search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக பாஜக"

    • தமிழக விளையாட்டுக் கொள்கை கொண்டு வரப்படும் என்று கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?
    • தமிழகத்தின் விளையாட்டு துறையின் அவலங்களைப் பற்றி என்றுதான் சிந்திப்பீர்கள்?

    தமிழக பாஜக சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    தமிழக பாஜக-வின் அதிகாரப்பூர்வ X- வலைதளப் பக்கமான தமிழக பாஜக-ஐ ப்ளாக் செய்துவிட்டால், எங்களால் உங்களைக் கேள்வியே கேட்க முடியாது என்று கோழைத்தனமாக எண்ணும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே, வணக்கம்!

    எந்நேரமும் பொய்யான தகவல்களை உளறுவதையும், பின் ஊடகங்கள் கேள்விக் கேட்கையில் புறமுதுகிட்டு ஓடுவதையுமே வாடிக்கையாகக்கொண்ட நீங்கள் "கேலோ இந்தியா" பற்றி இப்பொழுது ஆதாரமற்ற சில சர்ச்சைகளை எழுப்பியுள்ளீர்கள்.

    முதலில் "கேலோ இந்தியா" திட்டத்திற்கான வரைமுறைகள் என்னவென்று தெரியுமா? மாநிலங்களின் கோரிக்கைகளின் பொருட்டே, கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்படும் என்ற குறைந்தபட்ச தகவலாவது அறிவீர்களா?

    அதுசரி… தமிழக விளையாட்டுத் துறையின் மீது அக்கறைப் பொங்கி வழிவது போல பாசாங்கு செய்யும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே - உங்கள் துறை சம்மந்தப்பட்ட கீழ் வரும் சில கேள்விகளுக்கு பதில் அளிக்க உங்களுக்கு திராணி உள்ளதா?

    • இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு (SGFI) நடத்தும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் முதல்முறையாக தமிழகம் பங்கேற்க தவறியது ஏன்?

    • தமிழக விளையாட்டுக் கொள்கை கொண்டு வரப்படும் என்று கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?

    • அரசுப்பள்ளிகளில் 1:250-400 என்றிருந்த ஆசிரிய மாணவர் விகிதத்தை, 1:700 என்று மாற்றியமைத்து, உடற்கல்வி ஆசிரியர்களைக் குறைக்க உத்தரவிட்டது ஏன்?

    • புதுக்கோட்டை மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானங்கள் மோசமான நிலையில் உள்ளது ஏன்?

    • பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் செய்வதாக கூறிய வாக்குறுதி என்னவாயிற்று?

    • திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கிப்பட்டியை, மாநிலத்தின் முதல் மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டியாக மாற்றுவதாக கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று?

    மத்திய அரசை எவ்வாறு குறை கூறுவது என்று மட்டுமே ராப்பகலாக சிந்தித்துக் கொண்டிருக்கும் நீங்கள், தமிழகத்தின் விளையாட்டு துறையின் அவலங்களைப் பற்றி என்றுதான் சிந்திப்பீர்கள்?

    இவ்வாறு உங்கள் துறையின் வளர்ச்சியைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், மக்கள் வரிப்பணத்தில் கார் ரேஸ் நடத்துவதற்கு முட்டி மோதும் உங்களுக்கு, கடந்த பத்தாண்டுகளில் விளையாட்டு துறையின் நலனுக்கான ஒதுக்கப்படும் நிதியில் 180% அதிகரித்துள்ள

    பாஜகவைக் கேள்விக்கேட்க உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறார்.
    • அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு மட்டுமே அறிவாலயம் முன்னுரிமை அளிக்கிறது

    தமிழக பாஜக சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,

    மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் 2024-ல், தமிழகத்திற்கு எந்த நலத்திட்டங்களும் இல்லை, அவ்வளவு ஏன்? தமிழ்நாடு என்ற பெயரே பட்ஜெட்டில் இல்லை என்ற தனது கம்பிக் கட்டும் கதையை உண்மையாக்கும் நோக்கில், பிரதமர் தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

    நாட்டின் சுமூகமான நிர்வாகத்திற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையேயான ஒத்துழைப்பும் கூட்டுறவும் மிக அவசியம். இரு தரப்பினரின் கூட்டுறவையும் மாநிலங்களின் சமூக பொருளாதரத்தையும் மேம்படுத்தும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக மு.க ஸ்டாலின் கூறுவது ஏற்புடையதல்ல.

    தங்களுக்கு ஓட்டுப்போட்ட தமிழக மக்களின் பிரதிநிதியாக அக்கூட்டத்தில் பங்கேற்று, தமிழக மக்களின் தேவைகளை எடுத்துரைக்க மறுப்பதன் மூலம், தமிழகத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முட்டுக்கட்டை போடுகிறார்.

