search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருடன்"

    • குழந்தை திருடன் எனக் கூறி அவ்னிஷ் குமார் என்பவரை கிராம மக்கள் துரத்தியுள்ளனர்.
    • அவ்னிஷ் குமார் 100 அடி உயரத்தில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் தன்னை துரத்திய கிராம மக்களின் அடியில் இருந்து தப்பிக்க பாலத்தில் ஏறிய அவ்னிஷ் குமார்(31) என்பவர் 100 அடி உயரத்தில் இருந்து குதித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    குழந்தை திருடன் எனக் கூறி கிராம மக்கள் அவரை துரத்தியதால், பாலத்தில் ஏறி சுமார் 8 மணி நேரமாக அங்கும் இங்குமாக ஓடி போக்கு காட்டி வந்துள்ளார். அவரை மீட்பதற்காக போலீசார் பாலத்தில் ஏறியதும் அங்கிருந்து குதித்துள்ளார்.

    உடனே அவரை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

    • நல்ல காலணிகளை மட்டுமே திருடிச் செல்வது வீடியோவில் பதிவாகியுள்ளது.
    • இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    பெங்களூரு நகரில் திருடன் ஒருவர் அடுக்குமாடிக் குடியிருப்பில் புகுந்து காலணிகளை திருடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    அந்த வீடியோவில், முகமூடி அணிந்த திருடன் ஒவ்வொரு ஜோடி காலணிகளையும் சோதித்து நன்றாக உள்ளதா என்று பார்த்து நல்ல காலணிகளை மட்டுமே திருடிச் செல்வது பதிவாகியுள்ளது.

    இந்த சம்பவம் நடந்த இடம் மற்றும் நேரம் சரியாக தெரியவில்லை. ஒரு மாதத்திற்கு முன்பு இணையத்தில் வெளியான இந்த வீடியோ 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

    இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து பெங்களூரு நகரின் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன என்றும் காவல்துறை இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் திருட வந்த ஓட்டலில் திருடுவதற்கு எதுவும் இல்லாததால் விரக்தியடைந்த திருடன் இரக்கப்பட்டு 20 ரூபாயை அங்கு வைத்து சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

    இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், முகத்தை துணியால் மறைந்துள்ள திருடன் திருடுவதற்கு எந்த மதிப்புமிக்க பொருளும் கிடைக்காமல் விரக்தியடைந்து 20 ரூபாய் நோட்டை அங்கு வைத்து செல்கிறார்.

    ஒரு வாரத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நாராயண் சுர்வேவை பற்றி திருட்டில் ஈடுபட்டவருக்கு நன்றாக தெரிந்து இருந்தது.
    • கவிஞர் நாராயண் சுர்வே கடந்த 2010-ம் ஆண்டு தனது 84-வது வயதில் மரணம் அடைந்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் நேரல் பகுதியில் சமீபத்தில் திருட்டு ஆசாமி ஒருவர் நோட்டமிட்டு வந்தார். அப்போது ஒரு வீடு சில நாட்களாக பூட்டிக் கிடப்பதை கவனித்தார். நைசாக பூட்டை உடைத்த ஆசாமி, உள்ளே புகுந்து எல்.இ.டி.டி.வி. உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றார். மறுநாள் மீண்டும் அதே வீட்டில் மிச்சம் மீதி இருப்பதை திருட வந்தார்.

    அப்போது வீட்டில் பிரபல மராத்தி எழுத்தாளரும், கவிஞருமான நாராயண் சுர்வேவின் புகைப்படம் இருப்பதை பார்த்தார். அப்போது தான் அது பிரபல கவிஞரின் வீடு என்பது திருட்டு ஆசாமிக்கு தெரியவந்தது.

