என் மலர்
நீங்கள் தேடியது "தீவிரவாதிகள்"
- பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்
- இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
காஷ்மீரில் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர்.
இந்த கொடூர தாக்குதலை நடத்தியது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவத்தின் உளவு அமைப்பு தேவையான உதவிகளை செய்து கொடுத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பிரதமர் மோடி ராணுவ தளபதிகளுடனும், பா.ஜ.க. மூத்த தலைவர்களுடனும் பல்வேறு கட்ட ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக இந்திய ராணுவம் எந்த நேரத்திலும் பாகிஸ்தானுக்குள் புகுந்து அல்லது பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீர் பகுதிக்கு ஊடுருவி சென்று பெரிய அளவில் தாக்குதல் நடத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்பு காரணமாக இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடந்த 9 நாட்களாக பதட்டம் நீடித்தப்படி உள்ளது.
இதற்கிடையே இந்திய போர் விமானங்கள் அரபிக் கடலில் போர் பயிற்சி செய்தன. அதுபோல பஞ்சாப், ராஜஸ்தான் எல்லைகளிலும் ராணுவ வீரர்கள் போர் பயிற்சிகளில் ஈடுபட்டனர். இதை அறிந்த பாகிஸ்தான் எல்லையில் போர் விமானங்களை குவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியா எல்லையில் சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் ஏராளமான பதுங்கு குழிகளை அமைத்து உள்ளனர். மேலும் பயங்கரவாதிகள் பல நவீன முகாம்களும் வைத்துள்ளனர்.
அந்த முகாம்கள் மூலம் எல்லையில் ஆயுத பயிற்சிகள் பெற்று தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் வந்து தாக்குதல் நடத்துவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். அந்த முகாம்கள் அனைத்தையும் இந்திய ராணுவம் கண்காணிப்பு வளையத் துக்குள் கொண்டு வந்துள்ளது.
இதன் காரணமாக அந்த பயிற்சி முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் எந்த நேரத்திலும் துல்லிய தாக்குதலில் ஈடுபடக் கூடும் என்ற பீதி பயங்கரவாதிகளிடம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த சில தினங்களாக பயங்கரவாதிகள் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் இருந்து வேறு இடங்களுக்கு செல்ல தொடங்கி இருக்கிறார்கள்.
பெரும்பாலான பயங்கரவாத முகாம்கள் பயத்தில் மூடப்பட்டுள்ளன. பதுங்கு குழிகளையும் கைவிட்டு விட்டு பயங்கரவாதிகள் ஓட் டம் பிடித்து வருகிறார்கள். இந்த தகவல்களையும் இந்திய உளவுத்துறை சேகரித்து பயங்கரவாதிகளின் நகர்வை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி அருகே ஜம்மு டிவிசன் பகுதியில் 3 இடங்களில் பயங்கரவாதிகள் முகாம்கள் அமைத்து இருந் னர். அந்த முகாம்களில் 120-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பயிற்சி பெற்று வந்தனர். அந்த முகாம்களை மூடி விட்டு பயங்கரவாதிகள் கூட்டம் கூட்டமாக சென்றதை இந்திய ராணுவம் படம் பிடித்துள்ளது.
- 3 பேருமே லஷ்கர்-இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள்.
- டிரோன்கள் மூலம் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
புதுடெல்லி:
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தாக்குதலின்போது ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதற்கிடையே தீவிரவாதிகள் தாக்குதலில் காயத்துடன் உயிர் தப்பியவர்கள் கூறிய அடையாளங்களை வைத்து தாக்குதலில் ஈடுபட்ட 3 தீவிரவாதிகளின் உருவப்படங்களை போலீசார் வரைந்து வெளியிட்டனர்.
மேலும் தாக்குதல் நடைபெற்ற பைசரன் புல்வெளி பகுதியில் சி.சி.டி.வி. காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அதில் பதிவாகி இருந்த காட்சிகளை சேகரித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.
இதில் முக்கிய திருப்பமாக பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 3 முக்கிய தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் பாகிஸ்தானின் லஸ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த ஹாஷிம்மூசா என்ற சுலைமான், அலிபாய் என்ற தல்காபாய், அபித் ஹூசைன் தோக்கர் என்பது தெரியவந்துள்ளது.
இதில் ஹாஷிம்மூசா, அலிபாய் ஆகிய இருவரும் பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்டவர்கள். அபித் ஹூசைன் தோக்கர் காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர்கள் 3 பேருமே லஷ்கர்-இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்று உறுதிபடுத்தி உள்ள பாதுகாப்பு துறை அதிகாரிகள், 3 பேரும் கிஷ்த்வாரில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்திருக்கலாம் என கருதுகின்றனர்.
