search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச பயணம்"

    • கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டம் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் மாதம் ரூ.1,000 பெற்று வருகின்றனர்.
    • மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, சுயமரியாதையோடு நடக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பட்டானூர் சங்கமித்ரா கன்வென்சன் மகாலில் இன்று கடலூர் தி.மு.க. கவுன்சிலர் கே.ஜி.எஸ்.டி. சரத் திருமணம் நடந்தது.

    தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மணமக்களுக்கு தாலி எடுத்துக்கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார்.

    மணமக்கள் அமைச்சர் உதயநிதிக்கு செங்கோல் வழங்கினர். தொடர்ந்து தி.மு.க. இளைஞரணிக்கு ரூ.2 லட்சம் நிதிக்கான காசோலையை வழங்கினர்.

    மணமக்களை வாழ்த்தி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    தம்பி சரத், நிவேதா திருமணத்தை நடத்தி வைப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சரத் இளைஞரணியை சேர்ந்தவர். அவரின் தந்தையும் இளைஞரணியில் பணியாற்றியவர். திருமண விழா கழக நிகழ்ச்சிபோல எழுச்சியுடன் நடக்கிறது.

    திராவிட இயக்கத்தின் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர். கழகத்தின் முதல் பொருளாளர் நீலமேகத்தின் கொள்ளு பேரன் சரத். அவர் மக்களோடு எளிமையாக பழகக்கூடியவர். அதனால்தான் 23 வயதிலேயே கடலூர் நகராட்சி மாமன்ற உறுப்பினராக மக்கள் தேர்வு செய்துள்ளனர்.

    இளைஞரணி மாநகர துணை அமைப்பாளராகவும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்.

    முன்பு பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர, படிப்பதற்கு உரிமை இல்லை. இன்று ஆண்களுக்கு நிகராக சரிசமமாக பெண்கள் வந்துள்ளனர். பெண்கள் ஆண்களை விட அதிகமாக வெளிநாடு சென்று படிக்கின்றனர். இந்த மாற்றத்தை கொண்டுவந்தது தி.மு.க. பெண்களுக்கு குடும்ப சொத்தில் சம உரிமை என்ற சட்டத்தை இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் கொண்டுவந்தவர் கலைஞர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெண்களுக்கு ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

     


    ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்தாக பெண்களுக்கு கட்டணமில்லா பயண திட்டத்தை தொடங்கி வைத்தார். 3 ஆண்டில் 520 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். ஒவ்வொரு பெண்களும் மாதம் சராசரியாக ரூ.ஆயிரம் வரை இத்திட்டத்தால் சேமிக்கின்றனர்.

    அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை தி.மு.க. அரசு வழங்குகிறது.

    இதனால் உயர்கல்வியில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கும் ரூ.1,000 முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்குகிறார். காலையில் மாணவர்கள் சிரமப்படக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை முதல்வர் கொண்டுவந்துள்ளார். 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றனர்.

    கலைஞர் மகளிர் உதவித் தொகை திட்டம் மூலம் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் மாதம் ரூ.1,000 பெற்று வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பரில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஓராண்டில் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் ரூ.12 ஆயிரம் உரிமைத்தொகை பெற்று பயனடைந்துள்ளது பெருமைக்குரிய விஷயம். நான் முதல்வன் திட்டத்தால் 30 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

    அரசு பள்ளியில் படித்து வெளிநாடு சென்று உயர்கல்வி படிக்கும் மாணவர்களின் முழு கல்வி கட்டணத்தையும், முதல் பயண செலவையும் தமிழக அரசே ஏற்கும் என்ற சிறப்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    பணிக்கு செல்லும் பெண்களில் 42 சதவீதத்தினர் தமிழகத்தை சேர்ந்த பெண்கள் என்பதை பெருமையோடு கூறிக் கொள்கிறேன்.

    இங்கு வந்துள்ள ஒவ்வொருவரும், பெண்களும் தமிழக அரசின் சாதனைகளை பட்டி, தொட்டியெங்கும் கொண்டு செல்ல வேண்டும். தமிழக அரசின் தூதுவர்களாக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, சுயமரியாதையோடு நடக்க வேண்டும்.

    பிறக்கும் குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்ட வேண்டும். மணமக்கள் இருவரும், பெரியாரும், பகுத்தறிவும் போல, அண்ணாவும், மாநில சுயாட்சியும் போல, கலைஞரும், தி.மு.க.வும்போல, கழக தலைவரும், தமிழக மக்களும் போல பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருமண விழாவில் திராவிடர் கழக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எம்.பி. க்கள் ரவிக்குமார், கவுதம சிகாமணி, தமிழக அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கணேசன், கடலூர் எம்.எல்.ஏ. அய்யப்பன், புதுச்சேரி தி.மு.க. அமைப்பாளர் சிவா, எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத், செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • சிகிச்சைக்கு பின் தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • தெலுங்கானா மாநிலத்தில் அரசு பஸ் மற்றும் பஸ் நிலையங்களில் குழந்தைகள் பிறந்தால் அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் வழங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அடுத்த முஷீராபாத் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்வேதா. கர்ப்பிணியான இவர் நேற்று முன்தினம் காலை அரசு பஸ்சில் பகதூர் புரா பகுதிக்கு சென்றார். பஸ் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஸ்வேதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. வலி அதிகமானதால் கதறி துடித்தார்.