    காரணம், நிதி ஆயோக் மூலம் தமிழகம் எண்ணற்ற நன்மைகளைப் பெற்றுள்ளது. உதாரணமாக,

    *  தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் தளமாக செயல்படும், அடல் (ATAL) சமூக கண்டுபிடிப்பு மையம் தமிழகத்தில் துவங்கப்பட்டது.

    * 2021-ல் நிதி ஆயோக் நகர்ப்புற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கான மாநாட்டை நடத்தியது.

    * தமிழகத்தின் சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், நிதி ஆயோக்குடன் இணைக்கப்பட்ட வளர்ச்சிக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலகம் (DMEO) ஆகியவற்றுடனான அறிக்கையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

    இவ்வாறு தமிழகத்திற்கு பல நலன்கள் கிடைக்கும் நிதிஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதன் மூலம், மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன்களை விட, அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கு மட்டுமே அறிவாலயம் முன்னுரிமை அளிக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவையில் பா.ஜ.க. வரலாறு காணாத வாக்குகளைப் பெற்றுள்ளது.
    • பா.ஜ.க.வும், கூட்டணி கட்சிகளும் பெற்றது நேர்மையான வாக்குகள்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    பாராளுமன்ற தேர்தலில் மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம்.

    பா.ஜ.க.வும், கூட்டணி கட்சிகளும் பெற்றது நேர்மையான வாக்குகள்.

    கோவையில் பா.ஜ.க. வரலாறு காணாத வாக்குகளைப் பெற்றுள்ளது.

    கோவையில் நான் பெற்ற 4.50 லட்சம் வாக்குகளும் பணம் கொடுக்காமல் நேர்மையாக கிடைத்த வாக்குகள்.

    தமிழகத்தில் 40-க்கு 40 தொகுதிகள் பெற்ற இந்தியா கூட்டணி சகோதரர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ஒடிசாவில் தனிப் பெரும்பான்மையோடு பா.ஜ.க. ஆட்சியமைக்க உள்ளது.

    மத்திய அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மாநில அரசை வந்துசேர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என தெரிவித்தார்.

    • கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி ஒரு சில தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 2-வது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது.
    • மாவட்ட அளவிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படலாம்.

    சென்னை:

    தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி முறிந்ததை தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பா.ஜ.க. தலைமையில் தனி கூட்டணியை அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார். பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் இரட்டை இலக்க சதவீதத்தில் ஓட்டுகளை பெற வேண்டும், குறைந்த பட்சம் 5 முதல் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் தமிழக பா.ஜ.க. கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிவு தி.மு.க.வுக்கு சாதகமாக அமைந்தால் தமிழக பா.ஜ.க.வில் நிர்வாகிகள் மாற்றப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் அண்ணாமலைக்கும் நெருக்கடி உருவாகலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக பா.ஜ.க. தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இது தொடர்பாக பா.ஜ.க. மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். பாராளுமன்ற தேர்தல் முடிவு சாதகமாக இல்லாவிட்டால் அண்ணாமலை தலைவர் பதவியை தக்க வைக்க போராட வேண்டி இருக்கும். அவர் தலைவர் பதவியை இழக்கவும் நேரிடலாம்.

    அண்ணாமலை தனது செல்வாக்கை வளர்த்துக்கொள்ள தனிப்பட்ட முறையில் முயற்சி செய்தார். அ.தி.மு.க.வுடன் உறவை முறித்துகொண்ட அவர் பா.ஜ.க. மேலிடத்தின் கட்டளைக்கு உட்பட்டு தனது தலைமையில் கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார். ஆனால் அவரால் தேர்தலில் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

    கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி ஒரு சில தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி 2-வது இடத்தை பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் எந்த தொகுதியிலும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. 2014-ம் ஆண்டு கோவை தொகுதியில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் 3 லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்றிருந்தார். தற்போது அண்ணாமலைக்கு அந்த அளவுக்கு ஓட்டு கிடைக்குமா என்பது தெரியவில்லை. கோவையில் நிலைமை இப்படியென்றால் மற்ற தொகுதிகளில் நிலைமை என்னவாகும்?

    தேர்தல் முடிவு வெளியான பிறகு தமிழக பா.ஜ.க.வில் புதிய பொறுப்பாளர்களை நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அண்ணாமலை மற்றும் மாநில நிர்வாகிகள் மீது கட்சி மேலிடம் நடவடிக்கை எடுக்கும். அதன்படி தலைவர் மற்றும் நிர்வாகிகள் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. மாவட்ட அளவிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக மற்றொரு பா.ஜ.க. நிர்வாகி கூறுகையில், 'தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மாற்றப்படுவார் என்பது யூகத்தின் அடிப்படையிலான செய்தி. 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் வரை தமிழக பா.ஜ.க. தலைவராக அண்ணாமலை நீடிப்பார். இதில் எந்தவித மாற்றமும் இல்லை' என்றார்.

