search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேட்பாளர்கள்"

    • கணக்குகளை சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மொத்தம் 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே தாக்கல்.

    நெல்லை மக்களவை தொகுதியில் போட்டியிடும் 14 வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    தேர்தல் செலவு கணக்குகளை இன்று மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், கணக்குகளை சமர்ப்பிக்காத நிலையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கணக்கு தாக்கல் செய்ய தவறினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அனைத்து அனுமதிகளும் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    மொத்தம் 23 வேட்பாளர்களில் 9 வேட்பாளர்கள் மட்டுமே செலவு கணக்கை முழுமையாக தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பு.
    • நாளை 120 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்ப்பு.

    பிரதமர் மோடி தலைமையில் பாஜகவின் 3வது மத்திய தேர்தல் குழு கூட்டம் தொடங்கியது.

    இந்த கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    உத்தர பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் எஞ்சியுள்ள தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

    நாளை 120 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும்.
    • வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    சென்னை:

    தமிழகம்-புதுச்சேரியில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நாளை (புதன் கிழமை) தொடங்குகிறது.

    வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட (ஆர்.டி.சி.) அரசு அலுவலகங்கள், வேட்புமனு தாக்கல் செய்யும் இடமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதன்படி தென் சென்னைக்கு அடையாறிலும், வடசென்னைக்கு மூலகொத்தலம் மாநகராட்சி அலுவலகத்திலும், மத்திய சென்னைக்கு செனாய் நகர் மாநகராட்சி அலுவலகத்திலும் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.

    வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே அனுமதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்யும் நபர் டெபாசிட் தொகையாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் என்றால் டெபாசிட் தொகை ரூ.12,500 செலுத்த வேண்டும். அத்துடன் அதற்குரிய ஜாதி சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் வேட்பாளர் தரப்பில் தேர்தல் செலவினங்களுக்கு என புதிய வங்கி கணக்கு தொடங்க வேண்டும். அந்த வங்கி கணக்கு, வேட்பு மனுதாக்கல் செய்வதற்கு 2 நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்டிருக்க வேண்டும்.

    அதோடு படிவம் 26-ல் பிரமாண வாக்கு மூலத்தில் எல்லா காலங்களும் பூர்த்தி செய்திருக்க வேண்டும். பிரமாண வாக்குமூலம் 20 ரூபாய் பத்திரத்தில் அளிக்க வேண்டும்.

    வேட்பு மனுவுடன் வேட்பாளர் 3 மாதத்துக்குள் எடுத்த ஸ்டாம்ப் சைஸ் போட்டோ வழங்க வேண்டும். போட்டோவில் கட்சி சின்னங்கள், கொடிகள் உள்ளிட்ட எந்த அடையாளங்களும் இருக்கக்கூடாது.

    இது தவிர அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சி வேட்பாளர்கள் என்றால் ஒரு முகவராலும், இதர வேட்பாளர்கள் 10 முகவராலும் முன்மொழிய பட வேண்டும்.

    முன்மொழிபவர் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்துள்ள தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் வேட்பாளர் வேறு பாராளுமன்ற தொகுதியின் வாக்காளராக இருந்தால், அந்த தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் தேர்தல் கமிஷனால் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் கோருவதற்கு, சம்பந்தப்பட்ட கட்சியின் தலைமையிடத்தில் இருந்து படிவம் ஏ மற்றும் பி சமர்ப்பிக்க வேண்டும்.

    வேட்புமனு தாக்கல் செய்யும் போது வேட்பாளர் உள்பட 5 பேருக்கு மட்டுமே தேர்தல் நடத்தும் அலுவலர் அறைக்கு செல்ல அனுமதி உண்டு.

    தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலக வளாகத்தில் இருந்து 100 மீட்டர் வரையிலும், வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர்கள் 3 வாகனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.
    • பதோஹி மக்களவைத் தொகுதியை திரிணாமுல் காங்கிரசுக்கு சமாஜ்வாதி கட்சி வழங்கியது.

    மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி நாளை அறிவிக்கப்படவுள்ளது. ஏப்ரல் இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் 6 வேட்பாளர்களின் பட்டியலை அறிவித்துள்ளது.

