகிறது குறிப்பிடத்தக்கது.

    சென்னை :

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உடன் தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்.

    தி.மு.க. பாராளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, கலாநிதி வீராசாமி எம்.பி. உள்ளிட்டோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தி.மு.க. எம்.பி. கனிமொழி சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில் இச்சந்திப்பு நடைபெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது.

    • பாராளுமன்ற மேல்-சபை காலையில் அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் தலைமையில் கூடியது.
    • மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பல்வேறு விவகாரங்களை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 22-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் 5-ம் நாளான இன்று பாராளுமன்ற மேல்-சபை காலையில் அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் தலைமையில் கூடியது.

    அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாங்கள் கொடுத்த நோட்டீசை அவைத்தலைவர் நிராகரித்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே பட்டியலிடப்பட்ட அலுவல்களை ஒத்திவைத்து விட்டு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று விதி எண் 267-ன் கீழ் பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.

    அந்த நோட்டீஸ்களை அவைத் தலைவர் நிராகரித்தார். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேல்-சபையில் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதியாக இருக்கும்படி அவைத்தலைவர் வலியுறுத்தினார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நின்றபடி, தாங்கள் கொடுத்த நோட்டீசுகளை நிராகரித்து ஏன்? என்று கேள்வி எழுப்பியபடி இருந்தனர். காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் கூறும்போது, முக்கிய அலுவல் இருந்தால் மற்றொரு நாளில் விவாதிப்பதாக கூறலாம். ஆனால் நிராகரிப்பது ஏன்? அவை நிகழ்ச்சிகள் மாற்றப்பட்டுள்ளது என்றார்.

    தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பேசும்போது, மாநிலங்களவை தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி நீங்கள் நேரம் இல்லா நேரத்தில் ஆளும் தரப்பு கொடுக்கும் பிற விவகாரங்களை எடுத்து கொள்ளும்போது அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் கொடுக்கும் நோட்டீசுகளை ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது.

    ஆளும் தரப்புக்கு நேரம் கொடுக்கும்போது எதிர்க்கட்சிகள் கொடுத்த நோட்டீசுகளை மற்றொரு நாளில் எடுத்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம் என்றார்.

    இதைத் தொடர்ந்து தங்களது மாநிலங்களின் முக்கிய பிரச்சனைகளை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதனால் மேல்-சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.

    அதேபோல் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பல்வேறு விவகாரங்களை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

    இதனால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அவர்களை அமைதியாக இருக்கையில் அமருமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். 

    • எய்ம்ஸ் மருத்துவமனை என்பது இன்னும் ஏட்டளவில் தான் இருக்கிறதே தவிர முன்னேற்றம் எதையும் காணவில்லை.
    • திராவிட முன்னேற்றக் கழகம் 200 இடங்களுக்கு மிகாமல் நிச்சயமாக வெற்றி பெறும்.

    சென்னையில் திமுக எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நடைபெற இருக்கிற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப இருக்கிறோம். தமிழ்நாடு மாநிலம் தொடர்ந்து ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த காலங்களில் நிதிக்குழுவின் பரிந்துரைகளும் பாரபட்சமாக இருந்தாலும் கூட பரிந்துரைத்த அளவிற்கு கூட தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    வரி பங்கீட்டு என்பதில் மாநில அரசுகளுக்கு எந்த அளவிற்கு பங்கீடு தர வேண்டுமோ அதில் குறிப்பாக மற்ற மாநிலங்களை விட கூட தமிழ்நாட்டிற்கு தரவில்லை. இப்போது இருக்கும் 41 என்பதை 50 விழுக்காடு தரப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்கனவே தமிழ்நாடு அரசின் சார்பில் நிதிக்குழுவிடம் சொல்லப்பட்டு விட்டது.

    எய்ம்ஸ் மருத்துவமனை என்பது இன்னும் ஏட்டளவில் தான் இருக்கிறதே தவிர முன்னேற்றம் எதையும் காணவில்லை. அதற்காக எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.

    இயற்கை பேரிடரின்போது கேட்கப்பட்ட 39 ஆயிரம் கோடிக்கு மாறாக வெறும் 287 கோடி தான் தரப்பட்டு இருக்கிறது.

    ஒன்றிய அரசும் மாநில அரசும் சேர்ந்து செய்ய வேண்டிய திட்டங்களுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய பங்குகளை எதையும் தருவதே இல்லை.

    மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு நடந்து கொள்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

    குறிப்பாக, எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களை இப்படி வஞ்சிப்பதன் மூலம் இந்த ஆட்சியின் செல்வாக்கை குறைக்கலாம் என்று அவர்கள் கருதலாம். ஆனால் அது இயலாது.