    இதனை அடுத்து சாலையோரம் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பஸ்சில் இருந்த பெண் கண்டக்டர் சரோஜா மற்றும் பயணிகள் ஸ்வேதாவுக்கு பஸ்சிலேயே பிரசவம் பார்த்தனர். இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனை கேள்விப்பட்டதும் கீழே இருந்து இறங்கி நின்ற ஆண் பயணிகள் மற்றும் பெண்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். மேலும் பிரசவம் பார்த்த பெண் கண்டக்டர் சரோஜாவுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து தாய் மற்றும் குழந்தையை அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின் தாய் மற்றும் குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டது. பஸ் கண்டக்டருக்கு போக்குவரத்து துறை அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்தனர். மேலும் பஸ்சில் பிறந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் செய்வதற்கான பஸ் பாஸ் வழங்கப்பட்டது.

    தெலுங்கானா மாநிலத்தில் அரசு பஸ் மற்றும் பஸ் நிலையங்களில் குழந்தைகள் பிறந்தால் அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணம் வழங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பஸ்சில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பயணத்திற்கான பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.

    • ஆந்திர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் குமாரிக்கு பிரசவம் பார்த்தனர்.
    • பஸ் நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குமாரி. கர்ப்பிணியான இவர் கரீம் நகர் பஸ் நிலையத்திற்கு வந்திருந்தார்.

    அப்போது திடீரென அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அங்கிருந்த போக்குவரத்து ஊழியர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் குமாரிக்கு பிரசவ வலி அதிகரித்தது.

    இதனை தொடர்ந்து ஆந்திர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் குமாரிக்கு பிரசவம் பார்த்தனர்.

    இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு தாயும் குழந்தையும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த ஊழியர்களுக்கு முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி மற்றும் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

    பஸ் நிலையத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் இலவச பஸ் பயண சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பாஸ் வழங்கப்படும் என தெலுங்கானா போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் ஆட்டோ டிரைவைர் தேவாவை கைது செய்தனர்.

    திருப்பதி:

    தெலங்கானாவில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயண சேவை வழங்கப்படுகிறது.

    இந்த திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் மஹ்பூப்நகரை சேர்ந்த தேவா (வயது 45) குடிபோதையில் தனது ஆட்டோவுடன் முதல் மந்திரி முகாம் அலுவலகமான ஐதராபாத் பிரஜா பவனுக்கு வந்தார்.


    பின்னர் பெண்களுக்கான இலவச பஸ் பயணத்தால் எங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    இதனைத் தொடர்ந்து ஆட்டோவுக்கு திடீரென தீ வைத்தார். இதனை பார்த்த பிரஜா பவன் ஊழியர்கள் மற்றும் போலீசார், ஆட்டோவில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

    இருப்பினும் தீ பரவியதில் ஆட்டோ முழுவதும் எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் ஆட்டோ டிரைவைர் தேவாவை கைது செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏராளமான பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள்.
    • பர்தா அணிந்து இலவசமாக பஸ்சில் பயணித்து, பெங்களூரு வழியாக தார்வாருக்கு வந்துள்ளார்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு நடந்து வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அளித்த வாக்குறுதிப்படி, அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும், சக்தி திட்டத்தை கடந்த ஜூன் 11-ந்தேதி முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

    இதனால் ஏராளமான பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், தர்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா சம்சி பஸ் நிலையத்தில் நேற்று காலை, பர்தா அணிந்த ஒரு பெண் அமர்ந்திருந்தார்.

    அவரது உருவ அமைப்பு மற்றும் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படி இருந்தன. இதையடுத்து, சில பெண்கள் அவர் அருகே சென்று, பர்தாவை நீக்கி முகத்தை காண்பிக்கும் படி கூறினார். இதற்கு அவர் மறுத்தார்.

    சில பெண்கள் வலுக்கட்டாயமாக அவரது பர்தாவை விலக்கியபோது, அவர் பெண்ணல்ல, ஆண் என்பது தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். இலவசமாக பஸ்சில் பயணிப்பதற்காக, பர்தா அணிந்து வந்ததாக அந்த நபர் கூறினார்.

