search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் கட்டணம்"

    • சென்ற மாத கணக்கீட்டு தேதியை இம்மாத தேதியாக எடுத்துக்கொண்டு அந்த தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் பணத்தை மின் வாரியத்திற்கு செலுத்துமாறு அறிவிக்கப்படுகிறது.
    • தவறும் பட்சத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மின் விநியோகம் துண்டிப்பு செய்யப்படும்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் பாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தாராபுரம் கோட்டத்தில் வடக்கு குண்டடம் பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட கொக்கம்பாளையம் மின் பகிர்மானத்திற்கு நிர்வாகக் காரணத்தினால் 11/2023 நவம்பர் மாத மின் கணக்கீட்டு பணிகள் மேற்கொள்ள இயலவில்லை.

    ஆகவே மின்நுகர்வோர் 9/2023 செப்டம்பர் மாதம் கட்டிய மின்கட்டணத்தொகையையே நவம்பர் மாதத்திற்கு செலுத்த வேண்டும். மின் பயனீட்டாளர்கள் சென்ற மாத கணக்கீட்டு தேதியை இம்மாத தேதியாக எடுத்துக்கொண்டு அந்த தேதியிலிருந்து 20 நாட்களுக்குள் பணத்தை மின் வாரியத்திற்கு செலுத்துமாறு அறிவிக்கப்படுகிறது.தவறும் பட்சத்தில் எந்த வித முன்னறிவிப்பும் இன்றி மின் விநியோகம் துண்டிப்பு செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வார்டு கவுன்சிலரான ரஞ்சித், மின்வாரிய ஊழியர்களை பழிவாங்க முடிவு செய்தார்.
    • கிராமத்தில் ஒரு நாளைக்கு 20-க்கும் மேற்பட்ட முறை மின்தடை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் சமீபத்தில் மின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் மாநிலத்தின் சில இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. கொல்லம் மாவட்டத்தில் உள்ள தலவூர் கிராமத்தில் ஒரு நாளைக்கு 20-க்கும் மேற்பட்ட முறை மின்தடை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினரிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் மின்தடை பிரச்சினைக்கு தீர்வு ஏற்படவில்லை. அதே நேரத்தில் மின் கட்டணமும் உயர்த்தப்பட்டது தலவூர் கிராம மக்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. இதனால் அந்த பகுதியின் வார்டு கவுன்சிலரான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ரஞ்சித், மின்வாரிய ஊழியர்களை பழிவாங்க முடிவு செய்தார்.

    அதன்படி தனது வார்டுக்கு உட்பட்டவர்கள் கட்ட வேண்டிய மின் கட்டணத்தை சில்லறை காசுகளாக மாற்றினார். மொத்தம் 9 வாடிக்கையாளர்களின் மின் கட்டணமான ரூ 7 ஆயிரத்துக்கு ரூ,1, ரூ2, ரூ5 நாணங்களாக மாற்றி ஒரு பையில் மூட்டையாக கட்டி மின்வாரிய அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று வழங்கினார்.

    அதனைப்பார்த்த மின் வாரிய ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்களிடம் வாடிக்கையாளர்களின் மின் அட்டை மற்றும் சில்லறை காசுகள் அடங்கிய மூட்டை உள்ளிட்டவைகளை வழங்கினார். அவற்றை வேறு வழியின்றி வாங்கிக்கொண்ட மின் ஊழியர்கள், சில்லறை காசுகள் அனைத்தையும் பல மணி நேரமாக எண்ணினர்.

    பின்பு மின் கட்டணத்துக்கான ரசீதை கவுன்சிலரிடம் கொடுத்தனர். இதுகுறித்து கவுன்சிலர் ரஞ்சித் கூறியதாவது:-

    மின்சார வாரியமும், குடிநீர் வாரியமும் அவ்வப்போது கட்டணத்தை உயர்த்தி எங்களை கஷ்டப்படுத்தி வருகிறது. அது மட்டுமின்றி எனது வார்டில் அடிக்கடி மின்தடையும் ஏற்படுகிறது. என்னுடைய வார்டில் தினமும் 20 முறையாவது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது.