மேலும் தாக்குதலுக்கு பிறகு இந்த கும்பல் பிர்பஞ்சல் மலை தொடரின் உயரமான பகுதிகள் வழியாக தப்பி சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே அந்த பகுதிகளில்
மேலும் தேடுதல் வேட்டையில் ஹெலிகாப்டர் மற்றும் பிற மின்னணு சாதனங்கள் மூலம் கண்காணிப்பு நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர். தப்பி ஓடிய தீவிரவாதிகளை பிடிக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் கூறினர்.
மேலும் இந்த 3 தீவிரவாதிகள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு தலா ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பஹல்காம் பகுதியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி தஹாவூர் ராணா சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். தற்போது அவர் தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கிடையே பஹல்காம் தாக்குதல் சம்பவத்துக்கும், ராணா நாடு கடத்தப்பட்ட சம்பவத்துக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதைத்தொடர்ந்து ராணா விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ள என்.ஐ.ஏ. தலைமை இடத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்தனர்.
- தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன.
ஜம்மு-காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் உரி நாலாவில் எல்லை கட்டுப்பாட்டு பகுதி உள்ளது. இங்குள்ள சர்ஜீவன் பொதுப்பகுதி வழியாக 2 முதல் 3 தீவிரவாதிகள் இன்று காலை ஊடுருவ முயன்றனர்.
அங்கிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். உடனே தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினார்கள். இரு தரப்பினருக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது.
பாதுகாப்பு படை வீரர்களின் அதிரடி தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள், வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன. தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்தனர்.
அந்த பகுதியில் வேறு தீவிரவாதிகள் இருக்கிறார்களா என்று தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் தீவிரவாதிகள் நேற்று மாலை நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் நிகழ்ந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சியை முறியடித்து 2 பேரை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்று பதிலடி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் காஷ்மீரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
- அப்பகுதியில் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிஷ்த்வார் மாவட்டம் தந்து என்ற பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து இப்பகுதியை பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் கூட்டாக இணைந்து சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காட்டுக்குள் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் அவர்களை பார்த்து துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் நேற்று ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். இன்று அதிகாலை மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க கமாண்டர் என்றும், அவரது பெயர் சைபுல்லா என்றும் தெரிய வந்தது. மற்றவர்கள் பெயர் பர்மான், பாஷா ஆகும். இவர்களது தலைக்கு தலா ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு இருந்தது.
அவர்களிடம் இருந்து நவீனரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். அப்பகுதியில் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் அக்னூர் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஊடுருவல் முயற்சியை தடுத்த ராணுவ வீரர் ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார். அவரது பெயர் குல்தீப்சந்த் ஆகும். இந்த துப்பாக்கி சண்டையில் ஜூனியர் ராணுவ அதிகாரி ஒருவரும் காயம் அடைந்தார்.
- இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை.
- தீவிரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினார்கள். அன்றில் இருந்து பாகிஸ்தானுக்கு அவர்கள் தலைவலியாக மாறி உள்ளனர்.
ஆப்கானிஸ்தானை சேர்ந்த பயங்கர வாதிகள் பாகிஸ்தானின் சைபர் பக்துன்க்வா மற்றும் பலுசிஸ்தான் மாகாண எல்லைப்பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள், பாதுகாப்பு படை வீரர்கள் பலர் பலியாகி வருகின்றனர்.
தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்து வருவதைதொடர்ந்து அவர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு இறங்கி உள்ளது. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் கைபர் பக்துன்க்வா தேரா இஸ்மாயில்கான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாகிஸ்தான் உளவு துறைக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு மறைந்து இருந்த தீவிரவாதிகள் ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
பாகிஸ்தான் ராணுவத்தினரும் திருப்பி சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 10 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். ராணுவ அதிகாரி ஒருவரும் உயிர் இழந்தார்.
தீவிரவாதிகளிடம் இருந்து ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது.
- தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
- இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள குரும்ஹீரா கிரா மத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் இன்று காலை அந்த பகுதிக்கு சென்று தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதனால் பாதுகாப்பு படை வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்தது.
பாதுகாப்பு படை வீரர்களின் அதிரடியான தாக்குதலால் தீவிரவாதிகள் நிலை குலைந்தனர். இதனால் 2 முதல் 3 தீவிரவாதிகள் பிடிபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த பகுதியில் மேலும் தீவிரவாதிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
துப்பாக்கிச் சண்டை நடந்த பகுதியில் இருந்து பல்வேறு ஆயுதங்களை பாதுகாப்பு படை வீரர்கள் கைப்பற்றினார்கள்.
- சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- நமது நாட்டில் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் சமீபத்தில் பதவி யேற்றார். அவர் பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி உத்தரவுகளில் கையெழுத்திட்டார். குறிப்பாக சட்ட விரோத குடியேற்றத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் டிரம்ப் தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் சட்ட விரோதமாக குடியேறியவர்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை தீவிரவாதிகள் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.
அவர் கூறும்போது, `நமது நாட்டில் ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் உள்ளனர். இந்த பிரச்சினையை நாங்கள் கவனித்துக் கொள்வோம்' என்றார்.
மேலும் டிரம்ப் கூறும் போது, `ஜனநாயகக் கட்சியினரால் ஆட்சி செய்ய முடியாது என்பதையும், அவர்களின் கொள்கைகள் பயங்கரமானவை என்பதையும் மக்கள் தெரிந்து கொண்டிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.
குத்துச்சண்டை வளையத்தில் ஒரு பெண் ஒரு ஆணால் தாக்கப்படுவதை அவர்கள் பார்க்க விரும்பவில்லை. ஒரு குழந்தை ஒரு பையனாக வீட்டை விட்டு வெளியேறி 2 நாட்களுக்குப் பிறகு ஒரு பெண்ணாக திரும்பி வருவதை அவர்கள் விரும்பவில்லை. ஆனால் அது நடக்கக்கூடிய மாகாணங்களும் உள்ளன.
முன்னாள் அதிபர் ஜோ பைடன் பலருக்கும் பொது மன்னிப்பு வழங்கினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தனக்குதானே மன்னிப்பு வழங்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- இது தீவிரவாத செயல் என்று கூறுவதற்கு ஏன் மறுக்கிறீர்கள் என அண்ணாமலை கேள்வி
- ஒருவர் இறந்தால்தான் முதல்-அமைச்சர், உளவு துறை தோற்று விட்டது என்பதை ஒப்புக்கொள்ளவரா?
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கோவை மாநகரம் என்பது பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறி இருக்கிறது என்பது 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் அனைவருக்கும் தெரிய வந்தது. 1998-ம் ஆண்டு கோவையில் நடந்த குண்டு வெடிப்பில் அப்பாவிகள் 58 பேர் பலியானார்கள்.
2019-ம் ஆண்டு ஜூன் மாதம் தேசிய புலனாய்வு முகமை 5 பேரை கைது செய்தது. இதில் கைதான முகமது அசாருதீன், கேரளாவைச் சேர்ந்த அபுபக்கர் ஆகிய 2 பேர் ஈஸ்டர் பண்டிகையின்போது குண்டு வெடிப்பு நிகழ்த்திய ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த ஜக்ரன் ஹசீமுடன் தொடர்புடையவர்கள். இவர் பேஸ்புக் மூலம் நிறைய பேரை மூளைச்சலவை செய்துள்ளார்.
2019 ஏப்ரல் மாதம் 21-ந்தேதி 3 தேவாலயங்கள், நட்சத்திர விடுதியில் நடத்திய தாக்குதலில் 269 பேர் இறந்தனர். முகமது அசாருதீன், அபுபக்கர் ஆகியோர் இன்று ஜெயிலில் உள்ளனர்.
அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் பற்றி விசாரணை நடத்தியபோது அதில் ஜமேசா முபினும் ஒருவர். இவர்தான் கடந்த 23-ந்தேதி கோவையில் வெடித்து சிதறிய காரை ஓட்டி வந்தவர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் இது தீவிரவாத செயல் என்று கூறுவதற்கு ஏன் மறுக்கிறீர்கள்.
ஜமேசா முபின் 2 நாட்களுக்கு முன்பு தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசை மாற்றியுள்ளார். அதில், எனது இறப்பு செய்தி தெரிந்தவுடன் எனது தவறை மன்னித்து விடுங்கள். எனது குற்றத்தை மறந்து விடுங்கள். எனது இறுதி சடங்கில் கலந்து கொள்ளுங்கள். எனக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்று ஆங்கிலத்தில் வைத்துள்ளார்.
இது தற்கொலை படை தாக்குதலில் ஈடுபடுபவர்கள் பயன்படுத்தும் வார்த்தை. அக்டோபர் 21-ந்தேதி இதை அவர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசில் வைத்துள்ளார். சி.சி.டி.வி.யில் அவரது வீட்டில் இருந்து 2 சிலிண்டர்களை நாலைந்து பேர் காரில் ஏற்றப்படும் காட்சி பதிவாகியுள்ளது.