    அதன்படி, யஷ்வீர் சிங் (பிஜ்னோர்), மனோஜ் குமார் (நாகினா), பானு பிரதாப் சிங் (மீரட்), பிஜேந்திர சிங் (அலிகார்), ஜஸ்வீர் வால்மீகி (ஹத்ராஸ்) மற்றும் தரோகா சரோஜ் (லால்கஞ்ச்) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

    பதோஹி மக்களவைத் தொகுதியை திரிணாமுல் காங்கிரசுக்கு சமாஜ்வாதி கட்சி வழங்கியது குறிப்பிடத்தக்கது.

    • ராமநாதபுரம் தொகுதியை தங்களுக்கே தரவேண்டும் என்று தினகரன் வலியுறுத்தி உள்ளதாக தெரிய வந்து உள்ளது.
    • வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.

    சென்னை:

    பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில் டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும் இடம் பெற்றுள்ளது.

    கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் டி.டி.வி.தினகரன் எஸ்.டி.பி.ஐ. கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அனைத்து தொகுதிகளிலும் அவரது கட்சிக்கு தோல்வியே கிடைத்தது.

    இந்த தடவை பாரதிய ஜனதா கூட்டணியில் இடம் பெற்று கணிசமான வாக்குகள் பெற வேண்டும் என்பதில் டி.டி.வி.தினகரன் உறுதியாக உள்ளார். இதற்காக அவர் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் பா.ஜ.க.விடம் கொடுத்துள்ளார்.

    தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் இருந்து 22 தொகுதிகளை குறிப்பிட்டு அவர் பட்டியல் தயாரித்து கொடுத்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த 22 தொகுதிகளில் இருந்து அ.ம.மு.க.வுக்குரிய 2 அல்லது 3 தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


    டி.டி.வி.தினகரன் தரப்பில் இருந்து தேனி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 3 மாவட்டங்களில் இருக்கும் தொகுதிகள் கேட்கப்பட்டு உள்ளன. ராமநாதபுரம் தொகுதியை தங்களுக்கே தரவேண்டும் என்று டி.டி.வி. தினகரன் வலியுறுத்தி உள்ளதாக தெரிய வந்து உள்ளது.

    மற்றொரு தொகுதியாக தேனி அல்லது சிவகங்கையை கேட்டுள்ளார். இந்த தொகுதிகளில் தனது தீவிர ஆதரவாளர்களை களம் இறக்க டி.டி.வி.தினகரன் திட்டமிட்டு இருக்கிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கும் டி.டி.வி.தினகரன் இந்த தடவை பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து போட்டியிட்டாலும் தனது வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தை பெற வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார்.

    • கடைசி நேரத்தில் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம்.
    • தொகுதிகளில் வேலைகளையும் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பலமான கூட்டணியை அமைக்கும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார். ஆனால் அவர் எதிர்பார்க்கும் வகையில் கட்சிகள் சேருவதற்கான வாய்ப்புகள் இல்லை.

    எனவே கடைசி நேரத்தில் கூட்டணிக்கு ஏதாவது கட்சிகள் வந்தால் சேர்த்துக் கொள்ளலாம். தொகுதி பங்கீடு பற்றியும் அப்போது பார்த்து கொள்ளலாம் என்று எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

    கூட்டணி அமைந்தாலும் சரி. அமையாவிட்டாலும் சரி தேர்தலை சந்திக்கும் வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

    தொகுதி நிலவரம், செல்வாக்கு, தி.மு.க.வுடன் நேரடி போட்டி ஏற்பட்டா லும் வெற்றி பெறும் ஆற்றல் ஆகியவற்றை ஆராய்ந்து வேட்பாளர்களை தேர்வு செய்வதாக கூறப்படுகிறது.

