என் மலர்
நீங்கள் தேடியது "வேட்பாளர்கள்"
- வேட்பாளர்கள் யார் என்பது குறித்து கடந்த சில நாட்களாக கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது.
- காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
காங்கிரஸ் சார்பில் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்தப்படப்போவது யார் என்பதுதான் மில்லியன் கேள்வியாக எழுந்துள்ளது. அமேதி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்த நிலையில், இந்த முறை வயநாடு தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.
ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா காந்தி, உடல்நல காரணமாக மக்களவை தொகுதியில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துவிட்டார்.
இந்த இரண்டு தொகுதிகளில் காந்தி குடும்பங்களின் பாரம்பரிய தொகுதிகள் ஆகும். இதனால் ராகுல் காந்தி அமேதியிலும், பிரியங்கா காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர்கள் விரும்புகிறார்கள். உத்தர பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் இதைத்தான் விரும்புகிறார்கள்.
இதற்கிடையே, பாராளுமன்ற தேர்தலில் அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த இரு தொகுதிகளுகும் காங்கிரஸ் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது.
வேட்பாளர்கள் யார் என்பது குறித்து கடந்த சில நாட்களாக கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது.
இந்நிலையில், அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு 24 மணிநேரத்தில் வேட்பாளர்களை அறிவிப்போம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அமேதி, ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? என்ற முடிவை எடுக்க தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர்கள் யார்? என்பது குறித்து அடுத்த 24 மணிநேரத்தில் அறிவிப்போம். யாரும் பயப்படவில்லை, யாரும் விட்டு ஓடவில்லை
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு வேட்பாளா் சார்பில் 98 முகவா்களை நியமிக்க வேண்டும்.
- முகவா்களின் பெயா், கையொப்பம், இரண்டு புகைப்படங்களையும் ஒப்படைக்க வேண்டும்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தோ்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ந் தேதி நடைபெற உள்ளது.
தோ்தலில் பதிவான வாக்குகளை கொண்ட மின்னணு இயந்திரங்கள் அனைத்தும் 39 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வாக்குகள் எண்ணிக்கை பணிக்காக அதிகாரிகள், அலுவலா்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.
வாக்கு எண்ணிக்கையின் போது ஒவ்வொரு மேஜையிலும் வேட்பாளா்கள் சார்பில் இருக்க வேண்டிய முகவா்களின் எண்ணிக்கை குறித்து தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்களுக்கு தோ்தல் நடத்தும் அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனா்.
பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக முகவா்களை நியமிக்க வேண்டும். ஒரு தொகுதியில் 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருந்தால் ஒரு மேஜைக்கு ஒருவா் வீதம் 14 முகவா்களையும், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மேஜையில் ஒரு முகவரையும் நியமிக்க வேண்டும்.
அத்துடன், தபால் வாக்குச் சீட்டுகளை எண்ணுமிடத்தில் ஒரு மேஜைக்கு ஒருவா் வீதம் ஆறு மேஜைக்கு ஆறு முகவா்களை நியமனம் செய்ய வேண்டும்.
தபால் வாக்குச் சீட்டு எண்ணுமிடத்தில் ஒரு தோ்தல் நடத்தும் அலுவலா் இருப்பார். அவருடன் ஒரு முகவரையும், தபால் வாக்கு உறைகளை ஸ்கேனிங் செய்யும் அறையில் ஒரு முகவரையும் நியமிக்க வேண்டும்.
ஒரு பாராளுமன்ற தொகுதியில் 6 சட்ட மன்ற தொகுதிகள் இருந்தால், ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 15 நபா்கள் வீதம் 90 முகவா்களை அரசியல் கட்சிகள் நியமிக்க வேண்டும். தபால் வாக்கு எண்ணும் மேஜைகள் மற்றும் தபால் வாக்கு உறைகளை ஸ்கேனிங் செய்யும் அறை ஆகிய இடங்களில் எட்டு முகவா்களை நியமனம் செய்ய வேண்டும்.
மொத்தமாக ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒரு வேட்பாளா் சார்பில் 98 முகவா்களை நியமிக்க வேண்டும்.
வேட்பாளா்களின் சார்பில் நியமிக்கப்படும் முகவா்கள் ஒவ்வொருவரும் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இதற்கென வரையறுக்கப்பட்ட படிவம் 18-ல் முகவா்களின் பெயா்கள், கையொப்பத்துடன் இரண்டு புகைப்படங்களையும் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதேபோல, முகவா்களாக யாரை நியமிக்கக் கூடாது என்ற வரையறைகளையும் தோ்தல் ஆணையம் வகுத்துள்ளது.