    • எனது பூத் வலிமையான பூத்' என்ற தலைப்பில் நமோ ஆப் வாயிலாக பிரதமர் மோடி உரை.
    • வணக்கம் என தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

    மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

    முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    வாக்கு எண்ணக்கை ஜூன் 4ம் தேதியும், சட்டமன்ற தேர்தலில் இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் ஜூன் 2ம் தேதி அன்றும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நடைபெறுகிறது.

    தேர்தல் நெருங்கி வருவதால் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழக பாஜகவினருடன் இன்று மாலை 5 மணிக்கு 'எனது பூத் வலிமையான பூத்' என்ற தலைப்பில் நமோ ஆப் வாயிலாக பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்.

    அப்போது வணக்கம் என தமிழில் உரையை தொடங்கினார் பிரதமர் மோடி.

    பின்னர் அவர் பேசியதாவது:-

    இன்றைய வணக்கம் எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று. உங்கள் மத்தியில் பேச வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி. என் வாழ்க்கையின் பெரும் பகுதியை நான் ஒரு சாதாரண தொண்டராகவே கழித்தேன்.

    உங்களின் கடினமான உழைப்பு, கட்சியை ஆழமான வளர்ச்சிக்கு அழைத்துச் செல்லும். தமிழ்நாட்டில் உள்ள பெண்களை சென்றடைகிறதா? அது பெண்களுக்குப் பிடித்திருக்கிறதா ?

    நாட்டில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்காக பணியாற்றி வருகிறோம். எங்களுடைய பூத், வலிமையான பூத் என்ற முழக்கத்திற்கு உங்களின் கடின உழைப்பே காரணம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் அனைத்தும் ஜூன் 1ம் தேதிக்குள் முடிவடைந்துவிடுகிறது.
    • தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி.

    மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 7 கட்டங்களாக ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

    முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் அனைத்தும் ஜூன் 1ம் தேதிக்குள் முடிவடைந்துவிடுகிறது.

    மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணக்கையும் ஜூன் 4ம் தேதியும், சட்டமன்ற தேர்தலில் இரண்டு மாநிலங்களுக்கு மட்டும் ஜூன் 2ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நடைபெறுகிறது.

    தேர்தல் நெருங்கி வருவதால் போட்டியிடும் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக பாஜகவினருடன் இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

    'எனது பூத் வலிமையான பூத்' என்ற தலைப்பில் நமோ ஆப் வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

    • அவதூறு வழக்கில் மதுரை சைபர் கிரைம் போலீசார் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளரை கைது செய்தனர்.
    • சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நேற்று நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். அவதூறு வழக்கில் மதுரை சைபர் கிரைம் போலீசார் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளரை கைது செய்தனர். சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    மலக்குழி மரணங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், கேள்வி எழுப்பிய எஸ்.ஜி.சூர்யாவை தண்டிக்க முயற்சிப்பது நியாயமா? என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    • தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    • அவதூறு வழக்கில் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளர் சென்னையில் கைது செய்யப்பட்டார்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவதூறு வழக்கில் மதுரை சைபர் கிரைம் போலீசார் தமிழக பா.ஜ.க. மாநில செயலாளரை கைது செய்தனர்.

    சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதையடுத்து, காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பா.ஜ.க.வினர் குவிந்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பா.ஜ.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்று மொழியாக வருவதை எதிர்ப்பது ஏன்?
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக பாஜக கேள்வி

    தமிழக பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் திருப்பதி நாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழி ஆய்வுக்குழு தனது அறிக்கை மற்றும் பரிந்துரைகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் வழங்கியுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வன்மையாக கண்டித்துள்ளார். இது தொடர்பாக ஏடுகள் சுட்டி காட்டுவதை கொண்டு முதலமைச்சர் அறிக்கையாக வெளியிட்டுள்ளது பொறுப்பற்ற செயல் மட்டுமல்ல, வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், ஆங்கிலம் உள்ள இடங்களில் இந்தியை இடம்பெறச்செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. மே

    மேற்கண்ட கல்வி நிலையங்களில் இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்றும், இந்தி பேசாத மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள் இடம் பெறவேண்டும் என்றே சொல்லப்பட்டுள்ளது. அதாவது, இனி தமிழகத்தில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழே பயிற்று மொழியாக இடம் பெறவேண்டும் என்றே பரிந்துரை கூறுகிறது. தமிழகத்தில் உள்ள மத்திய கல்வி நிறுவனங்களில் தமிழ் பயிற்று மொழியாக வருவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பது ஏன்? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தருவதில்லை.
    • காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு புறக்கணிக்கிறது.