    இதையடுத்து, அந்த பெண்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் விஜயாப்புரா மாவட்டம் சிந்தகி கோடகேரியைச் சேர்ந்த வீரபத்ரையா நிங்கய்ய (வயது 40) என்பது தெரிந்தது. பர்தா அணிந்து இலவசமாக பஸ்சில் பயணித்து, பெங்களூரு வழியாக தார்வாருக்கு வந்துள்ளார்.

    ஆனால், அவரிடம் பெண் புகைப்படத்துடன் கூடிய ஆதார் கார்டு நகல் இருந்தது. இதையடுத்து, போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அவர் இலவச பயணத்துக்காக பர்தா அணிந்து வந்தாரா? அல்லது பஸ்சில் பெண்களிடம் நகை பறிக்கும் நோக்கத்தில் மாறுவேடத்தில் வந்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    • கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் கடந்த 11-ந் தேதி தொடங்கப்பட்டது.
    • நாளுக்கு நாள் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வது அதிகரித்து வருகிறது.

    பெங்களூரு :

    கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் கடந்த 11-ந் தேதி தொடங்கப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

    கடந்த 13-ந் தேதி (நேற்று முன்தினம்) மாநிலம் முழுவதும் 51.52 லட்சம் பெண்கள் இலவச பயணம் செய்திருந்தார்கள். இதன்மூலம் பெங்களூரு பி.எம்.டி.சி. கே.எஸ்.ஆர்.டி.சி உள்பட 4 போக்குவரத்து கழகங்களுக்கும் ரூ.10 கோடியே 82 லட்சத்து 2 ஆயிரத்து 191 செலவாகி இருப்பது தெரியவந்துள்ளது.

    இதனால் நாளுக்கு நாள் அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    • கலெக்டர் உத்தரவு
    • பாடங்களை கவனமாக கேட்டு படிக்க வேண்டும் என அறிவுரை

    வேலூர்:

    வேலூர் முஸ்லிம் அரசு பள்ளியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கினார்.

    அவர் பேசியதாவது:-

    பள்ளிகள் திறக்கப்பட்ட இன்று புத்தாண்டாக கருதி மாணவர்கள் ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை கவனமாக கேட்டு படிக்க வேண்டும்.

    மாணவர்கள் ஒரு குறிக்கோளை வைத்து படிக்க வேண்டும். மாணவர்களுக்கு தனிமனித ஒழுக்கம் இருக்க வேண்டும். மாணவர்கள் ஆசிரியர்கள் சொல்லிக் கொடுக்கும் பாடத்தை சரிவர கவனிக்காதது தான் தோல்விக்கு காரணம்.

    மாணவர்கள் ஒவ்வொரு வரும் தினமும் இரண்டு நிமிடம் ஒதுக்கி மனசாட்சி படி சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    100-க்கு 100 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என்பது இல்லை நல்ல மதிப்பெண்கள் பெற்றால் போதும் வாழ்க்கையை செம்மைப்படுத்திக் கொள்ளலாம்.

    10 ஆண்டுகள் கழித்து நாம் எதுவாக இருக்க வேண்டும் என்பதை இப்போது தீர்மானித்துக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்க ளுக்கு முன்னுதாரணமாக திகழ வேண்டும்.

    மாணவர்களுக்கு ஆசிரி யர்கள் நல்லொழுக்கத்தை ஏற்படுத்தி தர வேண்டும். மாணவர்கள் படிப்பு, விளையாட்டு, ஒழுக்கம், பொது அறிவு ஆகியவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    வேலூர் மாவட்டத்தில் இன்று 6 முதல் 12-ம் வகுப்பு வரை இன்று வகுப்புகள் தொடங்கியது. 4 லட்சத்து 44 ஆயிரம் பாட புத்தகங்கள், 99 ஆயிரத்து 491 மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    நீண்ட தூரத்தில் இருந்து பள்ளிக்கு வரும் மாண வர்கள் சிரமம் அடைந்து வந்ததாக புகார் வந்தது.

    மாணவர்கள் சீருடை அணிந்து வந்தாலே அவர்களை பஸ்சில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்க வேண்டுமென போக்குவரத்து துறை பொது மேலாளருக்கு அறிவுறுத்தி உள்ளோம். இன்னும் 10 நாட்களில் மாணவர்கள் எளிதாக பள்ளிக்கு வந்து செல்ல ஏற்பாடு செய்து தரப்படும்.

    வேலூர் மாவட்டத்தில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை இன்று முதல் மந்திரி தொடங்கி வைத்தார்.
    • ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும்.

    பெங்களூரு:

    கர்நாடகா சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

    வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட அறிவிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

    கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் அறிக்கை முக்கிய காரணமாக இருந்தது. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த உடன் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்பதும் காங்கிரசின் வாக்குறுதி.

    இந்நிலையில், அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சக்தி திட்டத்தை முதல் மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார்.