    கவிஞர் நாராயண் சுர்வே அடிமட்டத்தில் இருந்து எழுத்தால் உயர்ந்தவர் ஆவார். அவர் மும்பை தெருக்களில் ஆதரவற்ற சிறுவனாக வாழ்ந்தவர். வீட்டு வேலை, ஓட்டலில் பாத்திரம் கழுவும் வேலை, குழந்தை காப்பாளர், நாய் பராமரிப்பாளர், பால் டெலிவிரி செய்பவர், சுமை தூக்குபவர் என பல்வேறு வேலைகளை செய்து பின்னாட்களில் பிரபல எழுத்தாளர், கவிஞராக மாறியவர். அவரது கவிதைகள் நகர்ப்புற தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களை தெளிவாக சித்தரித்தன.

    நாராயண் சுர்வேவை பற்றி திருட்டில் ஈடுபட்டவருக்கு நன்றாக தெரிந்து இருந்தது. பிரபல கவிஞரின் வீட்டில் திருடி விட்டோமே.. என்ற குற்ற உணர்ச்சி அவரது மனதை உறுத்தியது.

    கவிஞரின் வீட்டில் திருடிய டி.வி. உள்ளிட்ட பொருட்களை அந்த திருடர் மூட்டை கட்டி மீண்டும் கவிஞரின் வீட்டில் கொண்டு வந்து வைத்தார். மேலும் வீட்டில் ஒரு துண்டு சீட்டில் மன்னிப்பு கடிதம் ஒன்றையும் எழுதி சுவரில் ஒட்டிசென்றார். 

    அதில், ''மிக உயர்ந்த எழுத்தாளர், கவிஞர் வீட்டில் திருடியதற்காக என்னை மன்னித்து விடுங்கள்'' என குறிப்பிட்டு இருந்தார்.

    கவிஞர் நாராயண் சுர்வே கடந்த 2010-ம் ஆண்டு தனது 84-வது வயதில் மரணம் அடைந்தார். தற்போது அவரது வீட்டில் மகள் சுஜாதா, கணவர் கணேஷ் காரேவுடன் வசித்து வருகிறார். அவர்கள் கடந்த 10 நாட்களாக விராரில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று இருந்தனர். அவர்கள் திரும்பி வந்தபோது, வீட்டில் திருடன் எழுதி வைத்து சென்ற மன்னிப்பு கடிதத்தை பார்த்தனர். திருடனின் செயலை பார்த்து நெகிழ்ச்சி அடைந்தனர்.

    இருப்பினும் திருட்டு செயலை ஏற்றுக்கொள்ள முடியாததால், அவர்கள் சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். டி.வி. உள்ளிட்ட பொருட்களில் உள்ள கைரேகையை சேகரித்து கவிஞரின் வீட்டில் கைவரிசை காட்டிய திருடனை அடையாளம் காண போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    திருடன் ஒருவர் கவிஞரின் வீட்டில் திருடிய பொருட்களை திரும்ப வைத்து, மன்னிப்பு கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வாசல்களில் விட்டுச் செல்லும் செருப்புகள், ஷுக்கள் மாயமாகின.
    • சட்டை அணிந்த ஒருவர் வீட்டின் வெளியே கிடந்த செருப்புகளை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.

    தாம்பரம்:

    தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ந்து வீட்டு வாசல்களில் விட்டுச் செல்லும் செருப்புகள், ஷுக்கள் மாயமாகி வந்தன.

    சந்தேகம் அடைந்த பொதுமக்கள் தாம்பரத்தில் உள்ள ஒரு குடியிருப்பில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில் கடந்த ஒன்றாம் தேதி சட்டை அணிந்த ஒரு நபர், படிக்கட்டுகளில் ஏறி வருகிறார். வீடுகளிடின் வெளியே கிடந்த செருப்புகளை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது.

    அவர் செருப்புகளை சைஸ் பார்த்து திருடிச் செல்கிறார். திருடர்கள் நைசாக திருடிச் செல்வதை பார்த்திருப்போம், இது என்ன சைசாக பார்த்து எடுத்துச் செல்கிறார் என குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். திருடிச் செல்லும் செருப்புகளை வார சந்தையில் விற்பதாக கூறப்படுகிறது.

    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசாரிடம் அந்த வாலிபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
    • பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த வாலிபரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் ரேணுகோபால்.