    இன்று 9 வீடுகளின் மின் கட்டணத்தை சில்லறையாக கொண்டு வந்துள்ளேன். இதற்கு பிறகும் எங்களது பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்றால், எனது வார்டில் உள்ள 450 வீடுகளுக்கான மின் கட்டண தொகையையும் நாணயங்களில் கொண்டு வருவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

      சென்னை:

      தமிழக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந்தேதி மின்கட்டணத்தை உயர்த்தியது.

      இதில், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிலைக் கட்டணம் ரூ.550 ஆக இருமடங்கு உயர்த்தப்பட்டது.

      அதேபோல, பீக் அவர் கட்டணமும் 25 சதவீதம் உயர்த்தப்பட்டது.

      தமிழகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ள நிலையில், இந்த கட்டண உயர்வால் தாங்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும், உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது.

      தமிழ்நாடு மின்வாரியம் உயர்த்தியுள்ள 430 சதவீத நிலைக் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும்.

      பீக்-அவர் கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

      எனினும் இது பெரும் சுமையாக இருப்பதால், இதை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.


      சோலார் மேற்கூரை நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் அதுபோல், 12 கிலோவாட் வரை மின்சார இணைப்பு பெற்றுள்ள எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்களுக்கு 3-பி அட்டவணைக்கு பதிலாக 3-ஏ என்ற அட்டவணை மூலம் மாதம்தோறும் மின்கட்டணம் வசூலிக்க வேண்டும். வெல்டிங் இணைப்புகளை 3-பி என்ற சிறப்பு அட்டவணையில் இருந்து 3-ஏ அட்டவணைக்கு மாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

      இது தொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொழில் பிரதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அப்போது உடன்பாடு ஏற்பட்டது.

      இதை தொடர்ந்து இப்போது அதில் சில முக்கிய கோரிக்கையை ஏற்று பீக்-அவர்ஸ் கட்டணத்தை அரசு குறைத்து உள்ளது.

      மேலும் மின் பயன்பாட்டை பொறுத்து 15-ல் இருந்து 25 சதவீதம் வரை கட்டணம் குறைத்து அரசாணையும் வெளியிட்டுள்ளது.

      சோலார் மேற்கூரை அமைப்பதற்கான நெட்வொர்க்கிங் கட்டணத்தை 50 சதவீதம் வரை குறைப்பதாகவும் அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

      இதனால் 196.10 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      • மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட எம்.எல்.ஏ.க்களை சந்தித்து இன்று கோரிக்கை மனு கொடுத்தனர்.
      • தமிழகத்தில் உள்ள 10 லட்சம் குறு-சிறு தொழில் களை காப்பாற்ற முடியும்.

      மதுரை

      தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பா ளர்கள் பி.என்.ரகுநாத ராஜா, பொன் குமார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

      மின்கட்டன உயர்வால் தமிழகத்தில் உள்ள பல்லா யிரக்கணக்கான தொழிற்சா லைகள் மிகவும் பாதிக்கப் பட்ட நிலையில் தமிழக முதல் வர் நேரடியாக தலை யிட்டு மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்ட மைப்பு சார்பில் தமிழகம் முழுவதிலும் உள்ள தொழிற் சாலைகள் சார்பாக தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனுவை தபால் மூலமாகவும், விரைவு தபால் மூலம் அனுப்பப்பட்டது.

      அதனைத் தொடர்ந்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம், தொழில் உற்பத்தி ஒரு நாள் நிறுத்தம் கதவடைப்பு. சென் னையில் மாபெரும் உண் ணாவிரதப் போராட்டங்க ளையும் நடத்தி உள்ளோம். இது தொடர்பாக தமிழக சிறு தொழில் அமைச்சர், மின்வாரிய உயர் அதிகாரி களிடம் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்துள்ளது.

      எங்களது கோரிக்கைக ளில் கிலோ வாட்டுக்கான நிலை கட்டணம் குறைப்பு என்பது மிகவும் முக்கியமான கோரிக்கையாகும். எங்களது கோரிக்கைகளை முழுமை யாக நிறைவேற்றினால் மட்டுமே தமிழகத்தில் உள்ள 10 லட்சம் குறு-சிறு தொழில் களை காப்பாற்ற முடியும். அதற்கான தொடர் முயற்சி யின் ஒரு பகுதியாக ஏழாம் கட்ட கவன ஈர்ப்புக்காக இன்று (6-ந்தேதி) தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப் பினர்களையும் நேரடியாக சந்தித்து மின் கட்டணம் உயர்வை குறைக்க வேண் டும் என்பதை தமிழக முதல் வரின் நேரடி கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி கோரிக்கை மனுவை அளிக்க இருக்கிறோம்.