    அதே வேளையில் மாநில மக்களுக்கு எது தேவை என்று உணர்ந்து செயல்படுத்தக்கூடிய பொறுப்பும் கடமையும் மாநில அரசுக்கு தான் உண்டு.

    அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறபோது அதற்குரிய நியாயமான நிதி ஒன்றிய அரசு வழங்காமலேயே வருவதை இந்த முறை நாங்கள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் முக்கியத்துவம் கொடுத்து எழுப்புவோம்.

    அதானி பிரச்சனை உள்பட பல பிரச்சனைகள் உள்ளன. எல்லா பிரச்சனைகளும் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் எழுப்பப்படும்.

    நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் காரணத்தினால் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் உள்ள உறுப்பினர்கள் மாநில நலன் கருதி நாங்கள் கோரிக்கைகளாக எடுத்துரைப்போம்.

    மாநில தேவைகள், வஞ்சிக்கப்படுவது குறித்து முக்கியத்துவம் கொடுத்து பேசுவோம்.

    மாநில நலன்கள் குறித்தும், மாநில அரசு எப்படி ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படுகிறது என்பதை குறித்தும் இரு அவை உறுப்பனர்களும் எடுத்துரைப்போம்.

    திராவிட முன்னேற்றக் கழகம் 200 இடங்களுக்கு மிகாமல் நிச்சயமாக வெற்றி பெறும். மீண்டும் கழக ஆட்சி என்பதை விட 200 இடங்களுக்கு குறையாமல் பெற வேண்டும் என்பது எங்கள் இலக்கு என்று கூறினார்.

    • எந்த மொழியை கற்கவும் திமுக தடையாக இருந்ததில்லை.
    • ஒரு மொழி மீது மற்ற மொழி ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு.

    தமிழகத்தில் இந்தி கற்க முற்பட்டபோது தடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதற்கு திமுக எம்.பி. திருச்சி சிவா பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * இந்தி எங்களை ஆதிக்கம் செலுத்துவதை எல்லா காலத்திலும் எதிர்த்துக்கொண்டே தான் இருப்போம்.

    * எந்த மொழியை கற்கவும் திமுக தடையாக இருந்ததில்லை.

    * ஒரு மொழி மீது மற்ற மொழி ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு என்று கூறினார்.

    முன்னதாக, பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வங்கி சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து பேசும்போது, தமிழ்நாட்டில் இந்தி படிக்க அனுமதிக்கவில்லை என்று வேதனை தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், இந்தி மற்றும் சமஸ்கிருதம் கற்றுக்கொள்வது தென் மாநிலங்களில் கேவலமாக பார்க்கப்பட்டது. தமிழ்நாட்டில் நான் இந்தி படிக்க செல்லும்போது தெருக்களில் ஏளனம் செய்யப்பட்டேன். நீ இந்தி படிக்க விரும்புகிறாய். தமிழ்நாட்டில் வாழும் உனக்கு வடமொழி எதற்கு என்று கேட்டனர். அது இன்னும் என் காதுகளில் ஒலிக்கின்றன.

    மதுரையில் பிறந்த என்னை வந்தேரி என்று அழைத்தனர். அது அங்குள்ள அரசியல் வியூகத்தின் ஒரு பகுதி. விரும்பிய மொழியைக் கற்கும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டது. இந்தி திணிப்பு பேசும் தமிழகத்தில், இந்தி கற்கக் கூடாது என்ற கொள்கை என் மீது திணிக்கப்படவில்லையா? என்று கூறி இருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது.
    • நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி 2025-26 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பிப்ரவரி 13-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. மேலும், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இந்த நிலையில், இரு அவைகளும் இன்று (மார்ச் 10-ம் தேதி) வரை ஒத்திவைக்கப்பட்டன.

    அந்த வகையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஏப்ரல் 4-ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இந்த அமர்வில் பல்வேறு மசோதாக்கள் மற்றும் நிலைக்குழு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

    இந்த நிலையில், இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடரின் போது தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார். 

    • திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • இன்று டிஸ்சார்ச் செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    திமுக எம்.பி. திருச்சி சிவா உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள ஆர்.எம்.எல். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திருச்சி சிவா இன்று வீடு திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.

    • பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது.
    • திராவிட மாடல் ஆட்சி. அடிப்படையில் இந்த நாடு வேளாண் தொழில் சார்ந்த நாடு.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் பொம்மைகுட்டைமேட்டில் தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திருச்சி சிவா எம்.பி. தி.மு.க. உருவாக்கிய நவீன தமிழ்நாடு என்ற தலைப்பில் பேசியதாவது-

    எல்லோருக்கும் எல்லாம், இந்நாட்டில் கிடைக்கும் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி. அடிப்படையில் இந்த நாடு வேளாண் தொழில் சார்ந்த நாடு. அடுத்த நாடுகளிடம் எதற்கு வேண்டுமானாலும் போய் நிற்கலாம். ஆனால் சோற்றுக்கு நிற்கக்கூடாது என வேளாண் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் இருந்தது. அதன்படி தொடர்ந்து தி.மு.க. அரசு வேளாண் தொழிலை பாதுகாத்து வருகிறது.