    இதுவரை 15 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை முடிவு செய்துவிட்டாராம். அதில் டாக்டர் ஜெயவர்தன் (தென்சென்னை), எஸ்.ஆர்.விஜயகுமார் (மத்திய சென்னை), ராயபுரம் மனோ (வடசென்னை), மா.பா.பாண்டியராஜன் (விருது நகர்), செம்மலை (சேலம்), சந்திரசேகர் (கோவை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), கே.வி.ராமலிங்கம் (ஈரோடு), ராஜ்சத்யன் (மதுரை), கண்ணன் (திண்டுக்கல்), கே.பி.எம்.சதீஷ்குமார் (கிருஷ்ணகிரி), ராதா கிருஷ்ணன் (கள்ளக்குறிச்சி), சண்முகநாதன் அல்லது சரவண பெருமாள் (தூத்துக்குடி) உள்பட 15 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முடிவு செய்து விட்டாராம்.

    தான் வேட்பாளராக முடிவு செய்திருப்பவர்களை அந்த அந்த தொகுதிகளில் தேர்தல் வேலையை தொடங்கும்படி ரகசியமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

    இதையடுத்து தொகுதி களில் வேலைகளையும் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    • தேர்தலில் இக்கட்சிகளை 360 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
    • எம்.ஐ.எம். கட்சியின் 12 வேட்பாளர்களில் 6 பேருக்கு குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்துள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி நிலவுகிறது.

    இந்நிலையில், இந்த தேர்தலில் இக்கட்சிகளை 360 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    அவர்களில் 226 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என தேர்தல் பிரமாண பத்திரம் மூலம் தெரிய வந்துள்ளது.

    இதில், ஆளும் பாரத் ராஷ்டிரிய சமிதியின் 119 வேட்பாளர்களில் 58 பேர், பா.ஜ.க.வின் 111 வேட்பாளர்களில் 78 பேர், காங்கிரஸின் 118 வேட்பாளர்களில் 84 பேர், எம்.ஐ.எம். கட்சியின் 12 வேட்பாளர்களில் 6 பேருக்கு குற்றப் பின்னணி இருப்பது தெரியவந்துள்ளது.

    • உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.
    • வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.

    தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரசாரம் களை கட்டி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் வேட்பாளர்கள் வாக்காளர்களை கவர பல்வேறு யுக்திகளை பின்பற்றி வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

    ஆலேரு தொகுதியில் சந்திரசேகர ராவ் கட்சியின் வேட்பாளர் கங்கிடி சுனிதாவை ஆதரித்து அந்த கட்சியினர் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். அவர்கள் தெருவில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது தொழிலாளி ஒருவர் வீட்டின் முன்பு குளித்துக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் வாக்கு சேகரித்தவர்கள் அருகில் ஓடி சென்றனர். அவருக்கு சோப்பு போட்டு குளிப்பாட்டினர்.

    பின்னர் உங்கள் வாக்கை கார் சின்னத்திற்கு செலுத்த வேண்டும் என 2 கைகளையும் கூப்பி வணங்கியபடி கேட்டுக் கொண்டனர்.

    இது தவிர புதுசு புதுசாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ராகுல் காந்தி பிரசாரத்தின் போது விஜயபேரியில் சாலையோர ஓட்டல் ஒன்றில் மாஸ்டராக மாறி தோசை சுட்டார்.

    ஏ.ஐ.எம்.ஐ. எம் கட்சி தலைவர் ஒவைசி ஓட்டலில் தொண்டர்களுடன் அமர்ந்து இட்லி தோசை சாப்பிடுகிறார். மேலும் மற்றவர்களுக்கும் பகிர்ந்து வாக்கு சேகரித்து வருகிறார்.

    தெலுங்கானா அமைச்சரும் பி.ஆர்.எஸ். வேட்பாளருமான அஜய்குமார் என்பவர் பிரசாரத்தின் போது சவரவ தொழிலாளியாக மாறிவிடுகிறார்.

    அவர் கட்டிங் சேவிங் செய்து வாக்கு சேகரித்தார். அவரிடம் பலர் முடி வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

    மகபூப் நகர் பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர் ஸ்ரீநிவாஸ் கவுட் வயலில் இறங்கி விவசாயிகளுடன் வேலை செய்தார். அவர் வேர்கடலை பறித்து கொடுத்து உதவினார்.

    வேட்பாளர்கள் விதவிதமாக வாக்கு சேகரித்து வருவது பரபரப்பாக பேசப்படுகிறது.