      அதன்படி மதுரையில் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்ட மைப்பு சார்பாக மடீட்சியா மற்றும் இணைப்பு சங்கங்க ளின் நிர்வாகிகள் அனைவ ரும் மதுரையில் உள்ள 10 சட்டமன்ற உறுப்பினர்களை இன்று நேரில் சந்தித்து மின் கட்டண உயர்வை குறைக்க கூறும் கோரிக்கை மனுவை அவர்களிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.

      இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் தெரி–வித்துள்ளனர்.

        சென்னை மாநகரம் மற்றும் பிற மாநகராட்சியையொட்டி உள்ள புறநகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் சிறு அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணமாக 1 யூனிட்டுக்கு ரூ. 8 வரை வசூலிக்கப்பட்டு வருகிறது.

        கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணம் 1 யூனிட்டிற்கு 8 ரூபாயில் இருந்து 5 ரூபாய் 50 பைசாவாக குறைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி 10 வீடுகள் அல்லது அதற்கும் குறைவான, மின்தூக்கி வசதி இல்லாத குடியிருப்புகளுக்கு புதிய கட்டணம் பொருந்தும்.

        இந்த நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது பயன்பாட்டுக்கான மாற்றியமைக்கப்பட்ட மின் கட்டணம் நாளை (நவம்பர் 1) முதல் அமலுக்கு வரும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டு இருக்கிறது.

        • கடைக்கு மாதந்தோறும் ரூ.7000 முதல் 8000 வரை மின் கட்டணம் வரும்.
        • பரிசீலனை செய்து புதிய தொகை கணக்கிடப்பட்டு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

        திருப்பதி:

        கோடைகாலம் தொடங்கியதில் இருந்து பல்வேறு இடங்களில் கூடுதலாக ஏசி, மின்விசிறி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மின் கட்டணம் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

        ஆயிரக்கணக்கில் மின் கட்டணம் உயர்ந்து வருவதை பொதுமக்களும், வியாபாரிகளும் சமாளித்து வருகின்றனர்.

        ஆனால் ஆந்திர மாநிலத்தில் ஒரு சிறிய கடைக்கு ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் மின்கட்டணம் வந்ததால் கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

        ஆந்திர மாநிலம் ஸ்ரீகாக்குளம் மாவட்டம் கோட்டூர் நகரை சேர்ந்தவர் அசோக்குமார். இவர் அங்குள்ள நகரப் பகுதியில் சிறிய கடையில் நகைக்கடை வைத்துள்ளார். இவருடைய கடைக்கு மாதந்தோறும் ரூ.7000 முதல் 8000 வரை மின் கட்டணம் வரும்.

        அதனை வழக்கம் போல செலுத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 2-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை மின் கட்டணம் ரூ. ஒரு கோடியே 15 லட்சத்து 56,116 என மின் ஊழியர்கள் கணக்கிட்டு அட்டையில் எழுதிக் கொடுத்தனர். இதனை பார்த்ததும் நகைக்கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

        மின்கட்டணம் குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டார் . உடனடியாக அவரது கடையில் இருந்த மின் மீட்டரை சோதனை செய்தனர். அது பழுதாகி அளவுக்கு அதிகமாக மின்சாரம் செலவழிக்கப்பட்டதாக பதிவு செய்தது தெரிய வந்தது.

        பரிசீலனை செய்து புதிய தொகை கணக்கிடப்பட்டு வழங்குவதாக உறுதியளித்தனர். இதனால் நகைக்கடை உரிமையாளர் நிம்மதி அடைந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

        • ஆண்டுதோறும், 6 சதவீத மின்கட்டண உயர்வு நடைமுறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும்
        • அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தவில்லை.

        திருப்பூர்:

        கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட தொழில் அமைப்புகள் இணைந்து, தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. பீக்ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். மின்சார நிலை கட்டண உயர்வுகளை வாபஸ் பெற வேண்டும்.