    அண்ணாவிற்கு பிறகு கருணாநிதி முதல்-அமைச்சர் ஆன பிறகு ஏழைகளின் நலனில் அக்கறை கொண்டு பல திட்டங்களை கொண்டு வந்தார். ஏழை மக்களை மாடி வீட்டில் உட்கார வைத்த பெருமை தி.மு.க.வை சாரும். ஏழை மக்களுக்காக குடிசை மாற்று வாரியம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் தலைநகரில் குடிசைகள் இல்லை. எல்லாம் கோபுரங்கள் தான்.

    முதல் முதலாக நில உச்சவரம்பு கொண்டு வரப்பட்ட காரணத்தினால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் நில சொந்தக்காரர்களாக மாறினார்கள். அவர்கள் உற்பத்தி செய்கிற பொருளை விற்க முடியாமல் தடுமாறுகிறார்கள் என்பதற்காக நுகர்ப்பொருள் வாணிப கழகத்தை உருவாக்கி அங்கு பொருட்களை வாங்கினார். மக்களுக்கு சென்று சேர வேண்டும். அது நியாமான விலையில் கிடைக்க வேண்டும் என கருதி நியாய விலை கடை மூலமாக மக்களுக்கு வழங்கினார்.

    அடுத்ததாக இலவச மின்சார திட்டம் இந்தியாவில் முதல் முதலாக கொண்டு வந்தார். அதேபோல் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஒரு ஆண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு தரப்பட்டது. மிகப்பெரிய சாதனை . இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் இல்லாதது.

    1989-ம் ஆண்டில் பெண்களுக்கு சீர்வரிசை போதாது அவர்கள் திருமணம் ஆகி போகும்போது பிறந்த வீட்டில் சொத்திலும் உரிமை உண்டு என சட்டத்தை கொண்டு புரட்சியை ஏற்படுத்தியவர் தலைவர் கருணாநிதி தான். இந்த திட்டத்தை தான் தற்போது இந்தியா முழுவதும் பின்பற்றுகிறார்கள்.

    இலவச கல்வி, இலவச பேருந்து, இலவச பாட புத்தகங்கள் கொண்டு வரப்பட்டது. தொழில் கல்வி படிக்க அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இடஒதுக்கீடு அளித்திருக்கிறார். இதேபோல் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை கொண்டு வந்துள்ளார். இப்படி அடுக்கடுக்கான சாதனைகளை தி.மு.க. அரசு செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சூர்யா கைது செய்யப்பட்டதால் பாஜகவினர் காவல்நிலையம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • விபத்தை ஏற்படுத்தியவர் மீது வழக்கு பதிவு செய்யாமல் சூர்யா மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பதாக பாஜகவினர் குற்றச்சாட்டு

    திருச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் பகுதியில் கடந்த 11ம் தேதி நடந்த விபத்து தொடர்பாக, பாஜகவின் ஓபிசி பிரிவு செயலாளரும், திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகனுமான சூர்யா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விபத்து தொடர்பாக போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சூர்யா குற்றம்சாட்டினார்.

    திருச்சியில் இன்று பேட்டி அளித்த சூர்யா, விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் என் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். என்னை கைது செய்ய நடவடிக்கை எடுக்கிறார்கள், என்றார்.

    அவர் பேட்டி அளித்த சிறிது நேரத்தில் சூரியாவை கன்டோன்மென்ட் காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று விசாரித்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்த பாஜகவினர் அங்கு திரண்டு வந்து காவல்நிலையம் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    விபத்து நடந்து 15 நாட்களுக்கு மேல் ஆகிறது. விபத்தை ஏற்படுத்தியவர் மீது தவறு உள்ள நிலையில், சூர்யா மீது வழக்குபதிவு செய்யப்பட்டிருப்பதாக பாஜகவினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

    ஆனால், தனியார் பேருந்து மோதியதில் தனது கார் சேதமடைந்ததாக கூறி சூர்யா நஷ்ட ஈடு கேட்டு மிரட்டியதாகவும், நஷ்ட ஈடு வழங்க மறுத்ததால் அந்த பேருந்தை சூரியா எடுத்து வந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சூரியாவை கைது செய்ததாக காவல்நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சில மாதங்களுக்கு முன்புதான் சூரியா பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×