அதன்படி, மத்திய மற்றும் மாநில அமைச்சா்கள், சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி மேயா், துணை மேயா், நகா்மன்றத் தலைவா், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா்கள், மத்திய, மாநில பொதுத்துறை நிறு வனங்களின் தலைவா்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து நிறு வனங்களின் பகுதி நேர உறுப்பினா்கள், நியாய விலைக் கடை, சத்துணவு, அங்கன்வாடி, சுகாதார மையங்களில் பணியாற்றும் ஊழியா்கள், அரசு ஊழியா்கள் ஆகியோரை முகவா்களாக நியமிக்கக் கூடாது என தெரிவிக்கப் பட்டுள்ளது.
- உத்தரபிரதேசத்தில் 130 வேட்பாளர்களும், மராட்டியத்தில் 298 வேட்பாளர்களும், மத்திய பிரதேசத்தில் 74 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
- இன்னும் 163 தொகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.
2-ம் கட்டமாக கேரளா உள்பட 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளுக்கு ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடந்தது. 3-ம் கட்டமாக குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 10 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள 93 தொகுதிகளுக்கு கடந்த 7-ந்தேதி தேர்தல் நடந்தது.
இதுவரை நடந்து முடிந்து உள்ள 3 கட்ட தேர்தல்களிலும் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதால், அந்த இடத்தை தவிர மற்ற 283 இடங்களுக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்து உள்ளது.
இந்த நிலையில் 4-ம் கட்ட தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. 9 மாநிலங்கள், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீநகர் தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளுக்கு நாளை 4-ம் கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது.
ஆந்திராவில் உள்ள 25 தொகுதிகள், தெலுங்கானா வில் உள்ள 17 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் உள்ள 13 தொகுதிகள், மராட்டியத்தில் உள்ள 11 தொகுதிகள், மேற்கு வங்காளம் மற்றும் மத்திய பிரதேசத்தில் தலா 8 தொகு திகள், பீகாரில் 5 தொகுதிகள், ஒடிசா மற்றும் ஜார்க்கண்டில் தலா 4 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீரில் ஒரு தொகுதி ஆகிய தொகுதிகளில் நாளை ஓட்டுப்பதிவு நடத்தப்படு கிறது.
நாளை தேர்தலை சந்திப்பவர்களில் முக்கிய வேட்பா ளர்களாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியிலும், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவரும், முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கையுமான ஒய்.எஸ்.ஷர்மிளா கடப்பா தொகுதி யிலும், ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ் வரி ராஜ மகேந்திரவரம் தொகுதியிலும், மத்திய மந்திரி கிரிராஜ் சிங் பீகார் மாநிலத்தில் உள்ள பெகுச ராய் தொகுதியிலும், மத்திய மந்திரி அர்ஜுன் முண்டா ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள குந்தி தொகுதியிலும், முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் மேற்கு வங்காள மாநிலம் பஹரம்பூர் தொகுதி யிலும், நடிகர் சத்ருகன் சின்கா மேற்கு வங்காள மாநி லம் அசன்சோல் தொகுதியிலும், நடிகை மாதவி லதா ஐதராபாத் தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
இந்த தேர்தலில் 170 பெண்கள் உள்பட மொத்தம் 1,717 வேட்பாளர்கள் போட்டி யிடுகிறார்கள். உத்தரபிரதேசத்தில் 130 வேட்பாளர்களும், மராட்டியத்தில் 298 வேட்பாளர்களும், மத்திய பிரதேசத்தில் 74 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
நாளை 4-ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் மும்முரமாக செய்து வருகிறது. 96 தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கும் மின்னணு எந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் கொண்டு செல்லப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் தொகுதியை தவிர தேர்தல் நடக்கும் 542 தொகுதிகளிலும் 4 கட்ட தேர்தல்களையும் சேர்த்து மொத்தம் 379 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நாளையுடன் முடிவுக்கு வருகிறது.
இன்னும் 163 தொகுதி களில் மட்டுமே தேர்தல் நடைபெற உள்ளது. 5-ம் கட்டமாக மே 20-ந்தேதி 49 தொகுதிகளுக்கும், 6-ம் கட்டமாக மே 25-ந்தேதி 57 தொகுதிகளுக்கும், 7-ம் கட்டமாக ஜூன் 1-ந்தேதி 57 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் முடிந்ததும் ஜூன் மாதம் 4-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
- வெற்றி பெற்ற 105 வேட்பாளர்களில் சுமார் 19 சதவீதத்தினர் 5 மற்றும் 12-ம் வகுப்புக்கு இடைப்பட்ட கல்வித்தகுதிகளை பெற்றவர்கள்.