        ஆண்டுதோறும், 6 சதவீத மின்கட்டண உயர்வு நடைமுறையை அடியோடு ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி போராடி வருகின்றனர். மின்கட்டண உயர்வுகளால் சிறு, குறு தொழில்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால் முதல்-அமைச்சர் நேரடியாக தலையிட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

        கடந்த 11ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள தொழில் அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள், முதல்வருக்கு, 'இ-மெயில்' அனுப்பி வருகின்றனர். இந்நிலையில் இன்று திருப்பூரில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விரைவு தபால் அனுப்பும் போராட்டம் நடத்த தொழில் அமைப்புகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று திருப்பூர் நிட்மா சங்க அலுவலகத்தில் இருந்து திருப்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள தபால் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். பின்னர் கோரிக்கையை வலியுறுத்தி, முதல்வருக்கு விரைவு தபால் அனுப்பினர்.

        இது குறித்து டீமா சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-

        பீக்ஹவர் கட்டணம் ரத்து, நிலை கட்டண உயர்வு ரத்து உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, முதல்வர் அலுவலகத்துக்கும், தொழில்துறைக்கும், இ-மெயில் அனுப்பி வருகிறோம். சங்கம் சார்பிலும், தனித்தனி உறுப்பினர்களும் அனுப்பி வருகின்றனர். அரசை எதிர்க்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தவில்லை. மின் கட்டண உயர்வால் தொழிலை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் மட்டுமே, போராட்டம் நடத்துகிறோம்.

        இன்று திருப்பூர் தொழில் அமைப்புகள் கூட்டாக இணைந்து நடைபயணமாக சென்று முதல்வருக்கு விரைவு தபால் அனுப்பி உள்ளோம். வருகிற 25-ந் தேதி, தமிழகம் முழுவதும், தொழிற்சாலைகளில் கறுப்பு கொடி ஏற்றி வைத்து, ஒருநாள் உற்பத்தி நிறுத்த போராட்டம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார். மேலும் வருகிற 24-ந்தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர் வருகிறார். அப்போது தொழில்துறையினரை சந்தித்து குறைகளை தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

        அப்படி இல்லாதபட்சத்தில் 25-ந்தேதி உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என திருப்பூர் தொழில்துறையினர் தெரிவித்தனர்.

        • கடந்த ஜூலை மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
        • பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை குறைக்க மின்வாரியம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

        சென்னை:

        தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளில் லிப்ட், மோட்டார் பம்ப் போன்றவற்றை உள்ளடக்கிய காமன் சர்வீஸ் எனப்படும் பொது சேவை மின் இணைப்பு இருந்து வருகிறது. இதற்கு வீட்டுப் பிரிவுக்கான மின் கட்டணமும் வசூலிக்கப்பட்டு வந்தது.

        இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 2022-ல் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக கட்டிடங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கான மின் கட்டணத்தை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உயர்த்தியது.

        அதில், முதல்முறையாக அடுக்குமாடி குடியிருப்புகளின் பொது சேவை பிரிவுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.8-ஆகவும், மாதம் நிரந்தர கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.100 எனவும் தனி மின்கட்டணத்தை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அமல்படுத்தியது.

        இந்த கட்டணம் அடுக்கு மாடி குடியிருப்பில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், கண்காணிப்பு கேமரா, சமூக கூடம் ஆகியவற்றுக்கு பொருந்தும் எனவும் அறிவித்தது.

        இந்த பொதுப் பயன்பாட்டுக்கான மின்கட்டண உயர்வால் சொந்த குடியிருப்புகள், தனிவீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

        இந்த நிலையில் மீண்டும் கடந்த ஜூலை மாதத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

        அதன்படி மறுபடியும் பொது சேவை பிரிவுக்கான மின் கட்டணமாக யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 எனவும், நிரந்தர கட்டணமாக ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.102 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டது. குறிப்பிட்ட கால இடை வெளிக்குள் இருமுறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பல்வேறு தரப்பினரும் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், மின் கட்டணத்தை குறைக்க தொடர்ந்து கோரிக்கையும் விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையின் படி பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை குறைக்க மின்வாரியம் திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

        இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது-

        உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது. முதல் கட்டமாக 10க்கும் குறைவான வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தையே பொது பயன்பாட்டுக்கான மின் கட்டணமாக நிர்ணயிக்க மின்வாரியம் திட்டமிட்டு உள்ளது. இது குறித்து தமிழக அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

        இது தொடர்பாக மின்வாரியம் மற்றும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துடன் கலந்தாலோசித்து விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.