இந்த சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்களின் பெயர் விவரத்தையும் கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் எதற்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதை போலீசார் தெரிவிக்கவில்லை. தற்கொலை படை தாக்குதல் என்று போலீசார் எந்த தகவலயும் கொடுக்கவில்லை.
ஜமேசா முபின் வீட்டில் 55 கிலோ அம்மோனியம் நைட்ரேட், பொட்டாசியம், சோடியம் எடுக்கப்பட்டது. அவர் தீபாவளி கொண்டாடவா? அதை வீட்டில் வைத்திருந்தார்.
ஜமேசா முபின் போலி குண்டுடன் சென்றார். ஆனால் தீவிரவாத தாக்குதல் இல்லை என்று டி.ஜி.பி. சொல்கிறார். தமிழக மக்களை போலீசார் முட்டாள் என்று நினைக்கிறார்கள். டி.ஜி.பியும், காவல் துறையினரும் குழந்தை தனமாக பேட்டி கொடுக்கிறார்கள்.
பால்ரஸ் குண்டு ஏன் வந்தது என்று பத்திரிகையாளர்கள் துருவி துருவி கேள்வி கேட்டும் சரியான பதில் சொல்லவில்லை. சம்பந்தமே இல்லாமல் ஏன் வண்டி வெடிக்க வேண்டும். உங்களிடம் சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளது. கோட்டைமேடு பகுதியில் இருந்து கார் கிளம்பியது முதல் கார் வெடித்தது வரை சி.சி.டி.வி. காட்சி உள்ளது.
தமிழகத்தில் இன்னும் குண்டு வெடிக்க வேண்டுமா? இன்னும் ஒருவர் இறந்தால்தான் முதல்-அமைச்சர், உளவு துறை தோற்று விட்டது என்பதை ஒப்புக்கொள்ளவரா? இதற்கு எவ்வளவு நாள் வேண்டும். பழைய தி.மு.க. ஆட்சியில் உளவு துறையில் சிறந்த அதிகாரிகள் இருந்தார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் உளவு துறையில் சிறந்த அதிகாரிகள் இருந்தார்கள்.
தமிழக உளவு துறையில் தற்போது சிறந்த அதிகாரிகள் இல்லை. தமிழக உளவு துறையில் சிறந்த அதிகாரிகளை முதல்-அமைச்சர் நியமிக்கவேண்டும். தமிழ் நாட்டில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு இடம் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
கொங்கு மண்டலமான கோவை, சேலம், ஈேராடு ஆகியவை தற்போது ஐ.எஸ். கலவர பூமியாக மாறி வருகிறது. இந்த தாக்குதலை தற்கொலை படை தாக்குதல் என்று தமிழக அரசு ஒத்துக்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் உண்மையை வெளியே கொண்டுவர வேண்டிய பொறுப்பு பா.ஜனதாவுக்கு உள்ளது.
4 மாதங்களுக்கு முன்பு ஈரோட்டில் இருந்து ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவனை போலீசார் கைது செய்தார்களா? இல்லையா? என்பதை தமிழக அரசு சொல்ல வேண்டும்.
அவர் ஒரு வேளையில் வாங்கி அதை எடுத்துக்கொண்டு இந்து பண்டிகையில் மக்கள் அதிக மாக சேரும்போது அந்த வண்டியை எடுக்க சென்று பாரிஸ் ஸ்டைல் தாக்குதல் போல நடத்த வண்டியை வாங்கினாரா இல்லையா? அந்த வண்டியை வாங்கிய பிறகு வெளியில் உள்ள ஏஜென்சி அவருக்கு எச்சரிக்கை செய்து ஈரோட்டில் ஒருவரை சேலத்தில் ஒருவரை தமிழக போலீஸ் கைது செய்ததா இல்லையா? அதை ஒத்துக்கொள்ள வேண்டும்.
எல்லாவற்றையும் மறைத்து மறைத்து எந்த விஷயத்தையும் வெளியில் தெரியாமல் செய்து வருகிறது. வேகத்தடை மீது கார் ஏறி இறங்கும் போது சிலிண்டர் தலை பகுதி கழன்று விட்டது. காரை ஓட்டியவர் வெளியே வந்து ஏன் கழன்றது என்று சரி செய்யும் போது அது வெடிக்கிறது.
இதை ஏன் காவல்துறை மறுக்கிறது. கோவையில் உள்ள ஒரு போலீஸ்காரருக்கு போன் செய்து கேட்டால் அவர் யார் விட்டில் இருந்து வண்டி கிளம்பியது. சி.சி.டி.வி. காட்சியில் என்ன இருக்கிறது? வண்டி வேகத்தடையில் ஏறி இறங்கும் போது சிலிண்டர் தலைப்பகுதி கழன்றதால் வெடித்தது என்கிறார்.