- 34 வேட்பாளர்கள் 10-ம் வகுப்பு வரை படித்தவர்கள், 65 பேர் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.
ஜனநாயக சீர்திருத்த சங்கத்தின் அறிக்கையின்படி,
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கல்வியறிவு இல்லை என்று குறிப்பிட்டிருந்த 121 வேட்பாளர்களும் தோல்வியடைந்து உள்ளதாக தெரிவித்துள்ளது. இவர்களுக்கு விவசாயம் மற்றும் சமூகப்பணியை முக்கிய தொழில்களாக இருந்தன.
வெற்றி பெற்ற 105 வேட்பாளர்களில் சுமார் 19 சதவீதத்தினர் 5 மற்றும் 12-ம் வகுப்புக்கு இடைப்பட்ட கல்வித்தகுதிகளை பெற்றவர்கள். வெற்றி பெற்ற வேட்பாளர்களில் 2 பேர் 5-ம் வகுப்பு வரை படித்தவர்கள், 2 பேர் 8-ம் வகுப்பு வரை படித்தவர்கள்.
தேர்தலில் வெற்றி பெற்ற 420 வேட்பாளர்களில் 77 சதவீதத்தினர் முதுகலை பட்டம் பெற்றவர்கள் அல்லது அதற்கு மேல் பட்டம் மேற்பட்டவர்கள். 17 பேர் டிப்ளமோ படித்தவர்கள் மற்றும் ஒரு வெற்றி பெற்ற வேட்பாளர் வெறும் கல்வியறிவு பெற்றவர்.
இதில் 34 வேட்பாளர்கள் 10-ம் வகுப்பு வரை படித்தவர்கள், 65 பேர் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் கல்வியறிவு இல்லாத வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதை மக்கள் தவிர்த்துள்ளது ஜனநாயக சீர்திருத்தங்களின் சங்கத்தின் அறிக்கையின்படி தெரிய வந்துள்ளது.
- இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது.
- வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகின்றன.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13-ந்தேதி எண்ணப்படுகின்றன. இத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினத்துடன் முடி வடைந்தது.
இத்தேர்தலில் போட்டி யிட தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா. பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 56 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்கள் மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.
இவர்கள் அனைவரும் தாங்கள் தாக்கல் செய்த வேட்பு மனுவுடன் தங்களுடைய சொத்துப் பட்டியல் விவரங்களையும் தாக்கல் செய்துள்ளனர். அதில் முக்கிய வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள சொத்து பட்டியல் விவரம் வருமாறு:-
தி.மு.க வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு ரூ.1 கோடியே 9 லட்சத்து 8 ஆயிரத்து 944-க்கும், அவரது மனைவி வனிதா பெயரில் ரூ.2 கோடியே 43 லட்சத்து 20 ஆயிரத்து 336-க்கும், மகள் ஹர்ஷதாகடர் பெயரில் ரூ.47 லட்சத்து 30 ஆயிரத்து 733-க்கும், மகன் திரி லோக்ஹரி பெயரில் ரூ.19 லட்சத்து 58 ஆயிரத்து 317-க்கும் அசையும் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அன்னியூர் சிவா பெயரில் ரூ.90 லட்சத்து 96 ஆயிரத்துக்கும். அவரது மனைவி வனிதா பெயரில் ரூ.33 லட்சத்து 6ஆயிரத்து 370-க்கும் அசையா சொத்துக்கள் இருப்பதா கவும். இதுதவிர வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் அன்னியூர் சிவாவுக்கு ரூ.1 கோடியே 28 லட்சத்து 92 ஆயிரத்து 19-ம், அவரது மனைவி பெயரில் ரூ.55 லட்சத்து 4 ஆயிரத்து 409-ம் கடன் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பா.ம.க.
பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு ரூ.II லட்சத்து 61 ஆயிரத்து 187-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.17 லட்சத்துக்கு அசையா சொத்துக்கள் இருப்பதாக வும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.15 லட்சத்து 84 ஆயிரத்து 100 மதிப்பில் கடன் இருப்பதாகவும், அவரது மனைவி ஜெயலட்சுமி பெயரில் ரூ.16 லட்சத்து 54 ஆயிரத்து 23-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், ரூ.39 லட்சத்து 23 ஆயிரத்துக்கு அசையா சொத்துக்கள் நிறுவனங்களில் ரூ.1 லட்சம் இருப்பதாகவும், வங்கி, நிதி கடன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா பெயரில் ரூ.4 லட்சத்து 82 ஆயிரத்து 500-க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், வங்கி, நிதி நிறுவனங்களில் ரூ.2 லட் சத்து 62 ஆயிரம் மதிப்பில் நகைக் கடன் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
- இடைத்தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெற உள்ளது.