    கர்நாடகத்திற்குள் மட்டுமே இந்த இலவச பயணம் மேற்கொள்ள முடியும். கர்நாடகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • வரும் 11-ந்தேதி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.
    • ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும்.

    கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000, இளைஞர்களுக்கு நிதி உதவி, 10 கிலோ இலவச அரிசி உள்ளிட்ட அறிவிப்புகள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

    கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வெற்றி பெறுவதற்கு தேர்தல் அறிக்கை முக்கிய காரணமாக இருந்தது. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் ஆட்சிக்கு வந்த உடன் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே முடிவு செய்யப்பட்டு அமல்படுத்தப்படும் என்பதும் காங்கிரசின் வாக்குறுதி.

    அதன்படி, வரும் 11-ந்தேதி முதல் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

    மேலும், ஜூலை 1-ந்தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சாரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு விரைவில் உதவித்தொகை வழங்கப்படும். ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 வழங்கப்படும் என கூறியுள்ளார்.

    • காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்று நரேந்திர மோடி கூறுகிறார்.
    • முதல் நாளில் நான்கு வாக்குறுதிகளை அல்ல, ஐந்தாவது வாக்குறுதியும் அமல்படுத்தப்படும் என்றார் ராகுல் காந்தி.

    மங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களை கவரும் வகையில் வாக்குறுதிகளை வழங்குகின்றன. அவ்வகையில் காங்கிரஸ் கட்சி இன்று ஐந்தாவது தேர்தல் வாக்குறுதியை வழங்கியிருக்கிறது. அதாவது, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து மங்களூருவில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:-

    காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்று நரேந்திர மோடி கூறுகிறார். நாங்கள் உங்களுக்கு (மக்களுக்கு) ஏற்கனவே நான்கு வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம். அவை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த முதல் நாளில், முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

    மோடி அவர்களே, நான்கு வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாது என்று சொன்னீர்கள். நான் அதில் மேலும் ஒன்றை சேர்க்கிறேன். முதல் நாளில் நான்கு வாக்குறுதிகளை அல்ல, ஐந்தாவது வாக்குறுதியும் அமல்படுத்தப்படும். கர்நாடகம் முழுவதும் பெண்கள் பொது போக்குவரத்து பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வார்கள்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

    அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000 மாதாந்திர உதவி, வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம், 18 முதல் 25 வயது வரை உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.
    • இளம் விதவை உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    புதுச்சேரி:

    தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிப்பொறுப்பேற்றவுடன், மகளிருக்கான கட்டணமில்லா பஸ் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மாநகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி உள்ள பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் திட்டத்தை தமிழக அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.

    வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள பகுதிக்கு செல்லவும் உதவியாக இருப்பதால் இத்திட்டத்துக்கு அதிகமாக வரவேற்பு கிடைத்துள்ளது.

    இந்நிலையில் புதுச்சேரியில் அரசு பேருந்துகளில் பெண்கள் இனி இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டசபையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    தனியார் பங்களிப்போடு கூட்டுறவு சர்க்கரை ஆலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இளம் விதவை உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.7,500 வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலி அடையாள அட்டையை காண்பித்து அரசு பஸ்சில் ஓராண்டாக இலவச பயணம் செய்தார்.
    • இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் நகர் பகுதியில் அரசு விரைவு பேருந்து டிக்கெட் பரிசோதகர் ராமகி ருஷ்ணன் பயணிகளின் டிக்கெட்டுகளை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

    திருமங்கலம் அப்பக்க ரையிலிருந்து இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சில் ஏறிய டிக்கெட் பரிசோதகர் ராமகிருஷ்ணன் பயணிகளிடம் டிக்கெட் கேட்டு ஆய்வு மேற்கொ ண்டார்.

    அப்போது பஸ்சில் இருந்த 52 வயதுடைய நபர் தான் தேனி மாவட்டத்தில் கண்டக்டராக வேலை பார்ப்பதாகவும், எனவே டிக்கெட் எடுக்கவில்லை எனக்கூறி அடையாள அட்டையை காண்பி த்துள்ளார்.

    அதனை பார்த்த ராம கிருஷ்ணனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதையடுத்து அடையாள அட்டையை ஆய்வு செய்தபோது அது போலியானது என தெரிய வந்தது. இதுகுறித்து ராமகிருஷ்ணன் திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் போலி அடையாள அட்டையை காண்பித்து இலவச பயணம் செய்தது மதுரை திருநகர் முல்லை நகரை சேர்ந்த பாண்டித்துரை எனவும், இவர் அப்பக்கரையில் உள்ள அரசு பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார் என்பதும் தெரியவந்தது. மேலும், இவர் கடந்த ஓராண்டாக அரசு பஸ்சில் மோசடி செய்து இலவச பயணம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    ×