    இவர் தனது குடும்பத்துடன் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரேணுகோபால் வீட்டின் உள்ளே நுழைந்தார்.

    சத்தம் கேட்டு ரேணுகோபால் கண் விழித்து பார்த்தார். வீட்டிற்குள் வாலிபர் சட்டை இல்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசாரிடம் அந்த வாலிபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

    அப்போது போலீசார் அந்த வாலிபரிடம் நீ யார் என்று கேட்டபோது என்னுடைய பெயர் கமல்ஹாசன் என்றும், பின்னர் ரஜினி என்றும் கூறினார். இதனைக்கேட்டு போலீசாரும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் பொதுமக்கள் இன்னொரு முறை பெயரை கேட்டால் சிவாஜி என்று கூறுவான் என கூறியதால் போலீசார் அங்கு நின்றிருந்தவர்களும் சிரிப்பலையில் மூழ்கினர்.

    மேலும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த வாலிபரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    வீட்டின் உள்ளே திருட முயன்ற வாலிபரிடம் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருடிய ஆட்டை சந்தையில் விற்கமுயன்ற திருடன் கையும் களவுமாக பிடிபட்டு கைது செய்யப்பட்டு உள்ளார்
    • அவர் மீது ஏற்கனவே பல திருட்டு வழக்குகள் உள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது

     தொட்டியம்,

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாப்பாபட்டி மேலக்கொட்டம் அம்பலக்காரர்த் தெருவை சேர்ந்த மணி மனைவி சுமதி (வயது 42). இவர் தனது வீட்டில் ஆட்டுப்பண்ணை நடத்தி வருகிறார் தனது ஆடுகளுக்கு இரவு உணவு மற்றும் தண்ணீர் வைத்துவிட்டு தூங்கச் சென்றுள்ளார் அடுத்த நாள் காலை ஆடுகளை பார்த்த போது அதில் ஒரு கிடா ஆட்டை காணவில்லை பல்வேறு இடங்களில் தேடி கிடைக்காததால் தொட்டியம் காவல் நிலையத்தில் சுமதி புகார் கொடுத்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த தொட்டியம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமரேசன் தீவிர விசாரணை மேற்கொண்டதில் தொட்டியம் அருகே உள்ள செவ்வந்திப்பட்டியில் நடைபெறும் ஆட்டு சந்தைக்கு முசிறி சிந்தாமணித் தெருவை சேர்ந்த பாஸ்கரன் மகன் மனோஜ் குமார் (36)என்பவர் தான் திருடிய ஆட்டை கொண்டு வந்து விற்க முற்பட்டார். அப்போது விசாரணை செய்ததில் மனோஜ்குமார் விற்க வந்த ஆடு சுமதி என்பவரிடம் திருடிய ஆடு என்பது கண்டுபிடித்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனோஜ் குமார் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன் தப்பி ஓடி தலைமறைவானார்.
    • பேட்டி டுவிட்டரில் வைரலாகி 2,200-க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது.

    காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் இப்படியும் காதல் மலருமா? என கேட்கும் வகையில் ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த இமானுவேலா என்ற இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் இமானுவேலாவிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருடன், திருடன் என கத்தினார். ஆனாலும் கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன் தப்பி ஓடி தலைமறைவானார்.

    இந்நிலையில் செல்போனை பறித்த வாலிபர் அதை எடுத்து பார்த்த போது, அதில் இமானுவேலாவின் புகைப்படத்தை பார்த்தார். இவ்வளவு அழகான பெண்ணிடம் செல்போனை பறித்துவிட்டோமே என வருந்திய அவர், இமானுவேலாவை நேரில் சந்தித்து அவரிடம் போனை திருப்பி கொடுத்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த இமானுவேலா, திருடனை மன்னித்ததோடு அவருடன் நட்பாக பழக தொடங்கினார். நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறி உள்ளது. கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வருவதாக கூறுகிறார்கள். இவர்களது பேட்டி டுவிட்டரில் வைரலாகி 2,200-க்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் ஒருவர், அன்பால் எதையும் சாதிக்க முடியும் எனவும், மற்றொருவர் இது ஒரு நகைச்சுவை போல் தெரிகிறது, ஆனால் உண்மையானது என பதிவிட்டுள்ளார்.