    தமிழக பாஜக மாநில செயற் குழுவின் இரண்டு நாள் கூட்டம் வேலூர், அரப்பாக்கம், ரமணி சங்கர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மத்திய மந்திரி எல்.முருகன், பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்பட அக்கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் அக்னிபாத் திட்டத்திற்கு பாராட்டு, இளையராஜாவிற்கு மாநிலங்களவை நியமன உறுப்பினர் பதவி வழங்கி தமிழகத்திற்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி உள்ளிட்ட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    மத்திய அரசின் திட்டங்கள் மீது ஸ்டிக்கர் ஓட்டி தமிழக அரசு போலி விளம்பரம் தேடுவதாக இந்த கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது. வழிபாட்டு நெறிமுறைகளில் அரசியல் தலையீடு செய்து பாரம்பரிய முறைகளை அரசு சீரழிப்பதாகவும் பாஜக செயற்குழுவில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் தொழில்வளர்ச்சித் திட்டங்களுக்கு திமுக அரசின் ஒத்துழையாமைக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மிகப்பெரிய திட்டங்களை தீட்டி இந்தியாவை தொழில் வளர்ச்சியில் முன்னெடுத்துச் செல்லும் நிலையில், தமிழக அரசு, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    குறிப்பாக புல்லட் ரயில் திட்டம், பாதுகாப்பு தொழில்வழித்தட திட்டம், ஜவுளி தொழிற் பூங்காக்கள் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதில் திமுக அரசு ஒத்துழைப்பு வழங்காமலும், திட்டங்களை செயல்படுத்துவதில் காலதாமதத்தை ஏற்படுத்துவதாகவும், அதில் கூறப்பட்டுள்ளது.

    மத்திய பாஜக அரசிற்கு தமிழக வாக்காளர்கள் மத்தியில் நற்பெயர் வந்துவிடக் கூடாது என்ற காழ்ப்புணர்ச்சியில் இந்த திட்டங்களை மாநில திமுக அரசு புறக்கணிக்கிறது என்றும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் திட்டங்களால் மக்களுக்குத்தான் பலன், தங்களுக்கு தனிப்பட்ட பலன் கிடைக்காதே என்பதால் ஒத்துழைப்பு வழங்க திமுக அரசு தயங்குவதாகவும் அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • எரிபொருள் விலையை குறைப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியிலிருந்து திமுக பின்வாங்குகிறது.
    • புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தை விட குறைவாக இருக்கிறது.

    தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றக்கோரி, தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

    சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

    எரிபொருள் விலையை குறைப்போம் என்ற தனது தேர்தல் வாக்குறுதியிலிருந்து திமுக பின்வாங்குகிறது. புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை தமிழகத்தை விட குறைவாக இருக்கிறது.

    பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஏழு மாதங்களில் இரண்டு முறை எரிபொருள் விலையை குறைத்து நுகர்வோருக்கு நிவாரணம் அளித்தது. ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலின்போது விலைவாசியைக் குறைப்பதாக திமுக உறுதியளித்தது, ஆட்சிக்கு வந்தவுடன் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

    முடியாததை செய்யுமாறு நாங்கள் உங்களிடம் கேட்கவில்லை. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை லிட்டருக்கு 5 மற்றும் 4 ரூபாய் குறைக்கப்படும் என்ற உங்கள் வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்றுதான் கேட்கிறோம்.

    தேர்தல் வாக்குறுதியில் எழுத்து பூர்வமாக கொடுத்துள்ளபடி நீங்கள் குறைக்கவில்லை என்றால், உங்களுக்கு மனசாட்சி இல்லை என்றுதான் அர்த்தம். அதைக் கேட்கக்கூடிய கடமை எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய பாஜகவுக்கு இருக்கிறது.

    கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தும் வகையில் சொத்து வரியை உயர்த்த மாட்டோம் என்று திமுக உறுதியளித்தது, ஆனால் சொத்து வரியை 150 சதவீதம் உயர்த்தியது.

    டிசம்பர் 31-ம் தேதி வரை தமிழக அரசுக்கு கெடு கொடுக்கிறோம். உங்களுடைய தேர்தல் வாக்குறுதிகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் நிறைவேற்ற முடியவில்லை என்றால், பாஜகவின் பாதயாத்திரையை ஜனவரி 1-ந் தேதி கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் ஆரம்பித்து, சென்னை கோபாலபுரத்தில் முடித்து வைப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×