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்துள்ளது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் தி.மு.க. வேட்பாளராக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.
அவரை எதிர்த்து பா.ஜ.க. கூட்டணி சார்பில் பா.ம.க. வேட்பாளர் சி. அன்புமணி போட்டியிடுகிறார். இது தவிர நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா போட்டியிடுகிறார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்த நிலையில், அக்கட்சியினரின் ஓட்டுக்களை பெறவும், தே.மு.க.தி.வினரின் ஓட்டுக்களை பெறவும், பா.ம.க.வும், நாம் தமிழர் கட்சியும் முயற்சித்து வருகின்றன.
மேலும், விக்கிரவாண்டி தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முகாமிட்டு தேர்தல் பணி செய்து வருகிறார்.
தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக 10 அமைச்சர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் முகாமிட்டு வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
அதேபோல பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி ஆகியோர் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.
மேலும், பா.ஜ.க.வின் உள்ளூர் நிர்வாகிகள் பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருவதால் பா.ம.க.வினர் உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
- கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.
- வருகிற 13ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் தி.மு.க.வை சேர்ந்த நா.புகழேந்தி. உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி அவர் மரணம் அடைந்தார்.
இதையடுத்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை மறுநாள் (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பாக அன்னியூர் சிவா, பா.ம..க. சார்பாக சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பாக டாக்டர் அபிநயா உள்பட மொத்தம் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியான தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. இதனால் இங்கு தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி ஆகிய கட்சிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ மூலம் பிரசாரம் செய்தார். மேலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இதேபோல் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், அவருடைய மனைவி சவுமியா அன்புமணி மற்றும் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். பா.ஜனதா கூட்டணி தலைவர்களும் பா.ம.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயாவும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பல இடங்களில் வாக்குகளை சேகரித்தார்.
கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சியினரும், சுயேச்சை வேட்பாளர்களும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.
தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, திறந்த வாகனத்தில் நின்றபடி நேற்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட திருவாமாத்தூர், காணை, பனமலைப்பேட்டை, அன்னியூர் ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார்.
பா.ம.க. வேட்பாளரை ஆதரித்து டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., நேற்று மாலை அய்யூர்அகரம், தென்னமாதேவி, திருவாமாத்தூர், சோழகனூர், கொசப்பாளையம், சங்கீதமங்கலம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார்.
தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்தது.
இன்று தும்பூர், நேமூர் உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மாலை விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியில் பிரசாரத்தை முடித்தார்.
இதனிடையே வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 276 வாக்குச்சாவடி மையங்களில் நடக்கிறது.
தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளை போலீசார் துணையுடன் தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.
தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வருகிற 13ம் தேதி (சனிக்கிழமை) வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் எண்ணப்படுகிறது.
- மொத்தம் 8 வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதால் அவற்றை சோதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளனர்
- சோதனையை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நேரிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு பயன்படுத்தப்படும் இவிஎம் மின்னணு இயந்திரங்களின் மீதான நம்பகத்தன்மை குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்றன. மக்களவைத் தேர்தலில் மின்னணு இயந்திரங்களை ஒழித்து வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கலும் செய்யப்பட்டது.
இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடப்பது நிரூபிக்கப்படாததால் இந்த மனுவை கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், அதற்கு பதிலாக தேர்தலில் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்து தோல்வியைத் தழுவும் வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்தில் பணம் செலுத்தி விண்ணப்பித்து இவிஎம் இயந்திரங்களை சோதனையிடலாம் என்று தெரிவித்திருந்தது.
அதன்படி நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் மூன்றாம் இடம் பிடித்து தோல்வியடைந்த பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பலவேறு காட்சிகளை சேர்ந்த மொத்தம் 8 வேட்பாளர்கள் தங்களது தொகுதியில் இவிஎம் இயந்திரங்களில் முறைகேடு நடந்துள்ளதால் அவற்றை சோதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். இந்நிலையில் இந்த சோதனையை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நேரிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி வேட்பாளர்கள் தங்களின் தொகுதியில் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்ட எந்த இவிஎம் இயந்திரங்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பதை அவர்களே தேர்ந்தெடுக்கலாம். எந்த இயந்திரத்தை சோதிக்க வேண்டும் என்ற வேட்பளர்களின் முடிவில் அதிகாரிகளின் தலையீடு இருக்காது.