    • ராஜதுரை ( வயது 34 ) என்பவரை கைது செய்து விசாரித்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
    • 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படு த்தப்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த வரிசாங்குப்பம்ரங்கநாதன்எமகன்செல்வன். இவர் கடந்த 30-ந் தேதி பண்ருட்டி 4 முனை சந்திப்பு அருகே உள்ள காய்கறி கடையில் காய்கறி வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு காய்கறி வாங்கிவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது தனது மோட்டார் சைக்கிள் திருடு போனது தெரியவந்தது. இது சம்பந்தமாக பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் செல்வம் அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் தங்கவேல் மற்றும் போலீசார் ஆனந்த், ராஜி, அன்பரசன், கணேசமூர்த்தி, ஹரிஹரன் ஆகியோர் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. யை ஆய்வு செய்து கொட்டிகோனா ன்குப்பத்தை சேர்ந்த பரமசிவன் மகன் ராஜதுரை ( வயது 34 ) என்பவரை கைது செய்து விசாரித்து அவரிடம் இருந்து திருட்டு போன மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் குறிஞ்சிப்பாடி மாரிய ம்மன் கோவில் அருகே 2 மோட்டார் சைக்கிள் திருடியதையும் ஒப்புக்கொண்டார்.அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படு த்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

    • திருட வந்து தப்பி சென்ற திருடனை பொதுமக்களே விசாரித்து அடையாளம் கண்டனர்
    • திருடன் விட்டு சென்ற இருசக்கர வாகனத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டார்

    முசிறி, 

    முசிறி அடுத்த மணலி ஐத்தாம்பட்டியை சேர்ந்த சரவணன் என்பவரின் மனைவி அன்னலட்சுமி(வயது 42). இவர் வீட்டில் இரவில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்துள்ளார். இதனை அறிந்த அன்னலட்சுமி, கூச்சலிட்டு உள்ளார். இதனால் அந்த நபர் தப்பி ஓடி உள்ளார். அப்போது அன்னலட்சுமியின் மகன் அந்த நபரை துரத்தி சென்றுள்ளார். இதனை கண்ட அப்பகுதி குடியிருப்புவாசி அழகேசன் கட்டிலை குறுக்கே போட்டு திருடனை தடுத்து நிறுத்த முயற்சித்து உள்ளார். ஆனால் இதற்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட்டு அந்த திருடன், தனது டூவிலரை எடுத்துக்கொண்டு வேகமாக தப்பி சென்றுள்ளார். அவ்வாறு தப்பி பைக்கில் வேகமாக சென்றபோது அருகில் உள்ள சாலை வளைவில் நிலை தடுமாறி திருடன் கீழே விழுந்துள்ளான். பின்னால் ஆட்கள் துரத்தி வருவதால், பைக்கை அதே இடத்தில் போட்டுவிட்டு திருடன் தப்பி சென்றுள்ளான். பைக்கை கைப்பற்றிய அப்பகுதி அது யாருடையது என்று விசாரித்துள்ளனர். அப்போது அந்த பைக் பெரிய கொடுத்துறை சேர்ந்த தியாகராஜன் மகன் முத்து செல்வம் என்கிற செல்வம் (வயது 52) என்பவருடையது என்று தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து அன்னலட்சுமி புகார் அளித்ததின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர கோகிலா வழக்கு பதிந்து முத்து செல்வத்தை கைது செய்தார். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

    • மைவாடியில் மோகனசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விதை நெல் கிடங்கு உள்ளது.
    • வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

     உடுமலை :

    மடத்துக்குளத்தையடுத்த மைவாடி பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த காவலாளியிடமிருந்து செல்போனை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மைவாடியில் மோகனசுந்தரம் என்பவருக்கு சொந்தமான விதை நெல் கிடங்கு உள்ளது.இங்கு சின்னப்பன் புதூரைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் நெல் கிடங்கின் முன் முத்துச்சாமி கட்டிலை போட்டு தூங்கியுள்ளார்.

    நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் சாவகாசமாக அந்த பகுதியை நோட்டம் விட்டு விட்டு,அங்கிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடிக்கிறார். பின்னர் முத்துசாமியின் அருகில் சென்று அவர் தலையணைக்கடியில் வைத்திருந்த செல்போனை நைசாக திருடுகிறார்.அப்போது விழித்துக் கொண்ட முத்துச்சாமி அந்த நபரை துரத்துகிறார்.ஆனால் அதற்குள் மின்னல் வேகத்தில் செல்போனுடன் அந்த நபர் தப்பிச்செல்கிறார். இந்த காட்சிகள் அனைத்தும் அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சம்பவம் குறித்து முத்துச்சாமி அளித்த புகாரின் பேரில் மடத்துக்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வண்டியை அவர் திருடி கொண்டு வந்துவிட்டதாக தவறாக கருதி, அசோக்குமாரை சரமாரியாக தாக்கினர்.
    • புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அசோக்குமாரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ராமியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனி-மேகலா தம்பதியின் மகன் அசோக்குமார் (வயது25).

    இவர் அடிக்கடி குடித்து விட்டு எந்தவேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் அசோக்குமார் சம்பவத்தன்று பி.அய்யம்பட்டியில் உள்ள அவரது உறவினர் கலா வீட்டிற்கு சென்றார். அங்கு கலாவின் மாமனார் குழந்தைவேல் என்பவருடன் சேர்ந்து ஊருக்கு வெளியே சென்று ஒன்றாக மதுக்குடித்துள்ளனர்.

    அப்போது குழந்தைவேலின் வண்டியில் பெட்ரோல் இல்லை என்பது தெரியவந்தது. எனவே, வண்டியை எடுத்து கொண்டு பங்கில் பெட்ரோல் போட்டு வருமாறு அவர் அசோக்குமாரிடம் கூறினார். உடனே தருமபுரி-கடத்தூர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் வண்டிக்கு பெட்ரோல் போட்டு கொண்டு அசோக்குமார் மீண்டும் குழந்தைவேல் இருக்கும் இடத்திற்கு திரும்பி சென்றார்.

    அப்போது அவர் மதுபோதையில் இருந்ததால் வண்டியை சரிவர ஓட்ட முடியாமல் நிலைத்தடுமாறி மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.

    இதனை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் சிலர் பார்த்தபோது அசோக்குமார் எடுத்து சென்ற வண்டி குழந்தைவேலுடையது என்றும், அந்த வண்டியை அவர் திருடி கொண்டு வந்துவிட்டதாக தவறாக கருதி, அசோக்குமாரை சரமாரியாக தாக்கினர்.

    இதுகுறித்து குழந்தைவேலுக்கும் கிராம மக்கள் தகவல் தெரிவித்தனர். உடனே அவர் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது கிராம மக்கள் திருடன் என நினைத்து அடித்து உதைத்த வாலிபர் தன்னுடைய உறவினர் என்றும், தான்தன் வண்டியை பெட்ரோல் போட கொடுத்ததாகவும் அவர் கூறினார். இதையடுத்து அங்கிருந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    இதற்கிடையே வெளியே சென்ற தனது மகன் நீண்டநேரமாகியும் வீடு திரும்பாததால் கலாவிடம் விசாரித்தபோது அசோக்குமார் அப்போது வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார் என்று தெரிவித்தார். ஆனால், தனது மகன் மீண்டும் வீடுதிரும்பி வராததால் அவர் மாயமானது தெரியவந்தது.

    இதுகுறித்து தாய் மேகலா கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அசோக்குமாரை தீவிரமாக தேடிவருகின்றனர்.

    திருடன் என தவறாக நினைத்து கிராம மக்கள் வாலிபரை அடித்து உதைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×