        இவ்வாறு அவர்கள் கூறினர்.

        • முதல், 1000 யூனிட்டுக்கு மின் கட்டணம் இல்லை. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை குறைத்து அரசு அறிவித்தது.
        • 6 தவணைகளில் நிலுவை கட்டணத்தை செலுத்தவும் அரசு அனுமதி அளித்தது.

        திருப்பூர்:

        கோவை, திருப்பூர் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. பல லட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் விசைத்தறிக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. இதனால் மின் கட்டணத்தை செலுத்தாமல் விசைத்தறியாளர்கள் போராடினர்.

        அதன் பலனாக முதல், 1000 யூனிட்டுக்கு மின் கட்டணம் இல்லை. உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தில் 50 சதவீதத்தை குறைத்து அரசு அறிவித்தது. ஆனால் நிலுவையில் உள்ள மின் கட்டணத்துக்கு அபராதம் மற்றும் வட்டி விதிக்கப்பட்டது.மேலும் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்திலேயே மின் கணக்கீடு செய்யப்பட்டது. இதனால் விசைத்தறியாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

        கடந்த 8 மாதங்களாக முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மற்றும் மின்வாரிய அதிகாரிகளிடம் நிலுவை மின் கட்டணத்துக்கு அபராதம், வட்டியை ரத்து செய்ய வேண்டும், கட்டணம் செலுத்த தவணை அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

        விசைத்தறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, அபராதம் மற்றும் வட்டியை ரத்து செய்தும், 6 தவணைகளில் நிலுவை கட்டணத்தை செலுத்தவும் அரசு அனுமதி அளித்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த விசைத்தறியாளர்கள் நிலுவை மின் கட்டணத்தை செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

        இதுகுறித்து, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவர் குமாரசாமி, பொருளாளர் பூபதி ஆகியோர் கூறுகையில், அரசின் அறிவிப்பால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.

        கடந்த 4 நாட்களாக மின் வாரிய அலுவலகங்களுக்கு சென்று தங்களின் நிலுவை கட்டணம் குறித்து விசாரித்து அதை செலுத்துவதில் விசைத்தறியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர் என்றனர்.

        • தமிழ்நாடு மின்சார வாரியம் காலை மற்றும் மாலை 6 முதல் 10:00 மணி வரை பீக் ஹவர் கட்டணம் வசூலிக்கிறது.
        • உண்ணாவிரதப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

        பல்லடம்:

        பல்லடம் அருகே உள்ள காரணம் பேட்டையில், தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில், மின்சார நிலை கட்டண உயர்வு, மற்றும் பீக்ஹவர் மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனர். இது குறித்து தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபால், ஜேம்ஸ், முத்துரத்தினம், சுருளிவேல், ஸ்ரீகாந்த்,கோபிபழனியப்பன், கோவிந்தராஜ் ஆகியோர் கூறியதாவது : -

        தமிழ்நாட்டில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறு சிறு நடுத்தர தொழில் முனைவோர்கள் "எல்.டி 111பி "என்ற மின் இணைப்பை பெற்று தொழில் செய்து வருகிறோம். எங்களில் பெரும்பாலானோர் முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள், மற்ற மின் நுகர்வோர்களை போல மின்கட்டணத்தில் சலுகையோ, இலவச மின்சாரமோ, தனியார் ஜெனரேட்டர் நிறுவனங்களிடம் இருந்து குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்கிக் கொள்ளும் அனுமதியோ, காற்றாலை மூலம் மின்சாரத்தை பேங்கிங் வசதியுடன் பெற்றுக் கொள்ளும் அனுமதியோ எதுவும் எங்களிடம் இல்லை.

        இதற்கிடையே தமிழ்நாடு மின்சார வாரியம் காலை மற்றும் மாலை 6 முதல் 10:00 மணி வரை பீக் ஹவர் கட்டணம் வசூலிக்கிறது. தொழில் இயக்காவிட்டாலும் அதிகபட்சமாக நிலை கட்டணத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. வழக்கமான மின் கட்டண செலவில் 40 சதவீதம் வரை உயர்ந்துள்ளதால் கட்டண உயர்வை வாபஸ் வரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.