தேர்தெடுக்கப்பட்ட இவிஎம் இயந்திரங்களை பயன்படுத்தி அதிகபட்சமாக 1400 வாக்குகள் செலுத்தி மாதிரி வாக்குப்பதிவு நடத்தி அவை சரியாக இயங்குகிறதா என்று என்று சோதிக்கலாம். அதிகப்பாடசாமாக வேட்பாளர்கள் தங்களின் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட 5 சதவீத இயந்திரங்களை சோதிக்க முடியும்.
இவிஎம் இயந்திரமானது பேலட் யூனிட், கண்ட்ரோல் யூனிட் [விவிபேட்] யூனிட்டை உள்ளடிக்கியது. இந்த யூனிட்களை வெவ்வேறு இயந்திரங்களில் இடைமாற்றியும் [ஒரு இவிஎம் இயந்திரத்தில் உள்ள பேலட் யூனிட்டையும் மற்றொரு இயந்திரத்தில் உள்ள விவிபேட் யூனிட்டையும்] இணைத்து சோதித்து பார்க்கலாம்.
ஆனால் ஒரு தொகுதியில் மொத்தம் 5 சதவீத இயந்திரங்களை சோதிக்க முடியும் என்ற நிலையில் ஒரு வாக்குச்சாவடியில் ஒரு இவிஎம் இயந்திரத்தை மட்டுமே சோதிக்க முடியும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளின் படி விரைவில் மாதிரி வாக்கெடுப்பு நடத்தி இவிஎம் இயந்திரங்கள் சோதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- வேட்பாளர்களின் 1,221 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.
- 190 பேர் தங்களின் மனுக்களை திரும்ப பெற்றனர்.
சண்டிகார்:
பா.ஜ.க. ஆளும் அரியானாவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இத்தேர்தலில் போட்டியிட பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஜனநாயக ஜனதா கட்சி, இந்திய தேசிய லோக் தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் உள்பட மொத்தம் 1,559 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். அவை பரீசிலிக்கப்பட்டு 1,221 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

வேட்பு மனுக்களை திரும்பப் பெற நேற்று (திங்கட்கிழமை) கடைசி நாள் என்ற நிலையில், 190 பேர் தங்களின் மனுக்களை திரும்பப் பெற்றனர்.
இதையடுத்து, 1,031 வேட்பாளர்களுடன் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. அடுத்த மாதம் 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
- டெல்லி சட்டசபை தேர்தல் களத்தில் 981 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
- வேட்பு மனுக்களை வாபஸ் பெற 20-ம் தேதி கடைசி நாளாகும்.
புதுடெல்லி:
டெல்லி சட்டசபை தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு இதுவரை 981 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர் என டெல்லி தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதன்படி, மொத்தம் 1,521 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற 20-ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய இறுதி நாளான நேற்று ஒரே நாளில் 680 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. புதுடெல்லி தொகுதியில் அதிக அளவாக மொத்தம் 29 வேட்பாளர்கள் 40 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த தொகுதியில், ஆம் ஆத்மி கட்சி தலைவர் மற்றும் முன்னாள் முதல் மந்திரியான கெஜ்ரிவால் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக பா.ஜ.க. சார்பில், முன்னாள் எம்.பி. பர்வேஷ் வர்மாவும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் மகன் சந்தீப் தீட்சித்தும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
- வேட்பாளர்கள் வாபஸ் பெற்றது ஏன்? என்று தி.மு.க. மாவட்ட செயலாளர் மணிமாறன் கூறினார்.
- மற்ற கட்சி வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் தி.மு.க. வேட்பாளர் வசந்தகுமாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் 1-வது வார்டு செங்கப்படை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் விலகிக் கொண்டார். இதேபோல் மற்ற கட்சி வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் தி.மு.க. வேட்பாளர் வசந்தகுமாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அவருக்கு தேர்தல் அதிகாரி சரவணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோ ஆகியோர் வெற்றி சான்றிதழை வழங்கினார். வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர் வசந்தகுமாரிக்கு, தி.மு.க மாவட்ட செயலாளர் மணிமாறன் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைப்பு, மக்களுக்கு ஆற்றி வருகின்ற பணிகள், அவர் தலைமையில் நல்லாட்சி தொடர்வதால் எதிர்க்கட்சிகள் போட்டியிட்டால் தோல்வி அைடந்து விடுவோம் என்ற பயத்தில் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். செங்கப்படை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதன்குமார், பாசபிரபு, முன்னாள் எம்.எல்.ஏ. லதா அதியமான், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், நகரமன்றத் துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்கபாண்டி, புவனேஸ்வரி ராஜசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலம்பட்டி சண்முகம், ஆதிமூலம், முன்னாள் யூனியன் தலைவர் கொடி சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.