ஆனால் இதை தமிழக காவல்துறை மறுக்கிறது. முதல்-அமைச்சரும் மறுக்கிறார். இந்தியாவில் பெங்களூர், ஐதராபாத், புனே, டெல்லி, மும்பை பகுதியில் முன்பு 10 ஆண்டு காலம் தொடர்ந்து குண்டுவெடிப்பு நடந்தது.
தீபாவளி நேரத்தில் இதுபோல் நடந்தது. இதில் கொத்துக்கொத்தாக 100 பேர், 200 பேர், 300 பேர் இறந்ததை பார்த்தோம். 2008 நவம்பர் 26-ல் மும்பையில் தாக்குதல் நடந்தது. இது பெரிய தாக்குதல். எனவே தமிழகத்தில் ஐ.எஸ். தீவிர வாதிகள் ஊடுருவ முயற்சி செய்கிறார்களா? என்ற கேள்விக்கு முதல்-அமைச்சர் பதில் சொல்ல வேண்டும். இது தற்கொலை படை தாக்குதல் என்று தமிழக அரசு ஒத்துக்கொண்டால் கோவைக்கு ஒரு என்.ஐ.ஏ. வேண்டும். இந்த விஷயத்தில் போலீசாரை மட்டும் குற்றம் சாட்டுவது வேதனையாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் கடத்தலை தடுக்க நேற்று கடலோர காவல் குழு போலீசார் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- மாறுவேடத்தில் வரும் போலீசாரை ரோந்து பணியில் இருக்கும் போலீசார் கடல்பரப்பில் அல்லது கடற்கரையோரத்தில் பிடிக்கவேண்டும் என்பது நிகழ்ச்சியின் நோக்கமாகும்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம்வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுதுறையில் சாகர்கவாச் எனும் கடல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை மற்றும் கடத்தலை தடுக்க நேற்று காலை கடலோர காவல் குழு போலீசார் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டனர் இன்று இராண்டாவது நாளாக ரோந்து பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது இப்பணியில் இன்று கடலோர காவல் படையினருக்கு சொந்தமான நிரிலும், நிலத்திலும், செல்ல கூடிய ரோவர் படகு கோடிக்கரைக்கு வந்து ரோந்து பணி மேற்கொள்ளப்படுகிறது மேலும் வேதாரண்யம் பகுதியில் உள்ள 9 சோதனை சாவடிகளும் தீவிர வாகன சோதனையும் நடைபெறுகிறது
இராண்டாவது நாள் பயிற்சி ஒத்திகையில் வேதா ரண்யம் இன்னல்பெக்டர் சுப்ரியா மற்றும் போலீசார் வேதாரண்யம் கடலோர பாதுகாப்பு குழுமம் டி.எஸ்.பி சுரேஷ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் சப்-இன்ஸ்பெ க்டர்கள் பன்னீர்செல்வம், ஆனந்த வடிவேலன் ஏட்டு சசிகுமார்மற்றும் போலீசார் ஆறுகாட்டுதுறை, கோடிக்கரை கடற்கரையில் புதிதாக யாரும் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா? மீன்பிடி படகில் தீவிரவாதிகள் வரும் வாய்ப்புகள் உள்ளதா? மீனவர்களின் படகை பயன்படுத்தி கடத்தல் நடைபெறுகிறதா? என்று சோதனை செய்தனர்.
பின்னர் படகுமூலம் கடலில் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். 2 நாட்கள் நடைபெறும் .
இந்த ஒத்திகை நிகழ்ச்சி யில் போலீசார் மாறுவேடத்தில் கடலில் இருந்து கரைக்கு வருவார்கள் அவர்களை அடையாளம் கண்டு மறுவேடத்தில்வரும் போலீசாரை ரோந்து பணியில் இருக்கும் போலீசார் கடல்பரப்பில் அல்லது கடற்கரையோரத்தில் பிடிக்கவேண்டும் என்பது ஒத்திகை நிகழ்ச்சியின் நோக்கம் ஆகும்.
இந்த சாகார் கவாச் ஒத்திகை நிகழ்வில் வேதாரண்யம் போலீசார், உளவு பிரிவு போலீசார், கியூ பிராஞ்ச் போலிசார் என 50 மேற்பட்ட போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் ஒரே நேரத்தில் இராண்டாவது நாளாக கடலிலும் மக்கள் கூடும் இடங்களிலும் மற்றும் வாகன சோதனை நடைபெற்று வருவதால் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.