        அரசின் கவனத்தை ஈர்க்க இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெறுகிறது.இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 70 அமைப்புகளில் உள்ள சுமார் 5 ஆயிரம் நிறுவனங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ.,கலந்து கொண்டு பேசினார்.

        • ஈரோடு மாவட்டத்தில் 45 சதவீதம் பேர் ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர் என மின் பகிர்மான மண்டல தலைமை பொறியாளர் தகவல் தெரிவித்தார்
        • தற்போது மின் கம்பத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றம் செய்யவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

        ஈரோடு,

        ஈரோடு மின் பகிர்மான மண்டல தலைமை பொறியாளர் இந்திராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- மின்வாரியத்தில் மின் இணைப்பு மின் கட்டணம் செலுத்துதல் மற்றும் பிற பரிவர்த்தனைகளும் ஆன்லைனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநில அளவில் தற்போது 60 சதவீதம் மின் நுகர்வோர் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இது ஈரோடு மாவட்டத்தில் 45 சதவீதமாக உள்ளது. இதை மேலும் அதிகரிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தற்போது மின் கம்பத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மாற்றம் செய்யவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். புகார் குறை, புது இணைப்பு விண்ணப்பித்தலும் ஆன்லைனில் பதிவு செய்வதால் விரைவாக பரிசீலனை செய்ய முடிகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

        • பனியன் தொழில் நகரமான திருப்பூரில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
        • தொழிலாளர்கள் வேலையை இழந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது.

        திருப்பூர்:

        திருப்பூரில் ஒருங்கிணைந்த மாவட்ட தேமுதிக., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மாநகர் மாவட்ட செயலாளர் விசைத்தறி பி .ஆர் .குழந்தைவேல் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் ஆறுச்சாமி, வடக்கு மாவட்ட செயலாளர் பிரசாந்த் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

        மாநில கழக துணை செயலாளர் அக்பர், மாநில தொழிற்சங்க துணை செயலாளர் பொன் இளங்கோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். இதில் திருப்பூர் மாவட்ட தேமுதிக.வை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

        இதில் பனியன் தொழில் நகரமான திருப்பூரில் ஆயிரக்கணக்கான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. ஆண்டுக்கு சுமார் 50,000 கோடி அளவுக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் திருப்பூரில் உள்ள தொழில் நிறுவனங்கள் தற்போது தமிழக அரசால் உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வால் தள்ளாடி வருகிறது.

        அதிலும் கூடுதலாக வர்த்தக நிறுவனங்களுக்கு காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 10 மணி வரையிலான பீக் ஹவர் என சொல்லப்படும் இந்த நேரங்களில் மேலும் அபரிமிதமான கட்டணத்தை உயர்த்தி தொழில் துறையினரையும் தொழிலாளர்களையும் வேதனை அடைய செய்திருக்கிறது.

        இதனால் தொழிலாளர்கள் வேலையை இழந்து வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. ஆகவே தமிழக அரசு இந்த பீக் ஹவர் மின் கட்டண உயர்வு என்பதை வாபஸ் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட தே.மு.தி.க., சார்பில் வலியுறுத்தப்பட்டது.

        தமிழகத்தில் தேர்தல் காலத்தில் திமுக., சார்பில் அனைத்து மகளிருக்கும் ரூபாய் ஆயிரம் உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. அதன் அடிப்படையில் ஆட்சியையும் பிடித்தது .ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்து ஆட்சி கட்டிலில் அமர்ந்த பிறகு மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு தகுதியானவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டு தற்போது விண்ணப்பங்களும் வழங்கி வருகின்றனர்.அதிலும் குளறுபடி நீடிக்கிறது .இதை தமிழக அரசு களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

        குறிப்பாக திருப்பூர் மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் நீடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

        இதை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குளறுபடிகளை களைந்து அனைத்து மகளிருக்கும் தமிழக அரசு அறிவித்துள்ள மகளிர் உரிமை தொகை ரூ.1000த்தை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தேமுதிக., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

        ×