என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருமணம் மறுப்பு"
கடலூர்:
பண்ருட்டி அடுத்த குழந்தைக்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்.இவரது மகன் தமிழரசன்(29).பி.காம் பட்டதாரி. இவர், குறிஞ்சிப்பாடியில் உள்ள திருவள்ளுவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் போது நெய்வேலி பெரியாக்குறிச்சி பகுதியை சேர்ந்த 24 வயது பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அப் பெண் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்த நிலையில் தமிழரசன் அப் பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து அப் பெண் பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் தமிழரசனுக்கும் அவரது உறவினர் ெபண்ணுக்கும் திருவந்தி புரம் கோவிலில் திருமணம் நடைபெற்றதாகவும் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும் கூறி இருந்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்துதமிழரசனை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- குழந்தைக்கு தாயான நிலையில் இளம்பெண் திருமணத்துக்கு மறுத்துள்ளார்.
- மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.
மதுரை
மதுரை கீழச்சந்தை பேட்டையைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார்.
அதில், நான் மேல அனுப்பானடி, வீட்டு வசதிவாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்தேன். அவர் திருமணம் செய்வதாக வாக்குறுதி அடிப்படையில், என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்.
நான் கர்ப்பம் ஆனேன். எனக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த வாலிபர் என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். போலீசார் இதில் தலையிட்டு எனக்கு நீதி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல அனுப்பானடி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்த செந்தில் (43) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்