    • தேர்தல் விதிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் அறிவுரை வழங்கியுள்ளார்.
    • கிரிமினல் வழக்குகளில் தொடர்பு உள்ள வர்கள் வாக்குச்சாவடி முகவர்களாக செல்ல அனுமதிக்க கூடாது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சி கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களுக்கு தேர்தல் விதிமுறைகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் அறிவுரை வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறி யிருப்பதாவது:

    ஈரோடு இடைத்தேர்தலை யொட்டி நாளை (திங்க ட்கிழமை) வாக்குப் பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொது கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ, யாரும் ஒருங்கிணைக்கவோ? நடத்தவோ? அல்லது அவற்றில் பங்கேற்கவோ? கூடாது.

    பொதுமக்களை ஈர்க்கும் வகையில், இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, பொழுது போக்கு நிகழ்ச்சிகள் வாயிலாக தேர்தல் சம்பந்தமான பரப்புரை செய்யக்கூடாது.

    வாக்கு ப்பதிவு நாளன்று, வேட்பாளர் சொந்த பயன்பாட்டுக்காக ஒரு வாகனமும், தேர்தல் முகவரின் பயன்பா ட்டுக்காக ஒரு வாகனமும் மட்டுமே அனுமதிக்கப்படும்.

    வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவது, அழைத்து செல்வது போன்ற செயல்பாடுகளுக்காக வாடகை வாகனம் உள்ளிட்ட எந்தவொரு வாகனத்தையும் கையாள வேட்பாளர்கள் அனுமதிக்க கூடாது.

    2 நபர்களை மட்டும் கொண்ட வேட்பாளர்களின் அரசியல் கட்சிக ளின் தற்காலிக பிரசார அலுவலகம் வாக்குச்சாவடிகளில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைக்கப்படலாம்.

    தேவையில்லாத கூட்டத்தை கூட்டக்கூடாது. வாக்காளர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க கூடாது.

    வாக்குச்சாவடிக்கு வரும் முகவர்கள், அதே வாக்கு ச்சாவடியை சேர்ந்த வாக்கா ளர்களாக இருக்க வேண்டும். அவர்கள் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

    மேலும் கிரிமினல் வழக்குகளில் தொடர்பு உள்ள வர்கள் வாக்குச்சாவடி முகவர்களாக செல்ல அனுமதிக்க கூடாது.

    இவ்வாறு அவர் கூறி னார். 

    • வேட்பாளர்கள் வாபஸ் பெற்றது ஏன்? என்று தி.மு.க. மாவட்ட செயலாளர் மணிமாறன் கூறினார்.
    • மற்ற கட்சி வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் தி.மு.க. வேட்பாளர் வசந்தகுமாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியம் 1-வது வார்டு செங்கப்படை ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான இடை தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் விலகிக் கொண்டார். இதேபோல் மற்ற கட்சி வேட்பாளர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் பெற்றதால் தி.மு.க. வேட்பாளர் வசந்தகுமாரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

    அவருக்கு தேர்தல் அதிகாரி சரவணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் இளங்கோ ஆகியோர் வெற்றி சான்றிதழை வழங்கினார். வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர் வசந்தகுமாரிக்கு, தி.மு.க மாவட்ட செயலாளர் மணிமாறன் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உழைப்பு, மக்களுக்கு ஆற்றி வருகின்ற பணிகள், அவர் தலைமையில் நல்லாட்சி தொடர்வதால் எதிர்க்கட்சிகள் போட்டியிட்டால் தோல்வி அைடந்து விடுவோம் என்ற பயத்தில் தங்களது மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். செங்கப்படை ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமப் பகுதிகளில் மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதன்குமார், பாசபிரபு, முன்னாள் எம்.எல்.ஏ. லதா அதியமான், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், திருமங்கலம் நகர செயலாளர் ஸ்ரீதர், திருமங்கலம் நகர்மன்ற தலைவர் ரம்யா முத்துக்குமார், நகரமன்றத் துணைத் தலைவர் ஆதவன் அதியமான், மாவட்ட கவுன்சிலர் கிருத்திகா தங்கபாண்டி, புவனேஸ்வரி ராஜசேகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆலம்பட்டி சண்முகம், ஆதிமூலம், முன்னாள் யூனியன் தலைவர் கொடி சந்திரசேகர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×